Jump to content

பீட்டர் மற்றும் வெர்ட்டிக்கோ - சின்ன கதை


Recommended Posts

அவர்கள் அவரை பீற்றர்  என்று சத்தமாக அழைத்தமையால் தான் அவர் இருக்கும் திசையை நான் பார்க்க தொடங்கினேன். அதுவரைக்கும் நான் புத்தகம் வாசித்து கொண்டு இருந்தமையால் அவரை கவனிக்கவில்லை.

அங்குள்ள பாதுகாப்பு உத்தியோகத்தவர்களுக்கு அவர் நன்கு பரிச்சயமானவர் போல அவர்கள் தோழமையுடன் அவரை அணுகிக் கொண்டு இருந்தனர்.

இப்படியானவரை எப்படி இங்கு அனுமதிக்கின்றார்கள் என புரியவில்லை.  மனசுள் கொஞ்சம் கோபமும் எழத் தொடங்குகியது.

நேரம் நடு இரவு 10 மணியை தாண்டி சென்று கொண்டு இருந்தது.

8 மணிக்கே அருகில் இருக்கும் பொது மருத்துவமனையின் அவசர பிரிவுக்கு சிகிச்சைக்காக வந்து விட்டேன். எல்லாம் பார்த்து என்ன பிரச்சனை என்று சொல்ல  இன்னும் நான்கு மணி நேரமாவது செல்லும் சில வேளைகளில் என்னை மறிச்சு வைத்து சில நாட்கள் சிகிச்சை அளித்தாலும் அளிப்பார்கள். அப்படி தங்க வேண்டி வந்தால் லப் டொப்பை (Laptop) கொண்டு வர மனைவிக்கு சொல்ல வேண்டும்.

சில தினங்களுக்கு முன்னர் வேலையில் இருக்கும் போது பகல் 10 மணி இருக்கும்,  திடீர் என்று தலை சுற்றியது. கண்ணுக்குள் நட்சத்திரங்கள் பறந்தன. உடல் தன்   சமநிலையை தொலைத்து விட்டது போன்று இருந்தது. எல்லாம் மூன்று வினாடிகள் தான். பிறகு சரியாகி விட்டது. 

பிறகு பின்னேரம் 5 மணி இருக்கும் அதே மாதிரி ஒரு தலை சுற்றல், நட்சத்திரங்கள் பறப்பு, சமநிலை குழம்புதல்.. எல்லாம் மூன்று வினாடிகள் தான், பிறகு சரியாகி விட்டது

அடுத்து வந்த சனி ஞாயிறு தினங்களில் தலை சுற்றல் வர வில்லை. இடையில் ஒருக்கால் பிரஷர் செக் பண்ண வேண்டும் என்று நினைத்தும் நேரம் கிடைக்கவில்லை. திங்கட் கிழமை வேலைக்கு வந்த பிறகும் பிரச்சனை ஒன்றும் இருக்கவில்லை. பின்னேரம் வேலையில் இருந்து வீட்டுக்கு காரில் ஹை வேயில் 120 கிலோ மீற்றர் வேகத்தில் போய்க் கொண்டு இருக்கின்றேன். திடீர் என்று மீண்டும் அதே தலை சுற்றல், கண்கள் இருட்டிக் கொண்டு வந்தமாதிரி இருக்கின்றது, வெள்ளிக் கிழமை வந்த அதே நட்சத்திரங்க்கள் திரும்பவும் வந்து மின்னிக்கொண்டு நின்றன.. பாதை ஒரு சுழட்டு சுழற்றியது...ஆனால் எல்லாம் மூன்று வினாடிகள் தான்.

அடுத்தது என்ன செய்வது என யோசித்தேன். காரை ஓரமாக நிப்பாட்டிட்டு கொஞ்ச நேரம் பொறுத்து பார்ப்பமா என நினைத்தேன். ஆனால் ஒரு அசட்டு தைரியம் (அல்லது முட்டாள் தனம்). காரை நிறுத்தாமல் வீட்டுக்கு அதே வேகத்தில் வந்து சேர்ந்து விட்டேன். வீட்டை வந்தும் ஒன்றும் சொல்லாமல் மனைவியை வோல் மார்ட்டுக்கு (Walmart) வா என்று கூட்டிக் கொண்டு போய் அங்கு பிரஷரை செக் பண்ணினால் அது தாறு மாறாக 182/120 என்று காட்டியது.

அவ்வளவு தான் அடுத்த வினாடியே அவசர பிரிவுக்கு மனைவி அழைத்துக் கொண்டு வந்து விட்டார்.

கனடாவில் அவசர பிரிவுக்கு வந்தால்  முதலில் தாதி வந்து பிரஷர் / இதய துடிப்பு, உடல் வெப்ப நிலை எல்லாம் செக் பண்ணி பார்ப்பார். ஒன்றும் பெரியளவு பயப்படும் படி இல்லை என்றால் மருத்துவர்களை சந்திக்க ஆகக் குறைந்தது 5 மணித்தியாலங்களாவது காத்திருக்க வேண்டும். சில வேளை 8 மணித்தியாலங்களும் எடுக்கும். இடையில் வருத்தம் கூடுவது போன்று இருந்தால் போய் சொன்னால் கவனிப்பார்கள்.

நேரம் கனக்க போகும் என்று தெரியும் என்பதால் தமிழ் நதியின் 'பார்த்தீனியம்' நாவலை வாசிக்க தொடங்குவம் என்று கையோடு கொண்டு போயிருந்தேன். இரவில் பிள்ளைகள் தனிய வீட்டில் விட கூடாது என மனைவியை வீட்டுக்கு அனுப்பி விட்டு ஆஸ்பத்திரி கதிரையில் இருந்து அங்கும் இங்கும் நோட்டமிட்டேன்.

கண்ணுக்கு குளிர்ச்சியா ஒருத்தியும் இல்லை.  எல்லா கதிரைகளும் நிரம்பி வழிந்தன. ஒவ்வொருவரது முகங்களும் ஒவ்வொரு விதமான வேதனைகளை கேள்விகளை எழுப்பிக் கொண்டு இருந்தன. ஒரு வயதான பெண்மணி தொடர்ந்து இருமிக் கொண்டு இருந்தார். ஒரு குழந்தை தன் அப்பாவுடன் மாத்திரம் வந்து அவரது மடியில் தலை வைத்து படுத்துக் கிடந்தது. என் மகளின் நினைவு வந்தது. நான் திரும்பி போகும் மட்டும் முழித்து இருக்க கூடிய சீவன் அது. ஒருவர் காலில் பெரிய காயத்துடன் வந்து இருந்தார். ஒரு சோடி தம்மை மறந்து முத்தமிட்டுக் கொண்டு இருந்தனர். அதில் இருந்த பெண்மணி இடைக்கிடை தான் முத்தம் கொடுப்பதை மற்றவர்கள் பார்க்கின்றனரா என்று நோட்டம் வேறு விட்டுக் கொண்டு இருந்தார்.

