Jump to content

பிச்சைக்காறனின் வெட்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 ஒரு பிச்சைக்காறனின் வெட்கம்.... (சிறு கதை)

 

ஒரு நாள் மனைவியுடன்  புகையிரதத்தில் பயணித்துக்கொண்டிருந்தேன்

கைத்தொலைபேசியில்  முகநூலில் ஒன்றிப்போயிருந்த  என்னை

 ஒரு  தரிப்பிடத்தில்  ஏறி 

பிச்சை  கேட்கத்தொடங்கிய ஒருவரின்  குரல் இடை மறித்தது

அநேகமாக இவ்வாறானவர்களைக்கண்டால்

வாகனத்தில்  என்றால் ஐன்னல்களை  மூடிவிடுவேன்

புகையிரதத்தில்   என்றால்  தோழிலிருக்கும் துண்டால் 

மூக்கை மூடிக்கொள்வது தான்  எனது  வழமை

 

புகையிரதத்தில்  ஏறி  பிச்சை  கேட்பவர்கள்

ஏதாவது ஒரு கதை  சொல்வார்கள்

இது  வழமையானது தான்

ஆனால் இவர்  தனது வாழ்வு  பற்றி  சொல்லத்தொடங்கியது

வித்தியாசமாக  இருந்தது

அவர்  ஒவ்வொரு வார்த்தையையும்  சொல்லும்போதும்

அதன் வலியை  உணர்ந்தது

அதை  சொல்ல  மிகவும் சிரமப்பட்டது

ஒவ்வொரு வார்த்தைக்கும் கண் கலங்கி  வெட்கப்பட்டது

அவர் இதை  விரும்பவில்லை

ஆனால்  வேறு வழி இன்று  தெரியவில்லை என்ற  போது  உடல் முழுவதும் கூசியது

அந்த  வலியை  நானும்   உணர்ந்தேன்

இந்த  நிலை  எவருக்கும்  வரக்கூடாது என்பதை  

வாழ்வில் முதன்முதலாக  உணர்ந்தேன்

 

பொக்கற்றுக்குள் கை  வைத்த  என்னை

மனைவி  கேட்டார்

திடகாத்திரமான  எவருக்கும்  பிச்சை  போடமாட்டீர்களே

இன்று என்னாச்சு  என்று?

அவன்  ரொம்ப  வெட்கப்பட்டு பிச்சை  கேட்கின்றான்

எவருக்கும்   இந்த  நிலை  வரக்கூடாது என்று

காசு  போடும் போது தான் பார்த்தேன்

நான்  மட்டுமல்ல

பலரும்  கண்களில் ஒருவித கனிவுடன்  பணம் போட்டபடி  இருந்தனர்.

(இந்தக்கதையை எழுதத்தூண்டிய  தம்பி  நிழலிக்கு  நன்றிகள்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

 

 ஒரு பிச்சைக்காறனின் வெட்கம்.... (சிறு கதை)

 

 

என்ன எல்லோரும் தொடங்கும் போதே சிறுகதை என்ற எச்சரிக்கையுடன் !

எனக்கும் யாருக்கும் பிச்சை போட மனம் வருவதில்லை.

ஆனாலும் சில பேர் நடித்து காட்டி கதைகள் சொல்லி பாத்திரம் ஏந்தும் போது ஏதோ ஒரு வித கவர்ச்சியில் கொடுத்துவிடுவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிச்சைபோட மறுப்பவர்கள் மனதில்கூட ஒரு இரக்க சுபாவத்தை உண்டுபண்ணி, அவர்களை பிச்சைபோட வைப்பதுகூட ஒருவித தொழில் யுக்திதான்!

திடகாத்திரமான உடம்பு இருக்கும்போதும் பிச்சை தொழிலில் இறங்குவது உலகம் முழுவதுமே ஏற்கமுடியாத ஒன்று,

அதுவும் ஐரோப்பா, அமெரிக்காவில் என்றால் மன்னிக்கவே முடியாத குற்றம், நேற்றுவந்தவர்களே ஆஹா .,ஓஹோனு என்று சொந்த முயற்சியில் முன்னேறுகிறார்கள்.

இந்த கதையை படிக்கும்போது, ஊரில்

’ இந்த காதல் அது இது என்னும் விஷயத்தில் என்னை விழுத்தவே முடியாது’என்று..

வீராப்பாக திரிபவர்களை, பந்தயம் பண்ணி சிலர் தமது வலையில் விழுத்தி காட்டுவார்களே அந்த ஞாபகம் வந்திச்சு, ஆழ்ந்த அனுதாபங்கள் விசுகு அண்ணாவிற்கும் பிச்சைபோட்ட ஏனைய பிரெஞ்சுக்காரர்களுக்கும் <_< 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, valavan said:

பிச்சைபோட மறுப்பவர்கள் மனதில்கூட ஒரு இரக்க சுபாவத்தை உண்டுபண்ணி, அவர்களை பிச்சைபோட வைப்பதுகூட ஒருவித தொழில் யுக்திதான்!

