Jump to content

நாளிதழ்களில் இன்று:


Recommended Posts

‘பணக்கார முதல்வர் யார்?’: மாநில முதல்வர்கள் மத்தியில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வு!

100005195eb48d795-93e7-4c7c-b1a7-f6205a3

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தி இந்து (ஆங்கிலம்) - 'பணக்கார முதல்வர் யார்?'

இந்தியாவில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் சாமானியர்களிடம் மட்டும் இல்லை, மாநில முதல்வர்கள் மத்தியிலும் நிலவுகிறது என்று விவரிக்கிறது ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் ஆய்வு முடிவுகளை ஆதாரம் காட்டி வெளிவந்துள்ள தி இந்து நாளிதழ் செய்தி. தேசத்தின் ஏழை முதல்வருடன் ஒப்பிடுகையில் தேசத்தின் பணக்கார முதல்வர் 680 மடங்கு செல்வந்தராக உள்ளார் என்கிறது அந்த செய்தி. நாட்டின் பணக்கார முதல்வர் தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு என்றும், அவரின் சொத்து மதிப்பு 177 கோடி என்றும், தேசத்தின் ஏழை முதல்வர் திரிபுரா முதல்வர் மாணிக் சர்கார் என்றும், அவரின் சொத்து மதிப்பு 26 லட்சம் என்றும் விவரிக்கிறது அந்த செய்தி.

தினத்தந்தி - "கோவில் நிலங்களை மீட்க நடவடிக்கை"

100005192f70a95d3-3300-4c9a-84c7-4b40e17

குத்தகை, வாடகை பாக்கி வைத்து உள்ளவர்களிடமிருந்து கோவில் நிலங்களை மீட்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது தொடர்பாக தினத்தந்தி நாளிதழ் முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வி.முத்துசாமி என்பவர் கோவில் நிலம் தொடர்பாக தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர். மகாதேவன் இவ்வாறு உத்தரவிட்டுள்ளதாக அந்த செய்தி விவரிக்கிறது.

தி இந்து (தமிழ்)

தினமணி - 'நீதியில் அநீதி`

நீதித் துறையில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை என்று தினமணி நாளிதழ் தலையங்கம் எழுதி உள்ளது. "பெண்கள் மிக அதிகமாக உள்ள இந்திய சமுதாயத்தில் அவர்களுக்குத் தர வேண்டிய முக்கியத்துவமும் இடமும் வாய்ப்பும் நீதித் துறையில் வழங்கப்படாமல் இருப்பது நியாயமல்ல். மக்களவையிலும் சட்டப்பேரவையிலும் மகளிருக்கான இட ஒதுக்கீடு தேவையா என்பதில் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால், உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் கணிசமான அளவில் பெண் நீதிபதிகள் இடம் பெற வேண்டும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது" என்று விவரிக்கிறது அந்த தலையங்கம்.

"ஜாக்கிரதையாக இருங்கள்" - டைம்ஸ் ஆஃப் இந்தியா

1000051942c130de5-2f1f-467f-9e93-0f52657

இந்திய உளவு அமைப்பு தங்களது அலுவலகங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தள் மற்றும் இந்து சங் அல்லாத பிற அமைப்புகளை விசாரிக்கும் போது, மிகவும் கவனமாகவும், விவேகத்துடனும் செயல்படுங்கள் என்று குறிப்பிட்டுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்து ஹெல்ப் லைன் மற்றும் இந்தியா ஹெல்த் லைன் ஆகிய அமைப்புகளை விசாரித்தது தொடர்பாக, விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச தலைவர் பிரவின் தொகாடியா, ஐ.பி (உளவு அமைப்பு) தலைவருக்கு ஏழு மாதங்களுக்கு முன்பு கடுமையாக கடிதம் எழுதி இருந்தார். அதில், ஐ.பி அமைப்பு மேற்கொண்ட இந்த திடீர் விசாரணைக்காக மன்னிப்பு கோரி இருந்தார். இதன் தொடர்ச்சியாக இந்த சுற்றறிக்கை அனுப்பபட்டுள்ளதாக அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

http://tamil.thehindu.com/bbc-tamil/article22738291.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.