சுவாரசியமாக எதுவும் இல்லாமையால் பார்த்தீனியத்தை வாசிக்க தொடங்கி அதற்குள் மூழ்கி கொண்டு இருக்கும் போது தான் "பீற்றர் பீற்றர்" என்று அவரை கொஞ்சம் சத்தமாக அழைத்தது கேட்டது.

யாரந்த பீற்றர் என நோட்டமிட்டேன்.

ஒன்றுக்கு மூன்று அழுக்கடைந்த உடுப்புகளை அணிந்து கொண்டு, தாடிக்குள் முகத்தின் முக்கால்வாசியை மறைத்துக் கொண்டு ஒருவர் அமர்ந்து இருந்தார். அவர் அருகில் எவரும் அமர்ந்து இருக்கவில்லி. ஒரு நைந்து போன ஸ்கூல் பாக் ஒன்றும் இருந்தது.

அவர் வீடற்ற ஒருவர் என உடனே புரிந்து போனது. அத்துடன் மனநிலை பாதிக்கப்பட்டவர் போன்று இருந்தார்.

இடைக்கிடை அவர் பெரும் சத்தம் எழுப்பினார். அழுகின்றார் போன்றும் இருந்தது.

திடீர் என்று தனக்கு முன்னால் இருந்த பெரும் இலையான் கூட்டத்தை கலைப்பது போன்று இரண்டு கைகளாலும் எதையோ விரட்டினார். கத்தினார், சத்தமிட்டார், அழுதார், சிரித்தார் பின் அமைதியானார்.

அவர் குறிப்பிட்ட இடைவெளி விட்டு மீண்டும் மீண்டும் கத்திக் கொண்டும் எதையோ / எவரையோ விரட்டிக் கொண்டும் இருந்தார். அப்படி ஒவ்வொரு முறை செய்யும் போதும் பாதுகாப்பு உத்தியோகத்தவர்கள் அவரை கொஞ்சம் கண்டிப்புடன் "பீற்றர் பீற்றர்" என அழைத்து அதட்டினர். ஒவ்வொரு அதட்டலின் பின்பும் அவர் அமைதியானார்..

ஏற்கனவே சனம் வருத்தத்துடன் வந்து இருக்கு, இவர்கள் ஏன் இவரை விரட்டாமல் உள்ளே வைத்து அனுமதிக்கின்றார்கள் என எரிச்சல் வந்தது.

"ஏன் இப்படியானவர்களை விரட்டி விட்டு உன்னை மாதிரி ஆக்களுக்கு மட்டும்தானா இந்த உலகம் மிஞ்ச வேண்டும்" என்று இன்னொரு மூலையில் இருந்து புத்தி கேள்வி கேட்டது

என்னால் அதன் பின் புத்தகம் மீது கவனத்தை செலுத்த முடியவில்லை. ஏதோ ஒன்று அவர் பால் ஈர்த்துக் கொண்டே இருந்தது. அவர் என்ன செய்கின்றார், எப்படி கண்களை மூடுகின்றார், எப்ப கைகளை ஆட்டி ஆட்டி விரட்டுகின்றார்" என அடிக்கடி பார்த்துக் கொண்டே இருந்தேன். அதுவும் சுவாரசியமாக இருந்தது

 'க்ளக்' என்று ஒரு சத்தம்

அருகில் இருந்த சோடி தாம் ஆளாளுக்கு பருக்கிக் கொண்டு இருந்த கோப்பியை தவறுதலாக சிந்தி விட்டார்கள். தரையெல்லாம் கோப்பி. .

'ஒரு கோப்பியை கூட ஒழுங்காக ஆளாளுக்கு பருக்க தெரியவில்லை...உதுக்குள ஆளாளுக்கு முத்தம் வேற...மூதேசிகள்'

சிந்திய கோப்பியில் இருந்து வந்த மணம் வயிற்றை புரட்டுவது போல இருந்தது.

கொஞ்சம் அங்கால பார்த்தால் ஒருவர் தான் சாப்பிட்டுக் ககொண்டு இருந்த பொப் கோர்னை சிந்தி விட்டு இருந்ததும் தெரிந்தது. நடு இரவையும் தாண்டி பலர் காத்திருப்பதால் பலர் பசிக்கு ஏதாவது வாங்கி உண்டு கொண்டு இருந்தனர். சிந்திய உணவு பலரது இருக்கைகளின் கூழ் இருந்தது.

'சாப்பாட்டை கூட சிந்தாமல் சாப்பிட தெரியாத சனம்".  நேரம் போக போக எதுக்கெல்லாமோ மனம் எரிச்சலடைந்து கொண்டு இருந்தது.

பீற்றரின் இருக்கையின் கீழ் எதுவும் இருக்கவில்லை. சுத்தமாக இருந்தது.

சில நிமிடங்களில்  என் பெயரை சொல்லி உள்ளே அழைக்கின்றார்கள்.

டொக்டர் என்ன நடந்தது எனக் கேட்டு லைட்டை அணைத்தார் (ரேப் பண்ண போறாரோ) பின் கண்களை அங்கால இங்கால உருட்டி பிரட்டி பார்க்க சொன்னார் (மாறி கண் வைத்தியரிடம் வந்து விட்டேனா). மூக்குக்கு முன்னால் நேராக விரலை வைத்து அதையே உத்து பார்க்க சொன்னார். தன் தலையை சிலுப்பி கொண்டார்.

"பிரஷர் கூடவா டொக்டர்" எனக் கேட்டேன்.

