Jump to content

“முதல்வர் பதவியைக் கொடுங்கள்!” - எடப்பாடிக்கு பன்னீர் கெடு


Recommended Posts

மிஸ்டர் கழுகு: “முதல்வர் பதவியைக் கொடுங்கள்!” - எடப்பாடிக்கு பன்னீர் கெடு

 

மோடி சமாதான விசிட்!

 

p42a_1519403190.jpg‘‘இது காமெடி அல்ல... நிஜம்’’ என்றபடி வந்து அமர்ந்தார் கழுகார்.

‘‘சொல்லும்’’ என்றோம்.

‘‘அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் ஓர் ஆலோசனைக் கூட்டம். முடித்துவிட்டு விடுவிடுவென கீழே இறங்கி வருகிறார் ஓ.பன்னீர்செல்வம். ஏதோ சிந்தனைகளோடு அவசரமாகக் காரில் ஏறப்போகிறார். பின்னால் ஓடிவந்த செக்யூரிட்டி அதிகாரி, ‘சார்... இது முதல்வரின் கார்’ என்று நினைவுபடுத்த, சட்டென சுதாரித்துக்கொண்டு, சற்று முன்னால் இருந்த தன்னுடைய காரில் ஏறினார். ‘இந்தக் காட்சி தற்செயலானது அல்ல. பன்னீரின் அடிமனதில் முதல்வர் பதவி நினைப்பு கிடந்து அல்லாடுகிறது. அதன் வெளிப்பாடுதான் இது’ என்கிறார் எடப்பாடி அணியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர்’’ என்ற கழுகாரை இடைமறித்தோம்.

‘‘தனிக்கட்சி ஐடியாவில் ஓ.பி.எஸ் இருப்பதாகக் கடந்த இதழில் சொல்லியிருந்தீர்கள். அதன் தொடர்ச்சியாக நிறைய காட்சிகள் அ.தி.மு.க-வில் அரங்கேறி வருகின்றனவே?’’ என்று கேட்டோம். 

‘‘அவர் என்ன மூடில் இருக்கிறார் என்பதே சஸ்பென்ஸாக இருக்கிறது. இப்போதெல்லாம் அதிகம் சென்னையில் இருப்பதில்லை. பணிவின் அடையாளமாகக் கருதப்பட்டவரின் பேச்சில் கனல் தெறிக்கிறது. பி.ஜே.பி-யினரையும் விமர்சிக்கிறார். ‘கொஞ்ச நாளைக்கு முன்பு வரை அவர் இப்படி இல்லை. இப்போது திடீரென ஏன் இப்படிப் பேசுகிறார்? இது அவருடைய தனிப்பட்ட கருத்தா அல்லது கட்சியின் கருத்தா?’ என்று புரியாமல் கட்சியின் சீனியர் தலைவர்களே குழம்பிப் போயிருக்கிறார்கள். கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி மௌனம் காக்கிறார். இருவருக்கும் பனிப்போர் உச்சத்தில் இருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது.’’

p42_1519403134.jpg

‘‘என்னதான் இருவருக்குள் பிரச்னை?’’

‘‘இருவருக்கும் கட்சியின் தலைமைப் பதவி, முதல்வர் இருக்கை... இரண்டையும் குறிவைத்து மனஸ்தாபம். முதலில் முதல்வர் இருக்கையைப் பற்றிச் சொல்கிறேன். ஆட்சியின் முக்கிய விவகாரங்கள் பற்றி பன்னீரை ஆலோசிப்பதில்லை எடப்பாடி. காவிரி பிரச்னையில் ஆரம்பித்து எதுவானாலும் முதல்வரே தன்னிச்சையாக முடிவெடுக்கிறார். எடப்பாடி முதல்வராகப் பதவியேற்று, பிப்ரவரி 15-ம் தேதியோடு ஓராண்டு முடிந்தது. இதைச் சுட்டிக் காட்டிய பன்னீர், ‘ஒரு வருடம் நீங்கள்... அடுத்த வருடம் நான்... இப்படித்தான் பிரதமர் மோடி சொன்னார். அந்தவகையில் நான் முதல்வர் பதவியில் அமர வேண்டிய நேரம் இது’ என்று சொல்லியிருக்கிறார். அணிகள் இணைப்பு நேரத்தில் பேசப்பட்ட இந்த ரகசியத்தை இப்போதுதான் பன்னீர் தரப்பு வெளியில் கசிய விடுகிறது.’’

