Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நான் வெளிநாடுகளில் கோயில்களுக்குப் போவதில்லை ஆயினும் கடவுள் நம்பிக்கை இல்லை என்று கூறமுடியாது. அதுபோல்  நல்ல காரியங்களுக்கு கடவுளிடம் நேர்த்தி வைத்து அவரும் எதோ இரக்கப்பட்டு எனக்கு சிலசில நன்மை செய்தாலும் சில விடயங்களில் இன்னும் கண்டும் காணாமல் தான் இருக்கிறார்.

கொஞ்ச நாளா இரண்டு மூன்று பண முடிப்பு முடிஞ்சு வச்சாச்சு. ஒண்டும் நல்லதா நடக்கிறதாக் காணேல்ல. நாட்டுக்குப் போறன் எண்டு சொன்னதும்  என் நண்பியும்  தனக்கும் சேர்த்து சுவாமி கும்பிட்டு வா என்றாள். சரி அவ்வளவு தூரம் போரம் வன்னியில உள்ள அந்தக் கோவிலுக்கும் போட்டு வருவம் என எண்ணி கடவுளே எந்தத் தடையையும் ஏற்படுத்தி விடவேண்டாம். நானும் கணவரும் உம்மிடம் வரவேண்டும் என கடவுளிடம் வேண்டிக்கொண்டேன். 

அது காட்டுக்குள் இருக்கும் ஒரு கோவில். மதியம்தான் பூசை. மாலையில் பூட்டிவிடுவார்கள். பூசை எத்தனை மணிக்கு என்று யாருக்கும் சரியாகச் சொல்லத் தெரியவில்லை. அந்தக் கோவிலுக்குப் போவதற்கு பஸ்சும் இல்லை. அதனால் கிளிநொச்சியில் இருந்து ஓட்டோ பிடித்துக்கொண்டு ஒரு மணித்தியாலம் மேடு பள்ளங்கள் எல்லாம் கடந்து பத்து மணிக்குக் கோயிலை அடைந்தோம். தம்பி உங்கள் போன் நம்பரைத் தாங்கோ. பூசை எப்ப முடியும் என்று கேட்டுவிட்டு உங்களுக்குப் போன் செய்யிறம் எங்களைத் திரும்ப வந்து ஏற்றுவீர்கள் தானே என்றார் கணவர். எப்பிடியும் நான் முடியிற நேரம் இந்தப் பக்கம் வந்திடுவன். நீங்கள் போன் செய்யுங்கோ அண்ணா என்றுவிட்டு இலக்கங்களைத் தந்துவிட்டுப் போய்விட்டார். 

அக்கம் பக்கம் சிறு பெட்டிக்கடை கூட இல்லை. சுற்றிவரக் காடும் தொட்டம் தொட்டமாக சில வீடுகள் மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தன. காலைக் கழுவிவிட்டு கோயிலினுள்ளே சென்றால் இரண்டொரு வயோதிபர்களே உள்ளே இருந்தனர். நாங்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து வாறம். எத்தினை மணிக்குப் பூசை என்று கேட்டதற்கு அது பன்னிரண்டு ஒண்டு செல்லும் என்றுவிட்டு நேத்திக்கடனோ என்றனர். ஓம் ஆர் இங்க பொறுப்பாய் இருக்கினம் என்று கேட்டதுக்கு ஒரு பக்கத்தைக் கைகாட்டிச்சினம். அங்கு சென்று பார்த்தால் காணிக்கையோ அல்லது கோயில் நிவாரணப் பணிக்கு உதவுவோரோ பிரதான குருக்களிடம் பணம் செலுத்திப் பற்றுச்சீட்டுப் பெற்றுக் கொள்ளலாம் என்று போட்டிருந்துது. 

அதில் போட்டிருந்த இலக்கத்துக்கு கணவர் போன் செய்ய இருங்கோ உடன வாறன் என்றபடி வந்து சேர்ந்தார் பிரதம குருக்கள். அவரைப் பார்க்க நல்ல சாந்தமானவராக இருந்தார். நீங்கள் வெளிநாடோ என்று உடனே கேட்டார். இல்லை என்று கூறுவோமோ என்று நான் என்னமுதலே ஓம் ஐயா என்றார் கணவர். இண்டைக்கு மோதக பூசை இருக்கு. நீங்களும் ஒரு  பூசை செய்யுங்கோவன் என்றவுடன்  எனக்கு முந்திக் கணவரும் தலையாட்ட, பணத்தைச் செலுத்திவிட்டு ஒருபக்கத்தில் போய் அமர்ந்தோம்.

