Jump to content

தமிழ்த் தலைவர்களுக்கு புள்ளடிகள் உணர்த்திய பாடங்கள்


Recommended Posts

தமிழ்த் தலைவர்களுக்கு புள்ளடிகள் உணர்த்திய பாடங்கள்
 

- க. அகரன்

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்று சொல்வர். இந்நிலையினையே, அண்மையில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் வெளிப்பாடாகக் காணமுடிகிறது.

இலங்கைத் தேசத்தில் கடந்த காலங்களில் பல தேர்தல்கள் வந்து போயிருந்தாலும், அவற்றில் குறிப்பிட்டுச் செல்லக்கூடியதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், ஒரு சில தேர்தல்களே அமைந்துள்ளன. 

இந்நிலையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் என்பது, கடந்த காலங்களில் இத்தனை புரட்சிமிக்கதாக எவராலும் பார்க்கப்படவில்லை. எனினும் இம்முறை தேர்தல், சர்வதேச ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததான ஒரு தோற்றப்பாடு வெளிக்கொணரப்பட்டிருந்தது.

இலங்கையில் உள்ள அனைத்துக் கட்சிகளுமே, தமது கட்சியின் நிலைப்பாடு தொடர்பாக நாடிபிடித்துப் பார்க்கும் களமாக இதனைப் பரீட்சித்திருந்தனர். தமது வாக்கு வங்கியில் அதீத நம்பிக்கை கொண்டு, மக்கள் செயற்பாட்டுக்கு முக்கியத்துவம் வழங்காத பல கட்சிகளுக்கு, மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்டிய தேர்தலாகவும், இதனைக் கொள்ளலாம்.

வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் என்ற கருத்தியலோடு வலம்வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு, கணிசமானளவு வீழ்ச்சி இம்முறை ஏற்பட்டுள்ளது. வடக்கில் பூநகரியையும் கிழக்கில் ஒரு சபையையும் தவிர, வேறெந்தச் சபையையும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு, கூட்டமைப்புத் தள்ளப்பட்டுள்ளது. 

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்து ஆட்சி அமைத்த, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோட்டையாகக் கருதப்பட்ட பல இடங்களில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உட்பட வேறு பல கட்சிகளின் வசம் செல்லும் நிலையை அல்லது வேறு கட்சிகளின் இணைவுடன் ஆட்சியை அமைக்க வேண்டிய சூழல் இன்று ஏற்பட்டுள்ளமையானது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் செயற்பாட்டில், ஸ்திரமற்ற நிலையை எடுத்தியம்புவதாகவே எண்ணத்தோன்றுகின்றது.

கடந்த பத்திகளில் குறிப்பிட்டதைப் போன்று, வெறும் கட்சி அரசியலுக்கு அப்பால், தமிழர்களின் அரசியல் இருப்பு என்பதைச் சிந்திக்காத போது தேசியக் கட்சிகள், வடக்கிலும் கிழக்கிலும் காலூன்றும் என்று கூறப்பட்டிருந்தது. தற்போது அந்நிலை தோற்றம்பெற்றுள்ளதை அவதானிக்க முடிகின்றது. 

தமிழ் அரசியல் தலைமைகளில் ஏற்பட்ட முரண்பாடான நிலை, மக்களால் நிராகரிக்கப்பட்ட பல கட்சிகளுக்கு இன்று மீளெழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் உள்ளூராட்சி சபைகளில் வட்டார ரீதியாக வெல்லப்பட்ட உறுப்பினர்கள், தமது வட்டாரங்களில் மேற்கொள்ளும் பணிகளின் நிமித்தம், எதிர்வரும் காலங்களில் மாகாண சபையிலும் தாக்கங்களைக் காணக்கூடியதாக இருக்கும் என்பது மறுப்பதற்கில்லை. 

