Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 இம்முறை  கனடாவின் பனிக்காலம்    மிகவும் உக்கிரமான குளிராக இருந்தது ...எத்தனை ஆடைகளுக்கு மேல் ஆடைகளாக துணி  மூடடையாக  உடுத்தினாலும் எலும்பை ஊடுருவும் குளிராக இருந்தது ...அது ஒரு மார்கழி மாதத்தின் இறுதி வாரம் ..வனிதாவின்   கனடா  வாழ்வின் ஏழாவது 
வருடம் ..தாயகத்தில்  மூன்று அண்ணா மாருக்கு செல்லத்தங்கையாக வாழ்ந்தவள் .  வான் மீகனுக்கு  வாழ்க்கைப்பட்டு ஆறு வயதில்  ஒரு மகளையும் .. தற்போது  ஆறுமாதக் குழந்தையாய் ஒரு ஆண்மகவையும் பெற்று இருந்தாள் .  

நாட்டுக்கு வந்த தொடக்கத்தில்  வெண் பனியை  அள்ளி அழைந்து    விளையாடியவள்.   தற்போது வெளியில் செல்லவே அஞ்சும் குளிராக மாறிவிட்டிருந்தது . வான்மீகனுக்கு இரண்டு பெண் சகோதரிகள் அவர்களது கலியாணம்    வயதான பெற்றோரின் தேவைகள் அது இது என்று  அவர்களை கரை சேர்த்து விட்டு  ..அவன் திருமணம் முடிக்கும் போது  முப்பத்தைந்து வயதாகி விட்ட்து ..வனிதாவும் வந்து  தான் கற்ற கல்வியின்  பயனால் வங்கியில்  ஆரம்ப நிலை பணியில் சேர்த்துக்கொள்ள படடாள் .  முதலில் மகள்    பிறந்ததும்  ..அவர்கள்   இருந்த  தொடர் மாடிக்கு குடியிருப்பில் ஒரே பூச்சி த்  தொல்லை  இந்த குழந்தையை வைத்து கொண்டு இங்கிருக்க வேண்டாம்  என  நண்பர்கள் சொன்னதால்   ஒரு  சிறு வீடடை கடன்  பட்டும்  கைமாற்றகவும்  நண்பர்களின் உதவியினாலும்  வாங்கி  கொண்டனர் . மகள்   பிறந்து ஒருவருட மகப்பேற்று விடுமுறை முடித்தும் வேலைக்கு செல்ல முயன்றவளை  வான்மீகன் தடுத்தான் .  இருந்தும்  உறவுக்கார பெரியம்மா  குழந்தையை  பராமரிக்க முன்  வந்ததினால் ..அவளும் வேலைக்கு சென்று  நண்பர்களின் கடன் கட்டி முடித்தனர் . இருந்தும் குழந்தைகளின் செலவு   வீட்டு  அடமானக் கடன்  மாதாந்த  கடடணங்கள்  தாய் தந்தைக்கு  நல்ல  நாள்  பெருநாட்களில் அனுப்பும் சிறு தொகை     என  வனிதாவின் சம்பளம் கை கொடுத்தது .  மீண்டும்  ஒரு வாரிசு வேண்டும் என்  எண்ணவே மகனும் பிறந்து ஆறுமாதங்களாயின. 

அதிகாலை  ஆறுமணியிருக்கும் .. ஒரு வெளிநாட்டு தொல்லை பேசி அழைப்பு .. உறவினரின்  அவசர அழைப்பாக இருக்கும் என   எண்ணி .. எடுத்தவளுக்கு   ஏன்  அழைப்பை   எடுத்தோம் என்றாகி விட்ட்து ...  அப்போ து தான் இரவிரவாய் சளித்தொல்லையால்  உறக்க  மின்றி அழுத  பிள்ளை  உறங்க ஆரம்பித்திருந்தான்.  வான்மீகனும்  இரண்டு வேலை செய்கிறான்  குழந்தைகளின் செலவுக்காக .  அவனும் இரவு வேலையால்  வந்து  அப்போது தான்  உறங்கச் சென்று இருந்தான் .   இந்த நேரத்தில்   இப்படியும் சில மனிதர்கள் .