‘‘ஆச்சர்யமாக இருக்கிறதே... இதற்கு எடப்பாடி என்ன சொன்னாராம்?’’

‘‘எடப்பாடி பளிச்சென, ‘உங்கள் பின்னால் 11 எம்.எல்.ஏ-க்கள் இருந்தார்கள். இப்போது அவர்கள் உங்கள் விசுவாசிகளா? என் பின்னால் மெஜாரிட்டியான எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். அனைவரும் என்னைத்தான் முதல்வராகத் தொடரச் சொல்கிறார்கள். பதவியை உங்களுக்குக் கொடுப்பதற்கு நாம் என்ன ஒப்பந்தமா போட்டோம்’ என்று கேட்டாராம். இதைக் கேட்ட பன்னீர்செல்வம் ஷாக் ஆகிவிட்டாராம்.’’

‘‘அடடா!’’

‘‘கட்சியில் தனக்கு இருக்கும் ஒருங்கிணைப்பாளர் என்ற அதிகாரத்தை வைத்து எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்று பார்த்தால், அங்கும் எடப்பாடியின் ஆதிக்கம்தான் அதிகமாக இருக்கிறது. கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் எடப்பாடி, தமிழகம் முழுவதும் தினகரன் ஆதரவாளர்கள் சுமார் 600 பேரைக் கட்சியை விட்டு நீக்கும் விஷயத்தில் முட்டுக்கட்டை போடுகிறாராம். ஏற்கெனவே காலியான இடங்களுக்கும்  புதியவர்களை இதுவரையிலும் நியமிக்கவில்லை. இதுவே பன்னீருக்கு வைக்கப்பட்ட ‘செக்’ என்கிறார்கள். பன்னீர் மோதலில் இறங்கினால், அவருக்குக் கும்பிடு போட்டுவிட்டு, தினகரன் அணியுடன் கைகுலுக்கும் ஐடியாவில் எடப்பாடி இருக்கிறாராம். அப்படி ஒரு சூழல் வந்தால், இப்போது நீக்கப்பட்ட தினகரன் ஆதரவாளர்களுக்கு மீண்டும் பதவிகளைத் தரவேண்டி வரலாம். இடையில், புதியவர்களை நியமித்தால் அவர்களை நீக்கி எதிர்ப்பைச் சம்பாதிக்க வேண்டியிருக்கும். இதை மனதில் வைத்தே, புதியவர்கள் நியமனத்தை எடப்பாடி தள்ளிப்போடுவதாகப் பன்னீர் நினைக்கிறாராம்.’’
 
‘‘ஓஹோ... கதை இப்படிப் போகிறதா?’’

p42b_1519403172.jpg

‘‘பன்னீரின் பின்னால் இருந்த எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்களுக்கு வேண்டியதைச் செய்துகொடுத்து வளைத்துவிட்டார் எடப்பாடி. அதனால் அவர்கள் எடப்பாடியின் விசுவாசிகளாக மாறிவிட்டார்கள். பெயரளவில் பன்னீர் பின்னால் இருக்கிறார்கள். அதனால்தான் எடப்பாடி துணிச்சலாகப் பன்னீரை ஒதுக்க நினைக்கிறார். அவராகவே விலகிப்போகட்டும் என்பது எடப்பாடியின் எதிர்பார்ப்பு.’’

‘‘பன்னீர் விலகுவாரா?’’

