Jump to content

வம்புக்கு இழுத்த கிப்ஸ்; சூதாட்டத்தில் நான் சம்பாதிக்கவில்லை: அஸ்வின் காட்டம்


Recommended Posts

வம்புக்கு இழுத்த கிப்ஸ்; சூதாட்டத்தில் நான் சம்பாதிக்கவில்லை: அஸ்வின் காட்டம்

 

 
Ashwin-Gibbs

அஸ்வின், கிப்ஸ் (கோப்புப் படம்)

இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை கிண்டல் செய்து ட்வீட் செய்து தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஹெர்சல் கிப்ஸ் பதிவிட்டதற்கு, கோபமடைந்த அஸ்வின் சரியான பதிலடி கொடுத்து அதிர்ச்சி அடைய வைத்தார்.

இந்திய ஆல்ரவுண்டர் அஸ்வின் நைக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அந்த நிறுவனம் அறிமுகம் செய்த புதிய ஷூ குறித்த வீடியோவை ட்விட்டரில் இன்று பதிவிட்டார்.

அதில், ''நண்பர்களே என்னிடம் புதிய நைக் ஷூ இருக்கிறது. இந்த ஷூவின் வடிவமைப்பு, நிறம், ஃபோம் தொழில்நுட்பத்தின் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளதால் எடை குறைவாக இருக்கிறது. அணிவதற்கு எளிதாகவும், சொகுசாகவும் இருக்கும். ஓடுவதற்கு சிறப்பானதாக இருக்கும், நான் அணிய தயாராகிவிட்டேன்'' எனத் தெரிவித்து இருந்தார்.

இதற்கு பதில் அளித்து கிப்ஸ் ட்விட் செய்தார். அதில், ''நம்புகிறேன், அஸ்வின் இனிமேல் நீங்கள் இன்னும் கொஞ்சம் வேகமாக ஓடுவீர்கள் ஏனென்றால் புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துவீட்டீர்கள். இனிமேல் உடல் தகுதியில்லாமல் இருக்கப் போவதில்லை.'' என கிரிக்கெட் சூதாட்டத்தை உள் அர்த்தமாகக் கூறி பதில் அளித்து இருந்தார்.

அதாவது புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துவிட்டார் அஸ்வின், அந்த நிறுவனத்துக்காக இனி அதிகமாக விளையாடுவார், விக்கெட்டுகள் எடுப்பார், ரன்கள் சேர்ப்பார், அதிக முயற்சிகள் எடுப்பார் என்று மறைமுகமாகக்  கூறி இருந்தார்.

இதற்கு அஸ்வின் தனது வார்த்தைகளில் கடுமையான காட்டத்தை காட்டினார். அடுத்த சில நிமிடங்களில் மிகுந்த காட்டத்துடன் ட்விட்டரில் பதில் அளித்திருந்தார்.

அதில், ''நீங்கள் வேகமாக ஓடிய அளவுக்கு என்னால் வேகமாக ஓட முடியாது. துரதிர்ஷ்டவசமாக உங்களைப் போல் நான் ஆசிர்வதிக்கப்பட்டவன் இல்லை. ஆனால், மிக அருமையான நேர்மையான, நியாயமான சிந்தனை கொண்ட மனிதராக ஆசிர்வதிக்கப்பட்டு இருக்கிறேன். எந்தப் போட்டியிலும் சூதாட்டம் , மேட்ச் பிக்சிங் செய்து, அதில் வந்த பணத்தை வைத்து நான் சாப்பிடவில்லை.

எனக்கு எது உணர்வுப்பூர்வமாக இருக்குமோ அது சிலருக்கு அப்படி இருப்பதில்லை. உங்களுக்கு உணர்வுப்பூர்வமாக இருப்பது எனக்கு இருப்பதில்லை. நான் எனது ரசிகர்களையும், குடும்பதத்தாரையும் மதிக்கிறேன். இத்துடன் ட்வீட்டையும் முடிக்கிறேன்'' எனத் தெரிவித்தார்.

