Jump to content

பிச்சைக்காறனின் வெட்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 ஒரு பிச்சைக்காறனின் வெட்கம்.... (சிறு கதை)

 

ஒரு நாள் மனைவியுடன்  புகையிரதத்தில் பயணித்துக்கொண்டிருந்தேன்

கைத்தொலைபேசியில்  முகநூலில் ஒன்றிப்போயிருந்த  என்னை

 ஒரு  தரிப்பிடத்தில்  ஏறி 

பிச்சை  கேட்கத்தொடங்கிய ஒருவரின்  குரல் இடை மறித்தது

அநேகமாக இவ்வாறானவர்களைக்கண்டால்

வாகனத்தில்  என்றால் ஐன்னல்களை  மூடிவிடுவேன்

புகையிரதத்தில்   என்றால்  தோழிலிருக்கும் துண்டால் 

மூக்கை மூடிக்கொள்வது தான்  எனது  வழமை

 

புகையிரதத்தில்  ஏறி  பிச்சை  கேட்பவர்கள்

ஏதாவது ஒரு கதை  சொல்வார்கள்

இது  வழமையானது தான்

ஆனால் இவர்  தனது வாழ்வு  பற்றி  சொல்லத்தொடங்கியது

வித்தியாசமாக  இருந்தது

அவர்  ஒவ்வொரு வார்த்தையையும்  சொல்லும்போதும்

அதன் வலியை  உணர்ந்தது

அதை  சொல்ல  மிகவும் சிரமப்பட்டது

ஒவ்வொரு வார்த்தைக்கும் கண் கலங்கி  வெட்கப்பட்டது

அவர் இதை  விரும்பவில்லை

ஆனால்  வேறு வழி இன்று  தெரியவில்லை என்ற  போது  உடல் முழுவதும் கூசியது

அந்த  வலியை  நானும்   உணர்ந்தேன்

இந்த  நிலை  எவருக்கும்  வரக்கூடாது என்பதை  

வாழ்வில் முதன்முதலாக  உணர்ந்தேன்

 

பொக்கற்றுக்குள் கை  வைத்த  என்னை

மனைவி  கேட்டார்

திடகாத்திரமான  எவருக்கும்  பிச்சை  போடமாட்டீர்களே

இன்று என்னாச்சு  என்று?

அவன்  ரொம்ப  வெட்கப்பட்டு பிச்சை  கேட்கின்றான்

எவருக்கும்   இந்த  நிலை  வரக்கூடாது என்று

காசு  போடும் போது தான் பார்த்தேன்

நான்  மட்டுமல்ல

பலரும்  கண்களில் ஒருவித கனிவுடன்  பணம் போட்டபடி  இருந்தனர்.

(இந்தக்கதையை எழுதத்தூண்டிய  தம்பி  நிழலிக்கு  நன்றிகள்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

 

 ஒரு பிச்சைக்காறனின் வெட்கம்.... (சிறு கதை)

 

 

என்ன எல்லோரும் தொடங்கும் போதே சிறுகதை என்ற எச்சரிக்கையுடன் !

எனக்கும் யாருக்கும் பிச்சை போட மனம் வருவதில்லை.

ஆனாலும் சில பேர் நடித்து காட்டி கதைகள் சொல்லி பாத்திரம் ஏந்தும் போது ஏதோ ஒரு வித கவர்ச்சியில் கொடுத்துவிடுவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிச்சைபோட மறுப்பவர்கள் மனதில்கூட ஒரு இரக்க சுபாவத்தை உண்டுபண்ணி, அவர்களை பிச்சைபோட வைப்பதுகூட ஒருவித தொழில் யுக்திதான்!

திடகாத்திரமான உடம்பு இருக்கும்போதும் பிச்சை தொழிலில் இறங்குவது உலகம் முழுவதுமே ஏற்கமுடியாத ஒன்று,

அதுவும் ஐரோப்பா, அமெரிக்காவில் என்றால் மன்னிக்கவே முடியாத குற்றம், நேற்றுவந்தவர்களே ஆஹா .,ஓஹோனு என்று சொந்த முயற்சியில் முன்னேறுகிறார்கள்.

இந்த கதையை படிக்கும்போது, ஊரில்

’ இந்த காதல் அது இது என்னும் விஷயத்தில் என்னை விழுத்தவே முடியாது’என்று..

வீராப்பாக திரிபவர்களை, பந்தயம் பண்ணி சிலர் தமது வலையில் விழுத்தி காட்டுவார்களே அந்த ஞாபகம் வந்திச்சு, ஆழ்ந்த அனுதாபங்கள் விசுகு அண்ணாவிற்கும் பிச்சைபோட்ட ஏனைய பிரெஞ்சுக்காரர்களுக்கும் <_< 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, valavan said:

பிச்சைபோட மறுப்பவர்கள் மனதில்கூட ஒரு இரக்க சுபாவத்தை உண்டுபண்ணி, அவர்களை பிச்சைபோட வைப்பதுகூட ஒருவித தொழில் யுக்திதான்!

