Jump to content

இணையத்தை கலக்கும் அடுத்த மலையாள பெண்! இவரின் ரியாக்‌ஷனுக்கு பசங்க கிளீன் போல்டு தான்...


Recommended Posts

இணையத்தை கலக்கும் அடுத்த மலையாள பெண்! இவரின் ரியாக்‌ஷனுக்கு பசங்க கிளீன் போல்டு தான்...

கடந்த வருடம் ஜிமிக்கி கம்மல் என்ற மலையாள பாடல் உலகம் முழுவதும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. வெளிபாடிண்டே விசேஷம் படத்தில் வெளியான இந்த பாடலுக்கு ஷெரின் என்ற பெண் நடனமாடியிருந்தார். இதில் அவரது நடனத்திற்கு பல ரசிகர்கள் அடிமை.

இதனை தொடர்ந்து மலையாளத்தில் வெளியாகவிருக்கும் “Oru Adaar Love” என்ற படத்தில் மாணிக்க மலராய பூவி.. என்ற பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அதில் நடித்திருக்கும் பிரியா தான்.

இதில் அவர் கொடுக்கும் ரியாக்‌ஷனால் பசங்க கிளின் போல்ட் ஆகிவிடுகின்றனர். அவர் தான் அடுத்த "மலையாள குயின்" என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

Link to comment
Share on other sites

கண்ணழகி பிரியா பிரகாஷ் யார்? சமூக ஊடகங்களில் வைரலானது எப்படி?

யார் இந்த பிரியா பிரகாஷ்?

'பிரேமம்' சாய் பல்லவி, 'ஜிமிக்கி கம்மல்' ஷெரில் வரிசையில் மீண்டும் இந்தியளவில் டிரெண்டிங்கை பிடித்துள்ளார் பிரியா பிரகாஷ் வாரியர்.

ஒமர் லூலு இயக்கத்தில் அடுத்த மாதம் (மார்ச்) 3 ஆம் தேதி வெளியாகவிருக்கும் திரைப்படம் 'ஒரு அடார் லவ்'. படத்திற்கு ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

யார் இந்த பிரியா பிரகாஷ்?

கடந்த வாரம் 9 ஆம் தேதி, யு டியூப் தளத்தில் 'மாணிக்க மலராய பூவி' என்ற பாடல் பதிவேற்றப்பட்டது. சில நிமிடங்களிலே மிகவும் வைரலான இப்பாடல் தற்போது வரை சுமார் ஐந்து லட்சம் பேர் கண்டுகளித்துள்ளனர்.

பாடல் பிரபலமானதற்கு மற்றொரு முக்கிய காரணம் படத்தின் நாயகி பிரியா பிரகாஷ் வாரியர்.

யார் இந்த பிரியா பிரகாஷ்? சமூக ஊடகங்களில் வைரலானது எப்படி?

பாடல் நடுவே அவர் புருவத்தால் செய்யும் மாயாஜால ரொமான்ஸால் பாட்டிற்கு எக்கச்செக்க லைக்ஸ் குவிந்து வருகிறது.

தென்னிந்தியா முதல் வட இந்தியா வரை சமூக ஊடகங்களில் பிரியா குறித்த மீம்கள் குவிந்து வருகின்றன. பிரியா பிரகாஷ் வைரலான பிறகு அவரது இன்ஸ்டாகிராம் கணக்கின் பின் தொடர்பாளர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது.

யார் இந்த பிரியா பிரகாஷ்?

கேரளாவை சேர்ந்த பிரியா பிரகாஷ் வாரியர் தற்போது பி.காம் முதலாமாண்டு படித்து வருகிறார். அவர் கதாநாயகியாக அறிமுகமாகும் படம்தான் ’ஒரு அடார் லவ்’ திரைப்படம்.

யார் இந்த பிரியா பிரகாஷ்?படத்தின் காப்புரிமைINSTAGRAM யார் இந்த பிரியா பிரகாஷ்?படத்தின் காப்புரிமைINSTAGRAM யார் இந்த பிரியா பிரகாஷ்?படத்தின் காப்புரிமைINSTAGRAM

 

http://www.bbc.com/tamil/india-43029776

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் உள்ள அடிப்படை பிரச்சனைகளை இப்படியான செய்திகள் அமுங்கபன்னுகின்றது .

மற்றபடி குரங்கையும் நவீன மேக்கப் மூலம் அழகிய நங்கையாக காட்டமுடியும் என்பதை தமிழ்நாட்டு ரசிகனுக்கு புரிவதில்லை உதாரணாமாக குடுகுடு கிழவன் ரஜனிகாந்த் இன்னும் கீரோ வேசத்தில் நடிப்பது .

