Jump to content

இதுதான் காதல் என்பதா?


Recommended Posts

இதுதான் காதல் என்பதா?

 

 
kd13

செகந்த்ராபாத் ரயில்வே ஸ்டேஷன். ஆட்டோ வந்து நிற்க, அருணும், கோபியும் இறங்கிக் கொண்டார்கள். மீட்டர் பார்த்து பணம் கொடுத்து விட்டு, உள்ளே வந்து, ஐந்தாம் நம்பர் பிளாட்ஃபாமிற்கு வந்து சேர்ந்தார்கள். சென்னை செல்லும் சார்மினார் எக்ஸ்பிரஸ் புறப்படுவதற்கு தயாராக நின்று கொண்டிருந்தது. எஸ் - 7 கோச்சைத் தேடி ஏறி, தங்களது சீட் நம்பரை பார்த்து இருவரும் உட்கார்ந்து கொண்டார்கள். ரயில் புறப்படுவதற்கு பத்து நிமிஷங்கள் இருந்தது. அங்கும் இங்குமாக தமிழும் தெலுங்கும் கலந்த குரல் கேட்டுக் கொண்டிருந்தது. அருண், அதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். 
அப்போது, ஒரு பெண், இடுப்பில் அமர்ந்திருக்கும் குழந்தையை, தனது இடது கையால் அணைத்துப் பிடித்தபடி, வலது கையில் ஒரு சூட்கேûஸ சுமந்தபடியும், அவர்கள் உட்கார்ந்திருக்கும் அதே கோச்சில் வேக வேகமாக வந்து ஏறினாள். சீட் நம்பரைப் பார்த்து, இவர்களுக்கு எதிரே உட்கார்ந்தாள். அவளைப் பார்த்ததும் அருண் ஆச்சரியம் அடைந்தான். அவள் வினோதினிதானே? அவளும் அவனைப் பார்த்து, ஆச்சரியம் அடைந்தாள். அவன் அருண்தானே? இருவருக்கும், சிறிது நேரம் பேச்சு வரவில்லை. கோபி அவர்களைப் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தான். அருண்தான் முதலில் பேச ஆரம்பித்தான்.


""வாட் ஏ சர்ப்ரைஸ்! உன்னை நான் இங்க எதிர்ப்பார்க்கல வினோதினி''
""நான் கூட உங்களை எதிர்ப்பார்க்கல... இது நிஜமான்னு இன்னும் எனக்கு சந்தேகமா இருக்கு''
""நிஜம்தான்...நோ டவுட்... எப்படியிருக்க?...உன் குழந்தையா?''
"ம்... நல்லாருக்கேன்... என் குழந்தைதான்...''
அருண், குழந்தையின் கன்னத்தை லேசாகக் கிள்ளி முத்தமிட்டு விட்டு "என்ன பேர் வச்சுருக்க?'' எனக் கேட்டான்.
"அருணகிரி...ஷார்ட்டா அருண்னு கூப்பிடுறோம்''
அதைக்கேட்டதும், அருண் ஷாக்கடித்தவன் போல், அவளை நிமிர்ந்து பார்த்தான்.
"என்ன அப்படி பாக்குறீங்க''
"என்னை, நீ இன்னும் மறக்கல, இல்ல...''
"எப்படி மறக்க முடியும்... மறந்துட்டா, நடந்ததெல்லாம் உண்மையில்லன்னு ஆயிடுமா...''
ரயில் புறப்பட்டது. பிளாட்ஃபாமில் நின்று கையசைத்தவர்கள், பின்னோக்கி நகர்ந்து கொண்டிருந்தார்கள். சிலரது கண்களில் கண்ணீர் தெரிந்தது. பிரிவு எத்தனை துயரமானது. அருணும், வினோதினியும் கூட, ஒருநாள் இப்படி பிரிந்து சென்றவர்கள்தானே.