திடகாத்திரமான உடம்பு இருக்கும்போதும் பிச்சை தொழிலில் இறங்குவது உலகம் முழுவதுமே ஏற்கமுடியாத ஒன்று,

அதுவும் ஐரோப்பா, அமெரிக்காவில் என்றால் மன்னிக்கவே முடியாத குற்றம், நேற்றுவந்தவர்களே ஆஹா .,ஓஹோனு என்று சொந்த முயற்சியில் முன்னேறுகிறார்கள்.

இந்த கதையை படிக்கும்போது, ஊரில்

’ இந்த காதல் அது இது என்னும் விஷயத்தில் என்னை விழுத்தவே முடியாது’என்று..

வீராப்பாக திரிபவர்களை, பந்தயம் பண்ணி சிலர் தமது வலையில் விழுத்தி காட்டுவார்களே அந்த ஞாபகம் வந்திச்சு, ஆழ்ந்த அனுதாபங்கள் விசுகு அண்ணாவிற்கும் பிச்சைபோட்ட ஏனைய பிரெஞ்சுக்காரர்களுக்கும் <_< 

 

அது  ஒரு புது  அனுபவம் ராசா

அந்தக்கண்களின் வலி

இத்தனை  வருடங்களாகியும்

இன்றும் என்னை  கண்  கலங்க  வைக்கிறது  என்றால்...??

சிலவற்றை  தான் நாம் நடிக்கமுடியும்

ஆனால்  உணர வைப்பது என்பது

நிழுத்துக்கு மட்டுமே முடியுமானது

 

நன்றி  கருத்துக்கும்  நேரத்துக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

 

அது  ஒரு புது  அனுபவம் ராசா

அந்தக்கண்களின் வலி

இத்தனை  வருடங்களாகியும்

இன்றும் என்னை  கண்  கலங்க  வைக்கிறது  என்றால்...??

சிலவற்றை  தான் நாம் நடிக்கமுடியும்

ஆனால்  உணர வைப்பது என்பது

நிழுத்துக்கு மட்டுமே முடியுமானது

 

நன்றி  கருத்துக்கும்  நேரத்துக்கும் 

உங்கள் உணர்வை குறைகூற என்று சொல்லபட்டதல்ல அந்த கருத்து, ஒரு புலம்பெயர் தேசத்திற்கு வந்து சுய முயற்சியில் எழுந்து நிற்கும் உங்களை போன்றவர்கள், எப்படி இந்த சுயமுயற்சியற்ற தொழிலினை, ஏதோ ஒரு இடத்தில் நம்பிவிடுகிறீர்கள் என்ற அர்த்ததில் மட்டுமே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பொதுவாகவே இரப்பவர்களுக்கு பணமாக கொடுக்க விரும்புவதில்லை.

இலண்டனிலும் முன்னர் ரோமா ஜிப்ஸிகள் இரந்துகேட்டு தொந்தரவு செய்தார்கள். இப்போது பிச்சையெடுப்பதை கட்டுப்படுத்தியுள்ளனர்.

எனது நண்பன் ஒருவன் வந்த புதிதில் தெற்கு லண்டனில் இருந்து கிழக்கு லண்டனுக்குப் போகும்போது "மொனுயுமென்ற்" சுரங்க ரயில் நிலையத்தில் ரியூப் மாறும்போது ஒரு இளம் வெள்ளைக்காரப் பெண் இரண்டு வயது மதிக்கக்தக்க அழகிய குழந்தையுடன் இருந்து பண உதவி (நாகரிகமான வழியில் பிச்சை எடுத்தல்) கேட்டாளாம். இவன் முதலில் தன்னிடமிருந்த சில்லறைக்காசுகள் அனைத்தையும் அள்ளிக் கொடுத்துவிட்டு அப்பால் போனவன், மனம் இளகித் திரும்ப வந்து இருந்த தாள்க் காசுகளையும் கொடுத்துவிட்டான் (குழந்தையோடு பிச்சை எடுப்பதைப் பார்த்தால் யாருக்குத்தான் மனம் இரங்காமல் விடும்). அடுத்த நாள் கிழக்கு லண்டனில் இருந்து திரும்பிவருவதற்கு கையில் காசில்லாமல் அவன் அவதிப்பட்டது தனிக்கதை!

விசுகு ஐயா ஏமாந்தாரா இல்லையா என்பதெல்லாம் தேவையற்றது. எதுவும் கொடுக்காமல் இருப்பதைவிட ஏமாறுவது பரவாயில்லை. ஆனால் பணமாக கொடுக்காமல் விடுவது நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகரின் அனுபவம்...ஒரு அருமையான பகிர்வு!

எவ்வளவு தான் இறுக்கிப் பிடித்தாலும்....மனிதம்...சில வேளைகளில் தன்னை...இனங்காட்டிக் கொள்கின்றது!

அது தான்...இந்த உலகத்தை இயக்கிக் கொண்டுமிருக்கின்றது!

எனக்கு மூன்று குழந்தைகள்....ஆபிரிக்காவில் இருக்கின்றன!

இரண்டு வளர்ந்து ...தங்களைத் தாங்களே பார்த்துக் கொள்ளும்..நிலைக்கு வந்து விட்டன!

