Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

                                                              வானவில்

 

                                              images?q=tbn:ANd9GcQLqaeCb-VQIEHPFrekv81

 

நள்ளிரவு தாண்டியும் தூக்கம்வர மறுத்தது. கண்ணிலிருந்து கொட்டிய நீர் வற்றி கன்னங்கள் காய்ந்து மனம் இறுகிக் கிடந்தாள் வாசுகி.

 நேற்றுவரை எத்தனை கனவுகளில் மிதந்தாள். நெற்றிச் சுட்டி முதல் பாதக் கொலுசுவரை அத்தனையும் பார்த்துப் பார்த்து வாங்கி கற்பனையிலேயே தன் எழிலை ஒத்திகை பார்த்து மனதுக்குள் சிரித்தது நினைவில் புரண்டது.

 'நான் இத்தனை அழகா? ' தனக்குத்தானே கேட்டு 'ஆமாம் இந்த அழகை எத்தனை தரம் என் வசீகரன்'வாசுகி நீர் ரொம்ப அழகாயிருக்கிறீர்' என்று அவன் வாயால் கேட்டு ரசித்திருக்கிறாள்.

அடடா என் வசீகரன் என்று எண்ணியதை நினைக்க அவளது முகத்தில் நாணம் கோலமிட்டது. பெண் மனதுதான் எவ்வளவு விசித்திரமானது.

 இத்தனை காலமும் கண்ணுக்குள் வைத்து பொத்தி வளர்த்த பெற்றவர்களை தனக்கென ஒருவன் வந்து விட்டால் பெற்றவர்கள் கூட இரண்டாம் பட்சமாகிவிடும் அதிசயம் எப்படி நடக்கிறது.

'வாசுகி நான் இண்டைக்கு சாத்திரியாரிட்ட போய் உம்மட பலன் பார்த்தனான். இந்த வருடத்துக்குள்ள உம்மட திருமணம் நடக்காட்டி இனி கன காலம் செல்லுமாம் அதனால நான் நேர நான் புறோக்கரிட்ட போய் கதைச்சிற்று வந்திற்றன்.'

வதனியின் பேச்சில் கேள்விமட்டுமின்றி உறுதியான பதிலும் இருக்கவே வாகி சிறுது மௌனமாக இருந்தாள். சிறிது நேரம் தன்னைச்;சுதாகரித்தவள்.

'அம்மா ஏன் இப்ப அவசரம் இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்'

'இப்பதான் பலன் இருக்கெண்டு சாத்திரி சொன்னவர்.'வதனியும் விடுவதாய் இல்லை.

'அம்மா முன்ன பின்ன தெரியாத ஆளை புரோக்கர் சொல்லி எப்பிடி செய்யிறது'

'வாசுகி நீர் சும்மா இரும் அதெல்லாம் போட்டோ தருவினம். நீர் பார்த்து பிடிச்சிருந்தா அதுக்குப் பிறகு போனில கதைச்சு முடிவெடுக்கலாம்'

வாசுகிக்கு அம்மாவுடன் சண்டையிட முடியவில்லை. கண்களைத் தாழ்த்திக்கொண்டாள்.

'நான் உமக்கு நல்லதுதான் செய்வன். நீர் முந்தி அவசரப்பட்டு காதல் காதல் எண்டு அலைஞ்சு கடைசியில நடந்தது என்ன? பேசாமல் இரும்.

வாசுகியின் மனதின் பாரம் அறியாமல் வதனியின் குத்தல் பேச்சு.

அம்மா சொல்வதிலும் உண்மை இல்லாமல் இல்லை. படிக்கிற வயதில தேவையில்லாத விடயங்களில் ஈடுபட வேணாம் எண்டு எவ்வளவு சொல்லியும் பத்தாம் வகுப்பிலேயே காதல் வசப்பட்டு வீட்டைவிட்டு வெளிக்கிட்டு பட்ட அவதி அவளால் மறக்கக் கூடியதா?

இறுதியில் படிப்பும் இன்றி தொழிலும் இன்றி நம்பி வந்தவனின் துணையும் இன்றி மீண்டும் அம்மாவின் காலடியில் விழுந்த அந்த நிமிடம் தன் தவறை உணர்ந்து கொண்டாள்.

வதனிக்கோ மகளின் எதிர்காலம் குறித்து ஏக்கமும் கவலையுமே அவளை மற்றவர் முன் தலை நிமிர முடியாத தீராத அவமானமாக உணர்ந்தாள்.

இப்பொழுது வாசுகிக்கும் வயது இருபத்திஜந்தைத் தாண்டி விட்டது. ஓரளவு உலகத்தைப் படித்துவிட்டாள். பதினைந்தில் இருந்த துடிப்பும் துள்ளலும் இருபத்திஜந்தில் நின்று நிதானிக்கக் கூடிய பக்குவத்தைக் கொடுத்திருந்தது.

என்றாலும் அம்மா புறோக்கர் மூலம் திருமணம் பேசுவது அவளுக்குப் பிடிக்கவில்லை.வெளியே சொல்ல முடியாமல் அம்மாவின் பிடிவாதம் அவளை அடக்கிப் போட்டது.

'வாசுகி புறோக்கர் நாலைந்து போட்டோக்கள் தந்திருக்கிறேர் நீர் பார்த்து செலக்ற் பண்ணும்.'

