Jump to content

அத்தையின் ஆண்பால் = அத்தானின் பெண்பால்


Recommended Posts

மாமா - மாமி

மச்சான் - மச்சாள்

சித்தப்பா - சின்னம்மா

அத்தை - ?

அத்தான் - ?

எமது பாடசாலை வகுப்பு வட்ஸ் அப் குழுமத்தில் இந்த வினாக்களை வினாவினேன். திருப்தியான பதில் கிடைக்கவில்லை. பின்னர், யாழ் கருத்துக்களத்திலும் திண்ணையில் கேட்டுப்பார்த்தேன். பதில்கள் திருப்தி இல்லை.

இங்கு எனது சந்தேகங்கள் எவை என்றால் இவை 1- தூய தமிழ்ச்சொற்களா, 2- பழந்தமிழர் இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டு உள்ளனவா, 3- அத்தை, அத்தான் ஆகிய சொற்பதங்கள் இந்திய தமிழ்சினிமாவின் இறக்குமதிகளில் சிலவோ என்பது.

*******

யாரிடம் கேட்கலாம்? இன்று மாலை இணுவில் தமிழ் பண்டிதர், கவிஞர் ச. வே. பஞ்சாட்சரம் அவர்களை தொலைபேசியில் அழைத்து அவரிடம் எனது வினாக்களை கேட்டேன்.

அவர் சொன்னவை என்ன என்றால்..

அக்கா - அண்ணா

இது போல்

அத்தை - அத்தன்

அதாவது அத்தையுக்கு ஆண்பால் அத்தன் என்று வருமாம். அத்தன் என்றால்  அப்பா/தந்தை. அத்தன், அத்தை ஆகியவை தூய தமிழ்ச்சொற்கள் கலப்படங்கள் இல்லை எனக்கூறினார்.

அடுத்ததாக,

அத்தான் - அத்தாள்

அதாவது அத்தானுக்கு பெண்பால் அத்தாள் என்று அமையலாம் என்று கூறினார்.

இந்த அத்தாள் எனும் சொல் தற்போது பயன்பாட்டில் இல்லையாம். காலப்போக்கில் பாவனையில்லாமல் வழக்கொழிந்து இருக்கலாம் என்று கூறினார்.

கூழிலில் தேடல் செய்து பார்த்தபோது அத்தாள் என்றால் அம்மா/தாய் என்று பொருள் உள்ளது.

அப்படி என்றால்,

அத்தன் - அத்தாள் என்று அல்லவா வரும் அத்துடன் அத்தை - அத்தான் என்றும் வரும் அல்லவா?

அத்தையின் ஆண்பால் =  அத்தானின் பெண்பால்

*******

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சித்தப்பாவுக்குச் சித்தி....அதிகம் பொருந்தும் போல...உள்ளது!

சின்னம்மாவுக்குச் ....சின்னையா பொருந்தும் போல உள்ளது!

அத்தை என்பது...ஈழத்துத் தமிழில் இருக்கவில்லை என்று நினைக்கிறேன்!

எனக்குத் தெரிய....தமிழ்ப் படங்களின் மூலம் தான்...இந்த ...அத்தை..அத்தை மகள்...என்று ஈழத்தமிழுக்குள் இந்த வார்த்தை புகுந்திருக்க வேண்டும்!

ஊரில்...அத்தை மகளை கட்டினான் என்று கூறுவதில்லை!  முறை மச்சாளைக் கட்டினான் என்று தான் கூறுவார்கள்!

எனினும் அத்தையின் மகளைக் கட்டுவதனால்...பரந்த...மரபணுப் பரம்பல் ஏற்பட மாட்டாது! பிறக்கும் குழந்தைகள்...ஆரோக்கியமாகவும், உடல் குறைபாடு அற்றவர்களாகவும் இருக்க மாட்டார்கள்!

இது வட இந்தியாவின்...யானைகளுக்குக் கூடத் தெரிந்திருந்தது! ஆமாம்....யானைகள்..தங்கள் இரத்த உறவுகளை...மனைவிகளாக ...கணவர்களாக ஏற்றுக் கொள்வதில்லையாம்!

இது..நமது முன்னோருக்குத் தெரியாமல் இருந்திருக்குமா என்பது விவாத்ததுக்கு உரியதே!

அத்தை மகனே....அத்தான் என்று அழைக்கப் படுகிறார்!

எனவே...நிச்சயம்...அத்தையின் ஆண்பால் ...அத்தானாக முடியாது!

அத்தன் என்று சொல்லும் போது...தமிழ் மணக்கவில்லை!

மலையாளம் தான் மணக்கிறது!

அச்சன்....தந்தை!

 

கர்ணன் படத்தில்.....குந்தி தேவியை....கிருஷ்ணன் விழிக்கும் போது....அத்தை..என்று தான் விழிக்கிறார்!

கண்ணனுக்கும்...குந்தி தேவிக்கும் உள்ள உறவு முறையை...நீங்கள் சொன்னால்...நான் பெண்பால் சொல்லுகின்றேன்!

