Jump to content

அரசியல் நெருக்கடி ; மைத்திரி, ரணிலை சந்தித்தனர் இந்திய உயர்ஸ்தானிகர், அமெரிக்க தூதர்


Recommended Posts

அரசியல் நெருக்கடி ; மைத்திரி, ரணிலை சந்தித்தனர் இந்திய உயர்ஸ்தானிகர், அமெரிக்க தூதர் 

 

 

 

(எம்.எம்.மின்ஹாஜ் )

 

நல்லாட்சி அரசாங்கத்துக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையையடுத்து இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்  தரன்ஜித் சிங் சந்து  மற்றும்   அமெரிக்க தூதுவர் அத்துல் கேஷாப் ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும்  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் அவசரமாக சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர். 

Taranjit-Singh-Sandhu-ranil-wickramasing

ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவை  ஜனாதிபதி செயலகத்திலும்    பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை  அலரி மாளி்கையிலும்  இரண்டு தூதுவர்களும்  சந்தித்து   பேச்சு நடத்தியுள்ளனர். 

 

இன்றுகாலை    இந்திய  உயர்ஸ்தானிகர்   தரன்ஜித் சிங் சந்து    பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சு நடத்தினார்.  அத்துடன் மாலை   இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அத்துல் கேஷாப்  அலரி மாளிகையில்   பிரதமரை சந்தித்து பேச்சு நடத்தினார்.      அதேபோன்று இரண்டு நாடுகளினதும்  தூதுவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை  தனிப்பட்ட ரீதியில்   ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து பேச்சு நடத்தினர்.  

 

உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவின் பின் பிரதமர் பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கைகளால் அரசாங்கத்துக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடியை  தீர்க்கும் நோக்கிலேயே   அமெரிக்க மற்றும்  இந்திய தூதுவர்கள்   பிரதமரையும் ஜனாதிபதியையும்   சந்தித்து பேச்சு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களின் சந்திப்புகள்   நீண்ட நேரம் நடைபெற்றமை குறிப்பிடதக்கது.

http://www.virakesari.lk/article/30585

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப ஒண்ணும் குடி முழுகல்ல.....

சைனாகாரன் பூந்து வெளாடிட்டான்.

வெள்ளி பார்த்துக் கொண்டிருந்திட்டு இப்ப ஓடியாடி திரிந்தென்ன செய்யிறது?

Link to comment
Share on other sites

20 minutes ago, Nathamuni said:

இப்ப ஒண்ணும் குடி முழுகல்ல.....

சைனாகாரன் பூந்து வெளாடிட்டான்.

வெள்ளி பார்த்துக் கொண்டிருந்திட்டு இப்ப ஓடியாடி திரிந்தென்ன செய்யிறது?

நாதமுனி, சைனா காரன் நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில்  எப்படி புகுந்து விளையாடினான் என்று சொல்ல முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, நிழலி said:

நாதமுனி, சைனா காரன் நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில்  எப்படி புகுந்து விளையாடினான் என்று சொல்ல முடியுமா?

சைனாகாரன் வேலை தெரியாதா, என்ன?

பணமையா, பணம்...

பிணத்தையும் வாய் திறக்க வைக்கும் பணம்....

 

Link to comment
Share on other sites

12 minutes ago, Nathamuni said:

சைனாகாரன் வேலை தெரியாதா, என்ன?

பணமையா, பணம்...

பிணத்தையும் வாய் திறக்க வைக்கும் பணம்....

 

பணம் கொடுத்து மக்கள் மகிந்தவுக்கு வாக்களித்ததாக எதிர்கட்சிகள் உட்பட யாரும் முறையிடவில்லை நாதம். அப்படி செய்ததற்கான ஆதாரமும் இல்லை. மகிந்தவின் பிரச்சாரம் கூட பெரிய எடுப்பில் பெரும் பணம் செலவளித்து இடம்பெறவில்லை.

மகிந்த சீனாவின் உற்ற நண்பன் என்றாலும் இந்த வெற்றியில் சீனாவின் பங்களிப்பு எதுவும் இல்லை. சிங்கள மக்கள் இன்னமும் மகாவம்ச தாக்கத்தில் இருப்பவர்கள். எக் காரணமும் கொண்டும் தமிழ் மக்களுக்கு ஒரு குறைந்த பட்ச தீர்வைத்தானும் கொடுக்க கூடாது என்ற சிந்தனையில் இருக்கும் பேரினவாதிகள் அவர்கள்.  இதை விட்டு விட்டு சீனாவினால் தான்  மகிந்த வெற்றி பெற்றார் என்பது சிங்கள மக்களின் இனவாத சிந்தனையை முற்றாக புறக்கணிப்பதாக ஆகிவிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, நிழலி said:

 

1 hour ago, Nathamuni said:

சைனாகாரன் வேலை தெரியாதா, என்ன?

