Jump to content

இந்தியா வந்த கனடா பிரதமர் அவமதிக்கப்பட்டாரா? கொந்தளிக்கும் விமர்சகர்கள்


Recommended Posts

இந்தியா வந்த கனடா பிரதமர் அவமதிக்கப்பட்டாரா? கொந்தளிக்கும் விமர்சகர்கள்

 

குடும்பத்துடன் இந்தியா வந்த கனடா பிரதமர் இந்தியப் பிரதமரால் வரவேற்கப்படாமல் விவசாயத்துறை அமைச்சர் ஒருவரால் வரவேற்கப்பட்டதற்கு பலத்த விமர்சனம் எழுந்துள்ளது.

அமெரிக்க அதிபர் ஒபாமா, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு மற்றும் UAE இளவரசர் ஆகியோர் இந்தியா வந்தபோது மட்டும் மணிக்கணக்கில் அவர்களுக்காக காத்திருந்த பிரதமர் கனடா பிரதமரை வரவேற்க மட்டும் ஏன் வரவில்லை என்னும் கேள்வி எழுந்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவுகளை மேம்படுத்தும் நோக்கில் பேச்சு வார்த்தைகளை மேற்கொள்வதற்காக கனடா பிரதமர் வந்துள்ள நிலையில் இந்தியப் பிரதமர் அவரை வரவேற்கச் செல்லாததற்கு வேறு சில முரண்பட்டக் கருத்துக்களும் தெரிவிக்கப்படுகின்றன.

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

இந்தியாவில் தனி நாடு கோரும் சீக்கிய பிரிவினைவாதிகள் பலருக்கு கனடா பிரதம் தனது அமைச்சரவையில் இடமளித்துள்ளார் என்பதும் அவர்கள் அனைவரும் தற்போது அவருடன் இந்தியா வந்துள்ளார்கள் என்பதும் இதுவே இந்தியப் பிரதமர் கனடா பிரதமரை வரவேற்கச் செல்லாததன் பின்னணியாக இருக்கலாம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகமும் பெரிய அளவில் இல்லை.

அதுமட்டுமின்றி 1.4 மில்லியன் இந்தியர்கள் கனடாவில் வசிக்கும் நிலையில் பொறுப்பேற்ற பிறகு இதுவரை கனடா பிரதமர் இந்தியாவிற்கு அரசு முறைப் பயணமாக வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

ஆனால் இதைப்பற்றியெல்லாம் பெரிதும் அலட்டிக்கொள்ளாத கனடா பிரதமர், இந்தியாவில் கால் பதித்ததும் இந்திய முறைப்படி அவரும் அவரது மொத்தக்குடும்பமும் வணக்கம் என கை குவித்து வணங்கியது அற்புதமான காட்சியாக இருந்தது.

அதுமட்டுமின்றி அவரது இளைய மகனான 3 வயது Hadrien, இந்தியப் பயணத்தை வெகுவாக ரசிக்கிறான். அவனுக்கு கொடுக்கப்பட்ட பெரிய பூங்கொத்து ஒன்றை அம்மாவிடம் கொடுக்காமல் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு அவன் நடக்க அவன் பெற்றோர் மெதுவாக அவன் பின்னே நடப்பது காண்போர் முகத்தில் புன்னகையை வரவழைத்தது.

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

இரு நாட்டுப் பிரதமர்களும் சிவில் அணு ஆயுத ஒத்துழைப்பு, விண்வெளி, பாதுகாப்பு, ஆற்றல் மற்றும் கல்வி தொடர்பான பேச்சு வார்த்தைகளை மேற்கொள்ள இருக்கின்றனர்.

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

 

http://news.lankasri.com/canada/03/172307?ref=tamilwin

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வந்தவன் வேறை ஒன்றும் நினைத்திருக்கமாட்டான்     பாம்பாட்டி கூட்டம் இன்னும் அறிவில் வளரவில்லை என்று நினைத்திருப்பான். 

(பொற்கோவில் சின்குகளின் கிட்டத்தட்ட நம்மடை யாழ் நூலகம் போன்றதை கிந்தி வல்லாதிக்கம் இந்திராவின் தலைமையில் எரித்தபின்னர் பழையதை விட மிக திறமாக சேமிப்பு கருவூலம் ஒன்றை கனடாவில் கட்டமைத்து உள்ளார்கள் பொற்கோவில் அடிபாட்டு சிங்குகள் அநேகர் கனடா புகலிடம் ) இங்கு  நாம் ஒவ்வொன்றாய் மறக்கடிக்கப்பட்டு கொண்டு உள்ளோம் உதாரணத்துக்கு 85ல் நடந்த கொக்கிளாய் சண்டை போன்ற விபரங்கள் வலை உலகில் இருந்து காணாமல் போயுள்ளன .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ragunathan said:

நன்றி ரகுநாதன் மேலும் தமிழில் கொக்கிளாய் நோக்கி என எழுதபட்ட புத்தகம் யாரிடமும் எடுக்கலாமா ?

85களில் அந்த தாக்குதல் பலரின்  கடுமையான  விமர்சனத்தை கொண்டு வந்தது. அந்த புத்தகம் வந்து பலரின் வாயை மூடியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தாக்குதலில் பங்குகொண்ட ஒருவர் இங்கே இருக்கிறார். அவரிடம் இத்தாக்குதல் பற்றி பேசியிருக்கிறேன். புலிகளின் இழப்பு என்று இங்கே கூறப்படும் 16 என்பது சரியானதுதான். தாக்குதலில் ஈடுபட்ட அணி கடுமையான சேதங்களுக்கு உள்ளானதாக அவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ராணுவ இழப்புகள் பற்றி அவர் அதிகம் அறிந்திருக்கவில்லை என்றே நினைக்கிறேன். 

நீங்கள் கூறிய கொக்கிளாய் நோக்கி என்கிற புத்தகம் பற்றிக் கேட்டுப் பார்க்கிறேன், சிலவேளை அவர் அறிந்திருக்கலாம்.