இது எப்படி இருக்கு....கலைஞன்?

 

Link to comment
Share on other sites

அத்தை மகனே அத்தான் எனவே

அத்தையின் ஆண்பால் அத்தான் ஆகமுடியாது என்று கூறுகின்றீர்கள்.

சிந்தித்து பார்ப்பதற்கு மயக்கமாக உள்ளது.

ஆண்பால் பெண்பாலில் ஒன்றுக்கு நிகரான இன்னோர் சொல்லை வழங்கும்போது உறவுமுறையின் அடிப்படையில் விதிகள் உள்ளனவா?

தம்பி - தங்கை

இங்கு சகோதர உறவு முறை காணப்படுமாயின்

அத்தை - அத்தான்

இங்கே ஏன் தாய் மகன் உறவு முறை அமையமுடியாது?

நாங்களும் வீட்டில் அத்தை என்ற சொல்லை பாவிப்பதில்லை. அதற்காக நாங்கள் பயன்படுத்துவது இல்லை என்பதற்காக அது தமிழ் சொல் இல்லை என்றும் கூறமுடியாது. அதேசமயம் அத்தை, அத்தான் ஆகிய சொற்கள் இந்திய தமிழ் சினிமாவின் இறக்குமதியாய் இருக்குமோ என்றும் சந்தேகம் வலுக்கின்றது.

மகாபாரத கதை உருவாக்கத்தின் மூலம் தமிழ்மொழி இல்லை என்றால் அத்தை எனும் சொல் தமிழாய் இருக்காதோ? இந்திய தமிழ் சினிமாவில் ஏதும் நடக்கலாம்.

அத்தன் எனும் சொல் பழந்தமிழர் இலக்கியத்தில் உள்ளது போன்று பண்டிதர் அவர்கள் மேற்கோள் ஒன்றை சொல்லிக்காட்டினார் என்று நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணனின் தந்தை வாசுதேவரின் தங்கை குந்திதேவி. 

வாசுதேவர் + தேவகியின் = மகன் கண்ணன்.

நந்தகோபன்+யசோதை = வளர்ப்பு மகன் கண்ணன்.

அதனால்தான் குந்திதேவியை அவர் அத்தை என அழைக்கிறார்.

சுவியும் பிறந்த நாளில் இருந்தே தனது தந்தையின் தங்கையை அத்தை என்றே அழைத்து வந்துள்ளார். இதனால் உங்களின் வாதங்கள் முடக்கு வாதமாய் அதாவது முடங்கிப் போய் விடுகிறது....!tw_blush:

அத்தையின் மகனை நான் அத்தான் என்றே கூப்பிடுவேன். மகள்  மச்சாள்  முறைதான், ஆனால் கூப்பிடுவது டியே ,வாடி போடி என்றுதான். அப்படியே அவளும் என்னை அத்தான் என்றுதான் கூப்பிட வேண்டும்.அதுதான் முறையும் கூட. ஆனால் அவளுக்கு என்னை விட விலங்குகளின் மீது பிரியம் அதிகம் அதனால் ஏதாவதொரு விலங்கின் பெயரால்தான் அழைப்பாள். நேற்றுகூட போனில் அப்படித்தான்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, suvy said:

கண்ணனின் தந்தை வாசுதேவரின் தங்கை குந்திதேவி. 

வாசுதேவர் + தேவகியின் = மகன் கண்ணன்.

நந்தகோபன்+யசோதை = வளர்ப்பு மகன் கண்ணன்.

அதனால்தான் குந்திதேவியை அவர் அத்தை என அழைக்கிறார்.

சுவியும் பிறந்த நாளில் இருந்தே தனது தந்தையின் தங்கையை அத்தை என்றே அழைத்து வந்துள்ளார். இதனால் உங்களின் வாதங்கள் முடக்கு வாதமாய் அதாவது முடங்கிப் போய் விடுகிறது....!tw_blush:

அத்தையின் மகனை நான் அத்தான் என்றே கூப்பிடுவேன். மகள்  மச்சாள்  முறைதான், ஆனால் கூப்பிடுவது டியே ,வாடி போடி என்றுதான். அப்படியே அவளும் என்னை அத்தான் என்றுதான் கூப்பிட வேண்டும்.அதுதான் முறையும் கூட. ஆனால் அவளுக்கு என்னை விட விலங்குகளின் மீது பிரியம் அதிகம் அதனால் ஏதாவதொரு விலங்கின் பெயரால்தான் அழைப்பாள். நேற்றுகூட போனில் அப்படித்தான்.....!  tw_blush:

நன்றி....சுவியர்!

கலைஞனின் கேள்விக்கான பதில் உங்களிடம் நிச்சயம் இருக்க வேண்டுமே!

உங்கள் அத்தையின்கணவரை...எவ்வாறு அழைக்கின்றீர்கள்?

