Jump to content

உலகக் கிண்ண தகுதிச் சுற்றுக்கு நேபாளம், ஐக்கிய அரபு இராட்சியம் தகுதி


Recommended Posts

உலகக்கிண்ணத்திற்கு நேபாளம்- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தகுதி!

உலகக்கிண்ணத்திற்கு நேபாளம்- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தகுதி!

Bookmark and Share

 

 
இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு உலகக்கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இதில் 10 அணிகள் பங்கேற்கும். ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் போட்டியை நடத்தும் இங்கிலாந்தை தவிர்த்து முதல் 7 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக தகுதி பெறும்.

மீதமுள்ள இரண்டு அணிகள் தகுதிச் சுற்றில் அடிப்படையில் தேர்வு செய்யப்படும். ஐசிசி தரவரிசையில் இடம் பிடித்திருக்கும் முன்னணி அணியான மேற்கிந்திய தீவுகள் உள்பட ஆப்கானிஸ்தான், சிம்பாப்வே, அயர்லாந்து அணிகள் நேரடியாக தகுதி பெறவில்லை.

இந்த அணிகள் தகுத் சுற்றில் விளையாட வேண்டும். இவற்றுடன் 2015 முதல் 2017 வரை நடைபெற்ற உலகக் கிரிக்கெட் லீக் சம்பியன்ஷிப் தொடர் மூலம் தகுதிப் பெற்ற நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, ஹாங்காங் மற்றும் பப்புவா நியூ கினியா ஆகிய நான்கு அணிகள் விளையாடுகிறது.

டிவிஷன் 2 லீக்கில் சிறப்பாக விளையாடும் இரண்டு அணிகள் தகுதிச் சுற்றுக்கு இடம்பிடிக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற்ற டிவிஷயன் 2 லீக்கில் நேபாளம் 5 போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்றும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 5-ல் மூன்றில் வெற்றி பெற்றும் தகுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இதில் நேபாளம் முதன்முறையாக உலகக்கிண்ண தகுதிச் சுற்று தொடருக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்த 10 அணிகளுக்கு இடையிலான தொடரில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி உலகக்கிண்ண தொடருக்கு தகுதி பெறும். உலகக்கோப்ப தகுதிச்சுற்றுத் தொடர் சிம்பாப்வேயில் நடைபெற இருக்கிறது.

http://tamil.adaderana.lk/news.php?nid=100022

Link to comment
Share on other sites

உலகக் கிண்ண தகுதிச் சுற்றுக்கு நேபாளம், ஐக்கிய அரபு இராட்சியம் தகுதி

1-65-696x459.jpg
 

இங்கிலாந்தில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண தகுதிச் சுற்றுக்கு நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு இராட்சியம் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. அதிலும், நேபாள அணி முதற்தடவையாக உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

10 அணிகளின் பங்குபற்றலுடன் இங்கிலாந்தில் அடுத்த வருடம் உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. .சி.சியின் ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் போட்டியை நடத்தும் இங்கிலாந்து உள்ளடங்களாக முதல் 8 இடங்களைப் பெற்றுக்கொண்ட அணிகள் உலகக் கிண்ணத்திற்கு நேரடியாக தகுதி பெறும்.

 

எஞ்சியுள்ள இரண்டு அணிகள் தகுதிச் சுற்றில் அடிப்படையில் தெரிவு செய்யப்படும். இதன்படி, அண்மைக்கால ஒரு நாள் அரங்கில் மோசமாக விளையாடி வருகின்ற, உலகக் கிண்ணத்தை 2 தடவைகள் கைப்பற்றியிருக்கும் அணியான பிரபல மேற்கிந்திய தீவுகள், கிரிக்கெட் உலகில் முன்னணி அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்து வருகின்ற ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே, அயர்லாந்து அணிகள் அடுத்த உலகக் கிண்ணத்திற்கு நேரடியாக தகுதி பெறவில்லை. இதன் காரணமாக அவரை தகுதிச் சுற்றில் விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.

