Jump to content

‘‘அ.தி.மு.க., தி.மு.க-வுக்கு இணையா ஆகணும்!’’


Recommended Posts

‘‘அ.தி.மு.க., தி.மு.க-வுக்கு இணையா ஆகணும்!’’

 
 

பூத் கமிட்டிகள் அமைக்கும் விஜய்

 

ரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்து நடிகர்கள் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திவரும் நிலையில், ‘‘தான் அரசியலுக்கு வருவதற்கான அடிப்படை வேலைகளை நடிகர் விஜய் சத்தமின்றி செய்துவருகிறார்’’ என்கிறார்கள், அவருக்கு நெருக்கமானவர்கள்.

சமீபத்தில் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகளை அழைத்து சென்னையில் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியுள்ளார். அதில் பங்கேற்ற நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். “உறுப்பினர்களைச் சேர்க்க, தனது இணையதள முகவரியை ஜனவரி 2-ம் தேதிதான் ரஜினி வெளியிட்டார். ஆனால், உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் சேர்ப்பதற்கான மொபைல் ஆப் உள்ளிட்ட பணிகளை
2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதமே விஜய் ஆரம்பித்துவிட்டார். அதன் மூலமாக, உறுப்பினர் மற்றும் ஆதரவாளர்கள் சேர்க்கை நடந்துவருகிறது. நிர்வாகிகள் அனைவரும் எங்களுடைய கருத்து களை விஜய்யிடம் சொன்னோம். ‘ரஜினி, கமல், விஷால் என எல்லோரும் ஸ்பீடா போய்க்கிட்டு இருக்காங்க. நீண்ட காலத்துக்கு நாம மௌனமாக இருக்க வேண்டாம்’ என்று ஒட்டுமொத்தக் குரலில் விஜய்யிடம் வேண்டுகோள் வைத்தோம். ‘நாம் தனித்து நின்று பலத்தைக் காட்டணும்’ என்று மதுரை மாவட்ட நிர்வாகிகள் கூறினர். மேற்கு மண்டல நிர்வாகிகள், ‘விஜயகாந்த் தனித்து நின்றபோது, அவர் மட்டும்தான் ஜெயித்தார். அ.தி.மு.க-வோட கூட்டணி சேர்ந்தபிறகு தான், அவர் கணிசமான எம்.எல்.ஏ-க்களைப் பெற்றார். அதனால், நாம் கூட்டணி சேருவதுதான் நல்லது’ என்றனர். தூத்துக்குடி மாவட்ட நிர்வாகி ஒருவர், ‘தி.மு.க-வோட கூட்டணி வெச்சா நிறைய எம்.எல்.ஏ-க்களை நாம பெறலாம்’ என்றார். ‘டி.டி.வி.தினகரனுடன் கூட்டுச் சேரலாம்’ என்று திண்டுக்கல், தேனி மற்றும் டெல்டா மாவட்டங்களின் நிர்வாகிகள் கூறினர். நாங்கள் சொன்னதையெல்லாம் கூர்ந்து கேட்டார் விஜய்’’ என்றனர்.

p24a_1518168904.jpg

இப்போது விஜய் மக்கள் இயக்கத்தினர் விறுவிறுப்பாக பூத் கமிட்டி அமைத்து வருகிறார்கள். ‘‘தமிழ்நாட்டில் தி.மு.க-வுக்கும், அ.தி.மு.க-வுக்கும் மட்டும்தான் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நிர்வாகிகளை உட்கார வைத்து, வாக்குப்பதிவைக் கண்காணிக்கும் அளவுக்கு வலுவான கட்டமைப்பு உள்ளது. அவர்களைப்போல வலுவாக ஆவதற்கு நமக்கு பூத் கமிட்டிகள் வேண்டும். தேர்தலில் வெற்றியை உறுதிசெய்வது பூத் கமிட்டிதான். எனவே, தமிழ்நாடு முழுக்கச் சுற்றுப்பயணம் போய் பூத் கமிட்டிகள் அமைக்கும் வேலைகளைச் செய்யுமாறு அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத் தலைவர் புஸ்ஸி ஆனந்துக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார். அதன்படி இப்போது பூத் கமிட்டிகளை நாங்கள் வலுவாக அமைத்து வருகிறோம். இதற்காக எல்லா மாவட்டங்களுக்கும் பூத் கமிட்டிக்கான படிவங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஒரு மாவட்டத்திலும் எவ்வளவு பூத்கள் உள்ளனவோ, அத்தனை பூத் கமிட்டிகள் அமைக்கிறோம். ஒரு பூத் கமிட்டிக்குத் தலைவர், செயலாளர், பொருளாளர், துணைத் தலைவர், துணைச் செயலாளர் என ஐந்து பேர் இருப்பார்கள். அவர்கள் பயோடேட்டா, புகைப்படம், போன் நம்பர், இ-மெயில் முகவரி என எல்லாவற்றையும் பதிவுசெய்து தலைமைக்கு அனுப்பி வருகிறோம்’’ என்றார், தென்மாவட்ட நிர்வாகி ஒருவர். 

