Jump to content

மையமா ? மய்யமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மய்யம் என்றால் என்ன? மையம் என்றால் எங்களுக்கு என்ன? தமிழல்லாத சொற்களுக்காக ஏன் இந்த சொற்போர்?.. நடுவம் என்பது தான் தமிழ் .. எழுத்துச் சீர்திருத்தம் என்ற போர்வையில் பெரியார் செய்த வேலையே ஐ உருபுச் சொற்களை அய் ஆக்கும் முறைமை. ஆனாலும் முதலில் தமிழ்ச் சொல்லில் கலந்திருக்கும் சமசுக்கிருதத்தை அறிந்து கொள்வது நல்லது என நினைக்கிறேன்.  தமிழர் தாயகப் பகுதிகளில் வன்னியிலும் யாழ்ப்பாணத்திலுமே இந்து மதத்தின் தாக்கத்தினால் மொழிக்கலப்பு மிக அதிகமாகவிருக்கிறது. தொன்மையான வழிபாட்டு முறைகளைப் பேணும் தென் தமிழீழத்தில் மொழிக்கலப்பு ஒப்பீட்டளவில் குறைவாகவே நிகழ்ந்திருக்கிறது.  தமிழகத்தில் ஆங்கிலம் கலந்த வழக்கு இருப்பதால் ஆங்கிலம் கலக்காத யாழ்ப்பாணத் தமிழ், அதற்கென ஒரு உயர்வைப் பெற்றுக்கொண்டது.ஆனால் அதனுள்ளே புரையோடிப்போயிருக்கும் சமசுக்கிருதத்தை கண்டுகொள்ளத் தவறிவிட்டோம். இந்துமதத்தின் காவலர்களாகத் தம்மைக் காட்டிக்கொள்ளும் யாழ்ப்பாணிகள் தமது மொழியில் கலந்துள்ள சமசுக்கிருதத்தைக் களையெடுக்க முன்வரவேண்டும். தொலைக்கப்பட்ட எமது தேசிய வெளியின் மீட்டெடுப்பின் துவக்கமாக அந்தக் களையெடுப்பு அமைய வேண்டும். பண்பாடும் மரபும் மதத்தினால் கட்டியமைக்கப்படல் கூடாது. அது தேசியக் கொள்கையினைச் சிதைக்கக்கூடியது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மையம் ---- நடுசென்ரர். (சென்ரரா , நடுவா என்று கேட்கப்படாது).

மய்யம் ---- பிணம். (ஆஸ்பத்திரிகளில் இந்தச்சொல்லை பாவிப்பினம்). அமரர் ஊர்தி காரர்களும் மய்யத்தை வானில் ஏத்து என்றுதான் விளிப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மையம் ---- நடுசென்ரர். (சென்ரரா , நடுவா என்று கேட்கப்படாது).

மய்யம் ---- பிணம். (ஆஸ்பத்திரிகளில் இந்தச்சொல்லை பாவிப்பினம்). அமரர் ஊர்தி காரர்களும் மய்யத்தை வானில் ஏத்து என்றுதான் விளிப்பார்கள்.///

 

பிறமொழிக்கலப்புகள் களையப்பட வேண்டியவை.. மையத்தின் வேர்ச்சொல் என்ன?.. நடுச்செ ன்ரர் என்பதை குவியம் எனலாமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 வானிலை  அறிக்கை  .. புயல்  வீசுவதற்கான  அறிகுறிகள்  . மேற்கு க்கரையோரங்களில்  கருமேகங்கள் மையங்கொண்டுள்ளது

 

 நிலை கொண்டுள்ளது ..நிலையம் என  கருதி  கொள்ளலாமா ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/02/2018 at 5:09 PM, suvy said:

மையம் ---- நடுசென்ரர். (சென்ரரா , நடுவா என்று கேட்கப்படாது).

மய்யம் ---- பிணம். (ஆஸ்பத்திரிகளில் இந்தச்சொல்லை பாவிப்பினம்). அமரர் ஊர்தி காரர்களும் மய்யத்தை வானில் ஏத்து என்றுதான் விளிப்பார்கள்.

மையத்து - மய்யத்து: பிரேதம்

முஸ்லிம்கள் பொதுவாகப் பாவிப்பார்கள்.

மய்யம் சரி என்றால் அய்யம், அய்யா எல்லாம் சரிதானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, கிருபன் said:

மையத்து - மய்யத்து: பிரேதம்

முஸ்லிம்கள் பொதுவாகப் பாவிப்பார்கள்.

மய்யம் சரி என்றால் அய்யம், அய்யா எல்லாம் சரிதானே?

நீங்கள் கூறுவது போல பயன்பாட்டு வழக்கில் வேறுபட்ட பொருள்களில் இருந்தாலும்.... இலக்கண விதிப்படி ( தொல்காப்பியம் : ஐகாரக் குறுக்கம்)  மையம் மய்யம் இரண்டுமே ஒரே பொருளைத் தான் தரும். ஆனால் மையம் என்பது தமிழ் சொல் அல்ல என்கிற போது அங்கே தொல்காப்பிய விதி எவ்வாறு வரும்? முதலில் தமிற்சொற்கள் எவை ? தமிழல்லாத சொற்கள் எவையெனப் பிரித்தறியும் திறன் தமிழர்களுக்கு வரவேண்டும். மையம் என்பது தமிழ் எனின் அதன் வேர்ச்சொல்எது? மையம் என்பதற்கு நடுவம் என்பதே தமிழ். 