கடந்த 2000-ம் ஆண்டு இந்தியாவுக்கு தென் ஆப்பிரிக்க அணி சுற்றுப்பயணம் வந்திருந்தது. அப்போது, நடந்த போட்டிகளில் மேட்ச் பிக்ஸிங் செய்ததாக கேப்டன் குரோனியே, கிப்ஸ், நிக்கி போயே, ஸ்டிரைடம் ஆகியோர் மீது டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இது குறித்து விசாரணை நடத்திய கிங் கமிஷன் குரோனியேவுக்கு வாழ்நாள் தடை விதித்தது, கிப்ஸ் தான் செய்த தவறுக்கு குரோனியேதான் காரணம் எனக் கூறியதையடுத்து, அவருக்கு அபராதமும் , 6 மாதம் தடையும் விதிக்கப்பட்டது.

2006-ம் ஆண்டு இந்தியாவில் நடந்த ஐசிசி சாம்பியன் கோப்பையில் விளையாடும் தென் ஆப்பிரிக்க அணியில் கிப்ஸ் சேர்க்கப்பட்டார். இந்தியாவுக்கு சென்றால் கைது செய்யப்படுவோம் என அஞ்சினார். இருப்பினும் இந்தியா வந்து போலீஸாரிடம் ஆஜராகி விளக்கம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/sports/article22799383.ece

Link to comment
Share on other sites

`நானும் ஜோக்தான் அடிச்சேன்!’ வைரலாகும் அஷ்வின் - கிப்ஸ் ட்விட்டர் உரையாடல்!

 

"சூதாடித்தான் வாழ வேண்டும் என்ற நிலை எனக்கு வரவில்லை" என்று இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின், தென்னாப்பிரிக்க அணி முன்னாள் வீரர் ஹார்ஷ்லே கிப்ஸை நகைச்சுவையாக ட்விட்டரில் சாடிய சம்பவம் தற்போது  டிரெண்டாகி வருகிறது.

 

அஷ்வின்

 

இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷூ ஒன்று குறித்து பதிவிட்டிருந்தார். அஷ்வினின் இந்தப் பதிவுக்குத் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஹார்ஷலே கிப்ஸ், ``இனிமேலாவது நீங்கள் வேகமாக ஓடுவீர்கள் என்று நம்புகிறேன் அஷ்வின்" என்று பதிவிட்டிருந்தார். இதற்குப் பதில் அளிக்கும் வகையில், "ஆம். என்னால் தங்களது வேகத்தில் ஓட முடியாது தான். ஆனால். கிரிக்கெட்டில் சூதாடிதான் உணவு சாப்பிட வேண்டும் என்ற நிலை எனக்கு இல்லை என்பதில் மகிழ்ச்சியடைகிறேன்" என்று அஷ்வின் பதில் கொடுத்திருந்தார். 

இதற்கு, "ஒரு ஜோக்கை ஜோக்காகப் பார்க்க முடியவில்லை... நான் செல்கிறேன்" என்று கிப்ஸ் சொல்ல, இதற்குப் பதில் அளித்த அஷ்வின், " நானும் இதை ஜோக் என்று நினைத்தே கூறினேன். ஆனால், நீங்களும் மற்றவர்களும் (ட்விட்டர் ஃபாலோயர்ஸ்) இதை வேறு மாதிரிப் புரிந்துகொண்டுவிட்டீர்கள். நாம் என்றாவது இதைப் பற்றி நேரில் பேசலாம்" என்று கூறி அஷ்வின் வாதத்தை முடித்து வைத்தார். அஷ்வின் மற்றும் கிப்ஸ் இடையிலான இந்த ட்விட்டர் உரையாடல் சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆனது. 