p24b_1518168917.jpg

இன்னொரு நிர்வாகி, ‘‘ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் 50 ஆயிரம் உறுப்பினர்களைச் சேர்க்குமாறு தலைமை கூறியுள்ளது. அதில் இப்போது, பாதிக் கிணற்றைத் தாண்டிவிட்டோம். உறுப்பினர் களைச் சேர்க்கும் பணி தொடர்ந்து நடக்கிறது. 2016 தேர்தலிலேயே விஜய்யின் தந்தையுடன் ஒரு பெரிய கட்சி கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியது. இறுதி நேரத்தில், விஜய் அந்த முயற்சியைத் தடுத்துவிட்டார். இந்த முறை கூட்டணி அமைந்தால், எந்தெந்த தொகுதி களைக் கேட்கலாம் என்ற பட்டியல் தயாரித்துள்ளோம். தஞ்சை, சேலம், மதுரை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் எங்களுக்குச் செல்வாக்கானவை” என்றார்.
விஜய் மக்கள் இயக்கத்தின் தஞ்சை மாவட்டத் தலைவர் விஜய் சரவணனிடம் பேசினோம். “பூத் கமிட்டிகளை அமைக்குமாறு எங்களிடம் ஆறு மாதங்களுக்கு முன்பே இயக்கத் தலைமை சொன்னது. இது அரசியலுக்காகவா என்பதை இப்போது சொல்ல முடியாது. எங்களின் விருப்பமெல்லாம் விரைவில் அரசியல் களத்துக்கு விஜய் வரவேண்டும் என்பதுதான்” என்றார்.

p24c_1518168930.jpg

விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய தலைவர் புஸ்ஸி ஆனந்த், “பூத் கமிட்டி அமைப்பது ஒரு சாதாரண நிகழ்வுதான். அரசியலுக்கு வருவது பற்றி விஜய்தான் முடிவு செய்ய வேண்டும், அறிவிக்க வேண்டும். அவர் சொல்வதைச் செய்வதற்கு எங்கள் மக்கள் இயக்கம் தயாராக உள்ளது” என்றார்.

https://www.vikatan.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூனை இல்லையென்றால், எலிகளுக்கு கொண்டாட்டம் என்பார்கள்.

தொலைநோக்குள்ள, வலிமையான தலைமை இல்லாத நாட்டில் சருகுகளும் உயரத்தில் உட்கார நினைக்குதுகள்..! bouh.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ராசவன்னியன் said:

பூனை இல்லையென்றால், எலிகளுக்கு கொண்டாட்டம் என்பார்கள்.

தொலைநோக்குள்ள, வலிமையான தலைமை இல்லாத நாட்டில் சருகுகளும் உயரத்தில் உட்கார நினைக்குதுகள்..! bouh.gif

தமிழ்நாட்டில் தனித்து ஒருகட்சி ஆட்சியமைப்பது இனிமேல் கஸ்டம் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

தமிழ்நாட்டில் தனித்து ஒருகட்சி ஆட்சியமைப்பது இனிமேல் கஸ்டம் தான்.

எனகென்னமோ இந்த குக்கர் பார்ட்டி மக்கர் இல்லாம வந்திடும்போல தோணுது.!. 'காசுவளம்' கொழிக்கும் குறூப்..!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ராசவன்னியன் said:

எனகென்னமோ இந்த குக்கர் பார்ட்டி மக்கர் இல்லாம வந்திடும்போல தோணுது.!. 'காசுவளம்' கொழிக்கும் குறூப்..!!

மோடி கவனிக்க மாட்டாரா என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

மோடி கவனிக்க மாட்டாரா என்ன?

அவரும் விழுந்து விழுந்து தான் "கவனிக்கிறார்".. ஆனால் மக்கள் குக்கர் காசுக்கு பணிந்து, விடாப்பிடியாக ஆர்,கே நகரில் பா.ஜ விற்கு பாடம் புகட்டினார்கள்..

ஆகவே மக்களின் அப்போதைய மனநிலையை பொறுத்தே முடிவுகள், அதை கணிப்பது மிகக்கடினம். மக்கள் 'சொங்கி'களை அங்கீகரிப்பதில்லை, தலைவர் என்பதற்கு கொஞ்சமாவது ஆளுமை, வசீகரம் வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கிறார்கள்

முன்னர் தர்மயுத்த நாயகன் ஓ.பி.எஸ்ஸுக்கு பெயர் இருந்தது, அந்தாள் பதவிக்குபோய் அண்டியதும் இப்போ அவரை சீந்துவார் இல்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.