அது தான் நிச்சயமாக....அத்தையின் ஆண் பாலாக இருக்கும்!

எனது பக்கத்துக்கு வீட்டுக்காரி...தனது தகப்பனை.......பப்பா என்று தான் அழைப்பார்!

நானும் அவ்வாறு அழைக்க வெளிக்கிட்டு....பூவரசம் தடியொன்று முறிஞ்சு போனது தான்....விளைவு!

சரி...அதை விடுங்கள்!

கிறிஸ்துவுக்குப் பின்னர் ஏழாம் நூற்றாண்டு வரையும் சென்று பார்த்தேன்!

திருநாவுக்கரசு நாயனார்.....பிராமணர் அல்லாது ஒருவர்!

அவரது தேவாரமொன்றில்...

 

அப்பன் நீ, அம்மை நீ, ஐயனும் நீ, அன்பு உடைய மாமனும்
                                          மாமியும் நீ, 
ஒப்பு உடைய மாதரும் ஒண் பொருளும் நீ, ஒரு குலமும்
                                சுற்றமும் ஓர் ஊரும் நீ, 
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ, துணை ஆய் என்
                               நெஞ்சம் துறப்பிப்பாய் நீ, 
இப் பொன் நீ, இம் மணி நீ, இம் முத்து(ந்)நீ, இறைவன் நீ-ஏறு
                                 ஊர்ந்த செல்வன் நீயே.

 

 

'அத்தை' முறை வழக்கில் இருந்திருந்தால்...மாமன்..மாமி...என்று குறிப்பிடாமல்...அத்தை....அத்தன் என்று சொல்லியிருக்க மாட்டாரா, சுவியர்?

உறவு முறைகள்....மிகவும் குழப்பமானவை என்பதுடன்...அந்தந்தப் பிரதேசங்களின் பேச்சு வழக்குக்கு ஏற்ப மாறுபடுபவை!

அத்தான் எனும் போது...கணவனை அன்புடன் அழைக்கும் அதே உறவுச் சொல், அத்தார் எனும் போது ..அக்காவின் கணவன் என்று மரியாதைச் சொல்லாக மாறி நிற்கிறதே!

உங்களைப் போல...நாலு பேர் இங்க உலாவிற படியால...கன விசயங்களை அறியக் கூடியதாக இருக்கு!

 அத்தையின் மகனை நான் அத்தான் என்றே கூப்பிடுவேன். மகள்  மச்சாள்  முறைதான், ஆனால் கூப்பிடுவது டியே ,வாடி போடி என்றுதான். அப்படியே அவளும் என்னை அத்தான் என்றுதான் கூப்பிட வேண்டும்.அதுதான் முறையும் கூட. ஆனால் அவளுக்கு என்னை விட விலங்குகளின் மீது பிரியம் அதிகம் அதனால் ஏதாவதொரு விலங்கின் பெயரால்தான் அழைப்பாள். நேற்றுகூட போனில் அப்படித்தான்.

ஒருவரை...எப்படி அழைப்பது என்பது...அவரது தாய்...தந்தையர் சொல்லிக்கொடுப்பது தானே, சுவியர்!

ஆனால் வாடி..போடி...என்று அழைப்பது அன்பின் வெளிப்பாடு எனினும்....அதுவும் ஒரு வகையில்....பெண்ணடிமைத் தனத்தின் ஆரம்பம் என்று தான் நான் கருதுகின்றேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அவரை மாமா என்றுதான் சொல்வது. மேலும் அவர் எனது தாயாரின் சகோதரரும் கூட. (அவர்கள் மாற்றுசடங்கு). மற்றது பொதுவாய் மச்சாள்  என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் நாங்கள் ஒரே வீட்டிற்குள் இருந்து வளர்ந்தபடியால்,அம்மம்மாவுடனும். (நான் வயிற்றில், எனது தந்தையார் காலமாகி விட்டார்) அப்படி பேசிக் கொள்வது வழக்கம்.  tw_blush:

அப்பர் சிவனை அனைத்துமாய் பார்க்கிறார்.  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, suvy said:

நான் அவரை மாமா என்றுதான் சொல்வது. மேலும் அவர் எனது தாயாரின் சகோதரரும் கூட. (அவர்கள் மாற்றுசடங்கு). மற்றது பொதுவாய் மச்சாள்  என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் நாங்கள் ஒரே வீட்டிற்குள் இருந்து வளர்ந்தபடியால்,அம்மம்மாவுடனும். (நான் வயிற்றில், எனது தந்தையார் காலமாகி விட்டார்) அப்படி பேசிக் கொள்வது வழக்கம்.  tw_blush:

அப்பர் சிவனை அனைத்துமாய் பார்க்கிறார்.  tw_blush:

இன்னொன்றையும் கவனியுங்கள் சுவியர்!

அப்பர்...அண்ணனை...அய்யன் என்று தான் விழிக்கிறார்!