இந்த அணிகளுடன் 2015 முதல் 2017 வரை நடைபெற்ற உலக கிரிக்கெட் லீக் சம்பியன்ஷிப் தொடர் மூலம் தகுதிப் பெற்ற நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, ஹொங்கொங் மற்றும் பப்புவா நியூ கினியா ஆகிய நான்கு அணிகள் விளையாடுகின்றன.

இந்நிலையில், உலக கிரிக்கெட் டிவிஷன் 2 லீக்கில் சிறப்பாக விளையாடும் இரண்டு அணிகள் தகுதிச் சுற்றில் விளையாடுவதற்கான வாய்ப்பை பெற்றுக் கொள்ளும்.

இதன்படி, .சி.சியின் உலக கிரிக்கெட் டிவிஷன் 2 போட்டிகள் நமீபியாவின் விந்தோக்கில் நேற்று நிறைவுக்கு வந்தன. இதன் கடைசி லீக் போட்டியில் நேபாளம், கனடா அணிகள் மோதின. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்புக்கு 194 ஓட்டங்களை எடுத்தது. அவ்வணிக்காக விளையாடி வருகின்ற இலங்கையைச் சேர்ந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஸ்ரீமன்த விஜேரத்ன 103 ஓட்டங்களை குவித்தார்.

ICC-Cricket-World-Cup-Qualifier-300x198.சிறப்பாக பந்துவீசிய நேபாளத்தின் ரெக்மி 3 விக்கெட்டுக்களையும், இம்முறை .பி.எல் தொடரில் டெல்லி டெயார் டெவில்ஸ் அணிக்காக முதற்தடவையாக ஒப்பந்தம் செய்யபட்ட 17 வயதான சந்தீப் லமிச்சான் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

 

 

அடுத்து களமிறங்கிய நேபாள அணி 24.1 ஓவரில் 144 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டை பறிகொடுத்தது. இதனால், நேபாளம் தோல்வி அடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கரண் மற்றும் லமிச்சான் ஜோடி 51 ஓட்டங்களை இணைப்பாட்டாகப் பெற்று அந்த அணியை வெற்றி பெறச் செய்தனர்.  

இதன்படி, நேபாள அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 195 ஓட்டங்களை எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் முதல் முறையாக நேபாள அணி உலகக் கிண்ண தகுதிச் சுற்றுக்குள் நுழைந்தது. இதில் நேபாளம் 5 போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்றும், ஐக்கிய அரபு இராட்சிய அணி 5 போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்று தகுதிச் சுற்றுக்கு முன்னேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன், ஐக்கிய அரபு இராட்சிய அணி 2ஆவது தடவையாக உலகக் கிண்ண கிரிக்கெட் தகுதிச்சுற்றில் விளையாடும் வாய்ப்பை பெற்றுக்கொண்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

எனவே, உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டியின் பிரிவில் மேற்கிந்திய தீவுகள், நேபாளம், பப்புவா நியூ கினியா, அயர்லாந்து, நெதர்லாந்து அணிகளும், பி பிரிவில் ஐக்கிய அரபு இராட்சியம், ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, ஹொங்காங் அணிகளும் உள்ளன. இந்த 10 அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள தகுதிச்சுற்றுப் போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி 2019 உலகக் கிண்ணத் தொடருக்கு தகுதிபெறும்.

இதேநேரம், உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டிகள் எதிர்வரும் மார்ச் மாதம் 4ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை ஜிம்பாப்வேயில் நடைபெற உள்ளன.

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
    • “அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை” இதனை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? உதாரணமாக ஓர் பொருளின் சிறீலங்கா v பிரித்தானிய விலையை கூறுங்கள். எனக்கு தெரிந்தவர்களிடம் அதனை விசாரித்து கூறுகிறேன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.