திடகாத்திரமான உடம்பு இருக்கும்போதும் பிச்சை தொழிலில் இறங்குவது உலகம் முழுவதுமே ஏற்கமுடியாத ஒன்று,

அதுவும் ஐரோப்பா, அமெரிக்காவில் என்றால் மன்னிக்கவே முடியாத குற்றம், நேற்றுவந்தவர்களே ஆஹா .,ஓஹோனு என்று சொந்த முயற்சியில் முன்னேறுகிறார்கள்.

இந்த கதையை படிக்கும்போது, ஊரில்

’ இந்த காதல் அது இது என்னும் விஷயத்தில் என்னை விழுத்தவே முடியாது’என்று..

வீராப்பாக திரிபவர்களை, பந்தயம் பண்ணி சிலர் தமது வலையில் விழுத்தி காட்டுவார்களே அந்த ஞாபகம் வந்திச்சு, ஆழ்ந்த அனுதாபங்கள் விசுகு அண்ணாவிற்கும் பிச்சைபோட்ட ஏனைய பிரெஞ்சுக்காரர்களுக்கும் <_< 

 

அது  ஒரு புது  அனுபவம் ராசா

அந்தக்கண்களின் வலி

இத்தனை  வருடங்களாகியும்

இன்றும் என்னை  கண்  கலங்க  வைக்கிறது  என்றால்...??

சிலவற்றை  தான் நாம் நடிக்கமுடியும்

ஆனால்  உணர வைப்பது என்பது

நிழுத்துக்கு மட்டுமே முடியுமானது

 

நன்றி  கருத்துக்கும்  நேரத்துக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

 

அது  ஒரு புது  அனுபவம் ராசா

அந்தக்கண்களின் வலி

இத்தனை  வருடங்களாகியும்

இன்றும் என்னை  கண்  கலங்க  வைக்கிறது  என்றால்...??

சிலவற்றை  தான் நாம் நடிக்கமுடியும்

ஆனால்  உணர வைப்பது என்பது

நிழுத்துக்கு மட்டுமே முடியுமானது

 

நன்றி  கருத்துக்கும்  நேரத்துக்கும் 

உங்கள் உணர்வை குறைகூற என்று சொல்லபட்டதல்ல அந்த கருத்து, ஒரு புலம்பெயர் தேசத்திற்கு வந்து சுய முயற்சியில் எழுந்து நிற்கும் உங்களை போன்றவர்கள், எப்படி இந்த சுயமுயற்சியற்ற தொழிலினை, ஏதோ ஒரு இடத்தில் நம்பிவிடுகிறீர்கள் என்ற அர்த்ததில் மட்டுமே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பொதுவாகவே இரப்பவர்களுக்கு பணமாக கொடுக்க விரும்புவதில்லை.

இலண்டனிலும் முன்னர் ரோமா ஜிப்ஸிகள் இரந்துகேட்டு தொந்தரவு செய்தார்கள். இப்போது பிச்சையெடுப்பதை கட்டுப்படுத்தியுள்ளனர்.

எனது நண்பன் ஒருவன் வந்த புதிதில் தெற்கு லண்டனில் இருந்து கிழக்கு லண்டனுக்குப் போகும்போது "மொனுயுமென்ற்" சுரங்க ரயில் நிலையத்தில் ரியூப் மாறும்போது ஒரு இளம் வெள்ளைக்காரப் பெண் இரண்டு வயது மதிக்கக்தக்க அழகிய குழந்தையுடன் இருந்து பண உதவி (நாகரிகமான வழியில் பிச்சை எடுத்தல்) கேட்டாளாம். இவன் முதலில் தன்னிடமிருந்த சில்லறைக்காசுகள் அனைத்தையும் அள்ளிக் கொடுத்துவிட்டு அப்பால் போனவன், மனம் இளகித் திரும்ப வந்து இருந்த தாள்க் காசுகளையும் கொடுத்துவிட்டான் (குழந்தையோடு பிச்சை எடுப்பதைப் பார்த்தால் யாருக்குத்தான் மனம் இரங்காமல் விடும்). அடுத்த நாள் கிழக்கு லண்டனில் இருந்து திரும்பிவருவதற்கு கையில் காசில்லாமல் அவன் அவதிப்பட்டது தனிக்கதை!

விசுகு ஐயா ஏமாந்தாரா இல்லையா என்பதெல்லாம் தேவையற்றது. எதுவும் கொடுக்காமல் இருப்பதைவிட ஏமாறுவது பரவாயில்லை. ஆனால் பணமாக கொடுக்காமல் விடுவது நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகரின் அனுபவம்...ஒரு அருமையான பகிர்வு!

எவ்வளவு தான் இறுக்கிப் பிடித்தாலும்....மனிதம்...சில வேளைகளில் தன்னை...இனங்காட்டிக் கொள்கின்றது!

அது தான்...இந்த உலகத்தை இயக்கிக் கொண்டுமிருக்கின்றது!

எனக்கு மூன்று குழந்தைகள்....ஆபிரிக்காவில் இருக்கின்றன!

இரண்டு வளர்ந்து ...தங்களைத் தாங்களே பார்த்துக் கொள்ளும்..நிலைக்கு வந்து விட்டன!

