Jump to content

தமிழ் தரப்­புக்­க­ளுக்கு மக்கள் வழங்­கிய ஆணை


Recommended Posts

தமிழ் தரப்­புக்­க­ளுக்கு மக்கள் வழங்­கிய ஆணை

sfas-ee659ff965a8a7752c01ee6a46416556afd18bc5.jpg

 

இந்த நாட்டில் 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்­பட்­டதில் இருந்து தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் அணு­கு­மு­றை­களில் மாற்றம் ஏற்­பட்­டி­ருக்­கி­றது. 2009 ஆம் ஆண்டு தமிழ் மக்­களின் உரி­மைக்­கான ஆயுதப் போராட்டம் மௌனிக்­கப்­பட்ட பின்னர் அந்த மக்­களின் உரிமை கோரிக்­கையை தொடர்ச்­சி­யாக ஜன­நா­யக ரீதி­யாக முன்­னெ­டுக்க வேண்­டிய பாரிய பொறுப்பு தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தோள்­களில் விழுந்­தி­ருந்­தது. மாறி­வந்த சர்­வ­தேச சூழலை அதா­வது இறுதிப் போரின் போது இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் மனிதஉரிமை மீறல்கள்,போர்க்­குற்­றங்கள் என்­ப­வற்றை மூல­த­ன­மாகக் கொண்டு தமிழ் மக்­க­ளது அடிப்­படை பிர­ச­்­சி­னைகள் தொடக்கம் நிரந்­தர தீர்வு வரை தீர்க்கக் கூடிய வாய்ப்பி­ருந்தும் அதில் கூட்­ட­மைப்பு தலை­மையின் இரா­ஜ­தந்­திரம் தோற்­று­விட்­ட­தா­கவே கரு­த­வேண்­டி­யுள்­ளது. மாறாக இலங்கை அர­சாங்கம் ஐ.நா.மனி­த­ உ­ரிமைகள் பேர­வையில் இணை அனு­ச­ரணை வழங்கி நிறை­வேற்­றிய தீர்­மா­னத்தைக் கூட நடை­மு­றைப்­ப­டுத்­தாது மேலும் இரண்டு ஆண்­டுகள் கால அவ­கா­சத்தை தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தலை­மையின் ஆத­ர­வுடன் பெற்­றி­ருந்­தது. இந்­த ­நி­லையில் கால அவ­கா­சத்தைப் பெற்றுக் கொண்ட இலங்கை அர­சாங்கம் மக்­க­ளது நாளாந்த பிரச்­ச­ினை­களைக் கூட தீர்ப்­ப­தற்கு தயக்கம் காட்டி வரும் நிலை­மையே உள்­ளது.

வடக்கு,கிழக்கு பிர­தே­சங்­களில் காணி ­களை விடு­விக்கக் கோரியும், காணாமல் ஆக்­கப்­பட்­டோ­ருக்கு நீதி கோரியும், அர­சியல் கைதி­களை விடு­விக்கக் கோரியும் ஜன­நா­யக ரீதி­யாக மக்­களால் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் தொடர் போராட்­டங்கள் ஒரு வரு­டத்தை எட்­டி­யுள்­ளது. தமது குடும்­பங்­களை பிரிந்து, வீடு­களை விட்டு தமக்கு கிடைக்க வேண்­டிய நீதி, நியா­யத்­திற்­காக அந்த மக்கள் வீதி­யோ­ரங்­களில் இருந்து போரா­டு­கின்ற நிலை­யிலும், நல்­லாட்சி என்று சொல்­லப்­படும் இந்த அர­சாங்கம் அந்த மக்கள் விட­யத்தில் குறைந்­த­பட்சம் மனி­தா­பி­மான ரீதியில் கூட நடந்து கொள்­ள­வில்லை. ஆட்சி மாற்­றத்­திற்கு உத­விய தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு எதிர்­க்கட்சி வரி­சையில் இருந்து அர­சாங்­கத்­துடன் இணக்க அர­சியல் செய்து வரு­கின்ற போதும், இந்த விட­யத்தில் காத்­தி­ர­மாக செயற்­ப­ட­வில்லை. அர­சாங்­கத்­தி­னதும் தமது தலை­மை­க­ளி­னதும் செயற்­பா­டு­களால் விரக்­தி­ய­டைந்த மக்கள் தாமா­கவே தமது உரி­மைக்­கா­கவும் நீதிக்­கா­கவும் ஜன­நா­யக போராட்ட களங்­களை உரு­வாக்­கி­யுள்­ள­துடன் தமக்­கான ஒரு மாற்றுத் தலைமை பற்­றிய தேடல்­க­ளையும் ஆரம்­பித்­தி­ருந்­தனர். 

