Jump to content

யாழ், சாவகச்சேரி, பருத்துறை உட்பட 5 சபைகளில் காங்கிரஸ் ஆட்சியமைக்க முயற்சி! கஜேந்திரகுமர் அதிரடி அறிவிப்பு


Recommended Posts

யாழ், சாவகச்சேரி, பருத்துறை உட்பட 5 சபைகளில் காங்கிரஸ் ஆட்சியமைக்க முயற்சி! கஜேந்திரகுமர் அதிரடி அறிவிப்பு

 

"யாழ். மாநகர சபை, நல்லூர் பிரதேச சபை, கரவெட்டி பிரதேச சபை ஆகியவற்றுக்கு தெரிவாகியுள்ள வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பலர் எம்முடன் இணைந்து செயற்பட விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் அவ்வாறு முன்வந்தால் அந்தச் சபைகளில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னனி (அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்) பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் சந்தர்ப்பம் உள்ளது.

அந்த சந்தர்ப்பத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியினராகிய நாங்கள் சரியாக பயன்படுத்துவோம்."

- இவ்வாறு நேற்று தெரிவித்தார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியுள்ள உள்ளூராட்சிச் சபைகளில் உதிரிகளை இணைத்துக்கொண்டு ஆட்சியமைக்கும் திட்டத்தை ஏனையோர் மறந்துவிடவேண்டும்.

அவ்வாறு செய்யக்கூடாது. எமது உறுப்பினர்கள் அவ்வாறு சோரம் போக மாட்டார்கள் என்று கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோவின் செயலாளர் என்.சிறீகாந்தா நேற்றுமுந்தினம் நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கூறியிருந்தார்.

இது தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே கஜேந்திரகுமார் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு :-

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னனி பருத்துறை நகரசபை, சாவகச்சேரி நகரசபை ஆகியவற்றில் அதிகப்படியான ஆசனங்களை பெற்றிருக்கின்றது. எனவே அந்த இரு நகரசபைகளிலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னனி ஆட்சியமைக்கும்.

அதே போல் யாழ்.மாநகரசபை, நல்லூர் பிரதேச சபை, கரவெட்டி பிரதேச சபை போன்றவற்றிலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னனி ஆட்சியமைப்பதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளன.

இந்த சபைகளில் அதிகப்படியான ஆசனங்களை பெற்று முதன்மையாக இல்லாவிட்டாலும் வேறு கட்சிகளை சேர்ந்த - சுயேற்சைக்குழுக்களை சேர்ந்த - உறுப்பினர்கள் எங்களுடன் இனைவதற்கான விருப்பத்தை நேரடியாக தெரிவித்துள்ளனர்.

விருப்பம் தெரிவித்திருக்கும் உறுப்பினர்கள் எங்களுடன் இணைந்து கொள்வார்களாயின் யாழ்.மாநகரசபை, நல்லூர் பிரதேச சபை, கரவெட்டி பிரதேச சபை போன்றவற்றில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னனி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் சந்தர்ப்பம் உள்ளது.

அந்த சந்தர்ப்பத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாங்கள் சரியாக பயன்படுத்துவோம் என்றார்.

 

http://www.tamilwin.com/politics/01/174339?ref=home-feed

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ சைக்கிள் ஓவரா ஆடுது போல் இருக்கு யாராவது சொல்லுங்க இது முழுமையான வெற்றி அல்ல என்று .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

எனக்கென்னவோ சைக்கிள் ஓவரா ஆடுது போல் இருக்கு யாராவது சொல்லுங்க இது முழுமையான வெற்றி அல்ல என்று .

பெருமாள் இம்முறை தேர்தலில் கூடுதல் ஆசனங்களை எடுத்தவர்களை விட மற்றவர்களின் எண்ணிக்கை கூடுதலாக இருப்பதால் கஜேந்திரன் கூறுவது சிலவேளை சாத்தியமாகலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஈழப்பிரியன் said:

பெருமாள் இம்முறை தேர்தலில் கூடுதல் ஆசனங்களை எடுத்தவர்களை விட மற்றவர்களின் எண்ணிக்கை கூடுதலாக இருப்பதால் கஜேந்திரன் கூறுவது சிலவேளை சாத்தியமாகலாம்.

நீங்கள் சொல்வது சரி கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டு விடுவார்களோ ஆதங்கம் எழுவதை தடுக்க முடியாமல் இருக்கு இது உள்ளூர் ஆட்சி சபை தேர்தல் பாலத்துக்கு பெயின்ட் அடிப்பது போன்றதுகள் இதில் மக்களை கவர் பண்ண தவறினால் எக்காலுமும் எழுந்திருக்க முடியாது . என்கன்னவோ நரி கூட்டம் வேண்டும் என்றே விளையாட்டு காட்டுவது போல் உள்ளது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதே பாரழமன்ற தேர்தலிலிலும் என்று மகிந்த உட்டபட யாரும் நினைக்க குடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, சுவைப்பிரியன் said:

இதே பாரழமன்ற தேர்தலிலிலும் என்று மகிந்த உட்டபட யாரும் நினைக்க குடாது.

சாதாரண பணிகளுக்கான தேர்தலே நாடு முழுவதிலும் ஆட்டிப் படைத்திருக்கு.

அடுத்து மாகாணசபைத் தேர்தல் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

Link to comment
Share on other sites

 அப்படி எனில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னனி  ஈபிடிபியுடனோ அல்லது சிங்கள கட்சிகளான ஐ.தே.க. / சுதந்திர கட்சி யுடனோ சேர்ந்தே ஆட்சி அமைக்க முடியும்.

