Jump to content

செல்சீயின் தவறு... இனியஸ்டாவின் மேஜிக் ... 730 நிமிடக் காத்திருப்புக்குப் பின் மெஸ்ஸியின் கோல்...! #UCL #Messi #CHEBAR


Recommended Posts

செல்சீயின் தவறு... இனியஸ்டாவின் மேஜிக் ... 730 நிமிடக் காத்திருப்புக்குப் பின் மெஸ்ஸியின் கோல்...! #UCL #Messi #CHEBAR

 

எட்டு பார்சிலோனா வீரர்கள் கோல்போஸ்ட் அருகில் டிஃபண்ட் செய்துகொண்டிருக்கிறார்கள். மொத்த மிட்ஃபீல்ட் யூனிட்டும் பாக்ஸுக்கு அருகில்தான் இருந்தது. வில்லியனின் காலில் பந்து. ஏற்கெனவே சிலமுறை பார்சிலோனா வீரர்களை ஏமாற்றி கோல் பகுதியை முற்றுகையிட்டுக்கொண்டிருந்தார். அதனால், அனைத்து பார்கா வீரர்களும் கீழே இறங்கி ஆடினார்கள். இடதுபுறமிருந்து வலது நோக்கி முன்னேறுகிறார் வில்லியன். பாக்ஸுக்கு வெளியே இருந்து ஷாட் அடிக்கிறார். தன் நீண்ட கால்கள் கொண்டு அதைத் தடுக்க முற்படுகிறார் செர்ஜியோ பொஸ்கிட்ஸ். ஆனால், முடியவில்லை. 

 

வில்லியன்

 

அது அற்புதமான 'curler'. ஓர் அழகிய பெண்ணின் கூந்தலை வரையும் ஓவியனின் கை போல வளைந்து, கோல்போஸ்ட் நோக்கிப் பயணப்பட்டது. ஆனால், வலது கோல் கம்பத்தில் பட்டு வெளியேறுகிறது...ஜஸ்ட் மிஸ்! மொத்த ஸ்டாம்ஃபோர்ட் ப்ரிட்ஜ் மைதானமும் நிசப்தமடைந்துவிட்டது. நீல நிறக் கொடியோடு "ப்ளூ இஸ் தி கலர்" என்று பாடிக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு அது ஏமாற்றமாக அமைந்தது. பயிற்சியாளர் ஆன்டோனியோ கான்டே (Antonio Conte) முகத்தில் மிகப்பெரிய ஏமாற்றம். வில்லியனின் முகத்திலும். ரியல் மாட்ரிட், யுவன்டஸ் போன்ற அணிகளுக்கெல்லாம் தண்ணி காட்டிய பார்சிலோனா கொஞ்சம் தடுமாறத்தான் செய்தது.

இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பு எக்கச்சக்க எதிர்பார்ப்புகள். காரணம், பார்சிலோனா இதுநாள்வரை செல்சீ அணிக்கெதிராக சமீப காலமாக தடுமாறியே வந்துள்ளது. 2012 சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிப் போட்டியில் செல்சீயால்தான் வெளியேற்றப்பட்டது. இந்த அணியுடனான கடைசி 6 போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. அனைத்துக்கும் மேலாக... இந்த நூற்றாண்டின் ஆகச் சிறந்த வீரன், மாயாஜால வித்தகன், கோல் மெஷின் லயோனல் மெஸ்ஸி, செல்சீ அணிக்கெதிராக ஒரு கோல் கூட அடித்ததில்லை. ஆம், 8 போட்டிகளாக... 655 நிமிடங்களாக... அந்த லண்டன் கிளப்புக்கு எதிராக அவரால் கோல் போட முடியவில்லை. இதுதான் இந்தப் போட்டிக்கான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரிக்கக் காரணம். 

 

41-வது நிமிடம். செல்சீ ஏரியாவிலிருந்து வந்த லாங் பாஸை செர்ஜி ராபர்டோவால் சரியாக க்ளியர் செய்ய முடியாமல் போக, பந்து ஹசார்ட் வசம் சென்றது. பாக்ஸுக்கு வெளியில் நின்றிருந்த வில்லியனுக்குப் பாஸ் செய்தார். பந்து சிக்கியதும் கோல் போஸ்ட் நோக்கி அடித்தார். ஆனால், இந்த முறை போஸ்டின் இடதுபுறம். மீண்டும் போஸ்டில் பட்டு வெளியேறியது. ஒட்டுமொத்த செல்சீ ரசிகர்களும் உறைந்துபோனார்கள். Conte விரக்தியின் உச்சத்துக்குச் சென்றுவிட்டார். இரண்டு கோல்கம்பத்தையும் அடித்த வில்லியனால் தன்னையே நம்ப முடியவில்லை. கடந்த வாரம் ஹல் சிட்டி அணியுடனான போட்டியில் 2 கோல்கள் அடித்த பிறகு, ஒருமுறை போஸ்டை அடித்தார். அந்த வகையில் 'Hitting the woodwork'ல் வில்லியன் படைத்தது ஹாட்ரிக். ஆனால், அவர் மனம் உடைந்துவிடவில்லை. 