"இல்லை, பிரஷர் கூடினால் ஒரு நாளும் தலை சுற்றல் வராது. நீ தலை சுற்றியதால் பயந்து போய் விட்டாய், அதுதான் உன் பிரஷர் கூடக் காட்டியது. ஆனால் 182/120 எல்லாம் அதிகமாக பயப்படும் அளவுக்கானது இல்லை." என்றார் (அப்ப பிரசர் கூடி நெஞ்சு பிளந்தால் தான் அடுத்த முறை வர வேண்டும் போல)

"எதுக்கும் இரத்தம் சோதித்து பார்க்க வேண்டும்" என்று தாதியை கூப்பிட வந்த தாதியும் வஞ்சகம் இல்லாமல் நாலு சிறு போத்தல்களில் இரத்தம் எடுத்துக் விட்டு "ரிசல்ட்ஸ் வரும் வரைக்கும் வெளியே காத்திரு" என்றார்

"எவ்வளவு நேரம் எடுக்கும்"

"ஒன்றரை மணித்தியாலமாவது எடுக்கும்'

மணி 12:30 தாண்டி விட்டு இருந்தது.

மீண்டும் காத்திருப்போருக்கான வராந்தாவுக்கு வருகின்றேன். வராந்தா பளிச் என்று இருக்குது. கீழே கொட்டப்பட்ட உணவு, கோப்பி, பொப் கோர்ன் என்று எதுவுமே இல்லை.  எல்லாம் துடைத்து துப்பரவாக இருந்தது.

"இந்த இரவிலும் சுத்தப்படுத்தி இருக்கின்றார்கள்... கனடா கனடா தான்" என நினைத்து கொண்டு பீற்றர் இன்னும் இருக்கின்றாரா என  பார்க்கின்றேன். அந்த சுத்தமான இடத்தில் ஒரு அழுக்கு மூட்டையாக அவர் அமர்ந்து இருந்தார். மீண்டும் எரிச்சலாக இருந்தது.

"ஏன் இன்னும் இந்த மனுசனை விரட்டாமல் விட்டு இருக்கின்றார்கள்"

கொஞ்சம் களைப்பாக இருந்தது. பாவி மகள் 4 போத்தல் இரத்தம் எடுத்ததால் இருக்குமோ என நினைத்து உள்ளே இருக்கும் கோப்பி கடைக்கு போய் ஒரு டபிள் டபிள் கோப்பி வாங்கி வந்து குடிக்க தொட்ங்கினேன்

என் மொபைல் அடித்தது. மனைவி நிலவரம் அறிய தொலைபேசினார். கால்களுக்கு இடையில் கோப்பியை வைத்து விட்டு அவருடன் கதைத்து முடித்தேன். பின் நாளைக்கு வேலைக்கு லேட்டாக வருவன் என்று ஒரு மெயிலையும் மானேஜருக்கு அனுப்பி விட்டு கால்களை மாற்றி வைக்கும் போது கோப்பியை தட்டி விட்டேன்.

நிலத்தில் கோப்பி சிறு உலகப் படம் போல திக்குகள் நீள பரவியது

"இவனுக்கு கோப்பியை கூட ஒழுங்காக குடிக்க தெரியவில்லை" என சனம் நினைக்கும் என்றெண்ணி பார்க்கின்றேன். ஆரும் என்னை கவனித்த மாதிரி தெரியவில்லை. அவரவருக்கான உலகில் அவர்கள் இருந்தனர். கனடா மக்களின் பொதுவான சுபாவம் அது.

எல்லாரும் அமர்ந்த இடங்கள் சுத்தமாக இருக்க என் இருக்கையின் கீழ் கோப்பி சிந்தி அழுக்காக கிடந்தது. பீற்றர் என்னை பார்க்கின்றாரா என கவனித்தேன். அவர் மீண்டும் எதையோ காற்றில் கலைத்து கொண்டு இருந்தார்.

மெதுவாக எழும்பி இன்னொரு இருக்கைக்கு சென்று நல்ல பிள்ளையாக அமர்ந்து விட்டேன். ஒருவரும் கவனிக்கவில்லை.

ஒரு மணித்தியாலம் கழிய என் பெயரை மீண்டும் அழைக்கின்றனர்.

இரத்த பரிசோதனையிலும் ஒரு பிரச்சனையும் இல்லை.

"அப்ப ஏன் டொக்டர் தலை சுற்றியது"?

"உனக்கு வெர்ட்டிகோ (Vertigo) பிரச்சனை.." என்றார்

"அப்படி என்றா;..."?

"காதுக்குள் உடலை சமனிலையில் பேணும் திரவம் இருக்குது..அது சில நேரம் குளம்பிவிடும் ..அதுதான் தலை சுற்றியது உனக்கு"

"அப்ப இதுக்கு மருந்து ஏதும்"

"ஒன்றும் தேவையில்லை..இதில் சொல்லியிருக்கிற இலேசான உடற்பயிற்சியை செய்..அதோட கொஞ்சம் உயரமான தலையணை போட்டு படு" என்றார் டொக்டர்'. அத்துடன் மீண்டும் பிரஷர் செக் பண்ணும் போது அது நல்ல பிள்ளை போல 132/90 என்று காட்டியது..."

மனசு நிம்மதியானது. ஐஞ்சு மணித்தியாலம் காத்திருந்தது வீண் என நினைத்தாலும் உடம்புக்கு ஒன்றும் இல்லை என்று மனம் அறிந்து சந்தோசப்பட்டது. வாயில் "ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேகம் நீ தான் " எனும் பாடல்  வந்து ஒட்டிக் கொண்டது.

வராந்தாவுக்கு வந்து வெளியேறும் கதவை அடையும் போது தான் பீற்றரின் நினைவு வந்தது. மீண்டும் வராந்தவுக்குள் வந்து பீற்றர் அமர்ந்து இருந்த இடத்தை பார்க்கின்றேன்

அதில் அவர் இல்லை

எங்கே போயிருப்பார் என சுற்றும் முற்றும் பார்க்கின்றேன்

பீற்றரை காணுகின்றேன்.. .

நான் முன்னர் அமர்ந்து இருந்த இடத்தில் குனிந்து இருந்த படி ஏதோ செய்கின்றார்

என்ன செய்கின்றார் என வடிவாக  பார்க்கின்றேன்

நான் கொட்டிய கோப்பியை ஒரு துணியால் துடைத்து விட்டு எழுந்து கொள்கின்றார்

வராந்தா மீண்டும் பளிச் என்று ஆகின்றது

.

Link to comment
Share on other sites

4 hours ago, நிழலி said:

 

ஏற்கனவே சனம் வருத்தத்துடன் வந்து இருக்கு, இவர்கள் ஏன் இவரை விரட்டாமல் உள்ளே வைத்து அனுமதிக்கின்றார்கள் என எரிச்சல் வந்தது.

