Jump to content

இடைவெளியில்லாத 14.30 மணிநேரம்... வெளியேறாத மக்கள் கூட்டம்... இது மே 17 ஸ்டைல்!


Recommended Posts

இடைவெளியில்லாத 14.30 மணிநேரம்... வெளியேறாத மக்கள் கூட்டம்... இது மே 17 ஸ்டைல்!

 
 

மே 17

 

''இலங்கை இனப்பிரச்னை குறித்தான விவாதம் வருகிற மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் நடைபெறவிருக்கிறது. இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடைபெற்ற இறுதிக்கட்ட போரில், லட்சக்கணக்கிலான ஈழத் தமிழர்களை ராணுவம் கொன்றொழித்தது. இந்த இன அழிப்பு குறித்தான விவாதங்களை ஐ.நா மனித உரிமை ஆணையம் நடத்தி வருகிறது. ஆனால், இலங்கையில் இனஅழிப்பு நடத்தப்பட்டதையும், தமிழர்களுக்கான உரிமை பறிக்கப்பட்டு வருவதையும் ஐ.நா மனித உரிமை ஆணையம் இன்றுவரை ஏற்க மறுக்கிறது. அங்கு நடந்தது போர்க்குற்றம்கூட அல்ல என்று உலகநாடுகளை இந்தியா, அமெரிக்கா, சீனா, இலங்கை ஆகிய நாடுகள் நம்பவைத்து வருகின்றன. வருகிற மார்ச் மாதம் நடைபெறவிருக்கிற ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் இதுகுறித்த விவாதங்களை எழுப்பப் போகிறோம்'' என்கிறது மே-17 இயக்கம். இந்த விஷயத்தில் உலக தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும். இலங்கையில் தமிழீழம் மலர வேண்டும் என்றால், அது அனைத்துத் தமிழர்களும் சாதி, மதம் கடந்து ஒன்றிணைந்து குரல்கொடுத்தால் மட்டுமே சாத்தியம். இதற்காக தமிழர்களை ஒன்றிணைக்கும் முன்னோட்டமாக தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாடு சென்னைச் சேப்பாக்கத்தில் உள்ள அண்ணா அரங்கத்தில் நடைபெற்றது. 18-02-2018 அன்று 'வெல்லும் தமிழீழம்' என்ற பெயரில் இந்த மாநாட்டை பிரமாண்டமாக நடத்தியது மே17 இயக்கம்.

 

வெல்லும் தமிழீழம்

நான்கு கட்ட அமர்வுகளாக மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டை மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி தொடங்கி வைத்தார். தமிழீழம் அமைய வேண்டி உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி மாநாடு தொடங்கப்பட்டது. ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன், கவிஞர் காசி ஆனந்தன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் தெஹலான் பாகவி, மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி, இயக்குநர் அமீர், தமிழக மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் பொழிலன், மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர்களும், சட்டப் பேராசிரியர்களுமான யொரெம்பே முடும் மற்றும் மாலேம் மங்கள் ஆகியோர் கலந்துகொண்டு தமிழீழ விடுதலைப் பற்றி உரையாற்றினார்கள்.

வெல்லும் தமிழீழம் மாநாடு

'தமிழீழம் பற்றிய கனவு ஒரு போதும் ஓயாது' என்பதை அப்பட்டமாகக் காட்டியது இந்த மாநாடு. காலை 9 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட மாநாடு இரவு 9 மணிக்கு அதாவது 12 மணிநேரத்தில் முடிக்கப்பட வேண்டும். ஆனால், மாநாடு முடிய இரவு 11.30 மணியைத் தாண்டியது. சரியாகச் சொன்னால், 14.30 மணி நேரத்துக்கும் மேலாக இந்த மாநாடு நடைபெற்றது. அரசியல் கட்சிகள் நடத்தும் மாநாடுகளைவிட அதிகமாக, மக்கள் கூட்டம் அலைமோதியது. உண்மையைச் சொன்னால் மாநாடு நடந்த அந்த 14.30 மணி நேரமும் அரங்கத்தினுள் அமர இருக்கைகள் போதவில்லை. அதனால் அரங்கத்துக்கு உள்ளேயும், வெளியேயும் எண்ணற்றவர்கள் நின்றுகொண்டே மாநாட்டு உரைகளைக் கேட்டுக்கொண்டிருந்தனர். தற்போதைய காலகட்டத்தில் இப்படி ஒரு பிரமாண்டமான மாநாட்டை அரசியல் கட்சிகள்கூட நடத்தமுடியாது என்பதுதான் உண்மை.