மூன்றாவது குழந்தைக்குப் ...பதினோரு வயதாகின்றது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தானம் கொடுக்கத்தான் வேண்டும். ஆனால் கண்களில் வலி இருப்பதாக சொன்னீர்கள். உடம்பு வலுவாகத்தானே இருக்கிறது. ஏன் உழைத்து சாப்பிடமுடியாதவரா? இல்லாவிட்டால் அரசாங்க உதவி கிடைக்க தகுதி இல்லாதவரா?  பசித்தவருக்கு உணவு கொடுப்பதில் தவறில்லை. ஆனால் சிலர் அதையே தொழிலாகச் செய்கின்றனர். சென்ற மாதம் வீதியில் ஒரு ஆசிய இன இளம் பெண் கை ஏந்தியபடி நின்றதை கவனித்தேன். அப்பொழுது சொன்னார்கள் யாரோ ஒருவர் தன் வாகனத்தில் இப்படியான பலரை கொண்டு வந்து இறக்கி விட்டு மாலையில் வந்து எல்லோரையும் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு போவதாக. இதையும் ஒரு தொழிலாக நடத்த தொடங்கியுள்ளனர்
விசுகு பாத்திரமறிந்து பிச்சையிடுங்கள். நல்ல ஆக்கம். தொடர்ந்து எழுதுங்கள்

Link to comment
Share on other sites

பிரான்சில் இதுவரை பிச்சை கேட்பவர்களுக்கு ஓரிரு தடவைகள் தவிர்ந்து ஒருபோதும் பிச்சை போட்டதில்லை. ஏனென்றால் பசி ஏழ்மை என்றால் என்னவென்று எனக்குத் தெரியும். ஐரோப்பாவில் பசியால் யாராவது இறந்தார்கள் என்று கேள்விப் படுவது அபூர்வம். பல்லாயிரம் அரச சார்பற்ற நிறுவனங்களும் அரச கட்டுமானங்களும் ஏழ்மையில் இருப்போருக்கு உதவ இங்கு உள்ளன.

நான் பிரான்சில் உள்ள சில அரச சார்பற்ற உதவி வழங்கும் நிறுவனங்களுக்கு வேலை செய்துள்ளேன். விசுகு அண்ணா இக் கதையினூடாகக் கூறிய கருத்து மனதை உறுத்தியது. இந்த அரச சார்பற்ற நிறுவனங்களில் ஒன்று வசதியற்றவர்களுக்கு உணவு வழங்குவது. உணவைப் பெற்றுக் கொள்ள பல்வேறு நிலையில் ஏழ்மையாக உள்ளவர்கள் வருவார்கள். இவர்களில் சிலர் ஒரு காலத்தில் பாரிய செல்வந்தர்களாகவும் மிக ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தவர்களாகவும் இருந்துள்ளனர். இவர்கள் ஆடம்பர வாழ்விலிருந்து எவ்வாறு பாதாளத்துக்குள் தள்ளப்பட்டார்கள் என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை உண்டு. சிலர் வர்த்தகத்தில் திடீரென நட்டமடைந்து ஏழயானவர்கள். சிலர் குடும்பத்தி ஏற்பட்ட பிழவினால் தெருவுக்கு வந்தவர்கள். சிலர் தாம் விட்ட தவறினால் எல்லாவற்றையும் தொலைத்து ஏழையானவர்கள்.

இவர்கள் நாம் கொடுக்கும் உணவுப் பொட்டலங்களைப் பெறும்போது அவர்கள் முகத்தில் காணப்படும் வெட்கத்தையும் தயக்கத்தையும் காணும்போது நாம் ஒருபோது இந்த நிலமைக்கு வரக் கூடாது என்றே தோன்றும்.

Link to comment
Share on other sites

10 hours ago, விசுகு said:

அவன்  ரொம்ப  வெட்கப்பட்டு பிச்சை  கேட்கின்றான்

எல்லோரையும் நாம் நம்புவதில்லை. சிலரை நம்புகின்றோம். ஒரு சில சந்தர்ப்ங்களில் சிலரை நம்பும் போது நம்பிக்கைத் துரோகம் செய்தாலும் பரவாயில்லை அதை ஏற்றுக்கொள்வோம் என்ற முடிவை எடுத்து நம்ப வேண்டிய நிலை ஏற்படுவதுண்டு. அதே போல் இந்தக் கதையில் எல்லாவற்றையும் கடந்து மனதை உறுத்தும் போது பிச்சைபோட்டது உங்களுக்கு ஆரோக்கியமே. சில நேரம் கடும் குளிரில் சிலர் நடுரோட்டில் மட்டை பித்துக்கொண்டு காசை எதிர்பார்த்து நிற்பார்கள்.அவர்கள் பெரும்பாலும் சாராயத்துக்கோ அல்லது கஞ்சா பவுடருக்கோ தான் பிச்சை எடுக்கின்றர்கள் என்று தெரிந்தாலும் நான் காசு போடுவதுண்டு.. அவர்களை சந்தோசப்படுத்தவா இல்லை என்னைத் திருப்பதிப்படுத்தவா என்ற கேள்விக்கெல்லாம் போவதில்லை.. 

