Jump to content

அமரந்தா


Recommended Posts

அமரந்தா - சிறுகதை

 
 

சிறுகதை: நரன், ஓவியங்கள்: ஸ்யாம்

 

புனே ரயில்வண்டி நிலையத்தில்  இரைச்சலும் பரபரப்பும்  நிறைந்திருந்தது. வெவ்வேறு வயது, நிறம், தோற்றம், மொழி கொண்ட  கலவையான மனிதர்கள்  பயணத்திற்காய் ரயில் நிலையம் முழுக்கப் பரவிக்கிடந்தார்கள்.  நிலையத்தில் அந்த இருவரையும்  கடந்து செல்லும் எல்லாமனிதர்களும் விநோதத் தன்மையோடு சில நொடி நேரம் நிலைகுத்திப் பார்த்து, பின் அவர்களிடமிருந்து   பார்வையைப் பிரித்துக்கொண்டு நடந்தார்கள்.அங்கங்கே கொஞ்சமாய் நரை சிதறியிருந்த  முடிகளோடு   நாற்பந்தைந்து வயதுப்  பெண்ணாய்த் தோற்றமளிக்கும் வயிறு புடைத்த பெண்  அமரந்தா  ஆறாவது நடை மேடையைத் தேடியபடி மெள்ள நடந்து வந்துகொண்டிருந்தாள். உடன் அந்தப் பெண்ணின்  எழுபது சதம்  இளம் வயது தோற்ற சாயலைக்கொண்டிருந்த வேறொரு பெண் அவளின் உடமைகளைத் தாங்கிய பயணப்பெட்டியையும், கைப்பையையும்,  சுமந்து  கொண்டு  நடந்து வந்துகொண்டிருந்தாள்.

p45a_1518500795.jpg

பார்க்கும் எவரும் இளம்பெண் நிச்சயம் நாற்பந்தைந்தின் மகளாய்த்தான் இருக்கும் என்று யூகித்திருப்பார்கள். ஒருசிலர் அந்த  இளம் பெண்ணை அடையாளம் கண்டுகொண்டு  தங்கள் கைப்பேசியில் கேமராவை விரித்து அவளோடு  புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். விளையாட்டுச் சீருடை அணிந்திருந்த உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் தோற்றம் கொண்ட  கொஞ்சம்  பெண்பிள்ளைகள் அவளிடம் அடையாளக் கையொப்பம் கேட்டார்கள்.

அவள், ‘மீரா ஆதிராஜ்’ என்று தன்  கையொப்பத்தைக் கிறுக்கினாள். அவளை அடையாளம் தெரியாத சிலர் அடையாளம் தெரிந்துகொண்ட  மனிதர்களிடம் அவள் யாரென்று ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும்     வினவினார்கள். ‘`மீரா ஆதிராஜ். பிரபல பாட்மின்டன் வீராங்கனை’’ என்று அடையாளம் சொன்னார்கள். நாற்பத்திசொச்சம் அவளின் அம்மாவாகத்தான் இருக்க வேண்டுமென முடிவு செய்துகொண்டார்கள். அமரந்தா கர்ப்பம் தரித்திருப்பதைப்போலத் தெரிந்தாள். ஏழாம்  மாதமாய் இருக்க வாய்ப்புண்டு. வயிற்றின்  மேட்டில் தன் வலது கையின் ஐந்து விரல்களையும் விரித்து வைத்தபடி வேகம் குறைந்து நடந்தாள். ஆறாவது நடைமேடை சிமென்ட் பெஞ்சின் அருகில் வந்ததும்  கையில் கொண்டு வந்திருந்த லக்கேஜ்களை இறக்கி வைத்தாள். அமரந்தா வந்ததும் பெஞ்சில் அமர்ந்துகொண்டாள். களைப்பாய்த் தெரிந்தவளுக்கு, கையிலிருந்த  தண்ணீர் பாட்டிலிலிருந்து  மீரா பருகக் கொடுத்தாள்.

