Jump to content

பாரசீக வளைகுடாவின் பாதுகாப்புக் கட்டமைப்பு


Recommended Posts

பாரசீக வளைகுடாவின் பாதுகாப்புக் கட்டமைப்பு
 
 

 

பாரசீக வளைகுடாவின் பாதுகாப்பு நிலையானது, நிலையற்றது. அதன் உள்ளார்ந்த அரசியல் கட்டுமானங்கள், பாதுகாப்பு நிலைமைகள், பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் குறித்த பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலைமைகள், மேற்கத்தேய நாடுகளின் தலையீடு, ஐ.அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போட்டி நிலைமை என்பவற்றின் அடிப்படையில், மேலும் சிக்கலான ஒன்றாகவே காணப்படுகின்றது. பிராந்திய நிலைமைகளைத் தாண்டி உலக வல்லரசுகளின் வல்லரசாண்மையைப் பரீட்சிக்கும்  ஒரு தளமாக, குறித்த வளைகுடா அமைவது, அதன் பிராந்திய பாதுகாப்பு நிலைமையைச் சமநிலையில் வைத்திருக்க விடுவதில்லை.

பாரசீக வளைகுடாக் பிராந்தியத்தின் அரசியல், பாதுகாப்பு நிலைமைகள் என்பன தேசிய அரசாங்கங்கள், சமூகங்கள், தனிநபர்களுக்கிடையில் நட்பு - பகைமை ஆகியவற்றின் அடிப்படையிலான, சிக்கலான ஒரு விடயப்பொருளாகும். ஆழமான வரலாறு, தற்போதைய பொருளாதார, சமூக, கலாசார, சமய, தனிப்பட்ட விடயங்களிலிருந்து நட்பு - பகைமை என்பன, குறித்த பிராந்தியத்தின் பாதுகாப்புக் கொள்கைகளின் அமுலாக்கத்தில் செல்வாக்குச் செலுத்துகின்றமை அவதானிக்கத்தக்கது. உதாரணமாக, ஏனைய அரபு நாடுகளுடனும் ஈரானுடனுமான தொடர்புகள், இத்தகைய சிக்கலான தன்மையை வெளிப்படுத்துகின்றன. குறித்த இந்நிலையானது, வெறுமனே அதிகார விநியோகத்தின் அடிப்படையில் எளிதில் பகுப்பாய்வு செய்ய முடியாத ஒன்றாகும்.

ஈரானுடனும் ஏனைய அரபு நாடுகளுடனுமான உறவுகளின் அடிப்படையில் பழங்குடி அடையாளம், கருத்தியல் அணுகுமுறை, அரபு அல்லது அரேபியா என்ற பொது அடையாளத்தையும் தாண்டி  ஷியா, சுன்னி முஸ்லிம்களுக்கு இடையிலான நேர்மறை அல்லது எதிர்மறைத் தொடர்புகள் என்பவையும், குறித்த பாதுகாப்பு நிரல்களின் கொள்கை வகுப்பில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளாகும். உண்மையில் பாரசீக வளைகுடா, மற்றைய பிராந்திய அரசாங்கங்கள் போலவே, பரஸ்பர உறவுகளையும் பாதுகாப்பு நிலைமைகளையும் கொண்டிருந்தாலும், ஈரானில் ஈராக், சவூதி அரேபியா மும்முனைப் பாதுகாப்புப் போட்டி, குறித்த பிராந்தியத்தின் ஒருமித்த பாதுகாப்புக்கு எதிர்மறையாக உள்ளது. அத்தகைய சிக்கலான நிலையில் குவைத், கட்டார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் போன்ற சிறிய நாடுகள், குறித்த பாதுகாப்பு நிலைமைகள், கட்டமைப்புத் தொடர்பில்  மிகவும் குறைவான செல்வாக்கையே கொண்டுள்ளன.

அவற்றின் பாதுகாப்பு, கிட்டத்தட்ட ஈரான், ஈராக், சவூதியின் பாதுகாப்பு நிலைமைகள் சார்ந்தே அமையவேண்டியவையாக உள்ளமையும், அம்மும்முனைப் போட்டிக் களங்களில் ஏற்படும் மாற்றங்களும் பாதுகாப்பு நிலைமைகளும் அச்சூழ்நிலையில் குறித்த பிராந்தியம் முழுவதிலும் அரசியல் நகர்த்தல்களை ஏற்படுத்துகின்ற நிலைமையும் அச்சுறுத்தலானது.