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தவ­று­களை சுட்­டிக்­காட்டி தமிழ் மக்­களின் நியா­ய­பூர்­வ­மான கோரிக்­கை­க­ளையும் அபி­லா­ஷை­க­ளையும் வலி­யு­றுத்தி, மக்கள் எழுச்­சி­யுடன் கூடிய 'எழுக தமிழ் 'மக்கள் எழுச்­சியை ஏற்­ப­டுத்­தியும் இருந்த வடக்கு முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரனின் இணைத் தலை­மை­யி­லான தமிழ் மக்கள் பேரவை கூட ஒரு மக்கள் இயக்கம் என்ற வகையில் தமது தலை­மைகள் மீது வெறுப்­ப­டைந்த மக்­க­ளுக்கு சரி­யான அர­சியல் தலை­மையை இனங்­காட்ட தவ­றி­யி­ருக்­கி­றது. வடக்கு முத­ல­மைச்சர் தலை­மையில் ஒரு மாற்றுத் தலைமை உரு­வாகும் என பர­வ­லாக பேசப்­பட்ட நிலையில் வடக்கு முத­ல­மைச்சர் மாற்று தலை­­மைக்கு தலைமை கொடுக்க தயக்கம் காட்டி வரு­கின்றார். இந்த நிலையில் தமிழ் மக்கள் தமது தலை­மைகள் மேல் அதி­ருப்­தி­ய­டைந்­த­வர்­க­ளாக மேய்ப்பார் அற்ற மந்­தை­க­ளாக வாக்குச்சீட்­டினை பயன்­ப­டுத்­தி­யுள்­ளனர். இதுவே தென்­னி­லங்கை தேசிய கட்­சிகள் வடக்கு, கிழக்கில் அதி­க­மாக கால் ஊன்­று­வ­தற்கு கார­ண­மாக அமைந்­தி­ருக்­கின்­றது. தமிழ் மக்கள் தமது தலை­மைகள் மீது கொண்­டுள்ள அதி­ருப்­தியை சாத­க­மாகப் பயன்­ப­டுத்தி தென்­னி­லங்கை ஆளும் கட்­சி­களின் பிர­தி­நி­தி­க­ளாக வடக்கு, கிழக்கில் செயற்­ப­டு­கின்­ற­வர்கள். தங்­களை தமிழ் தேசிய இனத்தின் மீது பற்­றுள்­ள­வர்­க­ளா­கவும் பாரா­ளு­மன்­றத்தில் அர­சாங்­கத்­திற்கு எதி­ரா­கவே குரல் கொடுப்­ப­வர்­க­ளா­கவும் காட்டிக்கொள்­வதன் மூலம் தென்­னி­லங்கை தேசிய கட்­சி­களின் வாக்கு வங்­கியை அதி­க­ரிக்கச் செய்­துள்­ளனர். வட மாகா­ணத்தைப் பொறுத்­த­வரை ஐக்­கிய தேசியக் கட்சி  92 ஆச­னங்­க­ளையும் ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்சி 73 ஆச­னங்­க­ளையும் ஸ்ரீ­லங்கா பொது­ஜன பெர­முன 27 ஆச­னங்­க­ளையும் பெற்­றுள்­ளன. தமிழ் மக்­க­ளுக்கு சரி­யான அர­சியல் விழிப்­பு­ணர்வு ஊட்­டப்­ப­டா­மையும் தமது தலை­மை­களின் மீதான வெறுப்பும் மாற்றுத் தலைமை பற்­றிய தேடல்­க­ளுமே தென்­னி­லங்கை தேசியக் கட்­சி­களின் வாக்கு வங்­கியை அதி­க­ரிக்கச் செய்­துள்­ளது. இந்த நிலையில் தமிழ் மக்கள் பேர­வை­யாக இருந்­தாலும் சரி அல்­லது ஏனைய தமிழ் கட்­சி­க­ளாக இருந்­தாலும் சரி மக்கள் நலன்சார் அர­சி­ய­லையும் வேலைத் திட்­டங்­க­ளையும் முன்­னெ­டுத்து மக்­களை ஒரு அர­சியல் அணி­யாக அணி திரட்­டாத பட்­சத்தில் அடுத்து வரும் தேர்­தல்­களில் இந்த நிலை மேலும் மோச­ம­டையக் கூடிய சூழலை உரு­வாக்கும்.