மற்றபடி குரங்கையும் நவீன மேக்கப் மூலம் அழகிய நங்கையாக காட்டமுடியும் என்பதை தமிழ்நாட்டு ரசிகனுக்கு புரிவதில்லை உதாரணாமாக குடுகுடு கிழவன் ரஜனிகாந்த் இன்னும் கீரோ வேசத்தில் நடிப்பது .

DV4n92HV4AAf4rM.jpg

Link to comment
Share on other sites

இணையத்தில் வாழ்த்து மழை: சமூகவலைத்தளத்தில் ப்ரியா பிரகாஷ் வாரியருக்கு குவியும் ரசிகர்கள்

 

 
priyaprakash1jpg

ப்ரியா பிரகாஷ் வாரியர்

'மானிக்க மலராயா பூவி' பாடலின் வரவேற்பால், ப்ரியா பிரகாஷ் வாரியரை சமூகவலைத்தளத்தில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்திருக்கிறது.

மலையாளத்தில் 'ஒரு அதார் லவ்’ படத்திலிருந்து 'மானிக்க மலராயா பூவி' என்ற பாடல் இணையத்தில் வெளியிடப்பட்டது. பிப்ரவரி 9-ம் தேதி வெளியிடப்பட்ட இப்பாடல் இதுவரை சுமார் 85 லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டுகளித்திருக்கிறார்கள்.

இதில் சில காட்சிகளே வந்தாலும் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் ப்ரியா பிரகாஷ் வாரியர். கேரளா திருச்சூரைச் சேர்ந்த இவர் 12-ம் வகுப்பு படித்துக் கொண்டே மாடலிங்கும் செய்து வருகிறார். நேற்று இணையத்தில் இவருடைய முகபாவனைகள் அடங்கிய ட்வீட்கள் மற்றும் மீம்ஸ்கள் என ஆட்கொண்டன.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் தனது ட்விட்டர் பக்கத்தில் "Theeeee Cutesttt Video I have seen in recent times . The power of simplicity . Love it ! #ManikyaMalarayaPoovi #OruAdaarLove ." என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் சில இயக்குநர்களும் இவருக்கு இருக்கக்கூடிய இந்த எதிர்பார்ப்பை முன்வைத்து தங்களுடைய படங்களில் நடிக்க வைக்க அணுகியிருக்கிறார்கள். ஆனால், இவருடைய குடும்பத்தினர் அதுகுறித்து 12-ம் வகுப்பு பரீட்சை முடிந்தவுடன் தான் முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்திருக்கிறார்கள்.

ஒரே நாளில் இவருடைய ட்விட்டர் பக்கத்தில் (@priyapvarrier) பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை சுமார் ஐம்பதாயிரத்தை கடந்திருக்கிறது. மேலும், இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 1.8 மில்லியனைத் தாண்டியிருக்கிறது. 'ஜிமிக்கி கம்மல்' ஷெரில் போன்று ப்ரியா பிரகாஷ் வாரியருக்கும், ரசிகர்கள் பக்கத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்.

ப்ரியா பிரகாஷ் வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ஒரு ஆதார் லவ்' படத்தின் டீஸர், காதலர் தினத்தன்று வெளியாகவுள்ளது. சமூகவலைத்தளத்தில் எழுந்துள்ள எதிர்பார்ப்பால், படத்தின் டப்பிங் உரிமையைக் கைப்பற்றுவதற்கும் கடும் போட்டி நடைபெற்று வருகிறது.

http://tamil.thehindu.com/cinema/south-cinema/article22738971.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதே கிண்டு தான் ரசுனிக்கு பத்தாயிரம் வேட்டு விழ பத்து லட்சம் என்று புளுகினது .

Link to comment
Share on other sites

’வேலண்டைன்’ யார்?: ரகசியம் சொல்லும் 'வைரல்' பிரியா வாரியர்

யார் இந்த பிரியா?படத்தின் காப்புரிமைINSTAGRAM

கேரளாவைச் சேர்ந்த பிரியா பிரகாஷ் வாரியர் கதாநாயகியாக அறிமுகமாகும் 'ஒரு அடார் லவ்' திரைப்படத்தின் காணொளி காட்சிகள் பரவலான வரவேற்பையும், அனைவரின் ஏகோபித்த ஆதரவையும் பெற்றது.

