Jump to content

பொதுத்தேர்தலை உடன் நடத்துங்கள்....பிர­த­ம­ராகும் எண்­ண­மில்லை; தேர்தலை நடத்துங்கள் என்­கிறார் மஹிந்த


Recommended Posts

பொதுத்தேர்தலை உடன் நடத்துங்கள்

p18-29ab0328b11b6ea6bf2ca1eb3fbf815b1ea52e5a.jpg

 

பிர­த­ம­ராகும் எண்­ண­மில்லை; தேர்தலை நடத்துங்கள் என்­கிறார் மஹிந்த

(எம்.சி.நஜி­முதீன்)

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் மூலம் பொதுத் தேர்­தலை நடத்­து­மாறு மக்கள் செய்­தி­யொன்றை வழங்­கி­யுள்­ளனர். ஆகவே அர­சாங்கம் உட­ன­டி­யாக பொதுத்தேர்­தலை நடத்த வேண்டும். அப்­பொதுத் தேர்தல் முடி­வு­களை அடிப்­ப­டை­யாகக்­கொண்டே நாம் ஆட்­சி­ய­மைப்போம். மாறாக ஐக்­கிய தேசியக் கட்சி­யையோ ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யையோ இணைத்து புதிய ஆட்சி தொடர்­வ­தற்கு  நாம் தயா­ரில்லை என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்தார். 

 ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலைமைப் பத­வியை ஜனா­தி­பதி மைத்­தி­பால சிறி­சேன ஒரு­போதும் எனக்கு வழங்க மாட்டார். அத்­துடன் மக்­களின் பிர­தி­நி­தித்­துவம் எமக்­கி­ருப்­ப­தனால் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பிர­தி­நி­தித்­துவம் பற்றி அலட்­டிக்­கொள்­ளப்­போ­வ­தில்லை என்றும் மஹிந்த ராஜ­பக்ஷ குறிப்­பிட்­டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று பத்­த­ர­முல்ல நெலும் மாவத்­தை­யி­லுள்ள அக்­கட்­சியின் தலை­மை­ய­கத்தில் நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன பெரு­வெற்றி பெற்­றது. அவ்­வெற்­றியை பெற்­றுத்­தந்த மக்­க­ளுக்கு நன்றி தெரி­வித்­துக்­கொள்­கிறேன். குறு­கிய காலத்தில் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன ஊடாக பிர­சார நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு இப்­பெ­ரிய வெற்­றி­பெற்­றுள்ளோம். 232 சபை­களில் நாம் வெற்­றி­பெற முடிந்­துள்­ளது. மஹ­ர­கம, மஹி­யங்­கனை, பண்­டா­ர­வளை, பேரு­வளை, திரப்­பன ஆகிய சபை­களில் நாம் ஆத­ரவு வழங்­கிய சுயேச்சை குழு­வி­னரே வெற்­றி­பெற்­றுள்­ளனர். ஏனைய பிர­தான கட்­சிகள் கடு­மை­யான பின்­ன­டைவைச் சந்­தித்­துள்­ளன. 

இத்­தேர்­த­லா­னது உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான உறுப்­பி­னர்­களைத் தெரி­வு­செய்யும் தேர்­த­லாக அமை­யாது தேசிய முக்­கி­யத்­து­வம்­வாய்ந்த சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பா­கவே அமைந்­தது. எமக்கு கிடைத்­தி­ருக்கும் வெற்­றியை வைத்துப் பார்க்­கும்­போது நாட்டை பிரிக்கும் அர­சி­ய­ல­மைப்பு, தேசிய வளங்­களை வெளி­நா­டு­க­ளுக்கு விற்­பனை செய்தல், வரிச் சுமை, மக்­க­ளுக்­கான சலு­கை­களை இல்­லாது செய்தல், அர­சியல் பழி­வாங்கல்,இரா­ணு­வத்­தி­ன­ருக்கு எதி­ரான கெடு­பி­டிகள் என்­ப­வற்­றுக்கு எதி­ரா­கவே மக்கள் ஆணை வழங்­கி­யுள்­ளனர்.