  கர்ப்பகாலங்களில் எடுக்க வேண்டிய 6 ஆகாரங்களைப் பற்றியும் , மருந்துகளைப் பற்றியும்... மிச்சமிருக்கும் கர்ப்பகாலங்களில் உடலைப் பேணிக்கொள்ளும் முறையையும் மீரா சொல்லிக் கொண்டிருந்தாள். மீண்டும் ஒருமுறை கேட்டாள். ``அமரந்தா,  வேலையை விட்டுடேன்.’’ ``இல்ல  மீரா’’ மறுத்துத் தலையாட்டினாள். ``ஹே... மீரா...’’ கை அசைத்தபடி  அருகில்  வந்தார்  மீராவுக்குத் தெரிந்தவர்போல, தோராயமாய்  நாற்பது வயதிருக்கும்  வட இந்தியர். ஒடுக்கமாய் முடியைக் கத்தரித்து முன்னாள் விளையாட்டு வீரரைப்போல் தோற்றமளித்தார். சரியான உணவு முறையையும், உடற்பயிற்சியையும் கைவிட்டிருக்க வேண்டும். கொஞ்சம் வயிறு பெருத்திருந்தது. மீரா அவருக்கு தன் அம்மாவை அறிமுகப்படுத்தினாள் . ``ப்ரஃபஸர் அமரந்தா. என் அம்மா. சென்னையிலிருந்து வந்திருக்காங்க.’’ அவர் இப்போது குழப்பமாக நெற்றியைச் சுருக்கி இருவரையும் பார்த்தார்.  தயக்கமாய்  அமரந்தாவிடம் வணக்கம் சொல்லிக்கொண்டார்.

“அம்மா இது கிஷோர். என்னோட  ட்ரெய்னர்.” அவரின் கண்கள்  அமரந்தாவின் வயிற்றை  சந்தேகமாய்ப் பார்த்தது.  அமரந்தா     எந்தத் தயக்கமுமில்லாமல் சொன்னாள். ``எஸ். கிஷோர். ஐ’ம்  ப்ரெக்னென்ட்.’’ கிஷோர் கொஞ்சம் தடுமாறினார் ``ஓ... டேக் கேர்... டேக் கேர் அமரந்தா. சரி நான் கிளம்புறேன். உடம்ப பார்த்துக்கோங்க’’ என்று சொல்லிவிட்டு அவசரமாக நடந்தார். கொஞ்சம் தள்ளிப் போய் மீண்டும் திரும்பி அந்த வயிற்றைப் பார்த்தார். அவர் எப்படியும் திரும்பிப் பார்ப்பார் என்பது அமரந்தாவுக்குத்  தெரிந்திருக்கும்போல. அவள் சிரித்தபடியே பார்த்துக்கொண்டிருந்தாள்.

இப்போது  மீரா  தன் மணிக்கட்டை உயர்த்தி நேரம் பார்த்துக்கொண்டேயிருந்தாள். அங்கு நிறைய நேரம் இருக்க சங்கோஜப்பட்டவளைப் போலவும் தெரிந்தாள். அமரந்தா அவளைக் கிளம்பிப் போகச் சொன்னாள். ``ட்ரெய்ன் வர இன்னும் அரை மணி நேரம் இருக்கு. உனக்கு ட்ரெய்னிங் இருக்கும். நீ கிளம்பு நான் பாத்துக்குறேன்.’’ தயங்கியவளிடம் ``கிளம்பு’’ என்று அழுத்தமாய்ச் சொன்னாள். மீரா நடக்க ஆரம்பித்தாள். அவள் கிளம்பிச் செல்வதை  அமரந்தா  பின்னாலிருந்து  பார்த்தபடியிருந்தாள்.  ஒரு விளையாட்டு வீராங்கனை என்று எவரும் கணித்துவிடும்படியான உடல்வாகுதான். அமரந்தா  இப்போது கொஞ்சம் தண்ணீரை எடுத்துக் குடித்தாள்.  தன் கைப்பையிலிருந்த  ஓவியம் சார்ந்த மாத இதழை எடுத்துப் புரட்டத்  தொடங்கினாள்.  உப்பும் இனிப்பும் கலந்த பிஸ்கெட் பாக்கெட்டை விரித்துவைத்து, கடித்துக்கொண்டே பக்கங்களைப்  புரட்டத்  தொடங்கினாள். அவளுக்குப் பின் பக்கம் இருந்த ஐந்தாம் நடைமேடையில் சிமென்ட் பெஞ்சில் கூப்பிடு தூரத்தில்  உட்கார்ந்திருக்கும் ஒரு மனிதர் தன்னையே பார்ப்பதைப்போல் உள்ளுணர்வு  தோன்றியது.

இடது புறமாய்த் திரும்பி அவரைக் கவனிக்கத்  தொடங்கினாள். கறுப்பும் வெள்ளையும் சரிபாதியாயிருக்கும் சுருண்ட முடிகளை அழகாய்க் கத்தரித்து பிடரி வரை  சரிய விட்டிருந்தார். காலர் இல்லாத வெள்ளை லினன் சட்டையை முழங்கைக்கு மேல் அகலமான  பட்டையாய் மடித்து விட்டிருந்தார். கீழாடையாய் ஊதா நிற போலோ டெனிம் ஜீன்ஸ். இசை அல்லது ஓவியம் மாதிரியான நுண்கலையைச்  சார்ந்தவராய் இருக்கும்படியான தோற்றம். வயது ஐம்பதை நெருங்கும் போலிருந்தது. பரிட்சயமான மனிதரைப்போல் தெரிந்தார். அவரும் பார்வையை விலக்காமல் பார்த்துக்கொண்டேயிருந்தார்.  ``அமரந்தாதான நீங்க..?’’    ‘`ஆமா’’ ஆச்சர்யமடைந்தாள். ``நீங்க..?’’ அவர் தன் காபி நிறத் தோல்பையைத் தூக்கிக் கொண்டு அவள் அமர்ந்திருக்கும் இடத்திற்கு நகர்ந்தார்.