வெல்லும் தமிழீழம்

தெற்காசியப் பிராந்தியத்தில், இந்தியாவின் விரிவாதிக்கக் கொள்கையும், தமிழீழ விடுதலையின் முக்கியத்துவமும். முற்போக்கு ஜனநாயக அரசியலை வென்றெடுத்த தமிழீழ அரசியல் சாசனம். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் சமூகநீதியும், தமிழ்நாட்டின் எதிர்வினையும். தமிழீழ விடுதலைக்கான அரசியல் நகர்வுகளும், நம்  உடனடி கடமைகளும் என்பது போன்ற தலைப்புகளில் கருத்துகள் ஆலோசிக்கப்பட்டன. சமூக வலைதளங்களில் போராடுவதை விடுத்து உரிமையைக் காக்க வீதிக்கு வாருங்கள் என்று திருமுருகன் காந்தி மக்களுக்குக் கோரிக்கை விடுத்தார்.

காசி ஆனந்தன்

மாநாட்டில் பேசிய கவிஞர் காசி ஆனந்தன், "தமிழீழத்தை மீட்டெடுக்க வேண்டுமானால், உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் அமைப்புகள் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். ஜாதி, மதம் என்பதை மறந்து நாம் அனைவரும் ஒரே இனம் என்ற எண்ணத்தில் போராடினால் மட்டுமே தமிழீழம் சாத்தியமாகும்" என்றார்.

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் பேசியபோது, "ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்று ஏற்க மறுப்பவர்களும், புலிகளுக்கு ஆதரவு அளிக்காதவர்களும் இந்த தமிழ் மண்ணில் நிலைத்து நிற்க முடியாது. எம்மினம் அழிந்தபோதும், எம்மினத்தை பிற மாநிலக்காரர்கள் தாக்கியபோதும் வாய் திறக்காதவர்கள் எல்லாம் இன்று எம்மினத்தை ஆள நினைக்கிறார்கள். அவர்களுக்கு என்ன தைரியம் இருக்கிறது? தமிழ் மாநில பிரச்னைகளுக்கு வாய் திறக்காதவனெல்லாம் இங்கு சூப்பர் ஸ்டார். வெட்கப்பட்டுக்கொள் தமிழினமே" என்றார்.

வேல்முருகன்

மாநாட்டில் பேசிய திருமுருகன் காந்தி " 'வெல்லும் தமிழீழம்' என்ற இந்த முழக்கத்தைச் சொல்லும்போது இந்திய அரசு அஞ்சுமேயானால், மீண்டும் மீண்டும் சொல்வோம் 'வெல்லும் தமிழீழம்' என்று. இன்னும் எத்தனை காலத்துக்குதான் இனப்படுகொலை நடந்துவிட்டது எனப் பேசப்போகிறோம். வெறும் சமூக வலைதளங்களில் படங்களைப் பகிர்வதோடு நம்முடைய கடமை நின்றுவிடக் கூடாது. அடுத்து என்ன செய்தால் தமிழீழம் மலரும் என்று சிந்தித்து அடுத்தகட்டத்துக்குச் செல்லவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். எப்படி காஷ்மீர் பிரச்னை இந்தியாவின் விவாதப் பொருளாக மாறியதோ? அதுபோல தமிழீழமும் இந்தியாவின் விவாதப்பொருளாக மாற வேண்டும். அதற்கான முயற்சியை நாம்தான் எடுக்க வேண்டும். இந்தியாவிலுள்ள தேசிய இனத் தலைவர்கள், பல தேசிய இனமக்கள், இந்திய ஊடகம் என அனைத்துத் தரப்பினரும் தமிழீழத்தை விவாதப் பொருளாக எடுக்க வேண்டும். அப்போதுதான் இந்திய மக்களுக்கு இலங்கையில் நடந்த இனப்படுகொலை தெரியும். இந்தியா என்ற ஒரு நாடு இனத்துக்குச் செய்த மிகப்பெரிய துரோகத்தை இந்திய மக்கள் மட்டுமல்ல... தெற்காசிய நாடுகளில் உள்ள அனைத்து மக்களும் தெரிந்துகொள்ள வேண்டும். கடந்த 9 வருடங்களாக தமிழர்கள் குற்ற உணர்ச்சியில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்தியா முழுவதும் தமிழீழத்தை விவாதப்பொருளாக மாற்ற முடியவில்லை. இது நடக்க வேண்டும். அப்போதுதான் இந்தியாவுக்கு எதிராக தமிழினத்துக்கு ஆதரவாகப் பல தேசிய இனங்கள், பல நாடுகள் ஒன்று சேரும். சேனல்- 4 எடுத்த ஆவணப்படத்தைத் தவிர நம்மிடம் என்ன ஆவணம் இருக்கிறது? நம்மிடம் திறமையான கலைஞர்கள் இல்லையா? ஆஸ்கர் வாங்கும் அளவுக்குத் திரைத்துறையில் சாதித்து இருக்கிறோம். ஆனால், நம்மினம் பற்றிய ஒரு ஆவணப்படம் இல்லை. வரலாற்றைத் தெரிந்துகொண்டும் நாம் அதனை ஆவணப்படுத்தவில்லை என்றால், எவனோ ஒருவன் அவன் விருப்பத்துக்குத் தமிழினத்துக்கு தலையங்கம் எழுதிவிடுவான். தமிழகமே எழுச்சி கொள். இல்லையென்றால் இன்று தமிழீழத்துக்கு நடந்தது, நாளை தமிழ் நாட்டுக்கும் நடக்கும்!" என்று முழங்கினார்.