டர்ந்த காடுகளூடு நாட்கணக்கில் ஆயுதங்களையும், உணவுப் பொட்டலங்களையும் சுமந்துகொண்டு இரவு பகலாக தாம் முகாம் நோக்கிப் பயணித்ததுபற்றி அடிக்கடி உணர்வு பொங்கப் பேசுவார்.

நீங்கள் கேட்டதன்பிறகு அவரிடமிருந்து இன்னும் சில தகவலக்ளை பெற முடியுமா என்று பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவர்களை இந்தியாவுக்கு பிடிக்காதே, பிரதமர் Justin Trudeau , அரசியல் விவகாரங்களை கடந்து ஒரு மனிதனாக எவ்வளவு அற்புதமான, எளிமையான, நாகரிகமான மனிதன், மேற்கத்தையே நாகரிகத்தில் பிறந்தாலும் சிம்பிளான குடும்ப தலைவர்..

சொந்த குடிமக்களுக்கே கழிப்பறை கட்டி கொடுக்காமல், அந்த பணத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழும் அரசியல்வியாதிகள் வாழும் இந்தியா எனும்  நாட்டிலிருந்து ,  பல லட்சம் இந்தியர்களை தனது நாட்டுக்கு அழைத்து,கல்வி,வியாபாரம்,முதலீடு என்று வாழ்வும் வளமும் தரும் கனேடிய நாட்டின் உன்னத தலைவர் , அவரை அவமதிப்பது உங்களுக்கு மட்டுமே பெருமையாக இருக்கும்,

ஆனால் அவர்களுக்கு இது ஒரு பெரிய விஷயமாகவே தெரியாது, ஏனென்றால் வெள்ளைக்காரர்கள் ‘இவர்கள் இப்படித்தான்’ என்று அனைவரையும் புரிந்து வைத்திருப்பவர்கள்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொக்கிளாய் நோக்கி எனும் புத்தகம் அல்லது  PDF ஆக இருப்பது நல்லது .

Link to comment
Share on other sites

7 minutes ago, பெருமாள் said:

கொக்கிளாய் நோக்கி எனும் புத்தகம் அல்லது  PDF ஆக இருப்பது நல்லது .

கொக்கிளாய் நோக்கி என்பது சரியா பெருமாள். 

விடியலுக்கு முந்திய மரணங்கள் என்று நினைக்கின்றேன். https://www.scribd.com/document/368448133/விடிவிற-கு-முந-திய-மரணங-கள

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, மோகன் said:

கொக்கிளாய் நோக்கி என்பது சரியா பெருமாள். 

விடியலுக்கு முந்திய மரணங்கள் என்று நினைக்கின்றேன். https://www.scribd.com/document/368448133/விடிவிற-கு-முந-திய-மரணங-கள

நன்றி மோகன் பிழையான தலைப்பாக இருக்கலாம் நண்பர் ஒருவர் இடம் விசாரித்தபோது கொக்கிளாய் நோக்கி என்று வரணும் தேடிப்பார் என்று விட்டார் மீண்டும் நன்றி .

Link to comment
Share on other sites

தாஜ்மஹால் ட்ரிப்... சபர்மதி விசிட்... கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேவின் இந்திய டூர்! 

தாஜ்மஹால் ட்ரிப்... சபர்மதி விசிட்... கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேவின் இந்திய டூர்! - சிறப்பு புகைப்படத் தொகுப்பு

 

தாஜ்மஹால் ட்ரிப்... சபர்மதி விசிட்... கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேவின் இந்திய டூர்! - சிறப்பு புகைப்படத் தொகுப்பு

தாஜ்மஹால் ட்ரிப்... சபர்மதி விசிட்... கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேவின் இந்திய டூர்! - சிறப்பு புகைப்படத் தொகுப்பு

தாஜ்மஹால் ட்ரிப்... சபர்மதி விசிட்... கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேவின் இந்திய டூர்! - சிறப்பு புகைப்படத் தொகுப்பு

 

தாஜ்மஹால் ட்ரிப்... சபர்மதி விசிட்... கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேவின் இந்திய டூர்! - சிறப்பு புகைப்படத் தொகுப்பு

 

தாஜ்மஹால் ட்ரிப்... சபர்மதி விசிட்... கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேவின் இந்திய டூர்! - சிறப்பு புகைப்படத் தொகுப்பு

 

தாஜ்மஹால் ட்ரிப்... சபர்மதி விசிட்... கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேவின் இந்திய டூர்! - சிறப்பு புகைப்படத் தொகுப்பு

 

தாஜ்மஹால் ட்ரிப்... சபர்மதி விசிட்... கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேவின் இந்திய டூர்! - சிறப்பு புகைப்படத் தொகுப்பு

தாஜ்மஹால் ட்ரிப்... சபர்மதி விசிட்... கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேவின் இந்திய டூர்! - சிறப்பு புகைப்படத் தொகுப்பு

Link to comment
Share on other sites

இந்தியாவுக்கு வருகை புரிந்த கனடா பிரதமர் அவமதிக்கப்பட்டாரா?

 

கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வழக்கமாக மேற்கொள்ளும் வெளிநாட்டுச் சுற்றுப் பயணங்கள் மேற்கொள்ளும் நாடுகளில் எப்போதும் பெரும் வரவேற்பைப் பெறுவது மட்டுமல்லாமல் தலைப்புச் செய்திகளிலும் தவறாமல் இடம்பெறும். ஆனால், இந்தியாவுக்கான அவரது முதல் அதிகாரப்பூர்வ பயணம் அவ்வளவு ஒன்றும் உவப்பானதாக இல்லை.

ஜஸ்டின் ட்ரூடோபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஜஸ்டின் ட்ரூடோ

தாஜ் மஹால் உள்ளிட்ட பல இடங்களுக்கு அவரது குடும்பத்தினர் சென்றபோது இந்திய அரசின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் பலராலும் அவர் புறக்கணிப்புக்கு உள்ளானார்.