 

சென்னையிலுள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில், அருண் சாஃப்ட்வேர் இஞ்ஜினியராக வேலைப் பார்த்தான். அதே கம்பெனியில் வினோதினியும் வேலைக்கு வந்து சேர்ந்தாள். ஒரு பெரிய மருத்துவமனைக்கு தேவையான சாஃப்ட்வேரை தயாரிக்கும் பொருப்பை, நிர்வாகம் அருண், வினோதினி இருவரிடமும் ஒப்படைத்தது. இருவரும், நேரம் காலம் பாராமல், பசி, தூக்கம் பாராமல், சேர்ந்து உழைத்தார்கள். அந்த உழைப்பில், ஒருவரின் ஆற்றலை மற்றொருவர் வியந்து பார்த்தார்கள். எப்போதாவது ஓய்வு கிடைக்கும் போது, ஒருவரைப்பற்றி ஒருவர், பர்சனலாகவும் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள். 
அருண் அவனது பெற்றோருக்கு ஒரே பையன். அதனால் செல்லமாக வளர்க்கப்பட்டவன். அவன் கேட்டது எல்லாமே கிடைத்திருக்கிறது. இப்போதும், இரவில் அவன் வீட்டிற்கு வருவதற்கு தாமதமானால், அவனது அப்பா, வீட்டிலிருந்து டின்னர் எடுத்துக் கொண்டு, ஆபிஸýக்கு வந்துவிடுவார். எப்போதுமே, அதில் இரண்டு பேர் சாப்பிடும் அளவிற்கு டிபன் வைக்கப்பட்டிருக்கும். முன்பெல்லாம் கோபிதான் அவனுடன் ஷேர் பண்ணி சாப்பிடுவான். வினோதினி வந்ததற்கு பிறகு, அவள்தான் அவனுடன் ஷேர் பண்ணுகிறாள். ஒவ்வொரு முறையும், அருண் அம்மாவின் கைப்பக்குவத்தை மனம் விட்டு பாராட்டுவாள். அதுபோல் சாப்பிட்டு முடித்ததும், அந்தக் கேரியரை அவளே கழுவி வைக்கவும் செய்வாள். அவளுக்கு அப்பா கிடையாது. ஒரு விபத்தில் இறந்துவிட்டார். அம்மா மட்டும்தான். மற்றும் இரண்டு தங்கைகள். அவள், படித்து முடித்து வேலைக்கு வருவதற்கு முன்பு வரை, அவளது மாமா ராஜேஷ்தான் அந்தக் குடும்பத்திற்கு தேவையான எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டான். 
ஒருநாள் அருண், வினோதினியிடம் "இந்த உலகத்திலேயே உனக்கு ரொம்ப புடிச்ச விஷயம் எது வினோ...?'' எனக் கேட்டான்.


""நீதான்...'' அவள் கொஞ்சமும் யோசிக்காமல் பதில் சொன்னாள்.
அருண், ஒரு நிமிடம் தடுமாறிப் போனான்.
"இப்படி ஒரு பதிலை நான் எதிர்பாக்கல...''
"நானும் எதிர்பார்க்கலதான்... என்னமோ பட்டுன்னு வந்துடுச்சு...''
"அது எப்படி பட்டுன்னு வரும்... மனசுல ஏற்கனவே விதை விழுந்துருதாதான் அப்படி வரும்''
"சரி.. விழுந்ததாதான் வச்சுக்கங்களேன்''
அவன், மேலும் தடுமாறிப் போனான்.
"ஏய்.. என்னப்பா சொல்ற? நீ சொல்ற வார்த்தைக்கு, மீனிங் புரிஞ்சுதான் பேசுறியா...''
"எஸ்.. புரிஞ்சுதான் பேசுறேன்''
"அப்ப... யூ ஆர் இன் லவ் வித் மீ''
"எஸ்''


அருண் வாயடைத்துப் போய் நின்றான். அவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. மனதில் நூறு தடவை யோசித்து, ஆயிரம் தடவை ஒத்திகைப் பார்த்து, சொல்லக்கூடிய ஒரு விஷயத்தை, கொஞ்சமும் தயக்கமில்லாமல், ஒரு விநாடியில் போட்டு உடைக்கிறாளே?
"என்ன சைலன்ட் ஆயிட்டிங்க...உங்களுக்கு விருப்பம் இல்லையா?'' அடுத்த கேள்வியையும் அதிரடியாகக் கேட்டாள்.
"விருப்பம் இல்லன்னு சொன்னேன்னா என்ன பண்ணுவ?''


