Jump to content

இரகசியமாகவேணும் வெளிப்படுத்துங்கள்.!


Recommended Posts

இரகசியமாகவேணும் வெளிப்படுத்துங்கள்.!

 

தேசிய அரசாங்கத்தை நீடிப்பது தொடர்பான ஒப்பந்தத்தை வெளிபடுத்தக்கூறி இன்றும் பாராளுமன்றத்தில் ஆளும் எதிர் தரப்பினரிடையே வாக்குவாதம் நிலவியது. ஒப்பந்தத்தை பிரசித்திபடுத்த  முடியாவிடின் இரகசியமாகவேணும் வெளிப்படுத்துங்கள் என  கூட்டு எதிர்க்கட்சி குழுத் தலைவர் தினேஷ் குணவர்தன சபையில் கோரிக்கை விடுத்தார். 

பாராளுமன்றத்தில் இன்று ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி உரையாற்றும் போதே கூட்டு எதிர்க்கட்சி குழுத் தலைவர் தினேஷ் குணவர்தன இதனைக் குறிப்பிட்டார். 

Image result for தினேஷ் குணவர்தன

அவர் மேலும் கூறுகையில், 

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியானது பல கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்த முன்னணியாகும். அவ்வாறு இருக்கையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஒரு கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தேசிய அரசாங்கத்தை  முன்னெடுப்பதில் ஐக்கிய  தேசிய கட்சியுடன் ஒப்பந்தம் ஒன்றினை முன்னெடுத்துள்ளது என கூறியுள்ளது. அரசியல் அமைப்பின் 46/4 உறுப்புரிமையின் பிரகாரம் இரண்டு தரப்பினரும் உடன்படிக்கையினை முன்னெடுத்து செல்வதாக இன்றும் சபையில் தெரிவித்தனர். எனினும் இந்த விடயத்தில் மேலும் குழப்பங்கள் உள்ளன. இதில் பிரதான கட்சியுடன் ஏனைய கட்சிகள் இணைந்து செயற்படுமாயின் பாராளுமன்றத்தில் உடன்படிக்கை குறித்து வெளிப்படுத்த வேண்டும். அதேபோல் சபை அனுமதியினை பெற வேண்டும். எனினும் இவ்வாறு தேசிய அரசாங்கம் ஒன்றினை முன்னெடுப்பது குறித்து எந்தவொரு எழுத்துரு ஆவணமும் சபையில் சமர்ப்பிக்கப்படவில்லை. அவ்வாறான ஒப்பந்தம் ஒன்று இருக்கும் பட்சத்தில் மட்டுமே தேசிய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளப்படும். ஆகவே அவ்வாறான  ஆவணம் ஒன்று இருக்குமாயின் அதனை சபாநாயகரிடம் ஒப்படைக்க வேண்டும். சட்ட விரோதமாக அமைச்சரவையை நடத்த முடியாது. இவ்வாறு செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையில் இரகசியத்தன்மை இருக்குமாயின் சபாநாயகரிடம்  ஒப்படைத்து ஆவணத்தை பார்க்க கோரிக்கைவிடும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரம் வெளிபடுத்துவது சபாநாயகரின் கடமையாகும். அவ்வாறு இல்லாவிட்டால் இது அரசியல் அமைப்பினை முழுமையாக மீறி செயற்படும் வகையில் அமைச்சரவையினை கொண்டு நடத்தும் அரசியல் அமைப்புக்கு முரண்பட்ட செயற்பாடாக நாம் கருதுகின்றோம். எமது கோரிக்கைக்கு தெளிவான தீர்வு ஒன்றினை சபாநாயகர் பெற்றுத்தர வேண்டும். அரசியல்வாதிகளின் தீர்மானம் அல்ல எமக்கு அவசியமானது சபாநாயகரின் தீர்மானமாகும். அதனையே நாம் எதிர்பார்க்கின்றோம் என தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/30914

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் வாக்கை திருடியது யார் ?     தோல்விக்கு இப்பவே நாடகம் போடுகின்றார்கள் என ஒரு கூட்டம் சொல்லும் 😂
    • அமெரிக்காவின் எழுதப்பட்ட சாசனத்தை ட்ரம்ப் மீறுவதால் ஆயிரம் யூரிகளும் உருவாக்கப்படுவர். என்ன ஒன்று.... டொனால்ட் ரம்ப் அடுத்த தேர்தலில் வேற்றியீட்டி அந்த நான்கு வருடத்தில் எதையுமே சாதிக்கப்போவதில்லை. எனவே கலக,அழிவின் உச்சம் பெற்றவன் மீண்டும் ஆட்சிக்கு வந்து  உலகம் அழிந்து போவதே சிறப்பு.
    • நாம்தமிழர்  கட்சியின் தீவிர ஆதரவாளர் நடிகர் சூரி தனது பெயர் வாக்களர் டாப்பில் இல்லை மனைவி பெயர் இருக்கிறது என்னால் ஜனநாயகக் கடமையை ஆற்ற முயெவில்லை என்று பேட்டி கொடுத்திருக்கிறார். தமிழ்நாடு அறிந்த ஒருவரன் பெயர் வாக்காளர் அட்டவணையில் இலை;லையென்றால் சாதாரண மக்களின் நிலை என்ன? தேர்தல் ஆணையம் சின்னங்களைப் பறிக்கும் வேலையைப் பார்க்காமல் அனைத்துக் குடிமகன்களுக்கும் வாக்குரிமை இருக்கிறதா அவர்கள் பெயர் வாக்காளர் இடாப்பில் இருக்கின்றதா என்பதைப் பார்க்க வேணடும்.
    • ஓம் ஓம் திராவிட‌ம் எந்த‌ நிலைக்கும் போகும் என்று ஊர் உல‌க‌ம் அறிந்த‌ உண்மை....................இந்த‌ தேர்த‌லில் 300 , 500 , 2000 இதை தாண்ட‌ வில்லை ப‌ல‌ர் கையும் க‌ள‌வுமாய் பிடி ப‌ட்டு த‌ப்பி ஓடி இருக்கின‌ம் நேற்று....................நீங்க‌ளும் காணொளி பார்த்து இருப்பிங்க‌ள் என்று நினைக்கிறேன்😂😁🤣....................................................
    • பிந்தி கிடைத்த‌ த‌க‌வ‌லின் ப‌டி பெரிய‌ப்ப‌ட்ட‌ ம‌ணிக்கூடு நீண்ட‌ நாளாய் வேலை செய்யுது இல்லையாம்  ஆன‌ ப‌டியால் புல‌வ‌ர் அண்ணாவின் போட்டி ப‌திவு ஏற்றுக் கொள்ள‌ப் ப‌டும் லொல்😂😁🤣...........................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.