அவர் டெல்லி வந்து சேர்ந்தபோது கீழ்நிலையில் உள்ள அமைச்சரான வேளாண்மைத் துறை இணை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் வரவேற்றது அவரை அவமதிக்கும் செயலாகவே பார்க்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோதி பல தருணங்களில் இந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டுத் தலைவர்களை நேரில் சென்று வரவேற்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளார். தனது வெளிநாட்டு சகாக்களை அவர் கட்டியணைத்து வரவேற்கவும் செய்வார்.

மிகச் சமீபமாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அவர் நேரில் சென்று, விமான நிலையத்தில் கட்டியணைத்து வரவேற்றார்.

ஆனால், கனடப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா வந்து இரண்டு நாட்கள் ஆகியும் மோதி அவரை இன்னும் நேரில் சந்திக்கக் கூட இல்லை. திங்களன்று பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்துக்கு ட்ரூடோ சென்றபோது, அங்கும் பிரதமர் மோதி செல்லவில்லை.

பிரதமர் மட்டுமல்ல, ஞாயிறன்று ட்ரூடோ தாஜ் மஹால் சென்றபோது, அந்த உலகப் பாரம்பரிய சின்னம் அமைந்துள்ள உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதலமைச்சரும் அவரைச் சந்திக்கவில்லை.

Canadian Prime Minister Justin Trudeau Taj Mahal in Agra, India,படத்தின் காப்புரிமைEPA

ஒரு கீழ்நிலையுள்ள அமைச்சரை ட்ரூடோ மற்றும் அவரது குடும்பத்தினரை வரவேற்க அனுப்பிவைத்தது நிச்சயமாக அவரை அவமதிக்கும் செயல் என்று பிபிசியிடம் கூறினார் பொருளாதார வல்லுனரும், பத்தி எழுத்தாளருமான விவேக் தெஹேஜியா.

"இந்திய மாநிலமான பஞ்சாபை தனியாகப் பிரித்து காலிஸ்தான் எனும் தனி நாடு அமைக்கக் கோரும் காலிஸ்தான் இயக்கத்துடன் ட்ரூடோவின் அரசில் அங்கம் வகிப்பவர்கள் தொடர்புடன் இருப்பதே காரணம்,"என்று அவர் கூறுகிறார்.

கனடாவில் வாழும் சீக்கியர்கள் ட்ரூடோவின் தாராளவாதக் கட்சிக்கு பெரும் வாக்கு வங்கியாக உள்ளனர். சில அமைச்சர்கள் காலிஸ்தான் பிரிவினைவாதிகளிடம் நெருக்கமானவர்களாக உள்ளனர்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை வரவேற்ற நரேந்திர மோதிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை வரவேற்ற நரேந்திர மோதி

கடந்த 1985இல் 329 பேர் கொல்லப்பட்ட கனடாவில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான குண்டு வெடிப்பில் சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக கனட அதிகாரிகள் கருதுகின்றனர். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட இரு சீக்கியர்கள் போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டனர்.

'காலிஸ்தான் ஆதரவாளர்' என்று காரணம் கூறி, ஏப்ரில் 2016இல் இந்தியா வந்த கனடப் பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜ்ஜன்-ஐ பஞ்சாப் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் சந்திக்க மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Canadian Prime Minister Justin Trudeauபடத்தின் காப்புரிமைREUTERS

கனடப் பிரதமர் இந்தியா வந்தபோது அவமானப்படுத்தப்படவில்லை என்றும் விதிமுறைகள் பின்பற்றப்பட்டன என்றும் கனடாவுக்கான முன்னாள் இந்தியத் தூதர் விஷ்ணு பிரகாஷ் கூறியுள்ளார்.

"மத்திய அமைச்சரவையின் ஒரு உறுப்பினர் அவரை வரவேற்க வேண்டும் எனும் விதிமுறை பின்பற்றப்பட்டுள்ளது. சில வெளிநாட்டு தலைவர்களை மோதி நேரில் சென்று வரவேற்றார் என்பதற்காக எல்லோரையும் அவ்வாறே வரவேற்க முடியாது," என்கிறார் அவர்.

"காலிஸ்தான் குறித்த இந்தியாவின் கவலைகளை கனடாவின் உயர் மட்டத்தில் இருப்பவர்களிடம் எழுப்பாமல், ட்ரூடோவின் வருகையை, காலிஸ்தான் குறித்த கனடாவின் நிலைப்பாடு குறித்து முன்முடிவுடன் அணுகக்கூடாது," என்று பிபிசியிடம் தெரிவித்தார் முன்னாள் வெளியுறவு அதிகாரி கன்வல் சிபல்.

"உள்நாட்டு அரசியல் காரணங்களால் காலிஸ்தான் பிரிவினைக்கு இந்தியா ஆதரவளிக்கவில்லை. எனினும், ட்ரூடோவின் இந்தப் பயணத்தை கனடா செயல்படுவதற்கான உத்தரவாதம் பெறுவதற்கு பயன்படுத்திக்கொள்ள முடியும்," என்றார் அவர்.

Canada's Defence Minister Harjit Singh Sajjan (படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES Image captionகடந்த ஆண்டு இந்தியா வந்திருந்தார் கனடாவின் பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜ்ஜன்

ஜஸ்டின் ட்ரூடோ அவமானப்படுத்தப்படவில்லை என்று கருதும் சிபல் சமீபத்தில் இரு நாட்டு உறவுகளும் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாகக் கூறுகிறார்.

இந்தியாவுக்கு அணுமின் உற்பத்திக்காக யுரேனியம் அளிக்க 2015இல் கனடா உடன்படிக்கை செய்துகொண்டது இருநாட்டு உறவுகளில் முக்கியத்துவம்வாய்ந்த முன்னேற்றமாகக் கருதப்பட்டது.