ஊரில் பக்கத்து  வீட்டு   செல்வம் அக்கா .... கொஞ்சம் கஷ்டரமாய் இருக்கு   உதவி  செல்வீர்களா என் கேட்ட்பதற்காக எடுத்து இருந்தாள்  . ...ஏற்கனவே   ...ஒருதடவை கேட்ட்  போது    வான்மீகனிடம் சொல்லிவிட்டு அனுப்பி இருந் தாள் .  மீண்டும்  .... கணவன் வேறு  பெண்ணுடன்  ஓடி  ..விடடான் .. ஒரு நேரக்கஞ்சி தான் குடிக்கிறோம் ...கூலி வேலைக்கு  தான்  போகிறேன் .. இரண்டு   பிள்ளைகளுக்கும்    பள்ளிக்கூட செலவு ..  மாறி போடா யூனிபோம்  இல்லை 
 ஆன சப்பாத்து இல்ல ..lஎன்று அழுது  மன்றாடினாள்.  கணவனுக்கு தெரியாமலே  கொஞ்சம் பணம் அனுப்பி இருந்தாள் ....

இப்பொது மூத்தவள் ஓடிபோய்வி டடாள்  இருந்ததெல்லாம்  விற்று ... அவள் போன இடத்தில் கண் கலங்க கூடாதென்று  அவளை    பொடியன்   வீட்டாரிடம்  அனுப்பி     விடடேன் ..  இப்பொது  ...முன்பு போல  வேலை செய்ய முடியவில்லை ..ஒரே நெஞ்சு நோ ... என் காலம் முடிவதற்குள்   சின்னவளையும்  
க ட்டிக்கொடுக்க வேண்டும்.  என்று  தன சோகத்தை  சொல்லி அழுதாள்.   பிள்ளையை  ஏதும் வேலைக்கு அனுப்பலாம்தானே? என்று  சொன்னதற்கு மறு முனையில் பேச்சு இல்லை...  தனக்கு தெரிந்த  வேறு உறவினர்   ஊரவர்கள் பெயரை சொல்லி அவர்களின் நம்பர் தாருங்கோ என்றும் கேடடாள் ...  ..நன்றாக்  வாங்கி   ...அனுபவ பட்டு   இருக்கிறா போல. இர ந்து வாழ்தல் பல வகை இதுவும் ஒரு வகையோ ..


... செல்வம் அக்கா போனை வையுங்கோ  இவரிடம்  கேட்டு பார்க்கிறேன் நானும் மகன்  பிறந்து இருப்பதால் வேலைக்கு போவதில்லை எங்கள் பாடும் கஷ்டம் அக்கா என்று போனை வைத்து    விடடாள் .

 ஊர வர்களிடம் வாங்கி  வாழ்க்கையை கொண்டு செல்ல இருக்கும் இவர்களின்  திறமையை எங்கோ போய்  சொல்வது ...  நாட்டுப்  பிரச்சினைகளுக்கு பின் எத்தனயோ தொழிற் சார் நிறுவங்கள் வந்துவிட்ட்ன .. உழைத்து  வாழ  இவர்களுக்கு ஏன்  தெரிவதில்லை. வெளிநாட்டிலும்   கடுங்  குளிர் ..கொடிய வெயில்  கால  நிலை தொல்லைகளுக்கு மத்தியில்  இயந்திரத்தனமாக தானே வாழ்கிறார்கள் , உழைக்கிறார்கள் . ஏனொ  இந்த ஜனங்களுக்கு உழைத்து வாழ்வை கொண்டு செல்ல மனம்  வருவதில்லை .. எதுவரை இவர்களை  தூக்கி விட முடியும்.  .இப்போது பிரச்சினைகள்  தணிந்துவிட்ட்னவே ...ஒரு  வழி   அடைத்தால்  மறு   வழி    திறக்க இவர்கள் பாடு படுவதே இல்லை . வாழ் நாள் முழுக்க பிறர் கையை நம்பி  இருக்கலாமா   ஏன்   இவர்களைப் போன்ற்வர்களுக்கு  புரிவதில்லை .  முயற்சியும்  தன்னம்பிக்கையும் இருந்தால் ..முடியும் வரை வாழலாம் .