பகிர்வுக்கு நன்றிகள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஈழப்பிரியன் said:

என்ன எல்லோரும் தொடங்கும் போதே சிறுகதை என்ற எச்சரிக்கையுடன் !

எனக்கும் யாருக்கும் பிச்சை போட மனம் வருவதில்லை.

ஆனாலும் சில பேர் நடித்து காட்டி கதைகள் சொல்லி பாத்திரம் ஏந்தும் போது ஏதோ ஒரு வித கவர்ச்சியில் கொடுத்துவிடுவோம்.

எனது மனைவி  கேட்ட  கேள்வியையும்  

பதிந்ததற்கு காரணம்

நானும்  கொடுப்பதில்லை  அண்ணா

ஆனால்  அவன்  எனக்கொரு வேறு  பக்கத்தை ஞாபகப்படுத்தினான்

அதை  கீழே இணையவன்  எழுதியிருக்கிறார்

நன்றியண்ணா  கருத்துக்கும் நேரத்துக்கும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெருமாளே பிச்சை எடுக்கும் போது மனுசன் பிச்சை எடுப்பதில் எங்கிருக்கிறது. வெட்கம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, valavan said:

உங்கள் உணர்வை குறைகூற என்று சொல்லபட்டதல்ல அந்த கருத்து, ஒரு புலம்பெயர் தேசத்திற்கு வந்து சுய முயற்சியில் எழுந்து நிற்கும் உங்களை போன்றவர்கள், எப்படி இந்த சுயமுயற்சியற்ற தொழிலினை, ஏதோ ஒரு இடத்தில் நம்பிவிடுகிறீர்கள் என்ற அர்த்ததில் மட்டுமே!

உண்மைதான்

புலத்தில்  மட்டுமல்ல

தாயகத்திலும்  நம்பி  கெட்டு  மிகவும் பலவீனமாக  இருந்த  என்னையே

மீண்டும் தர்மம் செய் என அவன் என்னுள் விதத்ததை  உணர்ந்தேன் ராசா

அது தான் எழுதினேன்

இன்று நினைத்தாலும்  அந்தக்கண்களை

என் கண்கள்  கலங்குகின்றன  ...

எவருக்கும் இந்தநிலை  வரலாம்

ஆனால் பகைவனுக்குக்கூட  இது வரக்கூடாது என்பார்களே

அது  தான் இது.

நன்றி  தம்பி  கருத்துக்கும் நேரத்துக்கும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, கிருபன் said:

நான் பொதுவாகவே இரப்பவர்களுக்கு பணமாக கொடுக்க விரும்புவதில்லை.

இலண்டனிலும் முன்னர் ரோமா ஜிப்ஸிகள் இரந்துகேட்டு தொந்தரவு செய்தார்கள். இப்போது பிச்சையெடுப்பதை கட்டுப்படுத்தியுள்ளனர்.

எனது நண்பன் ஒருவன் வந்த புதிதில் தெற்கு லண்டனில் இருந்து கிழக்கு லண்டனுக்குப் போகும்போது "மொனுயுமென்ற்" சுரங்க ரயில் நிலையத்தில் ரியூப் மாறும்போது ஒரு இளம் வெள்ளைக்காரப் பெண் இரண்டு வயது மதிக்கக்தக்க அழகிய குழந்தையுடன் இருந்து பண உதவி (நாகரிகமான வழியில் பிச்சை எடுத்தல்) கேட்டாளாம். இவன் முதலில் தன்னிடமிருந்த சில்லறைக்காசுகள் அனைத்தையும் அள்ளிக் கொடுத்துவிட்டு அப்பால் போனவன், மனம் இளகித் திரும்ப வந்து இருந்த தாள்க் காசுகளையும் கொடுத்துவிட்டான் (குழந்தையோடு பிச்சை எடுப்பதைப் பார்த்தால் யாருக்குத்தான் மனம் இரங்காமல் விடும்). அடுத்த நாள் கிழக்கு லண்டனில் இருந்து திரும்பிவருவதற்கு கையில் காசில்லாமல் அவன் அவதிப்பட்டது தனிக்கதை!

விசுகு ஐயா ஏமாந்தாரா இல்லையா என்பதெல்லாம் தேவையற்றது. எதுவும் கொடுக்காமல் இருப்பதைவிட ஏமாறுவது பரவாயில்லை. ஆனால் பணமாக கொடுக்காமல் விடுவது நல்லது.

இந்த  எண்ணத்துக்குள்  பல கருக்கள்   உள்ளன கிருபன்

நீங்கள் குறிப்பிடும்  காசு கொடுக்கலாமா?

இவரை  அதே   தொழிலை  செய்ய  நாமே தூண்டலாமா?