கீழ்நிலை அமைச்சர் ஒருவர் வரவேற்க அனுப்பட்டது பெரிதுபடுத்தப்படுவதாகக் கூறும் சிபல், "ஒரு அரசுமுறைப் பயணத்தை சீரழிக்க யாரும் விரும்ப மாட்டார்கள். இருநாட்டு நலன் கருதி அதை வெற்றியடையச் செய்யவே விரும்புவார்கள்," என்கிறார்.

http://www.bbc.com/tamil/india-43114273

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக நாடுகளில் உள்ள தலைவர்களில் எனக்கு கனடிய பிரமரை மட்டும் ஏன் பிடிக்கிறது என்று மட்டும்  தெரியவில்லை ஒரு வேளை ஈழ த்தமிழ் மக்களை அள்ளி அணைத்துக்கொண்டவர் என்ற ரீதியிலா அல்லது அவரின் சிறந்த ஆளுமையையா என தெரியவில்லை 

வாழ்த்துக்கள் பிரதமர் இந்தியாவை விட உங்கள் குடும்பம் அழகாக இருக்கிறது :100_pray:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நவீனன் நீங்கள் முதல் இணைத்த செய்திகளின் பின் ஒரு சில கருத்தாடல்கள் நடைபெற்றன அதன் பின் கருத்துக்கள் வளரும் நேரம் மேல் இணைத்த அதே செய்திகளை கீழே இணைத்து கருத்துக்களை நீர்த்து போக செய்கிறிர்கள் யாழின் அநேக திரிகள் இப்படி உங்களால் மலுங்கடிக்கபடுது என்பதாவது உங்களுக்கு புரியுதா ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2017 இல் கனடாவின் ஒன்டாரியோ மாநிலத்தில் 1984 ஆம் ஆண்டு இந்திய மத்திய அரசினால் திட்டமிடப்பட்ட வகையில் சீக்கிய இனத்தவர் மீது நடத்தப்பட்டது இனப்படுகொலையே என்று தீர்மானம் பெரும்பான்மையான வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. 

இம்மானிலத்தில் ஆட்சியில் இருப்பது தற்போதைய பிரதமரின் கட்சியென்பதும், பிரதமர் சுதந்திர காலிஸ்த்தான் விரும்புவோரின்மேல் பரிவான கருத்தைக் கொண்டுள்ளார் என்பதும் பல இந்திய தேசியவாதிகளுக்கு கடுப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த அடிப்படையிலேயே தற்ப்பொது பிரதமரின் இந்திய விஜயமும் பார்க்கப்பட வேண்டும். 

தொடர்ச்சியான இந்திய அரசுகளின் திட்டமிட்ட அழுத்தங்களினாலும், ஆக்கிரமிப்புப் போக்கினாலும் பஞ்சாப்பில் நீர்த்துப் போகச் செய்யப்பட்டிருக்கும் சுதந்திர காலிஸ்த்தான் வேட்கையை கனடாவில் துளிர்விட வைக்கும் முயற்சியை பிரதமரும் அவரது கட்சியும் ஆதரிக்கின்றனர் என்பதே போலித்தேசியவாத ஹிந்தி வெறியர்களின் கோபத்திற்குக் காரணமாகியிருக்கிறது.

தியுடோர் போன்ற நியாயமான பிரதமர்களின் இருப்பென்பது பாதிக்கப்பட்ட பல தேசிய இங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைவது இந்திய மற்றும் இலங்கைபோன்ற பேரினவாத ஏகாதிபத்தியங்களுக்குச் சவாலாகவே இருக்கப்போகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2020 இல் சுதந்திரக் காலிஸ்த்தான் வேணும் என்ப்கிற சர்வஜ வாக்கெடுப்பினை கனடாவில் நடத்துவதற்கு அங்குள்ள சுதந்திரக் காலிஸ்த்தானை விரும்புவோர் முற்பட்டு வருகையில், அதை எப்படியாவது தடுத்து நிறுத்த இந்திய அரசு முயன்று வருகிறது.

உள் நாட்டில் சீக்கியர்களின் குரலினை நசுக்கி வெற்றி கண்ட இந்திய அரசுகள், கனடாவிலிருந்து சுதந்திர தாகம் ஒலிப்பதைத் தடுக்க முடியாமல் இருப்பது வேடிக்கை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே அதே மாநிலத்தில் யாழ் பெரியாஸ்பத்திரி படுகொலைகள் பிரம்படி போன்ற படுகொலைகளை கிந்திய இன அழிப்பு என்று  வழக்கு தொடரனும் பலன்கள் பெரிதாக இல்லாவிட்டாலும் எதிர்காலத்துக்கு பயன்படும் .

Link to comment
Share on other sites

57 minutes ago, பெருமாள் said:

அப்படியே அதே மாநிலத்தில் யாழ் பெரியாஸ்பத்திரி படுகொலைகள் பிரம்படி போன்ற படுகொலைகளை கிந்திய இன அழிப்பு என்று  வழக்கு தொடரனும் பலன்கள் பெரிதாக இல்லாவிட்டாலும் எதிர்காலத்துக்கு பயன்படும் .

நீங்கள் சொல்வது நல்ல விசயம். வழக்குகளில் சாதகமான தீர்ப்பை எதிர்ப்பார்ப்பதை விட இனவழிப்பு சம்பவங்களை சர்வதேசத்தில் எங்கெல்லாம் வழக்காக பதிவுசெய்ய முடியுமோ அங்கெல்லாம் பதிவு செய்தல் எதிர்காலத் தலமுறைக்கு அவசியமானது. பதிவுசெய்த வழக்குகளை அடிப்படையாக்கொண்ட வரலாற்றுப் பதிவுகளே சிறிதளவேனும கவனத்தில் வரும். 

Link to comment
Share on other sites

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உடன் விருந்தில் கலந்துகொள்ளும் திருநங்கை மாணவர்

 
அ-அ+

பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் தனஞ்ஜெய் சவுஹான் என்ற திருநங்கை மாணவர் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உடனான விருந்தில் கலந்து கொள்ள உள்ளார். #JustinTrudeau

 
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உடன் விருந்தில் கலந்துகொள்ளும் திருநங்கை மாணவர்
 
சண்டிகர்:
 
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்தினருடன் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். கடந்த சனிக்கிழமை டெல்லி வந்த அவர் நேற்று தாஜ்மஹாலுக்கு சென்று சுற்றிப்பார்த்தார். குஜராத் மாநிலம் சமர்பதியில் உள்ள காந்தி ஆசிரமத்திற்கு இன்று சென்ற ஜஸ்டின் பல்வேறு இடங்களுக்கு சென்று கண்டு களித்தார். பின்னர், பஞ்சாப் மாநிலம் சண்டிகருக்கு அவர் புறப்பட்டார்.
 