  கடவுளே ...இந்த ஊரில் இருப்பவர்களுக்கு   வெளிநாட்டில் காசு மரத்தில் காய்கிறது என்ற எண்ணம் போலும்.  வெளி நாட்டில் வேலை     ..இயந்திரங்களோடு இயந்திரமாய்  எட்டு பத்துமணி நேரம் கால் கடுக்க நின்று  ..உழைத்து ..பின் வீட்டுக்கு வந்து .. சமைத்து  குழந்தைகளை குளிக்க வார்த்து  ..உணவூட்டி  படுக்க விட்டு அப்பாடா என்று . காட்டிலில் சாய மணி   பதினொரு ,பன்னிரண்டுமணியாகி விடும்.    அப்போது தான்  உறங்கச்  சென்றது  போல் இருக்கும்  அதிகாலை ஐந்து  மணி என்று அலாரம் கிணுகிணு க்கும்.   கணவனை வேலைக்கு அனுப்பி  குழந்தையை   பாடசாலையில் விட்டு   கைக்    குழந்தையை  தூங்க வைத்து  வீடடை ....ஒழுங்கு படுத்தி . முடிந்ததை  .சமைத்து    .. அப்பாடா  என்று  உட்க்கார    மற்ற குழந்தையை   எடுக்கும்  நேரம் வந்து விடும்.   நாட்கள் வாரங்களாகி  ,வாரங்கள்   மாதங்கள்   ஆகி  காலம் தான் வெகு வேகமாக ஓடுகிறது.  ..

.விடுமுறை காலத்தில் இங்குள்ளவர்கள்  ஊருக்கு சென்று படங்காட்டுவது ...கடன் பட்டு சென்று செலவழிப்பது ...எல்லாம் மாயை என்று எங்கே அவர்களுக்கு விளங்க போகிறது ...   காசு ..காசு ... வெளி நாட்டுக் காசு..

க ஷ்ர ரப்படடவர்களுக்கு ..உதவி ஒருமுறை செய்யாலாம் .இரு முறை செய்யலாம் .  வாழ்நாள்மு ழுக்க கொடுத்துக் கொண்டே  இருக்கமுடியுமா ?அதை விட அவரக்ளுக்கு ஒரு வேலை வாய்ப்பை   வருமானம் ஈட்டும் முறைமையை ஏற்படுத்தி கொடுப்பது தான் ...புத்திசாலித்தனம்.  ஒரு   மூத்தோர்  வாக்கு மொழி இருக்கிறது ...பசி உள்ளவனுக்கு மீனைக் கொடுக்காதே  மீனை பிடிக்க கற்றுக் கொடு ... என்று ...காசை  கொடுத்துக் காடடாமல் ...  வாழ வழியைக் காட்டுவோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டு காசில் வாழலாம் , வெளிநாட்டுக்கு வந்துவிட்டால்  சொர்க்கம் என்று நினைப்பவர்களூக்கும் சேர்த்து 2009 போட்டது ஆப்பு...

பளபளப்பான எமது கார்களும், வீடுகளும், உடைகளும்,காலணிகளும்..பிரஜாவுரிமையும்...

செத்துப்போன போராளிகளும் மக்களும் எமக்கு தந்த மூலதனம்... இனிமேயாவது சொந்தமா வாழ சொல்லுறீங்க...

புரியுது நிலாமதி அக்கா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  1. நாம் எப்படித்தான் எடுத்துச் சொன்னாலும் புலத்தில் இருப்பவர்களுக்கு புலம் பெயர்ந்தவர்களின் வழ்வு மாயமான்தான். என்றாலும் அங்கிருப்பவர்களுக்கு உதவ வேண்டுமென்பதே எம் அனைவரின் ஆழ்மனதிலும் வேடூன்றி இருக்கும் தாகம். அதை சிலர் தவறாக உபயோகிப்பதை காணக்கூடியதாய் இருந்தாலும் மீண்டும் மீண்டும் உதவ விரும்பும் மனதை என்ன செய்வது.  இப்போது பலரும் வழ்வாதாரத்துக்கு தேவையான நடைமுறைகளைச் செய்து கொடுப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். இங்கிருந்து போய் வருபவர்கள் அங்கு ஏதோ சொர்க்கத்திலிருந்து இறங்கி வருபவர்கள் போல் படம் காட்டினால் அவர்கள்தான் என்ன செய்வார்கள். முதலில் திருந்த வேண்டியவர்கள் நாங்களே.  நல்லதொரு ஆக்கம் நிலாமதி.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரின் நிலை இப்போதிக்கு மாறாது அக்கா. எப்ப நாம் திருந்துகிறோமோ  அப்பா கொஞ்சம் மாறலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிலாமதி said:

.பசி உள்ளவனுக்கு மீனைக் கொடுக்காதே  மீனை பிடிக்க கற்றுக் கொடு ...