பணமையா, பணம்...

பிணத்தையும் வாய் திறக்க வைக்கும் பணம்....

 

பணம் கொடுத்து மக்கள் மகிந்தவுக்கு வாக்களித்ததாக எதிர்கட்சிகள் உட்பட யாரும் முறையிடவில்லை நாதம். அப்படி செய்ததற்கான ஆதாரமும் இல்லை. மகிந்தவின் பிரச்சாரம் கூட பெரிய எடுப்பில் பெரும் பணம் செலவளித்து இடம்பெறவில்லை.

 

கூட்டமைப்பைத் தவிர வேறு யாரும் பணம் கொடுத்ததாக இல்லை.

Link to comment
Share on other sites

1 hour ago, ஈழப்பிரியன் said:

கூட்டமைப்பைத் தவிர வேறு யாரும் பணம் கொடுத்ததாக இல்லை.

கூட்டமைப்பு பணம் கொடுத்ததாக தனி ஒருவனை தவிர வேறு யாரும் சொல்லவில்லை - அவர்களை எதிர்க்கும் கட்சியினர் கூட இக் குற்றச்சாட்டை முன் வைக்கவில்லை

Link to comment
Share on other sites

கூட்டமைப்புகாரர் சொல்கிறார்கள் இப்படி..:rolleyes:

 

அதனை நாங்கள் மக்களுக்கு தெளிவுபடுத்தியிருந்தோம். இருப்பினும் தேர்தலுக்கு முந்திய தினங்களில் பணம் வழங்குதல், பொருட்கள் வழங்குதல், போதைப்பொருட்கள் வழங்கும் செயற்பாடுகளில் பல கட்சிகள் செயற்பட்டன.

30 minutes ago, நிழலி said:

கூட்டமைப்பு பணம் கொடுத்ததாக தனி ஒருவனை தவிர வேறு யாரும் சொல்லவில்லை - அவர்களை எதிர்க்கும் கட்சியினர் கூட இக் குற்றச்சாட்டை முன் வைக்கவில்லை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, நிழலி said:

கூட்டமைப்பு பணம் கொடுத்ததாக தனி ஒருவனை தவிர வேறு யாரும் சொல்லவில்லை - அவர்களை எதிர்க்கும் கட்சியினர் கூட இக் குற்றச்சாட்டை முன் வைக்கவில்லை

சீனாக்காரன் பணத்தில் தான், தமிழக ஸ்ரைலில், வாடகை பஸ்ஸில், பிரியாணி பார்சல், அரைப்போத்தில் மெண்டிஸ் உடன் சேர்த்த கூட்டம் என்பதே மகிந்த எதிர்ப்பாளர்கள் சொல்லும் கதை.

ரணில் தனது, மகிந்த பூணைக்கும் தோழன், மகிந்த ஊழல் விசாரணை நடாத்த விடா காவல் என்று இருந்து, மறுபுறம் ரவி கருணானாயக்கவின் வங்கி பிணை முறி ஊழலில் கோட்டை விட்டு அதற்கான விலையை செலுத்துகிறார்.

இவரின் நிலைப்பாட்டால் விரக்தியடைந்த தரகர் சந்திரிகா, சற்று விலகி இருக்கும் நோக்கில் இங்கிலாந்து பறந்து விட்டார்.

ரணில் தலைவிதி எதுவாயினும், மைத்திரி, இந்தியா, மேற்கு ஆகிய மூன்று பகுதிக்கும் உள்ள ஓரே வழி, ஊழல் விசாரணை என்ற பெயரில், மகிந்தவை மடக்குவது தான்.

அந்த அலையில் ரவி உட்பட பலர் சிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, நிழலி said:

அவர்களை எதிர்க்கும் கட்சியினர் கூட இக் குற்றச்சாட்டை முன் வைக்கவில்லை

அடிச்ச மப்பும் குழப்பமும் முடிய ஒவ்வொன்றாய் எழும்பி போட்டு தருவினம் பாருங்க காத்திருப்பம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

அடிச்ச மப்பும் குழப்பமும் முடிய ஒவ்வொன்றாய் எழும்பி போட்டு தருவினம் பாருங்க காத்திருப்பம் .