போன்ற  எண்ணங்கள்  என்னுள்ளும் வந்தே சென்றன

எனக்கு  முன்னாலிருந்த ஒரு இளம்  பெண் ஒரு தோடம்பழத்தை  கொடுத்தார்

என்னிடம் பணம் மட்டுமே இருந்தது

 

நன்றி  ராசா

நேரத்துக்கும் கருத்துக்கும்

 

Link to comment
Share on other sites

ஒரு அவசரத்துக்கு கடனோ அல்லது உதவியோ இன்னொருவரிடம்  கேட்கும் நிலை எமக்கு வரும் போது மனசுக்குள் எவ்வளவு வெட்கப்படுகின்றோம், குறுகிக் கொள்கின்றோம். அப்படி இருக்கும் போது ஆட்களிடம் இரந்து பிச்சை கேட்கும் ஒரு நிலை ஒருவருக்கு வருகின்றதென்றால் அந்த நபர் எந்தளவுக்கு எதனாலோ பாதிக்கப்பட்டு இருப்பார் என்று நினைத்துப் பார்ப்பதுண்டு. அவர் கேட்பது போதை பொருளுக்காகவோ அல்லது ஒரு வேளை உணவுக்காகவோ, அல்லது எதுக்காகவோ என்றாலும், அந்த நிலைக்கு ஒரு மனிதன் / மனுசி வருவது என்பது எல்லாம் இழந்த ஒரு மனநிலையில் தான். அவர் விரும்பி வந்த நிலையாக இருக்காது. ஒவ்வொருக்கும் ஒவ்வொரு சோகம். என்னிடம் சில்லறை இருந்தால் கொடுப்பதுண்டு, இல்லாவிடின் கையாலேயே சைகை செய்து அடுத்த முறை தாறன் என்று சொல்வதுண்டு.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, புங்கையூரன் said:

விசுகரின் அனுபவம்...ஒரு அருமையான பகிர்வு!

எவ்வளவு தான் இறுக்கிப் பிடித்தாலும்....மனிதம்...சில வேளைகளில் தன்னை...இனங்காட்டிக் கொள்கின்றது!

அது தான்...இந்த உலகத்தை இயக்கிக் கொண்டுமிருக்கின்றது!

எனக்கு மூன்று குழந்தைகள்....ஆபிரிக்காவில் இருக்கின்றன!

இரண்டு வளர்ந்து ...தங்களைத் தாங்களே பார்த்துக் கொள்ளும்..நிலைக்கு வந்து விட்டன!

மூன்றாவது குழந்தைக்குப் ...பதினோரு வயதாகின்றது!

அதே

உங்களை நினைக்க  பெருமையாக  இருக்கிறது

வாழ்த்துக்கள் அண்ணா

 

நன்றியண்ணா

நேரத்துக்கும் கருத்துக்கும்

18 hours ago, Kavallur Kanmani said:

தானம் கொடுக்கத்தான் வேண்டும். ஆனால் கண்களில் வலி இருப்பதாக சொன்னீர்கள். உடம்பு வலுவாகத்தானே இருக்கிறது. ஏன் உழைத்து சாப்பிடமுடியாதவரா? இல்லாவிட்டால் அரசாங்க உதவி கிடைக்க தகுதி இல்லாதவரா?  பசித்தவருக்கு உணவு கொடுப்பதில் தவறில்லை. ஆனால் சிலர் அதையே தொழிலாகச் செய்கின்றனர். சென்ற மாதம் வீதியில் ஒரு ஆசிய இன இளம் பெண் கை ஏந்தியபடி நின்றதை கவனித்தேன். அப்பொழுது சொன்னார்கள் யாரோ ஒருவர் தன் வாகனத்தில் இப்படியான பலரை கொண்டு வந்து இறக்கி விட்டு மாலையில் வந்து எல்லோரையும் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு போவதாக. இதையும் ஒரு தொழிலாக நடத்த தொடங்கியுள்ளனர்
விசுகு பாத்திரமறிந்து பிச்சையிடுங்கள். நல்ல ஆக்கம். தொடர்ந்து எழுதுங்கள்

உண்மை  தானக்கா

ஐரோப்பிய நாடுகளில் சாப்பாட்டுக்கு  வழியற்றுஒரு போதும் வீதியில்  விடமாட்டார்கள்

அந்தவகையில் தான் நான்  எவருக்கும் பிச்சை  போடுவது  அரிது

ஆனால் இது அன்றொரு  நாள் மட்டும்  அவர்  இக்கட்டில் இருந்தது போலிருந்தது

 

நன்றியக்கா

நேரத்துக்கும்  கருத்துக்கும்  ஆலோசனைக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிச்சை கேட்பவரின் உடல் நிலையை பார்த்து நான் வழங்குவேன் உடலில் சகல அங்கங்களும் இயங்குமாக இருந்தால் க்கொடுக்க மாட்டேன்  மாறாக  இருந்தால் என்னிடம் இருப்பதை கொடுப்பேன்   ஏனென்றால் இல்லாத நிலையை அறிந்தவன் நான்  அவன் என்னை ஏமாற்றினாலும் பராவியில்லை  கையில் இல்லாத நேரத்தில் நான் கூட உதவியென்று கையேந்தி இருக்கிறேன்  10 கதவு தட்டினால் ஒரு கதவு திறக்கிறது

 

