Jump to content

அரிதாரம் பூசி வண்ணமயமாய் பறக்கும் பலூன்கள் விரைவில் வெடித்துச் சிதறும்: கமல், ரஜினி மீது ஓபிஎஸ் தாக்கு


Recommended Posts

அரிதாரம் பூசி வண்ணமயமாய் பறக்கும் பலூன்கள் விரைவில் வெடித்துச் சிதறும்: கமல், ரஜினி மீது ஓபிஎஸ் தாக்கு

 

 
Rajnath320171002350630

ஒபிஎஸ், ரஜினி, ஜெயக்குமார், கமல் - கோப்புப் படம்

அரசியலில் புதிதாக அரிதாரம் பூசி சில வண்ண பலூன்கள் பறக்கின்றன. விரைவில் அவை உடைந்து சிதறிவிடும் என துணை முதல்ர் ஓபிஎஸ், கமல்- ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து விமர்சித்தார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை ஒட்டி அவரது உருவச்சிலையை சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் கூட்டாக திறந்து வைத்தனர்.

இந்தக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் பேசும்போது டிடிவி தினகரன், கமல், ரஜினியை விமர்சித்தார். டிடிவி தினகரனை விமர்சிப்பது வழக்கமான ஒன்று என்றாலும் கமல் ரஜினியை அதிமுக மேடையில் விமர்சித்திருப்பதன் மூலம் புதிய சர்ச்சையை ஓபிஎஸ் கிளப்பி உள்ளார்.

இந்தக் கூட்டத்தில் ஓபிஎஸ் பேசியதாவது:

''இப்போது சிலர் மக்களை காப்பாற்றப் போகும் ரட்சகர்கள் தாங்கள் தான் என்று வீர வசனம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். புதிதாக அரசியல் அவதாரம் எடுத்திருக்கும் இவர்கள் பேசும் ஆரவார வசனங்கள் எல்லாம் வெறும் புஸ்வாணமாக மாறி ஆரவாரம் இல்லாமல் அடங்கி போய்விடும்.

நல்லவர்களைப் போல அவர்கள்போடும் வேஷம் வெகு விரைவில் கலைந்து போய் விடும், அவர்கள் குழுக்களும் கலகலத்துப் போய்விடும். ஏற்கெனவே தமிழகத்தில் நம்மை வெல்ல நினைத்த அரசியல் கட்சிகள் எல்லாமே, காற்று போன பலூன்களாய் சுருங்கிப்போய் கிடக்கின்றன.

அரசியல் வானில் புதிது புதிதாக சில காற்றடைத்த பலூன்கள் பறக்கத் தொடங்கி உள்ளன. அரிதாரம் பூசிய அந்த வண்ண பலூன்கள் பார்ப்பதற்கு அழகாய்த்தான் தெரியும். அந்த பலூன்கள் வெகு விரைவில் வெடித்துச் சிதறி ஒன்றுமில்லாமல் போவதை நாடு பார்க்கத்தான் போகிறது. நாமும் பார்க்கத்தான் போகிறோம்.''

இவ்வாறு ஓபிஎஸ் பேசினார்.

http://tamil.thehindu.com/tamilnadu/article22844331.ece?homepage=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.