"ஏன் இப்படியானவர்களை விரட்டி விட்டு உன்னை மாதிரி ஆக்களுக்கு மட்டும்தானா இந்த உலகம் மிஞ்ச வேண்டும்" என்று இன்னொரு மூலையில் இருந்து புத்தி கேள்வி கேட்டது

பலரின் சிந்தனை உங்கள் முதல் வாய்கியத்துடன் முற்றுப்பெறுகின்றது. அவர்களின் தேடல் என்பதும்  அத்தோடு நின்றுவிடுகின்றது. என்னும் சிலர் முற்றுப்புள்ளிக்குப் பதிலாக தொடர்ச்சிக்குறியைப் போட்டு பாவம் என்று இரக்க உணர்வையும் கொள்வார்கள்.. மானுடத்தின் அழகு என்பது இந்த உலகு எனக்கு மட்டுமானதில்லை என்ற பொதுப் புத்தியின் விழிப்பிலேயே உள்ளது.  அதை ஒரு சிறு கதையாக முனவைத்ததும் சிறப்புதான்.

4 hours ago, நிழலி said:

பீற்றரை காணுகின்றேன்.. .

நான் முன்னர் அமர்ந்து இருந்த இடத்தில் குனிந்து இருந்த படி ஏதோ செய்கின்றார்

என்ன செய்கின்றார் என வடிவாக  பார்க்கின்றேன்

நான் கொட்டிய கோப்பியை ஒரு துணியால் துடைத்து விட்டு எழுந்து கொள்கின்றார்

வராந்தா மீண்டும் பளிச் என்று ஆகின்றது

சிந்தனை எதைத் தேடியதோ அது கிடைத்தது.. நீங்கள் குறையில் விட்டதொன்று அவரால் முடித்து வைக்கப்பட்டது ! 

---

நல்லதொரு ஆக்கம்.. கதை எழுதி பரிட்சயம் உள்ளவர் போல் எழுத்து நடை. தன்னிலையை முன்வைப்பதில் நேர்மை. தொடர்ந்து எழுதுங்கள். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவசர நோயாளர் பிரிவில் இன்று மதியம்தான் நின்று விட்டு திரும்பினேன். அட இங்கு வந்து அதன் தொடர்ச்சியா???????

நல்லதோர் ஆக்கம் வெட்டுக்கிளி. நோயைக்காட்டிலும் மனதின் அலைக்கழிவும், தேடலும், திருப்தியில்லாத்தன்மையும் நோயை அதிகரிக்க வல்லன. இந்த மூளை நரம்புகள்தான் எவ்வளவு சக்தி வாய்ந்தன. சதா ஏதேனும் சிந்தனையில் ஆழ்ந்தும், தேடல்களில் மூழ்கியும் எக்களைப்பும் இன்றி அவற்றிற்குத்தான் இயங்கும் சக்தி எல்லையற்று இருக்கின்றன. உண்மையிலேயே சிறுகதை எழுத எண்ணும்போது எதை எழுத என்ற அங்கலாய்ப்பு ஏற்பட்டு விடுகிறது. ஏற்கனவே எல்லோரும் எல்லாவற்றையும் எழுதிவிட்டார்களே. எதை நாம் கருப்பொருளாகக் கொள்வது என்பதில் பெரும் போராட்டமே நிகழ்ந்து விடுகிறது. வெட்டுக்கிளிக்கு அருமையான தளம் கதையை நகர்த்திச் செல்வதில் இயல்பான ஓட்டம். இன்று காலையில் இருந்து மதியம் வரை அங்கு நின்று விட்டு இப்போது கதையை வாசித்து மறுபடியும் அங்கேயே குடிபோய்விட்டதைப்போன்று பிரமை ஏற்பட்டுவிட்டது. வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவசரப் பிரிவுக்கு போவதை விட  வீட்டிலேயே இருந்து வருவதை எதிர்கொள்ளலாம் என்றுதான் வைத்தியசாலைகளின் மந்தமான சேவைகள் எங்களை நினைக்கச் செய்கின்றன.

என்னதான் சொந்த வீடுகளில் துப்பரவாக்கி சுத்தமாக இருந்தாலும் பொது இடங்களில் தங்கள் அழுக்குகளையே பலர் சுத்தப்படுத்துவதில்லை.  துப்பரவாக்கும் பணியாளர்கள் அதைப் பார்த்துக்கொள்வார்கள் என்று தப்பிக்கும் மனப்பான்மைதான் காரணம். வேலைத் தளங்களில், விமான நிலையத்தில் உள்ள கழிப்பிடங்கள் எப்போதும் நாறிக்கிடப்பதும் இப்படியான சிந்தனையால்தான்.

பீற்றர் போல ஒருவர் இப்படியான இடங்களில் இருப்பதும் வைத்தியசாலைச் சிப்பந்திகளுக்கு வேலைகளைக் குறைக்கும்தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கன காலத்துக்குப் பிறகு....நிழலியின்... கதை!

நான் வேலை செய்யிற இடத்தில் ஒருத்தி..இருக்கிறாள்! அவளுக்கு...இந்த வெர்டிகோ..பிரச்சனை உள்ளதாம்! அவள் சொன்ன பிறகு தான்...இப்படி ஒரு வருத்தம் இருக்கிறது..எனக்குத் தெரியும்! ஒரு சின்ன வித்தியாசம்...அவளுக்கு நித்திரை கொள்ளும் நேரத்தில் மட்டும் தான் இது ..வந்து போகுமாம்! படுத்திருக்கும் கட்டில்....செங்குத்தாக...ஒரு சில நிமிடங்களுக்குச் சுற்றி விட்டு...நின்று விடுமாம்! பின்னர்...சில மணி நேரங்களுக்குத் தூக்கமே வராமல் ..கட்டிலில் எழும்பிக் குந்திக் கொண்டிருக்க வேண்டி வரும்..என்று சொன்னாள்! அவளது அனுபவத்துடன் ஒப்பிடும் போது...வெறும் நட்சத்திரங்களுடன்..நீங்கள் தப்பியது..அதிர்ஷ்டம் போலத் தான் உள்ளது!

கடும் இரத்த அழுத்தமான நிலையிலும்.....துயர் தோய்ந்த...ஆஸ்பத்திரியின் வெளி நோயாளர் பகுதியிலும்...அழகிய பெண் முகங்களைத் தேடும்..ஆணின் மனது அப்படியே....எந்த ஒளிவு மறைவுமில்லாது...அப்படியே விபரிக்கப் பட்டிருப்பது...கதையின் சிறப்பென்பேன்!