சிங்களவன்....தமிழிலிருந்து ஏழாம் நூற்றாண்டிலேயே....பொறுக்கிற்றான் போல கிடக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, புங்கையூரன் said:

இன்னொன்றையும் கவனியுங்கள் சுவியர்!

அப்பர்...அண்ணனை...அய்யன் என்று தான் விழிக்கிறார்!

சிங்களவன்....தமிழிலிருந்து ஏழாம் நூற்றாண்டிலேயே....பொறுக்கிற்றான் போல கிடக்கு!

 இங்கே அய்யன் என்பது குருவை குறிக்கும் என நினைக்கின்றேன். பிதா, மாதா, குரு.

அய்யர் 

Link to comment
Share on other sites

புங்கையூரன்,

திருநாவுக்கரசு நாயனாரின் தேவாரத்தை அலசிப்பார்த்தது அருமை. :96_ok_hand:

எவ்வளவு அழகாக விபரிக்கின்றார்;

  • அப்பன் நீ,
  • அம்மை நீ,
  • ஐயனும் நீ,
  • அன்பு உடைய மாமனும் மாமியும் நீ, 
  • ஒப்பு உடைய மாதரும் ஒண் பொருளும் நீ,
  • ஒரு குலமும் சுற்றமும் ஓர் ஊரும் நீ, 
  • துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ,
  • துணை ஆய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ, 
  • இப் பொன் நீ,
  • இம் மணி நீ,
  • இம் முத்து(ந்)நீ,
  • இறைவன் நீ
  • ஏறு ஊர்ந்த செல்வன் நீயே!

குருஜி, நீங்கள் விட்டுக்கொடாமல் குறியாய் அத்தைக்காக வாதாடுவதன் பின்னால் இவ்வளவு சமாச்சாரங்கள் உள்ளனவா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விட்டு கொடுக்காமல் என்றல்ல உண்மையை தெரிந்து கொள்வோம் என்னும் ஆவல்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, suvy said:

 இங்கே அய்யன் என்பது குருவை குறிக்கும் என நினைக்கின்றேன். பிதா, மாதா, குரு.

அய்யர் 

சுவியர்...பின்வரும் இணைப்பைப் பாருங்கள்!

அண்ணன் தான் என்று அடித்துச் சொல்லுகின்றார்...இவர்!

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?Song_idField=6095&padhi=095&thiru=6

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, கலைஞன் said:

அத்தை மகனே அத்தான் எனவே

அத்தையின் ஆண்பால் அத்தான் ஆகமுடியாது என்று கூறுகின்றீர்கள்.

சிந்தித்து பார்ப்பதற்கு மயக்கமாக உள்ளது.

ஆண்பால் பெண்பாலில் ஒன்றுக்கு நிகரான இன்னோர் சொல்லை வழங்கும்போது உறவுமுறையின் அடிப்படையில் விதிகள் உள்ளனவா?

தம்பி - தங்கை

இங்கு சகோதர உறவு முறை காணப்படுமாயின்

அத்தை - அத்தான்

இங்கே ஏன் தாய் மகன் உறவு முறை அமையமுடியாது?

நாங்களும் வீட்டில் அத்தை என்ற சொல்லை பாவிப்பதில்லை. அதற்காக நாங்கள் பயன்படுத்துவது இல்லை என்பதற்காக அது தமிழ் சொல் இல்லை என்றும் கூறமுடியாது. அதேசமயம் அத்தை, அத்தான் ஆகிய சொற்கள் இந்திய தமிழ் சினிமாவின் இறக்குமதியாய் இருக்குமோ என்றும் சந்தேகம் வலுக்கின்றது.

மகாபாரத கதை உருவாக்கத்தின் மூலம் தமிழ்மொழி இல்லை என்றால் அத்தை எனும் சொல் தமிழாய் இருக்காதோ? இந்திய தமிழ் சினிமாவில் ஏதும் நடக்கலாம்.

அத்தன் எனும் சொல் பழந்தமிழர் இலக்கியத்தில் உள்ளது போன்று பண்டிதர் அவர்கள் மேற்கோள் ஒன்றை சொல்லிக்காட்டினார் என்று நினைக்கின்றேன்.

கலைஞன்...பண்டிதர் சொன்னது சரி..!

பின்வரும் பாடலில்....அத்தன் என்ற சொல் வருகின்றது தான்!

ஆனால்....தந்தை என்ற பொருள் கொண்டு வருகின்றது!

முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்
    மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்
பின்னை யவனுடைய ஆரூர் கேட்டாள்
    பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
    அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத்
தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்
    தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே
.
  