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மெஸ்ஸி, இனியஸ்டா, ஹசார்ட், சுவாரஸ் போன்ற வீரர்கள் பெரிய அளவில் தாக்கம் ஏற்படுத்தவில்லை. செல்சீ அணியின் கட்டுக்கோப்பான அரணைத் தாண்டி அவர்களால் எந்த வித்தையும் அரங்கேற்ற முடியவில்லை. குறிப்பாக, மெஸ்ஸியின் கால்களுக்குப் பந்து சென்றாலே, நீலச் சட்டைகள் அவரைச் சூழ்ந்துவிடும். தடுப்பாட்டத்தில் சொதப்பும் ஃபேப்ரகாஸ், பெட்ரோ இருவரும்கூட மெஸ்ஸிக்குத் தண்ணி காட்டினார்கள். முன்னாள் பார்சிலோனா வீரர்களான அவர்கள் இருவரும் தங்கள் அணியின் ஹீரோவுக்குத் தடையாக இருக்க, அங்கு கூடியிருந்த பார்சிலோனா ரசிகர்கள் கடும் ஏமாற்றத்துக்கு ஆளானானர்கள். 

Messi - Kante

இப்படி எதிர்பார்த்த வீரர்களெல்லாம் அமைதி காக்க, வில்லியன் அடிக்கடி மாஸ் காட்டினார். வேகமாக ட்ரிபிள் செய்வது, விங்கில் இருந்து கட் செய்து முன்னேறுவது என பார்சிலோனாவின் நடுகளத்தை ஆட்டிப் படைத்தார். அதனால் அடிக்கடி "வில்லியன்...வில்லியன்..." என்ற கோஷம்தான் லண்டனில் எதிரொலித்தது. இரண்டாவது முறை அவர் கோல்கம்பத்தை அடித்தபோதும் கூட...!

ஒண்ணு ரெண்டு எஸ்கேப் ஆன பின்னே, மூணாம் சுற்றில் முழுமை காணும்தானே...! அப்படித்தான் தன் மூன்றாவது ஷாட்டில், செல்சீக்கு முன்னிலை ஏற்படுத்திக் கொடுத்தார் வில்லியன். கிடைத்த கார்னர் வாய்ப்பில் கிராஸ் செய்யாமல், ஹசார்ட்-க்கு ஷார்ட் பாஸ் கொடுத்தார் ஃபேப்ரிகாஸ். அதை அவர் பாக்ஸுக்கு வெளியே நின்றிருந்த வில்லியனுக்குப் பாஸ் செய்தார். கார்னர் வாய்ப்பென்பதால், செல்சீ, பார்சிலோனா இரு அணி வீரர்களும் பாக்ஸுக்குள் நிறைந்திருந்தனர். இவரிடம் பந்து சிக்கியதும் பொஸ்கிட்ஸ் டேக்கிள் செய்ய விரைந்தார். உலகின் தலைசிறந்த மிட்ஃபீல்டர்களுள் ஒருவராகக் கருதப்படும் பொஸ்கிட்ஸ்-க்கு, வில்லியன் சற்றும் வாய்ப்பளிக்கவில்லை. சடசடவென வலதுபுறம் முன்னேறினார். இம்முறையும் பாக்ஸுக்கு வெளியே இருந்து ஷூட்... ஆனால், தரையோடு தரையாக அடித்தார். ரகிடிச், உம்டிடி இருவரையும் கடந்து கோல்கீப்பர் டெர் ஸ்டேகனையும் ஏமாற்றி கோலானது. ஸ்டாம்ஃபோர்ட் ப்ரிட்ஜ் அதிர்ந்தது.

வில்லியன்

கோல் அடித்ததும் டிடியர் ட்ரோக்பா போல் வில்லியன் கொண்டாட, ஒட்டுமொத்த செல்சீ ரசிகர்களின் மனதிலும் நாஸ்டால்ஜியா ஃபீலிங்! 6 ஆண்டுகளுக்கு முன்பு, இதே மைதானத்தில் பார்சிலோனா அணியை சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியின் முதல் சுற்றில் எதிர்கொண்டது செல்சீ. அதில் கோல் அடித்தவர் செல்சீ அணியின் ஜாம்பவான் ட்ரோக்பா. அந்த கோல்தான் செல்சீ இறுதிப் போட்டிக்குச் செல்லக் காரணமாக இருந்தது. அந்த சீசன் சாம்பியனும் ஆனார்கள். அன்று பயிற்சியாளராக இருந்த டி மட்டியோ இத்தாலிக்காரர். இப்போது கான்டே - இவரும் இத்தாலியர். செல்சீ ரசிகர்கள் கனவுலகில் மிதந்தார்கள். லண்டன் நீல வண்ணம் பூண்டது. 

