Jump to content

நட்சத்திரங்களை ருசிப்பவர்கள்


Recommended Posts

நட்சத்திரங்களை ருசிப்பவர்கள் - பா.திருச்செந்தாழை

 

விநோதங்களின் முதல் விதியின்படி, நீங்கள் வாசித்துக் கடந்த செய்தித்தாளின் கீழ் விளிம்பில், அந்தச் சிறு சதுரத்தில் நோயுற்ற காகம் போல மௌனத்திலிருந்த எழுத்துகள், என்னை மட்டுமே தெரிவு செய்தன. ‘பறக்கும் கம்பளத்தில் வாழ விருப்பமா?’ அதனருகே பச்சை மாமிசத்தின் உறைசிவப்பிலிருக்கும் மேப்பிள் இலையும், அதன் நடுவே ஆழ்துயிலிலிருக்கும் ஒரு வெண்கம்பளிப்பூச்சியின் படமும் இலச்சினைப் போல மிளிர்ந்தன.

42p1.jpg

விநோதங்களின் இரண்டாவது விதியின்படி, அந்த வீட்டை வடிவமைத்தவர் குறித்த தெளிவான தகவல்கள் இல்லை. இருந்தும் இல்லாததாய் கவனப்பிசகில் பதுங்குகின்ற சில இடங்களைப்போல, தனித்துவிட்ட அந்த மிக உயரக் கட்டடத்தின் மொட்டைமாடியின் நடுவே, ஒரு சிறிய மரப்பெட்டகம் போல அந்த வீடு முகங்கொண்டிருந்தது. நான்கு திசைகளிலும் கதவுகள்கொண்ட வீட்டின் நான்கு பால்கனிகளிலும் கைப்பிடிச் சுவர் இல்லை. ஒரு நாவலை மெய்மறந்து வாசித்தபடி நீங்கள் வீட்டிற்குள்ளிருந்து நடந்தால், அந்த நேரம் கதவு திறந்திருந்தால்... சிறிது நேரங்கழித்து ஒரு சிறிய பறவையும், மத்திம உடல் விலங்கும் அந்தரத்தில் பதறியபடி விழுந்துகொண்டிருப்பதை ரகசிய கேமராக்கள் சலனமற்றுப் பதிவுசெய்யும்.42p3.jpg

விநோதங்களின் மூன்றாம் விதியானது, மிகுந்த அச்சம் தரக்கூடியவை மேல் இயல்பாகவே அதீதக் காமம் மலர்கிறது. நாங்கள் அவ்வீட்டில் வசிக்கத் துவங்கினோம்.

இடவலக் குழப்பங்கள் இந்தத் துவக்க தினங்கள்: மேகங்கள் தவழ்ந்து செல்லும் சமையலறைகொண்ட வீட்டில் என் மனைவியின் அச்சம் இன்னும் நீங்கவில்லை. சுற்றுப்புறவாசிகளாக சில மேகரூபங்கள் மற்றும் பெயரற்ற பறவைகள் மிதக்கும் வெளியில், எங்கள் சிறு வீடு கப்பலைப்போல நகர்ந்துகொண்டிருக்க... சலனிக்கவோ, ஆறுதலளிக்கவோ முகாந்திரமற்று நாங்கள் தியானநிலையிலேயே இயங்கினோம். எல்லா தினங்களின் காலையிலும் அழுகி வெடித்துவிட்ட வனவிலங்கின் உடலைப்போல ஒரு நகரம் நொதிக்கத் தொடங்குவதை, நுண்புழுக்களைப்போல ஆவேசமாகத் தவழும் மனிதர்களை, ஆறுதலான சொல்லைப்போல சாலையோர மரங்களை இவையாவற்றையும் உயிருள்ள செய்தித்தாளாய் வாசித்தோம்.

கைப்பிடியற்ற வீட்டில் எங்கள் முதுகுத் தண்டின் கண்கள் சதா விழிப்பிலேயே இருந்தன. எங்களை மறந்து ஏதாவதொரு வேலையில் மூழ்கியிருக்கும்போது, திறந்துகிடந்த கதவுகளை நோக்கி (அப்போது அவை இனிக்கின்ற வாயைப் போலிருந்தன) எங்களின் சிசு, இயந்திர பொம்மையைப்போல தவழ்ந்துகொண்டிருந்தது. விளிம்பிற்கும் குழந்தைக்கும் இடையேயான அதிர்ச்சி சூழ் காலம் அல்லது தூரத்தின் மேல் நீள கூர்வாய் நாரைகள் அலகு தீட்டியபடி கண் சிமிட்டின.