"சூசைட் பண்ணிக்குவேன்னு மட்டும் எதிர்ப்பாக்காதீங்க... அப்பவும் உங்களைதான் லவ் பண்ணுவேன். நீங்க அக்சப்ட் பண்ணிக்குற வரை லவ் பண்ணிகிட்டே இருப்பேன்''
அவளது ஆழமான நேசிப்பு, அவனுக்குப் புரிந்தது. "அவ்வளவு தூரமெல்லாம் போக வேண்டாம்... இப்பவே பண்ணிக்க...'' என்றான். அவள் சுற்றும் முற்றும் பார்த்தாள். யாரும் இல்லை. ""தாங்ஸ்...'' என்று கூறி அவனது கன்னத்தில் முத்தமிட்டாள். அதுவும் அவன் எதிர்பாராததுதான். எல்லாவற்றிலும் வேகமாக இருக்கிறாள். 
அன்று முதல், இருவரும், தனித் தனி அல்ல, ஒன்று என நினைக்க ஆரம்பித்தார்கள். அவன், அவளை தனது வீட்டிற்கு அழைத்து வந்து, அப்பா அம்மா இருவருக்கும் அறிமுகம் செய்து வைத்தான். அவள் அவனது அம்மாவின் கையைப் பிடித்து "அருமையா சமைக்கிறீங்க ஆன்ட்டி'' என்று கூறி, முத்தமிட்டாள். அப்பா ""நான்தான் பாராட்டிகிட்டு இருப்பேன்... இப்ப நீயும் வந்து சேர்ந்துகிட்டியா... இனிமே புரவிஷன் பில்தான் எகிறப்போவுது. உங்க ஆன்ட்டி நெய்யும், முந்திரி பருப்பும் இல்லாம எந்தப் பலகாரமும் பண்ண மாட்டா...'' என்று சொல்லி சிரித்தார். பதிலுக்கு வினோதினி ""ஹோட்டலுக்கு போற செலவு மிச்சமாகுதுல்ல அங்கிள். அதோட வயித்துக்கும் கெடுதல் இல்லாம இருக்குல்ல'' என்றாள். அவள் அப்படி பேசியது, அவர்கள் இருவருக்கும் பிடித்துப் போனது. அடிக்கடி அவனது வீட்டிற்கு வர ஆரம்பித்தாள். ஒரு சில நாள்களில் அவர்களுக்குள் எந்த இடைவெளியும் இல்லாமல் போனது. அருண் எங்கேயாவது வெளியூர் போக நேர்ந்தால் அவள் அங்கு வந்து படுத்துக்கொள்வாள். அவன், சுவரில் அவளது போட்டோவை மாட்டி வைத்து, அதில் "ஐ லவ் யூ வினோ' என எழுதி வைத்திருப்பதை பார்த்துப் பார்த்து சந்தோஷமடைந்து கொள்வாள். யாருக்கு கிடைக்கும் இப்படியொரு லைஃப்?

 