p45b_1518500810.jpg

அமரந்தா   சரசரவென  நினைவுகளைத் தட்டி அவர்  யாராயிருக்குமென்று தேடினாள். சட்டென நினைவுக்குவரவில்லை.  “நான் அபராஜிதன். சென்னை ஓவியக் கல்லூரி.” நினைவுக்கு வந்துவிட்டதாய்  உடம்புக்குள் ஒரு துள்ளல் வந்தது. ‘`ஹே... அபு...’’  எழ முற்பட்டாள். அந்த மனிதனின் கைகளைப் பற்றிக் கொண்டாள். அபராஜிதன்  அமரந்தாவோடு ஓவியக்  கல்லூரியில் உடன் படித்தவன்.  முகம் முழுக்க பெரிய தாமரைப் பூவைப் போல் மலர்ந்தது.

 ``எத்தனை வருஷம் ஆச்சு. எப்படி இருக்க?’’ ``நல்லா இருக்கேன்.’’

நகர்ந்து, அமர இடம் கொடுத்தாள். ``பூனேலயா இருக்க..?’’ என்று கேட்டாள் அமரந்தா.

``இல்ல நான் மும்பைல. இங்க தாகூர் கேலரில  என்னோட ஆர்ட் ஷோ  இருந்தது. முடிஞ்சி கிளம்புறேன்.’’

‘`என்ன சொல்ற உன் ஷோ இருந்ததா?  ரெண்டு மாசமா நான் இங்கதான் இருக்கேன். தவற விட்டுட்டேனே...’’  சட்டென முகத்தில் வருத்தம் தெரிந்தது .

‘`உனக்கு எத்தனை குழந்தைகள் அபு.’’

‘`எனக்கா..?’’ சிரித்துக்கொண்டே சொன்னான். ‘`நான் கல்யாணம் பண்ணிக்கல அமரந்தா. சடங்குகள் மேல பெருசா நம்பிக்கையில்ல. கல்யாணத்துக்கும், குழந்தை பெத்துக்குறதுக்கும் சம்பந்தமில்லைனாலும் ரெண்டு பேருக்கும் விருப்பமில்லை. போன வருஷம் வரை சந்திரிகாவோட இருந்தேன் . சந்திரிகாவும் ஓவியர்தான். இப்போ தனியாத்தான் இருக்கேன்.’’

‘`நீ புனேலயா இருக்க?’’

``இல்ல நான் சென்னைல இருக்கேன் அபு. தெரசா காலேஜ்ல ஃபைன் ஆர்ட்ஸ் ப்ரொஃபஸர். என் பொண்ணு இங்கதான் இருக்கா. மீரா ஆதிராஜ். பேட்மின்டன் பிளேயர்.’’

கண்களை விரித்துக் கேட்டான் . ‘`உண்மையாவா?’’ நம்ப முடியாமல் கேட்டான்.

‘`ஆமா’’

``என்ன சொல்ற அமரந்தா. அந்தப் பொண்ணு ஃபோட்டோவை எதாவது நியூஸ் பேப்பர்ல பார்க்கும்போதெல்லாம் இது எங்கயோ எப்பவோ பார்த்த முகம் போலவே தோணும். இந்த வருஷம் இன்டர்நேஷனல் மேட்ச் ஆடப் போறாங்கள்ல?’’

‘`ஆமா  அபு.  இங்க நிக்கில் கனித்கர் பாட்மின்டன் அகாடமிலதான் ட்ரெய்னிங்.’’

அபராஜிதன் மெள்ள அமரந்தாவின் மேடான வயிற்றைப் பார்த்தான். அவன் கவனிப்பதைப் பார்த்து ``அதை அப்புறம் பேசலாம்’’ என்று சொல்லி வேறு விஷயத்துக்கு நகர்ந்தாள். ``எனக்கு இப்போ சூடா டீ வேணும் அபு.’’ எழுந்து வேகமாய் நடந்தான். டீயோடு வருபவனை சந்தோஷமாய்ப் பார்த்தாள். டீயைக் கொடுத்தபடியே சொன்னான். ``எத்தனை வருஷம் ஆச்சு. இன்னும் அப்படியே இருக்க அமரந்தா. உன்தோற்றம், தைரியம், சந்தோஷம் எதுவுமே மாறல.. கொஞ்சமா எல்லாத்திலயும் நரை விழுந்திருக்கு. அவ்வளவு தான். ஆதி ராஜன்  சார் எப்படி இருக்கார்?’’ டீ கப்பிலிருந்து உதட்டைப்பிரித்து எடுத்து... ``அவர் எங்க இருக்கார்?’’  திரும்ப டீ கப்பில் உதட்டை ஒட்டிக் கொண்டாள்.