கோல் வாங்கியவுடன் பாலினியோ வெளியே எடுக்கப்பட்டு, அலீக்ஸ் விடால் களமிறக்கப்பட்டார். பாலினியோ வெளியேற்றப்பட்டதுக்கு அவர்தான் காரணம். 16-வது நிமிடத்தில் கிடைத்த எளிதான வாய்ப்பைக் கோட்டைவிட்டார். ஆட்டத்தில் பெரிய அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தமுடியவில்லை. அதனால் மாற்றப்பட்டார். ஆனால், விடால் களமிறங்கக் காரணம் - செல்சீ மேனேஜர் Conte. புதிய பயிற்சியாளர் வெல்வெர்டே பதவியேற்ற பிறகு 4-4-2 ஃபார்மேஷனில்தான் அதிக போட்டிகளில் பார்சிலோனா களமிறங்கியது. ஓரளவு அது பலனும் தந்தது. ஆனால், அணிகள் அறிவிக்கப்பட்டபோதே அவர்களின் திட்டத்துக்கு முட்டுக்கட்டையாக இருந்தார் Conte. 

ஆன்டோனியோ கான்டே

அல்வாரோ மொராடா, ஆலிவியர் ஜிரௌட் என இரு ஸ்ட்ரைக்கர்களில் யார் களமிறக்கப்படுவார் என எல்லோரும் யோசிக்க, இருவரையும் இறக்காமல், வில்லியன், பெட்ரோ, ஹசார்ட் கூட்டணியைக் களமிறக்கினார் Conte. மூவருமே கவுன்டர் அட்டாக்கில் கில்லிகள். அதுதான் பார்சிலோனாவின் கேம் பிளானை பாதித்தது. வழக்கமாக அட்டாகிங் கேம் ஆடுபவர்களை, அவர்களின் நடுகளத்திலேயே தேங்க வைத்தது. மெஜிஸியன் இனியஸ்டா கூட 'டீப் ரோலி'ல்தான் விளையாடினார். 70 சதவிகிதத்துக்கும் மேலாக பந்தை வசப்படுத்தியிருந்தபோதும் அவர்களால் ஒரு ஷாட் கூட கோல் நோக்கி அடிக்க முடியவில்லை.  அவர்களின் திட்டங்களை லைன் அப் மூலமாகவே உடைத்தார் Conte. "ஆன்டோனியோ... ஆன்டோனியோ..." என்று ரசிகர்கள் முழங்கினார்கள். சிறு அணிகளிடம் தோற்றதால் பதவி நீக்கம் செய்யப்படுவார் என்று சில வாரங்களுக்கு முன்பு பேசப்பட்டது. ஆனால், பார்சிலோனா எனும் அரக்கனை தன் கன்ட்ரோலில் அவர் வைத்திருக்க, ஒட்டுமொத்த செல்சீ ரசிகர்களும் அவரைக் கொண்டாடத் தொடங்கினார்கள். 

நடுகளத்தில் முதலில் தடுமாறிய Kante, ஃபேப்ரிகாஸ் இருவரும் சுதாரித்துக்கொண்டு அசத்தியதால், பார்சிலோனா செல்சீ அணியின் தடுப்பை உடைக்கப் போராடியது. முதல் பாதியில் சைலன்டாக இருந்த சுவாரஸ், இரண்டாம் பாதியில் pressing கேம் மூலம் கொஞ்சம் செல்சீ அணிக்கு வேலை வைத்தார். ஆனாலும், ஆஸ்பிளிகியூட்டா, கிறிஸ்டென்ஸன், ருடிகர் அடங்கிய மூவர் அரணை அவர்களால் உடைக்க முடியவில்லை. 2012 கிடைத்த அதே முடிவு இந்தப் போட்டியிலும் கிடைக்கும் என செல்சீ ரசிகர்கள் நம்பினார்கள். வீரர்களும் அதேபோல் விளையாடினார்கள். ருடிகர் அவ்வப்போது கவுன்டர் அட்டாக் கொடுத்து பயமுறுத்தினார். வில்லியன் ஓயாமால் போராடினார், ரத்தம் கொட்டியபோதும்!

வில்லியன்

69-வது நிமிடத்தில் பார்சிலோனா பெனால்டி ஏரியாவில், பந்து முகத்தில் பட, மூக்கிலிருந்து ரத்தம் சொட்டக் கீழே விழுந்தார் வில்லியன். சில விநாடிகள் மருத்துவ உதவி எடுத்துக்கொண்டு மீண்டும் விளையாட வந்தார். 3 நிமிடம் கழித்து, ருடிகர் செய்த கிளியரன்ஸை எடுக்க, வில்லியன், ஜோர்டி ஆல்பா இருவரும் முயன்றனர். பந்து கடந்து போனது. அப்போது வில்லியனைப் பார்த்த ஜோர்டி ஆல்பா கூட அவரது மூக்கிலிருந்து ரத்தம் வருவதைப் பார்த்து ஒரு நொடி நின்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து நடுவர் கூட ஆட்டத்தை அதற்காக நிறுத்தினார். ஆனால், வில்லியன்... களத்திலிருந்து வெளியேறவேண்டும் என்றோ, ஓய்வு வேண்டுமென்றோ சிறிதும் நினைக்கவில்லை. மீண்டும் லண்டனில் அவர் பெயர் முழங்கியது!