அரை மணிநேரம் கழிய நேரம் எனக்குப் பசிக்க ஆரம்பித்துவிட்டது. குடிக்கப் பச்சைத் தண்ணீர் மட்டும் தான். ஒவ்வொரு நாளும் தானே மூண்டு நேரம் சாப்பிடுறாய். ஒரு அரை நாள் உனக்குப் பட்டினி கிடக்கேலாமல் இருக்கு என்று மனிசன் இதுதான் சாட்டு என்று என்னை வார வெளிக்கிட, பசிக் களைப்பைவிட உங்கள்  கதை தான் களைக்கப் பண்ணுது  என்று ஒருவாறு அவரின் வாயை அடைத்துவிட்டு கடவுளே எனக்கு இது சோதனையோ என்றுவிட்டு கொஞ்சநேரம் புதினம் பார்க்க ஆரம்பித்தேன்.

ஒரு பத்து நிமிடத்தின் பின்னர் பூணூல் போட்ட ஒரு ஐயர் கோவிலுக்குள் வந்தார். எல்லோரையும் சுற்றிவரப் பார்த்துவிட்டு எம்மையும் பார்த்துத் தலையாட்டிவிட்டு மூலஸ்தானத்துக்குக் கிட்டப் போனார். பின் பரபரப்பாகத் தானே எல்லாம் செய்வதுபோல் அங்கும் இங்கும் போய்வந்தவர். இவர் தான் பூசை செய்யப் போகிறாரோ என்று எண்ணிய என் மனம் சீச்சீ இவராக இருக்காது, இவரின் கண்களைப் பார்க்க எதோ நேர்மை அற்றவர் போல் தெரிகிறது என்று எண்ணியதை என் கணவருக்கும் கூறினேன். உனக்கு ஆரைப் பார்த்தாலும் சந்தேகம் தான். நாங்கள் புது ஆட்கள் என்று எம்மை அடிக்கடி பாக்கிறார. உனக்குப் பசி கண்ணை மறைக்குது போல என்று நக்கலாகக் கூறியபடி ஐந்து சென்று அங்கு நின்ற ஒருவரிடம் மனிசன் எதோ கேட்பதும் திரும்புவதுமாக இருக்க, என்னப்பா விஷயம் என்றேன் நான்.

பக்கத்தில எங்காவது கடையள் இருக்கோ என்று விசாரிச்சனான். அரை மணித்தியாலம் போகவேணுமாம். நான் போய் ஏதும் உனக்குக் குடிக்க வாங்கிக்கொண்டு வரட்டோ என்றார் கணவர். வேண்டாம் அப்பா. இண்டைக்கு ஒருநாள் தானே விரதம் இருக்கிறன் என்றேன். திட்டினாலும் அவருக்கு என்னில அன்புதான் என்று மனதுள்ளே நான் எண்ணியதை வெளியே சொல்லவில்லை. இப்போது அந்தச் சின்ன ஐயர் மூலஸ்தானத்தை திறந்து உள்ளே இருக்கும் கடவுள் எமக்குத் தெரியாதபடி கேட்டின் ஒன்றை இழுத்து மூடிவிட்டு உள்ளே போவதும் வருவதுமாக இருந்தார். இடையிடை பெரிய ஐயாவும் அங்கு சென்றுவிட்டபடியால்  இனிப் பூசை தொடங்கிவிடும் என்று எண்ணியபடி நான் எழுந்திருந்தேன்.