பீற்றர் போன்றவர்கள்..எம்மிடையே நிறையவே வாழ்கின்றார்கள்! நாங்கள் தான்...அவர்கள் போன்றவர்களைக் கணக்கில் எடுக்காதவாறு..எமது மூளைகளைப் பழக்கப் படுத்தி...வைத்திருக்கிறோம்!

சில...மணித்துளிகளுக்குள்...பீற்றரின்....நிலைக்கு நாம் வந்து விடக்கூடும் என்பதை..நாம் ஒரு போதும்...கணக்கில் எடுப்பதில்லை!

அண்மையில் எடுக்கப் பட்ட ஒரு கணக்கெடுப்பில்...அவுஸ்திரேலியாவில்...அறுபது வீதமானோருக்கு...மனநோய் பிரச்னை உள்ளது! இது தொடர்ந்தும் அதிகரித்தப் படியே செல்கின்றது!  மனித மனம் என்பது....ஒரு தளமான தரையில் உள்ள பந்தைப் போன்றது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்! ஒரு மெல்லிய அசைவு..கூட...அந்தப் பந்தை..நிலை தடுமாறச் செய்து விடுமாம்!

பீற்றர் கொஞ்சம்.....மன நோயின்...தாக்கங்களை..வெளிப்படுத்தும் நிலைக்கு வந்துள்ளார்! ஆனாலும்...ஒருகாலத்தில்..நல்ல தூய்மையான வாழ்வை ..வாழ்ந்தவராக இருக்கும் போல உள்ளது!

தொடர்ந்தும் ..எழுதுங்கள்...நிழலி!

Link to comment
Share on other sites

11 hours ago, சண்டமாருதன் said:

பலரின் சிந்தனை உங்கள் முதல் வாய்கியத்துடன் முற்றுப்பெறுகின்றது. அவர்களின் தேடல் என்பதும்  அத்தோடு நின்றுவிடுகின்றது. என்னும் சிலர் முற்றுப்புள்ளிக்குப் பதிலாக தொடர்ச்சிக்குறியைப் போட்டு பாவம் என்று இரக்க உணர்வையும் கொள்வார்கள்.. மானுடத்தின் அழகு என்பது இந்த உலகு எனக்கு மட்டுமானதில்லை என்ற பொதுப் புத்தியின் விழிப்பிலேயே உள்ளது.  அதை ஒரு சிறு கதையாக முனவைத்ததும் சிறப்புதான்.

சிந்தனை எதைத் தேடியதோ அது கிடைத்தது.. நீங்கள் குறையில் விட்டதொன்று அவரால் முடித்து வைக்கப்பட்டது ! 

---

நல்லதொரு ஆக்கம்.. கதை எழுதி பரிட்சயம் உள்ளவர் போல் எழுத்து நடை. தன்னிலையை முன்வைப்பதில் நேர்மை. தொடர்ந்து எழுதுங்கள். 

 

நான் உட்பட ஏனையவர்கள் பார்வைக்கு அழுக்கற்று இருந்தோம், ஆனால் பீற்றர் பார்வைக்கு அழுக்காக இருந்தார். எது அழுக்கு என்பது நாம் வளரும் சமூகம் சொல்லிக் கொடுத்த பொதுவான  சூத்திரத்தை வைத்து கொண்டு எடுக்கப்படும் அளவீடுகள். அந்த அளவீடுகள் எவ்வளவு முரணானவை என்பதை பீற்றர் உணர்த்திய தருணத்தில் இந்த கதையின் கரு கிடைத்தது.

இதற்கு முதல் 2 சிறுகதைகள் யாழிலும் ஒரு சிறு கதை சரிநிகரிலும் இன்னொன்று 22 வயதில் தினமுரசிலும் எழுதி இருக்கின்றேன். இறுதியாக 2014 மார்ச்  இற்கு பிறகு  எழுதிய கதை இது,

பின்னூட்டத்துக்கு நன்றி

Link to comment
Share on other sites

12 hours ago, வல்வை சகாறா said:

அவசர நோயாளர் பிரிவில் இன்று மதியம்தான் நின்று விட்டு திரும்பினேன். அட இங்கு வந்து அதன் தொடர்ச்சியா???????

நல்லதோர் ஆக்கம் வெட்டுக்கிளி. நோயைக்காட்டிலும் மனதின் அலைக்கழிவும், தேடலும், திருப்தியில்லாத்தன்மையும் நோயை அதிகரிக்க வல்லன. இந்த மூளை நரம்புகள்தான் எவ்வளவு சக்தி வாய்ந்தன. சதா ஏதேனும் சிந்தனையில் ஆழ்ந்தும், தேடல்களில் மூழ்கியும் எக்களைப்பும் இன்றி அவற்றிற்குத்தான் இயங்கும் சக்தி எல்லையற்று இருக்கின்றன. உண்மையிலேயே சிறுகதை எழுத எண்ணும்போது எதை எழுத என்ற அங்கலாய்ப்பு ஏற்பட்டு விடுகிறது. ஏற்கனவே எல்லோரும் எல்லாவற்றையும் எழுதிவிட்டார்களே. எதை நாம் கருப்பொருளாகக் கொள்வது என்பதில் பெரும் போராட்டமே நிகழ்ந்து விடுகிறது. வெட்டுக்கிளிக்கு அருமையான தளம் கதையை நகர்த்திச் செல்வதில் இயல்பான ஓட்டம். இன்று காலையில் இருந்து மதியம் வரை அங்கு நின்று விட்டு இப்போது கதையை வாசித்து மறுபடியும் அங்கேயே குடிபோய்விட்டதைப்போன்று பிரமை ஏற்பட்டுவிட்டது. வாழ்த்துக்கள்

காலமும் அதன் அனுபவங்களும் மாற மாற எழுதிய கதைகளை விட இன்னும் எழுதாத கதைகள் என்று கோடி கணக்கில் இருக்கும் என நினைக்கிறேன்.

கடந்து போகும், நிகழ்ந்து முடியும், நிகழ இருக்கும் எல்லா விடயங்களிலும் ஒன்றுக்கு மேற்பட்ட 'கதைகள் ' ஒளிந்து கிடக்கின்றன. அதை கதையாக சொல்ல ஆயிரம் கைகளும் கோடி எழுத்துக்களும் இன்னும் தேவைப்படுகின்றன

பின்னூட்டத்துக்கு நன்றி சகாறா

Link to comment
Share on other sites

7 hours ago, கிருபன் said:

அவசரப் பிரிவுக்கு போவதை விட  வீட்டிலேயே இருந்து வருவதை எதிர்கொள்ளலாம் என்றுதான் வைத்தியசாலைகளின் மந்தமான சேவைகள் எங்களை நினைக்கச் செய்கின்றன.