``என்ன சொல்ற... சார் இப்போ உன்கூட இல்லையா?’’

``அவர் உலகத்திலயே இல்ல.  விபத்துல  இறந்துட்டார். ஆறு வருஷம் ஆகிடுச்சு.  ஈ.சி.ஆர் ரோட்ல  அவர் புல்லட்ல போகும்போது ஒரு  ஆக்ஸிடென்ட்ல கார் மோதி இறந்துட்டார். சாகும்போது ஐம்பத்திரண்டு வயசு. இதுல என்ன கொடுமைனா அடுத்த நாள்தான் அவருக்குப் பிறந்த நாள் தெரியுமா?’’ சட்டென்று அவளின் குரலில் இறுக்கம் தட்டியது. அபு கேட்டான்.

``சார் உன்னவிட பத்து  வருஷம்  மூத்தவரா?’’

``ஆமா.’’

சிறிது நேரம் அமைதியாயிருந்தார்கள்.

அமரந்தாவுக்குக் கொஞ்சம் குமட்டல் வருவதைப் போலிருந்தது. ``நான் ரெஸ்ட் ரூம் வரைக்கும் போயிட்டு வந்திடுறேன்.’’

``உடன் வரவா?’’ என்று அபு கேட்டதும், ``அதெல்லாம் வேண்டாம்’’ என்று மறுத்து மெள்ள நடந்தாள். அவள் கிளம்பியதும் அபுவின்  நினைவுகள்  சரசரவெனப் பின்னோக்கி ஓடின.  கல்லூரியில்  அமரந்தா அழகு, திறமை, பரபரப்பு கூடிய பெண்ணாக இருந்தாள். ஓவியக்  கல்லூரியில்  எல்லோருக்கும் அவள்மீது விருப்பமிருந்தது. அபுவுக்கும்கூடத்தான். எத்தனை பேர் அவளின்  அன்பைப் பெற விண்ணப்பித்திருந்தார்கள். மூன்றாம் ஆண்டு படிக்கும்போது சேர்ந்தாற்போல் பத்து நாள்கள் விடுமுறை எடுத்திருந்தாள். அவளுக்கு  வகுப்பு எடுக்கும் ஆதிராஜன் சாரும் அதேபோல் சேர்ந்தாற்போல் விடுப்பில் போயிருந்தார். மூன்றாம் நாளே எல்லோருக்கும் தெரிந்து விட்டது. இருவரும் வீட்டிலிருந்து கிளம்பிப் போய் திருமணம் செய்துகொண்டார்களென.   அமரந்தாவின் குடும்பத்தில் யாரும் சம்மதிக்க வில்லை என்று சொன்னார்கள். திருமணம் முடித்து இருவரும்  வழக்கம் போல்  கல்லூரிக்கு  வரப் போக இருந்தார்கள். ஆதிராஜன் சாரை ஆண்  பெண்  பாகுபாடில்லாமல் எல்லோருக்கும் பிடிக்கும். சில  மாணவர்களை அவரின் வீடு வரை அனுமதிப்பார்.

வீடு என்பதெல்லாம் இல்லை . விஸ்தாரமும், நீளமுமான ஒரு பெரிய மாடி அறை. நடுவே எந்தத்  தடுப்பும் இருக்காது. முழுக்க வரைந்து முடிக்கப்பட்ட, பாதி வரைந்து முழுமையடையாமல் இருக்கும் பெரிய பெரிய ஓவியங்கள் என அந்தப் பெரிய அறை முழுக்க நிறங்களாய்ச் சிதறிக் கிடக்கும் . ஆதிராஜன் சார்  அடர்ந்த  கறுப்பு நிறம். முகத்திலும் தலையிலும் கரு கரு சுருட்டை முடிகள். கால் சட்டையோடு, பல நிறங்கள் சிதறியிருக்கும் கையில்லாத பனியனை அணிந்தபடி ஆதிராஜன் சார் எதாவது வரைந்துகொண்டிருப்பார். வரையாத நேரங்களில் ஆதிராஜன் சார் கரங்களில் எப்போதும் கறுப்புத் தேநீரும், மறு கையில் வெள்ளை சிகரெட்டும் புகைந்துகொண்டிருக்கும். அப்போதெல்லாம்  அமரந்தா  பாதி நாள்கள் ஆதிராஜன் சாரின் வீட்டில்தான் இருப்பாள். அப்போதே எல்லோரும் பேசிக்கொள்வார்கள். அமரந்தா ஆதிராஜன் சாரைக் காதலிக்கிறாளென. சார் அமரந்தாவைவிடப் பத்து வயதாவது மூப்பிலிருப்பார். `போயும் போயும் அவரையா’ என அபு  உட்பட சக மாணவர்கள் பொறாமையில் புழுவாய் நெளிந்தார்கள்.

