Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இரவின் ஸ்பரிசம்.

இரவுக்கு  உருவம் கிடையாது 

பகலுக்கு வட்டமான வடிவம் உண்டு 

தினமும் பகல் இரவை உரசி செல்லும் 

இரவு மீண்டும் வளர்ந்து நிக்கும் 

 

ஆனந்தமாய் அலைகள் பொங்குவது இரவில் 

அபரிதமாய் ஆசைகள் ஆர்ப்பரிப்பதும் இரவில் 

ஈசல்கள் தீயை அணைப்பதும் இரவில் 

இயற்கையம் இயல்பாய் உறங்குவதும் இரவில் 

 

மல்லிகை தூது விடுவதும் 

மலர் மணம் நாசி நுகர்வதும் 

அழகுமயில் அலங்கரித்து வந்து 

உண்ட தாம்பூலம் உண்ண தருவதும் 

 

சிறு நண்டு வளை விட்டு எழும்ப 

கிளையமர்ந்த ஆந்தை கிள்ளியே பறக்க 

ஓநாய்கள் கவிபாடும் காட்டில் 

குறு முயல்கள் குழிக்குள் குறட்டை விடும் 

 

விரலோடு விரல் பிணைந்திருக்க 

இதழோடு இதழ் சுவைத்திருக்கும் 

விழி நான்கும் இமை மூடியிருக்க 

இடையின் ஸ்பரிசம் இடையில் அடங்கும் 

 

உழைப்பின் வலிகள் பகலுக்கு 

உடலின் ஒய்வு இரவுக்கு 

வானத்தில் நிலவு ஒளிர்ந்தாலும் 

வீட்டுக்குள் விளக்கணைய விலகாதிரவு.....!

 

ஆக்கம் சுவி......!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இரவின்  உணர்வுகள் எல்லோரையும்  கவர்ந்து கொள்ளும் .  எல்லோருக்கும்  தேவையானது  இரவு . கவிதைக்குபாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல இடங்களில் சமூகம் , தாயகம் என்று நீங்கள் வைத்த காத்திரமான கருத்துக்களை பார்த்திருக்கிறேன்...

ஒரு மழை நாளில் எம்ஜிஆர் - சரோஜாதேவி எப்படி யாழ்ப்பாணத்திற்கு வந்தார்கள்  என்று நீங்கள் எழுதியதையும் வாசிச்சு இருக்கிறேன்

உங்களுக்குரிய  படைப்பு இதுவல்ல..

இந்த கவிதை பாராட்டுக்குரியதுதான்,, முடிந்தால்..  கடந்த காலம் நிகழ்காலம் சேர்ந்ததை, பார்த்ததை இணைத்து ஒரு காரசாரமான, சமூகம் போராட்டம் சார்ந்த ஒரு கதையை பதிவிடுங்கள் சுவி அண்ணா.. வாசிக்க காத்திருப்போம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவியின் கவிச்சுவை இக் கவிதையை மெருகூட்டவில்லை. இருந்தும் இரவின் ஸ்பரிசத்தை அழகாக எடுத்துக் கூறியுள்ளீர்கள். உங்கள் படைப்புக்களைத் தொடருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரவின் இருளுக்குள்தான் எல்லாமே பிறக்கின்றன. கவிதை நன்று

2 hours ago, valavan said:

பல இடங்களில் சமூகம் , தாயகம் என்று நீங்கள் வைத்த காத்திரமான கருத்துக்களை பார்த்திருக்கிறேன்...

ஒரு மழை நாளில் எம்ஜிஆர் - சரோஜாதேவி எப்படி யாழ்ப்பாணத்திற்கு வந்தார்கள்  என்று நீங்கள் எழுதியதையும் வாசிச்சு இருக்கிறேன்

உங்களுக்குரிய  படைப்பு இதுவல்ல..

இந்த கவிதை பாராட்டுக்குரியதுதான்,, முடிந்தால்..  கடந்த காலம் நிகழ்காலம் சேர்ந்ததை, பார்த்ததை இணைத்து ஒரு காரசாரமான, சமூகம் போராட்டம் சார்ந்த ஒரு கதையை பதிவிடுங்கள் சுவி அண்ணா.. வாசிக்க காத்திருப்போம்!

சுவியர் போன வருடம் எழுதிய துருச்சாமியைப் படிக்கவில்லையா!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படிக்கவில்லை  கிருபன், இனி படிக்கிறேன், பகிர்வுக்கு நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போர்வையில்லாத....,

நிர்வாணங்களின் அழகுகள்,

பொய்களில்லாத மனங்களின் சங்கமங்கள்,

எல்லாமே இரவில் தான்!

 

விரல்களின்  உரசல்கள்,

முனகல்கள்...,

எல்லாமே மொழியாகி....,

ஒன்றை..இன்னொன்று..,

ஆத்மார்த்தமாக...

புரிந்து கொள்ளும் பொழுது...,

இரவு..!

 

இரவின்றிப்...பகலில்லை!

எனினும்...,

பகலின்றியும்..,

இரவு வாழும்!

 

வாழட்டும் ...  மிக நீண்ட இரவுகள்!

 

நன்றி....சுவியர்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Suvy.

“இரவுக்கு ஆயிரம் கண்கள்  பகலுக்கு ஒன்றே ஒன்று”

வெளவால். பற்றியும் கவிதையில் வருமென்று பார்த்தேன். தலைகீழ் பாடல் எதற்கென்று விட்டு விட்டீர்களா?