42p2.jpg

இயல்பில் நாங்கள் மென்மையானவர்கள். எங்களது கைத் தவறி விழும், உருளும் உடல்கொண்ட பொருள்கள் தங்களது பயணத்தை விளிம்பு நோக்கித் துவக்கும்போது, பதற்றத்துடன் அதன் கால்களைக் காணுகிறோம். மிக மிகக் கீழே சாலையில் மிகுந்த நிதானத்துடன், மகிழ்ச்சியுடன், அமைதியுடன் நடந்து செல்லும் சிறுமி அல்லது வயோதிகன் அல்லது அரைக் கிறக்க இமைகளுடன் சாலையோரமாக உறங்கும் ஒரு செல்லப்பிராணியை எங்கள் கண்கள் உணர்கின்றன. அவர்களின் அடுத்த கணமானது ஓர் அருவியைப்போல எங்களுடைய கைகளில் தொடங்கி மிக ஆவேசமாக அவர்களை நெருங்கிக்கொண்டிருக்கிறது. ஆரம்பகாலங்களில் முன்னெச்சரிக்கையாக நாங்கள் கூச்சலிட்டு அவர்களைப் பதறி விலகச் செய்தோம். ஒரு நன்றியைத் தவிர, வேறு சுவாரஸ்யமே இல்லாத வெறுமை கணங்கள் பிறகு இம்சித்தன. சமீபமாக நாங்கள் அந்த நீர்வீழ்ச்சியை மௌனமாகக் காணுகிறோம். அழுக்குக் கண்ணாடியெனக் கீழே விரிந்திருக்கும் சோம்பல் யதார்த்தத்தை உடைக்கின்ற அந்த நீர்வீழ்ச்சி, பிறகு அங்கு கலைடாஸ்கோப்பின் விநோத சேர்க்கைகளைப்போல சூழலின் அசமந்தத்தை உடைத்துப் பரபரப்பாக்கும்... எல்லோர் கண்களும் உயருகையில் நாங்கள் தியானப் புன்னகையுடன் பின்னகர்ந்து மறைந்துகொள்வோம்.  அப்பொழுதெல்லாம் எங்கள் வீட்டின் மெலிந்த கூரைகள் காற்றில் நடுங்கின. இரக்கமற்ற பகலோ, ஒரு காகிதத்தின் நுனியென வீட்டின் விளிம்புகளை எரித்தபடி உள் நுழைந்து அச்சுறுத்தியது.42p3.jpg

நாங்கள் ஒருவருக்கொருவர் அவ்வளவு விசுவாசிகளில்லை. ஊடகங்களால் பெருக்கப்பட்ட காமம் ஏறிய உடல்கள் சிறிய இலச்சினைகளை, வார்த்தைகளைப் புறக்கணித்தன. நிலவு மெழுகும் இரவுகளில் காதலர்களைப்போல அபத்தமாய் நடித்தோம். எங்களின் சிசுவை தூயகாதலின் குறியீடெனக் கூறிப் புளகாங்கிதம் அடைந்தோம். அப்போதெல்லாம் எங்கள் வீட்டின் மெலிந்த கூரைகள் காற்றில் நடுங்கின. இரக்கமற்ற பகலோ, ஒரு காகிதத்தின் நுனியென வீட்டின் விளிம்புகளை எரித்தபடி உள்நுழைந்து அச்சுறுத்தியது.  

பரிசுத்தம் என்பது அழுக்கின் சவலைப்பிள்ளை எனத் தெரியவந்த நாள்களில் தூரத்து மதக் கோபுரங்கள் கார்ட்டூனாகிவிட்டிருந்தன. எங்களில் ஒருவரது நடத்தையின் மீதான சந்தேகம் இன்று ஊர்ஜிதமானது. ஒரு பிடிபட்ட குற்றவாளியை, பிடிபடாத குற்றவாளி மன்னிக்க இயலாது என்கிற எளிய புரிதலுக்குப் பின், வீடெங்கும் அமைதி பரவியது. கைப்பிடியற்ற பதற்ற விளிம்புகளும் மென்மையுற்றன. தொட்டித் தாவரங்களிலிருந்து குளிர்மை கசியத் தொடங்கியது. மென்னுடல் பறவைகள் சில சாப்பாட்டு மேஜைமீது தத்தி அமர்ந்தன. ஒரு மேகப்பொதி தன்னுடலைத் தளர்த்தி எங்களை நிரப்புகையில், வீட்டின் இரு திசை ஜன்னல் வழியாக ஒரு அஸ்தமனச் சிவப்பும், குளிர்ந்த நிலவும் மேலெழுந்துகொண்டிருந்தன. வீட்டு வாசலிலேயே மரணப்பொறி வைத்திருப்பதால், நாங்கள் பொய் பேசுவதில்லை. விளிம்புகளற்ற பால்கனியில் நின்றபடி நாங்கள் முத்தமிட்டுக் கொண்டோம். மரணத்திற்கு வெகு சமீபமான முத்தம். அந்த முன்மாலை வேளையில் கனியத் தொடங்கிய நட்சத்திரமொன்றை திராட்சைப் பழத்தைப்போல உதிர்த்துத் தின்கையில், எங்கள் உடல்கள் சுமை நீங்கி லேசாகின. சப்பணமிட்டு விரல் சூப்பிய விதம் எங்களைப் பார்த்த சிசுவை, பிரபஞ்சத்தின் ஓர் உயிரினம் என்பதற்கு மேலாக நாங்கள் புனிதப்படுத்திக்கொள்ளாத தருணத்தில் எங்களது வீடு, பறக்கும் கம்பளமாக மிதக்கத் தொடங்கியிருந்தது.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.