Jump to content

விக்னேஸ்வரனின் இந்துத்வா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விக்னேஸ்வரனின் இந்துத்வா?

on February 17, 2018

 

2a9b28845969757dadd9681d72058cf.jpg

 

பட மூலம், SrilankaBrief

எமது வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் வாரந்தோறும் அரசியல் நிலைவரங்கள் குறித்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கான பதில்கள் என்ற வடிவில் தனது கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டு வருகிறார். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர் கருணாநிதி முரசொலி பத்திரிகையில் ‘உடன்பிறப்புகளுக்கு’ என்ற தலைப்பில் எழுதிய கடிதங்களை நினைவுபடுத்துவதாக எமது முதலமைச்சரின் இந்தக் கேள்வி பதில்கள் அமைந்திருக்கின்றன.

தனது ‘உடன்பிறப்புகளுக்கு’ விக்னேஸ்வரன் கூறுகின்ற அரசியல் ஆலோசனைகள் அல்லது செய்கின்ற போதனைகள் என்று இதை வர்ணிக்கலாம். அதை எமது தமிழ்ப் பத்திரிகைகள் ஒரு சொல் தவறாது செம்மையாகப் பிரசுரித்துவருவதையும் காணக்கூடியதாக இருக்கிறது.

கடந்த வாரம் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களுக்குப் பிறகு தோன்றியிருக்கும் அரசியல் நிலைவரங்கள் குறித்து நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை முதலமைச்சர் தனது ‘உடன்பிறப்புகளுக்கு’ விளக்கமளித்திருந்தார். அதில் அவர் “எமது உரிமைகளையும் உரித்துக்களையும் பெற்றுக்கொள்வதில் சமரசத்துக்கு இடமின்றி தீர்க்கதரிசனத்துடன் செயற்பட்டிருந்தால் தெற்கில் எவர் ஆட்சிக்கு வந்தாலும் அச்சம் கொள்ளத்தேவையில்லை என்றும், சிங்கள மக்களின் காவலனாக மஹிந்த ராஜபக்‌ஷ இன்னமும் அடையாளப்படுத்தப்படுவதை இனவாதத்தின் பிரதிபலிப்பாகப் பார்க்கவில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

பல காரணிகள் ஒன்றாகச் சேர்ந்தே ராஜபக்‌ஷவை முன்னிலைப்படுத்தியுள்ளன என்று கூறியிருக்கும் விக்னேஸ்வரன், மேற்கு நாடுகள் ராஜபக்‌ஷவை எதிர்ப்பது சீனா எமது நாட்டில் காலூன்றக்கூடாது என்பதாலேயே. நாளைக்கு மேற்குலகுடன் சேர அவர் முன்வந்தால் மைத்திரியும் ரணிலும் தூக்கியெறியப்படுவார்கள். ஆகவே, இனவாதத்தைத் தூண்டுபவையாக ராஜபக்‌ஷவின் செயல்களைப் பார்க்கவில்லை. அவர் இனவாதக் கருத்துக்களை வெளியிடுகிறார் என்பதற்காக அவரை எதிர்க்கவேண்டியதில்லை என்று ஒரு விளக்கத்தையும் அளித்திருக்கிறார்.

இதைவிட வேறு ஒன்றையும் முதலமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார். அதுவே மிகவும் முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டியதாகும். அதாவது, மஹிந்த ராஜபக்‌ஷவைப் பேய் பிசாசாகக் காட்டவேண்டிய தேவை மேற்கு நாட்டவர்களுக்கும் தற்போதைய இலங்கை அரசாங்கத்துக்கும் மேற்குலக மதங்களுக்குக் கட்டுப்பட்டிருப்பவர்களுக்கும் இருக்கலாம். அது அவர்களின் சுயநலன்களுக்கானது என்பதை நாம் மறத்தலாகாது என்றும் விக்னேஸ்வரன் கூறுகிறார்.

ராஜபக்‌ஷ இன்று தென்னிலங்கையில் மீண்டும் முன்னிலைப்படுத்தப்படுவதற்கு பல காரணிகள் இருக்கின்றன என்ற முதலமைச்சரின் கருத்து சரியானதாக இருந்தாலும் கூட சிங்கள பௌத்த தேசியவாத அரசியல் சக்திகளின் பாதுகாவலனாக அவர் தன்னைக் காட்டிக்கொள்வதாலும் சிறுபான்மையினங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளில் குறைந்தபட்சமானவற்றைக் கூட ஏற்றுக்கொள்ளத் தயாரில்லாத பேரினவாத அரசியல் நிலைப்பாடுடையவர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குவதாலுமே அவர் தென்னிலங்கையில் மிகுந்த செல்வாக்குடைய அரசியல் தலைவராக இருக்கமுடிகிறது. இனப்பிரச்சினைக்குத் தமிழர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயபூர்வமான அரசியல் தீர்வொன்று காணப்படவேண்டுமென்ற நிலைப்பாட்டை எடுத்து தனது தற்போதைய போக்கில் ஒரு தளர்வைக் காட்டுவாரேயானால் ராஜபக்‌ஷவினால் செல்வாக்கை நிலைநிறுத்த முடியாமல் போகும் என்பது நிச்சயம். அடிப்படையில் அவரின் செல்வாக்கு இனவாதத் தளத்தைக் கொண்டதே.

