Jump to content

ரிச்சர்ட்ஸ் சாதனையைத் தாண்டுவாரா கோலி? மலைக்க வைக்கும் புள்ளிவிவரங்கள்!


Recommended Posts

ரிச்சர்ட்ஸ் சாதனையைத் தாண்டுவாரா கோலி? மலைக்க வைக்கும் புள்ளிவிவரங்கள்!

kohli_6th7878

 

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 6-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 6 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரை 5-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்தியா ஒருநாள் தொடரை வென்றது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

செஞ்சுரியனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 46.5 ஓவர்களில் 204 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து ஆடிய இந்தியா 32.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்து வென்றது. தென் ஆப்பிரிக்க இன்னிங்ஸின் போது ஷர்துல் தாக்குர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியும், இந்திய இன்னிங்ஸின்போது கேப்டன் கோலி 129 ரன்கள் விளாசியும் அணியின் வெற்றிக்கு அடிக்கோலினர். கோலி 19 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 129 ரன்களுடனும், ரஹானே 34 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கோலி ஆட்டநாயகன், தொடர் நாயகன் விருது வென்றார்.

* இது விராட் கோலியின் 35-வது ஒருநாள் சதம். 208 ஒருநாள் ஆட்டங்களில் 9588 ரன்கள் எடுத்துள்ளார்.

* இந்த ஒருநாள் தொடரில் கோலி எடுத்த ரன்கள்: 112, 46*, 160*, 75, 36, 129*. மூன்றாவது முறையாக தொடர் நாயகன் விருதைப் பெற்றுள்ளார்.

* இலக்கை விரட்டும்போது எடுத்த 21-வது சதம். வெளிநாடுகளில் அவருடைய 21-வது சதம். கேப்டனாக இருந்து எடுத்துள்ள 13-வது சதம். தென் ஆப்பிரிக்காவில் இது அவருடைய மூன்றாவது சதம். கோலி எடுத்த சதங்களில் வெற்றியைத் தேடித்தந்த 30-வது சதம். சச்சினுக்கு 33 வெற்றிகரமான சதங்கள் உண்டு. அதையும் கோலி விரைவில் தாண்டிவிட வாய்ப்புண்டு.

* தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மொத்தமாக கோலி 558 ரன்கள் விளாசியுள்ளார். இதன்மூலமாக, இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 500 ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார். முன்னதாக, சகநாட்டவரான ரோஹித் சர்மா கடந்த 2013-14 காலகட்டத்தில் இந்தியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 6 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 491 ரன்கள் விளாசியதே அதிகபட்சமாக இருந்தது.

* அடுத்து நடைபெறவுள்ள டி20 தொடரில் கோலி 156 ரன்கள் எடுத்துவிட்டால் தென் ஆப்பிரிக்கச் சுற்றுப்பயணத்தில் 1000 ரன்கள் எடுத்த வீரர் என்கிற பெருமையை அடைவார். இதற்கு முன்பு ஒரேயொரு பேட்ஸ்மேன் மட்டுமே ஒரு சுற்றுப்பயணத்தில் 1000 ரன்கள் எடுத்துள்ளார்.

1976-ல் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்த மே.இ. வீரர் விவ் ரிச்சர்ட்ஸ், டெஸ்டுகளில் 829 ரன்களும் ஒருநாள் தொடரில் 216 ரன்களும் என ஒட்டுமொத்த அந்தச் சுற்றுப்பயணத்தில் மட்டும் 1045 ரன்கள் எடுத்து சாதனை புரிந்தார். அதை டி 20 தொடரில் தாண்டிச் செல்வாரா கோலி?

அதிக ஒருநாள் சதங்கள்

சச்சின் - 49 (452 இன்னிங்ஸ்)
 கோலி - 35 (200)
 பாண்டிங் - 30 (365)

ஜெயசூர்யா - 28 (433)

ஆம்லா - 26 (161)

அதிக சர்வதேச சதங்கள் (டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்றும் சேர்த்து) 

சச்சின் - 100
 
பாண்டிங் - 71 

சங்கக்காரா - 63
 
காலிஸ் - 62 

கோலி - 56

குறைந்த இன்னிங்ஸில் 9500 ஒருநாள் ரன்கள்

200 விராட் கோலி
215 டி வில்லியர்ஸ்
246 கங்குலி
247 டெண்டுல்கர்
256 தோனி

kohli_6th67.jpg

அதிவேக சர்வதேச 17,000 ரன்கள்

கோலி - 363 இன்னிங்ஸ்
ஆம்லா - 381 இன்னிங்ஸ்
( ஆம்லா, 363 இன்னிங்ஸில் 16,000 ரன்களே எடுத்தார்!)