ஒப்பந்தம்,கையெழுத்து,அத்தாட்சிப்பத்திரம் எதுவுமில்லாமல் நல்லாட்சி அமைச்ச கொம்பனியெல்லே......

விடிய விடிய விசயங்கள் வெளிக்கும் பாருங்கோ :27_sunglasses:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் விஷயம்பற்றி வெளிநாட்டு தூதரகங்கள் ஏதாவது பேசினால்,கருத்து சொன்னால் உடனே, இலங்கை ஒரு இறையாண்மை உள்ளநாடு, அதன் உள்நாட்டு விஷயங்களில் வேறுநாடுகள் தலையிடகூடாது ,அதை எப்படி தீர்த்துகொள்வது என்று எங்களுக்கு தெரியும் என்று தலையில் நெருப்பு வைக்கப்பட்டமாதிரி அலறும் பேரினவாதிகள்,

இறையாண்மையுள்ள ஒரு நாட்டின் உள்நாட்டு தேர்தலின்மூலம் மாறிமாறிவரும் சிங்கள அரசுகளுக்குள் ஏற்படும் நெருக்கடியின்போது மட்டும், வெளிநாட்டு அரசுகளும்,அதன் தூதரகங்களும்,ராஜதந்திரிகளும் ஜனாதிபதி மாளிகை,அலரிமாளிகையின் அடுப்படிவரை போய் கருத்து சொல்ல பேரினவாதிகள் அனுமதிப்பது ஏன்?

தனது இனத்துக்கு ஒரு நெருக்கடியென்றால் எவர் காலையும் பிடித்து சுமுக நிலையை, உருவாக்கும் ராஜதந்திரத்தை சிங்களவரிடம் தனியான வகுப்பிற்குபோய் தமிழ்கட்சிகள் கற்றுக்கொண்டால் என்ன? ரியூசன் பீசுக்காக ஆகும் செலவை தமிழர்கள் ஏற்றுக்கொள்ள தயாராயிருப்பார்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, valavan said:

தமிழர்கள் விஷயம்பற்றி வெளிநாட்டு தூதரகங்கள் ஏதாவது பேசினால்,கருத்து சொன்னால் உடனே, இலங்கை ஒரு இறையாண்மை உள்ளநாடு, அதன் உள்நாட்டு விஷயங்களில் வேறுநாடுகள் தலையிடகூடாது ,அதை எப்படி தீர்த்துகொள்வது என்று எங்களுக்கு தெரியும் என்று தலையில் நெருப்பு வைக்கப்பட்டமாதிரி அலறும் பேரினவாதிகள்,

இறையாண்மையுள்ள ஒரு நாட்டின் உள்நாட்டு தேர்தலின்மூலம் மாறிமாறிவரும் சிங்கள அரசுகளுக்குள் ஏற்படும் நெருக்கடியின்போது மட்டும், வெளிநாட்டு அரசுகளும்,அதன் தூதரகங்களும்,ராஜதந்திரிகளும் ஜனாதிபதி மாளிகை,அலரிமாளிகையின் அடுப்படிவரை போய் கருத்து சொல்ல பேரினவாதிகள் அனுமதிப்பது ஏன்?

தனது இனத்துக்கு ஒரு நெருக்கடியென்றால் எவர் காலையும் பிடித்து சுமுக நிலையை, உருவாக்கும் ராஜதந்திரத்தை சிங்களவரிடம் தனியான வகுப்பிற்குபோய் தமிழ்கட்சிகள் கற்றுக்கொண்டால் என்ன? ரியூசன் பீசுக்காக ஆகும் செலவை தமிழர்கள் ஏற்றுக்கொள்ள தயாராயிருப்பார்கள்!

சீனாக்காரன் மாலத்தீவை மடக்கியது மட்டுமல்ல, இந்தியா படை அணுப்பினால் கதையே வேற என்று சொல்லிட்டான்

இப்ப, இலங்கை.... பிச்சுக்கப் போகுது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/02/2018 at 10:23 PM, valavan said:

தமிழர்கள் விஷயம்பற்றி வெளிநாட்டு தூதரகங்கள் ஏதாவது பேசினால்,கருத்து சொன்னால் உடனே, இலங்கை ஒரு இறையாண்மை உள்ளநாடு, அதன் உள்நாட்டு விஷயங்களில் வேறுநாடுகள் தலையிடகூடாது ,அதை எப்படி தீர்த்துகொள்வது என்று எங்களுக்கு தெரியும் என்று தலையில் நெருப்பு வைக்கப்பட்டமாதிரி அலறும் பேரினவாதிகள்,