மூலஸ்தானத்துக்கு வெளியே வந்த சின்ன ஐயர் இடுப்பில் செருகியிருந்த தொலைபேசியை எடுத்து அவதியாகக் கதைப்பதுபோல் ஏதோ கதைத்தபடியும் எம்மைப் பார்த்தபடியும் வெளியே சென்றார். மீண்டும் எம்மை நோக்கி வந்தார். ஏனோ தெரியவில்லை எனக்கு மனதில் பிசைவதுபோல்  ஒரு எண்ணம் தோன்றியது. கணவரிடம் வந்தவர் உங்களிடம் ஒரு மூவாயிரம் ரூபாய் இருக்குமா? பூசை முடியத்தருகிறேன் என்றார். என்னிடம் ஐயாயிரம் ரூபாய்த் தாளும் கொஞ்சச் சில்லரையும் தான் இருக்கு. மாதத்தின காசு இல்லை என்றார் கணவர். பரவாயில்லை அதைத் தாங்கோ பூசை முடிஞ்ச உடன தாறன் என்றார் மீண்டும். உடனே நான் என்னட்டை இரண்டாயிரம் இருக்கு என்று கூறி என் கைப்பையில் இருந்ததை எடுத்துக் குடுத்தேன். மீண்டும் வெளியே சென்ற அவர் வருவாரோ மாட்டாரோ என நான் எண்ணிக்கொண்டு இருக்கத் திரும்பிவந்து பூசைகளுக்கான உதவியைச் செய்யத் தொடங்கினார்.

மனம் கொஞ்சம் நின்மதியானாலும் ஒரு கேள்வி இருந்துகொண்டே இருந்தது. இப்ப கிட்டத்தட்ட ஒரு முப்பது பேராவது கோவிலினுள்ளே வந்திருந்தார்கள். முப்பதுபேரும் அர்ச்சனை செய்தாலும் ஐநூறு வருமோ என்று என் மனதில் சந்தேகம் இருந்தது. சரி கோவிலுக்கு வந்த இடத்தில எதுக்கு கண்டதையும் நினைச்சுக் குளம்பவேணும். எல்லாம் கடவுள் பார்த்துக்கொள்ளுவார் என்று மனதை ஒரு நிலைப் படுத்தியபடி கடவுளை வணங்க  ஆரம்பித்தேன். பூசை எல்லாம் முடிந்து அர்ச்சனை எல்லாம் முடிந்து கொண்டம் கொஞ்சமாக ஆட்கள் வெளியேறிக்கொண்டு இருந்தனர்.

பூசைக்குக்காசு கட்டினவை எல்லாம் வாங்கோ வந்து உங்கட பிரசாதத்தை எடுத்துக் கொண்டு போங்கோ என்று பிரதம குருக்கள் கூற நான் வாங்கோ அப்பா என்றேன் கணவரைப் பார்த்து. நீ போய் வாங்கிக் கொண்டு வா நான் ஓட்டோவுக்கு போன் செய்யிறன் என்றார் கணவர்.  பிரசாதத்தை வாங்கி வந்தவுடன் உடனே அதில் இரண்டு மோதகங்களை எடுத்துக் கணவனுக்கும் ஒன்றைக் கொடுத்து நானும் உண்ணத் தொடங்கினன். இன்னும் பசி கூடின மாதிரி இருக்க வெண் பொங்கல், சக்கரைப்பொங்கல்  என்று கட கடவென்று உண்ணத் தொடங்க ஓட்டோவில போகேக்குள்ள சாப்பிடலாம் தானே. உப்பிடிச் சாப்பிட விக்கப் போகுது என்ற கணவர், வெளியே போன ஐயரையும் காணேல்ல. காசைத் தருவாரோ அல்லது அப்பிடியே போட்டாரோ தெரியவில்லை என்றார்.

