Jump to content

நான் சிறுத்துப் போனேன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நான் சிறுத்துப் போனேன் 

 

அந்தத் தொலைபேசியின் மணி எப்போதாவதுதான் ஒலிக்கும். அது எனக்கு மட்டும் உரித்தான வீட்டுத் தொலைபேசி. எனது முக்கிய உறவினர்களுக்கு மட்டும்தான் அந்தத் தொலைபேசியின் இலக்கம் தெரியும். வேலை, நண்பர்கள், இன்னபிற தேவைகளுக்கு எனது கைத்தொலைபேசியையே பயன்படுத்திக் கொண்டிந்தேன். 

 

அன்று ஞாயிற்றுக்கிழமை.  வீட்டுத்  தொலைபேசி ஒலித்தது. அழைப்பை ஏற்கும் போது பார்த்தேன். அழைப்பு சிறிலங்காவில் இருந்து வந்திருந்தது. எனது உறவுகள் யாரும் சிறிலங்காவுக்குப் போவதற்கு சாத்தியமில்லையே என்ற நினைப்புடனேயே “ஹலோ சொன்னேன்.

 

ஆர் கவியே கதைக்கிறது?

 

அங்கிருந்து கதைப்பது யாராகா இருக்கும்? பரம இரகசியமாகப் பாதுகாத்த எனது வீட்டுத் தொலைபேசி எப்படி சிறிலங்காவில் உள்ளவருக்குத் தெரிந்திருக்கிறது? என்ற கேள்விகள் என்னுள் எழுந்தாலும், ஓம் கவிதான் கதைக்கிறன். நீங்கள்...என்றேன்.  

 

நான் விமலா. விமலாக்கா. எப்பிடி இருக்கிறாய் கவி?

 

ஊரில் எனது அயல்வீடுதான் விமலா அக்காவின் வீடு. அவருக்கும் எனக்கும் உறவென்று இல்லை. பாசத்தோடு பழகியதால்  பெயரளவில் எனக்கு அக்காவாகிப் போனவர். அவரின் ஒரு மகன் இலண்டனிலும், மகள் கனடாவிலும் குடும்பமாக இருக்கிறார்கள். 

 

எப்பிடி என்ரை ரொலிபோன் நம்பர் உங்களுக்கு கிடைச்சது?” என்று கேட்க எத்தனித்தேன். அதற்கு சிலநொடிகள் கூட ஒதுக்காமலே விமலா அக்காவின் குரல் தொலைபேசியை ஆக்கிரமித்து இருந்தது.

 

அவருடனான உரையாடலில் என்னிடம் இருந்து பணம் எதிர்பார்க்கிறார் என்பது புரிந்தது.

 

ஏன் பிள்ளைகள் காசு அனுப்புற இல்லையோ?

 

அனுப்பினம்தான். மருந்து, அந்தச் செலவு இந்தச் செலவெண்டு காசு செலவழிஞ்சு போயிடுமடா

 

கதைத்து முடிக்கும் போது ஒரு தடவைக்கு இரு தடவை தனது வங்கி விபரத்தை விமலா அக்கா என்னிடம் ஒப்புவித்தார். ஆனால் இறுதிவரை எனது தொலைபேசி இலக்கம் தனக்கு கிடைத்த விபரத்தை அவர் எனக்குச் சொல்லவேயில்லை.

 

சம்பளம் வந்த அடுத்த வாரமே அடுத்த சம்பளத்துக்கு இன்னும் மூன்று வாரங்கள் இருக்கே என்று தவிக்கும் ஜாதி நான். ஆனாலும் விமலா அக்கா கேட்ட போது ஏதாவது அவவுக்குக் கொடு என்று உள்ளுணர்வு சொன்னது. பட்ஜெட்டுக்குள்ளே அடங்காத சம்பளத்தில் 300 யூரோக்கள் விமலா அக்காவுக்கு அனுப்பலாம் என்று கணக்குப் போட்டுக்கொண்டேன்.