கொழும்பில் பஸ்ஸில் ஒரு பாட்டு பாடினால் காசு கொடுக்க வேணும் பாட்டு பிச்சைக்காரர்கள் தற்போது ஓரளவு குறைவு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாக்குப் பிச்சை எடுத்து...  இரண்டு, மூண்டு..  கோடி ரூபாய் கொள்ளை அடிக்கும் அரசியல் வாதிகளை விட,
தெருவில் நின்று... பிச்சை   எடுப்பவன் திறமானவன்.    
(இது...  சம்பந்தன், சுமந்திரனை குறிப்பிட்டு... பதியப்  பட்ட கருத்து அல்ல)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முறை... நான்  வீட்டு வாசலில் உள்ள வீதியை....  கூட்டிக்  கொண்டு இருந்த போது, 
60,000 ஐரோ  பெறுமதியான காரில், வந்த ஒருவர்...
நான்... வேறு மாநிலத்தில் வசிப்பவன்,
எனது... அம்மா, இந்த ஊரில் தான்... வசிக்கின்றார். 

ஒரு,  பூங்  கொத்து வாங்க    20  ஐரோ  ....  தர முடியுமா?  
வரும் போது... தனது  பணத்தை எடுத்து வர மறந்து விட்டேன்.  உன்னால் முடியுமா? என்று கேட்டார்.

அதற்கு அத்தாட்சியாக தனது, அடையாள அட்டையை... தந்து விட்டுப் போய்...
திரும்ப... அந்தப் பணத்தை தரும்,  போது ....  அடையாள அட்டையை   திரும்ப பெற்றுக்  கொள்கின்றேன் என்ற மனிதனின் சோகம் புதைந்த  முகம், இன்றும் கண் முன் நிற்கின்றது.

Link to comment
Share on other sites

தெருவில் ஆங்காங்கே சந்திகளில், கடுகதிபாதை முடிவடையும் இடங்களில் உதவுமாறு கேட்டு எழுதப்பட்ட மட்டைகளை பிடித்துக்கொண்டு ஆட்கள் நிற்பார்கள். நான் சில்லறை காசு இருந்தால் ஒரு டொலரோ இரண்டு டொலரோ எனக்கு விருப்பம் என்றால் கொடுப்பேன்.

நான் ஒருமுறை அமெரிக்காவில் நின்றபோது மிகப்பெரியதொரு பாதையில் ஓர் பெண் சுமார் முப்பது வயது இருக்கும் அழுக்கடைந்த உடை, மிகவும் வெட்கத்துடன் வாகனத்தில் வருபவர்களை பார்த்துகொண்டு இருந்தார் ஏதும் தருவார்களா என்று. எனது வாகனம் 75 நீளமான பாரவூர்தி. என்னை கிட்ட அணுகவும் இயலாது. ஆனால், எனக்கென்னவோ அந்தப்பெண்ணை தூரத்தில் கண்டதும் எனது உள்ளுணர்வு கூறியது அவளுக்கு சிறுதொகை கொடுக்கவேண்டும் என்று. நான் கோனை அடித்து சைகைகாட்டி கூப்பிட்டேன். சிரமப்பட்டு எனக்கு கிட்டவாக வந்தாள் பாதைகள கடந்து; நான் பத்து அமெரிக்க டொலர்களை கொடுத்தேன். அவள் விறுக்கென்று வாங்கிவிட்டு என்னை ஒரு பார்வை பார்த்தாள். கண்களில் பிரகாசம், ஒரு ஒளி; இருவருக்குமிடையிலான கண்தொடர்பு அந்த உரையாடல் ஒரு செக்கனே, நான் எனது மார்க்கத்தில் பயணிக்க அவள் தன்வழியில் சென்றாள். அது ஆத்மார்த்தமான ஒரு வினாடி.

நான் ஆட்கள் தெருவில் உதவி கேட்டு நிற்கும்போது அவர்களை மதிப்பீடு Judge பண்ணுவது இல்லை. நான் நூற்றுக்கணக்கிலோ அல்லது ஆயிரக்கணக்கிலோ கொடுக்கப்போவது இல்லை, உதவி கொடுப்பதும் எப்போதாவது. ஒரு நாளைக்கு எத்தனைவிதமாக எல்லாம் நான் காசை செலவளிக்கின்றேன். என்னைப்போன்ற ஒரு ஜீவன் தெருவில் வந்து வெட்கத்தைவிட்டு உதவி கேட்கின்றது. அதற்கு ஒரு டொலரோ இரண்டு டொலரோ கொடுத்தால் எனது குடிமூழ்கிவிடாது. அதேசமயம் எம்மிடம் எத்தனை கோடீஸ்வரர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ பகல்கொள்ளை அடிக்கின்றார்கள். அவர்களை எண்ணி பார்க்கையில் ஒருவனுக்கு சில ரூபாய்களை கொடுப்பது ஒன்றும் பெரிய பாரதூரமான விடயம் இல்லை. 