அப்பிடிச் செய்ய மாட்டார். சரி வாங்கோ வெளியில போய்ப் பார்ப்பம். நேரம் செல்லுது என்றபடி கொண்டுவந்த பைகளைத் தூக்கினேன். நாம் வெளிப் படியைக் கடக்கும்போது சின்ன ஐயர் உள்ளே வந்துகொண்டிருந்தார். என் கணவர் எதுவும் கேட்க முன்னரே ஓட்டக் காரரிடம் உங்கட காசு குடுத்திருக்கிறன். வாங்குங்கோ. என்று கூறியபடி உள்ளே சென்றுவிட நாம் ஓட்டோ நிற்கும் இடத்துக்குப் போனோம். ஓட்டோக்காரரின் கையில் மடித்தபடி  பணமிருந்தது. ஐயர் காசு தந்தவரோ என்று கணவர் கேட்க, ஓமண்ணா இந்தாங்கோ என்றபடி அந்த ஆட்டோக்காரர் காசைக் கணவரிடம் நீட்டினார். நீங்கள் தான் எங்கள் ஓட்டோக்காரர் என்று எப்பிடி ஐயருக்குத் தெரிந்தது என்று நான் அவரைக் கேட்க, இங்குள்ளவை ஓட்டோவில் வாறதில்லை அக்கா. வெளியில இருந்து வாரவைதான் ஓட்டோவில வாறவை என்று ஐயாவுக்குத் தெரியும். என்னட்டை வந்து நீர்தான் வெளிநாட்டுக் காரரை ஏற்றிக்கொண்டு வந்ததோ என்று கேட்டவர். நான் ஓம் என்றவுடன் காசைத் அவையிட்டைக் குடுங்கோ என்று காசைத் தந்துவிட்டுப் போட்டார் அக்கா என்றவர் ஓட்டோவைத் திருப்பி வேகம் எடுக்கத் தொடங்கினார். 

அட ஐயர் கெட்டிக்காரர் தான் எண்டு நான் எண்ணி முடிக்கமுதல் தம்பி ஓட்டோவை நிப்பாட்டுங்கோ என்றார் கணவர். என்னப்பா ஏதும் விட்டிட்டு வந்திட்டியளே என்று நான் கணவரைப்பார்க்க அவர் கையில் ஐயர் கொடுத்துவிட்டுப் போன பணம். ஆயிரத்தி முன்நூறுதான் இருக்கு. மிச்சக்காசைத் தராமல் விட்டதுகூடப் பரவாயில்லை. எங்களை விசரர் ஆக்கிப் போட்டாரே ஐயர் என்று கடுப்போடு இறங்கிய கணவரை கையைப் பிடித்து  மீண்டும் ஓட்டோவுக்குள் இருத்திவிட்டு தம்பி நீங்கள் ஓட்டோவை எடுங்கோ என்றேன். கோயில்ல பூசை செய்துகொண்டு இதென்ன அங்கிடுதத்தித் தனம் என்றபடி அங்கலாய்த்த கணவனிடம் கடவுள் அவரைப் பார்த்துக் கொள்ளுவார். இதுவும் நேர்த்திக்காகக் குடுத்தது என்று நினைத்து இனி அதுபற்றிக் கதைக்கவேண்டாம் என்றேன். அண்ணர் சொல்லுறது சரிதான் அக்கா. உங்களிடம் நேரே விசயத்தைச் சொல்லிக் காசைத் தந்திருக்கலாம் என்று கூறிய ஓட்டோக்காரருக்கு எதுவும் கூறாது. கணவனின் கையை ஆறுதலாகப் பற்றினேன்.

 

Link to comment
Share on other sites

சின்ன அய்யர் கெட்டிக்காரர் தான். நல்ல வேளை உங்கள் கணவர் 5000 ரூபாவை கொடுக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த ஐயரை நினைத்தால் பரிதாபமாய் இருக்கு..... அவருக்கு சரியாய் திருடக்கூடத் தெரியவில்லை.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, நிழலி said:

சின்ன அய்யர் கெட்டிக்காரர் தான். நல்ல வேளை உங்கள் கணவர் 5000 ரூபாவை கொடுக்கவில்லை.

அதனால்த்தான் நான் முந்திக்கொண்டு என்னிடம் இருந்ததைக் கொடுத்தது tw_blush:

27 minutes ago, suvy said:

அந்த ஐயரை நினைத்தால் பரிதாபமாய் இருக்கு..... அவருக்கு சரியாய் திருடக்கூடத் தெரியவில்லை.....!  tw_blush:

நானும் கணவரிடம் அதைத்தான் கூறினேன். அந்தாள் காசைத் தராமல் போயிருந்தாலும் நாங்கள் பேசாமல் வரவேண்டித்தான் இருந்திருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது அனுமானப்படி...ஐயர் ஐநூறைத் தான் வெட்டியிருப்பார்!

மிச்சம் இருநூறை....ஓட்டோக்காரன் வெட்டியிருப்பான்!