ஹான்ஸி குரேனியே தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி கடந்த 2000-ம் ஆண்டில் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, சூதாட்டத்தில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டில் கிப்ஸுக்கு 6 மாதங்கள் கிரிக்கெட் விளையாடத் தடையும் அபராதமும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

https://www.vikatan.com/news/sports/116890-ashwin-and-gibbs-talk-on-twitter-goes-viral.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதுகில புண்ணை வைத்துக்கொண்டு பொட்டுக்குள்ள போகக்கூடாது . ஹிப் ஸ் ஒடிஞ்சிடும்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

அஸ்வின் தான் சூதாடிச் சம்பாதிக்கவில்லை என்று சொல்கின்றார். இருக்கட்டும். அவங்க பரம்பரை என்ன வேலை செய்து தமிழ்நாட்டில் தமிழர் தாயகங்களை ஆட்டையைப் போட்டது? தமிழர்களினால் தமிழர்களின் உழைப்பில் கட்டப்பட்ட உலகக் கட்டடக்கலைக்கே அகரம் எழுதிய தமிழர்களின் கோயில்களைச் சூழ்ச்சியாகக் கைப்பற்றி தமிழர்களையே வேண்டத்தகாதவராக்கி சூத்திரப் பட்டம் கொடுத்து வெளியேற்றி சூழ்ச்சியால் சொத்துச் சேர்த்து தமிழர் தாயகத்தை வன்கவர்ந்து ஆளும் அதிகார வர்க்கத்திற்கு கூட்டிக் கொடுக்கும் மரபில் வந்ததாலேயே அஸ்வினால் துடுப்பாட்டத்திற்குள் வர முடிந்தது. பூநூல் இல்லையேல் தமிழ்நாட்டிலிருந்து துடுப்பாட்டத்தில் தெரிவாக முடியாது. சூழ்ச்சி செய்து மண்ணின் மக்களை அந்த மண்ணிலேயே அடிமையாக்கும் மரபில் வந்த ஆரிய மரபினத்தான் அஸ்வின் உழைத்துயர்ந்த மரபில் வந்தது போல கதைப்பது தான் கடுப்பாக்குது.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆரம்பத்தில் புலிகளை சாடியே தொடர் சென்றது, ஆனால் அதில் வந்த காலபதிவுகள்  பெரும்பாலும் உண்மையாகவே இருந்ததினால் புலம்பெயர் நாடுகளில் அதற்கான வாசகர்கள் படிப்படியாக அதிகமாயினர். தொடரின் ஆரம்பத்தில் எந்த கிட்டுவை சாடி வெளிவந்ததோ பின்னாளில் அதே கிட்டுவை ஆஹா ஓஹோ எனு புகழ்ந்து அற்புதன் எழுத தொடங்கினார் படிப்படியாக புலிகள் சார்பு செய்திகளை வெளியிட  தொடங்கினார் அற்புதன், ஒருகட்டத்தில் புலிகளின் உத்தியோகபூர்வ பத்திரிகை ரேஞ்சுக்கு புலி சார்புநிலைக்கு  வந்தது தினமுரசு. தினமுரசு இதழின் கடல்கடந்த விற்பனை எகிற தொடங்கியது,  காலப்போக்கில்  ஐரோப்பிய அமெரிக்க தமிழர்கள் தினமுரசு பத்திரிகையின் வரவுக்காக தவம் கிடக்க தொடங்கினர், புலம்பெயர் தேசத்தில் இலங்கையிலிருந்து வரும் ஒரு நாளிதழுக்காக  மக்கள் அலை மோதியது முதலும் கடைசியும் தினமுரசுக்கு மட்டுமேயாகதான் இருக்க முடியும். கொஞ்சம் லேற்றா போனால் விற்று முடிந்துவிடும் நிலைக்கு இருந்தது. ஜெயசிக்குறு ஆரம்ப காலகட்டத்தில் அசரடிக்கும் துல்லியமான கணிப்புக்களை