Jump to content

கனடாவில் பெண் ஒருவருக்கு நேர்ந்த பயங்கரம்; தமிழர்கள் தப்பியோட்டம்!


Recommended Posts

கனடாவில் பெண் ஒருவருக்கு நேர்ந்த பயங்கரம்; தமிழர்கள் தப்பியோட்டம்!

 

கனடாவில் பெண் ஒருவருக்கு நேர்ந்த பயங்கரம்; தமிழர்கள் தப்பியோட்டம்!

வாகனத்தில் மோதுண்ட பெண் ஒருவரை உயிராபத்தான நிலையில் கைவிட்டுச் சென்ற தமிழர் சிலர்மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கனடாவின் மிசிசாகாவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் லெய்லா வில்கி எனும் 61வயதான பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தெரியவருவதாவது,

கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் திகதி, இரவு எட்டு மணியளவில் மேவிஸ் வீதி மற்றும் நொட்டி பைன் குரோவ் பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக சொல்லப்பட்டுளது. இந்த விபத்துடன் சம்மந்தப்பட்ட தமிழரான ஓட்டுநர் குறித்த பாதசாரியான பெண்ணை மோதியபின் பயந்த நிலையில் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுளது.

இந்த நிலையில் விபத்துடன் சம்மந்தப்பட்ட வாகனம் பிரம்ரனில் காணப்பட்டதாக விசாரணைகளின்மூலம் தெரியவந்துள்ளது. மேலும் குறித்த பாதசாரிப் பெண் சரியான முறையில் சாலையைக் கடக்கவில்லை என்றும் இதன்மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

கனடாவில் பெண் ஒருவருக்கு நேர்ந்த பயங்கரம்; தமிழர்கள் தப்பியோட்டம்!

சம்பவத்துடன் தொடர்புடைய ஓட்டுநர் பிரம்ரனை சேர்ந்த சச்சிதானந்தம் வயித்திலிங்கம் என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு இவர் வழக்கறிஞர் ஒருவருடன் கடந்த சனிக்கிழமை பொலிசாரிடம் சரணடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சம்பவம் ஒரு விபத்தாக இருந்தபோதும் அந்த பெண்ணின் மரணத்திற்குக் காரணமாக இருந்துள்ளது. ஆக அந்தப் பெண்ணின் மரணத்திற்குக் காரணமாக இருந்தும் அவரை குற்றுயிராய் விட்டுச் சென்றுள்ளதாக அவர்மீதும் அவருடன் வாகனத்துக்குள் இருந்தவர்கள்மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

குறித்த வாகனத்தில் 25 வயதுடைய ஹிவிசா சச்சிதானந்தன், 28 வயதுடைய சஜீத்தா சச்சிதானந்தன் மற்றும் 28 வயதுடைய கௌதம் சற்குணராஜா ஆகியோரும் பயணித்துள்ளனர்.

கனடாவில் பெண் ஒருவருக்கு நேர்ந்த பயங்கரம்; தமிழர்கள் தப்பியோட்டம்!

கனடாவில் பெண் ஒருவருக்கு நேர்ந்த பயங்கரம்; தமிழர்கள் தப்பியோட்டம்!

https://news.ibctamil.com/ta/internal-affairs/A-woman-in-Canada-death-in-an-accident

Link to comment
Share on other sites

இப்படியான விபத்துக்களில் எங்கே தப்பி ஓட முடியும் ? இவர்கள் அந்த இடத்திலேயே நின்று அவசரப் பிரிவுக்கு இவர்களாகவே அழைத்திருந்தால் இது ஒரு விபத்து என்று அடிப்படையிலேயே அணுகப்பட்டிருக்கும். பயந்த நிலையில் தப்பிச் சென்றதை ஏற்றுக்கொள்ளமுடியாது. யாரும் பார்க்கவில்லை தப்பிவிடலாம் என்று எண்ணியிருக்கலாம். அதுவே விபத்து குற்றமாக மாறுகின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தலைப்பு எழுதியவர் ஒரு மனநல மருத்துவரை அணுகி உதவி பெறுவது அவருக்கும், அவரின் குடும்பத்துக்கும், இந்த சமுதாயத்திற்கும் சால சிறந்தது. ?????

Link to comment
Share on other sites

எங்கள் வீட்டுக்கு அருகில்தான் நடந்துள்ளது. இன்றுதான் அறிந்து கொண்டேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.