Jump to content

தமிழ் கட்சிகளை ஒன்றிணையுமாறு சுமந்திரன் அழைப்பு


Recommended Posts

தமிழ் கட்சிகளை ஒன்றிணையுமாறு சுமந்திரன் அழைப்பு

 

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வடக்கு கிழக்கில் 40 சபைகளை இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

அத்துடன் யாழ் மாவட்டத்தில் 13 சபைகளை இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

உள்ளுராட்சி சபைத் தேர்தல் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற நிலையில் தேர்தல் பெறுபேறுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

தமிழ் கட்சிகளை ஒன்றிணையுமாறு  சுமந்திரன் அழைப்பு

இதற்கமைய இலங்கை தமிழரசுக் கட்சி 56 சபைகளில் போட்டியிட்டதாகவும் அதில் 40 சபைகளை கைப்பற்றியுள்ளதாகவும் யாழ்ப்பாணத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

 

அத்துடன் உள்ளுராட்சி சபை மூலம் தென்பகுதியில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் காரணமாக, சமஷ்டி அடிப்படையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தும் தமிழ் கட்சிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

https://news.ibctamil.com/ta/politics/Sumanthiran-calls-for-Tamil-parties-to-unite

Link to comment
Share on other sites

தமிழ் கட்சிகள் சேர்ந்து செயற்பட வேண்டியது கட்டாயம் : தேர்தலின் பின் சுமந்திரன்

தெற்கில் மஹிந்த வெற்றி பெற்றுள்ள நிலையில் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சி இடையில் தடைப்படக் கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

நடைபெற்று முடிந்த தேர்தலில் தமிழ் மக்கள் இடைக்கால அறிக்கையை நிராகரித்து வாக்களிக்கவில்லை.

தெற்கில் மஹிந்த வென்றுள்ள நிலையில் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சி இடையில் தடைப்படக் கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

ஆகவே தமிழ் மக்களுக்கு சமஷ்டிதான் தீர்வு என்ற நிலைப்பாட்டில் உள்ள தமிழ் கட்சிகள் கொள்கை ரீதியில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilwin.com/politics/01/173978?ref=home-feed

 

Link to comment
Share on other sites

தமிழ் கட்சிகள் சேர்ந்து செயற்பட வேண்டியது கட்டாயம் : தேர்தலின் பின் சுமந்திரன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலில் கட்டுப்பணத்தையே திரும்பப்பெற்றுக்கொள்ளமுடியாதவர்கள் என வர்ணிக்கபட்ட கட்சிகளை சுமந்திரன் ஏன் இப்போது அழைக்கிறார்

கனடாவில் ஒரு செய்தி நிறுவனத்துக்கு கொடுத்த பேட்டியில் சமஸ்டித்தீர்வு தோல்வியில் முடியுமாகவிருந்தாலும் அல்லது நிறைவேற்றப்பட்டாலும் நான் அரசியலிலிருந்து ஒதுங்கவே விரும்புகிறேன் எனக்கூறியபடி அரசியலிலிருந்து விலகவேண்டியதுதானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Elugnajiru said:

தேர்தலில் கட்டுப்பணத்தையே திரும்பப்பெற்றுக்கொள்ளமுடியாதவர்கள் என வர்ணிக்கபட்ட கட்சிகளை சுமந்திரன் ஏன் இப்போது அழைக்கிறார்

கனடாவில் ஒரு செய்தி நிறுவனத்துக்கு கொடுத்த பேட்டியில் சமஸ்டித்தீர்வு தோல்வியில் முடியுமாகவிருந்தாலும் அல்லது நிறைவேற்றப்பட்டாலும் நான் அரசியலிலிருந்து ஒதுங்கவே விரும்புகிறேன் எனக்கூறியபடி அரசியலிலிருந்து விலகவேண்டியதுதானே.

அவர் ஒதுங்க மாட்டார் அவருக்கு பின்னால் நிற்க்கும் தமிழின எதிர்பாளர்களுக்கு இவரை விட தோதான ஆள் கிடைக்க மாட்டார் பாருங்க .