மூன்றாவது குழந்தைக்குப் ...பதினோரு வயதாகின்றது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தானம் கொடுக்கத்தான் வேண்டும். ஆனால் கண்களில் வலி இருப்பதாக சொன்னீர்கள். உடம்பு வலுவாகத்தானே இருக்கிறது. ஏன் உழைத்து சாப்பிடமுடியாதவரா? இல்லாவிட்டால் அரசாங்க உதவி கிடைக்க தகுதி இல்லாதவரா?  பசித்தவருக்கு உணவு கொடுப்பதில் தவறில்லை. ஆனால் சிலர் அதையே தொழிலாகச் செய்கின்றனர். சென்ற மாதம் வீதியில் ஒரு ஆசிய இன இளம் பெண் கை ஏந்தியபடி நின்றதை கவனித்தேன். அப்பொழுது சொன்னார்கள் யாரோ ஒருவர் தன் வாகனத்தில் இப்படியான பலரை கொண்டு வந்து இறக்கி விட்டு மாலையில் வந்து எல்லோரையும் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு போவதாக. இதையும் ஒரு தொழிலாக நடத்த தொடங்கியுள்ளனர்
விசுகு பாத்திரமறிந்து பிச்சையிடுங்கள். நல்ல ஆக்கம். தொடர்ந்து எழுதுங்கள்

Link to comment
Share on other sites

பிரான்சில் இதுவரை பிச்சை கேட்பவர்களுக்கு ஓரிரு தடவைகள் தவிர்ந்து ஒருபோதும் பிச்சை போட்டதில்லை. ஏனென்றால் பசி ஏழ்மை என்றால் என்னவென்று எனக்குத் தெரியும். ஐரோப்பாவில் பசியால் யாராவது இறந்தார்கள் என்று கேள்விப் படுவது அபூர்வம். பல்லாயிரம் அரச சார்பற்ற நிறுவனங்களும் அரச கட்டுமானங்களும் ஏழ்மையில் இருப்போருக்கு உதவ இங்கு உள்ளன.

நான் பிரான்சில் உள்ள சில அரச சார்பற்ற உதவி வழங்கும் நிறுவனங்களுக்கு வேலை செய்துள்ளேன். விசுகு அண்ணா இக் கதையினூடாகக் கூறிய கருத்து மனதை உறுத்தியது. இந்த அரச சார்பற்ற நிறுவனங்களில் ஒன்று வசதியற்றவர்களுக்கு உணவு வழங்குவது. உணவைப் பெற்றுக் கொள்ள பல்வேறு நிலையில் ஏழ்மையாக உள்ளவர்கள் வருவார்கள். இவர்களில் சிலர் ஒரு காலத்தில் பாரிய செல்வந்தர்களாகவும் மிக ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தவர்களாகவும் இருந்துள்ளனர். இவர்கள் ஆடம்பர வாழ்விலிருந்து எவ்வாறு பாதாளத்துக்குள் தள்ளப்பட்டார்கள் என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை உண்டு. சிலர் வர்த்தகத்தில் திடீரென நட்டமடைந்து ஏழயானவர்கள். சிலர் குடும்பத்தி ஏற்பட்ட பிழவினால் தெருவுக்கு வந்தவர்கள். சிலர் தாம் விட்ட தவறினால் எல்லாவற்றையும் தொலைத்து ஏழையானவர்கள்.

இவர்கள் நாம் கொடுக்கும் உணவுப் பொட்டலங்களைப் பெறும்போது அவர்கள் முகத்தில் காணப்படும் வெட்கத்தையும் தயக்கத்தையும் காணும்போது நாம் ஒருபோது இந்த நிலமைக்கு வரக் கூடாது என்றே தோன்றும்.

Link to comment
Share on other sites

10 hours ago, விசுகு said:

அவன்  ரொம்ப  வெட்கப்பட்டு பிச்சை  கேட்கின்றான்

எல்லோரையும் நாம் நம்புவதில்லை. சிலரை நம்புகின்றோம். ஒரு சில சந்தர்ப்ங்களில் சிலரை நம்பும் போது நம்பிக்கைத் துரோகம் செய்தாலும் பரவாயில்லை அதை ஏற்றுக்கொள்வோம் என்ற முடிவை எடுத்து நம்ப வேண்டிய நிலை ஏற்படுவதுண்டு. அதே போல் இந்தக் கதையில் எல்லாவற்றையும் கடந்து மனதை உறுத்தும் போது பிச்சைபோட்டது உங்களுக்கு ஆரோக்கியமே. சில நேரம் கடும் குளிரில் சிலர் நடுரோட்டில் மட்டை பித்துக்கொண்டு காசை எதிர்பார்த்து நிற்பார்கள்.அவர்கள் பெரும்பாலும் சாராயத்துக்கோ அல்லது கஞ்சா பவுடருக்கோ தான் பிச்சை எடுக்கின்றர்கள் என்று தெரிந்தாலும் நான் காசு போடுவதுண்டு.. அவர்களை சந்தோசப்படுத்தவா இல்லை என்னைத் திருப்பதிப்படுத்தவா என்ற கேள்விக்கெல்லாம் போவதில்லை.. 