கண்ணால் கவிதை பேசும் பிரியா இதற்காக எத்தனைக் காலம் பயிற்சி எடுத்துக்கொண்டார்?

இதற்கான பதிலை பிரியாவிடம் கேட்டோம். பிபிசியிடம் பேசிய பிரியா, ''படத்தின் இயக்குனர் படபிடிப்பின்போது அந்த இடத்தில் என்ன சொன்னாரோ அதைத்தான் செய்தேன். க்யூட்டாக எதாவது செய் என்று சொன்னார். நான் செய்தேன்'' என்கிறார்

எத்தனை டேக்குகள் ஆனது?

சரி, காட்சி சரியாக வருவதற்காக எத்தனை டேக்குகள் எடுத்துக் கொண்டார்? என்ற கேள்விக்கு, ''நான் ஒருமுறை முயற்சி செய்தேன், அதுவே நன்றாக இருக்கிறது என்று இயக்குநர் சொல்லிவிட்டார். ஆனால் அந்த காட்சி இவ்வளவு பிரபலமாகும் என்று நான் நினைக்கவேயில்லை.'' என்று பதல் தருகிறார்.

''இந்த காட்சியை அனைவரும் பாராட்டுகிறார்கள் என்றால் அது அனைத்தும் இயக்குநருக்கு உரித்தானது. அவர் என்ன சொன்னாரோ அதைத்தான் செய்தேன். அவர் இது சரியில்லை என்று சொல்லியிருந்தால், வேறு முயற்சி செய்திருப்பேன். எது சரி, எது நன்றாக இருக்கும் என்று முடிவு செய்வது இயக்குநர்தானே? அவரே அனைத்து புகழுக்கும் உரியவர்.''

''நான் எந்தவித பயிற்சியும் எடுத்துக் கொள்ளவில்லை. என்ன நடந்ததோ, அது ஆன் த ஸ்பாட் நடந்தது, அது நன்றாகவே வந்திருக்கிறது. அந்த காட்சி எடுத்தபிறகு, சிறப்பாக வந்திருப்பதாக அனைவரும் சொன்னார்கள். மகிழ்ச்சியாக இருந்தது.''என்கிறார் பிரியா.

வீடியோவை நையாண்டி செய்ததில் பிரியாவுக்கு மகிழ்ச்சியா?

பிரியா தோன்றும் காணொளிக் காட்சி சமூக ஊடகங்களில் பல்வேறு விதமாக நையாண்டி செய்யப்படுகிறது. அதையெல்லாம் பிரியா பார்த்தாரா என்று கேட்டோம். ''நிறைய ட்ரோல் ஆகியிருப்பதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. பிரபலங்கள் பலருடன் சேர்த்து ட்ரோல் செய்திருப்பது சந்தோஷத்தை தருகிறது'' என்று குதூகலிக்கிறார் பிரியா.

கேரள மாநிலம் திருச்சூரில் வசிக்கும் பிரியாவின் தந்தை மத்திய சுங்கவரித் துறையில் பணிபுரிகிறார், தாய் குடும்பத்தை பராமரிக்கிறார். தாத்தா, பாட்டி, தம்பி என மகிழ்ச்சியான குடும்பத்தை சேர்ந்தவர் பிரியா.

யார் இந்த பிரியா?படத்தின் காப்புரிமைINSTAGRAM

தற்போது திருச்சூர் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வரும் பிரியாவின் முதல் திரைப்படம் இது. இதற்கு முன்பு மூன்று குறும்படங்களில் பிரியா நடித்துள்ளார். நடிப்பதில் மிகவும் ஆர்வம் இருப்பதாகவும் சொல்கிறார் பிரியா.

பாலிவுட்டில் யாரைப் பிடிக்கும்?

''ஒரு அடார் லவ் திரைப்படம் எனக்கு மிகச் சிறந்த வாய்ப்பை வழங்கியிருக்கிறது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன் என்றே நினைக்கிறேன். திரைப்படம் வெளிவருவதற்கு முன்னரே சமூக ஊடகங்களில் தற்போது வெளியான காணொளி காட்சிகள் மிகப் பெரிய உற்சாகத்தை கொடுத்துவிட்டன'' என்று சொல்கிறார் பிரியா.

''அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடிக்க விரும்புகிறேன். பாலிவுட் படங்களிலும் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.'' என்று கூறும் பிரியா ஹிந்தி திரைப்படங்களில் நடித்தால், கதாநாயகனாக யாரைப்போடலாம்? இதற்கும் உற்சாகத்துடன் பதில் சொல்கிறார் பிரியா, ''ரண்வீர் சிங், ஷாரூகான், சித்தார்த் மல்ஹோத்ரா.'' என்று.

