Jump to content

கிளிநொச்சியில் அமையவுள்ள வடக்கிற்கான விசேட மகப்பேற்று பெண்ணோயியல் மையமும் பறிபோகும் ஆபத்து?!


Recommended Posts

கிளிநொச்சியில் அமையவுள்ள வடக்கிற்கான விசேட மகப்பேற்று பெண்ணோயியல் மையமும் பறிபோகும் ஆபத்து?!

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

Kili-hospitol.jpg?resize=800%2C533

 

மற்றுமொரு பாரிய அபிவிருத்தி திட்டம் தொடர்பில் சர்சைகளும்,இழுபறிகளும், கருத்து முரண்பாடுகளும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளன. ஏற்கனவே வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையம் தொடர்பிலும், இரணைமடு யாழ்ப்பாணம் குடிநீர் விநியோகம் தொடர்பிலும் இதேபோன்றே நிலைமைகள் ஏற்பட்டிருந்தன. இறுதியில் வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையத்தை வடக்கு இழந்துவிட்டது. இரணைமடு யாழ்ப்பாணம் குடி நீர் திட்டத்தில் என்ன நடக்கிறது என்பது தெரியாமலே நடந்து வருகிறது. இது வடகிற்கான ஒரு சாபக்கேடாக அமைந்துள்ளது.

இதேபோன்றே தற்போது கிளிநொச்சியில் வட மாகாணத்திற்கான விசேட மகப்பேற்று பெண்ணோயியல் மையத்தை அமைப்பதற்கு நெதர்லாந்து அரசின் நிதி உதவியுடன் கட்டிடங்கள், மருத்துவ உபகரணங்கள், தொழிநுட்ப பயிற்சிகள் என்பவற்றுக்கும் சேர்த்து 2653701264.34 ரூபா நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள பாரிய அபிவிருத்தி தொடர்பில் சில தரப்பினர்களுக்கிடையே கருத்து முரண்பாடுகள் ஆரம்பித்துள்ளன.

குறித்த விசேட மகப்பேற்று பெண்ணோயியல் மையம் கிளிநொச்சியில் அமைக்கப்படுகின்ற போது அது வடக்கிற்கான விசேட மையமாக மட்டுமன்றி இலங்கையில் உள்ள பெண்ணோயியல் மருத்துவமனைகளோடு ஒப்பிடும்போது அதி நவீன வசதிகளுடன் கூடிய ஒரு விசேட மகப்பேற்று பெண்ணோயியல் மையமாகக் காணப்படும். குறிப்பாக செயற்கை முறை கருத்தரித்தல் வசதிகள் உள்ளிட்ட பல நவீன மருத்துவ வசதிகள் கொண்ட ஒரு நிலையமாக இது அமைக்கப்படும்.

இதற்கான திட்டங்கள் கடந்த காலத்தில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சராக ப. சத்தியலிங்கம், இருந்த போது மத்திய சுகாதார அமைச்சுடன் இணைந்து அமைத்திருந்தார்.

இந்த திட்ட முன்மொழிவானது தேசிய திட்டமிடல் திணைக்களம் மற்றும் சுகாதார அமைச்சின் திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர் நாயகத்தின் வழிகாட்டலின் படி கிளிநொச்சி வைத்தியசாலையின் இரண்டாம் கட்ட அபிவிருத்திக்கான வரைபினுள் உள்வாங்கப்பட்டு கிளிநொச்சி பிராந்திய சுகாதார திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டு வடக்கு மாகாண சுகாதார திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கபட்டது. அது அங்கிருந்து வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்திற்கு அனுப்பி அங்கும் அனுமதி பெறப்பட்டு மத்திய சுகாதார அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு அவர்களின் அனுமதியோடு தேசிய திட்டமிடல் திணைக்களத்துக்கு அனுப்பட்டது அங்கும் இத்திட்டம் தொடர்பில் நன்கு ஆராயப்பட்டு குறித்த திட்டம் பாதீட்டுத் திணைக்களத்துக்கும் (Department of budgets), வெளியக வளங்கள் திணைக்களத்துக்கும் ( External Resource Department) அனுப்பட்டிருந்த நிலையில், நெதர்லாந்து அரசு நிதி வழங்கி இந்த விசேட மகப்பேற்று பெண்ணோயியல் மையத்தை அமைக்க முன் வந்துள்ள நிலையிலேயே மாவட்டத்திற்குள் இப்பொழுது சிலர் பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

புதிதாக அமைக்கப்படவுள்ள விசேட மகப்பேற்று பெண்ணோயியல் மையம் தொடர்பில் அது எவ்வாறு முன்னெடுக்கப்படவுள்ளது, எந்தெந்த அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. அதன் முக்கியத்துவம் என்ன? எதிர்காலத்தில் அதன் பயன் எப்படியிருக்கும் போன்ற எவ்வித அடிப்படை தகவல்களும், அறிவுசார் சிந்தனைகளும் இல்லாத ஒரு சிலர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

குறித்த விசேட மகப்பேற்று பெண்ணோயியல் மையத்ம் தொடர்பில் அண்மையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட சிலர் குறித்த பாரிய அபிவிருத்தி திட்டம் தொடர்பில் எந்த அடிப்படைத் தகவல்களும் இன்றி கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துக்களை தெரிவித்திருந்ததாக சிரேஸ்ட மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்திருந்தனர்.