அப்போது விமான நிலையத்தில் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி அவரை வழியனுப்பி வைத்தார். இந்நிலையில், வரும் வியாழக்கிழமை டெல்லியில் உள்ள கனடா தூதரகத்தில் ஜஸ்டின் ட்ரூடோ உடனான விருந்தில் கலந்து கொள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் தனஞ்ஜெய் சவுஹான் என்ற திருநங்கை மாணவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 
மனித உரிமைகள் மற்றும் கடமைகள் படித்து வரும் தனஞ்ஜெய் சக்‌ஷாம் என்ற பெயரில் டிரஸ்ட் நடத்தி வருகிறார். இதன் மூலம் திருநங்கைகளுக்கு பல உதவிகள் அவர்களின் நலனுக்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். கடந்த ஆண்டு பல்கலைக்கழக வளாகத்தில் திருநங்கைகளுக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க கனடா தூதர் நாதிர் படேலை தனஞ்ஜெய் அழைத்திருந்தார்.
 
இதன் காரணமாக, தற்போது ஜஸ்டின் உடன் விருந்து உண்பதற்காக தனஞ்ஜெய் சவுஹானுக்கு கனடா தூதரகம் அழைப்பு விடுத்துள்ளது. #JustinTrudeau #TamilNews

https://www.maalaimalar.com/News/TopNews/2018/02/19203837/1146713/PU-transgender-student-to-join-Canadian-PM-for-dinner.vpf

Link to comment
Share on other sites

வரும் 21-ம் தேதி பஞ்சாப் முதல்வரை அமிர்தசரஸ் நகரில் சந்திக்கிறார் கனடா பிரதமர்  

 

 
panjab_cm

கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் டுருடேயூ தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன்  இந்தியா வந்துள்ளார்.

 கனடா பிரதமர் ஜஸ்டின் டுருடேயூ, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் உள்பட பலரை சந்தித்து பேசுகிறார். அப்போது அவர்கள் முன்னிலையில் இருநாடுகளுக்கும் இடையில் சில புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின்றன. 

மேலும் அவர் வரும் 21ம் தேதி பஞ்சாப் முதலவர்  அமரீந்தர் சிங்கை அமிர்தசரஸ் நகரில் சந்தித்க்க உள்ளார்.  பஞ்சாப்பின் அம்ரிஸ்டர் நகரில் உள்ள சீக்கிய பொற்கோவில், தில்லி ஜும்மா மசூதியையும் அவர் பார்வையிடுகிறார். 

http://www.dinamani.com/latest-news/2018/feb/19/canadian-prime-minister-justintrudeau-to-meet-punjab-cm-captain-amarinder-singh-on-february-21-in-amritsar-2866466.html

Link to comment
Share on other sites

கனடாவின் பிரதமர் ஜஸ்டின், இந்தியாவில் தற்போது இங்கு தான் இருக்கிறாராம்.!

 

நமது கனடாவின் பிரதமர் ஜஸ்டின், இந்தியாவில் தற்போது இங்கு தான் இருக்கிறாராம்.!

இந்திய நாட்டின் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று குடும்பத்துடன் பிப்ரவரி 17 ஆம் தேதி இந்தியா சென்றார் கனடாவின் பிரதமர் Justin Trudeau. அங்கு சென்ற பிரதமர் முதலில் டெல்லியில் உள்ள காதல் சின்னமான தாஜ் மஹாலிற்கு குடும்பத்துடன் சுற்றுலா மேற்கொண்டுள்ளார். அதைத்தொடர்ந்து, வட இந்தியாவில் உள்ள வணிகத் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களை சந்தித்துள்ளார் பிரதமர். மேலும், மும்பை சென்ற அவர் பாலிவுட் பிரபலங்களை சந்தித்தார்.

நமது கனடாவின் பிரதமர் ஜஸ்டின், இந்தியாவில் தற்போது இங்கு தான் இருக்கிறாராம்.!

அதில் ஷாருக்கான், அமீர் கான், ஃபர்ஹான் அக்தர் மற்றும் அனுப்பம் கெர் ஆகிய பிரபலங்களுடன் Justin Trudeau எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்திய உடையில் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்து பல பிரபலங்களை சந்தித்து கனடாவின் சினிமா துறை பற்றியும் பேசியுள்ளார் பிரதமர் Justin Trudeau.

நமது கனடாவின் பிரதமர் ஜஸ்டின், இந்தியாவில் தற்போது இங்கு தான் இருக்கிறாராம்.!

மேலும், இவரை சந்தித்த கோலிவுட் நடிகர் மாதவன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்: உங்களை சந்தித்தது மகிழ்ச்சி, இப்போது தான் தெரிகிறது உங்களுக்கு ஏன் இவ்வளவு புகழ் இருக்கிறது என்று., இவ்வளவு எளிமையாக, வெளிப்படையாக, அழகாக பழகும் நீங்கள் என்னை கவர்ந்துவிட்டீர்கள். மேலும், உங்களின் அடுத்து வரக்கூடிய சுற்றுலா பயணங்களும் நன்றாக அமைய நான் விரும்புகிறேன், என்று பதிவு செய்துள்ளார் மாதவன். இவ்வாறு பல பிரபலங்களும் பிரதமர் Justin Trudeau-வை சந்தித்தது குறித்து சமுக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

நமது கனடாவின் பிரதமர் ஜஸ்டின், இந்தியாவில் தற்போது இங்கு தான் இருக்கிறாராம்.!

https://news.ibctamil.com/ta/world-affairs/Justin-Trudeau-went-india-for-tour

 

 

 

என் குழந்தைகளுக்கு இந்தியாவின் கலாசாரத்தைக் கற்றுக்கொடுக்கிறேன்' - கனடா பிரதமர் நெகிழ்ச்சி!