பகிர்வுக்கு நன்றிகள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஈழப்பிரியன் said:

என்ன எல்லோரும் தொடங்கும் போதே சிறுகதை என்ற எச்சரிக்கையுடன் !

எனக்கும் யாருக்கும் பிச்சை போட மனம் வருவதில்லை.

ஆனாலும் சில பேர் நடித்து காட்டி கதைகள் சொல்லி பாத்திரம் ஏந்தும் போது ஏதோ ஒரு வித கவர்ச்சியில் கொடுத்துவிடுவோம்.

எனது மனைவி  கேட்ட  கேள்வியையும்  

பதிந்ததற்கு காரணம்

நானும்  கொடுப்பதில்லை  அண்ணா

ஆனால்  அவன்  எனக்கொரு வேறு  பக்கத்தை ஞாபகப்படுத்தினான்

அதை  கீழே இணையவன்  எழுதியிருக்கிறார்

நன்றியண்ணா  கருத்துக்கும் நேரத்துக்கும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெருமாளே பிச்சை எடுக்கும் போது மனுசன் பிச்சை எடுப்பதில் எங்கிருக்கிறது. வெட்கம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, valavan said:

உங்கள் உணர்வை குறைகூற என்று சொல்லபட்டதல்ல அந்த கருத்து, ஒரு புலம்பெயர் தேசத்திற்கு வந்து சுய முயற்சியில் எழுந்து நிற்கும் உங்களை போன்றவர்கள், எப்படி இந்த சுயமுயற்சியற்ற தொழிலினை, ஏதோ ஒரு இடத்தில் நம்பிவிடுகிறீர்கள் என்ற அர்த்ததில் மட்டுமே!

உண்மைதான்

புலத்தில்  மட்டுமல்ல

தாயகத்திலும்  நம்பி  கெட்டு  மிகவும் பலவீனமாக  இருந்த  என்னையே

மீண்டும் தர்மம் செய் என அவன் என்னுள் விதத்ததை  உணர்ந்தேன் ராசா

அது தான் எழுதினேன்

இன்று நினைத்தாலும்  அந்தக்கண்களை

என் கண்கள்  கலங்குகின்றன  ...

எவருக்கும் இந்தநிலை  வரலாம்

ஆனால் பகைவனுக்குக்கூட  இது வரக்கூடாது என்பார்களே

அது  தான் இது.

நன்றி  தம்பி  கருத்துக்கும் நேரத்துக்கும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, கிருபன் said:

நான் பொதுவாகவே இரப்பவர்களுக்கு பணமாக கொடுக்க விரும்புவதில்லை.

இலண்டனிலும் முன்னர் ரோமா ஜிப்ஸிகள் இரந்துகேட்டு தொந்தரவு செய்தார்கள். இப்போது பிச்சையெடுப்பதை கட்டுப்படுத்தியுள்ளனர்.

எனது நண்பன் ஒருவன் வந்த புதிதில் தெற்கு லண்டனில் இருந்து கிழக்கு லண்டனுக்குப் போகும்போது "மொனுயுமென்ற்" சுரங்க ரயில் நிலையத்தில் ரியூப் மாறும்போது ஒரு இளம் வெள்ளைக்காரப் பெண் இரண்டு வயது மதிக்கக்தக்க அழகிய குழந்தையுடன் இருந்து பண உதவி (நாகரிகமான வழியில் பிச்சை எடுத்தல்) கேட்டாளாம். இவன் முதலில் தன்னிடமிருந்த சில்லறைக்காசுகள் அனைத்தையும் அள்ளிக் கொடுத்துவிட்டு அப்பால் போனவன், மனம் இளகித் திரும்ப வந்து இருந்த தாள்க் காசுகளையும் கொடுத்துவிட்டான் (குழந்தையோடு பிச்சை எடுப்பதைப் பார்த்தால் யாருக்குத்தான் மனம் இரங்காமல் விடும்). அடுத்த நாள் கிழக்கு லண்டனில் இருந்து திரும்பிவருவதற்கு கையில் காசில்லாமல் அவன் அவதிப்பட்டது தனிக்கதை!

விசுகு ஐயா ஏமாந்தாரா இல்லையா என்பதெல்லாம் தேவையற்றது. எதுவும் கொடுக்காமல் இருப்பதைவிட ஏமாறுவது பரவாயில்லை. ஆனால் பணமாக கொடுக்காமல் விடுவது நல்லது.

இந்த  எண்ணத்துக்குள்  பல கருக்கள்   உள்ளன கிருபன்

நீங்கள் குறிப்பிடும்  காசு கொடுக்கலாமா?

இவரை  அதே   தொழிலை  செய்ய  நாமே தூண்டலாமா?

