Jump to content

தமிழர் பகுதிகளில் எவரும் ஆட்சியமைக்க முடியாத நிலையை ஏற்படுத்திய தேர்தல் முறை


Recommended Posts

தமிழர் பகுதிகளில் எவரும் ஆட்சியமைக்க முடியாத நிலையை ஏற்படுத்திய தேர்தல் முறை

இலங்கைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இலங்கையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட்ட முறைமையானது குறிப்பாக தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஆட்சியமைப்பதில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக பல தரப்பினரும் கூறுகிறார்கள்.

குறிப்பாக வடக்கு கிழக்கில் பெரும்பாலான சபைகளில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை இல்லாத ஒரு தொங்கு நிலையை, இந்த தேர்தல் முடிவுகளை கணிக்கும் முறை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் தலைவர்களும், தேர்தல் ஆணைய உறுப்பினர்களும் குறைபட்டிருக்கிறார்கள்.

இலங்கையின் தென்பகுதியில் மஹிந்த ராஜபக்‌ஷவின் கட்சி பல இடங்களில் தெளிவான பெரும்பான்மையை பெற்றிருப்பதால் அங்கு இது பெரும் சிரமங்களை ஏற்படுத்தவில்லை. ஆனால், வடக்கு கிழக்கில் இது ஆட்சியமைப்பதில் பெருத்த குழப்பத்தையே ஏற்படுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரான பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் பிபிசிக்கு தெரிவித்தார்.

முன்னேற்றகரமான கலப்புத் தேர்தல் முறைமை

அதாவது நேரடி தொகுதிவாரி தேர்தல் மற்றும் விகிதாசார தேர்தல் ஆகியவற்றின் ஒரு கலப்பு முறையாக இந்த தேர்தல் அறிமுகம் செய்யப்பட்டது. நேரடி தொகுதி வாரியிலான முறைமையில் உள்ள சிறுபான்மை வாக்குகள் கணக்கில் இல்லாமல் போதல், விகிதாசார தேர்தலில் பெரும் தொகுதிகளில் அதிக பணவிரயத்தை வேட்பாளருக்கு ஏற்படுத்துதல் மற்றும் நேரடியான பிரதிநிதித்துவம் கிடைக்காமல் போதல் ஆகிய பிரச்சனைகளை கையாள இந்த கலப்பு முறை அறிமுகம் செய்துவிக்கப்பட்டது.

ஆனால், மிகச் சிறிய கட்சிகள் மற்றும் குழுக்களுக்கு கூட இந்த தேர்தல் முறை பிரதிநிதித்துவத்தை வழங்கியுள்ள போதிலும், மறுபுறம் எவருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத ஒருநிலையை வடக்கு கிழக்கில் ஏற்படுத்திவிட்டது என்கிறார் ரட்ணஜீவன் கூல்.

''தொங்கு அவை'' மற்றும் ''பொருந்தா கூட்டணி''

தேர்தல் ஆணையத்தை கூட கருத்துக் கேட்காமல் அவசர அவசரமாக நாடாளுமன்றம் கொண்டு வந்த இந்த தேர்தல் முறையால் எவரும் ஆட்சியமைக்க முடியாத ஒரு ''தொங்கு அவை'' நிலைமை நடைமுறை சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறுகிறார். இதனால் அரசியல் கட்சிகள் தமது கொள்கைக்கு பொருந்தாத ஏனையவர்களுடன் கூட்டு வைக்கும் நிலைக்கு நிர்ப்பந்திக்கப்படுவதாகவும் அவர் குறைகூறினார்.

இலங்கை

தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அதிருப்தி

இந்த தேர்தலின் வாக்குகளை கணிக்கும் முறை தமக்கு பெரும் குழப்பத்தை தந்திருப்பதாக கூறுகிறார், தமிழ் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த மூத்த உறுப்பினரான கி. துரைராசசிங்கம்.

இந்த கலப்பு தேர்தல் முறைமை இப்படியான சிக்கலை ஏற்படுத்தும் என்பதை தாம் எதிர்பார்த்திருக்கவில்லை என்று கூறுகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள முன்னணி கட்சியான தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான கி. துரைராசசிங்கம், மட்டக்களப்பு மாநகர சபை உட்பட பெரும்பாலான சபைகளில் ஏற்பட்டுள்ள ''தொங்கு நிலைமை'' தமக்கு சங்கடத்தை தருவதாக கூறுகின்றார்.