யார் இந்த பிரியா?படத்தின் காப்புரிமைINSTAGRAM

18 வயது பிரியா, பாரம்பரிய நடனம் மற்றும் இசையை கற்றுக் கொண்டிருக்கிறார்.

படிப்பதிலும் ஆர்வமாக இருக்கும் அவர் நடிப்பையும், படிப்பையும் இரு கண்களாக கருதுகிறார். கண்களால் அபிநயத்தையும், நவரசத்தையும் காட்டும் பிரியா எந்தவிதமான நடிப்பு பயிற்சியையும் எடுத்துக் கொள்ளவில்லை என்பது ஆச்சரியமாகவே இருக்கிறது.

எப்படிப்பட்ட வாழ்க்கைத்துணை தேவை?

தனக்கு ஹிந்தி பேசும் பகுதிகளில் இருந்து கிடைத்திருக்கும் வரவேற்பு ஆச்சரியமாக இருக்கிறது என்று சொல்லும் பிரியா, ''பாலிவுட்டில் நடித்தாலும் இதே அன்பும், வரவேற்பும் கிடைக்கும் என்று நினைக்கிறார்''.

மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளைத் தவிர ஹிந்தியையும் நன்றாக பேசுகிறார் பிரியா.

யார் இந்த பிரியா?படத்தின் காப்புரிமையார்

''என் அப்பா மும்பையில் வேலை பார்த்தார். எனவே நாங்கள் ஐந்து ஆண்டுகள் மும்பையில் வசித்திருக்கிறோம். அப்போது ஹிந்தி கற்றுக்கொண்டேன்'' என்கிறார் பிரியா.

நல்ல இளைஞனுக்கான பிரியாவின் வரையறை என்ன? முத்தான மூன்று வார்த்தைகளில் வரையறுக்கிறார் பிரியா ''அன்பானவன், அக்கறையானவன், ஆதரவானவன்''.

வேலண்டைன் யார்?

வேலண்டைன் யார் என்றால் ரோஷன் என, திரைப்படத்தில் தன்னுடன் நடித்த ரோஷன் அப்துல் ரஹூஃப்பை பற்றி சொல்கிறார். அவரும் இந்த காணொளிக் காட்சியில் இடம் பெற்றிருக்கிறார். ஆனால் தனக்கு நிதர்சனத்தில் காதலர் யாரும் இல்லை என்று சொல்கிறார் பிரியா.

சரி, காணொளி காட்சியில் பிரியா கண்ணால் பேசிய ரோஷன் அப்துல் ரஹூஃப் உடன் பேசினோம்.

யார் இந்த பிரியா?படத்தின் காப்புரிமைINSTAGRAM

உற்சாகத்தின் உச்சியில் ரஹூஃப்

காணொளி காட்சி வைரலானதால் உற்சாகத்துடன் இருக்கும் ரஹூஃப், தனது இண்ஸ்ட்ராகிராமில் இவ்வாறு எழுதியிருக்கிறார், ''எங்கள் மீது நீங்கள் காட்டும் அன்புக்கு நன்றி, மிக்க நன்றி.''

''எனது மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்துவது என்றே தெரியவில்லை. உங்கள் உள்ளத்துக்கு அருகில் எங்களை கொண்டு சென்றதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. 'ஒரு ஆடார் லவ்' என்ற தலைப்பே திரைப்படத்தில் இருக்கும் காதல் உணர்வை வெளிப்படுத்துகிறது. எனவே எங்கள் மீது அன்பை தொடர்ந்து வெளிப்படுத்துங்கள்''.

 

ரோஷனைப் பற்றி சமூக ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகின்றன. அவரது இண்ஸ்ட்ராகிராமில் இருக்கும் புகைப்படங்களை வைத்து விதவிதமாக கதைகள் புனையப்படுகின்றன.

'இப்படி நடக்கும் என்று நினைத்ததேயில்லை'

ரோஷனிடம் நேரடியாக பேசியது பிபிசி. அவர் நடிப்பு பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறாரா என்று கேட்டோம். இல்லை என்று பதிலளித்த அவர், ''நான் நடிப்பு பயிற்சிகளை எடுத்துக் கொண்டதில்லை. ரியாலிடி ஷோவில் பங்கேற்றிருக்கிறேன். அது இந்த திரைப்படத்தில் நடிப்பதற்க்கு உதவியாக இருந்தது.''