பீற்றர் போல ஒருவர் இப்படியான இடங்களில் இருப்பதும் வைத்தியசாலைச் சிப்பந்திகளுக்கு வேலைகளைக் குறைக்கும்தானே.

இங்கே இருப்பது மந்தமான சேவை என்று சொல்லிவிட முடியாது. Ambulance இல் ஒருவர் வரும் நிலை ஏற்பட்டால் உடனடியாக கவனிப்பார். விபத்தில் சிக்கியவர் என்றாலும், மாரடைப்பு, நெஞ்சு வலி போன்ற அதிகம் பயப்படும்படியான விஷயங்கள் என்றாலும் உடனடியாக கவனிப்பார். அப்படி இல்லாவிட்டால் first come first serve தான். கூடியவரைக்கும் தேவையான அனைத்து test களும் எடுத்து results வந்த பின்னர் தான் வீட்டுக்கு அனுப்புவர்.

Link to comment
Share on other sites

7 hours ago, புங்கையூரன் said:

கன காலத்துக்குப் பிறகு....நிழலியின்... கதை!

நான் வேலை செய்யிற இடத்தில் ஒருத்தி..இருக்கிறாள்! அவளுக்கு...இந்த வெர்டிகோ..பிரச்சனை உள்ளதாம்! அவள் சொன்ன பிறகு தான்...இப்படி ஒரு வருத்தம் இருக்கிறது..எனக்குத் தெரியும்! ஒரு சின்ன வித்தியாசம்...அவளுக்கு நித்திரை கொள்ளும் நேரத்தில் மட்டும் தான் இது ..வந்து போகுமாம்! படுத்திருக்கும் கட்டில்....செங்குத்தாக...ஒரு சில நிமிடங்களுக்குச் சுற்றி விட்டு...நின்று விடுமாம்! பின்னர்...சில மணி நேரங்களுக்குத் தூக்கமே வராமல் ..கட்டிலில் எழும்பிக் குந்திக் கொண்டிருக்க வேண்டி வரும்..என்று சொன்னாள்! அவளது அனுபவத்துடன் ஒப்பிடும் போது...வெறும் நட்சத்திரங்களுடன்..நீங்கள் தப்பியது..அதிர்ஷ்டம் போலத் தான் உள்ளது!

கடும் இரத்த அழுத்தமான நிலையிலும்.....துயர் தோய்ந்த...ஆஸ்பத்திரியின் வெளி நோயாளர் பகுதியிலும்...அழகிய பெண் முகங்களைத் தேடும்..ஆணின் மனது அப்படியே....எந்த ஒளிவு மறைவுமில்லாது...அப்படியே விபரிக்கப் பட்டிருப்பது...கதையின் சிறப்பென்பேன்!

பீற்றர் போன்றவர்கள்..எம்மிடையே நிறையவே வாழ்கின்றார்கள்! நாங்கள் தான்...அவர்கள் போன்றவர்களைக் கணக்கில் எடுக்காதவாறு..எமது மூளைகளைப் பழக்கப் படுத்தி...வைத்திருக்கிறோம்!

சில...மணித்துளிகளுக்குள்...பீற்றரின்....நிலைக்கு நாம் வந்து விடக்கூடும் என்பதை..நாம் ஒரு போதும்...கணக்கில் எடுப்பதில்லை!

அண்மையில் எடுக்கப் பட்ட ஒரு கணக்கெடுப்பில்...அவுஸ்திரேலியாவில்...அறுபது வீதமானோருக்கு...மனநோய் பிரச்னை உள்ளது! இது தொடர்ந்தும் அதிகரித்தப் படியே செல்கின்றது!  மனித மனம் என்பது....ஒரு தளமான தரையில் உள்ள பந்தைப் போன்றது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்! ஒரு மெல்லிய அசைவு..கூட...அந்தப் பந்தை..நிலை தடுமாறச் செய்து விடுமாம்!

பீற்றர் கொஞ்சம்.....மன நோயின்...தாக்கங்களை..வெளிப்படுத்தும் நிலைக்கு வந்துள்ளார்! ஆனாலும்...ஒருகாலத்தில்..நல்ல தூய்மையான வாழ்வை ..வாழ்ந்தவராக இருக்கும் போல உள்ளது!

தொடர்ந்தும் ..எழுதுங்கள்...நிழலி!

இங்கு வீடற்றவர்கள் மேல் அநேகமானோர் கொண்டுள்ள பொது புத்தி 'உழைக்க விரும்பாத போதை பொருள் பாவனையால் தெருவுக்கு வந்த பேர்வழிகள்' என்பதாகதான் இருக்கு.

அண்டைக்கு ஒரு நாள் மகனை வைத்து கொண்டு காரில் போகும் போது ஒரு வீடற்றவர் பணம் இரந்து கொண்டு இருந்தார். அவரை சுற்றி இன்னும் சில வீடற்றவர்கள். நான் மகனுக்கு கூறியது

"...இங்கு இருப்பவர்கள் ஒரு காலத்தில் தாம் இப்படி ஆவோம் என்று கற்பனை கூட செய்து இருக்க மாட்டார்கள் ... வாழ்க்கை ஒரு நொடியில் எல்லாவற்றையும் மாற்றி விடும்... . ' இவர்களுக்கு நீ வளர்ந்த பிறகு  உதவாமல் விட்டால் கூட பரவாயில்லை ஆனால் மதிக்காமல் விட்டு விடாதே' என்று

வீடற்றவர்களாக ஆவதற்கும் மனம் குழம்பி போவதற்குமான அனைத்து  குழிகளையும் அருகருகே வைத்து  கொண்டு தான் எம் வாழ்வு போகின்றது. தடுக்கி விழவும் தள்ளி விடப்படவும் சந்தர்ப்பங்கள் ஏராளம்

---

வெர்ட்டிக்கோ

இது நிகழ்ந்தது இரு வாரங்களுக்கு முன். Emergency இற்கு போய் வந்த பின் மீண்டும் இந்த நிமிடம் வரைக்கும் வரவில்லை. ஒரு மருந்தும் தேவையில்லை.  இது எவருக்கும் நிரந்தரமாக உறையும் பிரச்சனை அல்ல. ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் தானாக சரியாக வேண்டும். இல்லையெனில் வேறு பிரச்சனை ஒன்றின் ஆரம்ப அறிகுறியாக இருக்கும்

https://www.nhsinform.scot/illnesses-and-conditions/ears-nose-and-throat/vertigo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேர்ட்டிகோ இருப்பது இனிமேல் நிழலியானந்தவுக்கு ரொம்பவும் கை கொடுக்கும்.பொது இடங்களிலோ அல்லது பேரூந்து தொடரூந்திலோ போகும் போது பக்கத்திலுள்ள பெண்ணின் மீது சாய்ந்து ஏதாவது பிரச்சனை வந்தால் வேர்ட்டிகோ சொல்லியே தப்பித்துக் கொள்ளலாம்.