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க

openbook.gifபொழிப்புரை:

முதலில் சிவபெருமான் என்று அவன் பெயரைக் கேட்டு, அவனுடைய பொன்வண்ணத்தைக் கேட்டு, அவனுடைய திருவாரூரைக் கேட்டு மீண்டும் அவன் திறத்து நீங்காத காதல் உடையவளாயினாள். தாயையும் தந்தையையும் அன்றே மனத்தால் துறந்தாள். உலகவர் கூறும் ` கிழவோற் சேர்தல் கிழத்திக்கு இல்லை ` என்ற நெறிமுறையை விடுத்தாள். தலைவனையே நினையும் நினைவிலே தான் செய்யும் செயல்களை அறியாது ஒழிந்தாள். கன்னி எனப்படும் தன் பெயர் நீங்கப் பெற்று அவன் உரிமை என்ற பெயரைக் கொண்டாள். அந்நங்கை அத்தலைவன் திருவடிகளை அணைந்து தனக்கென ஒன்றின்றி அவன் வழியளாய் ஒழிந்தாள்
Link to comment
Share on other sites

39 minutes ago, புங்கையூரன் said:

முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்
 மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்
பின்னை யவனுடைய ஆரூர் கேட்டாள்
 பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
 அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத்
தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்
 தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே

எவ்வளவு அழகிய பக்தி உணர்வுடன் படைக்கப்பட்ட பாடல் இது~! :100_pray:

பண்டிதரும் அத்தன் என்றால் தந்தை என்றே கூறினார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் புங்கை/கலைஞன்....!

திருவெம்பாவை 3வைத்து பாடலில் முத்தன்ன வெண்ணகையாய் முன்வந்த தெதிரெழுந்தென் 

அத்தன் ஆனந்தன் அமுதன் என்றும் வருகின்றது.

ஆயினும் இவை ஒரே பொருளில் கொள்ளாது இடத்துக்கு ஏற்றவாறு பொருள் படும் என்றுதான் சொல்கிறேன்.

அதுபோல் திருப்பொற்சுன்னத்திலும் 1 வைத்து பாடலில் "அத்தன் ஐயாறன் அம்மானைப்பாடி ஆடப் பொற் சுண்ணம் இடித்து நாமே"

அதனால் அந்தச்சொற்பதம் வழக்கொழிந்து விட்டதுபோல.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அபிராமி அந்தாதி 57 வது பாடல் : 

ஐயன் அளந்தபடி இருநாழி கொண்டு, அண்டமெல்லாம் .....என்று தொடங்கும்..... இங்கு ஐயன் என்பது நேரே சிவனை குறிக்கும்......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, suvy said:

ஓம் புங்கை/கலைஞன்....!

திருவெம்பாவை 3வைத்து பாடலில் முத்தன்ன வெண்ணகையாய் முன்வந்த தெதிரெழுந்தென் 

அத்தன் ஆனந்தன் அமுதன் என்றும் வருகின்றது.

ஆயினும் இவை ஒரே பொருளில் கொள்ளாது இடத்துக்கு ஏற்றவாறு பொருள் படும் என்றுதான் சொல்கிறேன்.

அதுபோல் திருப்பொற்சுன்னத்திலும் 1 வைத்து பாடலில் "அத்தன் ஐயாறன் அம்மானைப்பாடி ஆடப் பொற் சுண்ணம் இடித்து நாமே"

அதனால் அந்தச்சொற்பதம் வழக்கொழிந்து விட்டதுபோல.....!

நீங்கள் சொல்வது சரி, சுவியர் !

இன்னொரு இடத்தில்..

முத்த்னே முதல்வா...,,

தில்லை அம்பலத்து ஆடுகின்ற அத்தா...

 

என்றும் வருகிறது!

இஙுகு தலைவன் என்று பொருள் வரும் போல கிடக்குது!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, suvy said:

அபிராமி அந்தாதி 57 வது பாடல் : 

ஐயன் அளந்தபடி இருநாழி கொண்டு, அண்டமெல்லாம் .....என்று தொடங்கும்..... இங்கு ஐயன் என்பது நேரே சிவனை குறிக்கும்......!

சுவியர்,

ஒரு மொழியின் தொன்மை என்பது...வரலாறுகளிலோ அல்லது சரித்திர சான்றுகளிலோ இல்லை என்றே நான் நம்புகிறேன்! ஒரு மொழி எவ்வாறு வளைந்து கொடுக்கின்றது என்பதைலேயே அதன் தொன்மை தங்கியுள்ளது! தமிழ் கவிதை மொழி! அதனைப் பற்றி வரும் போது .. எழுதாமல் இருக்க முடியவில்லை! இப்போதும் கைத் தொலை பேசியில் வைத்துத் தான் தட்டிக் கொண்டிருக்கிறேன்!

புதிய... புதிய உதாரணங்களைத் தாருங்கள்!

நீண்ட நாட்களின் பின்னர் ... மனத்திருப்தி தந்த விவாதம் இதுவாகும்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் புங்கை,அதற்கு குருஜிக்குத்தான் நன்றி......!