இந்த முதுமொழியை சீன கம்யூனிஸ்ட் தலைவர் மாவோ சேதுங் சொல்லியிருந்தார்.

இந்தப் பிரச்சனை பலருக்கும் உண்டு.சொல்லி விழங்க வைக்க முடியாது.பத்து தரம் கொடுத்து ஒரு தடவை இல்லை என்றால் பத்து தடவை கொடுத்ததும் வீண்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வளவன் கண்மணி அக்கா சுமேரியர் ஈழப்பிரியன் ஆகியோருக்கும்   விருப்பு வாக்கு இடடவர்களுக்கும் நன்றி . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“பசி உள்ளவனுக்கு மீனைக் கொடுக்காதே  மீனை பிடிக்க கற்றுக் கொடு ... என்று ...காசை  கொடுத்துக் காடடாமல் ...  வாழ வழியைக் காட்டுவோம்”  சத்தான வரிகள் நிலாமதி.??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டுக் காசில் வாழவேண்டிய நிலையில் இன்னும் பலர் தாயகத்தில் உள்ளனர். ஒரு பகுதியினர் தமது ஆடம்பர வாழ்வுக்கு வெளிநாட்டுக் காசை வேண்டி நிற்கின்றனர். இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்கவேண்டும்.

அன்றாட வாழ்வுக்கே அல்லாடும் நிலையில் இருந்தாலும் தங்கள் உறவினர்கள், தெரிந்தவர்களுக்கு உதவும் தாராள மனப்பான்மை கொண்டவர்களாக பலர் இப்போதும் வெளிநாடுகளில் உள்ளனர். ஆனால் இந்த வெளிநாட்டில் இருந்து காசு அனுப்பும் நிலை அடுத்த தலைமுறையோடு காணாமல் போய்விடும் என்றுதான் நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

தற்போது வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்புவது முன்பைக் காட்டிலும் பாதிக்கும் மேலாக குறைந்து விட்டது.  மேலே கூறியது போல்  அடுத்த தலைமுறையோடு காணாமல் போய்விடும். வெளிநாட்டுப் பணம் சமநிலையற்ற சூழுலை உருவாக்கியுள்ளது. பலருக்கு வெளிநாட்டுப் பணம் கடன் கட்டவும் அன்றாட சீவியத்துக்குமே தேவைப்படுகின்றது. சிலருக்கு தொழில் முதலீடாகவும்நிலம் வாகனங்கள் வாங்கவும் தேவைப்படுகின்றது. வெளிநாட்டுப் பணம் இறுதியில் சில முதலாளிகளை உருவாக்கிவிட்டே  நின்றுகொள்ளும். நேரடியாகவே வெளிநாட்டில் உள்ளவர்கள் ஏராளமான காணிகளை வாங்கியுள்ளார்கள். தற்போது ஐம்பது நூறு ஏக்கரில் பண்ணைகளை உருவாக்கும் முயற்சியில் உள்ளார்கள். பனையால் வீழ்ந்தவனை மாடேறி மிதித்ததுபேல் போரால் பாதிக்கப்பட்ட பல வறுமைப்பட்ட மக்களை வெளிநாட்டுப் பணம் என்னும் வறுமைக்குள்ளாகவே தள்ளியும் உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ நிலைமை தலைகீலாகுது போல் உள்ளது.அங்கிருந்து வரும் செய்திகள் சொல்லுகின்றன .

இந்தியாவில் முகாம்களை தவிர்த்து வெளியில் இருந்தவர்கள் பலர் தாயகம் திரும்பி உள்ளார்கள் .

வெளியில் இப்படியான குளிர் நோய் களை தவிர்க்க இங்குள்ள வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு இந்த வாடகை பணத்தில் அங்கு போய் செட்டிலாகுதுகள் .