இனி அவரது அடுத்தக் கட்ட நடவடிக்கை என்ன, பாலிவுட்டில் நடிப்பீர்களா என்று கேட்டோம், ''வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கும் என்று எனக்கு எதுவும் தெரியாது. நான் எதுவும் முடிவு செய்யவில்லை'' என்கிறார் ரோஷன்.

யார் இந்த பிரியா?படத்தின் காப்புரிமைINSTAGRAM

நிதர்சனத்தில் காதல் அனுபவம் உண்டா என்ற கேள்விக்கு இல்லை என்று மறுக்கிறார் ரோஷன். திரைப்படத்தில் உங்கள் காதல் அனுபவத்தை பற்றி சொல்லுங்கள் என்று கேட்டோம். ''11-12ஆம் வகுப்பு மாணவனுடைய காதல் கதை இது'' என்று தெரிவித்தார் ரோஷன்.

ஒரு சகோதரர், இரண்டு சகோதரர்கள் என அன்பான குடும்பத்தில் வாழும் ரோஷனின் தந்தை உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

குடும்பத்தினரின் மகிழ்ச்சி

இது குறித்து குடும்பத்தார் எவ்வாறு உணர்கிறார்கள் என்ற கேள்விக்கு ''குடும்பத்தில் அனைவரும் மகிழ்ந்தார்கள்'' என்று கூறும் ரோஷனின் குடும்பத்தில் யாரும் திரைப்படத் துறையைச் சார்ந்தவர்கள் இல்லை.

பாலிவுட் படங்கள் பார்ப்பதில் விருப்பம் உடைய ரோஷனின் விருப்ப கதாநாயகன் ஷாரூகான். சரி கதாநாயகிகளில் யாரைப் பிடிக்கும் என்ற கேள்விக்கு ரோஷனின் பதில், ''பிரியா''. என்று வருகிறது.

http://www.bbc.com/tamil/india-43054108

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாராவது தினமுரசில் அற்புதன் எழுதிய இந்த தொடரை வாசிக்காமல் விட்டிருந்தால் இந.த தொடரை நிச்சயமாக பார்க்க வேண்டும்.ஏனெனில் புலிகளுக்கு நேர் எதிரான அணியிலிருந்த ஒருவரால்த் தான் இது எழுதப்பட்டது. நான் இந்த பத்திரிகையை தொடர்ந்து வாங்கிய போது பலரும் மறைமுகமாக ஈபிடிபிக்கு ஆதரவளிப்பதாக கூறினார்கள். நிறைய பேருக்கு ஆரம்பகாலத்தில் போராட்டத்துக்கு வித்துப் போட்டவர்களையும் வித்துடலானவர்களையும் இன்னமும் தெரியாமல் இருக்கிறார்கள்.
    • தென்னாபிரிக்காவில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக சென்ற அந்த பேருந்து செல்லும் வழியில் மாமட்லகலா என்ற இடத்தில் வேகத்தக் கட்டுப்படுத்த முடியாமல் அங்குள்ள பாலத்தில் மோதி தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு இருந்து 165 அடி பள்ளத்தில் விழுந்தது. அங்குள்ள பாறையில் விழுந்த வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் பேருந்தில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிலிருந்தவர்களில் நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிப்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரது உடல்கள் பேருந்தின் அடிப்புறத்தில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தென்னாபிரிக்காவை உலுக்கியுள்ள இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297513
    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
    • ஓம். உணர்வு இல்லவே இல்லை என சொல்லவில்லை.  ஆனால் சதவீதம் வீழ்ந்துள்ளது என நினைக்கிறேன். மிக தெளிவான பார்வை. ஊருக்கு போகா விடிலும் உங்களுக்கு யதார்த்தம் அழகாக புரிகிறது. ஓம். ஆனால் இது அரசியலால் இல்லை. நன்றி உணர்வு. பாசம். நினைவுகூரல். சில மாவீரர் குடும்பங்களிடம் உரையாடிய அனுபவத்தில் சொல்கிறேன்.
    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன். நான் போன சமயம் சுத்தமாக இருந்தது. சிலவேளை முதல் நாள் துப்பரவு செய்தனரோ தெரியவில்லை🤣. கொழும்பில் இது முன்பே வழமை. யாழில் இந்த போக்கு புதிது. நாம் இருக்கும் போது சேவை என இருந்த்ஃ துறை இப்போ சேர்விஸ் என ஆகி வருகிறது. ஆனால் நாடெங்கும் இதுவே நிலை என எழுதியுள்ளேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.