75 நிமிடம் பார்சிலோனாவுக்குத் தண்ணி காட்டிய செல்சீ அணி செய்தது ஒரேயொரு தவறுதான். அந்த ஒரு தவறு ஆட்டத்தின் போக்கை அப்படியே மாற்றிவிட்டது. கிறிஸ்டென்ஸன் செய்த பாஸை, ஃபேப்ரிகாஸ் எடுக்காமல் விட்டுவிட, அதை நோக்கி ஓடிவந்தார் இனியஸ்டா. அவரைப் பார்த்ததும் பிளாக் செய்ய விரைந்தார் ஆஸ்பிளிக்கியூட்டா. ஃபேப்ரிகாஸ் தவறு செய்வது இயற்கைதான். ஆனால், ஆஸ்பி அப்படியல்ல. பெர்ஃபெக்ஷன், கன்சிஸ்டென்ஸி இரண்டுக்குமே அவர்தான் மறு பெயர். அப்படிப்பட்ட ஆஸ்பி தன் முடிவில் தவறிழைத்தார். அந்தத் தவறைப் பயன்படுத்தினார் இனியஸ்டா.

 

 

பந்தை பாக்ஸுக்குள் கடத்திச் சென்றுவிட்டார். கோல் போஸ்ட் நோக்கி அடிக்கலாம். கோல் போக 50 சதவிகிதம் வாய்ப்புள்ளது. பெரும்பாலான வீரர்கள் அதைத்தான் செய்வார்கள். ஆனால், இது இனியஸ்டா. பாஜி ராவ் மஸ்தானி படத்தில் வரும் ரன்வீர் சிங் போல், மண்ணுக்குள் புதைந்திருக்கும் மயிலிறகின் அடி நுனியையும் கண்களால் காண்பவர். 100 சதவிகித வாய்ப்பு எங்கே..? தேடினார். சுவாரஸ் கோல் போஸ்டின் மிக அருகில் நிற்கிறார். பாஸ் செய்தால் கோல் போடுவது ஈசி. ஆனால்... ஃபேப்ரிகாஸ் ஸ்லைட் செய்தால், பாஸைத் தடுத்துவிடலாம். ருடிகர் பிளாக் செய்யவும் வாய்ப்புண்டு. 

எளிதான பாஸையும் தவிர்த்தார். பின்னால் மெஸ்ஸி. ஆனால், இவர் கண்கள் கோல் நோக்கி இருக்கின்றன. மெஸ்ஸியின் நிழல் தெரிந்திருக்கக்கூட வாய்ப்பில்லை. ஆனால், மெஸ்ஸியின் மூளை அவருக்குத் தெரியும். மெஸ்ஸியின் கால்பந்து ஞானம் தெரியும். 14 ஆண்டுகால கெமிஸ்ட்ரி... காற்று நுழைய மறுக்கும் இடத்தில் மெஸ்ஸியின் கால்கள் நுழையும் என்று தெரியும். ஆண்டவனாலும் முடியாததை அந்த அர்ஜென்டினா வீரன் முறியடிப்பான் என்பது தெரியும். எப்படி எதிரணியின் அரணை உடைப்பதென்று தெரியும். ஏனெனில், இவன் பெயர் இனியஸ்டா... மாயக்காரன்!

மெஸ்ஸி, இனியஸ்டா

மெஸ்ஸி... இனியஸ்டாவை நன்கு அறிந்தவர் அவரைவிட யாரும் இருக்க மாட்டார்கள். அவரது கால்கள் பந்தை எங்கு செலுத்தும் என்பது இவருக்கு பரிச்சயம். எத்தனை டிஃபண்டர்கள் இருந்தாலும், அவர்களை ஏமாற்றி தன் கால்களுக்கு அதைப் பரிசாளிப்பார் என்பதை அறிந்திருந்தவர். அப்படியான கெமிஸ்ட்ரி இந்தப் போட்டியில் 75 நிமிடம்... செல்சீ அணிக்கு எதிராக 730 நிமிடம் வேலை செய்யாமல் இருந்தது ஆச்சர்யம்தான். ஆனால், அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டனர். ஒரு மைனஸ் பாஸ்... மெஸ்ஸியின் லெஃப்ட் ஃபூட் சிங்கிள் டச்... செல்சீ கோல் போஸ்டின் வலது கார்னரில் பந்து... கோல்! மெஸ்ஸியின் போராட்டம் முடிவுக்கு வந்தது. பார்சிலோனாவுக்கு அவே கோல். செல்சீ ரசிகர்களின் கனவு நொறுங்கியது. 