என்ன இது பெயரோ தொழிலோ குணமோ குடும்பச் சூழலோ எதுவுமே தெரியாமல் போட்டோவைப் பார்த்து செலக்ற் பண்ணும் என்று சொல்லும் அம்மாவின் அறியாமையை நினைத்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

'அம்மா எப்பிடி போட்டோவைப் பார்த்து சொல்லுறது'

அதெல்லாம் பேச்சுத் திருமணம் எண்டா அப்பிடித்தான். நாங்களெல்லாம் ஊரில அப்பா அம்மா சொன்னா மறுபேச்சுப் பேசமாட்டம் இங்க நீங்கதான்.....

ஜயோ அம்மாவின் ஊர்ப்புராணம் தொடங்கமுதல் என் பதிலை சொல்லிவிட வேணும் என்னும் அவசரத்தில் 'சரிசரி போட்டோவைத் தாங்கோ. '

அம்மா கேண்ட பேக்கிலிருந்து ஒரு கவரை எடுத்து பக்குவமாக நீட்டினாள்.

'உமக்குப் பிடித்ததைச் சொல்லும்'

முதலில் இருந்தது முன்வழுக்கை ஒதுக்கினாள்.

இரண்டாவது பார்வையில் முரட்டுத்தனம் சரி இதுவும் வேணாம்.

மூன்றாவது நான்காவது என்று ஒதுக்கிவிட்டு ஜந்தாவதாக இருந்த படம் பார்வையிலும் முகஅமைப்பிலும் ஏதோ மனதுக்குப் பிடித்ததுபோல் இருந்தது.

'இந்தாங்க இது பரவாயில்லை'

'என்ன பரவாயில்லையோ? இதவிட நல்ல மாப்பிள்ளை உனக்கு எங்க கிடைக்கப் போறான்'

மகளின் மனநிலை புரியாமல்  அடிக்கடி அவள் செய்த தவறை குத்திக் காட்டியே மனதை நோகடிக்கிறேன் என்று தெரியாமல் எத்தனை தடவைதான் நோகடிப்பாள்.

வாசுகி தன் அம்மா தன் தப்பைக் குத்திப் பேசும் பொழுதெல்லாம் குறுகிப் போய் விடுவாள்.

வதனிதான் என்ன செய்வாள் கணவன் பாதியிலேயே வதனியைக் கைவிட்டுவிட்டு வேறுஒரு பெண்ணுடன் தொடர்பேற்படுத்திக்கொண்டு விலகிப் போய்விட தனியேதான் வாசுகியை வளர்த்தாள்.

'நீயும் உன் அப்பனைபக் போல்தான் என்று பல தடவைகள் இயலாமையின் உச்சியில் எரிந்து விழும்போதெல்லாம் வாசுகி உள்ளுக்குள் உடைந்து போவாள்.

வாசுகிக்கு இப்போதெல்லாம் அம்மாவின் பேச்சு பழகிவிட்டது.

நான் அம்மா பேச்சைக் கேட்டு ஒழுங்கா இருந்திருந்தால் இப்படியெல்லாம் பேச்சு கேட்கவேண்டி இருந்திருக்காது. தன்னைத்தானே தேற்றிக் கொள்வாள்.

'கலோ புறோக்கரா பேசுறீங்க'

' ஓமோம் என்ன விசயம் சொல்லுங்க'

'நாங்க ஒரு போட்டோ செலக்ற் பண்ணி இருக்கிறம்'

'என்ன நம்பர்'

ஜந்தாம் நம்பர்'

'ஓ கொஞ்சம் பொறுங்கோ அது அந்த வசீகரனோட போட்டோ'

'ஆக்கள் எந்த ஊர் விபரமெல்லாம் எடுத்து வையுங்கோ வாறன்'

அதுதான் சரி நேரில வாங்கோ விபரம் சொல்லுறன்'

அப்ப பின்னேரம் சந்திப்பம் பாய்'

வதனி பின்னேரம் புறோக்கரைச் சந்தித்துவிட்டு திரும்பி இருந்தாள். அவன் பெயர் வசீகரன். வயது 28. பொடியன் நல்ல கொம்பனியில வேலை செய்யிறான். ஆனா அவன் எங்கட மதமில்லை. வேதக்காரப் பெடியனாம்.'

'அம்மா உங்களுக்கு என்ன விருப்பமோ அப்படி செய்யுங்க'

வாசுகி அம்மாவின் தலையில் போட்டு விட்டு தான் ஒதுங்கிக் கொண்டாள்.

வதனிக்கோ சாத்திரி சொன்ன மாதிரி உடனேயே இந்த வருடத்திற்குள் எப்படியும் வாசுகியின் திருமணம் கைகூடி வருகின்ற சந்தோசம்.

இவளின்ர கலியாணத்தை முடித்திற்றனென்றால் எனக்கு இருக்கும் பெரிய மனச்சுமை குறஞ்சிடும்

தன்மனச்சுமையை இறக்கிவைப்பதற்கு மும்முரமாக செயல்படும் வதனி தன் மகளின் மனச்சுமையைப்பற்றி சிறிதளவும் சிந்திக்க முயலவில்லை.

'இந்தா வாசுகி புறோக்கர் போன் நம்பர் தந்தவர். நீர் கதைச்சுப்பாரும். பொடியன் எப்பிடி என்று அறிஞ்சப் பிறகு தாய்தகப்பனிட்டக் கதைப்பம்.'

மறுநாள் சனிக்கிழமை.

'கலோ நான் வாசுகி கதைக்கிறன்'

'வாசுகியோ ஓ அம்மா சொன்னவ. புறோக்கரிட்ட படம் குடுத்ததெண்டு'

'நானும் உங்கட படம் பார்த்தனான்'

'என்ன படத்தில நான் எப்படி?'

