Jump to content

சாம்சங் எஸ்9 டீசரில் வெளியான முக்கிய தகவல்கள்


Recommended Posts

சாம்சங் எஸ்9 டீசரில் வெளியான முக்கிய தகவல்கள்

 

 

சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் டீசர் வீடியோக்கள் வெளியாகி உள்ளது.

 
 
சாம்சங் எஸ்9 டீசரில் வெளியான முக்கிய தகவல்கள்
 
புதுடெல்லி:
 
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீடு நெருங்கி வரும் நிலையில், புதிய ஸ்மார்ட்போன்களுக்கான டீசர் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 
 
சாம்சங் வெளியிட்டிருக்கும் புதிய டீசரில் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் குறைந்த வெளிச்சத்திலும் தலைசிறந்த புகைப்படங்களை எடுக்கும் வசதி, 3D எமோஜி அம்சங்கள் வழங்கப்படலாம் என தெரியவந்திருக்கிறது. ஸ்மார்ட்போன் குறித்த விவரங்கள் முழுமையாய் வெளியாகவில்லை என்றாலும், இதில் எதிர்பார்க்கக்கூடிய அம்சங்கள் சார்ந்த விவரம் இடம்பெற்றிருக்கிறது. 
 
முதல் டீசரில் புதிய ஸ்மார்ட்போனின் செயல்திறன் மேம்படுத்தப்பட்டு, புதிய ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் முந்தைய ஸ்மார்ட்போனினை விட புதிய எஸ்9 அதிவேகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
201802151333386073_1_S9-Teaser-1._L_styvpf.jpg
 
இத்துடன் ஸ்லோ-மோ அம்சங்களும் புதிய கேலக்ஸி எஸ்9 சீரிஸ்-இல் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது டீசரின்படி புதிய ஸ்மார்ட்போனில் லோ-லைட் கேமரா (குறைந்த வெளிச்சத்திலும் தலைசிறந்த புகைப்படங்களை வழங்கும்) அம்சம் வழங்கப்பட்டு இருப்பதை தெரியப்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போனின் கேமராவில் பெரிய அப்டேட் வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 
மூன்றாவது வீடியோவில் புதிய எஸ்9 சீரிஸ் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொண்டிருக்கும் என்றும், வீடியோ நிறைவுறும் போது 3D எமோஜி வந்து செல்வது எஸ்9 அம்சங்களில் 3D எமோஜியும் ஒன்றாக இருப்பதை தெரியப்படுத்தியுள்ளது. சாம்சங் இந்தியா நிறுவன தலைவர் கார்லோ பார்லோகோ தனது ட்விட்டரில் சிறிய வீடியோவை பகிர்ந்து கொண்டிருக்கிறார். 
 
இவர் பதிவிட்டு இருக்கும் வீடியோவில் கேமரா அம்சங்களில் பெரிய அப்டேட், 3D எமோஜி உள்ளிட்டவை கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன்களின் மிகமுக்கிய அம்சங்களில் ஒன்றாக இருக்கலாம் என்பது தெரியவந்திருக்கிறது. புதிய கேலக்ஸி எஸ்9 சீரிஸ் குறித்து முன்னதாக வெளியாகி இருக்கும் தகவல்களில் ஸ்மார்ட்போனின் பெரும்பாலான சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளது. 
 
எனினும் புதிய கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் குறித்த முழு விவரங்கள் பிப்ரவரி 25-ம் தேதி நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் தெரியவரும். 
 
சாம்சங் கேலக்ஸி எஸ்9 டீசர் 1 வீடியோவை கீழே காணலாம்..,
 
 
 
சாம்சங் கேலக்ஸி எஸ்9 டீசர் 2 வீடியோவை கீழே காணலாம்..,
 
 
சாம்சங் கேலக்ஸி எஸ்9 டீசர் 3 வீடியோவை கீழே காணலாம்..,
 
Link to comment
Share on other sites

சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 பிளஸ் அறிமுகம்

 
அ-அ+

சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #GalaxyS9 #GalaxyS9Plus

 
 
 
 
சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 பிளஸ் அறிமுகம்
 
பார்சிலோனா:
 
சாம்சங் அன்பேக்டு 2018 விழாவில் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. பார்சிலோனாவில் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2018 விழாவில் புதிய கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அனைவரின் கவனத்தை ஈர்த்தது. 
 
கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனில் 12 எம்பி பிரைமரி கேமரா, f/2.4-f/1.5  வேரிபிள் அப்ரேச்சர் அம்சம் வழங்கப்பட்டிருக்கிறது. எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போனில் 12 எம்பி டூயல் பிரைமரி கேமரா, f/2.4-f/1.5 வேரிபிள் அப்ரேச்சர் மற்றும் போக்கெ எஃபெக்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது.
 
