Jump to content

`நாங்கதான் ஆளணும்' - ரஜினி குறித்த கேள்விக்கு கமல் முன்பு அதிர்ந்த சீமான்


Recommended Posts

`நாங்கதான் ஆளணும்' - ரஜினி குறித்த கேள்விக்கு கமல் முன்பு அதிர்ந்த சீமான்

 
 

seeman, kamal

 

 

 

சென்னை ஆழ்வார்பேட்டையில் நடிகர் கமல்ஹாசனை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென சந்தித்துப் பேசினார்.  சந்திப்புக்குப் பின் கமல்ஹாசனுடன் இணைந்து சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய சீமான், ‘நான் சிறு வயதில் இருந்தே கமலில் திரைப்படங்களைப் பார்த்து ரசித்து வளர்ந்தவன். ஒரே ஊர். ஒரே மண்ணில் பிறந்தவர்கள். எங்கள் குடும்பங்களுக்கு கமலின் குடும்பம்தான் வழக்கறிஞராக இருந்து பல வழக்குகளை நடத்தியது. 

தமிழகத்தில் தற்போது மிக மோசமான அரசியல் சூழல் நிலவி வருகிறது. எப்படியாவது மாற்றம் வந்துவிடாதா என்றுதான் அனைவரும் எதிர்பார்கிறோம். இந்தச் சூழலில் மக்களால் அதிகம் நேசிக்கப்படும் கலைஞன் என் அண்ணன் கமல்ஹாசன் நாளை அரசியல் பயணத்தைத் தொடங்குகிறார். எனவே, அவரை சந்திக்க நான் வந்திருக்கிறேன். நான் நேற்று உருவான தலைவர். எனவே, அவர் வந்து என்னை சந்திப்பது சரியாக இருக்காது. அதனால்தான் நான் வந்து அவரைச்  சந்தித்தேன். அவரின் அரசியல் பயணம் வெற்றிபெற வாழ்த்துகிறேன். ராமேஸ்வரத்திலிருந்து தொடங்கும் அவரின் பயணம் புரட்சிகர, வெற்றிகர அரசியல் பயணமாக அமைய வாழ்த்துகிறேன்’ என்றார்.

சீமான் பேசிக்கொண்டிருந்தபோது இடைமறித்த செய்தியாளர், ‘கமலுக்கு ஆதரவு தெரிவிப்பீர்களா’ என்றார். சீமான் பதில் கூறுவதற்கு முன்னரே கமல், ‘நான் பதில் சொல்லலாமா’ என்று பேசத் தொடங்கினார்..

‘சீமானுக்கு என் அரசியல் கொள்கைகள் பற்றி தெரியாது. ஆனால், என்னை அவருக்குத் தெரியும். நான் நடிக்கும் சினிமா பற்றிதான் அவருக்குத் தெரியும். என் கொள்கை என்ன என்பது அரசல்புரசலாக நான் பேசும்போது தென்படும் வார்த்தைகளை வைத்து தெரிந்து கொண்டிருப்பார். முழுமையாகத் தெரிந்திருக்க வாய்பில்லை. நாளை தொடங்கப்போகும் என் பயணத்தைக் கவனித்துவிட்டு என் கொள்கை என்ன என்பதைத் தெரிந்துகொண்டு சீமான் அவரது முடிவை கூறட்டும்’ என்றார். 

சீமான் , கமல்
 

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்குப் பதிலளித்த சீமான், ``இது எங்க மண். உதாரணத்துக்கு பொள்ளாச்சி என்பதை புத்தகத்தில் படித்திருப்பார்கள். ஆனால், அங்கு நேரில் சென்று பார்க்க வேண்டும். நெசவாளர் பிரச்னை, உழவர் பிரச்னை என எல்லாமே நேரில் சென்று பார்த்தால்தான் உணர முடியும். மேலும், மீனவர் பிரச்னை என்ன, மாணவர் பிரச்னை என்ன என்பது நேரில் சென்று பார்த்தால்தானே தெரியும்’' என்றார். 