யாழ் மாநகர சபையில் த.தே.ம.மு பெற்றது 13 இடங்க்கள். ஈபிடிபி 10 யூன்பி 3 சுதந்திரக் கட்சி 2, சங்கரியின் கூட்டணி பெற்றது 1. கூட்டமைப்பு பெற்றது 16 இடங்கள். பெரும்பான்மை பெற வேண்டும் எனில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உதவியின்றி பெரும்பான்மை பலத்தை அடைய வேண்டும் எனில் ஈபிடிபியுடனோ அல்லது சிங்கள கட்சியுடனோ சேர்ந்தே ஆட்சி அமைக்க முடியும்.

ஏனைய இடங்களிலும் இதே போன்ற ஒரு நிலைதான்.

16 minutes ago, ஈழப்பிரியன் said:

 

அடுத்து மாகாணசபைத் தேர்தல் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

மாகாணசபை தேர்தலில்  தமிழ்த் தேசிய மக்கள் முன்னனி  போட்டியிடப் போகின்றதா? கடந்த முறை மாகாணசபை தேர்தலின் போது, மாகணசபைகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை, புலிகளும் எதிர்த்த ஒரு சபை, ஒற்றையாட்சியை முற்றுமுழுதாக ஏற்ற அதிகார அலகு என்றுதானே  மக்களை பகிஷ்கரிக்க சொல்லி தாமும் அதில் போட்டியிடாமல் விட்டவர்கள்?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நிழலி said:

 அப்படி எனில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னனி  ஈபிடிபியுடனோ அல்லது சிங்கள கட்சிகளான ஐ.தே.க. / சுதந்திர கட்சி யுடனோ சேர்ந்தே ஆட்சி அமைக்க முடியும்.

யாழ் மாநகர சபையில் த.தே.ம.மு பெற்றது 13 இடங்க்கள். ஈபிடிபி 10 யூன்பி 3 சுதந்திரக் கட்சி 2, சங்கரியின் கூட்டணி பெற்றது 1. கூட்டமைப்பு பெற்றது 16 இடங்கள். பெரும்பான்மை பெற வேண்டும் எனில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உதவியின்றி பெரும்பான்மை பலத்தை அடைய வேண்டும் எனில் ஈபிடிபியுடனோ அல்லது சிங்கள கட்சியுடனோ சேர்ந்தே ஆட்சி அமைக்க முடியும்.

ஏனைய இடங்களிலும் இதே போன்ற ஒரு நிலைதான்.

இந்த தேர்தல் முறை எந்த ஒரு கட்சியும் கயிற்றில் நடப்பது போல தான்.

கூட இருப்பவர்கள் என்ன செய்தாலும் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.இல்லை என்றால் ஆதரவை நிற்பாட்டுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, நிழலி said:

  தமிழ்த் தேசிய மக்கள் முன்னனி  போட்டியிடப் போகின்றதா? கடந்த முறை மாகாணசபை தேர்தலின் போது, மாகணசபைகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை, புலிகளும் எதிர்த்த ஒரு சபை, ஒற்றையாட்சியை முற்றுமுழுதாக ஏற்ற அதிகார அலகு என்றுதானே  மக்களை பகிஷ்கரிக்க சொல்லி தாமும் அதில் போட்டியிடாமல் விட்டவர்கள்?

மாகாணசபைத் தேர்தல் எப்படி போகும் என்பதை முதலமைச்சர் விக்கி தான் முடிவெடுப்பார் என எண்ணுகிறேன்.

கூட்டமைப்பிலுள்ளவர்களால் மிக கடுமையாக விமர்சிக்கப்படுகிறவர் தேர்தலில் வேறு ஒருவரையே முதலமைச்சராக நியமிப்பார்கள்.

மக்கள் ஆதரவுள்ளவர் எப்படி செயற்படுவார்?
பொறுத்திருந்து பார்ப்போம்.

Link to comment
Share on other sites

கீரைக் கடைக்கும் எதிர்க்கடை வேண்டும் என்று ஒரு பழமொழி இருக்கிறது. தமிழரசு கட்சியின் வினைத்திறன் குறைந்த நிலைக்கு பலமான எதிர்க்கட்சி இது வரை இல்லாமல் இருந்ததே காரணம். இன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் இந்த பலமான எதிர்க்கட்சி உருவாகி இருக்கிறது. அவர்கள் பல உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைக்க வேண்டும். அப்போது தான் தமிழ் மக்களுக்கு வினைத்திறன் மிக்க தலைமைத்துவம் தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழரசு கடசி இருவரிடம் இருந்தும் கிடைக்கும். 

பாட்டனார் புகழ் பெற்ற வழக்கறிஞராக இருந்தார். கோடீஸ்வரர் ஆனார். வடக்கிலும் கிழக்கிலும் இருக்கும் அனைத்து பாரிய அரச தொழிற்சாலைகளையும் தான் அமைச்சராக இருந்த காலத்தில் கட்டி நூற்றுக்கணக்கானவர்களுக்கு வாழ்வளித்தார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் அவ்வாறு செய்வார் என்றும் எதிர்பார்ப்போம். பாட்டனரையும் விஞ்சி இன்று தமிழரசு கட்சியை ஆட்டம் காண செய்து இருக்கிறார். ஆகவே இவர் ஆற்றல் மிக்கவர்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.