18 hours ago, நிழலி said:

ஒரு சோடி தம்மை மறந்து முத்தமிட்டுக் கொண்டு இருந்தனர். அதில் இருந்த பெண்மணி இடைக்கிடை தான் முத்தம் கொடுப்பதை மற்றவர்கள் பார்க்கின்றனரா என்று நோட்டம் வேறு விட்டுக் கொண்டு இருந்தார்.

முத்தமிடுவதை விட முத்தமிடுவதை பார்த்துக் கொண்டிருப்து கூடுதல் இன்பம் என்கிறார்கள்.

தொடர்ந்தும் வாசிக்க கூடியதான உங்கள் எழுத்துநடை மிகவும் பாராட்டத் தக்கது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு  கரு

கன  காலத்துக்கு  பின்னர் நிழலியின் கதை

தூண்டிய நண்பருக்கு நன்றிகள்

என:னையும் இக்கதை  தூண்டியிருக்கிறது

ஒரு கரு இருக்கிறது

விரைவில் பதிகின்றேன்

 

உங்கள்  உடல்நிலை  சார்ந்து..

கவனமாக  இருங்கள்

நித்திரை  முக்கியம்

நித்திரையால் எழும்பும் போது சிறு அவகாசம் எடுத்துக்கொள்ளுங்கள்

இதற்கு மருந்து உங்கள்  அமைதியில் தான்  இருக்கிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பைத்தியம் பிடித்தவர்களுக்குத்தான் சுத்தம் பிடிக்கிறது. நிழலி உங்கள் சின்னக்கதை அருமை. அழகான எழுத்து நடை.

சின்னக்கதையில் இரண்டு தடவை பத்துமணி வருகிறது. ஒன்று நடு இரவில், இதில் ‘நடு’ வை தவிரத்திருக்கலாம். மற்றது பகல் பத்துமணி. பகலை,  காலை ஆக்கியருக்கலாம். தவறு என்றல்ல அது வெர்ட்டிகோவால் (Vertigo) வந்த பிரச்சனை.??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலிக்கே உரிய எழுத்து நடை. சூழலை அவதானித்து மிக யதார்த்தமாக நிகழ்வுகளைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார். இந்த வேட்டிக்கோ என்னையும் ஒரு முறை பதம் பார்த்தது. காலடியில் உலகமே தட்டாமாலை சுற்றுவதுபோல் சுழன்றது. இந்த நேரத்தில் வாகனம் ஓட்டுவது மிகவும் ஆபத்தானது. இதற்குரிய மாத்திரைகளை சிறிது நாளைக்கு ஒழுங்காக எடுத்ததால் சுகமடைந்தேன். 
பீட்டர் போல் சிலர் மனநிலை பாதிக்கப்பட்டாலும் சமூகத்திற்கு உதவியாக இருக்கிறார்கள். நல்லதொரு கதை. கதை எழுத வைத்த அவசர சேவைப் பிரிவுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

22 hours ago, ஈழப்பிரியன் said:

வேர்ட்டிகோ இருப்பது இனிமேல் நிழலியானந்தவுக்கு ரொம்பவும் கை கொடுக்கும்.பொது இடங்களிலோ அல்லது பேரூந்து தொடரூந்திலோ போகும் போது பக்கத்திலுள்ள பெண்ணின் மீது சாய்ந்து ஏதாவது பிரச்சனை வந்தால் வேர்ட்டிகோ சொல்லியே தப்பித்துக் கொள்ளலாம்.

 

 

 

குருவே...! பிரமாதமான யோசனை ஒன்றை கூறியுள்ளீர்கள். அப்படியே ஆகட்டும்.

Quote

முத்தமிடுவதை விட முத்தமிடுவதை பார்த்துக் கொண்டிருப்து கூடுதல் இன்பம் என்கிறார்கள்.

இரண்டுமே கூடுதல் இன்பம்!

Link to comment
Share on other sites

22 hours ago, விசுகு said:

உங்கள்  உடல்நிலை  சார்ந்து..

கவனமாக  இருங்கள்

நித்திரை  முக்கியம்

நித்திரையால் எழும்பும் போது சிறு அவகாசம் எடுத்துக்கொள்ளுங்கள்

இதற்கு மருந்து உங்கள்  அமைதியில் தான்  இருக்கிறது

நான் ஒரு நாளைக்கு 8 மணித்தியாலம் சொலிட்டாக நித்திரை கொள்ற ஆளாக்கும். வேர்ட்டிகோ வருவதற்கு என்று ஒரு பிரத்தியோக காரணம் எதுவுமில்லை.

 

22 hours ago, Kavi arunasalam said:

பைத்தியம் பிடித்தவர்களுக்குத்தான் சுத்தம் பிடிக்கிறது. நிழலி உங்கள் சின்னக்கதை அருமை. அழகான எழுத்து நடை.

சின்னக்கதையில் இரண்டு தடவை பத்துமணி வருகிறது. ஒன்று நடு இரவில், இதில் ‘நடு’ வை தவிரத்திருக்கலாம். மற்றது பகல் பத்துமணி. பகலை,  காலை ஆக்கியருக்கலாம். தவறு என்றல்ல அது வெர்ட்டிகோவால் (Vertigo) வந்த பிரச்சனை.??

பீற்றரை பைத்தியம் என்று என்று குறிப்பிட மனம் தயங்குகின்றது. அவரது செயல்கள் எம் வழக்கமான  செயல்களிலிருந்து மாறாக இருக்கின்றது. எவருக்கும் கரைச்சல் தராத ஒரு சீவன் போல இருக்கின்றார்.