‘‘எப்படி விலகுவார்? ‘முதலில் கட்சி நம் கட்டுப்பாட்டில் வர வேண்டும், அடுத்ததாக முதல்வர் பதவி. இல்லாவிட்டால் தனிக்கட்சி. தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்து இரட்டை இலையை முடக்கி, நாம் யாரென்று காட்டுவோம்’ என ஆதரவாளர்கள் பன்னீரை நெருக்குகிறார்கள். ‘இரண்டும் சரிப்பட்டு வரவில்லை என்றால், பி.ஜே.பி-யில் சேருங்கள்’ என டெல்லியிலிருந்து இன்னொரு பக்கம் பிரஷர் வருகிறது. சமீபத்தில் மதுரை போயிருந்தார் பன்னீர். அப்போது திடீரென மதுரை எம்.பி-யான கோபாலகிருஷ்ணனின் அலுவலகத்துக்குக் காரைத் திருப்பச் சொன்னார். அவருடன் காரில் இருந்த புறநகர் மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பாவைப் பாதி வழியில் இறக்கிவிட்டுவிட்டார். தனி அறையில் முக்கால் மணி நேரம் கோபாலகிருஷ்ணனுடன் ஆலோசனை நடத்தினார். டெல்லியில் அரசியல் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் லெவலில் கோபாலகிருஷ்ணன், தனக்கென ஒரு லாபி வைத்திருக்கிறார். கோபாலகிருஷ்ணனிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்து, உடனே டெல்லிக்குக் கிளப்பிப்போகச் சொன்னாராம். கோபாலகிருஷ்ணனை எதிர்பார்த்து, டெல்லியில் மைத்ரேயன் காத்திருந்தாராம். இருவரும் கூட்டாக பி.ஜே.பி-யின் முக்கியத் தலைவர் ஒருவரைச் சந்தித்தார்களாம். ‘என்ன பேசினார்கள், என்ன கடிதம் அது?’ என்பது தெரியவில்லை. ஆனால், ஒன்று மட்டும் தெரிந்தது. தமிழக அரசின் முறைப்படியான அழைப்பிதழ் இல்லாமலே பிரதமர் மோடி, சென்னையில் இருசக்கர வாகனம் தரும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதாக அறிவிப்பு வெளியானது.’’

‘‘அப்படியானால், பன்னீருக்கு டெல்லியில் செல்வாக்கு இருக்கிறதா?’’

‘‘அப்படித்தான் தெரிகிறது. எடப்பாடியும் வெவ்வேறு வழிகளில் டெல்லியின் குட்புக்ஸில் இருக்கிறார். இருந்தாலும், தினகரனை பி.ஜே.பி அடியோடு வெறுக்கிறது. எடப்பாடி தரப்பினர் தினகரனுடன் ரகசிய பேரம் நடத்தி வருவதாக மத்திய உளவுத்துறை மூலம் டெல்லிக்குத் தகவல் போயிருக்கிறது.’’

‘‘இது நிஜமா?’’

‘‘பெங்களூரில் தினகரன் பேச்சைக் கவனித்தீரா? முதலில் ‘ஊழல் அமைச்சர்கள் அனைவரையும் நீக்கவேண்டும்’ என்றார். அந்த எண்ணிக்கையைக் குறைத்துக்கொண்டே வந்தார். இப்போது மேலும் ஒரு படி இறங்கி, ‘மூன்று அமைச்சர்களை நீக்கினால் போதும். நாங்கள் எடப்பாடி அரசுடன் இணைந்துவிடுவோம்’ என்கிறார். தங்கமணி, வேலுமணி மற்றும் ஜெயக்குமார் ஆகிய மூவர் மீதும் தினகரன் கோபத்தில் இருக்கிறார். எடப்பாடி தரப்பில், ‘இந்த மூவரையும் நீக்கமுடியாது. வேண்டுமானால், இப்போது அவர்கள் வகிக்கும் பவர்ஃபுல் பதவிகளிலிருந்து விலக்கி டம்மி துறைகளை ஒதுக்கித்தருகிறோம்’ என்று சொன்னதாகத் தகவல். தினகரன், இந்த  விஷயத்தில் தீவிர ஆலோசனையில் இருக்கிறாராம். ‘இப்படி ஒரு சூழ்நிலை வந்தால், அரசியலை விட்டுப் போய்விடுவேன்’ என்று தங்கமணி கூறி வருவதாகத் தகவல். வேலுமணியும், ஜெயக்குமாரும் கொஞ்சம் பீதியில் இருக்கிறார்கள்.’’