கிழக்கில் பெரும் சிக்கல்

எப்படியிருந்த போதிலும், தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து செல்ல தாம் தயாராக இருப்பதாக அவர் கூறுகிறார். ஆகவே வடக்கில் தேர்தலில் தமிழ்தேசியக் கூட்டமைப்புக்கு கடுமையான போட்டியாக திகழ்ந்த தமிழ் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவற்றுடன் தாம் ஒரு ஏற்பாட்டை செய்துகொள்ள முடியும் என்று எதிர்பார்ப்பதாக கூறும் அவர், ஆனால், கிழக்கில் தாம் பெரும் சிக்கலை எதிர்கொள்வதாக கூறுகிறார்.

கிழக்கில் கடந்த மாகாணசபையை போல முஸ்லிம் கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியமைப்பது மற்றும் தேசிய மட்டத்திலான கட்சிகளோடு சேர்ந்து ஆட்சியமைப்பது குறித்து தாம் ஆராய்ந்த போதிலும், இந்த விசயங்கள் தொடர்பாக பலவிதமான அபிப்பிராயங்கள் இருப்பதால் தாம் இன்னமும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

இருந்தபோதிலும், பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியுடன் கூட்டுச் சேர்வதில் தமது உறுப்பினர்கள் ஆர்வம் காட்டவில்லை என்றும் துரைராசசிங்கம் குறிப்பிட்டார்.

இலங்கைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

டக்ளஸ் தேவானந்தா

வடமாகாணத்தில் இரு சபைகளில் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மையை பெற்றிருக்கிறது முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி. ஏனைய சபைகளில் ஏற்பட்டுள்ள் தொங்கு நிலையை தீர்க்க தான் வெளியே இருந்து மாத்திரமே ஆதரவு கொடுப்பேன் என்கிறார் கட்சியின் பொதுச்செயலாளரான டக்ளஸ் தேவாநந்தா.

மக்களின் நலனில் அக்கறை கொண்டு செயற்படுபவர்களுக்கு ஆதரவும், ஏனையோருக்கும் எதிர்ப்பும் இருக்கும் என்று கூறுகின்ற அவர், தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ஆட்சியில் இணையமாட்டோம் என்கிறார்.

இந்த புதிய தேர்தல் முறை மிகச்சிறிய கட்சிகளுக்கு கூட பிரதிநிதித்துவம் கிடைக்கச் செய்யும் ஒரு சிறப்பான முறையாக பொதுவாகப் பார்க்கப்படுகின்ற போதிலும் அரசியல் கட்சி தலைவர்கள் அதனை சங்கடத்தை ஏற்படுத்தும் ஒன்றாகவே பார்க்கிறார்கள். தேர்தல் ஆணைய உறுப்பினர்களுக்கும் அதே கருத்தே இருக்கிறது. ஆகவே அடுத்து வரவிருக்கும் மாகாண சபை தேர்தலுக்கும் இந்த முறைமையே கையாளப்பட்டால் நிலைமை என்னவாகுமோ என்பது அவர்களுக்கு முன்பாக உள்ள புதிய பிரச்சினையாக இருக்கிறது.

http://www.bbc.com/tamil/sri-lanka-43045147

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
    • இப்படியான செய்திகளை நாம்தமிழர் செய்கிறார்கள் மற்றக் கட்சிகள் செய்வதில்லை என்று நினைப்பது போல் தெரிகிறது.இந்தியா இப்படியே ஒரேநாடாக நீண்டகாலத்துக்கு இருக்கும் என்றுநினைக்காதீர்கள்.இந்தியா பல தேசங்கள் இணைந்த ஒரு கூட்டு ஒருநாள் இந்தியா சோவியத் யூனியன் உடைந்தது போல் உடையும் இப்பொழுத இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் மகன் இந்தியாவிலேயே இருக்கின்றன.அப்படி உடையும் நிலையில் தமிழருக்கு உலகில் 2 நாடுகள் இருக்கும்.   சொல்வது ஒன்று செய்வது ஒன்று சீமான் கட்சியை விட மற்றைய கட்சிகளில் தாராளமாக உண்டு.பெண்களுக்கு சம் பிரதிநிதித்துவம் ,அனைத்துச் சாதியினருக்கும் வேட்பாளர் தெரிவில் பிரதிநித்துவம் போன்ற நல்ல விடயங்களை கணக்கில் எடுங்கள் குணம் நாடிக் குறமும்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்    
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.