எப்படி எனக்குத் தெரியும் என்று கேட்கிறீர்களா சுமே?

அது தொழில் இரகசியம்!

அனுபவம் நல்லாயிருக்கு! கடையெல்லாம் வைச்சு அனுபவப் பட்ட உங்களையே ஏமாற்றுகிறார்கள் என்றால்.. எங்களைப் போன்றவர்கள் படப்போகும்...பாட்டை நினைக்கத் தலையே சுத்துது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

...திட்டினாலும் அவருக்கு என்னில அன்புதான் என்று மனதுள்ளே நான் எண்ணியதை வெளியே சொல்லவில்லை.

....எதுவும் கூறாது. கணவனின் கையை ஆறுதலாகப் பற்றினேன்.

இந்த இரு வரிகள்தான் எனக்கு பிடித்தது.. heureux071.gif

இந்த அந்நோன்யம்தான், வாழ்க்கையின் அர்த்தமே..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது செய்ய கடவுளுக்கு இலஞ்சம் கொடுக்கலாம் என்றால் சின்ன ஐயர் .....

அனுபவம் புதுமை. நன்றாக இருக்கிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அட ஐயர் கெட்டிக்காரர் தான் எண்டு நான் எண்ணி முடிக்கமுதல் தம்பி ஓட்டோவை நிப்பாட்டுங்கோ என்றார் கணவர். என்னப்பா ஏதும் விட்டிட்டு வந்திட்டியளே என்று நான் கணவரைப்பார்க்க அவர் கையில் ஐயர் கொடுத்துவிட்டுப் போன பணம். ஆயிரத்தி முன்நூறுதான் இருக்கு. மிச்சக்காசைத் தராமல் விட்டதுகூடப் பரவாயில்லை. எங்களை விசரர் ஆக்கிப் போட்டாரே ஐயர் என்று கடுப்போடு இறங்கிய கணவரை கையைப் பிடித்து  மீண்டும் ஓட்டோவுக்குள் இருத்திவிட்டு தம்பி நீங்கள் ஓட்டோவை எடுங்கோ என்றேன். கோயில்ல பூசை செய்துகொண்டு இதென்ன அங்கிடுதத்தித் தனம் என்றபடி அங்கலாய்த்த கணவனிடம் கடவுள் அவரைப் பார்த்துக் கொள்ளுவார். இதுவும் நேர்த்திக்காகக் குடுத்தது என்று நினைத்து இனி அதுபற்றிக் கதைக்கவேண்டாம் என்றேன்.

கோவிலுக்கு பணம் கொடுப்பதே ஐயர் என்ற இனத்தை வாழ வைக்கவே..
 
செருப்பில்லாதவனுக்கு செருப்பு

பணமில்லாதவனுக்கு பணம்.

ஒன்று விரும்பி கொடுப்பது இன்னொன்று

கொடுத்துவிட்டு விரும்புவது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, புங்கையூரன் said:

எனது அனுமானப்படி...ஐயர் ஐநூறைத் தான் வெட்டியிருப்பார்!

மிச்சம் இருநூறை....ஓட்டோக்காரன் வெட்டியிருப்பான்!

எப்படி எனக்குத் தெரியும் என்று கேட்கிறீர்களா சுமே?

அது தொழில் இரகசியம்!

அனுபவம் நல்லாயிருக்கு! கடையெல்லாம் வைச்சு அனுபவப் பட்ட உங்களையே ஏமாற்றுகிறார்கள் என்றால்.. எங்களைப் போன்றவர்கள் படப்போகும்...பாட்டை நினைக்கத் தலையே சுத்துது!

எனக்கும் அந்தச் சந்தேகம் வந்ததுதான். ஆனாலும் என்ன செய்வது ?

13 hours ago, ராசவன்னியன் said:

இந்த இரு வரிகள்தான் எனக்கு பிடித்தது.. heureux071.gif

இந்த அந்நோன்யம்தான், வாழ்க்கையின் அர்த்தமே..!

நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்.

2 hours ago, Kavi arunasalam said:

நல்லது செய்ய கடவுளுக்கு இலஞ்சம் கொடுக்கலாம் என்றால் சின்ன ஐயர் .....