தமிழ் ஒரு வானம் போன்றது. ஒரு எழுத்து சொல்லுக்கே பத்து அர்த்தம் வரும். யானைக்கும் குதிரைக்குமே முப்பதுக்கு மேல் பெயர்கள் உள்ளன. எங்கோ படித்தது , ஒருமுறை வள்ளலார் அடியார்களுடன் கதைகள் சொல்லிக்கொண்டிருக்கிறார். இதில் சிவபுராணம் பற்றி சொற்பொழிவாற்றும் படி கேட்கின்றனர்.அவரும் சுருங்கக் கூறவா விரிவாய் கூறவா என்று கேட்க அவர்களும் தாராளமான நேரம் இருக்கு, நீங்கள் விரிவாய் கூறுங்கள் என்கின்றனர். வள்ளலார் காப்பு சொல்லிவிட்டு நமசிவாய வாழ்கவில் முதல் வரும் "ந"என்ற எழுத்தின் பெருமைகளை அர்த்தங்களை சொல்லிக்கொண்டே போகிறார். பிரசங்கம் முடியவில்லை ஆனால் நேரம் முடிந்து விட்டது.

இவையெல்லாம் சொல்லுந்தரமன்று.....!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்த அத்தையின் ஆண் பால் பிரச்சனை காரணமாக போலும்,  எமது குடும்பத்தில் அத்தையம்மா - அத்தைமாமா என்று அழைக்கும் வழக்கம் உள்ளது. :grin:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு பெருமைகள் உள்ள தமிழ் மொழியை பேசும் ஒரு கூட்டம் இப்படியும் உறவுகளை அழைக்குதே.
உம்மா - வாப்பா 
நானா / காக்கா - ()தாத்தா
சாச்சா - சாச்சி
உம்மம்மா 
வாப்பம்மா 
மைனி (மதினி)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Sasi_varnam said:

இவ்வளவு பெருமைகள் உள்ள தமிழ் மொழியை பேசும் ஒரு கூட்டம் இப்படியும் உறவுகளை அழைக்குதே.
உம்மா - வாப்பா 
நானா / காக்கா - ()தாத்தா
சாச்சா - சாச்சி
உம்மம்மா 
வாப்பம்மா 
மைனி (மதினி)

டாத்தா   ?

இல்லை வாப்பா... அது அரபி சொல்லுக..

அப்பா ஒரு உருது சொல் தெரீமா?