ஈரத்தைத் துடைத்தபடி மெதுவாய்  நடந்து வந்து பெஞ்சில் அமர்ந்தாள். அமர்ந்த மறு  விநாடியே  அபு கேட்டான். ``ஏன் அமரந்தா, நீ சாரை கல்யாணம் பண்ணிக்கிட்ட?’’ அமரந்தா சிரித்துக்கொண்டாள். ``நான் உட்பட எத்தனை பேர் உன்னைக் காதலிச்சோம். அதில் எத்தனை பேர் மிக அழகானவர்கள்.’’ சில நொடிகள்அமைதியாகி பின் நிதானித்துத் சொன்னாள். ``இவ்வளவு வருஷமா இந்தக் கேள்விக்கு மட்டும் ஏன் இன்னும் துருப்பிடிக்கலைனு தெரியல. இந்த இடைப்பட்ட வருஷங்கள்ல  உடன் படித்த எத்தனையோ பேரை  சந்திச்சிட்டேன். எல்லோரும் முதல் கேள்வியா இதைக்  கேட்டுட்டாங்க. இப்போ நீ கேட்ருக்க. பொதுவா என்னைப் பாத்து மத்தவங்க கேக்குற எல்லாக் கேள்விக்கும் நான் பதில் சொல்றதில்ல அபு… அப்படி சொல்லிக்கிட்டே இருந்தா. கேள்விகளோட எண்ணிக்கையும், கேக்குறவங்க எண்ணிக்கையும் கூடிக்கிட்டே  இருக்கும். அந்த நேரத்தில அவரை எனக்குப் பிடிச்சிருந்தது அபு. அவ்வளவுதான்.’’

 பேசிக்கொண்டிருக்கும்போதே சென்னை செல்லும் ரயில் நாற்பது நிமிடம் தாமதமாக வருவதாய் ரயில் நிலையத்தின் அறிவிப்பு வந்தது. ``நாம இன்னும் கொஞ்ச நேரம் பேசிக்கிட்டிருக்கலாம் அபு.’’ சந்தோஷப்பட்டாள். ``உன்னோட ரயில் எத்தனை மணிக்கு?’’  அபுவிடம் கேட்டாள். ``எனக்கு அடிக்கடி இருக்கு. மும்பை இங்க இருந்து மூணு மணி நேரம்தான்.’’ சிறு அமைதிக்குப் பின் அபு அமரந்தாவின் வயிற்றைப் பார்த்தான். ``ஓஹ்... இன்னும் இது பத்தி சொல்லல இல்ல. அது பெரிய கதை.இப்போ நேரம் இருக்கு.’’

``அபு... இப்போ நான் கன்சீவ் ஆகியிருக்கேன்’’ வயிற்றில் கைவைத்துச் சொன்னாள்.

``இந்த வயசுலயா?’’

``ஆமா. டாக்டர்கிட்ட கேட்டேன். நாற்பத்தியேழு வயசாகுது. இன்னும் பீரியட்ஸ் நிக்கல. வரிசை தப்பாம எல்லா மாசமும் சரியா வருதுன்னு சொன்னேன். இப்போ ஏழாவது மாசம்.’’

அபு வெறுமனே  ‘`ம்...’’ மட்டும் சொன்னான்.

``நீ வேறொரு கல்யாணம் பண்ணிக்கிட்டியா  அமரந்தா?’’

``ஏன் கல்யாணம் பண்ணிக்கணும்...’’ தாமதமாய் அபுவின் கேள்வியைப் புரிந்து கொண்டவளாய்  ``ஓ... இந்தக் குழந்தை எப்படினு கேக்குறியா?’’

அபு அமைதியாயிருந்தான்.

``இந்தக் குழந்தை மீராவோட குழந்தை அபு. என் வயிற்றில் வளருது. அவ்வளவுதான்.’’

குழப்பமாய் நெற்றிச் சுருக்கத்தோடு அமரந்தாவைப் பார்த்தான்.