திருமுருகன் காந்தி

பின்னர் பேசிய பழ.நெடுமாறன் "புலிகள் இருந்தவரை இந்துமாக் கடலை எந்த நாட்டாலும் கைப்பற்ற முடியவில்லை. இன்று நிலைமை அப்படியல்ல. இந்துமாக்கடல் சீனாவின் கட்டுக்குள் சென்றுவிட்டது. இந்தியாவில் டெல்லியில் இருக்கும் புத்திசாலிகளே தெரிந்துகொள்ளுங்கள். இந்தியா மிகப்பெரும் ஆபத்தில் இருக்கிறது. பாகிஸ்தான், நேபாளம், வங்காளம், இலங்கை போன்ற நாடுகள் ஏற்கெனவே சீனாவின் ஆதிக்கத்துக்குள் சென்றுவிட்டது. தற்போது இந்தியப் பெருங்கடலும் அவர்களின் ஆதிக்கத்துக்குள் செல்லவிருக்கிறது. இதுமட்டும் நடந்துவிட்டால் இந்தியாவுக்கு மட்டுமல்ல... தெற்காசிய நாடுகளுக்கே மிகப்பெரிய அச்சுறுத்தல். இந்தக் கடல் நம்மிடம் இருக்கும் வரைக்குமே இந்தியாவுக்குப் பாதுகாப்பு. அதற்கு தமிழீழம் அமைய வேண்டும். அப்போதுதான் அது சாத்தியம்." என்றார்.

 

மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டது போல தமிழீழம் அமையவேண்டுமானால், அதுபற்றிய விவாதம் இந்தியா முழுவதும் நடத்தப்பட வேண்டும். தமிழீழம் அமைவதென்பது இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்கு மட்டும் நன்மை பயக்காது; ஒட்டுமொத்த இந்தியாவின் நன்மைக்கே அது வழி வகுக்கும் என்பதுதான் நிதர்சனமான உண்மையும் கூட!

https://www.vikatan.com/news/tamilnadu/116903-highlights-of-vellum-thamizheezham-by-may-17-movement.html

Link to comment
Share on other sites

புலிகள் இருந்­த­வரை இது நடக்க வில்லையாம்.!

 

 புலிகள் இருந்­த­வரை இந்­துமாக் கடலை எந்த நாட்­டாலும் கைப்­பற்ற முடி­ய­வில்லை. இன்று நிலைமை அப்­ப­டி­யல்ல. இந்­து­மாக்­கடல் சீனாவின் கட்­டுக்குள் சென்­று ­விட்­டது என்று தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். தமி­ழீழ விடு­த­லைக்­கான எழுச்சி மாநாடு சென்னை சேப்­பாக்­கத்தில் உள்ள அண்ணா அரங்­கத்தில் நேற்று முன்தினம் நடை­பெற்­றது. மாநாட்டை மே17 இயக்கம் நடத்­தி­யது.