Image may contain: sky, cloud, tree and outdoor

https://www.facebook.com/HariEngineersLK/?hc_ref=ART40bwDUXKKbfU4IbUBDwl95_0cBcYOL22mUZmR2gGl8t3e_fKI8eiU5v4BoUQsZUs&pnref=story

இப்படி திரும்பி வருபவர்களுக்கு வீடு கட்ட என்று யாழில் இவர்களை போல் பலர் கிளம்பி உள்ளார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது நன்பன் ஒருவர் தனக்கு ஏதாவது மேலதிக வருமானம் வந்தால் அதை ஊரில் உள்ளவர்களுக்கு அனுப்புவது வழமை.ஒரு முறை என்னிடம் தந்து கொடுக்கச் சொன்னார்.அவர்களுக்கு விட்டுத்திட்டம் கொடுத்திருந்தார்கள்.அவர் மற்றும் சிலரிடமும் உதவிகள் பெறுவதற்க்கு முயல்கிறார்.இவளவுக்கும் அக்கம் பக்கத்தில் வேலைக்கு ஆட்க்கள் பிடிப்பது கடினம்.

4 hours ago, சண்டமாருதன் said:

தற்போது வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்புவது முன்பைக் காட்டிலும் பாதிக்கும் மேலாக குறைந்து விட்டது.  மேலே கூறியது போல்  அடுத்த தலைமுறையோடு காணாமல் போய்விடும். வெளிநாட்டுப் பணம் சமநிலையற்ற சூழுலை உருவாக்கியுள்ளது. பலருக்கு வெளிநாட்டுப் பணம் கடன் கட்டவும் அன்றாட சீவியத்துக்குமே தேவைப்படுகின்றது. சிலருக்கு தொழில் முதலீடாகவும்நிலம் வாகனங்கள் வாங்கவும் தேவைப்படுகின்றது. வெளிநாட்டுப் பணம் இறுதியில் சில முதலாளிகளை உருவாக்கிவிட்டே  நின்றுகொள்ளும். நேரடியாகவே வெளிநாட்டில் உள்ளவர்கள் ஏராளமான காணிகளை வாங்கியுள்ளார்கள். தற்போது ஐம்பது நூறு ஏக்கரில் பண்ணைகளை உருவாக்கும் முயற்சியில் உள்ளார்கள். பனையால் வீழ்ந்தவனை மாடேறி மிதித்ததுபேல் போரால் பாதிக்கப்பட்ட பல வறுமைப்பட்ட மக்களை வெளிநாட்டுப் பணம் என்னும் வறுமைக்குள்ளாகவே தள்ளியும் உள்ளது. 

நல்ல விடையம் தானே

Link to comment
Share on other sites

4 hours ago, சுவைப்பிரியன் said:

எனது நன்பன் ஒருவர் தனக்கு ஏதாவது மேலதிக வருமானம் வந்தால் அதை ஊரில் உள்ளவர்களுக்கு அனுப்புவது வழமை.ஒரு முறை என்னிடம் தந்து கொடுக்கச் சொன்னார்.அவர்களுக்கு விட்டுத்திட்டம் கொடுத்திருந்தார்கள்.அவர் மற்றும் சிலரிடமும் உதவிகள் பெறுவதற்க்கு முயல்கிறார்.இவளவுக்கும் அக்கம் பக்கத்தில் வேலைக்கு ஆட்க்கள் பிடிப்பது கடினம்.

நல்ல விடையம் தானே

 

[இவளவுக்கும் அக்கம் பக்கத்தில் வேலைக்கு ஆட்க்கள் பிடிப்பது கடினம்]

நீங்கள், புல்லுப்படுங்கிற, தறைசாறுற வேலையத்தானே சொல்லுறியள், இருந்தா சொல்லுங்கோ நாங்கள் எங்கடை குடும்பமாய்ப்போய் செய்கின்றோம். *****: ****** **********

Link to comment
Share on other sites

6 hours ago, சுவைப்பிரியன் said:

எனது நன்பன் ஒருவர் தனக்கு ஏதாவது மேலதிக வருமானம் வந்தால் அதை ஊரில் உள்ளவர்களுக்கு அனுப்புவது வழமை.ஒரு முறை என்னிடம் தந்து கொடுக்கச் சொன்னார்.அவர்களுக்கு விட்டுத்திட்டம் கொடுத்திருந்தார்கள்.அவர் மற்றும் சிலரிடமும் உதவிகள் பெறுவதற்க்கு முயல்கிறார்.இவளவுக்கும் அக்கம் பக்கத்தில் வேலைக்கு ஆட்க்கள் பிடிப்பது கடினம்.