இதைப் புரிந்துகொள்ள முடியாதவரல்ல முதலமைச்சர் விக்னேஸ்வரன். ஆனால், ஏனோ அவர் சிங்கள மக்களின் காவலனாக அடையாளப்படுத்தப்படும் ராஜபக்‌ஷவின் செயல்களை இனவாதத்தின் பிரதிபலிப்பாகப் பார்க்கவில்லை என்று கூறி தன்னை ஒரு பொருந்தாத் தன்மைக்குள்ளாக்குகிறார். ராஜபக்‌ஷவுக்கு தமிழர்கள் மத்தியில் இருந்து எவரும் எதிர்பாராத நேசசக்தி ஒன்று கிடைத்திருக்கிறதோ?

ராஜபக்‌ஷவைப் பேய் பிசாசாகக் காட்டவேண்டியதேவை மேற்குலக மதங்களுக்குக் கட்டுப்பட்டிருப்பவர்களுக்கும் இருக்கலாம் என்று கூறியிருப்பதன் மூலம் விக்னேஸ்வரன் தமிழர்களுக்கு உணர்த்த முற்படுகின்ற செய்தி என்ன? மேற்குலக மதங்கள் என்று அவர் கூறுவது கிறிஸ்துவத்தைத் தவிர வேறொன்றுமாக இருக்கமுடியாது. ராஜபக்‌ஷவை தமிழர்களின் நியாயபூர்வமான அபிலாசைகளுக்கு எதிரானவர் (முதலமைச்சரின் பாசையில் பேய் பிசாசு) என்று காட்டுபவர்கள் கிறிஸ்தவர்களே என்று தமிழ்ச் சமூகத்துக்கு அவர் கூறுகிறாரா? யாரை மனதிற்கொண்டு அப்படி அவர் கூறுகிறார்?

இலங்கையில் தமிழ்த் தேசியவாத அரசியலில் இருந்திருக்கக்கூடிய ஆரோக்கியமான அம்சங்களில் ஒன்று மதச்சார்பின்மை என்பது எனது அபிப்பிராயம். இந்துவான ஜீ.ஜீ. பொன்னம்பலத்தை நிராகரித்து கிறிஸ்தவரான தந்தை செல்வாவை இறுதிவரை அரவணைத்தவர்கள் தமிழ் மக்கள். விக்னேஸ்வரனின் கருத்தில் தமிழ் தேசியவாத அரசியலில் ‘ஒரு இந்துத்வாவைத்’ திணிக்கும் நோக்கம் உட்கிடையாக இருக்கிறதோ?

வீ. தனபாலசிங்கம்

 

http://maatram.org/?p=6666

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குலக மதங்கள் என்று பன்மைபட குறிப்பிட்டதை நீங்கள் துர்நோக்கத்துடன்  ஒருமைப்படுத்தி  தனியாக கிறித்தவ மதம் என்று அர்த்தப்படுத்திக்கொள்கிறீர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, vanangaamudi said:

மேற்குலக மதங்கள் என்று பன்மைபட குறிப்பிட்டதை நீங்கள் துர்நோக்கத்துடன்  ஒருமைப்படுத்தி  தனியாக கிறித்தவ மதம் என்று அர்த்தப்படுத்திக்கொள்கிறீர்கள். 

மேற்குலகில் கிறிஸ்தவ மதத்தைத் தவிர வேறு என்ன உள்ளன? பல்வேறு பிரிவுகளாக இருந்தாலும் எல்லாமே கிறிஸ்தவ மதங்கள்தானே.

 

அது சரி. மகிந்தவின் வெற்றியை இனவாதத்தின் பிரதிபலிப்பாகப் பார்க்கவில்லை என்று முதல்வர் கூறியதற்கு உங்கள் வியாக்கியானம் என்ன?