 

வருடத் தொடக்கத்தில் பொங்கலுக்கு அன்பளிப்பாக இருக்கட்டும் என்று பணத்தை விமலா அக்காவுக்கு அனுப்பி விட்டு எனது செலவை மேலும் இறுக்கமான கட்டுப்பாட்டுக்குள் அடக்கிக் கொண்டேன்.

 

பொங்கல் முடிந்து இரண்டு மாதங்கள் ஆயிற்று. பணம் கிடைத்ததா இல்லையா என்பது பற்றி விமலா அக்காவிடம் இருந்து தகவல் ஏதும் வரவேயில்லை. ஒருவேளை வங்கி இலக்கத்தில் நான் ஏதாவது பிழை விட்டு விட்டேனா என்ற சந்தேகம் எழ, விமலா அக்காவுக்கு தொலைபேசி எடுத்தேன்.

 

பொங்கல் எப்பிடிப் போச்சுது?

 

நானும், மனுசனும்தானே. பிள்ளைகள் பக்கத்திலை இல்லாததாலை நான் பொங்க இல்லையடா

 

காசு அனுப்பினனான் கிடைச்சதே? பெருமையோடு கேட்டேன்.

 

அது என்னடா கொஞ்சக் காசுதானே. மாத்தக்கை 50,000 ரூபா மட்டிலைதான் வந்தது

 

நான் சிறுத்துப் போனேன்.

 

கவி அருணாசலம்

17.02.2018

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலத்துக்கும்  தாயகத்துக்குமான 

இடைவெளியின் ஒரு யதார்த்தமிது

அனுப்பியவன் தான்

கிடைத்ததையும்  உறுதிப்படுத்தணும்

ஏனெனில் அவனுக்கு மட்டுமே அப்பணத்தின் வலி தெரியும்

 

நன்றி  சகோ

தொடர்ந்து எழுதுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாங்குபர்கள் சிறுத்துப் போகும் நிலைமாறி கொடுப்பவர்கள் சிறுத்துப் போகுமளவிற்கு உலகம் மாறிவிட்டது!

வெளிநாடு போனவர்கள் எல்லாம் குபேரர்களாக இருக்கின்றார்கள் என்றும் போனடித்தால் காசு உடன் வரும் என்று இருந்த காலம் போர் முடிந்து பலர் வெளிநாடுகளில் இருந்து விடுமுறைக்குப் போய் வரும் இக்காலத்திலும் தொடர்கின்றதா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையை வாசித்து முடித்ததும் நான் பூரித்துப் போனேன்!

எனது அனுபவம் பலருக்கும் இருக்கே என்று...!

தொடர்ந்தும் எழுதுங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

 

நீங்களுமா? நானுந்தான்.
இரு வருடங்களுக்கு முன்  எமக்கு ஊரிலிருக்கும் பொழுது எமது குடும்பத்துடன் பழக்கமான ஒருவர். (உறவினர் அல்ல)
திடீரென போன் அடித்தார். எப்படி எமது நம்பர் எடுத்தாரோ தெரியாது. அக்கா எனது மகனுக்கு யூனிவசிற்றி கிடைச்சிருக்கு . அவனுக்கு அங்க போறத்துக்கு  உடுப்பு சப்பாத்து முதலியன வாங்க வசதியில்ல.எனக்கும் இப்ப வேலை இல்ல.இப்படி புலம்பினார். அட பிள்ளையின் படிப்புக்கு கேட்கிறார். கட்டாயம் உதவி செய்ய வேணும் எண்டு உடனேயே எனது உழைப்பில் இருந்து 250 டொலர்களை அனுப்பி விட்டேன். கிடைத்ததா என்று நான் அழைத்துத்தான் கேட்கவேண்டி இருந்தது. இது வரை எந்த தொடர்பும் இல்லை.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுபோல் எத்தனையோ அனுபவங்கள் இலங்கை போய் வந்ததில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம்  இங்கிருந்து அனுப்பும் பணம் அவர்களுக்கு சிறிதாக தான் தெரிகிறது ..வாங்குபர்கள் சிறுத்துப் போகும் நிலைமாறி கொடுப்பவர்கள் சிறுத்துப் போகுமளவிற்கு உலகம் மாறிவிட்டது! உடை நடை  லிருந்து  பகடடாக  எதிர்பார்க்கிறார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு, கிருபன், புங்கையூரான், காவலூர் கண்மணி, யா.சுமேரியர், நிலாமதி ஆகியோரின் கருத்துக்களைப் பார்க்கும் போது  இந்த “வைரஸ்” பலரைத் தாக்கி இருப்பது புரிகிறது.