குறித்த விடயங்கள் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளில், கடந்த தசாப்த காலத்தில் குறித்த பிராந்திய வல்லரசுகள் தவிர்ந்த ஏனையவை, தமது பாதுகாப்பு உட்கட்டமைப்பை விருத்தி செய்யாமை, குறித்த சமநிலையற்ற தன்மைக்கு ஒரு காரணம் என கூறப்படும் போதிலும், குறித்த பிராந்தியத்தில் ஏதாவதொரு பிராந்திய வல்லரசு (ஈரான், ஈராக், சவூதி அரேபியா) தவிர்ந்த நாடுகள் பாதுகாப்பு உட்கட்டமைப்பை விருத்தி செய்ய நேர்ந்திருந்தால், அது பிராந்திய பாதுகாப்புச் சமநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கும் என்பதுடன், அதனை எந்தப் பிராந்திய வல்லரசும் ஏற்றிருக்காது. இந்நிலையிலேயே பாதுகாப்புச் சமநிலையைப் பேணுவதற்கு குறித்த ஏனைய நாடுகளுக்கு, மேற்குலகின் உதவி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தேவைப்பட்டது எனலாம். இப்பத்தி, இரண்டு விதமான பாதுகாப்பு, போரியல்  நிலைமைகளுக்கு ஏதுவான காரணிகளை முன்வைக்கின்றது.  

முதலாவதாக ஈராக்கையும் ஈரானையும் பொறுத்தவரை, ஈராக் பிரதமர் ஹைடர் அல்-அபாடி, ஈரானிய மேலாதிக்கத்துக்கு எதிராக அரசியல் ரீதியாகப் போராடிவருகின்றார். இக்கொள்கையின் முகமாகவே, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவுக்கு எதிரான ஈராக்கின் போராட்டத்தின் பரிணாம வளர்ச்சி பார்க்கப்படவேண்டியது. ஈராக் முழுவதும் 2014ஆம் ஆண்டின் கோடைகாலத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் அழிக்கப்பட்டபோது, ஈரான் மீட்புக்கு விரைந்து வந்தது; ஆயுத, தந்திரோபாய ஆதரவை வழங்கியது. பின்னர் ஈராக் படைகள் ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு எதிராக முன்னேறி வந்தபோது, ஈரானுடைய  எதிர்ப்பைச் சம்பாதித்த வேளையிலும் பிரதமர் அபாடி, ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவை அழித்தல் தொடர்பிலான ஐ.அமெரிக்கா தலைமையிலான ஈராக் இணைந்த பாதுகாப்பு ஒப்பந்தத்துக்கு அழைப்பு விடுத்தார். இதன் பொருட்டாக ஈரானின் வெளியுறவுக்கொள்கை காரணமாகவே, ஈராக் மத்திய அரசாங்கத்துக்கும் குர்திஷ்களுக்கும் இடையிலான பதற்றம் உருவாகியது என, சர்வதேச ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

மறுபுறத்தில், அதிகரித்து வரும் சவூதிக்கும் ஈரானுக்கும் இடையிலான முறுகல் நிலையானது, பிராந்திய பாதுகாப்புக்கு நன்மை பயப்பனவன்று. அத்தகைய நிலையில் வளைகுடா நாடுகளுக்கு இடையிலான போர் நடவடிக்கை, முற்றுமுழுதான பிராந்தியத்தையே போர்ச்சூழ்நிலைக்குள் தள்ளிவிடும்.  எனவே, குறுகிய காலத்தில் யுத்தத்தைத் தடுக்கக்கூடிய ஒரு வகையான பாதுகாப்புக் கட்டமைப்பை  எவ்வாறு வடிவமைக்க முடியும் என்பதும், பிராந்தியத்தில் நீண்ட காலத்துக்குப் பிராந்திய ஒருங்கிணைப்புகளை எவ்வாறு ஏற்படுத்த முடியும் என்பதுமே, குறித்த பிராந்தியத்தின் பாதுகாப்புப் பிரச்சினை ஆகும்.

உண்மையில், பிராந்தியத்தின் நாடுகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகளும் பிராந்தியத்தின் பாதுகாப்பு பாரசீக வளைகுடா நாடுகள் தவிர்ந்த ஏனைய நாடுகளின் தலையீடு இல்லாமல் நிறைவேற்றுவதற்குச் சாத்தியக்கூறுகள் இல்லை எனலாம். இதன் ஒரு பகுதியாகவே, ஆசியான் பாரசீக வளைகுடாவின் அமைதி தொடர்பில் கடந்தவருடம் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றியமை, ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்புக் கட்டமைப்பில் பாரசீக வளைகுடாவின் பாதுகாப்பு தொடர்பில் செயற்படுவதற்கு, சிறப்பு நிபுணர் நியமிக்கப்பட்டமை அவதானிக்கப்பட வேண்டியதாகும்.