சோனி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை போன்றே புதிய ஸ்மார்ட்போனிலும் 960fps சூப்பர் ஸ்லோ-மோ வீடியோ ஆப்ஷன் கொண்டுள்ளது. இத்துடன் ஆட்டோமேடிக் மோஷன் டிடெக்ஷன் மற்றும் நகரும் ஃபிரேம்களை கண்டறிந்து தானாக பதிவு செய்யும் வசதி கொண்டிருக்கிறது. சூப்பர் ஸ்லோ-மோ வீடியோ பதிவு செய்ததும், பின்னணியில் இசையை சேர்க்க 35 வெவ்வேறு ஆப்ஷன்களும், வாடிக்கையாளர்கள் விரும்பும் இசையை தேர்வு செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது.
 
201802260827197811_1_Galaxy-S9-emoji._L_styvpf.jpg
 
இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, எண்ட்-டூ-எண்ட் பெசல் லெஸ் ஸ்கிரீன் வழங்கப்பட்டிருக்கிறது. எஸ்9 ஸ்மார்ட்போனில் 5.8 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் குவால் ஹெச்.டி. பிளஸ் ஸிகீரன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது.
 
இத்துடன் AKG ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மோஸ் சவுண்ட் சப்போர்ட் வழங்கப்பட்டிருக்கிறது. இதுவரை வெளியான கேலக்ஸி ஸ்மார்ட்போன்களை விட சத்தமான ஸ்பீக்கர்கள் புதிய ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் X அனிமோஜி போன்றே AR எமோஜி ஆப்ஷன் வழங்கப்பட்டிருக்கிறது. 
 
201802260827197811_2_Samsung-Galxy-S9-Official._L_styvpf.jpg
 
சாம்சங் கேலக்ஸி எஸ் 9 சிறப்பம்சங்கள்:
 
- 5.8 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் 2960x1440 பிக்சல் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845, சாம்சங் எக்சைனோஸ் 9810 சிப்செட்
- அட்ரினோ 630, மாலி GPU G72M18GPU
- 4 ஜிபி ரேம்
- 64 ஜிபி / 128 ஜிபி / 256 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ
- டூயல் சிம் ஸ்லாட்
- 12 எம்பி டூயல் பிக்சல் பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.4-f/1.5 வேரியபிள் அப்ரேச்சர்
- 8 எம்பி செல்ஃபி கேமரா, f/1.7 aperture
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் சார்ஜிங் வசதி
 
201802260827197811_3_Samsung-Galxy-S9-Plus-Official._L_styvpf.jpg
 
சாம்சங் கேலக்ஸி எஸ்9 பிளஸ் சிறப்பம்சங்கள்:
 
-  6.2 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் 2960x1440 பிக்சல் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845, சாம்சங் எக்சைனோஸ் 9810 சிப்செட்
- அட்ரினோ 630, மாலி G72M18GPU
- 6 ஜிபி ரேம்
- 64 ஜிபி / 128 ஜிபி / 256 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ
- டூயல் சிம் ஸ்லாட்
- 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.4-f/1.5 வேரியபிள் அப்ரேச்சர்
- 12 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
- 8 எம்பி செல்ஃபி கேமரா, f/1.7 aperture
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் சார்ஜிங் வசதி
 
சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் மிட்நைட் பிளாக், டைட்டானியம் கிரே, கோரல் புளூ மற்றும் லிலாக் பர்ப்பிள் நிறங்களில் கிடைக்கின்றது. மேலும் இந்தியாவில் புதிய எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு ஏற்கனவே துவங்கப்பட்டு விட்டது.
 
இந்தியாவில் கேலக்ஸி எஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை முன்பதிவு செய்ய சாம்சங் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். சாம்சங் வலைத்தளத்தில் முன்பதிவு செய்வோர் தங்களின் பெயர், மொபைல் நம்பர், மின்னஞ்சல் முகவரி, மாடல் நம்பர் மற்றும் நிறம் உள்ளிட்டவற்றை பதிவு செய்ய வேண்டும்.
 
201802260827197811_4_Galaxy-S9-Series-official._L_styvpf.jpg
 
இனி முன்பதிவு செய்ய ரூ.2000 செலுத்த வேண்டும். புதிய ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்படும் போது மின்னஞ்சல் மற்றும் எஸ்.எம்.எஸ். மூலம் விலை அனுப்பப்படும். முழு பணம் செலுத்தும் போது பிரீ-புக் கூப்பன் குறியீட்டை பதிவு செய்து முன்னதாக செலுத்திய ரூ.2000-ஐ குறைக்க வேண்டும்.
 