'பிடிச்சிருந்தபடியால்தானே போன் பண்ணுறம்'

நானும் போட்டோ பாத்தனான். எனக்கும் பிடிச்சிருக்கு'

அதுசரி நான் உம்மை நேரில சந்திச்சு கதைக்க வேணும்'

நாளைக்கு கொபி சொப்பில சந்திக்க ஏலுமா?

சரி அப்ப கொபி சொப் அற்ரசை ரெக்ஸ் பண்ணிவிடுங்கோ'

'பாய்'

'அம்மா நாங்க நாளைக்கு சந்திக்கப் போறம் நான் என்ர விசயமெல்லாம் சொல்லத்தான் போறன்'

'அது உன்ர விருப்பம். சொன்னாலும் பிரச்சனை. சொல்லாட்டியும் பிரச்சனை. எதுக்கும் வெளிப்படையாச் சொல்லி சம்மதம் எண்டா பின்னுக்கு பிரச்சனை வராது.'

'காய் வாசுகி நான் வசீகரன்'

'காய்' வாசுகி

கையில இரண்டு கோப்பியுடனும் டோ நட்சுடனும் ஒதுக்கமான இருக்கையில் அமர்ந்து கொண்டனர்.

'படத்தைவிட நேரில நல்ல வடிவா இருக்கிறீர்'

'நீங்களும்தான்'

'ஓ அப்படியா?'

இப்படி ஆரம்பித்த உரையாடல் சில நிமிடங்கள் நீடித்தது.

'எங்கட அம்மா அப்பாக்கு நான் ஒரே மகன். அவர்களுக்கு எங்கட சர்ச்சிர திருமணம் வைக்கத்தான் விருப்பம்.'

'அப்படியா?'

'ஏன் உமக்கு விருப்பமில்i;லயா?'

' நான் அம்மாவோட கதைச்சுப் பார்க்கிறன்'

;'வாசுகி அதற்கு முதல் நான் சில விசயங்களை ஓப்பினாக் கதைக்க வேணும் எனக்கு முதல் காதல் பிறேக் பண்ணீற்றுது. அது நடந்து தநாலைந்து வருசத்ததுக்கு மேல.'

'எனக்கும் அப்படித்தான் எப்படி உங்களிட்ட சொல்லிறதென்றுதான் யோசித்துக் கொண்டிருந்தனான்.

'ஓ அப்ப நாங்க இரண்டு பேரும் ஒரே மனநிலையிலதான் இருக்கிறம்'

'நல்லது அப்ப நான் வீட்டில எங்கள் இரண்டு பேருக்கும் விருப்பம் எண்டு சொல்லவோ?'

வாசுகியின் முகத்தில் ஏற்பட்ட நாணத்தைப் பார்த்து வசீகரன் மனதுக்குள் ரசித்தான்.

 

 

வீட்டிற்கு வந்த வாசுகியின் முகத்தில் தெரிந்த மலர்வில் வதனி சந்தோசப்பட்டாள்.

'அம்மா சர்ச்சிலதான் வெடிங் வைக்க வேணுமாம்'

வதனிக்கு எப்படியாவது திருமணம் முடிந்தால் போதும் என்ற நிலைப்பாடு.

'சரி என்ன செய்யிறது என்ர தலைவிதி' அலுத்துக்கொள்வதுபோல் வெளியே சொன்னாலும் உள்ளுக்குள் மகளின் திருமணம் நடைபெறப் போகிறதென்ற பூரிப்பு.

வாசுகியோ மணமேடையில் வெள்ளை நீளங்கியுடன் கையில் மலர்க்கொத்துடன் மாப்பிள்ளையுடன் கை கோர்த்து நடப்பதாய் கனவில் மிதந்தாள்.

வதனி வசீகரனின் பெற்றவர்களுடன் தொடர்பு கொண்டு பேசினாள்.

'பிள்ளைகளுக்கு பிடிச்சுப் போச்சு. ஆனாலும் அடுத்த வருடம்தான் திருமணம் வைக்கலாம்' இது வசீகரனின் அம்மா.

'ஏன் அவ்வளவு காலம்' வாசுகி கேட்டாள்.

'சர்ச்சில ஆயத்தங்கள் செய்யவும் மற்றைய ஆயத்தங்களுக்கும் ரைம் வேணும்'

அப்ப இந்தவருடம் என்கேஜ்மென்ட் வைச்சிற்று அடுத்த வருடம் கலியாணத்தை வைப்பம்'

அது மட்டுமல்ல இரண்டு பேரும் கொஞ்சக்காலம் பேசிப் பழகினாத்தானே இரண்டு பேருக்கும் ஒத்துப் போகுதா எண்டு பார்க்கலாம்.

வதனிக்கோ என்ன பதில் கூறுவதென்று தெரியவில்லை. நான் பெண்ணைப் பெற்றவள். பழகிப் பார்த்து வேணாம் எண்டு சொன்னால்... எப்படி என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் குழம்பினாள்.

புறோக்கரிடம் பேசினாள்.

இறுதியில் இவ்வருடம் என்கேஜ்மென்ட் அடுத்த வருடம் திருமணம் எம்று முடிவாகியது.

இதற்கிடையில் வாசுகியும் வசீகரனும் நேரிலும் போனிலும் மெசேஜ்சிலுமாக தம் அன்பைப் பரிமாறத் தொடங்கி விட்டிருந்தனர்.

வதனி ஓடி ஓடி என்கேஜ்மென்ட்டிற்கான ஆயத்தங்களை செய்ய ஆரம்பித்தாள்

மண்டபம் உணவு உடைகள் நகைகள் மாலைகள் பூக்கள் பலகாரங்கள் என்று மனதுக்குள் பூட்டி வைத்திருந்த அத்தனை ஆசைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்பதுபோல் தன் நெருங்கிய உறவுகள் நட்புகள் என்று அனைவரிடமும் அழைப்பு விடுத்தாள்.