‘‘ஆனால், பிப்ரவரி 21-ம் தேதியன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்திலும், காவிரிப் பிரச்னை தொடர்பான அனைத்துக்கட்சிக் கூட்டத்திலும் பன்னீரும் எடப்பாடியும் ஒன்றாகக் கலந்துகொண்டார்களே?’’

‘‘கத்திரிக்காய் முற்றினால், கடைக்கு வந்துவிடப்போகிறது! அதுவரை இந்த மாதிரியான ‘போஸ்’கள் தொடரத்தான் செய்யும். ‘பிரதமர் மோடி சென்னை வந்து ராஜ்பவனில் தங்கியிருக்கும்போது, இருவருக்கும் இடையே நடக்கும் பனிப்போரை நிறுத்துவதற்கான யோசனைகளைச் சொல்வார்’ என்று அ.தி.மு.க-வின் சீனியர் தலைவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.’’

‘‘அதாவது, பஞ்சாயத்துச் செய்து வைக்கப்போகிறாரா?’’

‘‘அதை ஏன் அப்படிச் சொல்கிறீர்? ‘கட்சியிலும் ஆட்சியிலும் அதிகாரப்பகிர்வு பற்றிப் பேசக்கூடும்’ என்று சொல்லும். ஜெயலலிதா படத்திறப்புக்கோ, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கோ வரத் தேதி கொடுக்காத பிரதமர் மோடி, திடீரென வருகிறார் என்றால், அதில் அர்த்தம் இருக்கும் அல்லவா? இதற்காகப் புதுச்சேரி நிகழ்ச்சியையும் ஒருநாள் தள்ளி வைத்திருக்கிறார்கள். மோடி சொல்வதை எடப்பாடி எப்படி ஏற்றுக்கொள்வார் என்று தெரியவில்லை.பன்னீர் இதற்காகத்தான் காத்திருக்கிறார். மோடி டெல்லி திரும்பியபிறகு அ.தி.மு.க-வில் முக்கிய மாற்றங்கள் நடக்கலாம்.’’

p42aa_1519403350.jpg

‘‘காவிரி விவகாரத்துக்கான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் என்ன நடந்தது?’’

‘‘கருணாநிதி முதல்வராக இருந்தபோது இதே காவிரிப் பிரச்னைக்காக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அதன்பிறகு அதே பிரச்னைக்காக இப்போது கூட்டம் நடைபெற்றுள்ளது. அழைக்கப்பட்டவர்களில் பகுஜன் சமாஜ் கட்சியினரைத் தவிர அனைவரும் வந்திருந்தனர். கட்சிகள் சார்பில் இரண்டு பிரதிநிதிகளும், அமைப்புகள் சார்பில் ஒருவரும் பங்கேற்க அனுமதி உண்டு. இருக்கைகளில் சிக்கல் வந்துவிடக்கூடாது என்பதற்காக, எந்தக் கட்சிக்கு எந்த இருக்கை என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு அதன்படி அமர வைத்தனர். பத்தரை மணிக்குக் கூட்டம் தொடங்கியது. பத்தே காலுக்கு ஓ.பி.எஸ் வர, அடுத்த சில நிமிடங்களில் முதல்வர் எடப்பாடி வந்துவிட்டார். அதன்பிறகுதான் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், துரைமுருகனோடு வந்து சேர்ந்தார்.’’

‘‘கூட்டத்தில் சலசலப்பு ஏதும் ஏற்பட்டதா?’’