பந்து வலைக்குள் சென்றதும் ஆர்ப்பரித்த மெஸ்ஸியின் முகத்தில் அப்படியொரு நிம்மதி. 722 கோல்கள் அடித்தவனை, 5 பாலன் டி ஓர், 4 சாம்பியன்ஸ் லீக், ஒரு ஒலிம்பிக் தங்கம், ஒரு உலகக்கோப்பை கோல்டன் பால் விருதுகள் வாங்கியவனை... இந்த ஒற்றை கோல் இத்தனை ஆண்டுகளாக என்ன பாடு படுத்திவிட்டது! நிம்மதியின் உச்சத்தில் இருந்தார் மெஸ்ஸி. அவே ஃபேன்கள் ஏரியாவில் அதுவரை அமைதியாக நின்றிருந்த பார்கா ரசிகர்களின் சொர்க்கத்தின் வாசலைத் தொட்டுவந்தார்கள். தங்கள் ஆதர்ச நாயகனின் சந்தோஷத்தில் மொத்த உலகையும் மறந்து ஆர்ப்பரித்தார்கள். 

மெஸ்ஸி

 

https://www.vikatan.com/news/sports/117097-messi-scored-atlast-against-the-blues.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
    • முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக மிகப் பெரிய ஆரவாரத்துடன் தி.மு.கவில் இருந்து பிரிந்து உருவான ம.தி.மு.க. தற்போது மிகவும் பலவீனமான நிலையை எட்டியிருக்கிறது. காரணம் என்ன ம.தி.மு.கவின் பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அ. கணேசமூர்த்தியின் தற்கொலை மரணம் அக்கட்சியினரை உலுக்கியிருக்கிறது. அதற்கு இணையான அதிர்ச்சியாக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு பம்பரம் சின்னம் கிடைக்காமல் போனதைச் சொல்லலாம். அ. கணேசமூர்த்தியின் மரணத்தைவிட, பார்வை ரீதியாக மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த விவகாரம். மாநிலத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் அக்கட்சி கேட்ட சின்னத்தைத் தர முடியாது என மறுத்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். துவக்கத்தில் ஒரே சின்னத்தில் 24 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட கட்சி, தற்போது கூட்டணி அரசியலில் இரு தொகுதிகளில் போட்டியிட முடியாமல் சின்னத்தை இழந்து நிற்கிறது. தமிழ்நாடு அரசியலிலும் தி.மு.க. மீதும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கட்சியாகக் காட்சியளித்த ம.தி.மு.க., இவ்வளவு பெரிய சரிவை உடனடியாகச் சந்திக்கவில்லை. இந்தச் சரிவு படிப்படியாக நேர்ந்தது. வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு தி.மு.கவின் முக்கியமான தளபதிகளில் ஒருவராக 1980களில் இருந்தவர் வை. கோபால்சாமி. தி.மு.கவின் மாநாடுகள், கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் அவருக்கெனவே இளைஞர்கள் திரண்டார்கள். ஆனால், 90களின் துவக்கத்தில் அவருக்கும் கட்சித் தலைமைக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றத் துவங்கின. இந்த நிலையில், 1993இல் விடுதலைப் புலிகளால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய - மாநில அரசுகளின் உளவுத் துறைகள் அனுப்பிய கடிதத்தை தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி வெளியிட்டார். இதையடுத்து, வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு முற்றத் துவங்கியது. 30 மாவட்டச் செயலாளர்களில் 9 பேர் வைகோவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர். அதே ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி தி.மு.கவை விட்டு நீக்கப்பட்டார் வைகோ. ஆதரவாக அறிக்கை வெளியிட்ட 9 மாவட்டச் செயலாளர்களும் நீக்கப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களில் 40 பேர், பொதுக் குழு உறுப்பினர்களில் சுமார் 200 பேர், 9 மாவட்டச் செயலாளர்கள், சில சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வைகோவுக்கு ஆதரவாக நின்றனர். எம்.ஜி.ஆர். தி.மு.கவைவிட்டு விலகியபோது ஏற்பட்ட பிளவைவிட இந்தப் பிளவு மிகப் பெரியது என அப்போது பலர் கருதினார்கள். காரணம், எம்.ஜி.ஆர். கட்சியைவிட்டு வெளியேறியபோது, தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் யாரும் எம்.ஜி.ஆரோடு செல்லவில்லை. ஆனால், இந்த முறை, துடிப்புமிக்க மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்களான பொன். முத்துராமலிங்கம், செஞ்சி ராமச்சந்திரன், அ. கணேசமூர்த்தி, கண்ணப்பன், எல். கணேசன், ரத்தினராஜ், டிஏகே லக்குமணன், திருச்சி செல்வராஜ், நாகை மீனாட்சி சுந்தரம், மதுராந்தகம் ஆறுமுகம் உள்ளிட்டோர் வைகோவின் பக்கம் நின்றனர். இவர்கள் தவிர, திருச்சி மலர்மன்னன், முன்னாள் அமைச்சர் தங்கவேலு, புதுக்கோட்டை சந்திரசேகரன், கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் வைகோ பக்கம் நின்றனர். இந்தப் பின்னணியில் தி.