வடக்கிலும் கிழக்கிலும் தேசியக் கட்சிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில், எதிர்வரும் 8ஆம் மாதத்துடன் ஆட்சி நிறைவுக்கு வரும் வடமாகாண சபையில், தேசியக் கட்சிகள் அதிக பிரசன்னத்தைக் காட்டும் என்பது யதார்த்தம். தேசியக் கட்சிகளைப் பொறுத்தவரையில், தென்பகுதியில் மேற்கொள்ளும் பாரிய வேலைத்திட்டத்தில் ஓரிரண்டையே, வடக்கிலும் கிழக்கிலும் மேற்கொள்ளும் போது, அதற்கு மக்கள் ஆதரவு இம்முறை கிடைத்துள்ளது. இந்நிலையில் அவர்கள் எதிர்வரும் காலங்களில் அதிகளவு வேலைத்திட்டங்களைத் தமது உறுப்பினர்கள் ஊடாக மேற்கொள்ள எத்தனிப்பர். எனவே அதன் தாக்கம், இனிவரும் தேர்தல்களில் தமிழ்க் கட்சிகளுக்குத் தெரியவரும் போது, வாய்பிளந்து வேடிக்கை பார்ப்பதில் அர்த்தமின்றிப் போய்விடும்.

கடந்த முறை வட மாகாணசபைத் தேர்தலில் 30 ஆசனங்களை வென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தற்போது சிதறுண்டு போயுள்ளமையால், அடுத்த மாகாணசபைத் தேர்தலில் ஆட்சியமைப்பதில் கூட பெரும் இழுபறி நிலை ஏற்படலாம் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.

தமிழர் விடுதலைக் கூட்டணியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், தற்போதைய சூழலைப் பயன்படுத்தி, தமிழரசுக் கட்சியைத் தமது வழிக்கு கொண்டுவருவதற்கு முனைகின்றனர். தமிழர் விடுதலைக் கூட்டணியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தலைமை மாற்றம் ஏற்படும் பட்சத்திலேயே, தாம் கூட்டுச்சேர்ந்து ஆட்சி அமைக்க முன்வருவோம் என, தமது தரப்பு நிலைப்பாட்டை வைத்துள்ளனர்.

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ள தமிழரசுக் கட்சி, அதற்கு உடன்பட்டு தலைமை மாற்றம் ஒன்றை ஏற்படுத்தி, தமது செல்வாக்கை இழக்க விரும்பாது. ஏனெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சின்னமாக, தமிழரசுக் கட்சியின் சின்னமே காணப்படுகின்றது. இந்தப் பின்னணியில், உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அதிகாரங்களை அமைப்பதில், தமிழரசுக் கட்சிக்குத் தொடர்ச்சியான சிக்கல் நிலை ஏற்படும். 

எனவே, தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்திய கட்சிகள் ஒன்றிணையாத பட்சத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியை அமைக்க வேண்டிய நிலை ஏற்படும் . அவ்வாறு நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

யாழ். மாநகர சபையைப் பொறுத்தவரையில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஒத்துழைப்பின்றி எவரும் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, அக்கட்சியுடன் கொள்கை ரீதியிலான முரண்பாடு காணப்படுவதால், ஒத்திசைந்து ஆட்சி அமைக்க முடியாதுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அதற்கு ஒத்திசைந்து மாநகரத்தில் ஆட்சியை அமைக்கும் நிலை காணப்படுகின்ற சூழலில், நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, தான் யாருக்கும் ஆதரவு வழங்கத் தயார் என தெரிவித்து, தனது நல்லெண்ண வெளிப்பாட்டைக் காட்டியிருக்கின்றார்.

இவ்வாறான இழுபறி நிலையில், அமையப்போகும் ஆட்சி உசிதமானதாக அமையப்போவதில்லை. ஆட்சி அதிகாரத்தை அமைத்தாலும், உள்ளூராட்சி மன்றத் தலைவர்களாக தெரிவுசெய்யப்படப் போகின்றவர்களின் ஆளுமை, குழு முயற்சி என்பவனவே, ஆட்சியை நீடித்துக் கொண்டு செல்லுமே தவிர, மேதாவித்தனமான செயற்பாடுகளால் எதனையும் சாதிக்க முடியாத நிலையை உருவாக்கும்.