அதிக ஒருநாள் ரன்கள் - இந்திய வீரர்கள்

சச்சின் - 18426 ரன்கள் (452 இன்னிங்ஸ்)
கங்குலி - 11221 ரன்கள் (297)
டிராவிட் - 10768 ரன்கள் (314)
தோனி - 9793 ரன்கள் (269)
கோலி - 9588 ரன்கள் (200)

இன்னிங்ஸ்/ சர்வதேச சதங்கள் (குறைந்தபட்சம் 30 சர்வதேச சதங்கள்) 

6.48 - விராட் கோலி
7.35 - ஆம்லா
7.42 - ஸ்டீவ் ஸ்மித்
7.82 - டெண்டுல்கர் 
8.69 - வார்னர்

கேப்டனாக அதிக ஒருநாள் சதங்கள் எடுத்தவர்கள்

22 - பாண்டிங் (220 இன்னிங்ஸ்)

13 - விராட் கோலி (46), டி வில்லியர்ஸ் (98)

11 - கங்குலி (143)
10 - ஜெயசூர்யா (118)

விராட் கோலியின் பேட்டிங் சராசரி

53.40 - டெஸ்டுகள் 

58.10 - ஒருநாள் போட்டிகள்
 
52.86 - டி20 போட்டிகள்

விராட் கோலியின் 35 ஒருநாள் சதங்கள்

இந்தியாவில் - 14 சதங்கள்

வங்கதேசத்தில் - 5 சதங்கள்

ஆஸ்திரேலியாவில் - 4 சதங்கள் 

இலங்கையில் - 4 சதங்கள் 
தென் ஆப்பிரிக்காவில் - 3 சதங்கள் 
மேற்கிந்தியத் தீவுகளில் - 2 சதங்கள் 
இங்கிலாந்து/நியூஸிலாந்து/ஜிம்பாப்வே ஆகிய நாடுகளில் - தலா 1 சதம்

விராட் கோலி: 2018 தென் ஆப்பிரிக்கச் சுற்றுப்பயணம் 

டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் (286)
ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் (558)

இந்தியா - தென் ஆப்பிரிக்கா தொடர்: டெஸ்ட் & ஒருநாள்

விராட் கோலி - 844 ரன்கள்
ஆம்லா - 357 ரன்கள்
தவன் - 355 ரன்கள்
டு பிளெஸ்ஸிஸ் - 303 ரன்கள்

* ஒரு தொடரில் மூன்று சதங்கள் எடுத்த இந்திய வீரர்களின் பட்டியலில் கோலியும் இடம்பெற்றுள்ளார். ஆனால் இருதரப்பு ஒருநாள் தொடரில் 3 சதங்கள் எடுத்த முதல் இந்தியர் - கோலி.

உலகக் கோப்பை 2003 (தெ.ஆ.) - கங்குலி - 3 சதங்கள்
விபி சீரீஸ் 2004 (ஆஸ்திரேலியா) - லட்சுமணன் - 3 சதங்கள்
ஒருநாள் தொடர் 2018 (தெ.ஆ.) - விராட் கோலி - 3 சதங்கள்

குறைந்த ஒருநாள் ஆட்டங்களில் 100 கேட்சுகள்

கோலி - 208 ஒருநாள் ஆட்டங்கள்
ரெய்னா - 223
அசாருதீன் - 231
டிராவிட் - 283
டெண்டுல்கர் - 333 

http://www.dinamani.com/sports/sports-news/2018/feb/17/record-breaker-kohli-leads-india-to-another-easy-win-over-sa-2865312--2.html

Link to comment
Share on other sites

பல மைல்கற்களை எட்டிய விராட் கோலி: ஒரு நாள் தொடரின் சுவராஸ்ய புள்ளிவிவரங்கள்

 

 
Virat%20Kohli

கோப்புப்படம்: விராட் கோலி

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடந்து முடிந்த ஒருநாள் தொடரில் இந்திய அணியும், கேப்டன் விராட் கோலியும் பல்வேறு மைல் கற்களை எட்டியுள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவில் பயணம் மேற்கொண்டு இந்திய அணி விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இழந்தபோதிலும், ஒருநாள் தொடரில் அசத்திய இந்திய அணி 5-1 என்று கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது.

செஞ்சூரியன் நடந்த இறுதி மற்றும் 6-வது ஒருநாள் போட்டியில் கேப்டன் விராட் கோலியின் (129) அபாரமான சதத்தால், இந்தியஅணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்தது. இந்த தொடரில் பல்வேறு சாதனைகளையும் இந்திய வீரர்களும், அணியும் படைத்துள்ளது.