Link to comment
Share on other sites

உண்மையில் பார்த்தால் தமிழ் மக்களுக்கு இந்த தேர்தல் ஒரு வெற்றிதான், கூத்தமைப்பு ஆட்டம் கண்டது அரசியல் தீர்வும் இன்றி பொருளாதார அபிவிருத்தியும் இன்றி தத்தளித்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேணும் என்ற நிர்ப்பந்த்தம்

மகிந்தவின் பலமானது மேற்குலக நாடுகளை தமக்கு சார்பான நிலைமையை உருவாக்க தமிழர் விடயத்தை கையில் எடுக்கலாம்.

அதே போல் அசைலம் அடிக்கிற ஆக்களுக்கும் இனி கொஞம் நல்ல காலம் பிறக்கும் ??

 

 

 

Link to comment
Share on other sites

யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்புக்குப் பின்னடைவு – ஒப்புக்கொள்கிறார் சுமந்திரன்

 

sumanthiranகடந்த நாடாளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஒப்புக் கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர்,

“ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 56 உள்ளூராட்சி சபைகளில் போட்டியிட்டது. இதுவரை வெளியான தகவல்களின்படி, 40 உள்ளூராட்சி சபைகளில் அதிகளவு ஆசனங்களைப் பெற்றுள்ளது. இது மிகப் பெரிய சாதனை.

பல நாடுகளின் தூதுவர்கள் எமக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய 7 மாவட்டங்களில், முன்னரை விட சற்று கூடுதலான வாக்குகளை நாம் பெற்றுள்ளோம்.

sumanthiran

கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக் கொண்ட வாக்குகளுடன் ஒப்பிடும் போது, உள்ளூராட்சித் தேர்தலில் கிடைத்த வாக்குகள் கணிசமாகக்  குறைந்துள்ளது. இது ஒரு பின்னடைவு.

யாழ்ப்பாணத்தில் உள்ள 17 சபைகளில், 13 சபைகளில் அதிகளவு ஆசனங்களை கைப்பற்றியுள்ளோம்.

யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள  பின்னடைவுக்கான காரணங்கள் குறித்து கூட்டமைப்பு விரைவில் ஆராயும், அதற்கான காரணங்களை கண்டறிந்து களைவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/02/12/news/29054

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, நவீனன் said:

யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள  பின்னடைவுக்கான காரணங்கள் குறித்து கூட்டமைப்பு விரைவில் ஆராயும், அதற்கான காரணங்களை கண்டறிந்து களைவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சனத்திற்கு விளங்கித்தான் உங்கன்ட கட்சியை ஒரு விழிப்புணர்வு நிலைக்கு கொண்டுவந்துள்ளது

Link to comment
Share on other sites

இராணுவ பாதுகாப்புடன்  சம்பந்தர்/ சுமந்திரன் வரும் போதே யோசித்தேன் மக்களின் ஆதரவு உள்ளவர்களுக்கு (நம்பிக்கை) இவ்வளவு பாதுகாப்பு எதற்கு என்று.

Link to comment
Share on other sites

On 2/11/2018 at 6:39 PM, நவீனன் said:

தமிழ் கட்சிகளை ஒன்றிணையுமாறு சுமந்திரன் அழைப்பு

இவ்வளவு கெதியா தான் பிச்சையெடுக்க வேண்டியிருக்கும் என்று சுமந்திரன் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்!

வேறு வழியில்லை!

On 2/11/2018 at 6:39 PM, நவீனன் said:

இதற்கமைய இலங்கை தமிழரசுக் கட்சி 56 சபைகளில் போட்டியிட்டதாகவும் அதில் 40 சபைகளை கைப்பற்றியுள்ளதாகவும் யாழ்ப்பாணத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

கைப்பற்றியவது உண்மையானால் எதற்கு மற்ற கட்சிகளிடம் யாசகம் செய்ய வேண்டும்.

சுமந்திரனின் இந்த பொய்யான கூற்றுக்களே, அல்லது உண்மைகளை விளங்க முடியாத அளவிற்கு அறிவற்ற மனிதராக இருப்பவர், அவர் அரசியல் தீர்வில் எப்படிப்பட்ட புரிதலை கொண்டிருப்பார் என்பதை தெளிவுபடுத்துகிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.