Jump to content

கோபாலபுரம் இல்லத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு


Recommended Posts

கோபாலபுரம் இல்லத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு

 

தீவிர அரசியலில் இறங்கியுள்ள நடிகர் கமல்ஹாசன் கோபாலபுரம் இல்லத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். #kamalhaasan #karunanidhi #gopalapuramhouse

 
 
கோபாலபுரம் இல்லத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு
 
சென்னை:
 
நடிகர் கமல்ஹாசன் தீவிர அரசியலில் களமிறங்க இருக்கிறார். வருகிற 21-ந்தேதி ராமேசுவரத்தில் உள்ள மறைந்த அப்துல்காம் வீட்டில் இருந்து கமல் தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறார். அங்கிருந்து சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்.
 
இதற்கிடையே, நடிகர் ரஜினியை போயஸ் தோட்ட இல்லத்தில் இன்று மாலை சந்தித்தார். அப்போது, ‘ரஜினியுடனான சந்திப்பு நட்பு ரீதியானது, அரசியல் ரீதியானது இல்லை. என்னுடைய அரசியல் பயணத்திற்கு ரஜினி வாழ்த்து சொல்லியிருக்கிறார். மதுரை கூட்டத்தில் பங்கேற்க ரஜினிகாந்த்திற்கு அழைப்பு விடுத்துள்ளேன்’ என்றார்.
 
இந்நிலையில், தீவிர அரசியலில் இறங்கியுள்ள நடிகர் கமல்ஹாசன் கோபாலபுரம் இல்லத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை இன்று இரவு சந்தித்து வாழ்த்து பெற்றார். 
 
முன்னதாக, கோபாலபுரம் இல்லத்துக்கு வந்த நடிகர் கமல்ஹாசனை தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் வரவேற்றார்.
201802182103307520_1_kamal-1._L_styvpf.jpg
கருணாநிதியை சந்தித்தபின் நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், அரசியல் பயணத்துக்காக தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் வாழ்த்து பெற்றேன். கருணாநிதியின் அறிவுக்கூர்மை, தமிழ் மற்றும் தமிழக மக்களின் பால் உள்ள அக்கறை ஆகியவற்றை கண்டு வியந்திருக்கிறேன். எனது கொள்கையை தி.மு.க. புரிந்தபின்னர் கூட்டணி குறித்து யோசிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
 
21-ம் தேதி அரசியல் பயணம் செய்ய இருக்கிறேன். அதற்குமுன் எனக்கு பிடித்தவர்களிடம் சொல்லிட்டு செல்கிறேன். அதற்காகத் தான் ரஜினியை சந்திக்க வந்தேன் என கமல்ஹாசன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. கமல்ஹாசன் தீவிர அரசியலில் ஈடுபட்டிருக்கும் நிலையில் இவர்களது சந்திப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. #tamilnews #kamalhaasan #karunanidhi #gopalapuramhouse

https://www.maalaimalar.com/News/TopNews/2018/02/18210331/1146571/actor-kamal-haasan-meets-dmk-leader-karunanithi-in.vpf

Link to comment
Share on other sites

மக்கள் சேவைக்காகவே அரசியலுக்கு வருகிறேன்: கருணாநிதியுடனான சந்திப்புக்கு பின்னர் கமல் பேட்டி 

 

 
kamal

சென்னை: மக்களுக்கு சேவை செய்யவே அரசியலுக்கு வருகிறேன் என சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியுடனான சந்திப்புக்கு பின்னர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள நடிகர் கமல் வரும் புதன்கிழமை (பிப்.21) முதல் தமிழகம் முழுவதும் "நாளை நமதே" சுற்றுப் பயணம் மேற்கொள்வதாகவும், அன்றைய தினம் கட்சியின் பெயரை அறிவிக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தனக்கு பிடித்த முக்கிய தலைவர்களை நடிகர் கமல்ஹாசன் சந்தித்து பேசி வருகிறார். இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த நிலையில், திமுக தலைவர் கருணாநிதியை கமல்ஹாசன் சந்தித்தார்.

கருணாநிதியை சந்திக்க வந்த கமல்ஹாசனை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்று அழைத்து சென்றார்.

கருணாநிதியுடனான சந்திப்புக்கு பின்னர், செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் கூறுகையில், எனது அரசியல் பயணம் குறித்து மூத்த தலைவர் என்ற முறையில் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற வந்தேன். கருணாநிதி இல்லத்திற்கு இது முதல் முறை அல்ல. எனது அரசியல் பயணம் குறித்து கருணாநிதியிடம் தெரிவித்தேன். எனது அரசியல் பயணத்திற்கு திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து கூறினார். 

ஈழ விவகாரத்தில் சிறு வயதிலேயே குரல் கொடுத்துள்ளேன் என்றவர் என் கொள்கைகள் என்ன என்பதை பிப்.21-இல் தெரிந்துகொள்ளலாம். கருணாநிதியின் அறிவுக்கூர்மை, தமிழ், மக்கள்மீது உள்ள அக்கறை மூன்றையும் அவரிடம் அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம். என் கொள்கையில் திராவிடம் இருக்கும் என்றவர் மக்கள் சேவைக்காகவே அரசியலுக்கு வருகிறேன்.

மேலும் திமுகவுடன் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு கமல்ஹாசன் பதிலளிக்கையில், ஆட்சி குறித்து அனைவருக்கும் ஓரு கனவு உள்ளது. என்னுடைய கொள்கையை திமுக புரிந்துகொண்ட பின்னர் கூட்டணி குறித்து யோசிக்கலாம் என்றார். 

http://www.dinamani.com/latest-news/2018/feb/18/மக்கள்-சேவைக்காகவே-அரசியலுக்கு-வருகிறேன்-கருணாநிதியுடனான-சந்திப்புக்கு-பின்னர்-கமல்-பேட்டி-2865904.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.