‘‘அப்படி எதுவும் ஏற்படவில்லை. ஸ்டாலின் தனது பேச்சில், ‘அனைத்துக் கட்சியினரையும் அழைத்துச் சென்று பிரதமரைச் சந்திக்க வேண்டும்’ என்றார். காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், பி.ஜே.பி-யைக் குறை கூறுவது போன்று பேசியதும் ஓ.பி.எஸ் குறுக்கிட்டு, ‘இங்கு அனைத்துக் கட்சியினரும் இருக்கிறார்கள். யாரும் யாரையும் குறைகூற வேண்டாம்’ என்று வேண்டுகோள் விடுத்தார். திருமாவளவன் பேச்சோடு பேச்சாக,‘மத்திய அரசு ஒத்துவரவில்லை என்றால் அனைத்து எம்.பி-க்களும் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்’ என்று சொன்னதும்,முதல்வர் உள்பட ஆளும்கட்சியினர் பதறிவிட்டனர்.’’

‘‘கூட்டம் நீண்ட நேரம் நடந்ததே?’’

‘‘கலந்து கொண்ட அனைவருக்கும் பேச வாய்ப்புத் தரப்படும் என்று ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டதால், மதியத்துக்கு மேலும் கூட்டம் தொடர்ந்தது. அதனால், அனைவருக்கும் தமிழ்நாடு ஹோட்டலிலிருந்து மதிய உணவு கொண்டுவரப்பட்டது. சிலர் சொந்த வேலை காரணமாக மதியத்தோடு கிளம்பிவிட்டார்கள். யாரும் போனில் தகவல் சொல்லக்கூடாது என்பதால், கூட்ட அரங்கில் ஜாமர் கருவியைப் பொருத்தியிருந்தனர்.இதனால், உள்ளே இருந்தவர்கள் தவித்துப் போனார்கள்’’ என்ற கழுகார் பறந்தார்.

அட்டை ஓவியம்: பிரேம் டாவின்ஸி
படங்கள்: வி.கே.ரமேஷ், கே.ஜெரோம்


p42d_1519403089.jpg

யாரை அழிக்க யாகம்?

சிகலாவின் பி.ஏ-வாக பல ஆண்டுகள் போயஸ் கார்டனில் வலம் வந்தவர் சிவா. ‘கார்டன்’ சிவா என அ.தி.மு.க வட்டாரங்களில் பிரபலமானவர். இவர், சிவராத்திரிக்கு முதல் நாள் பிரத்தியங்கரா தேவிக்கு மஹா சண்டி யாகத்தை யாருக்கும் தெரியாமல் மிக ரகசியமாக நடத்தியுள்ளார். பட்டுக்கோட்டையை அடுத்த கருக்கா வயல் என்னும் சிற்றூரில் உள்ள சிவசக்தி அம்மன் கோயில் சாமியாரை வைத்து, இந்த யாகம் நடந்தது. 20 அடி ஆழம், 10 அடி அகலத்தில் பள்ளம் தோண்டி, பிரமாண்டமாக இந்த யாகம் நடத்தப்பட்டுள்ளது. எதிரிகளை அழிப்பதற்காக நடத்தப்படுவதுதான் இந்த யாகம். சசிகலாவுக்கும், இளவரசியின் மகன் விவேக்குக்கும் நெருக்கமானவர் கார்டன் சிவா. 25 லட்ச ரூபாய் செலவில் சசிகலாவுக்காக நடத்தப்பட்ட இந்த யாகத்தை யாருக்கு எதிராக சிவா நடத்தினார் என்பதுதான் தஞ்சை வட்டாரத்தில் இப்போது பரபரப்பு விவாதமாக உள்ளது.


p42c_1519403105.jpg

வருமானவரித் துறையின் ‘ஃபீனிக்ஸ் பறவை’ என்று உயர் அதிகாரி ஒருவரைச் சுட்டிக்காட்டுகிறார்கள். மாதச் சம்பளத்தைவிட அதிக மாத வாடகை கொடுத்துக் குடியிருக்கும் இவரை, இருப்பதிலேயே டம்மியான பதவியில் போட்டார்களாம். ஓரிரு மாதங்களிலேயே அங்கிருந்து எகிறி, நல்ல பதவியில் உட்கார்ந்துவிட்டார். இவரின் ஃபேமஸ் டயலாக், ‘‘எனக்குப் பத்து விரல் இருக்கு’’ என்பதுதான். எதிரில் இருப்பவர் ‘பத்து லகரம் தர வேண்டும்’ என்று அர்த்தம். 

தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரிப் பதவியில் இருக்கும் ராஜேஷ் லக்கானி, ‘இந்தப் பதவி போதும்’ என்கிற மூடுக்கு வந்துவிட்டாராம். இரண்டு ஆண்டுகளுக்குமேல் அந்தப் பதவியில் இருந்துவிட்டார். அவரின் இடத்துக்கு முதல்வர் அலுவலகச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, கார்த்திக் மற்றும் சத்யபிரத சாகு ஆகிய மூவரின் பெயர்கள் டெல்லிக்கு அனுப்பப்பட்டதாம். இவர்களில், சத்யபிரத சாகு பெயர் டிக் ஆகியுள்ளது.

முதல்வர் அலுவலக ஐ.ஏ.எஸ்-களில் பவர்ஃபுல்லாக இருக்கும் ஒருவர்மீது, ஒரு குரூப் ஐ.ஏ.எஸ்-கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். அவரின் வேகத்துக்கு மற்றவர்களால் ஈடுகொடுக்கமுடியவில்லையாம். அதனால், ‘‘எங்களை அவர் வேண்டுமென்றே புறக்கணிக்கிறார்’’ என்று முதல்வர் காதுக்குச் செல்லும்படியாகத் தகவலைக் கசியவிடுகிறார்கள். 

வடக்கு மண்டல உயர் போலீஸ் அதிகாரிகள் இருவர், விசிட் போன இடத்தில் இருந்த பட்டு ஜவுளிக் கடைக்குப் போய் இரண்டு லட்ச ரூபாய்க்குச் சேலை வாங்கினார்களாம். உடன் வந்த உள்ளூர் அதிகாரி ஒருவரின் கையில் பில்லைக் கொடுத்துவிட்டார்களாம். தலையில் கைவைத்தபடி புலம்பிக்கொண்டிருக்கிறார் அந்த உள்ளூர் அதிகாரி.

அ.தி.மு.க உறுப்பினர் சேர்க்கை மற்றும் பழைய உறுப்பினர் பதிவைப் புதுப்பிக்கும் பணியை பிப்ரவரி 2-ம் தேதி எடப்பாடியும் பன்னீரும் தொடங்கி வைத்தனர். ‘‘ஜெயலலிதா காலத்தில் ஒன்றரைக் கோடி தொண்டர்கள் இருந்தார்கள். இப்போது ஒன்றே முக்கால் கோடி உறுப்பினர்களாக அதை உயர்த்தவேண்டும்’’ என்று சொல்லி, ஏழு லட்சம் படிவங்களைத் தமிழகம் முழுக்க அனுப்பி வைத்தார்கள். ஆனால், எதிர்பார்த்தபடி உறுப்பினர்களைச் சேர்த்து படிவங்கள் எதுவும் திரும்பி வரவில்லையாம்.

தமிழக அமைச்சர்களில் குறிப்பிட்ட ஐந்து பேரை, மத்திய உளவுத்துறைத் தீவிரமாகக் கண்காணிக்கிறதாம். அரசு நியமித்த உதவியாளர்களைத் தவிர்த்து, வசூல் செய்து தருவதற்கு என்றே இவர்கள் தனியாக ஆட்களை நியமித்துள்ளார்களாம். இவர்கள் பணம் எண்ணும் எந்திரம் வைத்துக்கொண்டு செய்யும் டீலிங்குகள் பற்றிய விவரங்களை உளவுத்துறை அதிகாரிகள் மோப்பம் பிடிக்கிறார்கள். வருமான வரித்துறை நடவடிக்கை எப்போது பாயப்போகிறதோ?

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.