சாம்சங் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்தியா விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும் மார்ச் மாத முதல் வாரத்தில் இந்திய வெளியீடு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிளிப்கார்ட் தளத்தில் முன்பதவு சார்ந்த தகவல்கள் விரைவில் அப்டேட் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #MWC2018 #SamsungUNPACKED

https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/02/26082720/1147768/MWC-2018-Samsung-Galaxy-S9-series-launched-pre-booking.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவனுக ஒருத்தனுக..  couil.gif

வருசா வருசம் புது மாடல் வெளியிடுறேன்னு, இருக்குற மாவுல வித விதமா கலர் பொடியை கலந்து தோசை சுடுற மாதிரி ஏற்கனவே இருக்குற மாடல்ல சின்னஞ்சிறு உபயோகமில்லாத அம்சத்தை மட்டும் சேர்த்துவிட்டு "ஃப்ளாக்-ஷிப்பு" வெண்டைக்காய், கத்திரிக்காயின்னு கூவுறானுக..! tape-poing.gif

முதலில் இருக்குற மாடல்களுக்கு ஒழுங்கா தொடர்ந்து சாஃப்ட்வேர் (Software updates) கொடுங்கப்பா..! vil-colere1.gif

7 வருடத்திற்கு முன் வாங்கிய சாம்சங் கைப்பேசியிலுள்ள அம்சங்களையே இன்னமும் முழுமையா பாவிக்கலை.. இதில் S9 வேறை புதுசா வுடுறாங்களாம்..

என்ன கொடுமை சரவணா இது...?  ugly51.gif

Link to comment
Share on other sites

ஐபோன் X-இல் இதெல்லாம் இருக்கா? கேலக்ஸி எஸ்9

 

 

அ-அ+

சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஒருவழியாக அறிமுகம் செய்யப்பட்டுவிட்டன. இவற்றில் வழங்கப்பட்டு ஐபோன் X-இல் இல்லாத சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.

 
 
 
 
ஐபோன் X-இல் இதெல்லாம் இருக்கா? கேலக்ஸி எஸ்9
 
புதுடெல்லி:
 
சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அந்நிறுவனம் ஏற்கனவே அறிவித்ததைப் போன்று சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. 
 
சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள் என்ற வகையில் ஃபிளாக்ஷிப் பிரிவில் புதிய ஸ்மார்ட்போன்கள் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் மற்றும் ஐபோன் X மாடல்களுக்கு போட்டியாக அமைந்திருக்கிறது. 
 
அந்த வகையில் சாம்சங் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டு ஐபோன் X-இல் வழங்கப்படாத முக்கிய சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
 
201802261316382643_1_galaxy-S9-Plus-cam._L_styvpf.jpg
 
வேரியபிள் அப்ரேச்சர்:
 
சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் வேரியபிள் அப்ரேச்சர் என்ற ஆப்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் புகைப்படம் எடுக்கப்படும் சூழலின் வெளிச்சத்திற்கு ஏற்ப அப்ரேச்சர் அளவினை f/1.5 இல் f/2.4 வரை மாற்றிக் கொள்ளும். ஐபோன் X ஸ்மார்ட்போன் மட்டுமின்றி மற்ற நிறுவன ஸ்மார்ட்போன்களிலும் இந்த அம்சம் இதுவரை வழங்கப்படாத ஒன்றாகவே இருக்கிறது.
 
201802261316382643_2_Galaxy-S9-emoji._L_styvpf.jpg
 
அனிமோஜி:
 
கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டிருக்கும் புதிய அனிமோஜி ஆப்ஷன் ஆப்பிளின் ஐபோன் X மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் 3D எமோஜிக்களை சார்ந்து உருவாகி இருந்தாலும், ஐபோனை விட புதிய கேலக்ஸி ஸ்மார்ட்போனில் பல்வேறு ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
 
ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கும் பிரீசெட் ஒன்றில் முகத்தை காண்பித்து எமோஜிக்களை உருவாக்காமல், புதிய கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன்களில் வாடிக்கையாளர்கள் தங்களது சொந்த எமோஜிக்களை உருவாக்க முடியும். ஸ்கின் டோன், தலைமுடி நிறம், ஆடை நிறம் உள்ளிட்டவற்றை தேர்வு செய்து கொள்வது என பல்வேறு ஆப்ஷன் மற்றும் வசதிகள் வழங்கப்பட்டு இருக்கிறது.
 