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு எதி­ரான ஒரு மாற்று அணி­யாக கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் தலை­மை­யி­லான தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணியும் சுரேஷ் பிரே­மச்சந்­திரன் தலை­மை­யி­லான ஈ.பி.­ஆர்.­எல்.எப். அணியும் இணைந்து புதிய கூட்டு ஒன்­றினை உரு­வாக்கும் முயற்­சியில் ஈடு­பட்­டி­ருந்­தன. அவ்­வா­றான ஒரு கூட்டு உரு­வா­கி­யி­ருக்கும் பட்­சத்தில் பல தரப்­புக்­களும் அத­னுடன் இணைந்து கொள்­வ­தற்­கான வாய்ப்­புக்­களும் தமிழ் மக்கள் பேர­வை­யினது ஆத­ரவை முழு­மை­யாக பெறக்கூடிய சூழலும் உரு­வா­கி­யி­ருக்கும். இதனால் வாக்குச் சித­றலை கட்­டுப்­ப­டுத்தி தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு மாற்று அணி­யாக அந்த அணி எழுச்சி பெறக் கூடிய நிலை உரு­வா­கி­யி­ருக்கும். தமிழ் தேசிய மக்கள் முன்­னணி வடக்கில் பெற்றுக் கொண்ட 90 ஆச­னங்­க­ளையும் தமிழர் விடு­தலைக் கூட்­டணி வடக்கில் பெற்றுக் கொண்ட 40 ஆச­னங்­க­ளையும் விட மேலும் பல ஆச­னங்­களை பெற்று தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு பாரிய நெருக்­க­டி­களை உரு­வாக்கி மாற்று அணி­யாக தமிழ் தேசிய அர­சி­யலை முன்­ன­கர்த்­தி­யி­ருக்க முடியும். ஆனால் அந்த வாய்ப்பை ஈ.பி.­ஆர்­.எல்.எப். தவ­ற­விட்­டி­ருக்­கின்­றது. 

தேர்தல் முடி­வு­களின் படி தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு மாற்­றீ­டாக தமிழ் தேசிய அர­சி­யலை முன்­ன­கர்த்தும் மாற்று அணி­யாக தமிழ் தேசிய மக்கள் முன்­னனி மாறி­யி­ருக்­கின்­றது. இந்த மாற்றம் சாதா­ர­ண­மாக ஏற்­பட்­ட­தொன்­றல்ல. கடந்த 2010 ஆண்டில் இருந்து அந்தக் கட்சி தனது கொள்­கையில் உறு­தி­யா­க­வி­ருந்து தொடர்ச்­சி­யான தோல்­வி­க­ளுக்கு மத்­தியில் முன்­னெ­டுத்து வந்த அர­சியல் வேலைத்­திட்­டங்­களின் அறு­வ­டையே. வடக்கு, கிழக்கு பகு­தி­களின் எல்லா மாவட்­டங்­க­ளிலும் தமது கட்­சியின் பிர­தி­நி­தித்­து­வத்தை உள்­ளூ­ராட்சி சபை­க­ளினூ­டாக நிலை­நி­றுத்­தி­யுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்­னணி யாழ்ப்­பா­ணத்தில் இரு நக­ர­ச­பை­க­ளையும் கைப்­பற்றி கூட்­ட­மைப்­புக்கு அதிர்ச்சி கொடுத்­தி­ருக்­கின்­றது. தமிழ் மக்கள் மனங்­களில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் அணு­கு­மு­றை­களால் மாற்றம் ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. அந்த மாற்­றத்­தையே தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணியும் தமிழர் விடு­தலைக் கூட்­டணியும் தென்­னி­லங்கை கட்­சி­களும் சில சுயேச்சைக் குழுக்­களும் ஈ.பி.­டி.­பி.யும் அறு­வடை செய்­தி­ருக்­கின்­றன. தமிழ் தேசிய அர­சி­யலை முன்­ன­கர்த்தும் தரப்­புக்­களை தவிர, தென்­னி­லங்கை சக்­திகள் பெற்றுக் கொண்ட வாக்­கினை எதிர்­வரும் தேர்­தல்­களில் தமிழ் தேசிய கட்­சி­களின் வாக்கு வங்­கி­யாக மாற்ற வேண்­டிய ஒரு நிலை ஏற்­பட்­டுள்­ளது. இதன் மூலமே தமிழ் தேசி­யத்தின் இருப்பை தக்க வைக்க முடியும்.

மக்கள் வழங்­கிய ஆணையை மதித்து தமிழ் தலைமைகள் தமக்கு கிடைத்த உள்ளூராட்சி சபைகளின் ஊடாக வினைத்திறனுடனும் திட்டமிடலுடனும் மக்கள் நலன்சார் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அதற்கு கட்சி அரசியல் பாராது தமிழ் தரப்புக்கள் ஆதரவு வழங்கி போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த முன்வரவேண்டும். இதன் மூலமே வெறுப்படைந்துள்ள மக்கள் மீது அரசியல் ரீதியான ஒரு நம்பிக்கையை ஏற்படுத்த முடியும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தான் தமிழ் மக்களது ஏக பிரதிநிதிகள் என்ற நிலை மாறியிருக்கின்றது. இந்த தேர்தல் முடிவுகளின் படி தமிழ் தரப்புக்களை ஒன்றிணைத்து நிரந்தர தீர்வுக்கான பயணத்தை மேற்கொள்ள தமிழ் தரப்புக்கள் முன்வரவேண்டும். இதுவே மக்கள் வழங்கிய ஆணையை மதிப்பதாக அமையும்

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-02-17#page-4

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.