அனுபவம் புதுமை. நன்றாக இருக்கிறது

அனுபவங்கள் அடுத்த தடவைக்கான தற்காப்பு நிகழ்வுதானே.

1 hour ago, ஈழப்பிரியன் said:

கோவிலுக்கு பணம் கொடுப்பதே ஐயர் என்ற இனத்தை வாழ வைக்கவே..
 
செருப்பில்லாதவனுக்கு செருப்பு

பணமில்லாதவனுக்கு பணம்.

ஒன்று விரும்பி கொடுப்பது இன்னொன்று

கொடுத்துவிட்டு விரும்புவது.

நல்லாத்தான் கண்டு பிடிச்சியள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கை அண்ணா சொன்னமாதிரி ஓட்டோக்காரனும் சின்ன ஐயரும் டீல் போட்டிருப்பார்கள் என்றுதான் நினைக்கின்றேன். சின்ன ஐயர் இடையில் ஓட்டோக்காரனுடன் ஃபோனில் கதைத்திருக்கலாம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

புங்கை அண்ணா சொன்னமாதிரி ஓட்டோக்காரனும் சின்ன ஐயரும் டீல் போட்டிருப்பார்கள் என்றுதான் நினைக்கின்றேன். சின்ன ஐயர் இடையில் ஓட்டோக்காரனுடன் ஃபோனில் கதைத்திருக்கலாம்!

இருவரும் நன்றாகத் தெரிந்தவர்களாகக் கூட இருக்கலாம். சரி ஐயர் நல்லா இருக்கட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 காசை உங்களிடம் தராமல்  ஒட்டொ காரனிடம் கொடுத்த போதே நினைத்தேன் எதோ தில்லாலங்கடி   வேலை என்று ... உங்க கணவன் காசை எண்ணிப்பார்த்து நல்லதாக போய் விட்ட்து .(  இப்படி எத்தனை   வெளிநாட்டு காரரிடம்   ரீல் விடடாரோ   சின்ன அய்யர்   )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் சரி உங்கடை நேர்த்தி என்ன மாதிரி.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, சுவைப்பிரியன் said:

அதெல்லாம் சரி உங்கடை நேர்த்தி என்ன மாதிரி.:)

அடுத்த தடவை வரக்க பவுன் அல்லது டொலர் கொண்டு வந்து தாரம் இதான் நேர்த்தி 

எங்கட ஆட்கள் வெளீநாடு என்றாலே காசு காய்க்கிற மரம் மாதித்தான் பார்க்கிரவங்க நீங்க வெறும் 2000 ரூபா தானே அவனவன் லட்சங்களை கொடுத்து விட்டு அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்னை சந்திச்ச இத சொல்ல வில்லையே tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச நாளாக தாயக  மக்கள் ரொம்ப  மாறிவிட்டார்கள்  என  எழுதியதை  காணமுடிந்தது

இன்று  இந்தக்கதை  வருகுது

ஆனால்  இதில் தவறு முழுவதும் உங்கள் மீது  தான்

முன்  பின்  தெரியாத ஒருவருக்கு கேட்டவுடன் பணம் கொடுப்பது எந்தவகை??

அவ்வாறு ஏமாற்றப்பட்டால்

அதை  தட்டிக்கேட்காது கடவுளிடம்  பாரத்தை போடுவது எந்தவகை??

நியாயத்தை  கேட்டிருந்தால் இனிமேலாவது வேறு  ஆட்கள் ஏமாறதிருக்க  முடியுமே

அந்த பொறுப்பை  நீங்கள் தட்டிக்கழித்தது எவ்வாறு??

ஒன்றுமே புரியல.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/02/2018 at 12:48 AM, நிலாமதி said:

 காசை உங்களிடம் தராமல்  ஒட்டொ காரனிடம் கொடுத்த போதே நினைத்தேன் எதோ தில்லாலங்கடி   வேலை என்று ... உங்க கணவன் காசை எண்ணிப்பார்த்து நல்லதாக போய் விட்ட்து .(  இப்படி எத்தனை   வெளிநாட்டு காரரிடம்   ரீல் விடடாரோ   சின்ன அய்யர்   )

நானே பேசாமல் வந்திட்டன் என்றால் அப்பாவியள் காசைக் கேட்காமலேயே போயிருப்பினம்.