``மூணு வருஷம் முன்னாடி மீரா காதல் திருமணம் பண்ணிக்கிட்டா. அவளோட  கணவரும் ஒரு விளையாட்டுவீரர்தான். ஒரிசாவில்  மிகவும் எளிமையான குடும்பம். அந்தக் குடும்பத்திலேயே படித்தவர் இவர்தான்.கல்யாணத்துக்கு முன்னாடியே  மீரா  அவர்கிட்ட சொல்லிட்டா. `கொஞ்ச வருஷத்துக்கு என்னால குழந்தை பெத்துக்க முடியாது. நான் மேட்ச் விளையாடணும். அதுக்கு ஒத்துக்கிட்டாதான் கல்யாணம்’னு சொல்லித்தான் திருமணம் செஞ்சிகிட்டா. சின்ன வயசிலயிருந்தே இன்டர்நேஷனல் மேட்ச் விளையாடுறதுதான் அவளோட லட்சியம். அவரும் அப்போ சந்தோஷமா ஒத்துக்கிட்டாரு. ஆனா இப்போ அவரோட வீட்ல பிரச்னை பண்றாங்க. இப்போ ஒரு வருஷத்துக்குள்ள குழந்தை வேணும்னு சொல்றாங்க.’’

அபு சிறிய தலை அசைவோடு கேட்டுக் கொண்டிருந்தான்.

p45c_1518500828.jpg

``மீரா இந்த வருஷம் இன்டர்நேஷனல் விளையாடுறா. குழந்தைக்கு இன்னும் கொஞ்ச வருஷம் வெய்ட் பண்ணச் சொன்னா அவங்க வீட்ல யாரும் ஒத்துக்கல. கர்ப்பம் தரிச்சா ஒரு வருஷம் விளையாட முடியாது . குழந்தை பிறந்த பின்னாடி ஒரு வருஷமாவது அவளுக்கு ஓய்வு தேவையாயிருக்கும்.  குழந்தை பிறந்த பிறகு மீண்டும் அதே வேகம் அந்த உடலில் இருக்குமான்னு தெரியாது. அந்த இரண்டு வருட ஓய்வு அவளை மனரீதியாவும், உடல் ரீதியாவும் எவ்வளவு தொந்தரவுபடுத்தும். அவளோட கனவெல்லாம் அப்படியே வீட்டுக்குள்ள முடங்கிடும்  அபு. இந்தியாவில் அவள் இப்போது முன்னணி வீராங்கனை. இரண்டு வருஷ ஓய்வு அவளை, ரேங்க்கிங்லயும் அவளை பின்னால தள்ளிடும். ஒரு கர்ப்பத்துக்குப் பின்னாடி பெண் உடம்பு எவ்வளவு சிதைஞ்சி போயிடுது. மீண்டும் அந்த உடம்பைத் தயார்ப்படுத்துறதுக்கு அவள் எவ்வளவு உழைக்க வேண்டியிருக்கும். ஆண்களுக்கு இதில் எந்தப் பிரச்னையும் இல்லைல.’’

கொஞ்சமாய் ஆமோதிப்பது மாதிரி அபு தலையாட்டினான்.

``மீராவின் லட்சியம், குழந்தை சார்ந்த ஆசை ரெண்டும் சிதைஞ்சி போயிடாம இருக்க நான்தான் வாடகைத் தாய் முறையைச் சொன்னேன். அதுக்கு அவள் கணவனும், பெரிய தயக்கத்திற்குப் பின் அவரின் குடும்பத்தினரும் சம்மதிச்சாங்க. அவங்க வாடகைத் தாயைத் தேடத் தொடங்கினாங்க. ஒருநாள் விடியக்காலைல எனக்கு நானே அந்த கர்ப்பத்தைச் சுமந்து பெற்றுக்கொடுக்க வேண்டும்னு யோசனை தோணுச்சு. அன்னைக்கே  கல்லூரி   முடிஞ்சதும் டாக்டர்கிட்ட போய் வாய்ப்பும், சாத்தியமும்  இருக்கிறதான்னு கேட்டேன். `நூறு சதம்  வாய்ப்பிருக்குது’னு சொன்னார். சந்தோஷமா இருந்துச்சு. முக்கியம்னு நான் நினைக்கும் சில நண்பர்கள்கிட்ட  என் விருப்பத்தைச் சொன்னேன். எல்லோரும் ஆளுக்கொரு ஆலோசனை சொன்னார்கள். எனக்கு  ஆதரவாய் ஒரு குரல்கூட இல்லை. பெரும்பாலானோரின் கருத்து இந்தக் குழந்தையை நீ பெற்றுக்கொடுக்க வேண்டாம் என்பதுதான். இந்தச் சமூகம் என்னைத் தவறாய்ப் பார்க்கும் என்பதுதான் அவர்களின்  கவலையாகச் சொன்னார்கள். சொந்த மருமகனின், மகளின் உயிரணுக்களை என் கர்ப்பக் குடத்தில் சுமப்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையாம்.