நாம் ஆட்­சியில் இருக்கும் போதும் உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­தல்­களை எதிர்­கொண்­டுள்ளோம். அச்­சந்­தர்ப்­பங்­களில் அர­சாங்கம் மேற்­கொள்­ள­வுள்ள வேலைத்­திட்­டங்­களை முன்­னி­றுத்­தியே தேர்தல் பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்­துள்ளோம். எனினும் இம்­முறை அர­சாங்கம் எதிர்த்­த­ரப்­பினர் மீது சேறு பூசி பிர­சாரம் மேற்­கொண்டு தேர்­தலை வெற்­றி­கொள்­ளலாம் எனக் கரு­தியே பிர­சா­ரங்­களை மேற்­கொண்­டனர். ஆகவே ஜன­வரி எட்டாம் திகதி தேர்­தலில் வெற்­றி­பெற்­றது போல் வெற்­றி­பெ­று­வ­தற்கே அர­சாங்கம் எதிர்­பார்த்­தது. அதற்கு மக்கள் தகுந்த பதி­ல­ளித்­துள்­ளனர்.

 உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் மூலம் பொதுத் தேர்­தலை நடத்­து­மாறு மக்கள் செய்­தி­யொன்றை வழங்­கி­யுள்­ளனர். ஆகவே அர­சாங்கம் உட­ன­டி­யாக பொதுத் தேர்­தலை நடத்த வேண்டும் என அர­சாங்­கத்­திடம் கேட்­டுக்­கொள்­கிறோம். ஆகவே உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலின் முடி­வு­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு நாட்டில் நிலவும் ஸ்திர­மற்ற நிலையைப் போக்­கு­வ­தற்கு பாரா­ளு­மன்றத் தேர்­தலை நடத்தி அப்­பெ­று­பே­று­களின் பிர­காரம் ஸ்திர­மான அர­சாங்­கத்தை அமைக்க வேண்டும்.மேலும் மூன்று மாகாண சபை­களின் பத­விக்­காலம் நிறை­வ­டைந்­துள்­ளது. அம்­மா­காண சபை­க­ளுக்­கு­மான தேர்­த­லையும் நடத்த வேண்டும்.

 கலப்புத் தேர்தல் முறையில் சிக்கல் நிலை உள்­ளது. பெறு­பேறு வெளி­யிடும் நட­வ­டிக்கை இன்னும் முழுமை பெற­வில்லை. அத்­துடன் சில தேர்தல் பெறு­பே­று­களில் சிறிய திரிபு நிலை காணப்­ப­டு­கி­றது. அதனால் சில பிர­தே­சங்­களில் பெற்­றி­பெற்ற தரப்பை விட தோல்­லி­ய­டைந்த தரப்­பினர் அதிக பிர­தி­நி­தித்­து­வங்­களைப் பெற்­றுள்­ளனர். பாரா­ளு­மன்றில் அவ­ச­ர­மாக நிறை­வேற்­றிய திருத்­தத்தின் மூலமே குறித்த சிக்கல் நிலை ஏற்­பட்­டுள்­ளது.

 உள்­ளு­ராட்சி மன்றத் தேர்­தலின் முழு­மை­யான பெறு­பே­றுகள் வெளி­யான பின்னர் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவில் தெரி­வா­கி­யுள்ள உறுப்­பி­னர்­களை அழைத்து தங்­களின் பிர­தே­சங்­களில் எவ்­வாறு வேலைத்­திட்­டங்­களை முன்­வைக்க வேண்டும் என்­பது தொடர்பில் ஆலோ­சனை வழங்­க­வுள்ளோம் என்றார்.

கேள்வி : 2020 ஆம் ஆண்­டுக்கு ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு முன்னர் பொதுத்­தேர்தல் நடத்­தப்­பட வேண்டும் என்றா நீங்கள் கோரு­கி­றீர்கள்?