அய்யா என்று செல்லீட்டு இருந்த நம்ம,  இந்தியாவில் இருந்து தமிழ் படங்கள் வந்த அப்புறம் தாம் அப்பா செல்லி செல்லறம் தானே வாப்பா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மச்சான் - மச்சாள் 
இது, தமிழ் சொல்லாக.... இருக்க வேண்டும்.
அந்த... உறவு, தமிழர்களில்.. வித்தியாசமான மரியாதைக்குரியது.  :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
    • சூறையாடப்படுகின்றது வடக்கின் கடல் வளம் – வடபகுதி கடற் றொழிலாளா் இணைய செயலாளா் March 29, 2024     இந்திய மீனவா்களின் அத்துமீறலால் வடபகுதி மீனவா்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்துள்ளாா்கள். கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான மீன்கள் தினசரி வடக்கிலிருந்து தமிழக மீனவா்களால் அபகரித்துச் செல்லப்படுகின்றது. இது தொடா்பாக வடபகுதி கடற்றொழிலாளா் இணையத்தின் செயலாளா் முகமத் ஆலம் தாயகக் வழங்கிய நோ்காணல்.   கேள்வி – இந்திய மீனவா்களின் அத்துமீறல் காரணமாக வட பகுதி மீனவா்கள் பெரும் பொருளாதார இழப்புக்களை சந்தித்து வருகின்றாா்கள். இந்தப் பிரச்சினை தீா்வின்றித் தொடா்வதற்கு யாா் காரணம்? இலங்கை அரசாங்கமா? இந்திய அரசாங்கமா?   பதில் – இந்திய மீனவா்களின் இந்த ஆக்கிரமிப்பு பல வருடங்களாகத் தொடரும் ஒரு விடயமாக இருக்கின்றது. இதனைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்கே இருக்கின்றது. ஏனெனில் இறைமையுள்ள ஒரு நாடென்ற வகையில், மற்றொரு நாட்டின் மீனவா்கள் உள்நுளையும் போது அவா்களைக் கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் கடமை. இலங்கை அரசின் கடற்படை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றாா்கள். அவா்களையும் மீறி இந்திய மீனவா்கள் உள்ளே வருகின்றாா்கள் என்றால், அதற்குப் பொறுப்புக் கூற வேண்டியவா்களாக இலங்கை அரசாங்கம்தான் இருக்கின்றது. கேள்வி – இந்திய மீனவா்களின் இவ்வாறான அத்துமீறல் காரணமாக வடபகுதி கடற்றொழிலாளா்கள் அண்மைக்காலத்தில் தொழில் ரீதியாக, பொருளாதார ரீதியாக எவ்வாறான பிரச்சினைகளை எதிா்கொள்கின்றாா்கள்? பதில் – இந்திய மீனவா்களின் அத்துமீறல் வடபகுதி மீனவா்களின் ஜீவனோபாயத்திலும், தொழிலிலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. அவா்களின் வாழ்வாதார, ஜீவனோபாய மற்றும் அனைத்து வகையான கட்டமைப்புக்களையும் இது பாதித்திருக்கின்றது. அவா்களுடைய பல கோடி ரூபா பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள், கடலில் இருக்கின்ற பல கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான வளங்களையும் இவ்வாறு அத்து மீறி வரும் இந்திய மீனவா்கள் அழித்திருக்கின்றாா்கள். அதாவது, இதனால் மிகப் பெரிய இழப்பு இந்த நாட்டுக்கும், மீனவா் சமூகத்துக்கும் ஏற்பட்டிருக்கின்றது. கேள்வி  – அமைச்சா் டக்ளஸ் தேவானந்த இதற்கான தீா்வு ஒன்றை அண்மையில் முன்வைத்திருந்தாா். அதாவது, கடற் சாரணா் பிரிவு ஒன்றை அமைப்பதன் மூலம் இந்த அத்துமீறலை கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று தெரிவித்திருந்தாா். இது குறித்து உங்கள் கருத்து என்ன? பதில் – மீனவா்கள் விடயத்தில் அமைச்சா் டக்ளஸ் தேவானந்த நீண்டகாலமாகவே அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றாா் என்பதை காணக்கூடியதாக இருந்துள்ளது. பழைய பஸ்களை கடலில் போட்டு அதன்மூலமாக இந்திய மீனவா்களின் அத்துமீறலைக் கட்டுப்படுத்துவதற்கு முயன்றாா். அதன் பின்னா் இந்திய மீனவா்களின் அத்துமீறல்கள் குறித்து அவா் அக்கறையாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்ற போதிலும், மீனவா்களின் ஏனைய விடயங்களில் அவா் போதிய கவனம் செலுத்தவில்லை. உள்ளுரில் தடை செய்யப்பட்ட இழுவை மடித் தொழிலை நிறுத்துவது போன்றவற்றில் அவா் கவனம் செலுத்தவில்லை. இந்திய இழுவை மடிப் படகுகள் விடயத்தில் அவா் கவனம் செலுத்துவது புரிகிறது. கடல் சாரணியா் என்ற ஒரு அமைப்பின் மூலமாக இதனைத் தடுப்பது என்பது சாத்தியமற்றது. ஏற்கனவே ஒரு தீா்மானம் இருக்கின்றது. 2015 ஆம் ஆண்டு இந்திய – இலங்கை மீனவா் பேச்சுவாா்த்தையில் ஒரு உடன்பாடு எட்டப்பட்டது. இரு தரப்பு மீனவா்களையும் பயன்படுத்தி கடலை ரோந்து செய்வது என்பதுதான் அந்தத் தீா்மானம். இரண்டு நாட்டு மீனவா்களையும், இரண்டு நாட்டு அரசுகளையும் கொண்டுதான் இதனைச் செய்ய வேண்டும் என்றுதான் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதம் தாங்கிய கடற்படை ஒன்று இலங்கை அரசிடம் இருக்கும் போது, ஒரு தரப்பை மட்டும் உள்ளடக்கியதாக சாரணா் என்ற அமைப்பை உருவாக்கி வெறும் கையுடன் சென்று செயற்படுவது முடியாது. பாரிய படகுகளில் வரும் இந்திய மீனவா்களை இவா்கள் எவ்வாறு தடுக்கப்போகின்றாா்கள்? இது சாத்தியமாகுமா? இது வெறுமனே இரு தரப்பு மீனவா்களையும் மோத