Link to comment
Share on other sites

17 hours ago, Kavallur Kanmani said:

நிழலிக்கே உரிய எழுத்து நடை. சூழலை அவதானித்து மிக யதார்த்தமாக நிகழ்வுகளைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார். இந்த வேட்டிக்கோ என்னையும் ஒரு முறை பதம் பார்த்தது. காலடியில் உலகமே தட்டாமாலை சுற்றுவதுபோல் சுழன்றது. இந்த நேரத்தில் வாகனம் ஓட்டுவது மிகவும் ஆபத்தானது. இதற்குரிய மாத்திரைகளை சிறிது நாளைக்கு ஒழுங்காக எடுத்ததால் சுகமடைந்தேன். 
பீட்டர் போல் சிலர் மனநிலை பாதிக்கப்பட்டாலும் சமூகத்திற்கு உதவியாக இருக்கிறார்கள். நல்லதொரு கதை. கதை எழுத வைத்த அவசர சேவைப் பிரிவுக்கு நன்றி.

 

என்னுடன் வேலை செய்கின்றவர்களும் என் அனுபவத்தை அறிந்த பின் தமக்கும் ஒரு சில தடவையாவது இப்படி வேர்ட்டிகோ வந்து போயிருக்கு என்று சொல்கின்றார்கள். எனக்கு இப்படி ஒன்று இருப்பதை பற்றி இதற்கு முதல் அறிந்து இருக்கவில்லை. ஆனால் பலருக்கு இது பற்றி தெரிந்து இருக்கு,

பின்னூட்டத்துக்கு நன்றி அக்கா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, நிழலி said:

 

என்னுடன் வேலை செய்கின்றவர்களும் என் அனுபவத்தை அறிந்த பின் தமக்கும் ஒரு சில தடவையாவது இப்படி வேர்ட்டிகோ வந்து போயிருக்கு என்று சொல்கின்றார்கள். எனக்கு இப்படி ஒன்று இருப்பதை பற்றி இதற்கு முதல் அறிந்து இருக்கவில்லை. ஆனால் பலருக்கு இது பற்றி தெரிந்து இருக்கு,

பின்னூட்டத்துக்கு நன்றி அக்கா.

ஊரில சில பேர் பித்தம் கூடிவிட்டதென்று கையோட்டி சத்தியெடுப்பார்கள்.

ஒருவேளை வெர்டிக்கோவா இருக்குமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதோர் ஆக்கம் நிழலி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பீற்றர் துடைத்துவிட்டுபோனது வராந்தாவை மட்டுமல்ல,நான்+நீங்கள்= நாம் என்று  எம்மைபற்றி நாமே உயர்வாய் நினைத்து எடுக்கும் வாந்திகளையும் சேர்த்து, சமூகத்தின்மேல் விழுந்த சாட்டையடி பதிவு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகட்டும் பந்தாவுமாக முழு அழுக்கையும் சுமந்து வாழும்  மனிதர்களிடையே
பீட்டர் போன்றவர்கள் ஒளிந்திருந்தாலும் அவர்களின் அப்பழுக்கற்ற
செயல்களும் மனிதமும் ஒளிர்ந்துகொண்டேயிருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களது அனுபவம் எங்களுக்கும் அனுபவம் மட்டுமன்றி பாடத்தையும் சொல்லியிருக்கு. நாலு பாட்டில்களில் இரத்தம் எடுப்பது ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியே அனுப்புவதற்கு. இல்லையென்றால் ஒவ்வொரு பாடத்துக்கும் ஒவ்வொரு வகுப்பறைக்கு செல்வதுபோல் நீங்களும் அந்தந்த செக்சனுக்கு சென்று இந்தா "பிடிச்சுக்கோ எடுத்துக்கோ "என்று தானம் பண்ண வேண்டி இருக்கும்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

On ‎2‎/‎17‎/‎2018 at 5:18 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நல்லதோர் ஆக்கம் நிழலி.

நன்றி சுமே

 

On ‎2‎/‎18‎/‎2018 at 12:16 PM, valavan said:

பீற்றர் துடைத்துவிட்டுபோனது வராந்தாவை மட்டுமல்ல,நான்+நீங்கள்= நாம் என்று  எம்மைபற்றி நாமே உயர்வாய் நினைத்து எடுக்கும் வாந்திகளையும் சேர்த்து, சமூகத்தின்மேல் விழுந்த சாட்டையடி பதிவு!

வாழ்க்கையில் இப்படி எத்தனையோ சாட்டையடிகளை வாங்கினாலும் அது தான் பழக்கப்பட்ட பாதையில் தான் திரும்பவும் போகின்றது.

பின்னூட்டத்துக்கு நன்றி வளவன் 

On ‎2‎/‎19‎/‎2018 at 6:36 AM, வாத்தியார் said:

பகட்டும் பந்தாவுமாக முழு அழுக்கையும் சுமந்து வாழும்  மனிதர்களிடையே
பீட்டர் போன்றவர்கள் ஒளிந்திருந்தாலும் அவர்களின் அப்பழுக்கற்ற
செயல்களும் மனிதமும் ஒளிர்ந்துகொண்டேயிருக்கும்

ஓம் வாத்தியார், இப்படியான முரண்பாடுகளை பல தடவை அவதானித்துள்ளேன்.

பின்னூட்டத்துக்கு நன்றி வாத்தியார்

On ‎2‎/‎19‎/‎2018 at 10:22 AM, suvy said:

உங்களது அனுபவம் எங்களுக்கும் அனுபவம் மட்டுமன்றி பாடத்தையும் சொல்லியிருக்கு. நாலு பாட்டில்களில் இரத்தம் எடுப்பது ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியே அனுப்புவதற்கு. இல்லையென்றால் ஒவ்வொரு பாடத்துக்கும் ஒவ்வொரு வகுப்பறைக்கு செல்வதுபோல் நீங்களும் அந்தந்த செக்சனுக்கு சென்று இந்தா "பிடிச்சுக்கோ எடுத்துக்கோ "என்று தானம் பண்ண வேண்டி இருக்கும்.....!  tw_blush:

பதிவை போட்டு முதல் இரண்டு மூன்று  நாட்கள்  எங்க ஆளை காணவில்லை என்று தேடினேன்.

பின்னூட்டத்துக்கு நன்றி சுவி அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் நல்லதோர் அனுபவத்தினை எங்களுடன் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிகள் நிழலி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.