பதில் : நிச்­ச­ய­மாக… அதற்கு முன்னர் பாரா­ளு­மன்றத் தேர்தல் நடத்­தப்­பட வேண்டும். மக்­களின் நம்­பிக்கை இல்­லாது ஆட்சி நடத்த முடி­யாது. அது தற்­போது அர­சாங்க தரப்­பிற்கும் நன்கு விளங்­கி­யி­ருக்கும்.

கேள்வி : அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆம் திருத்­தத்தின் பிராரம் குறித்த காலக்­கெடு நிறை­வ­டைய முன்னர் பாரா­ளு­மன்றத் தேர்­தலை நடத்­து­வ­தாக இருந்தால் பார­ளு­மன்றில் பிரே­ர­ணை­யொன்று கொண்டு வந்து நிறை­வேற்­றப்­பட வேண்டும். எனவே அப்­பி­ரே­ர­ணையை நீங்கள் பாரா­ளு­மன்றில் சமர்ப்­பிப்­பீர்­களா?

பதில் : இல்லை. அவ்­வா­றான யோச­னை­யொன்றை முன்­வைக்­கப்­போ­வ­தில்லை. ஏனெனில் நாம் அவ்­வா­றான பிரே­ரணை கொண்­டு­வ­ரும்­போது அர­சாங்­கத்­தி­லுள்­ள­வர்கள் எதிர்ப்புத் தெரி­விப்பர். ஆகவே அர­சாங்க தரப்பே அவ்­வா­றான பிரே­ர­ணை­யொன்றை பாரா­ளு­மன்­றிற்கு கொண்டு வர வேண்டும். அவ்­வாறு கொண்­டு­வ­ரப்­ப­டு­மி­டத்து அதற்கு நாம் ஆத­ரவு வாழங்­குவோம். மேலும் அப்­பி­ரே­ரணை கொண்­டு­வ­ரு­வ­தற்­கான மக்கள் அப்­பி­ராயம் கட்­டி­யெ­ழுப்­பப்­பட வேண்டும்.

கேள்வி : ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி அல்­லது ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து அர­சாங்கம் அமைப்­ப­தற்கு நீங்கள் எதிர்­பார்க்­கின்­றீர்­களா?

பதில் : அவ்­வாறு நாம் ஏன் இணைந்து ஆட்­சி­ய­மைக்க வேண்டும்? அவ்­வாறு செய்­வ­தாயின் தேர்­தலில் போட்­டி­யிட வேண்­டி­ய­தில்லை. புதிய அர­சாங்கம் அமைக்க வேண்­டு­மாயின் தேர்தல் நடத்தி அப்­பெ­று­பே­று­க­ளின்­படி அர­சாங்கம் அமைக்க வேண்டும் என்­பதில் உறு­தி­யாக உள்ளோம். அவ்­விரு தரப்­பி­ன­ரையும் மக்கள் நிரா­க­ரித்­துள்­ளனர்.

கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலின் பின்னர் கடந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் நாம் 96 ஆச­னங்­களைப் பெற்றோம். எனினும் அதி­லுள்ள சிலர் மக்­களின் ஆணைக்கு புறம்­பாக அர­சாங்­கத்தில் இணைந்து கொண்­டனர். ஆகவே நாம் எதிர்க்­கட்­சியில் அங்கம் வகித்தோம். எமக்கு கிடைக்க வேண்­டிய எதிர்க்­கட்சித் தலை­மை­யையும் இல்­லாமல் செய்­தனர். எனவே எந்­த­வொரு அதி­கா­ரமும் இல்­லாத நிலை­யி­லேயே நாம் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை எதிர்­கொண்டு வெற்­றி­பெற்றோம்.

கேள்வி : தங்­க­ளுக்கு ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தல­மைப்­ப­தவி வழங்­கப்­பட்டால் அதனை நீங்கள் ஏற்­றுக்­கொள்­வீர்­களா?

பதில் : அது தொடர்பில் கட்­சியே தீர­மா­னிக்க வேண்டும். எனினும் கட்­சியின் தலைவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மைப்­ப­த­வியை வழங்க மாட்டார் என்றே கரு­து­கிறேன்.