போன்ற  எண்ணங்கள்  என்னுள்ளும் வந்தே சென்றன

எனக்கு  முன்னாலிருந்த ஒரு இளம்  பெண் ஒரு தோடம்பழத்தை  கொடுத்தார்

என்னிடம் பணம் மட்டுமே இருந்தது

 

நன்றி  ராசா

நேரத்துக்கும் கருத்துக்கும்

 

Link to comment
Share on other sites

ஒரு அவசரத்துக்கு கடனோ அல்லது உதவியோ இன்னொருவரிடம்  கேட்கும் நிலை எமக்கு வரும் போது மனசுக்குள் எவ்வளவு வெட்கப்படுகின்றோம், குறுகிக் கொள்கின்றோம். அப்படி இருக்கும் போது ஆட்களிடம் இரந்து பிச்சை கேட்கும் ஒரு நிலை ஒருவருக்கு வருகின்றதென்றால் அந்த நபர் எந்தளவுக்கு எதனாலோ பாதிக்கப்பட்டு இருப்பார் என்று நினைத்துப் பார்ப்பதுண்டு. அவர் கேட்பது போதை பொருளுக்காகவோ அல்லது ஒரு வேளை உணவுக்காகவோ, அல்லது எதுக்காகவோ என்றாலும், அந்த நிலைக்கு ஒரு மனிதன் / மனுசி வருவது என்பது எல்லாம் இழந்த ஒரு மனநிலையில் தான். அவர் விரும்பி வந்த நிலையாக இருக்காது. ஒவ்வொருக்கும் ஒவ்வொரு சோகம். என்னிடம் சில்லறை இருந்தால் கொடுப்பதுண்டு, இல்லாவிடின் கையாலேயே சைகை செய்து அடுத்த முறை தாறன் என்று சொல்வதுண்டு.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, புங்கையூரன் said:

விசுகரின் அனுபவம்...ஒரு அருமையான பகிர்வு!

எவ்வளவு தான் இறுக்கிப் பிடித்தாலும்....மனிதம்...சில வேளைகளில் தன்னை...இனங்காட்டிக் கொள்கின்றது!

அது தான்...இந்த உலகத்தை இயக்கிக் கொண்டுமிருக்கின்றது!

எனக்கு மூன்று குழந்தைகள்....ஆபிரிக்காவில் இருக்கின்றன!

இரண்டு வளர்ந்து ...தங்களைத் தாங்களே பார்த்துக் கொள்ளும்..நிலைக்கு வந்து விட்டன!

மூன்றாவது குழந்தைக்குப் ...பதினோரு வயதாகின்றது!

அதே

உங்களை நினைக்க  பெருமையாக  இருக்கிறது

வாழ்த்துக்கள் அண்ணா

 

நன்றியண்ணா

நேரத்துக்கும் கருத்துக்கும்

18 hours ago, Kavallur Kanmani said:

தானம் கொடுக்கத்தான் வேண்டும். ஆனால் கண்களில் வலி இருப்பதாக சொன்னீர்கள். உடம்பு வலுவாகத்தானே இருக்கிறது. ஏன் உழைத்து சாப்பிடமுடியாதவரா? இல்லாவிட்டால் அரசாங்க உதவி கிடைக்க தகுதி இல்லாதவரா?  பசித்தவருக்கு உணவு கொடுப்பதில் தவறில்லை. ஆனால் சிலர் அதையே தொழிலாகச் செய்கின்றனர். சென்ற மாதம் வீதியில் ஒரு ஆசிய இன இளம் பெண் கை ஏந்தியபடி நின்றதை கவனித்தேன். அப்பொழுது சொன்னார்கள் யாரோ ஒருவர் தன் வாகனத்தில் இப்படியான பலரை கொண்டு வந்து இறக்கி விட்டு மாலையில் வந்து எல்லோரையும் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு போவதாக. இதையும் ஒரு தொழிலாக நடத்த தொடங்கியுள்ளனர்
விசுகு பாத்திரமறிந்து பிச்சையிடுங்கள். நல்ல ஆக்கம். தொடர்ந்து எழுதுங்கள்

உண்மை  தானக்கா

ஐரோப்பிய நாடுகளில் சாப்பாட்டுக்கு  வழியற்றுஒரு போதும் வீதியில்  விடமாட்டார்கள்

அந்தவகையில் தான் நான்  எவருக்கும் பிச்சை  போடுவது  அரிது

ஆனால் இது அன்றொரு  நாள் மட்டும்  அவர்  இக்கட்டில் இருந்தது போலிருந்தது

 

நன்றியக்கா

நேரத்துக்கும்  கருத்துக்கும்  ஆலோசனைக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிச்சை கேட்பவரின் உடல் நிலையை பார்த்து நான் வழங்குவேன் உடலில் சகல அங்கங்களும் இயங்குமாக இருந்தால் க்கொடுக்க மாட்டேன்  மாறாக  இருந்தால் என்னிடம் இருப்பதை கொடுப்பேன்   ஏனென்றால் இல்லாத நிலையை அறிந்தவன் நான்  அவன் என்னை ஏமாற்றினாலும் பராவியில்லை  கையில் இல்லாத நேரத்தில் நான் கூட உதவியென்று கையேந்தி இருக்கிறேன்  10 கதவு தட்டினால் ஒரு கதவு திறக்கிறது

 