இறையாண்மையுள்ள ஒரு நாட்டின் உள்நாட்டு தேர்தலின்மூலம் மாறிமாறிவரும் சிங்கள அரசுகளுக்குள் ஏற்படும் நெருக்கடியின்போது மட்டும், வெளிநாட்டு அரசுகளும்,அதன் தூதரகங்களும்,ராஜதந்திரிகளும் ஜனாதிபதி மாளிகை,அலரிமாளிகையின் அடுப்படிவரை போய் கருத்து சொல்ல பேரினவாதிகள் அனுமதிப்பது ஏன்?

தனது இனத்துக்கு ஒரு நெருக்கடியென்றால் எவர் காலையும் பிடித்து சுமுக நிலையை, உருவாக்கும் ராஜதந்திரத்தை சிங்களவரிடம் தனியான வகுப்பிற்குபோய் தமிழ்கட்சிகள் கற்றுக்கொண்டால் என்ன? ரியூசன் பீசுக்காக ஆகும் செலவை தமிழர்கள் ஏற்றுக்கொள்ள தயாராயிருப்பார்கள்!

சொறி சிங்கள அரசு சொல்வது சரியானதே. அதாவது இறைமையுள்ள அரசு என்பது அதன் எல்லையிலும் எல்லைக்குள்ளும் எந்த எந்த விடயங்களை நடைபெற அனுபதிப்பது அல்லது அனுமதி மறுப்பது என்பதுவே, இறையாண்மை உள்ள வேறு அரசுக்கள் தனது  எல்லைக்குள் உள்ள  விடயங்களில் தனது அனுமதியுடன் தலையிடுவதை அனுபதிப்பதை இல்லையா எனபதும் கூட,    இறையானமை உள்ள அரசு என்பதிற்கான தலையாய பண்பும் உரிமையும் ஆகும்.

ஆயினும், சொறி சிங்கள அரசிற்கு  இறையாண்மை உள்ளதா என்பதே கேள்வி? இல்லை என்பதே  அரசு மற்றும் சர்வதேச, அரசுக்கள் இடையிலான உறவில் அதி உன்னத மற்றும் சிறப்பு தேர்ச்சி அடைந்த சட்ட வல்லுனர்களின் சட்டக் கருத்தாகும்.

அதை இல்லாமல் ஆக்கியதே  சொறி சிங்கள அரசு தான். வேறொன்றினால் அல்ல, அயலில் உள்ள தனக்குத் தானே  தானே பிராந்திய வல்லரசு என்று மகுடம் சூட்டி, வெளிப்படையாக சொறி சிங்கள அரசின் காலில் வீழ்ந்து கெஞ்சுவதை ஏனைய அரசுகள் எவ்வாறு நோக்கும்  எனப்தாஹி பற்றி கூட கவலைப்படாத இந்திய அரசுடன் கைச்சாத்திட்ட உடன்படிக்கை (treaty ) மூலமாகவே சொறி சிங்கள அரசு தனது இறையாண்மையை இந்திய அரசிடம் விற்றது.

இங்கே நான் treaty என்ற ஆங்கில பதத்தையே கருத்தில் எடுக்கிறேன். ஏனெனில் treaty என்பது மிகவும் கட்டுப்பாடுடைய சட்டக் கடமைகளும் (obligations), உரித்துகளும் அரசுகளுக்கு மட்டும் இடையிலேயே ஏற்படுத்தப்படக் கூடியதாகும். அது போலவே, ஏதாவது ஓர் அரசு  (that is party to the treaty) தனது கடமைகளை வழங்கவில்லையானால், ஏனைய அரசு அல்லது அரசுக்கள் அந்தக் கடமைகளை யுத்தம் மூலமாக அந்தக் கடமைகளை வழங்காத அரசை வழங்க வைக்கலாம்.

ஆகையினால் தான், இந்திய-சிங்கள அரசு உடன்படிக்கை உயிர்புடன் (13ம் திருத்தும்) இருக்க வேண்டும் என்று பலரிடம் கூறியுள்ளேன்.

ஏனெனில், சிங்கள அரசுடன் (மன்னிக்கவும், சொறி லங்கா அரசுடன்) ICC வாயிலாக சட்ட சவால் இடைவெளி திறக்கப்படுமானால், சொறி லங்கா அரசின் இறையாண்மை வாதத்தை இலகுவாக முறியடிக்கலாம்.      

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.