மோதிரம் அளவு கொடுத்து ரெஜிஸ்ராரையும் ஒழுங்கு செய்து வதனி பம்பரமாக சுழன்று வந்தாள்.

'கலோ நான் வசியின்ர அம்மா கதைக்கிறன்'

வதனிதான் போனை எடுத்தாள்'ஓம் சொல்லுங்கோ'

'வதனி ஒரு சின்னப் பிரச்சனை'

வாசுகிக்கு உள்ளுக்குள் உதறல்

'இல்ல நீங்க ரெஜிஸ்ரர் பண்ணுறதெண்டு சொன்னனீங்க. ரெஜிஸ்ரர் பண்ணாம மாலையும் மோதிரமும் மாத்தி விடுவம்.'

'ஏன் என்ன பிரச்சனை?'

'வெடிங் நேரம் சேர்ச்சில ரெஜிஸ்ரர் பண்ணலாம்'

'இதை முதலிலேயே சொல்லி இருக்கலாமே?' வாசுகி ஆத்திரத்தை அடக்க முயற்சித்தாள்.

'அதுதான் முதலிலேயே சொன்னனான் ஒரேயடியா அடுத்த வருடம் கலியாணம் வைக்கலாமெண்டு'

'வதனிக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விக்கித்துப் போனாள்.

அவளது சூடான கண்ணீர் தொலை பேசியை நனைத்தது.

' அப்ப நீங்க யோசிச்சு முடிவெடுங்க பாய்'

தொலை பேசி துண்டிக்கப்பட்டதும் வதனி ஆத்திரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் வாசுகிமேல் பாய்ந்தாள்.

'அம்மா நீங்கதானே கலியாணம் பேசினனீங்க நானா பேசச் சொல்லிக் கேட்டனான்.'

'ஓ நீ ஒழுங்கா இருந்திருந்தால் ஏன்இவ்வளவு கேவலப் படுவான்.'

வாசுகி மௌனமானாள்.

வதனிக்கு உடம்பெல்லாம் கொதிப்பது போல இருந்தது.

என்ன செய்வது என்று தெரியாமல் அறைக்குள் சுற்றிச் சுற்றி நடந்தாள். திடீரென்று என்ன நினைத்தாளோ மண்டபம் உணவு மாலை என்று எல்லாவற்றையும் போன் அடித்து கேன்சல் பண்ணினாள். ரெஜிஸ்ராரை அழைத்து அப்பொயின்ற்மென்ரை ரத்து செய்தாள்.

அனைத்தையும் செய்து முடிக்கும்வரை அம்மாவின் முகத்தையே அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்த வாசுகியின் முகம் இறுகிக் கிடந்தது.

போனின் இணைப்பைத் துண்டித்து விட்டு நிமிர்ந்த வதனி மகளின் முகத்தை பார்த்த மறுகணம் வேதனையை உள்ளே விழுங்கிக் கொண்டாள்.

தான் செய்தது தவறோ என்று மனதுக்குள் விழுந்த முடிச்சை அவிழ்க்க மனமின்றி எழுந்து அறைக்குள் சென்று கதவை மூடியவள் படுக்கையில் விழுந்து தனிமையில் வேதனை தீர அழுது முடித்தாள்.

வாசுகியோ என்ன செய்வது என்று தெரியாமல் ஏக்கத்துடன் எழுந்து ஜக்கற்ரை மாட்டியவள் கால் போன திசையில் நடந்தாள்.

ஏன் எம்மைப் பெற்றவர்கள் இப்படி இருக்கிறார்கள்?

இவர்கள் திருந்தவே மாட்டார்களா?

எல்லா மதங்களும் அன்பை போதிப்பதாகச் சொல்கிறார்கள். இதுதான் மதமா?

மதமில்லாத உலகத்தில் மனிதராக வாழ்வது எப்போது?

சிந்தனையுடன் நடந்து கொண்டிருந்தவளை கையிலிருந்த தொலைபேசி கலைத்தது.

வசீகரன்தான் அழைத்தான்.

பதில் அனுப்ப மனமின்றி தொலைபேசியை துண்டித்தவள் அமைதியாக வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாடு மாறினாலும், நாகரீகங்கள் மாறினாலும் சில அடிப்படை இயல்புகள் குளத்தில் போட்ட கல்லுமாதிரி அப்படியே இருக்கின்றது.

பெற்ற மகளை தாய் குத்திக்காட்டிய உரையாடல்கள் நெருடியது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதுள்ள நடைமுறையை மிக பக்குவமாக எழுதியுள்ளீர்கள்.

அம்மா ஆகும் வரை அம்மாவின் பொறுப்பை விழங்கவைக்க முடியாது.

பெட்டி பாம்பு போல் இருக்கும் பிள்ளைகள் பதின்ம வயது வந்ததும் படமெடுக்க தொடங்குகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kavallur Kanmani said:

                                                             'நான் இத்தனை அழகா? ' தனக்குத்தானே கேட்டு 'ஆமாம் இந்த அழகை எத்தனை தரம் என் வசீகரன்'வாசுகி நீர் ரொம்ப அழகாயிருக்கிறீர்' என்று அவன் வாயால் கேட்டு ரசித்திருக்கிறாள்.