நல்ல விடையம் தானே

நல்ல விடயம் என்று எலலாவற்றையும் சொல்வதற்கில்லை. வெளிநாட்டுப்பணம் தாயக மக்களின் பொருளாதரத்தை மேம்படுத்தவும் போரால் நலிந்தவர்களை மேம்படுததவும் அவர்களை இயல்பான பொருளாதார சூழலுக்கு திருப்பவும் உதவும் வகையில் இருக்கும் வரையே நல்லது. வெளிநாட்டுப்பணம் புதிய முதலாளிகளை உருவாக்கும் போது அதில் எந்த நன்மையும் கிடையாது. பணமுள்ளவர்கள் மற்றும் அரச சார்பு பணியாளர்கள் பேரினவாதத்தை அனுசரித்து அண்டிப்பிழைப்பதுபோல் முதலாளிகளும் பேரினவாதிகளை அண்டிப்பிழைக்கும் நிலை சாதராணமானது. வறுமைப்பட்ட மக்கள் இரட்டிப்பு அழுத்தத்திற்கு உள்ளாவார்கள். தற்போதும் இந்த நிலை பரவலாக உள்ளது. அனுப்பப் படும் வெளிநாட்டுப் பணத்தை வறுமைப்பட்டமக்களுக்கு வட்டிக்கு  கொடுப்பதும் வாழ்நாள் முழுக்க வட்டி கட்ட உழைப்பதும்.. வயல்க்காணிகளை ஈடுவைப்பதும் அதை மீளமுடியாமல் விவசாயம் செய்ய வேண்டியவர்கள் கூலிவேலை செய்வதும் என ஏராளமான சிக்கல்கள் இருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல இயல்பான கதை சகோதரி....! 

என்ன மீன் பிடிக்க கற்றுக் குடுப்பது ஒன்றும் பெரிய வேலையில்லை, பிறகு தூண்டிலும் புழுவும் வாங்கிக் குடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். எப்படி வசதி....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம் அக்கா சொல்வது சரிதான்  சிலர் ஆடம்பர வாழ்க்கைக்கு பயன்ப்டுத்துகிறார்கள் சிலர் அதை பயன்படுத்துகிறார்கள் நிலமை  சீராக வேண்டும் எங்கே எப்போது என்ன நடக்குமென்று தெரியாத சூழ் சிலை தற்போதும் நிகழ்கிறது  உங்களின் சொந்தங்கள் மூலமாக சிறிய சிறிய தொழில் தொடங்கலை ஆரம்பிக்கலாம் ஆனால் பெரிய தொழிலை செய்யவே கன பேர் நினைக்கிறார்கள் 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டில் ஒரு இளம் குடும்பம் எதிர்நோக்கும் பிரச்சனைகளை கதை பேசியிருக்கிறது. இந்தக் கதை பேசாத விடயங்களும் உண்டு. பல குடும்பங்களில் கணவன் மனைவி முகம்பார்த்து பேசுவது கூட குறைவாக இருக்கிறது. எங்கள் சமூகம் அகதிகளாக வந்து படிப்படியாக உழைப்பால் முன்னுக்கு வந்து கொண்டிருப்பவர்கள். ஒரு தலைமுறையின் வாழ்வே மகிழ்ச்சியான தருணங்கள் என்பனவற்றை இழந்து பொருளாதாரப்பலவீனங்களால் வாழ்க்கையை வரமாக அல்ல சாபமாக நினைக்கும் பலரை வெளிநாடுகளில் காணமுடிகிறது. வெளிநாட்டுக்கு வந்தவர்கள் தமக்காக மட்டுமல்ல அவர்களுக்கு இரு குடும்பச் சுமைகள் வெளிநாட்டில் ஒன்று தாயகத்தில் மற்றையதுபோன்று விட்டெறிந்து விடமுடியாத சுமைகள். போருக்கு முகங்கொடுத்தவர்கள் என்ற அங்குள்ளவர்கள் மீதான இரக்கத்தை அங்குள்ளவர்கள் பலரும் தமது ஆடம்பரத்திற்கு பயன்படுத்த முனைவது கண்கூடு. உழைக்க விரும்பாத ஒரு சமூக வளர்ச்சி வெளிநாட்டில் வாழும் நம்மவர்களை சுரண்டி பருத்திருக்கிறது. அங்கு வேலைக்கு ஆட்களைப்பிடிப்பது குதிரைக்கொம்பு என்ற அளவில்... பலரும் சும்மாவே வெட்டியாக இருக்கிறார்கள் ஏதாவது வேலை செய்ய முயற்சிப்பதே இல்லை ஆனால் வசதியாக நம்மைவிட செல்வச் செழிப்போடு இருக்கிறார்கள். நாம்தான் வெளிநாடுகளில் வருடத்திற்கு குறைந்தது இரண்டு தடவையாவது காலநிலை மாற்றத்தால் நோய்வாய்ப்பட்டு ஓரிரு வாரங்கள் படுக்கையில கிடப்பதும் பின்னர் எழுந்தால் ப்ரேக்கில்லாத சைக்கிளில் உழக்குவதும் போல வாழ்வு இதற்குள் ஊருக்குப் போனால் கையேந்தி வந்து நிற்பவர்களுக்கு தான தருமம். இவற்றை மீறித்தான் அங்கு நிற்கும் சிலநாட்களாவது வாழ்க்கையை அனுபவிப்போம் என்ற பேரவா... வாழாமல் வாழ்வதாய் நம்மை நாமே ஏமாற்றி இப்போதும் வாழ்கிறோம். காதலோடு முகம்பார்த்து பேச நேரமற்றவர்களாக.... நம்மையும் கொஞ்சம் மாற்றிக் கொள்ளவேண்டும் இனியாவது எமக்காக வாழ்வோம் என்று முடிவெடுத்தால் இப்படியான இரக்கும் சோம்போறிகள் குறைவார்கள். நல்ல கருப்பொருளை  கதையின் மூலம் பேசுபொருள் ஆக்கியிருக்கிறீர்கள் நிலாமதியக்கா பாராட்டுக்களும் வாழ்த்துகளும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

