Jump to content

காதலர்தினப் பதிவு


Recommended Posts

மீன்கொத்திப் பறவை மீன் கொத்தும் லாவகம் அவள் தேனீர் தயாரிப்பதில் இருக்கும். சிப்பந்தி வேலையென அவள் தன் வேலையினைக் கருதியதாய்த் தோன்றவில்லை. வீடு தேடி வந்தவரை உபசரிக்கும் பாங்கில் அந்தத் தேனீர்ச்சாலையில் அவள் நடந்துகொண்டாள். 


நான்காம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த காலத்தில் ஒரு நாள் எங்கள் காணிகளை நானே சென்று பார்த்துக்கொள்ளவேண்டும் என்ற ஒரு நாட்டாமைக் குணம் எனக்குள் விளித்துக் கொள்ள வீட்டில் சொன்னேன். கொடுப்பிற்குள் பெருமை சிரிப்பாக அம்மா ஒரு தொழிலாளியுடன் என்னை அனுப்பி வைத்தாள். தென்னங்காணிக்குள் ஒளிந்திருந்த ஒரு துரவோரம் நின்ற காட்டுமரம் என்னைக் கட்டிப்போட்டது. அது என்ன மரமென்று தொழிலாளியிடம் கேட்க அவர் 'ஓம் தம்பி அது வெட்டோணும், நெடுக நினைக்கிறது நேரம் கிடைக்கிறதில்லை' என்றார். பதறிப்போனேன். ஏனக்கிருந்த அதிகாரம் கொண்டு அந்த மரம் வெட்டலைத் தடுத்து விட்டு, வீடு சென்றோம். சாண்டில்யனின் ரசிகையான என் அம்மாவிற்கு அந்த மரம் பற்றி பித்துநிலை எட்டும்வரை வர்ணித்து, அம்மரம் எப்போதும் வெட்டப்படாதென்று உறுதி பெற்றுக்கொண்டேன். நாட்டாமைக் குணத்திருந்து மனிதத்தின் நுளைவாசலாய் அந்தக் காட்டுமரம் எனக்கமைந்தது.

தேனீர்சாலை சிப்பந்தி. அவளிலும் ஒரு காட்டுமரத்தின் தன்மை இருந்தது. மூங்கில் தோல், முள்முருக்குப் பட்டை நிறக் கண்கள். முசுட்டை இலைபோன்று இயற்கையாய்த் தோலில் சிறு கேசம். கிளிசறியாப் பூப்போல, பிரன்ச்சுக்காரர் அறிந்ததிராத நறுமணம். பனங்குருத்துப் போல் பற்கள். மழைபின் மலரென முகமெங்கும் குளிர்ச்சி. காட்டுமரம் தான். ஆனால் இயற்கை அதுதான்.


அலுவலக அரசியல், நிறுவன ஏணியேற்றம், பக்கத்துவீட்டுக்காரன் பற்றிய பொறாமைகள், குடும்பச்சுமைகள் என இறுகிப்போன மனிதர்கள், றோபோட்டுக்களாக, மனதின் பிடியில், விளிப்பில் தூங்கியபடி அவளிடம் தேனீர் பெற்றுச் சென்றார்கள். வாடிக்கைளாளர் வந்ததும், அவர்கள் தமக்கு என்னவேண்டும் என்று சொல்லுமுன்னரே அவள் அவர்க்கான ஓடரை செய்யத் தொடங்குவாள். அவர்களைத் தான் தெரிந்து வைத்திருப்பது அவர்களிற்கு மகிழ்வு தருகின்றதாக என நாய்க்குட்டிபோன்று அவர்களை அவள் நோக்குவாள். சிலர் கண்டுகொண்டனர். பலர் இறுக்கமாய்க் கடந்து சென்றனர். அவள் துள்ளல் சற்றும் குறையவில்லை.

ஒரு திங்கட்கிழமை காலை. அலுவலகம் வரப்பிடிக்கா அடிமைக்கூட்டம் விளிப்பில் தூங்கியபடி கோப்பி தூக்கம் முறிக்கும் என்ற நப்பாசையில் கோப்பி வாங்கக் காத்து நின்றனர். அந்த இடமே உழைச்சல் அதிர்வில் கரும்பாறையில் காக்கை எச்சம் போன்று முகஞ்சுழித்துக் கிடந்தது. அப்போது அது நடந்தது. ஒரு சிப்பந்தி இரு கண்ணாடிக்குவழைகள் நிறைந்த கோப்பியினை எப்படியோ நிலத்தில் கொட்டிவி;ட்டாள். கண்ணாடி உடையும் சத்தமும் தடுப்புடைத்த சிற்றருவி போன்று பரவிய கோப்பியும், கலவரத்துடன் பயந்து கிடந்த சிந்பத்தியும், சினந்து கொண்ட இறுகிய மனிதர்களுமான அந்தச் சூழ்நிலையில் காட்டுப்பூ கலகம் அடக்கியது. திடீரென அச்சூழல் சந்தணத் தென்றலில் சீமைக்கிழுவைப் பூ கலந்ததுபோல் கிறங்கச் செய்தது. அவள் இமயமலையில் யோகத்தில் இருக்க அவள் உடல் மட்டும் இங்கே பணியாற்றியது போன்ற லாவகம். சினந்தவர்களால் சினத்தைத் தொடரமுடியவில்லை. கலவரப்பட்ட சிப்பந்திகூட ஏதுமே நடக்காதது போல் ஓடர் எடுத்தாள். காட்டுப்பூவிற்குள் காட்டருவி ஒத்த பலத்தில் அமைதி இருக்கிறது. அவ்வமைதி முன்னால் கலவரங்கள் கரைந்துபோகின்றன.


காட்டுமரங்கள் காட்டிற்கே. அவற்றை வேரோடு பிடுங்கி வீட்டிற்குள் தொட்டிக்குள் சிறைப்படுத்த முடியாது. காட்டுப்பூவின் கிளர்ச்சிபெற காட்டிற்குள் கரையவேண்டும். கரைகிறேன்...
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோப்பிக் கடையில் பணிபுரிபவள்  வழமையாகக் காட்டும் புன்முறுவல்கூட  இன்றைய காதலர் தினத்தில் எனக்கு மட்டுமேயென்று எண்ணத்தூண்டியது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/02/2018 at 6:48 AM, கிருபன் said:

கோப்பிக் கடையில் பணிபுரிபவள்  வழமையாகக் காட்டும் புன்முறுவல்கூட  இன்றைய காதலர் தினத்தில் எனக்கு மட்டுமேயென்று எண்ணத்தூண்டியது?

தூண்டும் தூண்டும்tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிஜமாக என்னவோ எழுத வேண்டும் என்று தோன்றுகின்றது, எப்படி எழுதுவதென்று தெரியவில்லை ஒருவேளை காட்டுப்பூவின் வாசம் எனக்குள்ளும் பரவிவிட்டதால் தானோ.....!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.