மேலும் பேசிய சீமான் ``தமிழ் வாழணும் என்றால், தமிழன் ஆளணும். அதை தவிர்க்க முடியாது. இது என் வீடு. என் வீட்டில் எங்கே குழாய் உடைந்திருக்கிறது என்று எனக்குதான் தெரியும். எங்கே தண்ணீர் கசிகிறது, எங்கே என்ன பிரச்னை என்று எனக்குதான் தெரியும். எங்கள் மண்ணை நாங்கள்தான் ஆள வேண்டும்'' என்றார். 

https://www.vikatan.com/news/tamilnadu/116947-kamal-and-seeman-meets-press-people-together.html

Link to comment
Share on other sites

கமல் ஹாசனுக்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு?

''நான் நேசித்த கலைஞனுக்கு வாழ்த்து சொல்ல வந்தேன்'': கமலை சந்தித்த சீமான்

நடிகர் கமல் ஹாசனை அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் நேரில் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கமலின் அரசியல் பயணத்திற்கு வாழ்த்து கூறியுள்ளார்.

கமல் ஹாசன் தன்னை சந்திக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்ததாகவும், ஆனால் அவர் தன்னை சந்திப்பது மரியாதை ஆகாது என்பதால் தான் கமலை சந்தித்திருப்பதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல் ஹாசன் நாளைய தினம் (புதன்கிழமை) தனது அரசியல் பயணத்தை தொடங்கவுள்ள நிலையில், கடந்த சில தினங்களாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து வருகிறார்.

இச்சூழலில், இன்றைய தினம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசனை நேரில் சந்தித்து அவரது அரசியல் பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

''நான் நேசித்த கலைஞனுக்கு வாழ்த்து சொல்ல வந்தேன்'': கமலை சந்தித்த சீமான்

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கமல் ஹாசன் தொடங்கவிருக்கும் அரசியல் பயணம் வெற்றிபெற வேண்டும் என்று உளமாற வாழ்த்துவதாகவும், ராமேஸ்வரத்திலிருந்து தொடங்கும் அவரது பயணம் புரட்சிகர வெற்றிப் பயணமாக அவருக்கு அமைய வேண்டும் என்பது தனது விருப்பம் என்றும் கூறினார்.

அரசியலில் கமல் ஹாசனுக்கு ஆதரவு தருவீர்களா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இடைமறித்து பதிலளித்த கமல் ஹாசன், தனது கொள்கைகள் என்ன என்பது சீமானுக்கு தெரியாது என்றும், தனது அரசியல் பயணத்தை பார்த்துவிட்டு அவரது ஆதரவு முடிவை தெரிவிக்கலாம் அதுதான் நியாயம் என்றும் கூறினார்.

ரஜினி அரசியல் அறிவிப்பை வெளியிட்ட போது அவரைப் பார்க்காமல் கமலை மட்டும் வந்து சந்தித்துள்ளீர்களே என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, இங்கு நெசவாளர் பிரச்சனை, தொழிலாளர் பிரச்சனை, மாணவர் பிரச்சனை என பல இருக்கின்றன அதை தெரிந்துகொண்டால்தான் பிரச்சனையை சரிசெய்ய முடியும் என்றும், அதுபற்றி தெரியாமல் திடீரென வருவது சரியாக இருக்காது என்றும் சீமான் பதில் கூறினார்.

சினிமா கலைஞர்கள் அரசியலுக்கு வருவதால் சமூகத்தில் மாற்றம் நிகழுமா என்ற கேள்விக்கு பதிலளித்த கமல், அனைவரும் அரசியலுக்கு வரவேண்டும் என்பதே தனது ஆசை என்றும், முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே அவ்வாறு பொதுமக்கள் அரசியலுக்கு வந்திருந்தால் தன்னை போன்றவர்கள் வெறும் சினிமா தொழிலை மட்டும் பார்த்திருப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

ஒத்தக்கடை மைதானத்தில் பொதுக்கூட்டம்

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @ikamalhaasan
 

நாளை துவங்கவுள்ளது நம் நெடும் பயணம். நாளை மாலை 6 மணிக்கு மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தில் நமது கட்சிக் கொடியை ஏற்றவுள்ளேன். புதிய கட்சியின் பெயரையும் எமது கொள்கையின் சாராம்சத்தையும் விளக்கவுள்ளேன். வருக வருக புது யுகம் படைக்க #maiam

http://www.bbc.com/tamil/india-43124048

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.