மீராவிடம் யோசனையைச் சொன்னேன். எவ்ளோ சந்தோஷப்பட்டா தெரியுமா ? அவளின் கணவர் வீட்டில் இப்போ வரை கடுமையான எதிர்ப்புதான். மீராவின் கணவருக்கும் தொடக்கத்தில் முழுச் சம்மதமில்லை. கருத்தரித்த பின் மருமகனின் கர்ப்பத்தை மாமியார் சுமப்பதாய் அவரின் குடும்பம் முழுக்க என்னை மண்வாரித் தூற்றியது. சில நாள் மாலை நேரங்கள்ல என்னோடு நடைப்பயிற்சிக்காய் மீராவின் கணவரும் உடன் வருவார். சாலைகளில் நடப்பவர்கள் விநோதமாய்ப் பார்ப்பார்கள். அவர்களுக்குள் என்னைக்  கிண்டல் செய்து பேசிக்கொள்வார்கள். நான் எந்த மனிதரையும் சட்டைசெய்வதில்லை.

கல்லூரியில்  என்னோடு பலரும் முகம் கொடுத்துப் பேசுவதில்லை. கர்ப்ப காலங்களில் தேவையில்லாத மன உளைச்சலைச் சந்திக்க வேண்டாம் என்பதற்காக ஆறு மாதம் பிரசவ விடுப்புக்கு அனுமதிக்கக் கேட்டேன். `இந்த வயதில் கர்ப்பமா? பொய்  சொல்கிறீர்கள்’ என்று கல்வித்துறை அதிகாரிகள் லீவ் கொடுக்க மறுத்தார்கள். பலமுறை திரும்ப திரும்ப விடுப்புக் கோரி அனுப்பினேன். அதன்பின் வீங்கிய வயிறோடு நான் நேரில் சென்று விளக்கம் கொடுக்க வேண்டியிருந்தது. கிளம்பும்போது ஒரு முதிய பெண் அதிகாரி கூப்பிட்டு அறிவுரை சொன்னார். `ஏன் மேடம்? இந்த வயசுல  கொஞ்சம் கவனமா இருந்திருக்க வேண்டாமா..?’’  என்று சொல்லி முடித்து அமரந்தா வெடித்துச் சிரித்தாள். அபுவும் கொஞ்சமாய் சிரித்தான்.

``கல்லூரியில் நான் என் மாணவிகளிடம் என் கர்ப்பத்தைப்  பற்றி எதையும் மறைக்கவில்லை.இந்தத் தலைமுறை  எவ்வளவு அழகா புரிஞ்சிக்கிறாங்க தெரியுமா அபு?’’ எந்த மாணவியின் முகத்திலும் கொஞ்சமும்   முகச்சுளிப்பு இல்லை. வீட்டில் பல காலமாகப் புழங்காமல் ஒரு அறையோ, ஒரு பகுதியோ இருந்தால்  அது   யாருக்காவது பயன்படட்டும்னு தங்க அனுமதிப்பதில்லையா? இருபத்தி நாலு வருஷமா  இந்த கர்ப்ப அறை எந்தப் புழக்கமுமில்லாமல் காலியாத்தானே இருக்கு. கிட்டத்தட்ட ஐம்பது வயதில் அதன் கர்ப்பம் தரிக்கும் காலம் முடிந்ததும் உள்ளேயே அது வீரியமில்லாமல் இறந்துவிடும். எந்தப் பயன்பாடுமில்லாமல் அனாவசிய உறுப்பாய் அதைப்  பலகாலம் நான் சுமந்தலைய வேண்டும். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதற்காகவும், வெட்டி  கெளரவத்திற்காகவும் இந்த அனுபவத்தை நான் ஏன் இழக்கணும் சொல்லு.’’

அதைத் தீவிரமாய் ஆமோதிப்பதுபோல் அபு தலையாட்டினான்.

``இப்போ இந்த கர்ப்ப காலத்தின் உணர்வு எப்படி இருக்கு  அமரந்தா?’’ அபு சந்தோசமாய்க் கேட்டான்.

``ரொம்ப நல்லா இருக்கு அபு. சந்தோஷமா, ரொம்ப இளமையா என்னை உணர்றேன். உன்னிப்பா கவனிக்கிறேன் அடிக்கடி வயித்துக்குள்ள சளப்...சளப்னு யாரோ உள்ளேயிருந்து நீரை உலப்புவது மாதிரியிருக்கு. கடந்த ஏழு மாதமாய் வீட்டில் எனது அறையில் தங்கியிருக்கும்போது தனியாயிருப்பது மாதிரியான உணர்வே இல்லை. யாரோ உடன் இருப்பதாய் உணர்கிறேன்.