 

ஊர் நினைப்புடன் புலத்தின் பார்வையையும் சேர்த்து எழுதியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்,

புலத்தில் பெரும்பாலும்,

பெண் அழகாகவும், ஆண் ஹாண்ட்சம்&கியூட்டாகவும் இருந்துவிட்டால், ஜாதி,மதம்,ஜாதகம்,இனம் எல்லாம் கடந்து புலத்து காதல் தன்பாட்டுக்கு போய்க்கொண்டு இருக்கிறது, ஒரு மணவாழ்வு குழம்பிபோனாலும் அடுத்தவாழ்வு அவர்களுக்கு சொற்பகாலத்திலேயே அமைந்துவிடுகிறது அல்லது தேடிவருகிறது,அல்லது அவர்களாகவே மறு துணையை சீக்கிரமே தேடிக்கொள்கிறார்கள்.

 பெரும்பாலும் யதார்த்தம் அதுவே, வீட்டுக்குள் உக்கார்ந்து யாரும் அவர்களுக்காக குமுறி அழுவதில்லை.

புற அழகே முதற் தகுதியாக பார்க்கப்படும் புலத்தில்,அக அழகு பார்க்கப்படுவதில்லை,அவர்கள் வாழ்வை அமைக்கும்போது யாரோட விருப்பு வெறுப்புக்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை! 

ஆனால் புற அழகு கொஞ்சம் குறைவான ,குறிப்பாக பெண்கள் ஒரு தடவை வாழ்வில் சறுக்கிவிட்டால் மறு திருமணம் செய்துவைக்க பெற்றோர்கள் பலர் போராடுகிறார்கள்,

ஆண்கள் இலங்கைக்காவது ஓடிபோய் திருமணம் செய்துவிடுவார்கள், பெண்களும் அப்படிபோய் திருமணம் செய்யலாம், ஆனால் அங்கே உள்ள சமூகத்தின் ஆயிரம் அர்த்தம் பொதிந்த முதல் கேள்வி, ‘ஏன் அங்க மாப்பிளை கிடைக்காம இங்க வந்தவையாம்”?

இதை மலினமான கருத்தாய் நினைச்சு எழுதவில்லை, எம் மக்களில் பலரின் வாழ்வியல் அப்படித்தான் இங்கு இருக்கிறது என்பதை சொன்னேன்,

அப்புறம் உங்கள் கதையில் ஒன்றுமட்டும் விளங்கவில்லை, ஆணின் வீட்டு பக்கம் இந்த திருமணத்தை வேண்டாம் என்று சொல்லவில்லையே, மாலைமாத்தி மோதிரம் போடுவதென்றால் அதுவும் ஒருவகை திருமண முன்னேற்பாடு சடங்குதானே? 

ஒருவேளை சடங்கு சம்பிரதாய மேட்டரில் நான் அறிய இன்னும் நிறைய இருக்கோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 நம்பிக்கையின்  மீது தான்  வாழ்வு கட்டி எழுப்ப படுகிறது ...ஒருவருக்கொருவர் நம்பிக்கையிணமும்    தடுமாறும் மன நிலையும்  உள்ள போது..உறவுகள் காயப்படுத்தப்படுகிறார்கள். வாசுகியும் வசீகரனும் என்ன பாவம் செய்தார்கள். 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழி மிகப்பெரிய சர்ச்சைக்குரிய விடயத்தை கதையாக தந்திருக்கிறீர்கள். ஒரு தாயாக நிறைய அனுபவங்களை என்னால் எழுத முடியும். எழுத்தில் கொண்டுவந்துவிட்டால் பிரச்சனைகள் தீர்ந்துவிடுமா என்ன? இப்போது மணமக்கள் இணைப்பாளராக இருக்கிறேன். அதீத பிற்போக்குத் தனங்களை நாளாந்தம் சந்திக்கிறேன் சாதியும் மதமும் பல இளையவர்களின் வாழ்வைச் சின்னாபின்னப்படுத்துவதையும் கண்டிருக்கின்றேன். பெற்றோரால் பிள்ளைகளையும் பிள்ளைகளால் பெற்றோரையும் திருப்திப்படுத்த முடிவதில்லை. பெற்றோரின் அட்டவணைப்படுத்தப்பட்ட நிரலுக்குள் பிள்ளைகளால் கட்டுப்பட முடிவதில்லை பிள்ளைகளின் எல்லையற்ற சுதந்திரவெளியை பெற்றோரால் அறிய முடிவதில்லை. சம்பிரதாயம் என்ற கட்டுகளால் எல்லைகளை நிறுவமுயலும் பெற்றோரும், சம்பிரதாயங்களையே உடைத்து எல்லைகளை தகர்க்கும் பிள்ளைகளுமாக புலம்பெயர் வாழ்வு அதிலும் கனடாவில் அதிகம். இந்தக்கதைபோல் இங்கு ஏராளம் முடிவுதான் அறியப்படாத ஒன்றாக இன்று வரைக்கும்...

Link to comment
Share on other sites

கதையை வாசிக்கும் போது இது ஊரில் 10 வருடங்களுக்கு முன்னர் நிகழ்வது போன்று தோன்றுகின்றது. இந்த கதையின் களம் வெளிநாடா அல்லது புலமா?

2 hours ago, valavan said:

 

புலத்தில் பெரும்பாலும்,

பெண் அழகாகவும், ஆண் ஹாண்ட்சம்&கியூட்டாகவும் இருந்துவிட்டால், ஜாதி,மதம்,ஜாதகம்,இனம் எல்லாம் கடந்து புலத்து காதல் தன்பாட்டுக்கு போய்க்கொண்டு இருக்கிறது, ஒரு மணவாழ்வு குழம்பிபோனாலும் அடுத்தவாழ்வு அவர்களுக்கு சொற்பகாலத்திலேயே அமைந்துவிடுகிறது அல்லது தேடிவருகிறது,அல்லது அவர்களாகவே மறு துணையை சீக்கிரமே தேடிக்கொள்கிறார்கள்.