உங்கள் காசு, உங்கள் உழைப்பு, கொடுப்பது கொடுக்காதது உங்கள் விருப்பம். ஆனால், நான் உங்களுக்கு கூறக்கூடிய ஒருவிடயம் அடுத்ததடவை யாருக்காவது உதவி செய்யும்போது அவர்களின் கண்களை பாருங்கள். கண்களினூடு அந்த ஆத்மனுடன் உறவாடுங்கள். Eyes are the windows to the soul. இந்த வாழ்க்கை குறுகியது. நான் சாகும்போது ஒன்றையும் கொண்டுபோகப்போவது இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/02/2018 at 12:36 AM, இணையவன் said:

பிரான்சில் இதுவரை பிச்சை கேட்பவர்களுக்கு ஓரிரு தடவைகள் தவிர்ந்து ஒருபோதும் பிச்சை போட்டதில்லை. ஏனென்றால் பசி ஏழ்மை என்றால் என்னவென்று எனக்குத் தெரியும். ஐரோப்பாவில் பசியால் யாராவது இறந்தார்கள் என்று கேள்விப் படுவது அபூர்வம். பல்லாயிரம் அரச சார்பற்ற நிறுவனங்களும் அரச கட்டுமானங்களும் ஏழ்மையில் இருப்போருக்கு உதவ இங்கு உள்ளன.

நான் பிரான்சில் உள்ள சில அரச சார்பற்ற உதவி வழங்கும் நிறுவனங்களுக்கு வேலை செய்துள்ளேன். விசுகு அண்ணா இக் கதையினூடாகக் கூறிய கருத்து மனதை உறுத்தியது. இந்த அரச சார்பற்ற நிறுவனங்களில் ஒன்று வசதியற்றவர்களுக்கு உணவு வழங்குவது. உணவைப் பெற்றுக் கொள்ள பல்வேறு நிலையில் ஏழ்மையாக உள்ளவர்கள் வருவார்கள். இவர்களில் சிலர் ஒரு காலத்தில் பாரிய செல்வந்தர்களாகவும் மிக ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தவர்களாகவும் இருந்துள்ளனர். இவர்கள் ஆடம்பர வாழ்விலிருந்து எவ்வாறு பாதாளத்துக்குள் தள்ளப்பட்டார்கள் என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை உண்டு. சிலர் வர்த்தகத்தில் திடீரென நட்டமடைந்து ஏழயானவர்கள். சிலர் குடும்பத்தி ஏற்பட்ட பிழவினால் தெருவுக்கு வந்தவர்கள். சிலர் தாம் விட்ட தவறினால் எல்லாவற்றையும் தொலைத்து ஏழையானவர்கள்.

இவர்கள் நாம் கொடுக்கும் உணவுப் பொட்டலங்களைப் பெறும்போது அவர்கள் முகத்தில் காணப்படும் வெட்கத்தையும் தயக்கத்தையும் காணும்போது நாம் ஒருபோது இந்த நிலமைக்கு வரக் கூடாது என்றே தோன்றும்.

அந்த  நிமிடத்தில்  என்  மனதில் தோன்றிய

பயமுறுத்திய விடயங்கள் இவை

நம்மில் பலரும்  நினைக்கின்றோம்

எல்லாவற்றையும் நாமே தீர்மானிக்கின்றோம்

எமது எதிர்காலம் நாம் நினைத்தபடி தான் இருக்கப்போகின்றது என்று

இல்லை

நீங்கள்  மேலே  எழுதியது போல  பலரை

மலையிலிருந்து  ஒரு சில நாட்களுக்குள்

குழிக்குள்  வந்தவர்களை  நான்  சந்தித்திருக்கின்றேன்

நன்றி  தம்பி  இணையவன்

நேரத்துக்கும் கருத்துக்கும் அனுபவங்களை பகிர்ந்ததற்கும்...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/02/2018 at 5:21 AM, சண்டமாருதன் said:

எல்லோரையும் நாம் நம்புவதில்லை. சிலரை நம்புகின்றோம். ஒரு சில சந்தர்ப்ங்களில் சிலரை நம்பும் போது நம்பிக்கைத் துரோகம் செய்தாலும் பரவாயில்லை அதை ஏற்றுக்கொள்வோம் என்ற முடிவை எடுத்து நம்ப வேண்டிய நிலை ஏற்படுவதுண்டு. அதே போல் இந்தக் கதையில் எல்லாவற்றையும் கடந்து மனதை உறுத்தும் போது பிச்சைபோட்டது உங்களுக்கு ஆரோக்கியமே. சில நேரம் கடும் குளிரில் சிலர் நடுரோட்டில் மட்டை பித்துக்கொண்டு காசை எதிர்பார்த்து நிற்பார்கள்.அவர்கள் பெரும்பாலும் சாராயத்துக்கோ அல்லது கஞ்சா பவுடருக்கோ தான் பிச்சை எடுக்கின்றர்கள் என்று தெரிந்தாலும் நான் காசு போடுவதுண்டு.. அவர்களை சந்தோசப்படுத்தவா இல்லை என்னைத் திருப்பதிப்படுத்தவா என்ற கேள்விக்கெல்லாம் போவதில்லை.. 

பகிர்வுக்கு நன்றிகள்...

 

உண்மைதான்

சிலரை  நம்புகின்றோம்

நடிக்கிறார்களா?

