Jump to content

பிரதமராகிறார் கரு ஜயசூரிய: புதிய அமைச்சரவை தயார்?


Recommended Posts

பிரதமராகிறார் கரு ஜயசூரிய: புதிய அமைச்சரவை தயார்?

67
 
 
karu_jayasuriya--696x392.jpg

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் பதற்றத்தை தணிக்கும் வகையில் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய புதிய அமைச்சரவை உருவாக்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்தி வெளியாகியுள்ளது.

இதுதொடர்பான உத்தியோகபூர்வ செய்திகள் ஒரு சில தினங்களுக்குள் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசின் அடிப்படையில் ஜனாதிபதியினால் திட்டமிடப்பட்டுள்ள புதிய அமைச்சரவையில், பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த கரு ஜயசூரிய நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன் புதிய அமைச்சரவையில் 24 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களை நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதனடிப்படையில் பின்வருவோர் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

1. பிரதமர் மற்றும் ஆவணப்படுத்தல் அமைச்சர் – கரு ஜயசூரிய2. நீதியமைச்சர் – விஜயதாச ராஜபக்ஷ3. திட்டமிடல் அமுலாக்கல் – சரத் அமுனுகம4. நிதி மற்றும் திட்டமிடல் – எரான் விக்கிரமரட்ண5. வெளிவிவகாரம் – வசந்த சேனாநயக்க6. சுகாதாரம் – நிமல் ஸ்ரீபால டி சில்வா7. கல்வி, உயர் கல்வி – புத்திக பத்திரன8. வர்த்தக, வாணிபம் – ஹர்ச டி சில்வா9. கைத்தொழில், விஞ்ஞான தொழில்நுட்பம் – சுசில் பிரேமஜயந்த10. விவசாயம், உணவு உற்பத்தி – மஹிந்த அமரவீர11. மாகாணம் மற்றும் பொதுநிர்வாக உள்ளூராட்சி – ஜோன் செனவிரட்ண12. சமூக நலன்புரி மற்றும் சுற்றுச்சுழல் – தலதா அத்துக்கோரல1.3 வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி – சஜித் பிரேமாதாஸ14. சுற்றுலாத்துறை மற்றும் ஊடகம் – கயந்த கருணாதிலக்க15. துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை விமான போக்குவரத்து – மஹிந்த சமரசிங்க16. பெற்றோலிய எரிபொருள் துறை – எஸ்.பி திசாநாயக்க17. விளையாட்டு மற்றும் கலாச்சாரம் – நவீன் திசாநயக்க18. சமய விவகாரம் – சம்பிக்க ரணவக்க19. மீள்நல்லிணகம் மற்றும் மீள் குடியேற்றம் – ஆறுமுகன் தொண்டமான்20. தபால் தொலைத்தொடர்பு – ரவூப் ஹக்கீம்21. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் – அர்ஜூன ரணதுங்க22. தொழில் வேலைவாய்ப்பு – ரிஷாத் பதியுதீன்23. மீன்பிடி அபிவிருத்தி – டக்ளஸ் தேவானந்தா

24. காணி மற்றும் நீர்விநியோகம் – சந்திம வீரக்கொடி

https://www.quicknewstamil.com/2018/02/17/பிரதமராகிறார்-கரு-ஜயசூரி/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.