 

 

வளவன், நான் நினைக்கின்றேன் நீங்கள் 'புலம்' என்ற சொல்லை 'வெளிநாடு" என்ற அர்த்ததில் பயன்படுத்துகின்றீர்கள் என. புலம் என்றால் தாயகம் / சொந்த ஊரை தானே குறிக்கும். இதனடிப்படையில் தானே புலம்யெர்ந்தவர்கள் என்ற சொல்லு பயன்படுத்தப்படுகின்றது?

Link to comment
Share on other sites

ஆக்கத்துக்கு பாராட்டுக்கள்.. 

பெரும்பாலான குடும்பங்களின் பொதுவான பிரச்சனை ஆனால் பேசப்படுவதில்லை. பேசியும் பிரயோசனம் இல்லை என்றும் சொல்லலாம். பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையில் உள்ள உளவியல் சார்ந்த ஒரு குறைபாடு. இதன் பின்னணியில் சாதி மதம் அடுத்தவன் என்ன சொல்வானோ என்று பிறருக்காகவே சதா பயந்து வழும் சூழுல் என பல காரணிகள் தொடர்ச்சியான மனச் சிதைவுக்கும் மன அழுத்ததிற்கும் காரணமாகின்றது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிழலி said:

வளவன், நான் நினைக்கின்றேன் நீங்கள் 'புலம்' என்ற சொல்லை 'வெளிநாடு" என்ற அர்த்ததில் பயன்படுத்துகின்றீர்கள் என. புலம் என்றால் தாயகம் / சொந்த ஊரை தானே குறிக்கும். இதனடிப்படையில் தானே புலம்யெர்ந்தவர்கள் என்ற சொல்லு பயன்படுத்தப்படுகின்றது?

அகம்...என்பது ஒருவர் பிறந்தநாட்டை குறிக்கிறது, அதனால்தான் தாய்+அகம் தாயகம் என்கிறோம் , புலம் என்பது தாயகத்திற்கு வெளியே என்பதை குறிக்கிறது, அதனால்தான் புலத்திற்கு பெயர்ந்தவர்களை புலம்பெயர்ந்தவர்கள் என்று அழைக்கிறோம் என்று நினைக்கிறேன்.

நான் சொல்வது 100% சரியாக இருக்குமோ தெரியாது, நீங்கள் சொல்வதும் சரியாக இருக்கலாம்!

Link to comment
Share on other sites

3 hours ago, valavan said:

அகம்...என்பது ஒருவர் பிறந்தநாட்டை குறிக்கிறது, அதனால்தான் தாய்+அகம் தாயகம் என்கிறோம் , புலம் என்பது தாயகத்திற்கு வெளியே என்பதை குறிக்கிறது, அதனால்தான் புலத்திற்கு பெயர்ந்தவர்களை புலம்பெயர்ந்தவர்கள் என்று அழைக்கிறோம் என்று நினைக்கிறேன்.

நான் சொல்வது 100% சரியாக இருக்குமோ தெரியாது, நீங்கள் சொல்வதும் சரியாக இருக்கலாம்!

இதை பற்றி மேலும் அறிய யாழையும் கூகிளையும் கிண்டி பார்க்கும் போது கிடைத்தவை :

https://ta.wiktionary.org/wiki/புலம்

இது பற்றி மேலும் உரையாடல் தேவை எனில் மேலே இணைத்திருக்கும் யாழின் திரியில் உரையாடுவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு சர்ச்சைக்குரிய விடயம்தான். இருந்தும் புலம்பெயர் மண்ணிலும் நம் சமூகம் தினம்தினம் சந்திக்கும் விடயமும் கூட. நாடு மாறினல் என்ன நாகரீகம் மாறினால் என்ன நாம் மாறவேண்டும்லவா? இன்று திருமண வயதை எட்டிய பிள்ளைகளை வைத்திருகும் பெற்றவர்கள் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால் இது. சில வருடங்களுக்கு முன் பிள்ளைகளைக் காதலிக்கக் கூடாதென்று தடை போட்டவர்கள்கூட இன்று கல்லூரிகளிலோ பல்கலைக் கழகங்களிலோ காதலித்தால் தமது பொறுப்பு நீங்கிவிடும் என்று கூறும் பல பெற்றவர்களைச் சந்தித்திருக்கிறேன் இருந்தும் இன்னும் சாதி மதம் என்ற வட்டத்துக்குள் நிற்கும் பெற்றவர்களால் பல பிள்ளைகளின் வாழ்க்கை தடைப்பட்டு சிதைக்கப்பட்டு வருகின்றது இன்றும் இங்கு நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது எம் இனத்திற்கு ஒரு சாபக் கேடு தான். கருத்தெழுதிய கிருபன் ஈழப்பிரியன் வளவன் நிலாமதி சகரா நிழலி சண்டாருதன் அனைவருக்கும் நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துயரங்கள்...சுமந்து செல்லும் ஒரு கதை....!

ஒரு குமர்ப் பெண்ணைக் கரை சேர்க்க..ஒரு தாய் படும் பாடு...அழகாக விபரிக்கப்பட்டுள்ளது!

இறுதியில்...அந்தத் தாய் எடுத்த உறுதியான முடிவு..மிகவும் சரியானது போலவே உள்ளது! அப்படியான முடிவை எடுக்க..அந்தத் தாய்க்கு..மிகுந்த மனத்திடம் இருந்திக்க வேண்டும்! கணவனைப் பிரிந்து, தனியாக வாழ்ந்ததால்...அவருக்கு அந்தத் துணிவு வந்திருக்கக் கூடும்!