ஏமாற்றுகிறார்களா?  என்பதையும் கடந்து

பொக்கற்றுக்குள் கை போகிறது..

இன்னொரு பக்கத்தால் பார்த்தால்

அன்று கொடுக்காமல் வந்திருந்தால்.....???

 

நன்றி சகோதரா

நேரத்துக்கும் கருத்துக்கும் 

23 hours ago, Kavi arunasalam said:

பெருமாளே பிச்சை எடுக்கும் போது மனுசன் பிச்சை எடுப்பதில் எங்கிருக்கிறது. வெட்கம்?

பெருமாளை  கல் என்பேன்  நான்

அப்படியானால் பிச்சை  எடுப்பது மனுசனுக்கு  தானே  கடினம்??

அதை  பார்த்த  எனக்கே  கடினமென்றால்??

ஒவ்வொருவருக்கும்  அந்த நிலை வரவேண்டுமென்பதில்லை  அனுபவங்களைப்பெற  ராசா...

நன்றி சகோதரா

நேரத்துக்கும் கருத்துக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் யார் கேட்டாலும் என்னால் முடிந்தால் உடனேயே கொடுத்து விடுவேன். தர்மம் தலைகாக்கும் என்பது எனது நம்பிக்கை. அதேபோல் நான் செய்த பல தர்மங்கள் கஷ்டமான பல நேரத்தில் எனக்கு உதவியிருக்கின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, நிழலி said:

ஒரு அவசரத்துக்கு கடனோ அல்லது உதவியோ இன்னொருவரிடம்  கேட்கும் நிலை எமக்கு வரும் போது மனசுக்குள் எவ்வளவு வெட்கப்படுகின்றோம், குறுகிக் கொள்கின்றோம். அப்படி இருக்கும் போது ஆட்களிடம் இரந்து பிச்சை கேட்கும் ஒரு நிலை ஒருவருக்கு வருகின்றதென்றால் அந்த நபர் எந்தளவுக்கு எதனாலோ பாதிக்கப்பட்டு இருப்பார் என்று நினைத்துப் பார்ப்பதுண்டு. அவர் கேட்பது போதை பொருளுக்காகவோ அல்லது ஒரு வேளை உணவுக்காகவோ, அல்லது எதுக்காகவோ என்றாலும், அந்த நிலைக்கு ஒரு மனிதன் / மனுசி வருவது என்பது எல்லாம் இழந்த ஒரு மனநிலையில் தான். அவர் விரும்பி வந்த நிலையாக இருக்காது. ஒவ்வொருக்கும் ஒவ்வொரு சோகம். என்னிடம் சில்லறை இருந்தால் கொடுப்பதுண்டு, இல்லாவிடின் கையாலேயே சைகை செய்து அடுத்த முறை தாறன் என்று சொல்வதுண்டு.

அதே

இந்தக்கரு  ஒவ்வொருவர் வாழ்விலும் வந்து போயிருக்கிறது  என்பதை  உங்கள்  பதிவுகள்  சொல்கின்றன

இதை எழுதத்தூண்டியவரே  நீங்க  தானே ராசா

 

 

நன்றி நிழலி

நேரத்துக்கும் கருத்துக்கும் 

17 hours ago, தனிக்காட்டு ராஜா said:

பிச்சை கேட்பவரின் உடல் நிலையை பார்த்து நான் வழங்குவேன் உடலில் சகல அங்கங்களும் இயங்குமாக இருந்தால் க்கொடுக்க மாட்டேன்  மாறாக  இருந்தால் என்னிடம் இருப்பதை கொடுப்பேன்   ஏனென்றால் இல்லாத நிலையை அறிந்தவன் நான்  அவன் என்னை ஏமாற்றினாலும் பராவியில்லை  கையில் இல்லாத நேரத்தில் நான் கூட உதவியென்று கையேந்தி இருக்கிறேன்  10 கதவு தட்டினால் ஒரு கதவு திறக்கிறது

கொழும்பில் பஸ்ஸில் ஒரு பாட்டு பாடினால் காசு கொடுக்க வேணும் பாட்டு பிச்சைக்காரர்கள் தற்போது ஓரளவு குறைவு 

அதே

கொழும்பில் கொடுக்காதுவிட்டு

அடி  வாங்கிய  தமிழருண்டு...tw_angry:

நன்றி ராசா

நேரத்துக்கும் கருத்துக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுப்பது தர்மம்
தர்மம் தலைகாக்கும்
ஆனாலும் பிச்சை எடுத்து வாழ்பவர்கள் முயற்சி இல்லாதவர்கள் அல்லது சோம்பேறிகள் என்பது எனது பொதுவான கருத்து.

இக்கதையின் கருவிற்கான  தீர்வு ஆராயப்படவேண்டியது 

On 15.2.2018 at 6:25 PM, விசுகு said:

அவன்  ரொம்ப  வெட்கப்பட்டு பிச்சை  கேட்கின்றான்

எவருக்கும்   இந்த  நிலை  வரக்கூடாது என்று

காசு  போடும் போது தான் பார்த்தேன்

நான்  மட்டுமல்ல

பலரும்  கண்களில் ஒருவித கனிவுடன்

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.