கொழும்பில் பஸ்ஸில் ஒரு பாட்டு பாடினால் காசு கொடுக்க வேணும் பாட்டு பிச்சைக்காரர்கள் தற்போது ஓரளவு குறைவு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாக்குப் பிச்சை எடுத்து...  இரண்டு, மூண்டு..  கோடி ரூபாய் கொள்ளை அடிக்கும் அரசியல் வாதிகளை விட,
தெருவில் நின்று... பிச்சை   எடுப்பவன் திறமானவன்.    
(இது...  சம்பந்தன், சுமந்திரனை குறிப்பிட்டு... பதியப்  பட்ட கருத்து அல்ல)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முறை... நான்  வீட்டு வாசலில் உள்ள வீதியை....  கூட்டிக்  கொண்டு இருந்த போது, 
60,000 ஐரோ  பெறுமதியான காரில், வந்த ஒருவர்...
நான்... வேறு மாநிலத்தில் வசிப்பவன்,
எனது... அம்மா, இந்த ஊரில் தான்... வசிக்கின்றார். 

ஒரு,  பூங்  கொத்து வாங்க    20  ஐரோ  ....  தர முடியுமா?  
வரும் போது... தனது  பணத்தை எடுத்து வர மறந்து விட்டேன்.  உன்னால் முடியுமா? என்று கேட்டார்.

அதற்கு அத்தாட்சியாக தனது, அடையாள அட்டையை... தந்து விட்டுப் போய்...
திரும்ப... அந்தப் பணத்தை தரும்,  போது ....  அடையாள அட்டையை   திரும்ப பெற்றுக்  கொள்கின்றேன் என்ற மனிதனின் சோகம் புதைந்த  முகம், இன்றும் கண் முன் நிற்கின்றது.

Link to comment
Share on other sites

தெருவில் ஆங்காங்கே சந்திகளில், கடுகதிபாதை முடிவடையும் இடங்களில் உதவுமாறு கேட்டு எழுதப்பட்ட மட்டைகளை பிடித்துக்கொண்டு ஆட்கள் நிற்பார்கள். நான் சில்லறை காசு இருந்தால் ஒரு டொலரோ இரண்டு டொலரோ எனக்கு விருப்பம் என்றால் கொடுப்பேன்.

நான் ஒருமுறை அமெரிக்காவில் நின்றபோது மிகப்பெரியதொரு பாதையில் ஓர் பெண் சுமார் முப்பது வயது இருக்கும் அழுக்கடைந்த உடை, மிகவும் வெட்கத்துடன் வாகனத்தில் வருபவர்களை பார்த்துகொண்டு இருந்தார் ஏதும் தருவார்களா என்று. எனது வாகனம் 75 நீளமான பாரவூர்தி. என்னை கிட்ட அணுகவும் இயலாது. ஆனால், எனக்கென்னவோ அந்தப்பெண்ணை தூரத்தில் கண்டதும் எனது உள்ளுணர்வு கூறியது அவளுக்கு சிறுதொகை கொடுக்கவேண்டும் என்று. நான் கோனை அடித்து சைகைகாட்டி கூப்பிட்டேன். சிரமப்பட்டு எனக்கு கிட்டவாக வந்தாள் பாதைகள கடந்து; நான் பத்து அமெரிக்க டொலர்களை கொடுத்தேன். அவள் விறுக்கென்று வாங்கிவிட்டு என்னை ஒரு பார்வை பார்த்தாள். கண்களில் பிரகாசம், ஒரு ஒளி; இருவருக்குமிடையிலான கண்தொடர்பு அந்த உரையாடல் ஒரு செக்கனே, நான் எனது மார்க்கத்தில் பயணிக்க அவள் தன்வழியில் சென்றாள். அது ஆத்மார்த்தமான ஒரு வினாடி.

நான் ஆட்கள் தெருவில் உதவி கேட்டு நிற்கும்போது அவர்களை மதிப்பீடு Judge பண்ணுவது இல்லை. நான் நூற்றுக்கணக்கிலோ அல்லது ஆயிரக்கணக்கிலோ கொடுக்கப்போவது இல்லை, உதவி கொடுப்பதும் எப்போதாவது. ஒரு நாளைக்கு எத்தனைவிதமாக எல்லாம் நான் காசை செலவளிக்கின்றேன். என்னைப்போன்ற ஒரு ஜீவன் தெருவில் வந்து வெட்கத்தைவிட்டு உதவி கேட்கின்றது. அதற்கு ஒரு டொலரோ இரண்டு டொலரோ கொடுத்தால் எனது குடிமூழ்கிவிடாது. அதேசமயம் எம்மிடம் எத்தனை கோடீஸ்வரர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ பகல்கொள்ளை அடிக்கின்றார்கள். அவர்களை எண்ணி பார்க்கையில் ஒருவனுக்கு சில ரூபாய்களை கொடுப்பது ஒன்றும் பெரிய பாரதூரமான விடயம் இல்லை. 