201802261316382643_3_Galaxy-S9-dolby._L_styvpf.jpg
 
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்:
 
சாம்சங் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர் அம்சம் புதிய கேலக்ஸி எஸ்9 சீரிஸ்-இல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐபோன் X போன்று இல்லாமல் புதிய கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன்களில் இருபுறமும் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
 
201802261316382643_4_Galaxy-S9-port._L_styvpf.jpg
 
ஹெட்போன் ஜாக்:
 
ஸ்மார்ட்போன்களில் அதிகம் பயன்படுத்தப்படும் அம்சமாக இருந்த 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் ஐபோன் மாடல்களில் நீக்கப்பட்டு விட்டது. எனினும் சாம்சங் ஸ்மார்ட்போன்களில் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் இன்னமும் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருக்கிறது. இன்றளவும் பெரும்பாலானோர் 3.5 எம்.எம் ஜாக் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
 
201802261316382643_5_Galaxy-S9-Series-off._L_styvpf.jpg
 
ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங்:
 
ஐபோன் X, ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் மாடல்களில் ஆப்பிள் நிறுவனம் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை வழங்கியது. சாம்சங் இந்த அம்சத்தை சில ஆண்டுகளுக்கு முன்பே தனது ஸ்மார்ட்போன்களில் வழங்கிவிட்டது. மேலும் புதிய கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் வயர்லெஸ் சார்ஜிங் முன்பை விட 50% வேகமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
201802261316382643_6_Galaxy-S9-Screen._L_styvpf.jpg
 
கைரேகை சென்சார்:
 
உலகில் தற்சமயம் வெளியாகும் பல்வேறு ஸ்மார்ட்போன்களில் ஃபேஸ் ஐடி அல்லது ஃபேஸ் அன்லாக் தொழில்நுட்பம் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.
 
ஐபோன் X ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் நீக்கப்பட்டு பாதுகாப்பிற்கு முற்றிலும் ஃபேஸ் ஐடி அம்சத்தை நம்ப வேண்டியுள்ளது. கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் வாடிக்கையாளர்களுக்கு ஃபேஸ் அன்லாக், ஐரிஸ் ஸ்கேனர் மற்றும் கைரேகை சென்சார் என வெவ்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. 
 
இதனால் வாடிக்கையாளர்கள் விரும்பும் பாதுகாப்பு அம்சத்தை தேர்வு செய்து கொள்ள முடியும். புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்களில் கைரேகை சென்சார் கேமராவின் கீழ் வைக்கப்பட்டிருப்பதால் மிக வேகமாகவும், எளிமையாகவும் பயன்படுத்த முடியும்.

https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/02/26131639/1147826/Samsung-Galaxy-S9-features-missing-in-iPhone-X.vpf

Link to comment
Share on other sites

சாம்சங் நிறுவனத்தின் சாம்சங்க் கேலக்ஸி S9 ஸ்மார்ட்போன் அறிமுகம்

நிறுவனத்தின் சாம்சங்க் கேலக்ஸி  S9 ஸ்மார்ட்போன் 2018 பிப்ரவரி மாதத்தில்  சந்தைக்கு வந்துள்ளது.

செல்போன் தயாரிப்பின் முன்னணி நிறுவனமாக திகழும் சாம்சங் நிறுவனம் வெளியிடும் கேலக்ஸி வரிசை செல் போன்கள் பிரபலமானவை.

அண்மையில் அதன்  சாம்சங் காலக்ஸி S9 ஸ்மார்ட்போன், இந்த மாதம் வெளிவந்தது.

இதனது புதிய வசதியாக அதி திறன் கொண்ட கமெரா லென்ஸ் இணைக்கப்பட்டு தரமான புகைப்படங்களைக் எடுக்கக்கூடியதாக அமைந்துள்ளது.

இதுவரை எந்த ஸ்மார்ட் போன்களிலும் இல்லாத கமெரா Adjustable aperture செட்டிங்க்கை கொண்டுள்ளது.



166 கிராம் எடை மற்றும் 5.80 அங்குலம் திரை அளவு 4 GB RAM வசதி 64 GB மற்றும் அதற்கு மேலான சேமிப்புத்திறன் வசதி ஆகியவற்றுடனும்.

இதே வரிசையின் சாம்சங் காலக்ஸி S9 ப்ளஸ் செல் போனில் 6ஜிபி Ram  மற்றும் பேட்டரி 3500mAh

மேலும், 12 mp பின் கேமராவுடனும், 8 mp முன் கேமராவுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சாம்சங் காலக்ஸி S9 கைப்பேசியின் பேட்டரி திறன் 3000mAh. இதுமட்டுமல்லாது 4K வீடியோ பதிவு செய்து கொள்ளக்கூடிய வகையிலும் இந்த மொபைல் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டின் 8-வது பதிப்பான ஓரியோவுடன் இயங்குகின்றது. மேலும் ஆண்ட்ராய்டின் உடனடி மேம்படுத்தல்களையும் பெறக்கூடியதாக இருக்குமென நம்பப்படுகின்றது.

400 GB வரை சேமிப்புத்திறனை அதிகரிக்கக்கூடிய வசதியுடனும் இந்த ஸ்மார்ட்போன் இருக்கிறது.

மேலும் உங்களின் உருவ அமைப்பிற்கு ஒத்ததாக எமொஜிகளை உருவாக்கும் வசதியும் இதில் உள்ளது.

http://www.4tamilmedia.com/knowledge/technology/10361-samsung-galaxy-s9-camera-what-s-new
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.