சில நேரம் மட்டும் புழங்கிய ஊரையும், வீதிகளையும் விட்டுட்டு ஒரு புதிய இடத்துக்குப் போகலாமென்றும், பிடித்த ஏதாவதொரு மனிதரோடு மாலை வேளையில் நடைப்பயிற்சி செய்தால் தேவலை என்பது போலவும் தோன்றும். ஆனால், இப்போது அந்தத் தெரு மனிதர்களும், என் பழைய நண்பர்களும் சட்டென என் கையை உதறிவிட்டு என்னிடமிருந்து நகர்ந்து சென்றுவிட்டார்கள்.’’ சட்டென உற்சாகம்  வடிந்து  பேசினாள்.

அபு  அமரந்தாவின் கரங்களைப் பற்றிக் கொண்டான். அவளும் அபுவின் கரங்களை இறுகப் பற்றிக்கொண்டாள்.

சென்னை செல்லும் ரயில் வருவதற்கான அழைப்பை ஒரு பெண் இரண்டு, மூன்று மொழிகளில் உற்சாகமாகச் சொல்லிக் கொண்டிருந்தாள். சிறு பரபரப்பு அவளிடம் தொற்றிக்கொண்டது.  அமரந்தா  கிளம்ப ஆயத்தமானாள். உடமைகள் தாங்கிய   பெட்டிகளை நான் எடுத்து வைத்துவிடுவேன், நீ ஏதும் அலட்டிக்கொள்ள வேண்டாம் என்று சொன்னான்.

ரயில் வந்து அவள் முன் நின்றதும் முழுக்க குளிரூட்டப்பட்ட ரயில் பெட்டியில் அவளின் இருக்கையை  அடையாளம் கண்டு அந்த இடத்தில் அவளின் உடைமைகளைக் கொண்டு வந்து வைத்தான். இறுதியாக, மெள்ள நடந்து வரும்  அமரந்தாவைக் கைபிடித்து ஏற்றிவிட்டான். நீர் பாட்டில்கள் இரண்டு வாங்கி ஓடிவந்து அவளிடம் கொடுத்தான். ``டீ குடிக்கிறியா?’’ என்றும் கேட்டான்.

நிச்சயமாய் வேண்டுமென்றாள். இரண்டு தேநீர் வாங்கி வந்து ஒன்றை  அமரந்தாவிடம் கொடுத்துவிட்டு ஒன்றைத் தான் பருகத்  தொடங்கினான். ரயில் பெட்டி பெரிதும் காலியாக இருந்தது. ரயிலில் சிறிது அசைவு தெரிந்ததாய் உணர்ந்தாள். ஓரிரு விநாடிகளில் அசைவை நன்றாகவே உணர முடிந்தது. பதற்றமாய் அமரந்தா கேட்டாள். ``அபு, வண்டி கிளம்பிடுச்சா?’’ ``ஆமாம்’’ எந்தப் பதற்றமுமில்லாமல் அபு சொன்னான். ``நீ  கீழே இறங்கலயா?’’  என்று கேட்டாள். ``நான்   உன்கூட சென்னைக்கு வரேன்  அமரந்தா. நாலு  மாசம் உன் பக்கத்துல இருந்து உன்னைப் பாத்துக்கப்போறேன்.’’

ஆர்வமும் சந்தோஷமுமாய்… இது பொய்யாகிவிடக் கூடாது  என்று நினைத்தபடியே கேட்டாள்.  ``உனக்கு டிக்கெட் இல்லையே அபு. ``சமாளிச்சிக்கலாம்’’ என்றான்.

``உண்மையா அபு. என்கூட சென்னை வர்றியா?’’ நம்ப முடியாமல் கேட்டாள்.

ஆமோதித்துத் தலையாட்டினான். ``ஆமா உன்கூட  வாக்கிங்  போகணும் அதான்.’’

``உன் வேலைகள் ஏதும் பாதிக்கப்படாதா?’’

``என் வேலை என்ன? வரையுறதுதான. உன் வீட்ல இருந்து வரைஞ்சுக்கிறேன். அதுக்கு ஒரு சிறிய அறை  தந்தால் போதும்.’’

``மொத்த வீட்டையும் எடுத்துக்கோ அபு’’ சந்தோஷமும் உற்சாகமுமாய்ச் சொன்னாள். ``ரொம்ப நாளுக்குப் பிறகு எனக்கும் நிறைய வரைய ஆசையா இருக்கு அபு. இது எனக்கு எவ்வளவு சந்தோஷமான நாள்களா இருக்கப் போகுது தெரியுமா?!’’

அபுவின் கரங்களை இறுகப் பற்றிக் கொண்டாள்.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.