ஒருநாள், அந்த லைஃபிற்கும் இடையூறு வந்தது. ராஜேஷ் தனது அக்காவிடம் வினோதினியைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள விரும்புவதாகச் சொன்னான். அதைக் கேட்டு, வினோதினி அதிர்ந்து போனாள். ஆனால், அவளது அம்மா "பண்ணிக்கடா...நா என்ன மாட்டேன்னா சொல்லப் போறேன். அவர் இறந்ததுக்கப்புறம் இந்த குடும்பத்தோட நல்லது கெட்டதையெல்லாம் நீதான எடுத்துப் பண்ண... நீ மட்டும் இல்லன்னா, மூணு பொம்பளைப் புள்ளைகளை வச்சுகிட்டு, நான் நடுத்தெருவுக்குதான் வந்திருக்கணும்...'' என்று சொன்னாள். அவளது கண்களில் நன்றி பெருக்கு தெரிந்தது. ராஜேஷ் "நீ சொல்லிட்ட... வினோதினி என்ன சொல்லுவான்னு தெரியலையே...'' என்றான். அதற்கும் அவள் "அவ என்ன சொல்லப் போறா... நடந்ததெல்லாம்தான் அவளுக்கும் தெரியுமே... நீ கல்யாணத்துக்கு ஆக வேண்டிய வேலையப் பாரு...'' என அதிகாரப்பூர்வமாகச் சொன்னாள். வினோதினி அப்படியே உறைந்து போனாள். அவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. 
ராஜேஷ் நல்லவன்தான். அவளது அப்பா இறந்ததற்கு பிறகு, அந்த குடும்பத்தை தாங்கிப் பிடித்தவன். வயதுக்கு வந்ததற்கு பிறகு ஒரு தடவை கூட அவளை அவன் நிமிர்ந்து பார்த்ததில்லை. அத்தனை நாகரீகமானவன். அப்படிப்பட்டவனை வேண்டாம் என எப்படி நிராகரிக்க முடியும். அதை அம்மாதான் தாங்கிக் கொள்வாளா? மாமா மனதில் இப்படியொரு ஆசை இருக்கிறது என்பது முன்பே தெரிந்திருந்தால், அருணை காதலிக்கலாமாவது இருந்திருக்கலாம். இப்போது அவருக்கு என்ன பதில் சொல்வது. அவரே சரி என ஏற்றுக் கொண்டாலும், அவரை பிரிந்து, தன்னால் நிம்மதியாக வாழ முடியுமா? கடவுளே இது என்ன சோதனை... இதை நானும் அருணும் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்.


அதிகம் தள்ளிப் போடாமல் அன்று மாலையே அருணிடம் விஷயத்தைச் சொன்னாள். அவன் சிறிது நேரம் அமைதியாக இருந்தான். பின் "எல்லாத்துலயும் உனக்கு அவசரம்... அதுதான் இப்ப உன்னை இந்த இடத்துல கொண்டு வந்து நிறுத்தியிருக்கு... நாம ரெண்டு பேரும் சின்னப் பசங்க இல்ல... வீட்டுல இருக்குறவங்களோட உணர்வுகளை மதிக்காம நடந்துக்குறதுக்கு... நீ உன் மாமவையே கல்யாணம்
பண்ணிக்க...அதுதான் நல்லது... என்னடா இப்படி சொல்றானேன்னு நினைக்காத... அவங்களை காயப்படுத்திட்டு நாம ஒண்ணு சேரணும்ன்னு நினைச்சோம்ன்னா, சத்தியமா நம்மளால நிம்மதியா வாழ முடியாது...சரி பிரியிறது மட்டும் சாத்தியமான்னு கேட்டின்னா, அதுவும் வலிக்கும்தான்... ஆனா, அவங்க வலியோட கம்பேர் பண்ணும்போது நம்ம வலி கம்மிதான்... போ... போய் வீட்டுல ஒத்துக்க...'' எனத் தெளிவாகக் கூறினான். அவள் அவனை கட்டிக் கொண்டு அழுதாள். சிறிது நேரம் அழவிட்டு, பின் தன்னிடமிருந்து அவளைப் பிரித்தெடுத்தான்.
"ஆல் த பெஸ்ட் வினோ...'' என்றான்.

 