நான்கு கட்ட அமர்­வு­க­ளாக மாநாடு நடை­பெற்­றது. இம் ­மா­நாட்டை மலே­சி­யாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராம­சாமி தொடங்கி வைத்தார். இங்கு உரையாற்றுகையிலேயே நெடுமாறன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ம.தி.மு.க பொதுச்­செ­ய­லாளர் வைகோ, கவிஞர் காசி ஆனந்தன், தமி­ழக வாழ்­வு­ரிமை கட்சித் தலைவர் வேல்­மு­ருகன், இந்­திய கம்­யூனிஸ்ட் கட்­சியின் தமிழ்­நாடு மாநில துணைச் செய­லாளர் வீர­பாண்­டியன், தமிழ்த் ­தே­சியப் பேரி­யக்கத் தலைவர் பெ.மணி­ய­ரசன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவா­ஹி­ருல்லா, எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் தெஹலான் பாகவி, மனி­த­நேய ஜன­நா­யக கட்சித் தலைவர் தமிமுன் அன்­சாரி, இயக்­குநர் அமீர், தமி­ழக மக்கள் முன்­ன­ணியின் ஒருங்­கி­ணைப்­பாளர் பொழிலன், மணிப்பூர் மாநி­லத்தைச் சேர்ந்த சமூக செயற்­பாட்­டா­ளர்­களும், சட்டப் பேரா­சி­ரி­யர்­க­ளு­மான யொரெம்பே முடும் மற்றும் மாலேம் மங்கள் ஆகியோர் கலந்­து­கொண்டு தமி­ழீழ விடு­தலை பற்றி உரை­யாற்­றி­னார்கள்.

மாநாட்டில் பேசிய கவிஞர் காசி ஆனந்தன், "தமி­ழீ­ழத்தை மீட்­டெ­டுக்க வேண்­டு­மானால், உலகம் முழு­வதும் இருக்கும் தமிழ் அமைப்­புகள் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். சாதி, மதம் என்­பதை மறந்து நாம் அனை­வரும் ஒரே இனம் என்ற எண்­ணத்தில் போரா­டினால் மட்­டுமே தமி­ழீழம் சாத்­தி­ய­மாகும்" என்றார்.

தமி­ழக வாழ்­வு­ரிமை கட்சித் தலைவர் வேல்­மு­ருகன் பேசி­ய­போது, "ஈழத்தில் நடந்­தது இனப்­ப­டு­கொலை என்று ஏற்க மறுப்­ப­வர்­களும், புலி­க­ளுக்கு ஆத­ரவு அளிக்­கா­த­வர்­களும் இந்த தமிழ் மண்ணில் நிலைத்து நிற்க முடி­யாது. எம்­மினம் அழிந்­த­போதும், எம்­மி­னத்தை பிற மாநிலக்­கா­ரர்கள் தாக்­

கி­ய­ போதும் வாய் திறக்­கா­த­வர்கள் எல்லாம் இன்று எம்­மி­னத்தை ஆள நினைக்­கி­றார்கள். அவர்­க­ளுக்கு என்ன தைரியம் இருக்­கி­றது? வெட்­கப்­பட்­டு கொள் தமி­ழி­னமே" என்றார்.

மாநாட்­டில்­ தி­ரு­மு­ருகன் காந்தி பேசி­ய­தா­வது" 'வெல்லும் தமி­ழீழம்' என்ற இந்த முழக்­கத்தைச் சொல்­லும் ­போது இந்­திய அரசு அஞ்­சு­மே­யானால், மீண்டும் மீண்டும் சொல்வோம் 'வெல்லும் தமி­ழீழம்' என்று. இன்னும் எத்­தனை காலத்­துக்­குதான் இனப்­ப­டு­கொலை நடந்­து­ விட்­டது என பேசப்­போ­கிறோம். வெறும் சமூக வலை­ த­ளங்­களில் படங்­களை பகிர்­வ­தோடு நம்­மு­டைய கடமை நின்­று­விடக் கூடாது. அடுத்து என்ன செய்தால் தமி­ழீழம் மலரும் என்று சிந்­தித்து அடுத்­த­ கட்­டத்­துக்கு செல்­ல­வேண்­டிய கட்­டா­யத்தில் நாம் இருக்­கிறோம். எப்­படி காஷ்மீர் பிரச்­சினை இந்­தி­யாவின் விவாதப் பொரு­ளாக மாறி­யதோ? அது­போல் தமி­ழீ­ழமும் இந்­தி­யாவின் விவா­தப் ­பொ­ரு­ளாக மாற வேண்டும். அதற்­கான முயற்­சியை நாம் தான் எடுக்க வேண்டும். இந்­தி­யா­வி­லுள்ள தேசிய இனத் தலை­வர்கள், பல தேசிய இன­மக்கள், இந்­திய ஊடகம் என அனை