நம்மையும் கொஞ்சம் மாற்றிக் கொள்ளவேண்டும் இனியாவது எமக்காக வாழ்வோம்

?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/02/2018 at 9:18 AM, பெருமாள் said:

எனக்கென்னவோ நிலைமை தலைகீலாகுது போல் உள்ளது.அங்கிருந்து வரும் செய்திகள் சொல்லுகின்றன .

இந்தியாவில் முகாம்களை தவிர்த்து வெளியில் இருந்தவர்கள் பலர் தாயகம் திரும்பி உள்ளார்கள் .

வெளியில் இப்படியான குளிர் நோய் களை தவிர்க்க இங்குள்ள வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு இந்த வாடகை பணத்தில் அங்கு போய் செட்டிலாகுதுகள் .

Image may contain: sky, cloud, tree and outdoor

https://www.facebook.com/HariEngineersLK/?hc_ref=ART40bwDUXKKbfU4IbUBDwl95_0cBcYOL22mUZmR2gGl8t3e_fKI8eiU5v4BoUQsZUs&pnref=story

இப்படி திரும்பி வருபவர்களுக்கு வீடு கட்ட என்று யாழில் இவர்களை போல் பலர் கிளம்பி உள்ளார்கள் .

இதில் என்ன தவறு உள்ளது? தமிழர்களால் தமிழர்களை கொண்டு நடத்தப்படும் நிறுவனம்.

என்னுடன் கூடப்படித்தவர்கள் கட்டடத் தொழிலில் உள்ளனர், புலம்பெயர் நாடுகளில் உள்ள Dr, Eng, Accountants என்று பலர் அங்கு வீடுகளை கட்டிக் கொண்டிருக்கிறார்கள். Bank to Bank பணத்தை அனுப்புகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, MEERA said:

இதில் என்ன தவறு உள்ளது? தமிழர்களால்

மன்னிக்கவும் "பலர் கிளம்பி உள்ளார்கள் ." எனும் சொற்பதம் உங்களை கோபப்படுத்தி உள்ளதுபோல் இருக்கு .

அவர்கள் செய்வது நல்ல விடயமே புலம்பெயர் பணம் வடகிழக்கில் புழங்குவது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் இருக்கும் பழைய மாணவர் சங்கமொன்றுக்கு,  ஊரில இருக்கும் பாடசாலையினர் உதவி கேட்டு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார்கள். அதிபர் ஒருவரின் பிரியாவிடை விழாவுக்கும் , சரஸ்வதி பூசை விழாவுக்கு காசு கேட்டு அனுப்பி இருந்தார்கள்.  போர்க்காலத்தில் மிகவும் வசதியற்ற காலத்தில் அங்கு சரஸ்வதி பூசையோ , பிரியாவிடை நிகழ்வுகள் நடக்கவில்லையா? . எல்லாம் இப்பொழுது அங்கு ஆடம்பரமாகி விட்டது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.