வாசுகியின்...தோல்வியில் முடிந்த காதலை...வதனி...அடிக்கடி சுட்டிக்காடும் போதும்..வாசிக்கும் எமது மனங்களிலும் ...நெருடல்கள் ஏற்படுவதை...வாசகர்களாகிய எம்மால் தவிர்க்க முடியவில்லை! ஒரு வேளை ...தொடர்ந்தும் ஊரிலேவே...வாழ்ந்திருந்தால்...அந்த நெடுடல்கள் இல்லாமல் இருந்திருக்கவும் கூடும்@

எமது ஊரில்...பல தோல்வியடைந்த காதல்கள்...இருக்கின்றன தான்! எனினும்...அவை...கிணறுக்குள் நடந்தவை போல ...வெளியே ...தெரியாமல் ...போய் விடுகின்றன! அப்படியான..பலரின் திருமணங்களின் போது....அக்கினி சாட்சியாகவும்...அருந்ததி..சாட்சியாகவும்...முப்பத்து முக்கோடி...தேவர்கள் சாட்சியாகவும்...கன்னிகாதானம் செய்து கொடுக்கப் படும் போது....குனிந்த தலை..நிமிராமல் ..இருப்பதையும் கண்டு வியந்திருக்கிறேன்~

எமது கலாச்சாரம்...சாட்சியாக வைத்துள்ள..ஒருவரைக் கூடக் கோட்டுக்குச்..சாட்சியாக வர அழைக்க முடியாது என்பது தான் எமது..கலாச்சாரத்தின் தனிச் சிறப்போ....என்னவோ!

மனதைக் கொஞ்சம் பாதித்த..கதையைத் தந்த...காவலூரின் கண்மணிக்கு வாழ்த்துக்கள்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர்ந்த மண்ணில் துயரத்தை சுமப்பது அதிகம் பெற்றவர்களா பிள்ளைகளா என்பதே பெரும் சர்ச்சைக்குரிய ஒன்று. பெற்றர்களுக்கும் பிள்ளைகளக்கும் உள்ள தலை முறை இடைவெளி பல சமயங்களில் பெற்றவர்களயும் பல சமயங்களில் பிள்ளைகளையும் நிலை குலைய வைக்கின்றன. சாதி மதம் இனம் எல்லாம் ஒருபக்கத்தில் இருக்க ஒழுக்கம் பெரும் சர்ச்சையாக விளங்குகிறது. இன்றைய இளம் வயதினரின் காதல் எல்லை மீறியதாக இருப்பதால் அதுவே பெற்றவர்களுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துவதைக் காணக்கூடியதாய் உள்ளது. என்ன செல்லி என்ன  இது இனி கட்டுப்படுத்த முடியாத பெரு வெள்ளம். நீச்சலிடுவது கடினம். வெள்ளத்துடன் ஓடவேண்டியதுதான் என்று பெற்றவர்கள் முடிவெடுக்கும் நிலையில் இன்றைய காலம்
கதைபடித்து கருத்தெழுதிய புங்கையூரனுக்கும் விருப்பிட்ட அனைவருக்கும் நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது வாழ்வியலில் எம்மைச்சுற்றி இப்படி எத்தனையோ கதைகள் தினமும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இவை வெறும் கதைகளல்ல. கற்பனை கலந்த நிஜங்கள். கருத்துக்கு நன்றி கவி அருணாச்சலம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/02/2018 at 11:16 AM, valavan said:

அகம்...என்பது ஒருவர் பிறந்தநாட்டை குறிக்கிறது, அதனால்தான் தாய்+அகம் தாயகம் என்கிறோம் , புலம் என்பது தாயகத்திற்கு வெளியே என்பதை குறிக்கிறது, அதனால்தான் புலத்திற்கு பெயர்ந்தவர்களை புலம்பெயர்ந்தவர்கள் என்று அழைக்கிறோம் என்று நினைக்கிறேன்.

நான் சொல்வது 100% சரியாக இருக்குமோ தெரியாது, நீங்கள் சொல்வதும் சரியாக இருக்கலாம்!

வளவன் புலம் என்பது நாமும் எம் இனமும் பிறந்து வளர்ந்து வாழ்ந்து எமது தாயகத்தைக் குறிப்பது. நாம் தாயகத்தில் இருந்து புலம் பெயர்ந்து வெவ்வேறு நாடுகளில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். பலர் புலம் பெயர் தேசம் என வெளிநாட்டைக் குறிப்பிடுவது சரியான அர்த்தம் தெரியாததனால்.

 

 

திருமணம் பேசிச் செய்ய ஆரம்பிக்கும் போது எத்தனையோ சிக்கல்கள் இதுபோல் அக்கா. சிலநேரம் கோபத்தை அடக்கி அவர்கள் சொல்லும் கதைகளை சகித்துக் கேட்கவேண்டிய கொடுமை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாய் நடைபெறும் பிரச்சினையை மையமாய் கொண்டு நல்ல கதையை தந்திருக்கின்றிர்கள் சகோதரி.....! கதையாயினும் அம்மா அவசர பட்டு விட்டா போல. அதுபோல் வாசுகியும் வாசீகரனின் போனை எடுத்து கதைத்திருக்கலாம்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/17/2018 at 5:09 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வளவன் புலம் என்பது நாமும் எம் இனமும் பிறந்து வளர்ந்து வாழ்ந்து எமது தாயகத்தைக் குறிப்பது. நாம் தாயகத்தில் இருந்து புலம் பெயர்ந்து வெவ்வேறு நாடுகளில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். பலர் புலம் பெயர் தேசம் என வெளிநாட்டைக் குறிப்பிடுவது சரியான அர்த்தம் தெரியாததனால்.