இந்நிலையில், வடக்கிலும் கிழக்கிலும் இவ்வாறான நிலை ஏன் தோற்றம் பெற்றது என்பதை, தமிழ் அரசியல் தலைமைகள் ஆராய்ந்து பார்த்தல் மிகவும் அவசியமாகும். குறிப்பாக, தேர்தல் அறிவித்தல் விடுக்கப்படுவதற்கு முன்பாகவிருந்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடைமுறைகள், அதன் மீதான நம்பிக்கை என்பவற்றில், தமிழ் மக்களுக்கு பாரிய அதிருப்தி நிலை காணப்பட்டிருந்தது. 

அரசியல் தீர்வு விடயமானாலும் சரி, தமிழ்ப் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயங்கள், காணி விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை என்பவற்றில் ஆக்கபூர்வமான செயற்பாட்டை எடுக்கவில்லை என்ற கருத்தியலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் தமிழரசுக் கட்சியின் ஆதிக்கமும், கூட்டமைப்போடு இணைந்திருந்த புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், டெலோ போன்ற கட்சிகள், கூட்டமைப்புப் பற்றி பொதுவெளியில் பகிரும் கருத்துகள் என்பனவும், தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் மீது மக்கள் நம்பிக்கை இழக்கக் காரணமாகியதோடு, இக்கூட்டின் மீது ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. 

இந்நிலை, தமிழ் மக்களை தமது அரசியல் தொடர்பான மீள்பரிசீலனைக்குக் கொண்டு சென்றிருந்தது. இந்தப் பரீட்சிப்பானது, தமக்கு மாற்றம் அல்லது மாற்றுத் தலைமையின் தேவை தொடர்பில் தேடலை ஏற்படுத்தத் தொடங்கியிருந்தது என்பதை மறுப்பதற்கில்லை.

எனினும், உருவாக்கம் பெற்ற எந்தத் தலைமைகளும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விரக்தியை வெளிப்படுத்துவதற்கான மாற்றுத் தலைமையாக இல்லாமையினாலும், அந்தத் தலைமைகள் மீதும் நம்பிக்கையீனங்கள் உள்ளமையினாலும், தேசியக் கட்சிகளைத் தேடவேண்டிய நிலை, தமிழ் மக்களுக்குக் கணிசமாக ஏற்பட்டுள்ளது.

இதற்குமப்பால், இன்று கணிசமான வாக்காளர்களாக உருவாகியுள்ள 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், கவர்ச்சி அரசியலின் பக்கம் ஈர்க்கப்பட்டவர்களாகவும், தமது வாழ்வியல், தொழில் என்ற தேவையை நிறைவேற்றக்கூடிய அரசியல் தலைமைகளைத் தேடியமையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈ.பி.டி.பி போன்ற கட்சிகள், கடந்த காலங்களில் அமைச்சுப் பதவிகளைக் கொண்டு சாதித்துவிட்டதாகக் கங்கணம் கட்டிக்கொண்டாலும் கூட, நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை இழந்து சுமார் 11 வருடங்களுக்கு மேலாக, எவ்வித மக்கள் பிரதிநிதிகளையும் கொண்டிராத தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமது கொள்கையில் தளர்வை ஏற்படுத்தாது பயணித்ததன் விளைவாக, பாரிய மாற்றத்தை, வடக்கில் கண்டுள்ளது.

எனினும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தனது செயற்பாட்டை யாழ். மாவட்டத்துக்குள் மட்டும் மட்டுப்படுத்தியுள்ளமையானது, வடக்கிலும் கிழக்கிலும் வசிக்கும் தமிழ் மக்கள், தமக்கான ஒட்டுமொத்த தமிழ்த் தலைமையாக அக்கட்சியைக் கணிக்க முடியாத நிலை காணப்படுகின்றமையை, ஏற்றுக்கொள்ளவே வேண்டும். 