கேள்வி : ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் அங்­கத்­து­வத்தை வைத்­துக்­கொண்டு கட்­சியை சீர் குலைப்­ப­தாக சிலர் குற்றம் சாட்­டினர். அதன் யதார்த்தம் என்ன?

பதில் : அக்­குற்­றச்­சாட்­டுக்­கான தீர்ப்பை மக்கள் வழங்­கி­யுள்­ளனர்.

கேள்வி : ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் அங்­கத்­து­வ­தத்தை தொடர்ந்தும் பேணு­வீர்­களா?

பதில் : அது பற்றி பின்னர் தீர்­மா­னிப்போம். எனினும் நாட்டு மக்­களின் பிர­தி­நி­தித்­துவம் எமக்­கி­ருக்­கின்­ற­போது போலி­யான அங்­கத்­துவம் எமக்­கெ­தற்கு? மரு­தானை டார்லி வீதியில் இருக்கும் கட்­டிடம் மாத்­திரம் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யல்ல.

கேள்வி : கடந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி சார்பில் தங்­களின் தலை­மையில் 96 உறுப்­பி­னர்கள் பாரா­ளு­மன்­றத்­திற்குத் தெரி­வா­கி­யி­ருந்­தனர். எனவே அவர்­க­ளையும் மேலும் சில­ரையும் இணைத்­துக்­கொண்டு புதிய அர­சாங்கம் அமைக்கும் எதிர்­பார்ப்­பி­ருக்­கி­றதா?

பதில் : இல்லை… அவ்­வா­றான எதிர்­பார்ப்பு எம்­மிடம் இல்லை. பொதுத் தேர்­தலை நடத்தி அதன் பெறு­பே­று­களை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டு புதிய அர­சாங்கம் அமைப்­ப­த­தையே நாம் விரும்­பு­கிறோம். ஏனெனில் சூழ்ச்சி செய்து அர­சாங்கம் அமைக்கும் எண்ணம் எமக்­கில்லை. ஜன­நா­யக ரீதியில் ஆட்­சி­ய­மைப்­ப­தற்கே எதிர்­பார்க்­கிறோம்.

கேள்வி : உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் தாங்கள் பெரும்­பான்மை பெறாத சபை­களில் வேறு கட்­சி­க­ளுடன் இணைந்து ஆட்­சி­ய­மைக்­க­வுள்­ளீர்­களா?

பதில் : அவ்­வாறு எம்­முடன் இணைந்து அட்­சி­ய­மைப்­தற்கு வேறு தரப்­பினர் ஆர்வம் காட்­டு­கின்­றனர். பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தொண்­ட­மானின் கட்சி எம்­முடன் இணைந்து ஆட்­சி­ய­மைப்­ப­தற்கு தற்­போதே ஆயத்­த­மா­கி­யுள்­ளது.

கேள்வி : அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி பார­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் எவ­ரா­வது தங்­க­ளுடன் இணை­வது தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்­ள­னரா?

பதில் : இல்லை. அவ்­வாறு எவரும் பேச்­சு­வார்த்தை நடத்­த­வில்லை.

கேள்வி : அவர்கள் இணைந்­துகொள் முன்­வந்தால் இணைத்­து­கொள்­வீர்­களா?

பதில் : அதில் அங்கம் வகிக்கும் பல­ருக்கு எம்­முடன் இணை­வ­தற்கு விருப்பம் இல்லை.

கேள்வி : ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் ஐக்­கிய தேசியக் கட­சியும் இணைந்து உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் ஆட்­சி­ய­மைக்­க­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றதே?

பதில்: கட்சி தலை­மைகள் அதற்கு முற்­ப­டலாம்.எனினும் கிரா­மப்­பு­றங்­க­ளி­லுள்ள மக்கள் அதனை விரும்பப் போவ­தில்லை. அதனால் தெரி­வு­செய்­யப்­பட்ட உறுப்­பி­னர்­களும் அதற்கு இணங்கப் போவ­தில்லை.