மு.கவின் கட்சி, கொடி ஆகியவற்றுக்கு உரிமை கோரிய வைகோ அது நடக்காத நிலையில், 1994ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார். இந்தக் காலகட்டத்தில் தமிழக அரசியலில் மிக முக்கியமான ஒரு கட்சியாக ம.தி.மு.க. பார்க்கப்பட்டது. அப்போதைய ஆளும் கட்சியான அ.தி.மு.கவை எதிர்ப்பதில் மிகப் பெரும் தீவிரத்தைக் காட்டினார் வைகோ. அ.தி.மு.க. ஆட்சியைக் கண்டித்து கன்னியாகுமரியில் இருந்து சென்னையை நோக்கி நடைபயணம் ஒன்றையும் மேற்கொண்டார் வைகோ. மதிமுகவும் பம்பரச் சின்னமும் ம.தி.மு.க. 1994இல் துவங்கப்பட்ட தருணத்தில் மயிலாப்பூர் மற்றும் பெருந்துறை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு மயிலாப்பூர் தொகுதியில் பேருந்து சின்னமும் பெருந்துறையில் பம்பரச் சின்னமும் ஒதுக்கப்பட்டது. கடந்த 1996ஆம் ஆண்டில் தேர்தல்கள் வந்தபோது, பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம், திவாரி காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கி, தனது தலைமையில் கூட்டணியை உருவாக்க விரும்பினார் வைகோ. ஆனால், கூட்டணியின் பெயர் ம.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி என இருக்க வேண்டுமென்று கூறியது பா.ம.க. இதனால், அந்தக் கூட்டணி உருவாக முடியவில்லை. முடிவில், ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தனர். இந்தக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் குடை சின்னத்தில் 24 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் அதே சின்னத்தில் 177 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் 5.7 சதவீதமும் நாடாளுமன்றத் தேர்தலில் 4.5 சதவீதமும் அக்கட்சிக்குக் கிடைத்தன. இந்தத் தருணத்தில் ஒரு நிரந்தரச் சின்னத்திற்காக முயற்சி செய்தது ம.தி.மு.க. பெருந்துறை இடைத் தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிட்ட பம்பரச் சின்னம் நன்றாக இருக்கிறது, அந்தச் சின்னம் கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என மு. கண்ணப்பன் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொண்டு, அந்தச் சின்னத்தைப் பெற முயற்சிகளை மேற்கொண்டது ம.தி.மு.க. வைகோவும் கே.எஸ். ராதாகிருஷ்ணனும் டெல்லியில் தங்கியிருந்து இந்தச் சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து பேசி வந்தனர். ஆனால், ம.தி.மு.கவின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருந்ததால், ஒரே சின்னத்தை ஒதுக்குவதில் பிரச்னை இருந்தது. இதையடுத்து, ஒரு கட்சி சில தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால், ஒரே சின்னத்தை ஒதுக்கலாம் என ஆணை வெளியிடப்பட்டு, பம்பரம் சின்னம் ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டதாக நினைவுகூர்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். இதற்கு அடுத்து வந்த 1998 நாடாளுமன்றத் தேர்தலிலேயே அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.கவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் 3 இடங்களில் வெற்றி பெற்று ஆச்சரியமளித்தது ம.தி.மு.க. இந்தத் தேர்தலில்தான் முதன்முதலில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது அக்கட்சி. வாக்கு சதவீதம் 6.2ஆக உயர்ந்திருந்தது. மீண்டும் திமுகவுடன் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 1998ல் தேர்வுசெய்யப்பட்ட நாடாளுமன்றம் ஓராண்டிலேயே கலைக்கப்பட்டுவிட, 1999இல் மீண்டும் தேர்தலைச் சந்தித்தது இந்தியா. அதற்குள் பல விஷயங்கள் நடந்திருந்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. அதிலிருந்து வெளியேறிவிட, தி.மு.க. உள்ளே வந்தது. எல்லாக் கூட்டங்களிலும் தி.மு.கவையும் வாரிசு அரசியலையும் விமர்சித்து வைகோ பேசி வந்த நிலையில், இப்படி ஒரு கூட்டணி உருவானது. ஆனால், தான் ஏற்கெனவே இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்தான் தி.மு.க. வருகிறது என்பதால், பெரிய முரண்பாடு இன்றி கூட்டணி அமைந்தது. இந்த முறையும் 5 இடங்கள். அதே பம்பரச் சின்னம். வாக்கு சதவீதம் குறைந்தாலும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரித்தது. கடந்த 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கியபோது தி.