கவிதை அருமை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை அருமைதான் அண்ணா. ஆனாலும் நாங்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது அதுக்கும் மேலே மேலே.  பஞ்சிப்படாமல் ஒரு கதையை எழுதத் தொடங்குங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/19/2018 at 11:54 AM, suvy said:

விரலோடு விரல் பிணைந்திருக்க 

இதழோடு இதழ் சுவைத்திருக்கும் 

விழி நான்கும் இமை மூடியிருக்க 

இடையின் ஸ்பரிசம் இடையில் அடங்கும் 

இந்த ஸ்பரிசம் ரொம்ப பிடித்திருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/19/2018 at 11:54 AM, suvy said:

இரவின் ஸ்பரிசம்.

இரவுக்கு  உருவம் கிடையாது 

பகலுக்கு வட்டமான வடிவம் உண்டு 

தினமும் பகல் இரவை உரசி செல்லும் 

இரவு மீண்டும் வளர்ந்து நிக்கும் 

 

ஆனந்தமாய் அலைகள் பொங்குவது இரவில் 

அபரிதமாய் ஆசைகள் ஆர்ப்பரிப்பதும் இரவில் 

ஈசல்கள் தீயை அணைப்பதும் இரவில் 

இயற்கையம் இயல்பாய் உறங்குவதும் இரவில் 

 

மல்லிகை தூது விடுவதும் 

மலர் மணம் நாசி நுகர்வதும் 

அழகுமயில் அலங்கரித்து வந்து 

உண்ட தாம்பூலம் உண்ண தருவதும் 

 

சிறு நண்டு வளை விட்டு எழும்ப 

கிளையமர்ந்த ஆந்தை கிள்ளியே பறக்க 

ஓநாய்கள் கவிபாடும் காட்டில் 

குறு முயல்கள் குழிக்குள் குறட்டை விடும் 

 

விரலோடு விரல் பிணைந்திருக்க 

இதழோடு இதழ் சுவைத்திருக்கும் 

விழி நான்கும் இமை மூடியிருக்க 

இடையின் ஸ்பரிசம் இடையில் அடங்கும் 

 

உழைப்பின் வலிகள் பகலுக்கு 

உடலின் ஒய்வு இரவுக்கு 

வானத்தில் நிலவு ஒளிர்ந்தாலும் 

வீட்டுக்குள் விளக்கணைய விலகாதிரவு.....!

 

ஆக்கம் சுவி......!

 

உடல் எடுக்கும் பனி நடுக்கம்

உதிரத்தில் அனல் வெப்பம்

கனிமொழிப்பேச்செல்லாம்

கட்டுண்டு போயிருக்கும்

விழி மூடி மௌனிக்கும்

விரலெல்லாம் பின்னிக்கும்

உணர்வுகளின் உறைவிடத்தில்

உரிமை பறிபோயிருக்கும்.

சுவியாரின் இரவின் ஸ்பரிசத்தை நான் குறும்புச்சிரிப்புடன் மொழி பெயர்த்திருக்கிறேன். எழுத  வந்தால் தயங்கக் கூடாது எழுதி முடித்துவிடவேண்டும். சுவியண்ணா நீங்கள் தயங்கி மயங்கி எழுதியதைப் பார்க்கும் போது எனக்குள் குறும்புத்தனம் முளைப்பதைத் தவிர்க்கமுடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, வல்வை சகாறா said:

உடல் எடுக்கும் பனி நடுக்கம்

உதிரத்தில் அனல் வெப்பம்

கனிமொழிப்பேச்செல்லாம்

கட்டுண்டு போயிருக்கும்

விழி மூடி மௌனிக்கும்

விரலெல்லாம் பின்னிக்கும்

உணர்வுகளின் உறைவிடத்தில்

உரிமை பறிபோயிருக்கும்.

சுவியாரின் இரவின் ஸ்பரிசத்தை நான் குறும்புச்சிரிப்புடன் மொழி பெயர்த்திருக்கிறேன். எழுத  வந்தால் தயங்கக் கூடாது எழுதி முடித்துவிடவேண்டும். சுவியண்ணா நீங்கள் தயங்கி மயங்கி எழுதியதைப் பார்க்கும் போது எனக்குள் குறும்புத்தனம் முளைப்பதைத் தவிர்க்கமுடியவில்லை.

சகோதரி மிகவும் அருமையாய் எழுதி இருக்கிறீர்கள். நிஜமாகவே சொல்கிறேன் இப்படித்தான் எழுதவேண்டும். ஒரு ஆசிரியை எனது எழுத்தை திருத்தியதுபோல் உணர்கிறேன்....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/20/2018 at 4:37 AM, valavan said:

 

ஒரு மழை நாளில் எம்ஜிஆர் - சரோஜாதேவி எப்படி யாழ்ப்பாணத்திற்கு வந்தார்கள்  என்று நீங்கள் எழுதியதையும் வாசிச்சு இருக்கிறேன்

 

இந்தப்பதிவினை எங்கே பார்க்கலாம்?.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 07/03/2018 at 1:23 AM, கந்தப்பு said:

இந்தப்பதிவினை எங்கே பார்க்கலாம்?.

நான் தேடித் பார்த்தேன் கிடைக்கவில்லை கந்தப்பு .....! வருகைக்கு  நன்றி கந்தப்பு......!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.