இச்சூழலில், தென் பகுதி அரசியலிலும் பாரிய மாற்றத்தை, மக்கள் காண்பித்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து, நல்லாட்சி என்ற சொற்பிரயோகத்துடன் நடத்திய ஆட்சிக்கு, தமது பதிலை மக்கள் கொடுத்துள்ளனர்.

மஹிந்த ராஜபக்‌ஷவையும் அவரோடு இணைந்தவர்களையும் கள்வர்களாகவும் ஊழல்வாதிகளாகவும் காண்பித்த புதிய அரசாங்கம், அவர்கள் தொடர்பில் எவ்வித ஆக்கபூர்வமான சட்ட நடவடிக்கையையும் எடுக்க முடியாது போனமையானது, மஹிந்த ராஜபக்‌ஷ இன்று மீள் விஸ்பரூபமெடுத்து, அரசியல் களத்தில் மீள் பிரவேசம் கொள்ளும் நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. சிங்கள மக்களின் மனங்களில் மஹிந்த என்ற மனிதர், ஆழமாகப் பதிந்துள்ளதை இத்தேர்தல் பறைசாற்றியுள்ளமையால், அடுத்து வரும் மாகாணசபைத் தேர்தல் தொடர்பில், தேசியக் கட்சிகளாக ஐ.தே.கவும் சு.கவும், ஐயங்கொள்ளும் நிலை தோற்றுவித்துள்ளது.

இதற்குமப்பால், மஹிந்த ராஜபக்‌ஷவின் வருகையால் இலங்கை அரசியல் களமே சற்று அரண்டுபோயுள்ளமையானது, தமிழர்களின் எதிர்கால அரசியல் நகர்வுகளிலும் பாரிய பின்னகர்வுகளை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

ஏனெனில், அரசமைப்பின் வழிகாட்டல் குழு சமர்ப்பித்த இடைக்கால அறிக்கை என்ற விடயம், அண்மைய தேர்தலில் கருப்பொருளாகத் தென்னிலங்கையிலும் கையாளப்பட்டபோது, மஹிந்த ராஜபக்‌ஷ உட்பட அவரது பிரிவினர், தமிழர்களுக்குத் தனிநாடு போய்விடும் என்ற கருத்தியலை முன்வைத்திருந்தனர்.
எனவே, தம்மைப் பாதிக்கக்கூடிய தீர்வொன்று தமிழர்களுக்குக் கிடைத்துவிடுமா என்ற, சிங்கள மக்கள் மத்தியில் ஓர் ஐயப்பாடு கூட, மஹிந்தவுக்கான ஆதரவுத் தளமாக மாறியிருந்தது.

ஆகவே தமிழ்த் தலைமைகள், வெறுமனே தமது சுயநல அரசியல் தளத்தை விடுத்தும், கட்சி வளர்ச்சிகளைப் புறந்தள்ளி வைத்து விட்டும், தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வு நோக்கிய பயணத்துக்காக ஒன்றிணைய வேண்டிய தேவையை, காலம் நன்கே சுட்டிக்காட்டியுள்ளது.

இதனையும் விடுத்து, இறுமாப்பு அரசியல் மேற்கொள்வதற்கு தமிழ் அரசியல் தலைமைகள் முற்படுவார்களேயானால், எதிர்கால அரசியல் தளம் மீது தமிழர்களுக்கு நம்பிக்கையீனங்கள் ஏற்பட்டு, தமிழ்ப் பிரதேசங்கள் எங்கும் அரசியலில் பிறழ்வுத்தன்மை ஏற்படும் என்பதோடு, நரிகளின் ஊழைச்சத்தமே கேட்கும் தேசமாக காணப்படும் என்பது தான், சாத்தியப்படும் ஒன்றாக இருக்கிறது.

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழ்த்-தலைவர்களுக்கு-புள்ளடிகள்-உணர்த்திய-பாடங்கள்/91-211553

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.