புலத்துக்கும் நிலத்துக்கும் உறவுப்பாலம் அமைப்போம் என்பதில் ‘பணம்’ தான்  அதற்கான அத்திவாரமோ என்கிற ஐயம் வருகிறது.

அனைவரது கருத்துகளுக்கும் நன்றி!

Link to comment
Share on other sites

23 hours ago, Kavi arunasalam said:

அது என்னடா கொஞ்சக் காசுதானே. மாத்தக்கை 50,000 ரூபா மட்டிலைதான் வந்தது

பலருக்கும் ஏற்பட்ட அனுபவம் இது.. பொருத்தமான கதைத் தலைப்பு.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/17/2018 at 3:51 AM, Kavi arunasalam said:

நான் சிறுத்துப் போனேன் 

 

 

பட்ட அனுபவத்தால்,  நான் சிறுத்துபோனேன் என்று தலைப்பு போட்டிருந்தாலும், ஒன்றை நீங்கள் கவனிக்கவில்லை கவி அருணாச்சலம்,மனிதர்களுடன் பழகும் விதத்தில் பலர் மனசில்  ரொம்ப பெரிதாய் தெரிகிறீர்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் ஒரு பிரச்சினை என்றவுடன் நாங்கள் அந்தரப்பட்டு பணம் அனுப்புகின்றோம். அதற்குப்பின் அது எதோ எங்களின் கடமை என்ற ரீதியில் கதைப்பார்கள்.பிள்ளைகளுக்கு அந்தப் பிரச்சினை வராது என்று நினைக்கின்றேன். அவர்கள் ரொம்ப விவரமாய் இருக்கினம்....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடு தான் இனி காசு காய்க்கும் மரம் சிலருக்கு எல்லோருக்கும் அல்ல 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அனுபவம் பெரும்பாலும் எல்லாருக்கும் இருக்குது.நான் உட்பட.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/17/2018 at 3:51 AM, Kavi arunasalam said:

அது என்னடா கொஞ்சக் காசுதானே. மாத்தக்கை 50,000 ரூபா மட்டிலைதான் வந்தது

பணத்திற்கு பெறுமதியே இல்லை என்பது உண்மையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம் நாம்தான் இப்போது பெறுமதி அற்றவர்களாக போய்க் கொண்டிருக்கிறோம் ஊரில் வாழுபவர்களின் வசதியான வாழ்க்கையை அவர்களின் ஆடம்பரங்களைப் பார்க்கும்போது நாம் ஒன்றுமே இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளினாடுகளில் இருந்து , தாயகத்துக்கு செல்லும் சிலரின் ஆடம்பரச் செலவுகள், ஊரில் இருப்பவர்களுக்கு வெளினாட்டில் இருப்பவர்கள் எல்லோரிடமும் அதிக பணம் இருக்கிறது என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.    

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் ஒருவர் திக்குளித்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் பற்ற எரிந்த போது அருகில் நின்ற பொலிசாரும் மக்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-04-19-24#h_6e59fcb889c2bb3a38b4b05fffa573ae
    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.