Jump to content

தேசிய அரசாங்கத்தின் உடன்படிக்கையை வெளிப்படுத்தவும் ; அநுரகுமார


Recommended Posts

தேசிய அரசாங்கத்தின் உடன்படிக்கையை வெளிப்படுத்தவும் ; அநுரகுமார

 

 

(எம்.எம். மின்ஹாஜ், ஆர்.யசி)

தேசிய அரசாங்கம் தொடரவேண்டும் என்றால் மீண்டும் பாராளுமன்றத்தின் அனுமதியினை பெறவேண்டும். வாய் வார்த்தைகளின் மூலம் தேசிய அரசாங்கத்தை நீடிக்காது உடன்படிக்கை என்னவென்பது வெளிப்படுத்தப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும்  எதிர்க்கட்சி  பிரதம கொறடாவுமான அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். 

anura-kumara-dissanayake.jpg

தேசிய அரசாங்க கால எல்லை மீறியுள்ள நிலையில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தில் தொடர்ந்தும் நீட்டித்துக் கொண்டுசெல்ல முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். 

பாராளுமன்றத்தில் புதன்கிழமை ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

தேசிய அரசாங்கம் இரண்டு ஆண்டுகளுக்கு  மாத்திரம் செயற்படும்  என பிரேரணையில் இல்லை என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். 

இந்த பிரேரணையில் அமைச்சர்களின் எண்ணிக்கை  அதிகரிப்பு தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த பிரேரணையினை சாதாரணமாக முன்வைக்க முடியாது. 

 

இதற்கு இணக்கப்பாடு ஒன்று எட்டப்பட வேண்டும். ஆகவே இந்த பிரேரணையை முன்வைக்க முன்னர் இணக்கப்பாடு ஒன்றினை எட்டவேண்டிய தேவை உள்ளது. தேசிய அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட்ட பின்னரே இவ்வாறான பிரேரணை ஒன்றினை முன்வைக்க  முடியும். 

ஆகவே தேசிய அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக அன்று பாராளுமன்றத்தில் நீங்கள் தெரிவித்தீர்கள். அதற்கு அமையவே அமைச்சரவை அதிகரிக்கப்பட்டுள்ளது என்ற இந்த பிரேரணையையும் நீங்கள் முன்வைத்துள்ளீர்கள். ஆகவே தேசிய அரசாங்கதின் கால எல்லை வரையில்  இந்த பிரேரணை செயற்படவேண்டும். தேசிய அரசாங்கத்தின் கால எல்லை முடிவடையும் நிலையில் இந்த பிரேரணையும் நிராகரிக்கப்பட்டுவிடும். அப்படியாயின் தேசிய அரசாங்கம்  குறித்து செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கை என்ன. அந்த உடன்படிக்கை என்னவென்பதையே நாம் கேட்கின்றோம். 

 ஆகவே அடுத்த கால கட்டத்திற்கான தேசிய அரசாங்கம் முன்னெடுத்து செல்லும் உடன்படிகளை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதேபோல் அமைச்சரவையினை அதிகரிப்பது குறித்து மீண்டும் பாரளுமன்றத்தில் அனுமதியினை பெற வேண்டும். ஆகவே அரசியலமைப்புக்கு முரணான வகையில் இனியும் அமைச்சரவை செயற்பட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். 

http://www.virakesari.lk/article/30881

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.