 

 

Link to comment
Share on other sites

ஒரு பெட்டிக்கடையைக் கூட நடத்தும் நிருவாக ஆளுமையற்ற விக்கினேஸ்வரன் போன்ற கள்ளச் சாமி பிரேமானந்தாவின் பக்தனிடம் தமிழர்களது நிருவாகக் கட்டமைப்புத் தாரை வார்க்கப்பட்டதற்கு த,தே. கூட்டமைப்பு என்ன பதில் சொல்லப் போகின்றது எனத் தெரியவில்லை. ஒரு வேளை தெற்குக் குழம்பாமல் இருக்க வேலைகள் செய்வது போல இது இந்தியா குழம்பாமல் இருக்கச் செய்யப்பட்ட வேலையாக இருக்கும் என்பதை விடயமறிந்தவர்கள் புரிந்துகொள்வார்கள்.

premanantha.jpgPremananthabirthday-224x300.jpgபிரேமானந்தா என்ற கள்ளச் சாமியின் ஆசிரமத்தில் இருந்த 13 இற்கு மேற்பட்ட சிறுமிகள் பால் பலாத்காரத்திற்குட்படுத்தப்பட்ட விடயத்திலும் அதனைப் பார்வையுற்ற ஒருவர் கொன்று புதைக்கப்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுக் குற்றம் நிரூபிக்கப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட பிரேமானந்தாவின் வழக்கில் சிறைப்பட்டு இருக்கும் மூவரின் விடுதலையை வேண்டி இந்தியப் பிரதமர் மோடிக்கு விக்கினேஸ்வரன் எழுதிய கடிதமே வட மாகாண முதலமைச்சராகப் பதவியேற்ற பின்னர் அவர் வெளியில் எழுதிய முதற்கடிதமாகும். பின்னர் 2015-02-26 அன்று சிறுமிகளை பால் பலாத்காரத்திற்கு உட்படுத்திய கொலைக் குற்றவாளி பிரேமானந்தா என்ற கள்ளச்சாமிக்கு புளியங்குளத்தில் சிலை வைத்து பூபாள கிருஸ்ணன் ஆலயத்தைத் திறந்து வைத்து உரையாற்றும் போது, பிரேமானந்தாவின் அருளால் இப்படி ஒரு பதவி வாய்ப்புக் கிடைத்துச் பிரேமானந்தாவுக்கு சிலை வைக்க வாய்ப்புக் கிடைத்ததை எண்ணிப் புளகாங்கிதமடைந்தார். இது போன்ற கேவலமான விடயங்களை எப்படிக் கடந்து செல்கின்றோம் என்பது கேவலத்திலும் கேவலமானதே. இனப்படுகொலை என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதில் சட்டச் சிக்கல் இருக்கின்றது என்று சொல்லி வந்த விக்கினேஸ்வரன் இந்தியாவிற்குப் போய் PUCL ஒழுங்கமைத்த கூட்டத்தில் உரையாற்றி விட்டு வந்த பின்னர் இனப்படுகொலைத் தீர்மானத்தை நிறைவேற்றித் திடீரென வன்வலு வேடமிட்டதன் மூலம் கூட்டமைப்பின் இணங்கிப்போகும் மென்போக்கில் விரக்தியுற்றவர்கள் உண்மையான புரட்சிகர சக்திகளாக உருவாகும் சூழல் தவிர்க்கப்பட்டு தமிழர்கள் மீண்டும் மடையராக்கப்பட்டனர். இது இந்திய உளவுத்துறையின் திட்டம் என்பதை அறியாமல் இருப்பதை என்னவென்று கூறலாம்?

http://www.kaakam.com/?p=744

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேரம் கிடைக்கும் போது காங்கேசந்துறை முதல் தாமரை கோபுரம் வரை நான் எடுத்த படங்களையும் இணைக்கிறேன்.  வாசகர்கள் முடிவு செய்யட்டும். அதான் கொக்கதடில மாம்பழம் சிக்கீட்டே. மரநாய் ஏன் கிடந்து உருளுது🤣
    • இந்த வீழ்ச்சிக்கு என்ன காரணம் என எண்ணுகிறீர்கள்?
    • யாராவது தினமுரசில் அற்புதன் எழுதிய இந்த தொடரை வாசிக்காமல் விட்டிருந்தால் இந.த தொடரை நிச்சயமாக பார்க்க வேண்டும்.ஏனெனில் புலிகளுக்கு நேர் எதிரான அணியிலிருந்த ஒருவரால்த் தான் இது எழுதப்பட்டது. நான் இந்த பத்திரிகையை தொடர்ந்து வாங்கிய போது பலரும் மறைமுகமாக ஈபிடிபிக்கு ஆதரவளிப்பதாக கூறினார்கள். நிறைய பேருக்கு ஆரம்பகாலத்தில் போராட்டத்துக்கு வித்துப் போட்டவர்களையும் வித்துடலானவர்களையும் இன்னமும் தெரியாமல் இருக்கிறார்கள்.
    • தென்னாபிரிக்காவில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக சென்ற அந்த பேருந்து செல்லும் வழியில் மாமட்லகலா என்ற இடத்தில் வேகத்தக் கட்டுப்படுத்த முடியாமல் அங்குள்ள பாலத்தில் மோதி தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு இருந்து 165 அடி பள்ளத்தில் விழுந்தது. அங்குள்ள பாறையில் விழுந்த வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் பேருந்தில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிலிருந்தவர்களில் நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிப்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரது உடல்கள் பேருந்தின் அடிப்புறத்தில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தென்னாபிரிக்காவை உலுக்கியுள்ள இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297513
    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.