உங்கள் காசு, உங்கள் உழைப்பு, கொடுப்பது கொடுக்காதது உங்கள் விருப்பம். ஆனால், நான் உங்களுக்கு கூறக்கூடிய ஒருவிடயம் அடுத்ததடவை யாருக்காவது உதவி செய்யும்போது அவர்களின் கண்களை பாருங்கள். கண்களினூடு அந்த ஆத்மனுடன் உறவாடுங்கள். Eyes are the windows to the soul. இந்த வாழ்க்கை குறுகியது. நான் சாகும்போது ஒன்றையும் கொண்டுபோகப்போவது இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/02/2018 at 12:36 AM, இணையவன் said:

பிரான்சில் இதுவரை பிச்சை கேட்பவர்களுக்கு ஓரிரு தடவைகள் தவிர்ந்து ஒருபோதும் பிச்சை போட்டதில்லை. ஏனென்றால் பசி ஏழ்மை என்றால் என்னவென்று எனக்குத் தெரியும். ஐரோப்பாவில் பசியால் யாராவது இறந்தார்கள் என்று கேள்விப் படுவது அபூர்வம். பல்லாயிரம் அரச சார்பற்ற நிறுவனங்களும் அரச கட்டுமானங்களும் ஏழ்மையில் இருப்போருக்கு உதவ இங்கு உள்ளன.

நான் பிரான்சில் உள்ள சில அரச சார்பற்ற உதவி வழங்கும் நிறுவனங்களுக்கு வேலை செய்துள்ளேன். விசுகு அண்ணா இக் கதையினூடாகக் கூறிய கருத்து மனதை உறுத்தியது. இந்த அரச சார்பற்ற நிறுவனங்களில் ஒன்று வசதியற்றவர்களுக்கு உணவு வழங்குவது. உணவைப் பெற்றுக் கொள்ள பல்வேறு நிலையில் ஏழ்மையாக உள்ளவர்கள் வருவார்கள். இவர்களில் சிலர் ஒரு காலத்தில் பாரிய செல்வந்தர்களாகவும் மிக ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தவர்களாகவும் இருந்துள்ளனர். இவர்கள் ஆடம்பர வாழ்விலிருந்து எவ்வாறு பாதாளத்துக்குள் தள்ளப்பட்டார்கள் என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை உண்டு. சிலர் வர்த்தகத்தில் திடீரென நட்டமடைந்து ஏழயானவர்கள். சிலர் குடும்பத்தி ஏற்பட்ட பிழவினால் தெருவுக்கு வந்தவர்கள். சிலர் தாம் விட்ட தவறினால் எல்லாவற்றையும் தொலைத்து ஏழையானவர்கள்.

இவர்கள் நாம் கொடுக்கும் உணவுப் பொட்டலங்களைப் பெறும்போது அவர்கள் முகத்தில் காணப்படும் வெட்கத்தையும் தயக்கத்தையும் காணும்போது நாம் ஒருபோது இந்த நிலமைக்கு வரக் கூடாது என்றே தோன்றும்.

அந்த  நிமிடத்தில்  என்  மனதில் தோன்றிய

பயமுறுத்திய விடயங்கள் இவை

நம்மில் பலரும்  நினைக்கின்றோம்

எல்லாவற்றையும் நாமே தீர்மானிக்கின்றோம்

எமது எதிர்காலம் நாம் நினைத்தபடி தான் இருக்கப்போகின்றது என்று

இல்லை

நீங்கள்  மேலே  எழுதியது போல  பலரை

மலையிலிருந்து  ஒரு சில நாட்களுக்குள்

குழிக்குள்  வந்தவர்களை  நான்  சந்தித்திருக்கின்றேன்

நன்றி  தம்பி  இணையவன்

நேரத்துக்கும் கருத்துக்கும் அனுபவங்களை பகிர்ந்ததற்கும்...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/02/2018 at 5:21 AM, சண்டமாருதன் said:

எல்லோரையும் நாம் நம்புவதில்லை. சிலரை நம்புகின்றோம். ஒரு சில சந்தர்ப்ங்களில் சிலரை நம்பும் போது நம்பிக்கைத் துரோகம் செய்தாலும் பரவாயில்லை அதை ஏற்றுக்கொள்வோம் என்ற முடிவை எடுத்து நம்ப வேண்டிய நிலை ஏற்படுவதுண்டு. அதே போல் இந்தக் கதையில் எல்லாவற்றையும் கடந்து மனதை உறுத்தும் போது பிச்சைபோட்டது உங்களுக்கு ஆரோக்கியமே. சில நேரம் கடும் குளிரில் சிலர் நடுரோட்டில் மட்டை பித்துக்கொண்டு காசை எதிர்பார்த்து நிற்பார்கள்.அவர்கள் பெரும்பாலும் சாராயத்துக்கோ அல்லது கஞ்சா பவுடருக்கோ தான் பிச்சை எடுக்கின்றர்கள் என்று தெரிந்தாலும் நான் காசு போடுவதுண்டு.. அவர்களை சந்தோசப்படுத்தவா இல்லை என்னைத் திருப்பதிப்படுத்தவா என்ற கேள்விக்கெல்லாம் போவதில்லை.. 

பகிர்வுக்கு நன்றிகள்...

 

உண்மைதான்

சிலரை  நம்புகின்றோம்

நடிக்கிறார்களா?