 
 

இந்தியாவின் பன்முகத்தன்மையை என் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுத்து வருகிறேன் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேவ் தெரிவித்துள்ளார். 

 

ஜஸ்டின் ட்ரூடேவ்

 

ஒருவார கால சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேவ், குஜராத் சபர்மதி ஆசிரமம், தாஜ்மகால் என விசிட் அடித்துக்கொண்டிருக்கிறார். இதேபோல், பாலிவுட் நட்சத்திரங்கள் ஷாரூக் கான், அமீர் கான், அனுபம் கெர் மற்றும் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் உள்ளிட்டோரையும் சந்தித்துப் பேசிய அவர், மும்பையில் நேற்று நடந்த தொழிலதிபர்கள் கூட்டத்திலும் பங்கேற்றார். 

 

அப்போது, "இந்தச் சுற்றுப்பயணத்தின் மூலம் என் குழந்தைகளுக்கு நான் காட்ட விரும்பிய விஷயங்களில் ஒன்று, இந்தியாவின் பன்முகத்தன்மை. இங்கே மசூதிக்குச் செல்ல முடியும் அதே வேளையில் கோயிலுக்கும் செல்ல முடிகிறது. இது இந்தியாவின் சிறப்புக்குரிய பன்முகத்தன்மையைக் காட்டுகிறது. நான் ஆசிரியராக இருந்ததால் இதை அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். இங்கே என் குடும்பத்தினருடன் இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. அவர்களிடம் இந்தியா குறித்துப் பகிர்ந்து கொள்வது பெருமையாக இருக்கிறது. இந்தியா - கனடா உறவுகளை மேலும் வளப்பதற்கு இப்பயணம் உதவும். ஒன்றுபட்ட இந்தியா தீவிரவாதத்தை ஒழித்துக்கட்ட போராடி வருகிறது" என்றார். 

https://www.vikatan.com/news/india/117071-india-visit-has-helped-us-to-learn-the-diversity-of-the-country-says-canadian-pm-justin-trudeau.html

 

 

 

அமிர்தசரஸ் பொற்கோவிலில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்துடன் வழிபாடு

 
அ-அ+

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான பொற்கோவிலில் குடும்பத்தினருடன் வழிபாடு செய்தார். #JustinTrudeau

 
 
 
 
அமிர்தசரஸ் பொற்கோவிலில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்துடன் வழிபாடு
 
சண்டிகர்:
 
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்தினருடன் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். கடந்த சனிக்கிழமை டெல்லி வந்த அவர் தாஜ்மஹாலுக்கு குடும்பத்தினருடன் சென்று சுற்றிப்பார்த்தார். பின்னர், குஜராத் சென்ற அவர் காந்தி ஆசிரமத்திற்கு சென்று பார்வையிட்டார்.
 
இந்நிலையில், இன்று பஞ்சாப் மாநிலம் சண்டிகர் வந்தடைந்த அவர் அம்மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங்கை சந்தித்து பேசினார். இதனை அடுத்து, அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோவிலுக்கு ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்தினருடன் சென்றார். 
 
201802211335054557_1_amrii._L_styvpf.jpg
 
அங்கு சிறப்பு வழிபாடு நடத்திய அவர் பின்னர் உணவு தயாராகும் இடத்திற்கு சென்று சப்பாத்தி செய்யும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
#JustinTrudeau #TamilNews
 

 

Link to comment
Share on other sites

On 2/20/2018 at 3:49 AM, பெருமாள் said:

நவீனன் நீங்கள் முதல் இணைத்த செய்திகளின் பின் ஒரு சில கருத்தாடல்கள் நடைபெற்றன அதன் பின் கருத்துக்கள் வளரும் நேரம் மேல் இணைத்த அதே செய்திகளை கீழே இணைத்து கருத்துக்களை நீர்த்து போக செய்கிறிர்கள் யாழின் அநேக திரிகள் இப்படி உங்களால் மலுங்கடிக்கபடுது என்பதாவது உங்களுக்கு புரியுதா ? 