அந்த சுவாரஸ்ய புள்ளிவிவரங்கள்:

1. தென் ஆப்பிரிக்காவுடன் நடந்த ஒருநாள் தொடரில் 4 முறை இந்திய அணி முதலில் பந்துவீசியுள்ளது இதுதான் முதல்முறையாகும்.

2. கடந்த 2004-05 ஆம் ஆண்டுக்குப் பின் இரு நாடுகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில் 50 விக்கெட்டுகளுக்கு மேல் தென் ஆப்பிரிக்கா இழந்தது இது முதல்முறையாகும். இதற்கு முன் 2004-05 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணியுடன் விளையாடியபோது, 53 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

3. இரு நாடுகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில் 500 ரன்களுக்கு மேல் குவித்த சர்வதேச அளவில் முதல் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார்.

4. சச்சின் டெண்டுகல்கருக்கு பின், ஒருநாள், மற்றும் போட்டித் தொடர்களில் 500 ரன்களுக்கு மேல் குவித்த 2-வது வீரர் விராட் கோலி ஆவார்.

5. தென் ஆப்பிரிக்க அணி 2-வது முறையாக சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை இழந்துள்ளது. இதற்கு முன் கடந்த 2001-02 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிடம் ஒருநாள் தொடரை இழந்தது.

6. கேப்டனாக பொறுப்பு வகித்து அதிகமான சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி 2-வது இடத்தில் உள்ளார். கோலி மொத்தம் 13 சதங்கள் அடித்துள்ளார்.

7. சர்வதேச அளவில் சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி 5-வது இடத்தில் உள்ளார்.

8. இரு நாடுகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில் அதிகமான விக்கெட்டுகள் எடுத்த 2-வது வீரர் என்ற பெயரை குல்தீப் யாதவ் பெற்றார். இவர் 16 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

9. இரு நாடுகளுக்குஇடையிலான ஒருநாள் தொடரில் அதிகமான விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற பெயரை யுவேந்திர சாஹ் பெற்றார். இவர் 17 விக்கெட்டுகளை வீழ்த்தினார்

10. 6-வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி பெற்ற ஆட்ட நாயகன் விருது அவர் பெறும் 28-வது விருதாகும். இந்திய அளவில் கங்குலி, சச்சினுக்கு பின் அதிகமான ஆட்டநாயகன் விருதை கோலி பெற்றுள்ளார்.

11. இரு நாடுகளுக்குஇடையிலான ஒருநாள் தொடரில் சழற்பந்து வீச்சு மூலம் 33 விக்கெட்டுகளை வீழ்த்திய அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றது.

12. 6-வது ஒருநாள் போட்டியில் கேப்டன் விராட் கோலி அடித்த சதம் அவர் சர்வதேசப் போட்டியில் அடிக்கும் 35-வது சதமாகும்.

13. காலண்டர் ஆண்டில் 500 ரன்களை கடக்க விராட் கோலி 47 நாட்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதற்கு முன் 2003 ஆம் ஆண்டில் சச்சின் டெண்டுல்கர் 500 ரன்களைக் கடக்க 69 நாட்கள் எடுத்ததே மிகக் குறைவானதாக இருந்தது.

14. 6-வது போட்டியில் விராட் கோலி பிடித்த கேட்ச் ஒருநாள் போட்டியில் அவர் பிடித்த 100-வது கேட்ச் ஆக அமைந்தது.

15. இரு நாடுகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில் அதிகமான ரன்களை குவித்த இந்திய வீரர் எனும் பெருமையை விராட் கோலி பெற்றார். இதற்கு முன் 2015-16 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரோகித் சர்மா 441 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தது.

http://tamil.thehindu.com/sports/article22784238.ece?homepage=true

Link to comment
Share on other sites

விவ் ரிச்சர்ட்ஸுக்கு மட்டுமே உரித்தான சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி?

 

 
viv-virat

விவ் ரிச்சர்ட்ஸ், விராட் கோலி.   -  படம். | பிசிசிஐ ட்விட்டர் பக்கம்.

கிரிக்கெட்டின் பல சாதனைகளை முறியடித்து வரும் விராட் கோலி, ஒருநாள், டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசைப்புள்ளிகளில் 900 புள்ளிகளைக் கடந்து சாதித்தது ஒருபுறம் இருக்க, மாஸ்டர் பிளாஸ்டர் விவ் ரிச்சர்ட்ஸ் வைத்திருக்கும் ஒரே சாதனையையும் விராட் கோலி முறியடிக்க தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதாவது கோலி இன்னும் 130 ரன்களை எடுத்தால் ஒரே தொடரில் ஒட்டுமொத்தமாக 1,000 ரன்கள் மைல்கல்லை எட்டும் வாய்ப்பை நெருங்கியுள்ளார். இந்தச் சாதனையை கோலி நிகழ்த்தினார் என்றால் சர்வதேச கிரிக்கெட்டில் இதனை நிகழ்த்தும் 2வது வீரர் என்ற பெருமையை எட்டுவார்.