த்துத் தரப்­பி­னரும் தமி­ழீ­ழத்தை விவாதப் பொரு­ளாக எடுக்க வேண்டும். அப்­போ­துதான் இந்­திய மக்­க­ளுக்கு இலங்­கையில் நடந்த இனப்­ப­டு­கொலை தெரியும். இந்­தியா என்ற ஒரு நாடு இனத்­துக்கு செய்த மிகப்­பெ­ரிய துரோ­கத்தை இந்­திய மக்கள் மட்­டு­மல்ல... தெற்­கா­சிய நாடு­களில் உள்ள அனைத்து மக்­களும் தெரிந்­து­ கொள்ள வேண்டும். கடந்த 9 வரு­டங்­க­ளாக தமி­ழர்கள் குற்ற உணர்ச்­சியில் வாழ்ந்­து­ கொண்­டி­ருக்­கிறோம். இந்­தியா முழு­ வதும் தமி­ழீ­ழத்தை விவா­தப் ­பொ­ரு­ளாக மாற்ற முடி­ய­வில்லை. இது நடக்க வேண்டும். அப்­போ­துதான் இந்­தி­யா­வுக்கு எதி­ராக தமி­ழி­னத்­துக்கு ஆத­ர­வாக பல தேசிய இனங்கள், பல நாடுகள் ஒன்று சேரும். செனல்- 4 எடுத்த ஆவ­ணப்­ப­டத்தை தவிர நம்­மிடம் என்ன ஆவணம் இருக்­கி­றது? நம்­மிடம் திற­மை­யான கலை­ஞர்கள் இல்­லையா? லுஸ்கர் வாங்கும் அள­வுக்கு திரைத்­து­றையில் சாதித்து இருக்­கிறோம். ஆனால், நம்­மினம் பற்­றிய ஒரு ஆவ­ணப்­படம் இல்லை. வர­லாற்றைத் தெரிந்­து­கொண்டும் நாம் அதனை ஆவ­ணப்­ப­டுத்­த­வில்லை என்றால், எவனோ ஒருவன் அவன் விருப்­பத்­துக்குத் தமி­ழி­னத்­துக்கு தலை­யங்கம் எழு­தி­ வி­டுவான். தமி­ழ­கமே எழுச்சி கொள். இல்­லை­யென்றால் இன்று தமி­ழீ­ழத்­துக்கு நடந்­தது, நாளை தமிழ் நாட்­டுக்கும் நடக்கும்!" என்று முழங்­கினார்.

பின்னர் பேசிய பழ.நெடு­மாறன் "புலிகள் இருந்­த­வரை இந்­துமாக் கடலை எந்த நாட்­டாலும் கைப்­பற்ற முடி­ய­வில்லை. இன்று நிலைமை அப்­ப­டி­யல்ல. இந்­து­மாக்­கடல் சீனாவின் கட்­டுக்குள் சென்­று­விட்­டது. இந்­தி­யாவில் டில்­லியில் இருக்கும் புத்­தி­சா­லி­களே தெரிந்­து­ கொள்­ளுங்கள். இந்­தியா மிகப்­பெரும் ஆபத்தில் இருக்­கி­றது. பாகிஸ்தான், நேபாளம், வங்­காளம், இலங்கை போன்ற நாடுகள் ஏற்­க­னவே சீனாவின் ஆதிக்­கத்­துக்குள் சென்­று­விட்­டது. தற்­போது இந்திய பெருங்கடலும் அவர்களின் ஆதிக்கத்துக்குள் செல்லவிருக்கிறது. இதுமட்டும் நடந்து விட்டால் இந்தியாவுக்கு மட்டுமல்ல... தெற்காசிய நாடுகளுக்கே மிகப்பெரிய அச்சுறு

த்தல். இந்தக் கடல் நம்மிடம் இருக்கும் வரைக்குமே இந்தியாவுக்குப் பாதுகாப்பு. அதற்கு தமிழீழம் அமைய வேண்டும். அப்போதுதான் அது சாத்தியம்." என்றார்.

http://www.virakesari.lk/article/30850

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.