நவீனன் இணைக்கும் செய்திகள் பெரும்பாலும் வெவ்வேறு ஊடகங்களில் வந்த ஒரே செய்திகள். இச்செய்திகளை நவீனன் வாசிக்கிறாரோ என்பது சந்தேகம்தான்.  யாழ் இணையம் என்பது கருத்துக்களம். கருத்துக்களை எழுத ஊக்குவிக்கப்பட வேண்டுமேயன்றி , அதனை தீர்ந்து போக செய்யக்கூடாது. எங்களுக்கு செய்திகளும் வேண்டும். அதேநேரத்தில் கருத்துக்களும் வேண்டும்.  அண்மைக்காலங்களில் கருத்துக்கள் எழுதுபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. இதற்கு முக்கியமாக நவீனன் அதே செய்திகளை மறுபடியும் இணைப்பது ஒருகாரணம்.  இதே போல கதை கதையாம் பகுதியில், ஏனைய தளங்களில் இருந்து பிரதி செய்யப்படும் பதிவுகள் தோட்டத்து மல்லிகையில் இணைக்கபடல் வேண்டும். ஆனால் நவினன் பெரும்பாலும் அங்கு இணைப்பதில்லை. நாம் முற்றத்து மல்லிகையினை ஊக்குவிக்க வேண்டும். அண்மைக்காலங்களில் சொந்த ஆக்கங்கள் எழுதுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.  முன்பு அரசியல் அலசல் பகுதியில் பலர் கருத்துக்கள் எழுதுவதுண்டு.  இப்பொழுது அங்கும் கருத்துக்கள் ஒருவரும் எழுதுவதில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
    • எலும்பு வலு இழப்பது ஏன்? கு.கணேசன் ஐம்பது வயதைக் கடந்துவிட்டால் போதும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் புரை, காது கேளாமை, நடையில் தள்ளாட்டம், மாரடைப்பு, மூட்டுவலி எனப் பல நோய்கள் வரிசைகட்டி வந்து நிற்கும். இப்போது புதிதாக ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்று நவீன மருத்துவர்களால் அழைக்கப்படுகிற ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு இந்த நோய் அதிக பாதிப்பைத் தருகிறது. உடலுழைப்பு குறைந்துபோனது, உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றுவது போன்ற பல காரணங்களால் இந்த நோய் ஏற்படுவது இப்போது அதிகரித்துவருகிறது. ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்றால் என்ன? நம் உடலுக்கு வடிவம் தருகிற எலும்புகள்தான் உடல் உறுப்புகளையும் தாங்கிப் பிடிக்கின்றன; நடப்பது, நிற்பது, குனிவது போன்ற உடல் இயக்கங்களுக்குத் தசைகளுடன் இணைந்து ஒத்துழைக்கின்றன. இதற்காக ஒவ்வொரு எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. எலும்பில் உள்ள பழைய செல்கள் அழிக்கப்பட்டு, புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக இது மெதுவாக நிகழும். பொதுவாக 35 வயதுக்குப் பிறகே புதிய செல்கள் உருவாவது தாமதமாகும். பழைய செல்கள் அழிந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகும். அப்போது எலும்பின் இயல்பான அடர்த்தி (Bone mass) குறையும். இதற்கு ‘ஆஸ்டியோபீனியா’ (Osteopenia) என்பது ஆங்கிலப் பெயர். தமிழில், ‘எலும்புத் திண்மக் குறைவு நோய்’. ஐம்பது வயதுக்கு மேல் எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும். இதன் விளைவாக எளிதில் நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும். நாளடைவில் அந்த எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகிறது. இதைத்தான் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்கிறோம். இதற்கு ‘எலும்பு நலிவு நோய்’ என்றொரு பெயரும் உண்டு.       காரணங்கள் என்னென்ன? எலும்பு வலிமையை இழப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதுமை ஒரு முக்கியக் காரணம். முதுமையில் ஆண், பெண் இருபாலருக்கும் இது வருகிறது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதால் இது ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதால் இவர்களுக்கு எலும்பு வலுவிழந்து ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வந்துவிடுகிறது. அடுத்து, புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பழக்கம், உடல் பருமன், தைராய்டு பிரச்சினை போன்ற பலதரப்பட்ட காரணிகளால் இந்த நோய் ஏற்படுகிறது.  குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், வம்சாவளியாகவும் அக்குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இது வரலாம். வறுமை, பசியின்மை, வயிற்றில் அறுவைச் சிகிச்சை போன்றவற்றின் காரணமாக தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை நெடுங்காலம் சாப்பிடாதவர்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைபாடு ஏற்படும். இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் வலிமைக்கும் திண்மைக்கும் அடிப்படையானவை. எனவே, இந்தச் சத்துகள் குறையும்போது இவர்களுக்குக் காலப்போக்கில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வருவதுண்டு.  இதுபோல், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும், உடலுழைப்பு குறைந்தவர்களுக்கும் வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்த நோய் வருவதுண்டு. ஒல்லியாக உள்ளவர்களுக்கு ஏற்கெனவே எலும்புகள் வலுவிழந்து இருக்கும் என்பதால், முதுமையில் இவர்களுக்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ விரைவில் வந்துவிடும். அட்ரீனல் ஹார்மோன் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன்களின் அதீத செயல்பாடு காரணமாகவும் சிலருக்கு இந்த நோய் ஏற்படுவதுண்டு.   என்னென்ன தொல்லைகள்? பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. இந்த நோய் பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான் இந்த நோயின் விளைவாகவே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்த நோயின் தனிச் சிறப்பு. இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவற்றில்தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும். நோயைக் கண்டறிவது எப்படி?       முன்பெல்லாம் எலும்புகளை எக்ஸ்-ரே படமெடுத்துப் பார்த்து இந்த நோய் இருப்பதைக் கணிப்பதுதான் வழக்கத்தில் இருந்தது. பொதுவாக 50 சதவீதம் எலும்பு வலுவிழந்தால்தான் எக்ஸ்-ரேக்களில் இந்த நோய் தெரியும். ஆனால், அதற்குள் பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும் என்பதால் இந்தப் பரிசோதனையைக் கொண்டு நோயை ஆரம்பநிலையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை நீடித்தது. இப்போது ‘டெக்சா ஸ்கேன்’ (Dexa Scan) எனும் பரிசோதனை வந்துள்ளது. இதுதான் எக்ஸ்-ரே பரிசோதனையைவிடச் சிறந்தது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இது எலும்பின் அடர்த்தியை – அதாவது திண்ம அளவை - (Bone Mineral Density – BMD) அளக்கும் பரிசோதனை. எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவைச் சொல்லிவிடும். அதை ‘டி ஸ்கோர்’ (T Score) என்று சொல்கிறார்கள். இந்த அளவு பிளஸ் 1 எஸ்டிக்கும், மைனஸ் 1 எஸ்டிக்கும் இடையில் இருந்தால் அது இயல்பு அளவு. பிளஸ் 1 எஸ்டிக்கு மேல் இருந்தால் மிக நல்லது. இந்த அளவு மைனஸ் 1 முதல் மைனஸ் 2.5 எஸ்டிக்கும் இடைப்பட்டதாக இருந்தால் அது எலும்புத் திண்மக் குறைவு நோயைக் குறிக்கும். மைனஸ் 2.5 எஸ்டிக்கும் கீழ் இருந்தால் அது எலும்பு வலுவிழப்பு நோயைக் குறிக்கும். இந்த அளவுகளை வைத்து ஒருவருக்கு எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் அனுமானித்துவிடலாம். எலும்பின் திண்ம அளவைத் தெரிந்துகொண்டு சிகிச்சையை மேற்கொள்கிறவர்களுக்கு அது பலன் தருகிறதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதற்கு ஆகும் செலவு சிறிது அதிகம் என்பதால் அனைவராலும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள முடியாது. ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி அளவுகளைத் தெரிந்துகொண்டும் இந்த நோயை ஓரளவுக்கு அனுமானிக்கலாம். யாருக்கு வாய்ப்பு அதிகம்? உலக அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர் என்ற அளவிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக சர்வதேச ஆஸ்டியோபோரோசிஸ் நிறுவனம் ஒரு குறிப்பைத் தந்துள்ளது. அதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வரும் வாய்ப்புள்ளவர்களைக் கண்டறியும் ஒரு நிமிடச் சோதனை? (One minute osteoporosis risk test) என்று பெயர். கீழே தரப்பட்டுள்ள கேள்விகளைப் படியுங்கள். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று பதில் கூறினால் உங்களுக்கு எலும்பு வலிமை இழக்க வாய்ப்புகள் அதிகம் என்று பொருள். அப்படியானால் உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். உங்களின் பெற்றோரில் அல்லது குடும்பத்தில் யாருக்காவது லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? உங்களுக்கு 45 வயதுக்கு முன்னரே மாதவிலக்கு நின்றுவிட்டதா? உங்களுக்கு மூன்று செ.மீ.க்கு மேல் உயரம் குறைந்துவிட்டதா? அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளதா? அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளதா? சிகிச்சை என்ன? இந்த நோய் ஏற்பட்ட பின்பு இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. அதாவது, வலிமை இழந்த எலும்பை மீண்டும் வலிமை பெறச் செய்ய முடியாது. சிகிச்சையின் மூலம் மற்ற எலும்புகளை வலிமை பெறச் செய்யலாம். அவ்வளவே. இதைத் தடுப்பதற்குத்தான் வழி இருக்கிறது. முதுமையில் கால்சியம் மற்றும் வைட்டமின்–டி சத்துகள் குறைவதால், அவற்றுக்கு சிகிச்சை தரப்படும். தினமும் ஒருவருக்கு 500 - 1000 மில்லி கிராம் கால்சியம் தேவை. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்குக் கால்சியம் தாது மிகமிக அவசியமான ஒரு சத்துப்பொருள். பெண்கள் மாதவிலக்கு ஆகும்போது, கர்ப்பம் அடையும்போது, பிரசவம் ஆகும்போது, தாய்ப்பால் தரும்போது என்று பல காலகட்டங்களில் கால்சியம் அவர்களுக்கு அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. இதை உணவிலிருந்து பெறுவது மிக நல்லது. கால்சியம் மிகுந்துள்ள திரவ உணவுகளில் முதலிடம் பிடிப்பது, பால். 100 மி.லி. எருமைப்பாலில் 200 மி.கிராம்; 100 மி.லி. பசும்பாலில் 100 - 150 மி.கிராம் கால்சியம் உள்ளது; திட உணவுகளில் கேழ்வரகு, கொள்ளு, சோயாபீன்ஸ், உளுந்து, மீன், இறால், நண்டு, முட்டை, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை, கொய்யாப்பழம் போன்றவற்றிலும் கால்சியம் உள்ளது. இந்த உணவுகளை அதிகப்படுத்திக்கொண்டால் நமக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். அல்லது தினமும் 500 – 1000 மில்லி கிராம் கால்சியம் மாத்திரை ஒன்றைச் சாப்பிடலாம்.  என்னதான் நீங்கள் கால்சியம் மிகுந்துள்ள உணவுகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிட்டாலும், அந்த கால்சியம் உடலுக்குள் உள்ள எலும்புக்குள் செல்ல வேண்டுமானால், வைட்டமின்–டி அவசியம். தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் இருப்பதன் மூலம் வைட்டமின்–டி இயற்கையாகவே கிடைப்பதற்கு வழிசெய்யலாம். அல்லது பால், முட்டை, மீன், ஈரல் போன்ற உணவுகளில் இதைப் பெறலாம். இப்போது வைட்டமின்-டி மாத்திரைகளும் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் 2000 யூனிட்டுகள் என்ற அளவில் ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். அல்லது 60,000 யூனிட்டுகள் என்ற அளவில் வாரத்துக்கு ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். சமீபத்தில் இந்த நோய்க்கு ஊசி மருந்துகளும் வந்துள்ளன. மருத்துவரின் ஆலோசனையில் இவற்றையும் பயன்படுத்திப் பலன் அடையலாம். சில பெண்களுக்கு ‘ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை’ (Hormone Replacement Therapy) தரப்படுவதும் உண்டு. என்றாலும் இதன் பக்க விளைவாகக் கருப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஓர் எச்சரிக்கைத் தகவலும் வந்துள்ளது. எனவே, இவர்கள் வருடத்துக்கு ஒரு முறை ‘பாப் ஸ்மியர்’ என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.  தடுப்பது எப்படி? இளம் வயதிலிருந்தே தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேகமாக நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், கூடைப்பந்து விளையாட்டு, ஸ்கிப்பிங் போன்றவை மிகச் சிறந்த உடற்பயிற்சிகள். யோகாசனங்களைச் செய்வதும் நல்லது. புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. காபி, தேநீர் அருந்துவதை அளவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் 3 கப்புகளுக்கு மேல் இவற்றை அருந்தக் கூடாது. எல்லாச் சத்துகளும் கலந்த - ஊட்டச்சத்துள்ள - உணவுகளை சிறு வயதிலிருந்தே உட்கொள்ள வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடலுக்குப் போதுமான அளவு கால்சியம் கிடைக்கவில்லை என்றால், மருத்துவரின் யோசனைப்படி கால்சியம் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். ஸ்டீராய்டு மாத்திரைகளைத் தேவையின்றி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நடக்கும்போது, குளிக்கும்போது, பேருந்தில் ஏறும்போது என இயல்பாக இயங்கும்போது தரையில் வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  இம்மாதிரியான தடுப்புமுறைகளைக் கையாண்டு ஒவ்வொருவரும் தங்கள் எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்வதில் அக்கறை செலுத்தினால்தான் முதுமையில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வராமல் தடுத்துக்கொள்ள முடியும். https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-osteoporosis
    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.