மு.கவுக்கும் ம.தி.மு.கவுக்கும் இடையில் பிரச்னைகள் ஏற்பட்டன. தமிழகத்தில் செல்வாக்கில்லாத கட்சியாக இருக்கும் பா.ஜ.கவுக்கு 23 இடங்களை அளிக்கும் நிலையில், எல்லாத் தொகுதிகளிலும் செல்வாக்கு கொண்ட தங்களுக்கு 21 தொகுதிகளை மட்டும் கொடுப்பது சரியல்ல என்றார் வைகோ. இதையடுத்து தனக்கு அளிக்கப்பட்ட 23 தொகுதிகளில் இரண்டைக் குறைத்துக்கொள்ள பா.ஜ.க. முன்வந்தது. ஆனால், தாங்கள் விரும்பிய தொகுதியைத் தரவில்லை என்றார் வைகோ. முடிவில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் தவிர, மற்ற தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தார் வைகோ. வைகோ எடுத்த மிக மோசமான அரசியல் முடிவுகளில் ஒன்றாக, இந்தத் தேர்தலில் அவர் எடுத்த முடிவை அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். காரணம், இந்தத் தேர்தலில் 211 தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க., ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. ஆனால், இதைவிட மோசமான முடிவுகளை எடுக்கக் காத்திருந்தார் வைகோ. பட மூலாதாரம்,வைகோ பொடா சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட வைகோ மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக அவரைப் பொடா சட்டத்தில் கைதுசெய்தது அ.தி.மு.க. அரசு. இது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. பொடா சட்டத்தின் பிரிவுகள் எவ்வளவு கடுமையானவை எனக் காட்டுவதற்கான சின்னமாக உருவெடுத்தார் வைகோ. அவரை விடுவிக்க வேண்டுமென தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் குரல் கொடுத்தன. அதில் தி.மு.கவின் குரலும் இருந்தது. இதையடுத்து இரு கட்சிகளும் மீண்டும் நெருங்க ஆரம்பித்தன. வேலூருக்குச் சென்று வைகோவை நேரில் சென்று சந்தித்து வந்தார் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட வைகோ, சென்னை வரை ஊர்வலமாக வந்து சேரப் பல மணிநேரம் ஆனது. சென்னையில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற வைகோ, நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார். கடைசியாக சிவகாசி தொகுதியின் பெயரைச் சொல்லி நிறுத்தியதும், தொண்டர்கள் அனைவரும் 'வைகோ', 'வைகோ' என முழக்கமிட்டனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அந்தத் தொகுதியில் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் என்ற இளைஞர் போட்டியிடுவதாக அறிவித்தார் வைகோ. வைகோ அரசியல் ரீதியாக எடுத்த மிக மோசமான முடிவுகளில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்பட்டது. காரணம், இந்தத் தேர்தலில் நான்கு தொகுதிகளிலும் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. வைகோ தேர்தலில் போட்டியிட்டிருந்தால், அவரும் நாடாளுமன்றம் சென்றிருக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்பை வேறொருவருக்கு அளித்தார் வைகோ. 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் மறுபடியும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார் வைகோ. அ.தி.மு.கவுடனான வைகோவின் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES தி.மு.க. கூட்டணியில் 35 இடங்களைக் கோரிய ம.தி.மு.கவுக்கு 22 இடங்களைக் கொடுக்க முன்வந்தது தி.மு.க. இதையடுத்து, திடீரென அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தார் வைகோ. சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை பொடா சட்டத்தின் கீழ் தமிழக அரசு சிறையில் அடைத்தபோது மிகக் கடுமையான விமர்சனங்களை ஜெயலலிதா மீது அவர் முன்வைத்திருந்தார். இந்த நிலையில், வைகோவின் முடிவு பலரையும் அதிரவைத்தது. இந்தக் கூட்டணியில் 35 இடங்களில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களை மட்டுமே அக்கட்சியால் வெல்ல முடிந்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.கவுடனான கூட்டணி தொடர்ந்த நிலையில், ஒரு இடம் மட்டுமே அக்கட்சிக்குக் கிடைத்தது. கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கியபோதும் அ.தி.மு.க. கூட்டணியிலேயே ம.தி.மு.க. இடம்பெற்றிருந்தது. ஆனால், பேச்சு வார்த்தைகள் நடைபெற்றபோது, ம.தி.மு.