2005 காலப்பகுதியாக இருக்க வேண்டும் அப்போது கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை தொடர்பில் தயாரிக்கப்பட்ட Master plan இல் நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் ஏற்ற வகையில் வைத்திய நிபுணர்களது ஆலோசனைகள் உள்வாங்கப்பட்டு , சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு 2017 ல் விசேட மகப்பேற்று பெண்ணோயியல் மையத்தையும் உள்ளடக்கிய கட்டம் இரண்டு ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுத் தற்போதைய திட்டம் தயாரிக்கப்பட்டது. இதன்படி இந்த விசேட மகப்பேற்று பெண்ணோயியல் மையத்தை தற்போது கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை அமைந்துள்ள வளாகத்தில் அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அதாவது ஒரே வாளகத்திற்குள் அனைத்து மருத்துவ சேவைகளையும் வழங்க கூடிய வகையிலும், நிர்வாக நடவடிக்கைகளின் இலகு தன்மைகளை கருத்தில் எடுத்தும் இரண்டாவது கட்டத்தின் ( stage 2) முதலாவது பகுதி (Phase 1) அபிவிருத்தி திட்டமாக விசேட மகப்பேற்று பெண்ணோயியல் மையமும் அவசர மற்றும் விபத்து
சேவை பிரிவும் உள்ளடக்கப்பட்டிருந்ததாக தெரிய வருகிறது.

Kili-hospitol-2.jpg?resize=727%2C525
ஆனால் தற்போதைய சூழ்நிலையில் குறித்த அபிவிருத்தி திட்டம் தொடர்பில் ஏதேனும் சந்தேகங்கள் அல்லது விளக்கமின்மை காணப்படும் போது அது தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்புக்கள் ஒன்றுக்கு பல தடவைகள் ஒன்று கூடி சாதாக பாதக தன்மைகளை ஆராயந்து எதிர்காலத்தையும் கருத்தில் எடுத்து பௌதீக நிலைமைகளையும் கவனத்தில் கொண்டு நிதிக்கொடையாளிகளுடன் கலந்துரையாடி தேவையான மாற்றங்களை ஏற்படுத்தி திட்டங்களை பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டவேண்டுமே தவிர பாரிய அபிவிருத்தி திட்டம் ஒன்றை நிறுத்தி விடவோ அல்லது வேறு இடங்களுக்கு திருப்பி விடவோ எவரும் காரணகர்த்தாக்களாக இருந்துவிடக் கூடாது என்பது விடயம் அறிந்த பல துறைசார் நிபுணர்களின் கருத்தாக காணப்படுகிறது.

ஏற்கனவே இந்த திட்டம் தயாரிக்கப்பட்ட போது அதற்காக துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அவர்களின் ஆலோசனைகளும் கருத்துக்களும் இறுதியாக இடம்பெற்ற கூட்டத்தில் பெற்றுக்கொள்ளப்படவில்லை. இது திட்டமிடலின் அடிப்படைத் தத்துவத்துக்கே முரணானது. எனவே விடயம் அறிந்த திட்டமுன்மொழிவைத் தயாரித்த துறைசார்ந்தவர்களது அறிவுசார் கருத்துக்கள் இன்றி உணர்ச்சிவசப்பட்டு தீர்மானங்கள் எடுக்கும் அவசர கலந்துரையாடல்கள் மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள துறைசார் நிபுணர்கள், மருத்துவ துறை நிபுணர்கள், புத்திஜீவிகள் உள்ளிட்ட பலரின் கருத்துக்களும் இது போன்ற ஒரு பாரிய அபிவிருத்தி திட்டம் என்பது மாவட்டத்திற்கு கிடைத்த பெரும் வரப்பிரசாதம் எனவும் அதனை பெற்று அதிலிருக்கும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து இந்த மாவட்டத்தை வளப்படுத்த வேண்டுமே தவிர வேறு சிந்தனைகள் இருக்க கூடாது எனத் தெரிவிக்கின்றனர்.

இந்த விசேட சிகிச்சை மையத்துக்கு நெதர்லாந்து அரசு பெரும் நிதியை வழங்கவுள்ள நிலையில் அதனை பெற்றுக்கொண்டு கிளிநொச்சி வைத்தியசாலையின்அடுத்தடுத்த அபிவிருத்தி திட்டங்களுக்கு அரசின் வருடாந்த வரவுசெலவு திட்டத்தின் ஊடாக நிதி ஒதுக்கீடுகளை பெறுவதற்கு அதிகாரிகள் முதல் மக்கள் பிரதிநிதிகள் வரை முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதனை விடுத்து குறுகிய நோக்கங்களுக்காக ஒரு பாரிய அபிவிருத்தி திட்டத்தை எதிர்காலத்தை கருத்தில் எடுக்காது தடுக்கும் வகையில் செயற்பாடுகளை முன்னெடுப்பது யுத்தப் பாதிப்புக்களை முழுமையாக சந்தித்து அதிலிருந்து படிப்படியாக மீண்டுகொண்டிருக்கும் கிளிநொச்சி மண்ணுக்கும் மக்களுக்கும் செய்யும் பெரும் துரோகமே.

கிளிநொச்சியில் வட மாகாணத்திற்கான விசேட மகப்பேற்று பெண்ணோயியல் மையத்தை அமைப்பதற்கு இழுபறிகள் தொடரும் பட்சத்தில் குறித்த இந்த பாரிய அபிவிருத்தி திட்டத்தை உடனடியாகவே ஏற்றுக்கொள்ள வடக்கு மாகாணத்தில் ஒரு மாவட்டமும், வடக்கிற்கு வெளியே சில மாவட்டங்களும் தயார் நிலையில் இருப்பதனை சம்மந்தப்பட்டவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும் எனவும் இச் சந்தர்ப்பத்தில் நினைவுப்படுத்த வேண்டும்.

 

http://globaltamilnews.net/2018/67978/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.