ஏமாற்றுகிறார்களா?  என்பதையும் கடந்து

பொக்கற்றுக்குள் கை போகிறது..

இன்னொரு பக்கத்தால் பார்த்தால்

அன்று கொடுக்காமல் வந்திருந்தால்.....???

 

நன்றி சகோதரா

நேரத்துக்கும் கருத்துக்கும் 

23 hours ago, Kavi arunasalam said:

பெருமாளே பிச்சை எடுக்கும் போது மனுசன் பிச்சை எடுப்பதில் எங்கிருக்கிறது. வெட்கம்?

பெருமாளை  கல் என்பேன்  நான்

அப்படியானால் பிச்சை  எடுப்பது மனுசனுக்கு  தானே  கடினம்??

அதை  பார்த்த  எனக்கே  கடினமென்றால்??

ஒவ்வொருவருக்கும்  அந்த நிலை வரவேண்டுமென்பதில்லை  அனுபவங்களைப்பெற  ராசா...

நன்றி சகோதரா

நேரத்துக்கும் கருத்துக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் யார் கேட்டாலும் என்னால் முடிந்தால் உடனேயே கொடுத்து விடுவேன். தர்மம் தலைகாக்கும் என்பது எனது நம்பிக்கை. அதேபோல் நான் செய்த பல தர்மங்கள் கஷ்டமான பல நேரத்தில் எனக்கு உதவியிருக்கின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, நிழலி said:

ஒரு அவசரத்துக்கு கடனோ அல்லது உதவியோ இன்னொருவரிடம்  கேட்கும் நிலை எமக்கு வரும் போது மனசுக்குள் எவ்வளவு வெட்கப்படுகின்றோம், குறுகிக் கொள்கின்றோம். அப்படி இருக்கும் போது ஆட்களிடம் இரந்து பிச்சை கேட்கும் ஒரு நிலை ஒருவருக்கு வருகின்றதென்றால் அந்த நபர் எந்தளவுக்கு எதனாலோ பாதிக்கப்பட்டு இருப்பார் என்று நினைத்துப் பார்ப்பதுண்டு. அவர் கேட்பது போதை பொருளுக்காகவோ அல்லது ஒரு வேளை உணவுக்காகவோ, அல்லது எதுக்காகவோ என்றாலும், அந்த நிலைக்கு ஒரு மனிதன் / மனுசி வருவது என்பது எல்லாம் இழந்த ஒரு மனநிலையில் தான். அவர் விரும்பி வந்த நிலையாக இருக்காது. ஒவ்வொருக்கும் ஒவ்வொரு சோகம். என்னிடம் சில்லறை இருந்தால் கொடுப்பதுண்டு, இல்லாவிடின் கையாலேயே சைகை செய்து அடுத்த முறை தாறன் என்று சொல்வதுண்டு.

அதே

இந்தக்கரு  ஒவ்வொருவர் வாழ்விலும் வந்து போயிருக்கிறது  என்பதை  உங்கள்  பதிவுகள்  சொல்கின்றன

இதை எழுதத்தூண்டியவரே  நீங்க  தானே ராசா

 

 

நன்றி நிழலி

நேரத்துக்கும் கருத்துக்கும் 

17 hours ago, தனிக்காட்டு ராஜா said:

பிச்சை கேட்பவரின் உடல் நிலையை பார்த்து நான் வழங்குவேன் உடலில் சகல அங்கங்களும் இயங்குமாக இருந்தால் க்கொடுக்க மாட்டேன்  மாறாக  இருந்தால் என்னிடம் இருப்பதை கொடுப்பேன்   ஏனென்றால் இல்லாத நிலையை அறிந்தவன் நான்  அவன் என்னை ஏமாற்றினாலும் பராவியில்லை  கையில் இல்லாத நேரத்தில் நான் கூட உதவியென்று கையேந்தி இருக்கிறேன்  10 கதவு தட்டினால் ஒரு கதவு திறக்கிறது

கொழும்பில் பஸ்ஸில் ஒரு பாட்டு பாடினால் காசு கொடுக்க வேணும் பாட்டு பிச்சைக்காரர்கள் தற்போது ஓரளவு குறைவு 

அதே

கொழும்பில் கொடுக்காதுவிட்டு

அடி  வாங்கிய  தமிழருண்டு...tw_angry:

நன்றி ராசா

நேரத்துக்கும் கருத்துக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுப்பது தர்மம்
தர்மம் தலைகாக்கும்
ஆனாலும் பிச்சை எடுத்து வாழ்பவர்கள் முயற்சி இல்லாதவர்கள் அல்லது சோம்பேறிகள் என்பது எனது பொதுவான கருத்து.

இக்கதையின் கருவிற்கான  தீர்வு ஆராயப்படவேண்டியது 

On 15.2.2018 at 6:25 PM, விசுகு said:

அவன்  ரொம்ப  வெட்கப்பட்டு பிச்சை  கேட்கின்றான்

எவருக்கும்   இந்த  நிலை  வரக்கூடாது என்று

காசு  போடும் போது தான் பார்த்தேன்

நான்  மட்டுமல்ல

பலரும்  கண்களில் ஒருவித கனிவுடன்

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.