 

 

 

அதுதான் விஷயம் தெரியாம பேசி நிழலிகிட்ட அசிங்கபட்டுட்டேன் இல்ல, ஏன் அக்கா நீங்க வேற அதை அடிக்கடி ஞாபகபடுத்துறீங்க? ஆம்,  கருத்து பகிர்வின்மூலம் எவ்வளவு அறிந்து கொள்கிறோம் இல்ல ?, எல்லோருக்கும் நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னைய காலங்களில் பெற்றவர்கள் சொன்னால் பிள்ளைகள் மறுபேச்சுப் பேசாமல் ஏற்றுக்கொள்வார்கள் ஆனால் இப்பொழுது அப்படியல்ல பிள்ளைகள் சொல்வதை பெற்றவர்கள் கேட்டு அனுசரித்துப் போக வேண்டும். நீங்கள் சொல்வது சரி சுமே. சுவி சென்னதுபோல் பெற்றவர்கள் அதிக  பொறுமை காக்க வேண்டியும் பல தடவைகளில்  தம் பிடிவாதங்களை விட்டு பணிந்து போகவேண்டியும் வரலாம்.இதை விடுத்து நாம் நம் வழியில் போனால்  நாம் பிள்ளைகளை இழக்க வேண்டிவரலாம். கருத்தெழுதிய  சுவி சுமே வளவன் மற்றும்அனைவருக்கும் நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கன கதைகள் இருப்பதால் ஆறுதலாகவே வாசித்து கருத்து எழுதலாம் என்று நினைக்கிறன்   சிறப்பான ஆக்கம்  அக்கா

அண்மையில் நடந்த சம்பவம் ஒன்று ( யார் மனதையும் புண்படுத்த அல்ல) கனடா நாட்டிலிருந்து  வந்த ஓர் தூரத்து உறவு மகளுக்கு மாப்பிள்ளை பார்ப்பதற்கும் வந்தார் எனது பெரியம்மா மகன் அண்ணாவுக்கு பேசலாம் என பெரியவர்கள் முடிவெடுத்தார்கள் ஆனால் அவர்களோ எங்களுக்கு கிறிஸ்தவம் என்றால் தான் பொருந்தும் இதுவரைக்கும் பல வன்செயல்களில் அவா குடும்பம் எல்லோரும் பாதிக்கப்பட்டு ஊர் வந்து இருந்தவர்கள் இப்பவும் மற்றவர்கள் இந்துக்கள் தான்  ஆனால் கனடா போன பிறகு இவா மாறி இருக்கிறார் போல் கிறிஸ்த்வத்திற்கு  அந்த சம்பந்தம் தடைபட்டு போனது மதத்தால் நாம் மதம் பற்றி பேசாவிட்டாலும் மாறியவர்கள் மதம் பிடித்தவர்களாக இருக்கிறார்கள் அதன் பின்பு எவருக்கும் நான் மதத்தை விட்டு கொடுக்க தயார் இல்லை விட்டுக்கொடுக்காதவர்களுக்கு எனக்கு மத வெறியும் அல்ல எனது அண்ணா தற்போது ஓர் சிங்கள் பெண்ணை திருமணம் முடித்து சந்தோசமாக உள்ளார் . நம்ம இனம் திருந்த சான்சே இல்ல :104_point_left:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் இன்றைய நாட்களில் நடைபெறும் திருமணங்களில் அதிகானவை இந்து கிறிஸ்தவ திருமணங்களாகவே நடைபெறகின்றன. காரணம் காதல் திருமணம் என்பதால் பிள்ளைகளின் விருப்பப்படிதான் பெற்றவர்கள் நடத்துகின்றனர். ஒரு சிலர்தான் விதி விலக்காக இன்னும் பழமை வாதிகளாக இரக்கின்றனர். மதம் என்பது அன்புதான் என்பது இன்றும் பலருக்கு புரிவதில்லை. எனது பிள்ளைகளில் மூவர் திருமணமாகிவிட்டனர் மூவரும் கத்தோலிக்கர் அல்ல. புரிந்துணர்வுடன் செயல்பட்டால் வhழ்க்கையில் பிரச்சினையில்லை. கருத்துக்கு நன்றிகள் தனி. (காட்டு ராஜா என்று எழுத பயமாயிருக்கு)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kavallur Kanmani said:

கனடாவில் இன்றைய நாட்களில் நடைபெறும் திருமணங்களில் அதிகானவை இந்து கிறிஸ்தவ திருமணங்களாகவே நடைபெறகின்றன. காரணம் காதல் திருமணம் என்பதால் பிள்ளைகளின் விருப்பப்படிதான் பெற்றவர்கள் நடத்துகின்றனர். ஒரு சிலர்தான் விதி விலக்காக இன்னும் பழமை வாதிகளாக இரக்கின்றனர். மதம் என்பது அன்புதான் என்பது இன்றும் பலருக்கு புரிவதில்லை. எனது பிள்ளைகளில் மூவர் திருமணமாகிவிட்டனர் மூவரும் கத்தோலிக்கர் அல்ல. புரிந்துணர்வுடன் செயல்பட்டால் வhழ்க்கையில் பிரச்சினையில்லை. கருத்துக்கு நன்றிகள் தனி. (காட்டு ராஜா என்று எழுத பயமாயிருக்கு)

எல்லோரையும் நான் சொல்ல வரவில்லை சிலருக்கு மட்டும் மதம் பிடித்து விடுகிறது  ஹாஹாஹா எழுதுங்கள் என்ன செய்திட முடியும் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.