அகரத் திம்பர் யகரப் புள்ளியும்

ஐயெ னெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும். ( தொல்காப்பியம் ,எழுத்ததிகாரம் , 56) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நவீனன் said:

மையம், மய்யம் : எது சரி? - மதன் கார்க்கி விளக்கம்

தமிழ்நாட்டில் தமிழ்ப்பேராசியர்களுக்கு பற்றாக்குறையா? சரிபிழை விசாரிக்க போயும் போயும் இவரா கிடைத்தார்? :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, செல்வி said:

நீங்கள் கூறுவது போல பயன்பாட்டு வழக்கில் வேறுபட்ட பொருள்களில் இருந்தாலும்.... இலக்கண விதிப்படி ( தொல்காப்பியம் : ஐகாரக் குறுக்கம்)  ழையம் மய்யம் இரண்டுமே ஒரே பொருளைத் தான் தரும். ஆனால் மையம் என்பது தமிழ் சொல் அல்ல என்கிற போது அங்கே தொல்காப்பிய விதி எவ்வாறு வரும்? முதலில் தமிற்சொற்கள் எவை ? தமிழல்லாத சொற்கள் எவையெனப் பிரித்தறியும் திறன் தமிழர்களுக்கு வரவேண்டும். மையம் என்பது தமிழ் எனின் அதன் வேர்ச்சொல்எது? மையம் என்பதற்கு நடுவம் என்பதே தமிழ். 

அகரத் திம்பர் யகரப் புள்ளியும்

ஐயெ னெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும். ( தொல்காப்பியம் ,எழுத்ததிகாரம் , 56) 

மொழி செழுமையாக இருக்கவேண்டுமென்றால் இரவல் வாங்கத்தானே வேண்டும். 

தனித்தமிழ் இயக்கம் எல்லாம் தமிழை வளர்ப்பதை விட தனிமைப்படுத்துவதில்தான் போய்முடியும்.

மையம், நடுவம் என்பன ஒரு நிறுவன centre ஐக் குறிப்பிடலாம். ஆனால் வட்டத்தின் மையத்தை நடுவம் என்று குறிப்பிடலாமா?

வெதும்பி சாப்பிட்டு குழம்பி குடித்த கதை பலருக்கு விளங்காது. எனவே தமிழ் வெறியர்களாக இருக்காமல் தமிழை நேசிக்கக் கற்றுக்கொள்வோம்.

Link to comment
Share on other sites

40 minutes ago, கிருபன் said:

மொழி செழுமையாக இருக்கவேண்டுமென்றால் இரவல் வாங்கத்தானே வேண்டும். 

தனித்தமிழ் இயக்கம் எல்லாம் தமிழை வளர்ப்பதை விட தனிமைப்படுத்துவதில்தான் போய்முடியும்.

மையம், நடுவம் என்பன ஒரு நிறுவன centre ஐக் குறிப்பிடலாம். ஆனால் வட்டத்தின் மையத்தை நடுவம் என்று குறிப்பிடலாமா?

வெதும்பி சாப்பிட்டு குழம்பி குடித்த கதை பலருக்கு விளங்காது. எனவே தமிழ் வெறியர்களாக இருக்காமல் தமிழை நேசிக்கக் கற்றுக்கொள்வோம்.

 

ஒரு பிரதேசத்தின் நடுவப்பகுதி (புள்ளி) மையம் எனலாம்.  மாநில அரசு மைய அரசு என்ற வழக்கு உண்டு. ஒரு கதையின் மையக் கருத்து. கடலில் குறிப்பிட்ட இடத்தில் புயல் மையம் கொள்ளுதல். 

மையல் - காதல் வயப்பட்ட நிலை. பிரதான உணர்வு காதல் மயக்கத்தில் இருப்பது சார்ந்தது. 

மய்யம் இறந்தவர் உடலைக் குறிக்கும். மயானம் உடலை எரிக்கும் அல்லது புதைக்கும் இடத்தைக் குறிக்கும். 

மைதானம் என்பது சுடுகாட்டைக் குறிப்பதாக இருக்கலாம் காலப்போக்கில் மருவி விழையாட்டு அரங்கை குறிப்பதாக அமைந்திருக்கலாம். 

------------------

ஒரு மொழி வளர வேண்டுமாயின் சொற்களின் பெருக்கம் அவசியம். ஆங்கிலம் பல மொழிகளில் இருந்தும் சொற்களை எடுத்துக்கொண்டது. அதுபோல் தமிழ்மொழியில் சொற்களை நீக்குவதற்குப் பதிலாக சொற்களை தமிழாக்குதல் தான் ஆரோக்கியமானது. 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.