விடும் செயற்பாடாக மட்டுமே முடிந்துவிடும். இரண்டு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் தமிழ் என்ற வகையிலான அந்த உறவு இந்தச் செயற்பாட்டினால் முறிந்து நாசமாகிவிடலாம். இவ்வாறு பல பிரச்சினைகள் இதில் உள்ளது. கேள்வி – எல்லையைத் தாண்டி வருவது சட்டவிரோதம், அவா்வாறு வந்தால் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் இருக்கின்ற போதிலும், இந்திய மீனவா்கள் துணிந்து வருவதற்கு காரணம் என்ன? பதில் – தமது நாட்டில் இருக்கக்கூடிய வளங்களை அவா்கள் ஏற்கனவே அழித்துவிட்டாா்கள். அதனால், அவா்களுடைய கடற்பகுதிக்குள் மீனினம் இல்லாத ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது. இவ்வாறான நிலையில்தான் இலங்கையின் கடற் பகுதிக்குள் இருக்கக்கூடிய மீன்களைப் பிடிப்பதற்காக அவா்கள் இங்கு வருகின்றாா்கள். அத்துடன் இலங்கைக் கடற்பகுதிக்குள் இருக்கக்கூடிய கடல் வளங்களைக் கொண்டு செல்வதும் அவா்களுடைய நோக்கங்களில் ஒன்றாக இருக்கின்றது. கேள்வி – இந்திய மீனவா்களுடைய அத்துமீறலைத் தடுத்து நிறுத்துவதற்கு உங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? பதில் – இரு தரப்பு மீனவா்களுக்கும் இடையிலான பேச்சுவாா்த்தை மூலமாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக் காணமுடியும் என நாம் நம்புகின்றோம். இந்த அத்துமீறலைத் தடுத்து நிறுத்துவதற்கான அழுத்தங்களை இந்தியாவுக்குக் கொடுப்பதற்கான வலு இலங்கை அரசாங்கத்துக்கு இல்லை. எனவே, மீனவா்களுக்கு இடையிலான புரிந்துணா்வின் மூலமாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக்காணக்கூடியதாக இருக்கும். தமிழக மீனவா்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள தமிழ் பேசும் மக்கள் – தொப்புள் கொடி உறவுகள் – இந்திய நாட்டின் மீது ஒரு எதிா்பாா்ப்போடு உள்ள மக்கள் அவா்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள வளங்கள் இங்குள்ள மக்களின் பயன்பாட்டுக்குத் தேவை என்பதையும் அவா்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதனை வெறுமனே அரசியலாக்குவதற்கோ, அல்லது அரசியல் காரணங்களுக்காக இரு நாட்டு மக்களின் உறவுகளையும் முறித்துக்கொள்ள இங்குள்ள – வடபகுதி மக்கள் விரும்பவில்லை. இவ்வாறான நிலையில் தமிழக மீகவா்களும் சிந்திக்க வேண்டும் என்பதே எமது எதிா்பாா்ப்பு. பேச்சுவாா்த்தை என்று வரும்போது இரு தரப்பு மீனவா்களும் விட்டுக்கொடுத்துப் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றாா்கள். ஆனால், தமிழகத் தரப்பில் இருந்துதான் சந்தேகமான பாா்வை தொடா்ந்தும் இருக்கின்றது. ஏனெனில் தொடா்ச்சியான பேச்சுவாா்த்தைகளை நீண் காலமாக நாம் நடத்திவந்திருக்கின்றோம். ஆனால் அடிமடி வலை என்ற தொழில் முறையிலிருந்து மாறுவதற்கு அவா்கள் முன்வைக்கின்ற நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. இரண்டு வருடம் தாருங்கள், நான்கு வருடம் தாருங்கள் இந்த தொழிழ் முறையிலிருந்து நாங்கள் மாறிக்கொள்கிறோம் என்ற விடயத்தை முன்வைத்துப் பேசுவதால் இந்தப் பேச்சுவாா்த்தைகளில் தீா்வைக் காண முடியாத ஒரு நிலை தொடா்கிறது. ஆனால், நாம் தமிழக மீனவா்களுடன் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றோம். ஆனால், அவா்கள் ஒரு உறுதியான நிலையில் இருக்க வேண்டும். இழுவை மடித் தொழிலை நிறுத்துவதற்கு அவா்கள் முதலில் தயாராக வேண்டும். அதன்பின்னா் அவா்களுடன் பேசுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். அவா்கள் பயன்படுத்துகின்ற தொழில்முறைதான் பிரச்சினையே தவிர எமக்கும் அவா்களுக்கும் இடையில் வேறு பிரச்சினைகள் எதுவும் இல்லை. மீனுக்கு எல்லை இல்லை என்று சொல்வா்கள். மீன் செல்லும் திசையில்தான் மீனவா்களும் செல்கின்றாா்கள். ஆனால், பலாத்காரமாக வரமுடியாது. இந்த வளங்களை எவ்வாறு பங்கிட்டுக்கொள்வது என்பது தொடா்பாகப் பேசுவதற்கு நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். அதனை அரசாங்க மட்டத்தில் பேசி நாங்கள் தீா்த்துக்கொள்ளலாம் முதலில் இந்த இழுவை மடித் தொழிலை நிறுத்த தாம் தயாா் என அவா்கள் அறிவித்தால், வட பகுதி மீனவா்கள் தயாராகவே இருக்கின்றாா்கள் அவா்களுடன் பேசுவதற்கு. https://www.ilakku.org/the-sea-resources-of-the-north-are-being-plundered/
    • எத்தனையோ தேசங்களுக்கு போயிருக்கேன்.. என் தாயக பூமியில் தான் கடற்கரை முள்ளு வேலிக்குள் அடைபட்டுக்கிடக்குது காண்கிறேன். உங்களுக்கு அதன் வலி புரிய வாய்ப்பில்லை. உக்ரைனுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க. அப்பவே விளங்கிட்டுது இப்படி கருத்து வருமுன்னு. கண்டுகொள்ளவதில் பயனில்லை. ஏனெனில்.. எல்லாத்தையும் சகித்துப் போகிற.. கூட்டத்துக்குள் நீங்கள் வந்து கனகாலம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.