Jump to content

"வெல்லும் தமிழீழம்” - தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாடு


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
"வெல்லும் தமிழீழம்” தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாடு.
 
”வெல்லும் தமிழீழம்” தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாட்டினை பிப்ரவரி 18 அன்று சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளோம் 
 
தமிழீழ விடுதலைப் பயணத்தில் நாம் இப்போது எங்கு நின்று கொண்டிருக்கிறோம், தமிழகம் செய்ய வேண்டிய கடமைகள் என்ன, இலங்கையின் புதிய அரசியல் சாசனம் சொல்வது என்ன, தமிழீழ விடுதலை எனும் இலக்கினை நோக்கி நகர்ந்திட நாம் எவ்வாறெல்லாம் பயணத்திட வேண்டியிருக்கிறது என அனைத்தையும் குறித்த விரிவான விளக்க உரையாடல்கள் நடைபெறும்.
 
மலேசியாவின் பினாங்கு மாகாணத்தின் துணை முதல்வரான திரு.ராமசாமி அவர்கள் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார்.
 
தமிழீழத்திலிருந்தும் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளார்கள். இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்த ஜனநாயக சக்திகள் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்களும் கலந்து கொள்கின்றனர்.
 
தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழீழ ஆதரவு கட்சிகள் மற்றும் இயக்கங்களின் தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.
 
திரைத்துறையினர், கலைஞர்கள், பேராசிரியர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொள்கிறார்கள்.
 
”வெல்லும் தமிழீழம்” தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாடு பற்றி விளக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு 10-2-2018 அன்று காலை சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் மே பதினேழு இயக்கத்தினால் நடத்தப்பட்டது. 
 
பத்திரிக்கையாளர் சந்திப்பு காணொளி 
 
”தமிழீழம் என்பது தமீழீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட” என்ற முத்துக்குமாரின் வரிகள் ஏன் முக்கியம் வாய்ந்தவை என்பதை உரக்கப் பேசும் மாநாடு இது.
 
மீத்தேன், நியூட்ரினோ, மீனவர் பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை என அனைத்துக்கும் போராடி வந்தாலும் நாம் இன்னும் தமிழீழத்தை மறக்கவில்லை எனக் காட்டுவோம்.
 
தமிழீழ இனப்படுகொலைக்கு நீதியை வலியுறுத்துகிற, தமிழீழ விடுதலையை நேசிக்கிற அனைவரும் கூடுவோம்.
 
பிப்ரவரி 18, 2018  ஞாயிறு 
காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை.
அண்ணா அரங்கம், 
(சென்னை பல்கலைக்கழகம் பின்புறம், 
தூர்தர்சன் தொலைக்காட்சி நிலையம் அருகில்)
சேப்பாக்கம், சென்னை.
 
மாநாடு குறித்த விளக்க காணொளி 
 
27983403_2013594778657971_53834242367285
 
27748130_2000218073328975_31113138006940
28162099_2013999605284155_66066689033142
 
சென்னையில் சந்திப்போம்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.