இது நடந்து இரண்டு வருடமாகிறது. அவள் கல்யாணத்திற்கு கூட அவன் போகவில்லை. அதன் பிறகு, அவளை, இதோ, இப்போதுதான் பார்க்கிறான்.
"உன் மாமா வரலியா?''
"என் முதல் தங்கைக்கு நிச்சயதார்த்தம்... அதுக்காகத்தான் சென்னைக்கு போயிட்டு இருக்கேன்... அவருக்கு ஆபிஸ்ல டைட் ஒர்க்... ரெண்டு நாள் கழிச்சு ஃபிளைட்ல வந்துடுவாரு''
"ஓ! அப்படியா''
"நீங்க எப்படி இருக்கீங்க அருண்... கல்யாணம் ஆயிடுச்சா?'
"ம்...' 
அவள் முகத்தில் நிம்மதி படர்வது தெரிந்தது.
"அவங்க பேரு.. என்ன பண்றாங்க?''
"கெளசல்யா... ஹவுஸ் ஒய்ஃப்தான்...''
"குட்.. என்னை விட நல்லா இருப்பாங்களா?''
அவன் சற்று யோசித்து விட்டு "ம்... நல்லா இருப்பாங்க...'' என்றான்.
அவள் மேலும் நிம்மதி அடைவது தெரிந்தது.
""குழந்தைங்க''
"ஒரு குழந்தை... பொண்ணு...''
"என்ன பேரு வச்சுருக்கீங்க...'' அவசரமாகக் கேட்டாள்.
""வினோதினி...''
கோபி திரும்பி அருணைப் பார்த்தான். 
வினோதினியின் முகத்தில் மகிழ்ச்சி பரவியது.
""தாங்ஸ் அருண்... இந்த நினைவுகள் போதும், மீதி நாள்களை சந்தோஷமா வாழ...'
அப்போது அவளது குழந்தை அழ ஆரம்பித்தது. அவள் அதை அருணிடம் கொடுத்து வைத்துக் கொள்ளச் சொல்லி விட்டு, ஃபிளாஸ்க்கிலிருந்து ஒரு டம்ளரில் பால் ஊற்றி, அதில் சர்க்கரையை போட்டு கலக்கினாள். பின், அவனிடமிருந்து குழந்தையை வாங்கிக் கொண்டு, அதற்கு பாலை ஊட்ட ஆரம்பித்தாள்.

 

சென்னை சென்ட்ரல். ரயில் வந்து நின்றது. மூவரும் இறங்கி வெளியில் வந்தார்கள். அருண் ஆட்டோ பிடித்து அதில் வினோதினியையும், குழந்தையையும் ஏற்றி அனுப்பி வைத்தான். பின், வேறொரு ஆட்டோ பிடித்து அதில் அவனும் கோபியும் ஏறிக் கொண்டார்கள். 
ஆட்டோ புறப்பட்டதும், கோபி, முதல் வேலையாக, அருணிடம், "எதுக்குடா இத்தனை பொய்...?'' எனக் கேட்டான்.
அருண் அமைதியாக இருந்தான்.
"கல்யாணமாயிடுச்சு... குழந்தை இருக்கு... அது இதுன்னு... நீ பாட்டுக்கு அள்ளி விட்டுட்டு வர்ற...''
அவன், அதற்கும் அமைதியாக இருந்தான்.
"என்னடா... சைலன்ட்டா இருக்க...? எதுக்காக அப்படிச் சொன்ன?''
"வேணும்ன்னுதான்டா சொன்னேன்... அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சு... ஹஸ்பென்ட் குழந்தைங்கன்னு சந்தோஷமா இருக்கா... நான் இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இருக்கேன்னு தெரிஞ்சுது... நம்பளாலதான இவர் இப்படி இருக்கார்ன்னு நெனைச்சு ரொம்ப வருத்தப்படுவா... காரணம், அவதான முதல்ல லவ் பண்ணா... அவதான பிரிஞ்சு போனா... அந்தக் குற்றஉணர்ச்சி அவ மனசுல என்னிக்குமே இருந்துட்டு காயப்படுத்திட்டு இருக்கும். அதனாலதான் அப்படியெல்லாம் பொய் சொன்னேன். எனக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு நான் சொன்னதும் அவ முகத்துல ஒரு நிம்மதி தெரிஞ்சுதே... அதைப் பாத்தியா? அந்த நிம்மதி அவகிட்ட நிரந்தரமா இருக்கணும்... அதுதான் எனக்கும் நிம்மதி...'' என்று சொல்லி கண் கலங்கினான். 
கோபி, அவனைத் தனது தோளில் ஆதரவாக சாய்த்துக் கொண்டான்.