On 24/02/2018 at 2:19 PM, சுவைப்பிரியன் said:

அதெல்லாம் சரி உங்கடை நேர்த்தி என்ன மாதிரி.:)

அதுதான் இன்னும் நிறைவேறேல்லtw_blush:tw_blush:

On 24/02/2018 at 2:31 PM, தனிக்காட்டு ராஜா said:

அடுத்த தடவை வரக்க பவுன் அல்லது டொலர் கொண்டு வந்து தாரம் இதான் நேர்த்தி 

எங்கட ஆட்கள் வெளீநாடு என்றாலே காசு காய்க்கிற மரம் மாதித்தான் பார்க்கிரவங்க நீங்க வெறும் 2000 ரூபா தானே அவனவன் லட்சங்களை கொடுத்து விட்டு அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்னை சந்திச்ச இத சொல்ல வில்லையே tw_blush:

புரியவில்லையே :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

புரியவில்லையே :unsure:

என்னை சந்தித்த போது உதுகளை சொல்ல வில்லையே சிரிச்சிருப்பன் கொஞ்சம் அனுபவங்கள் சொல்லி தந்திருப்பன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, விசுகு said:

கொஞ்ச நாளாக தாயக  மக்கள் ரொம்ப  மாறிவிட்டார்கள்  என  எழுதியதை  காணமுடிந்தது

இன்று  இந்தக்கதை  வருகுது

ஆனால்  இதில் தவறு முழுவதும் உங்கள் மீது  தான்

முன்  பின்  தெரியாத ஒருவருக்கு கேட்டவுடன் பணம் கொடுப்பது எந்தவகை??

அவ்வாறு ஏமாற்றப்பட்டால்

அதை  தட்டிக்கேட்காது கடவுளிடம்  பாரத்தை போடுவது எந்தவகை??

நியாயத்தை  கேட்டிருந்தால் இனிமேலாவது வேறு  ஆட்கள் ஏமாறதிருக்க  முடியுமே

அந்த பொறுப்பை  நீங்கள் தட்டிக்கழித்தது எவ்வாறு??

ஒன்றுமே புரியல.....

முன்பின் தெரியாத ஒருவர் தான் எனினும் கோயில் ஐயர்என்ற ஒரு நம்பிக்கைதான். போக எதோ அவசரமாக்கும் . தருவார் தானே என்ற நம்பிக்கை. நியாயத்தைக் கேட்டிருந்தால் மட்டும் மற்றவரை எமாற்றமாட்டார் என்று கூற முடியாதுதான்.

3 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

என்னை சந்தித்த போது உதுகளை சொல்ல வில்லையே சிரிச்சிருப்பன் கொஞ்சம் அனுபவங்கள் சொல்லி தந்திருப்பன் 

அய்யய்யோ நீங்கள் யார் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

முன்பின் தெரியாத ஒருவர் தான் எனினும் கோயில் ஐயர்என்ற ஒரு நம்பிக்கைதான். போக எதோ அவசரமாக்கும் . தருவார் தானே என்ற நம்பிக்கை. நியாயத்தைக் கேட்டிருந்தால் மட்டும் மற்றவரை எமாற்றமாட்டார் என்று கூற முடியாதுதான்.

அய்யய்யோ நீங்கள் யார் ?

கன வருஷத்திற்கு பிறகு  யாழுக்க வந்தால் என்ன தெரியும் முனிவர் இப்ப தனிக்காட்டு ராஜாவாக ம்கும் tw_blush: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனியா ???உங்களைச் சந்தித்த பின்னர் தான் ஐயரைச் சந்தித்தது .

 

அம்பாறை என்றதும் யோசித்தேந்தான்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/22/2018 at 7:23 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

நல்ல அனுபவம். விறுவிறுப்பாக நன்றாக எழுதியிருக்கிறீர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/02/2018 at 3:14 AM, கந்தப்பு said:

நல்ல அனுபவம். விறுவிறுப்பாக நன்றாக எழுதியிருக்கிறீர்கள். 

நன்றி கந்தப்பு வருகைக்கு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.