க. குறைந்தது 21 தொகுதிகளாவது எதிர்பார்த்தது. ஆனால், பேச்சுவார்த்தையை 6 தொகுதிகளில் இருந்து துவங்கியது அ.தி.மு.க. இதனால், கூட்டணியில் இருந்து வெளியேறி, தனித்துப் போட்டியிடத் தயாரானது ம.தி.மு.க. இந்த நிலையில்தான் ஒரு அதிரடியான முடிவை எடுத்தார் வைகோ. 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக ம.தி.மு.க. அறிவித்தது. ம.தி.மு.க. எடுத்த முடிவுகளிலேயே மிக மோசமான அரசியல் முடிவாக இந்த முடிவே பார்க்கப்படுகிறது. ம.தி.மு.கவின் பின்னடைவுகளுக்குக் காரணம் என்ன? ம.தி.மு.கவின் தொடர் பின்னடைவுகளுக்குக் காரணம், வைகோவின் முடிவுகள்தான் என்கிறார் அக்கட்சியின் ஆரம்ப காலத் தலைவர்களில் ஒருவரான கே.எஸ். ராதாகிருஷ்ணன். "வைகோ ஒரு விஷயத்தை அதைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்யவில்லை. ம.தி.மு.க. தற்போது அடைந்திருக்கும் பின்னடைவுகளுக்கு இதுவே காரணம்," என்று கூறும் கே.எஸ். ராதாகிருஷ்ணன், கூட்டணி தொடர்பாக அவர் எடுத்த மூன்று முடிவுகள் மிக மோசமாக இருந்ததாகச் சுட்டிக்காட்டுகிறார். கடந்த 2001ஆம் ஆண்டில், தி.மு.க. கூட்டணியிலேயே தொடர்ந்திருந்தால் சில இடங்களைப் பெற்றிருக்கக்கூடிய நிலையில், தனித்துப் போட்டியிட்டு எல்லாத் தொகுதிகளிலும் தோல்வியடைந்து, கட்சி பலவீனமாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார் வைகோ என்கிறார் ராதாகிருஷ்ணன். அடுத்ததாக 2006ஆம் ஆண்டு தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இருந்து திடீரென அ.தி.மு.க. கூட்டணிக்கு மாறியது கட்சி மேலிருந்த நம்பகத் தன்மையை உடைத்தது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். "அப்போது திருச்சியில் மிகப் பெரிய தி.மு.க. மாநாடு நடந்தது. அதில் வைகோவின் கட்-அவுட்டும் வைக்கப்பட்டிருந்தது. அந்த மாநாட்டிற்கு வருவதாகச் சொன்ன வைகோ, திடீரென ஜெயலலிதாவை சந்தித்தார். அன்றைய தினமே கூட்டணி அறிவிக்கப்பட்டது. எப்படி ஒரு சந்திப்பில் கூட்டணி, இடங்கள் ஆகியவை முடிவாகும்? ஆகவே, முன்பே பேச்சுவார்த்தைகள் நடந்திருக்க வேண்டும் எனப் பலரும் கருதினர். இது அக்கட்சியின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியது," என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். வைகோ 2006இல் சரியான முடிவெடுத்திருந்தால் ம.தி.மு.க. அந்தத் தேர்தலில் சுமார் 15 இடங்களைப் பெற்றிருக்கும். கட்சி வலுவடைந்திருக்கும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன். "வைகோ எப்போதுமே சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுப்பார் என்பதற்கு அந்தத் தேர்தல் உதாரணமாகிவிட்டது. அப்போது ஆரம்பித்த தவறு, சமீபகாலம் வரை தொடர்ந்தது. இதன் உச்சகட்டமாக 2011இல் தேர்தலையே புறக்கணிக்க வேண்டிய நிலை வந்தது," என்கிறார் குபேந்திரன். தி.மு.கவில் இருந்து வைகோ வெளியேறியபோது நொச்சிப்பட்டு தண்டபாணி, பாலன், இடிமழை உதயன், வீரப்பன், ஜஹாங்கீர் உள்ளிட்ட ஆறு பேர் தீக்குளித்தனர். ஆனால், வைகோ எடுத்த தவறான முடிவுகளால் அவர்கள் தியாகம் முழுவதும் வீணாகிவிட்டது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். தற்போது வைகோ உடல்ரீதியாக தளர்ந்திருக்கும் நிலையில், அவரது மகன் துரை வைகோ கட்சியை முன்னெடுத்துச் செல்கிறார். அவர் எடுக்கவிருக்கும் முக்கிய முடிவுகளே இனி கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக அமையும். ம.தி.மு.க தொடர் பின்னடைவுகளை சந்திப்பது ஏன்? வைகோ எடுத்த முடிவுகள் எப்படி பாதித்தன? - BBC News தமிழ்
    • தேர்தல் வருகின்றது என்பதற்காகவா.............🙃.........சரத் வீரசேகர உட்பட இன்னும் பலர் தொடர்ச்சியாக இப்படியான கருத்துகளை சொல்லிக் கொண்டே இருக்கின்றார்களே. நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே முதல் முறை என்று நினைக்கின்றேன். தேர்தல் முடிந்த பின், இவருக்கு ஒரு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கும் திட்டமும் இருக்கலாம். அமெரிக்கா, இந்தியா, இலங்கை - இந்த மூன்று இடங்களில் இருந்து வரும் அரசியல் செய்திகள் ஒரே மாதிரியே இருக்கின்றன......😀
    • ஸ்கன்டினேவிய நாடுகளில் மத ரீதியாக பதற்றத்தை ஏற்படுத்தும் புட்டினின் முயற்சியாக இருக்குமோ?  😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.