கேள்வி : நாட்டின் பொரு­ளா­தா­ர­தத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு எவ்­வா­றான நட­வ­டிக்­க­கைகள் மேற்­கொள்­ளலாம் என எதிர்­பார்க்­கி­றீர்கள்?

 பதில் : முதலில் அதி­கா­ரத்தை வழங்­குங்கள், அதன் பின்னர் செய்து காட்­டு­கிறோம். கடந்த காலங்­க­ளிலும் அதனை நாம் செய்து காட்­டி­யுள்ளோம்.

கேள்வி : ஐக்­கிய தேசியக் கட்­சியும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் இணைந்து புதிய அர­சாங்கம் அமைப்­ப­தற்கு இட­முண்டு என சமூக வலைத்­த­ளங்­களில் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அவ்­வாறு நடை­பெற்றால் அதனை நீங்கள் எவ்­வாறு எதிர்­கொள்­வீர்கள்?

பதில் : பொறு­தித்­தி­ருந்து பார்ப்போம்… எனினும் அவ்­விரு தரப்­பி­னரும் இணைந்து ஆட்­சி­ய­மைப்­பா­ளர்கள் என எதிர்­பார்க்க முடி­யாது. மக்கள் எமக்கு வழங்­கி­யுள்ள ஆணையை நிறை­வேற்றும் வகையில் செயற்­ப­டுவோம். ஆகவே நாட்டை இரண்­டாக பிரித்தல், தேசிய வளங்­களை வெளி­நா­டு­க­ளுக்கு விற்­பனை செய்தல் என்­ப­வற்­றுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்போம். மேலும் மத்­திய வங்கி பிணை­முறி மோச­டி­யுடன் தொடர்­பு­டை­ய­வர்­களைத் தண்­டிப்­ப­தற்கும் நாம் எதிர்க்­கட்­சியில் இருந்து கொண்டும் நட­வ­டிக்கை எடுப்போம்.

கேள்வி : பொதுத் தேர்­த­லுக்கு சென்றால் நீங்கள் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன ஊடா­கவா போட்­டி­யி­டு­வீர்கள்?

பதில் : மக்­களின் வேண்­டு­கோ­ளுக்கு இணங்­கவே அது தொடர்பில் நாம் நட­வ­டிக்கை எடுப்போம்.

கேள்வி : புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் எவ்­வா­றான நிலைப்­பாட்டில் உள்­ளீர்கள்?

பதில் : முதலில் தேர்தலுக்குச் செல்ல வேண்டும். அதன் பின்னர் அது பற்றி தீர்மானிப்போம்.

கேள்வி : நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை இல்லாது செய்யும் நடவடிக்ககைக்கு ஆதரவு வழங்குவீர்களா?

பதில் : ஆம், ஆதரவு வழங்குவேன்.

கேள்வி : வடக்கு கிழக்கில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கான ஆதரவு எவ்வாறுள்ளது.

பதில் : வடக்கு கிழக்கிலும் எமக்கு ஆதரவு உள்ளது. அப்பிரதேசங்களில் எமது பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். ஆகவே இன மத மொழி பேதமின்றி சகல தரப்பினரும் எமக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.

கேள்வி : எதிர்க்கட்சி தலமைப் பதவியை இரா. சம்பந்தனால் தொடர்ந்தும் முன்னெடுக்க முடியுமா?

பதில் : அது தொடர்பில் அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கை எடுக்கும் என்று தெரியாது. எனினும் மக்கள் தற்போதைய எதிர்க்கட்சித் தலைமையையும் நிராகரித்துள்ளனர். ஆகவே நாம் தான் உண்மையான எதிர்க்கட்சியாகச் செயற்படுகிறோம்.

கேள்வி : பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதி்ராக பாராளுமன்றில் நம்பிக்கையில்லாப் பிரேரனை கொண்டு வருவீர்களா?

பதில் : தேர்தல் மூலம் மக்கள் வழங்கியிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை விட வேறு நம்பிக்கையில்லாப் பிரேரணை தேவையில்லை என்றே கருதுகிறேன். 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-02-13#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.