டெஸ்ட் தொடரில் 286 ரன்களையும் ஒருநாள் தொடரில் 558 ரன்களையும் எடுத்துள்ள விராட் கோலி டி20 போட்டியில் 26 ரன்களை எடுத்துள்ளார். இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா தொடரில் இதுவரை 870 ரன்களைக் குவித்துள்ளார்.

மே.இ.தீவுகள் முன்னாள் அதிரடி மன்னன் விவ் ரிச்சர்ட்ஸ்தான் இதற்கு முன்னர் 1045 ரன்களை இங்கிலாந்துக்கு எதிரான ஒரே தொடரில் 1976-ம் ஆண்டில் எடுத்து சாதித்துள்ளார். இதில் ஒருநாள் தொடரில் விவ் ரிச்சர்ட்ஸ் 216 ரன்களையும் டெஸ்ட் தொடரில் 4 டெஸ்ட் போட்டிகளில் 829 ரன்களையும் குவித்து சாதனையை தன் வசம் வைத்துள்ளார்.

டான் பிராட்மேன் இங்கிலாந்துக்கு ஆஸ்திரேலியா பயணம் மேற்கொண்ட போது ஒரே தொடரில் 974 ரன்களைக் குவித்திருக்கிறார். அப்போது ஒருநாள் போட்டி என்ற கருத்தாக்கமே கிடையாது என்பதால் அவரால் 1000 ரன்கள் மைல்கல்லை எட்ட முடியவில்லை.

இந்தியாவில் சுனில் கவாஸ்கர் மே.இ.தீவுகளுக்கு எதிராக தன் அறிமுகத் தொடரிலேயே 4 டெஸ்ட் போட்டிகளில் 774 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மீதமுள்ள 2 டி20 போட்டிகளில் கோலி இந்த மைல்கல்லை எட்ட வாய்ப்பு உருவாகியுள்ளது, நாளை 2-வது டி20 போட்டி நடைபெறுகிறது.

http://tamil.thehindu.com/sports/article22807918.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது யாழ்ப்பாணத்தில் இல்லை.  பூந்கரிக்குத் தெற்கே, பூநகரி மன்னார் வீதியில் ஜெயபுரத்திற்கு(சந்தி ) மேற்கே 7/8 Km ல் இருக்கிறது.    https://www.aloeus.com/devils-point-veravil/
    • தகவலுக்கு நன்றி  இந்த ஊர்  யாழ்பாணத்தில் எங்கே இருக்கின்றது என்பதே எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன். முன்பு யாழ்கள உறவு தனிஒருவன் சொன்னவர் வீட்டு திட்டம் வந்த போதும் எதிர்ப்பு தெரிவித்து வீடும் கிடைக்காமல் போய்விட்டது.இங்கே உள்ளவர்கள் சென்றுவந்தவர்களும் அப்படியே  சொன்னவர்கள். இப்படியே தொழில்சாலை வேண்டாம் வீடு வேண்டாம் எதிர்த்து கொண்டிருந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு சிங்கள பிரதேசங்களுக்கு சென்று தான் குடியேறுவார்கள்.
    • நானும் அறிமுகமாகிக்கிறேன்..🙏 கி.பி.2009ல் ஈழம் செய்திகளின் தேடலின் போது யாழுக்கு வந்தேன். அதன்பின் யாழும், உறவுகளும் அன்பால் என்னை கட்டிப்போட்டுவிட்டனர்.😍 தில்லையில் பொறியியல் படித்த, மதுரையை அண்மித்த சிற்றூரை பிறப்பிடமாகக் கொண்ட மூத்த பொறியாளன். வெளிநாட்டில் வசிக்கிறேன். BTW, இந்த சீமந்து தொழிற்சாலையில் 'ப்ராசஸ்' எப்படி? பொலுசன் இல்லாத தொழிற் நுட்பம்தானே? 🙂
    • மிக்க நன்றி, கு.சா🙏  பரிமளம் அம்மணி நலமா? 😋 கரணவாய் பக்கம் போறது இல்லையா? கரணவாய் மூத்த விநாயகர் ஆலயம் உங்களை தேடுது, குசா..😍 ஒரு எட்டுக்கா அம்மணியோட போய் வாங்கோ.😎 அப்படியா? 😮 மிக்க நன்றி, நுணா 🙏 மிக்க நன்றி,  ஈழப்பிரியன் 🙏 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- யாழ் உறவுகள் அனைவருக்கும் ...
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.