Jump to content

நாளிதழ்களில் இன்று:


Recommended Posts

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் சரிவு: அரசு செயல்படவில்லையா?

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்

டைம்ஸ் ஆஃப் இந்தியா- 'தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் சரிவு'

பணம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

2016- 17 நிதியாண்டில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 0.86 சதவீதம் குறைந்துள்ளது என டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி கூறுகிறது.

அதற்கு முந்தைய நிதியாண்டில் 8.79 சதவீதமாக இருந்த வளர்ச்சி விகிதம், 2016-17ல் 7.93 சதவீதமாக வீழ்ந்துள்ளதாக நித்தி ஆயோக் (முந்தைய திட்டக் கமிஷன்) வெளியிட்ட தரவுகள் குறிப்பிடுவதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. உற்பத்தி துறையின் வளர்ச்சி மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பல நிறுவனங்கள் தமிழகத்தை விடுத்து மற்ற மாநிலங்களுக்கு சென்று விட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழந்த பிறகு, தமிழக அரசு முறையாக செயல்படாமல் இருப்பதே இதற்கு காரணம் என்று பொருளாதார வல்லுனர் வெங்கடேஷ் அத்ரேயா கூறியதாகவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் விவரிக்கப்பட்டுள்ளது.

தினமலர் வெளியிட்டுள்ள கார்டூன்

கார்டூன்படத்தின் காப்புரிமைதினமலர்

தினமணி - 'காவிரி விவகாரத்தில் பிரதமரை சந்திக்க முடிவு'

பிரதமர்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஆறுவார காலத்திற்குள் காவிரி மேலான்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோதியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குழு சந்திக்க உள்ளதாக தினமணி நாளிதழ் முதல் பக்கத்தில் பிரதான செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க தலைமை செயலகத்தில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், பாமக, மதிமுக, தேமுதிக, இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளோடு விவசாய சங்கங்களும் பங்கேற்றதாகவும், இதில் ஒருமனதாக 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் இச்செய்தி விவரிக்கிறது.

தி இந்து (ஆங்கிலம்) - 'ஏழை மக்களுக்கு நன்மை பயக்க வேண்டும்'

இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகள் அனைத்து தரப்பு மக்களுக்கும், குறிப்பாக ஏழை மக்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில் இருக்க வேண்டும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்ததாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜஸ்டின்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்திய கனடா வணிக கூட்டத்தில் பேசிய ட்ரூடோ, பொருளாதார வளர்ச்சி எல்லா தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும் என குறிப்பிட்டார். மேலும், பன்முகத்தன்மையுடன் இருப்பது புதிய சிந்தனைகளுக்கும் கண்டுபிடிப்புகளுக்கும் வழிவகை செய்யும் என்றதோடு, கனடா நாட்டிற்கு டொரொன்டோ போன்று, இந்தியாவுக்கு பல கலாசாரங்கள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை பெற்றுள்ளது பெங்களூரு என்றும் ட்ரூடோ கூறியதாக அச்செய்தி விவரிக்கிறது.

http://www.bbc.com/tamil/india-43165072

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.