வெளியிட்டார் அற்புதன், அந்த காலகட்டத்திலேயே கொல்லப்பட்டார். அற்புதனின் புலி சார்பு நிலை தொடருக்கு புலம்பெயர் தேசத்தில் தினமுரசுக்கு எதிர்பாராமல் கொட்டிய வெளிநாட்டு காசுதான் பிரதானமான காரணம். அதனால் டக்ளசினால் எச்சரிக்கப்பட்டதாகவும், கட்சிவேறு பத்திரிகை தொழில்வேறு என்று அற்புதன் டக்ளசுடன் முரண் பட்டதாகவும் அதனாலேயே டக்ளஸ் குழுவினால் சுட்டுகொல்லப்பட்டதாகவும் கதை உலாவியதுண்டு. அதை உறுதிப்படுத்தும் விதமாக ஜெயசிக்குறு சமரில் புலிகளின் வீரம்பற்றி வந்த தொடர் , அற்புதன் கொல்லப்பட்ட பின்னர் வந்த இதழ்களில் ’’ பூனையொன்றை ஒரு அறையில் மூடிவிட்டு ஒரு ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு மிரட்டினால், அது ஜன்னல் வழியாக ஓடிவிடும்,  படையினரின் பின்வாங்கலுக்கு அதுதான் காரணம்’’ மற்றும்படி புலிகள் வீரம் என்றெல்லாம் கிடையாது என்ற அர்த்ததில் செய்தி வந்தது, அத்துடன் புலி சார்பாக செய்தி வெளியிடுவதும் நின்று போனது கூடவே தினமுரசு வியாபாரமும் படுத்துக்கொண்டது, அதன்போதே புரிந்துவிட்டது அற்புதன் என்ன காரணத்துக்காகவும் யாராலும் கொல்லப்பட்டிருப்பார் என்பது, உலவிய வதந்தியும் ஓரளவு உண்மையாக போனதாகவும் பேசிக்கொண்டார்கள். ஆனால் புலிகள் அற்புதன் புலிசார்பு நிலையில் தொடர் எழுதினாலும் அதை கண்டுகொள்ளவேயில்லை,  அதனால்தான் அவர் கொல்லப்பட்டபோது புலிகளின் குரல் செய்தியில் ‘’பாராளுமன்றத்தில்  அவசரகாலநிலை சட்டத்துக்கு ஆதரவாக கையுயர்த்திவிட்டு வெளியே வந்து போராட்டத்திற்கு ஆதரவாக எழுதும் அற்புதன் கொல்லப்பட்டார் ‘’ எனு செய்தி பகிர்ந்தார்கள்.  
    • உற‌வே நானும் ப‌ல‌ வ‌ர‌லாறுக‌ளை தேடி தேடி ப‌டிச்ச‌ நான் ஆனால் நான் ஒரு போதும் இல‌வ‌ச‌ அறிவுறை சொல்வ‌து கிடையாது................அதுக்காக‌ உங்க‌ளை த‌ப்பா சொல்லுகிறேன் என்று நினைக்க‌ வேண்டாம் பொதுவாய் சொல்லுறேன்................. 500வ‌ருட‌த்துக்கு முத‌ல் உல‌க‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று பாட‌சாலையில் ப‌டித்த‌ கால‌த்தில்  டெனிஸ் வாத்தியார் எங்க‌ளுக்கு சொல்லி த‌ந்த‌வ‌ர்................. நானோ புல‌வ‌ர் அண்ணாவோ இந்தியா மீது இருக்கும் கோவ‌த்தில் எழுத‌ வில்லை கேடு கெட்ட‌ ஆட்சியால‌ர்க‌ளால் இந்தியா என்ற‌ நாடு நாச‌மாய் போச்சு அத‌க்கு முத‌ல் கார‌ண‌ம் இந்திய‌ அள‌வில் ஊழ‌ல்...............ஊழ‌ல் இருக்கும் நாடு சிறு முன்னேற்ற‌த்தை கூட‌ காணாது................. ஒரு சில‌ சிற‌ப்பு முகாமில் வ‌சிக்கும் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு க‌ழிவ‌ரை இல்லை அதுக‌ள் காட்டுக்கு போக‌ வேண்டிய‌ நிலை.............இது தான் திராவிட‌ம் ஈழ‌ ம‌க்க‌ளை  க‌வ‌ணிக்கும் ல‌ச்ச‌ன‌ம்.................
    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.