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பாரசீக-வளைகுடாவின்-பாதுகாப்புக்-கட்டமைப்பு/91-211455

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • சினிமா காலத்தை வைத்து பார்த்தால் கருணாநிதியே ஆட்சி கதிரையில் அமர்ந்திருக்க முடுடியாது.நீங்கள் விரும்பினால்  படங்களுடன் பூரண விளக்கம் தரப்படும்  ஓகேயா? முதலில் கனிமொழியுடம் தொடங்கவா? ஆதாரம் கேட்டால் படங்கள் போட்டோக்கள் எக்ஸ்சற்றாக்கள் இணைக்கலாம். 😂
    • ஆழ்ந்த இரங்கல்கள். மேலே  ஏராளன் இணைத்த தினக்குரல் பத்திரிகையில் 1933 ஓகஸ்ட்இல் பிறந்த எதிர்வீரசிங்கம் வயது 89 என்று எழுதியிருக்கிறார்கள். 90 என்றுதானே வரவேண்டும்?. அவர் மத்திய கல்லூரியில் படிக்கும் போது இலங்கை சாதனையை முறியடிக்கும் போது ,  கொழும்பில் வெளிவந்த ஆங்கில பத்திரிகை ஒன்றில் இவரது பெயரை எதிர்வீரசிங்க என்று எழுதியிருந்தது. அப்பொழுது மத்திய கல்லூரியின் அதிபர் சிமித் அவர்கள் ‘எதிர்வீரசிங்க அல்ல நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்’  என்று எழுதிய கடிதம் அதே பத்திரிகையில் பிறகு வந்தது.  ஆசிய விளையாட்டுப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றபின்பு யாழ் புகையிரத நிலையத்தில் இருந்து மத்திய கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டு ,எதிர்வீரசிங்க அவர்களுக்கு சிறந்த வரவேற்பு பாடசாலையில்வழங்கப்பட்டது.  -  மத்திய கல்லூரியின் பழைய மாணவரான எனது தகப்பனார் சொன்ன தகவல் இவரும் , இவரது சகோதரர்களும் படிக்கிற காலத்தில் மத்திய கல்லூரியில்துடுப்பாட்டத்தில் ஆரம்ப வேகப்பந்தாளராக விளங்கினார்கள் (Opening blower). 
    • அட்லீஸ்ட் விஜயலக்சுமிக்கு செய்தது போல் அநியாயம் செய்யாமல் தன்னை நம்பி வந்த பெண்ணை கண்ணியத்தோடு நடத்தினார் என நினைக்கிறேன்🤣. பதில் விளக்கம் போதும் என நினைக்கிறேன்🤣 ஐயகோ….இரு மாநில ஆளுனர்….ஆட்டுகுட்டி கதையை கேட்டு…
    • இல்லை அண்ணாவின் ஆட்சிகாலம் போல இருக்கும்.   
    • அவ‌ங்க‌ள் இட‌த்தில் நேர்மை ஊழ‌ல் இல்லாம‌ இருந்தால் ஏன் த‌மிழ‌ர்க‌ள் திராவிட‌த்தை வெறுக்க‌ போகின‌ம் 2ஜீ ஊழ‌லால் ஒரு இன‌ம் அழிவ‌தை வேடிக்கை பார்த்த‌வ‌ர்க‌ள் பெரியார் ஜாதியை ஒழித்தார் அது தான் குறிப்பிட்ட‌  ஜாதி ம‌க்க‌ள் வ‌சிக்கும் இட‌த்தில் ம‌னித‌க் க‌ழிவை த‌ண்ணீருக்கை க‌ல‌ந்த‌வை....................... சோடா க‌டையில் வேலை பார்த்து விட்டு ம‌ஞ்ச‌ல் வாக்கில் 4புத்த‌க‌த்தோட‌ வ‌ந்த‌வ‌ரின் குடும்ப‌த்துக்கு இத்த‌னை ல‌ச்ச‌ம் கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து ச‌த்திய‌மாய் கோடி காசுக்கு எத்த‌னை 0 என்று என‌க்கு தெரியாது ஆனால் நீட் தேர்வை ர‌த்து செய்ய‌ எங்க‌ளிட‌ம் ர‌க‌சிய‌ம் இருக்கு என்று சொல்லி ப‌ல‌ பிள்ளைக‌ள் நீட்டால் இற‌ந்து போனார்க‌ள் அத‌ற்க்கு பிற‌க்கு உத‌ய‌நிதியின் பெயர் கொல்லிநிதி கொல்லுநிதியின் ம‌க‌ன் இன்ப‌நிதிக்கு தெரியும் கோடி காசுக்கு எத்த‌னை 0 என்று....................திமுக்காவுக்கு ஓட்டு போட்ட‌ ம‌க்க‌ள் ம‌ழை வெள்ள‌த்தால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ போது வீட்டுக்குள் இருந்து க‌டும் வேத‌னை ப‌ட்ட‌வை 4000ஆயிர‌ம் கோடி ஒதுக்கி ப‌ணி செய்தார்க‌ளா அல்ல‌து அதையும் ஊழ‌ல் செய்து மூடி ம‌றைத்தார்க‌ளா...........................ஆண்ட‌வா இனி வ‌ள‌ந்து வ‌ரும் பிள்ளைக‌ளுக்கு ந‌ல்ல‌ அறிவைக் கொடு அப்ப‌ தான் கால‌ம் க‌ட‌ந்து த‌மிழ் நாட்டில் ந‌ல் ஆட்சி ம‌ல‌ரும் நாடும் செல்ல‌ செழிப்பாய் இருக்கும் ம‌க்க‌ளும் குறைக‌ள் இல்லாம‌ எல்லா வ‌ச‌தியோடும் வாழுவின‌ம்...............................................  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.