 

http://www.dinamani.com/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நீங்க‌ள் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி 2016க‌ளில் இருந்து 2021வ‌ரை ச‌ரியா க‌ணிச்ச‌ நீங்க‌ளா இல்லை தானே ஏன் இடையில் ஏன் தேவை இல்மாத‌ புல‌ம்ப‌ல்...................விஜேப்பி அண்ணாம‌லை சொன்ன‌து போல் 30ச‌த‌வீத‌ம் பெறுவோனம் என்று ஏதும் ராம‌ர் கோயிலுக்கு போய் சாத்திர‌ம் பார்த்து விட்டு சொன்னாறா அல்ல‌து தேர்த‌ல் ஆணைய‌ம் த‌ங்க‌ட‌ க‌ட்டு பாட்டில் இருக்கு பின் க‌த‌வால் போய் ச‌ரி செய்ய‌லாம் என்ற‌ நினைப்பில் சொன்னாறா நோட்டாவுக்கு கீழ‌ நின்ற‌ க‌ட்சி 30ச‌த‌வீத‌ம் வெல்வோம் என்று சொல்லும் போது புரிய‌ வில்லையா இவ‌ர்க‌ள் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ போகின‌ம் என்று த‌லைகீழ‌ நின்றாலும் வீஜேப்பிக்கு ம‌க்க‌ள் ஆத‌ர‌வு மிக‌ குறைவு........................ஆனால் ஊட‌க‌ங்க‌ள் மூல‌ம் க‌ருத்து க‌ணிப்பு என்று போலி க‌ருத்து திணிப்பு................... நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஒவ்வொரு தேர்த‌ல்க‌ளிலும் வ‌ள‌ந்து கொண்டு வ‌ருது ஈவிம் மிசினில் இருந்து ஓட்டை திருடினால் விஜேப்பி கார‌ங்க‌ள் சொல்லுவாங்க‌ள் சீமானின் விவ‌சாயி சின்ன‌ம் ப‌றி போச்சு அத‌னால் தான் ஓட்டும் குறைஞ்சு  போச்சு என்று பொய் குண்டை தூக்கி த‌லையில் போடுவாங்க‌ள் சீமானின் சின்ன‌ம் என்ன‌ என்று ம‌க்க‌ளுக்கு விழிப்புன‌ர்வு காட்ட‌ போன‌ மாச‌ ஆர‌ம்ப‌ ப‌குதியில் த‌மிழ‌க‌ம் எங்கும் நோடிஸ் ஒட்ட‌ ப‌ட்ட‌து மைக் சின்ன‌மும் த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு சென்று விட்ட‌து அதுக்கு க‌ட்சி பிள்ளைக‌ள் க‌டின‌மாய் ப‌ணி செய்தவை அதோட‌ விஜேன்ட‌ பாட்டில் கூட‌ மைக் சின்ன‌ம் போஸ்ட் இணைய‌த்த‌ல் க‌ல‌க்கின‌து......................நாம் த‌மிழ‌ருக்கு 7/ 10 ச‌த‌வீத‌ ஓட்டு கிடைக்கும் 10த்தையும் தாண்ட‌ வாய்ப்பு இருக்கு..................யூன் 4 ச‌ந்திப்போம் இந்த‌ துரியில்🙏🥰................................  
    • நான் அறிந்த வரை காளியம்மாள் கிட்டதட்ட வெல்லும் நிலையாம்…. பயந்து போன தீம்கா….ஒரு வாக்குக்கு ஒரு கோடி வரை கொடுத்ததாம்🤣 🤣
    • இந்தியாவில் லோக்சபா தேர்தல் கட்டம் கட்டமாக நடப்ப்துதான் வழமை. பெரிய மாநிலங்களில் பிரிப்பார்கள். ஆனால் வெறும் 39 தொகுதிகள் உடைய மத்திய அளவு மாநிலமான தமிழ் நாட்டில் ஒரே நாளில்தான் வைப்பார்கள்.   கை காட்டலும் தொடரும்🤣
    • கெட்ட வார்த்தை பின்னோட்டங்கள் இட்டவர்கள் எல்லோரும் நாம் தமிழர் கட்சிகளை சேர்ந்தவர்களாம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.