Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாச்சி மகள்

(குறுங்கதை)

 

girl_on_fire_by_marinshe-d7cq851.jpg

 

 

 

 

ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஒற்றைப்பார்வையால் என்னை அடக்கிக் கொண்டிருந்தாள் என் அம்மாச்சி மகள். சில தினங்களுக்குள் சடுதியாக எடுக்கப்பட்ட முடிவை ஏற்கும் திராணியற்ற நிலையில் நான். அம்மாச்சி மகளின் மீதான் நம்பிக்கை சரிந்த கடைசி  நிலையில் பொருமும் நெஞ்சும், முடக்கிய அழுகையும் , உறவுகள் முன்பு கலங்காத வீராப்புமாக பெரு நடிப்பில்…. நேரமும் துரிதமாக நகர்ந்தது. பார்த்த  எவருடனும் பேசப்பிடிக்கவில்லை. செயற்கை சிந்திய முறுவல், சூழலின் கலகலப்பில் மறைக்கப்பட்ட  யதார்த்தமாக எல்லாம் நகர்ந்து  கொண்டிருந்தன.. இன்னும் சில மணித்துளிகளில் இந்த அத்தியாயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிடும். புதிய பக்கம் எப்படி ஆரம்பிக்கும் என்ற எண்ணமே ஏற்பட மறுத்தது.

            அம்மா, அப்பாவின் காதல் திருமணம் எவ்வளவு பெரிய பிரளயத்தை உருவாக்கி களையப்படாத சோகமாக இன்றளவும்…..பாவம் அம்மா காதலை மறுத்த பெற்றோரை விட்டு அப்பாவை நம்பி வீட்டை விட்டு வெளியேறியபோது கனவில் கூட தனக்கு இப்படிப்பட்ட சாபம் வந்து சேரும் என்று நினைத்திருக்க மாட்டாள். அம்மா காதலுக்காக கதவைத் தாண்டியபோது. பாடையை விரித்துப் போட்டது பெற்ற வயிறு.

ஒரு புறம் அழுகை ஒப்பாரி, மறுபுறம்திருமண நாதஸ்வரம் காதலுக்குக் கிடைத்த பரிசு

ஏற்கமுடியாத பெற்றவள் பிணமானாள்.

முதல் அடி எடுத்து வைத்த திருமண வாழ்வு அன்னையின் பெருஞ்சாபம் சூழ… அடுத்தடுத்து ,

பெற்றவளின் கடைசிப்பயணத்தில் கூட ஒற்றைப்பிள்ளைக்கு முகங்காட்ட மறுத்து துரத்திய உறவுகளுக்கு முன்னால்…… இன்று பெருமிதத்தோடு அவள் தலை நிமிர்வாக நடந்தாள். அம்மா அப்பாவின் காதல் வாழ்வின் சாட்சியும் பொக்கிசமும் நான் மட்டுமே. உறவுகள் தள்ளி வைத்ததால் ஏற்பட்ட தனிமை, ஆதரவற்ற போராட்ட வாழ்வு இப்படியான வாழ்வில்  இன்று வரைக்கும் மற்றவர்களிடம் கையேந்தாத வைராக்கியத்தோடு பெற்றவள் சாபம் முறியடித்து வெற்றிக் கனி பறிக்கும் சமயத்தில் எல்லையற்ற மகிழ்ச்சியில் அவள்……

என் மனதில் பறந்த பட்டாம்பூச்சி திருமணமேடையில் ஓதும் மந்திரத்துடன் அக்கினிக்குள் சங்கமித்துக் கொண்டிருந்தது. அம்மா அப்பாவின் காதல் மணம் என்னையும் ஆதரிக்கும் என்ற பெருநம்பிக்கை வெற்றிடமாகியது.  அம்மாச்சி மகளை அதிகம் நேசித்துவிட்டேன். அக்கினி சாட்சியாக என் கழுத்தில் மாலை விழுந்தது. கலங்கிய விழிகளுடன் அம்மாவைப்பார்த்தேன். அம்மாச்சி மகள் பெற்றவள் சாபம் வென்ற பூரிப்பில் என் தலையில் அட்சதை தூவினாள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாச்சி மகளின் ஆதங்கம் தீர்ந்து விட்டது. அவள் ஏற்றிவைத்த சிலுவையை சுமக்கப்போகும் தன்  மகளின் ஏக்கத்தை தீர்த்து வைக்க யார் வருவார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனதினுள்ளே  வலி இருக்கும் அது தெரியாது அது போல் இருக்கிறது இந்த சிறு கதை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாச்சி ரொம்ப ரொம்ப குக்கிராமம் போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/10/2018 at 11:45 AM, கலைஞன் said:

உண்மை; கற்பனை; உண்மையும் கற்பனையும் கலந்த கதை??

மூன்று தலைமுறைக் கதையை இக்குட்டிக்கதைக்குள் பதுக்கி வைத்தேன்... உண்மை கற்பனை, கற்பனை உண்மை கற்பனையும் உண்மையும்..ஐயா கலைஞரே பதில் சொல்லத் தெரியவில்லை

confused-mom.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/10/2018 at 5:54 PM, Kavallur Kanmani said:

அம்மாச்சி மகளின் ஆதங்கம் தீர்ந்து விட்டது. அவள் ஏற்றிவைத்த சிலுவையை சுமக்கப்போகும் தன்  மகளின் ஏக்கத்தை தீர்த்து வைக்க யார் வருவார்?

அம்மா என்பவள் மகளுக்கு அம்மாச்சி மகளாகவே தெரிந்தாள் என்பதுதானே கதை... அதனால் சிலுவையை அவள் தைரியமாகச் சுமப்பாள் என்று கொள்வோம் தோழி

Link to comment
Share on other sites

ஏனோ தெரியவில்லை, எனக்கு கதை சரியாக புரியவில்லை. அம்மாச்சி மகள் என்றால் என்ன அர்த்தம்?

On 2/10/2018 at 9:11 AM, வல்வை சகாறா said:

அம்மாச்சி மகள்

(குறுங்கதை)

என் மனதில் பறந்த பட்டாம்பூச்சி திருமணமேடையில் ஓதும் மந்திரத்துடன் அக்கினிக்குள் சங்கமித்துக் கொண்டிருந்தது. அம்மா அப்பாவின் காதல் மணம் என்னையும் ஆதரிக்கும் என்ற பெருநம்பிக்கை வெற்றிடமாகியது.

....அப்படி என்னில் அம்மா மகளின் காதலை நிராகரித்து விட்டு மகளுக்கு சம்மதம் இல்லாத ஒருவரை மணமுடித்து விட்டாரா? அத்துடன் கதை நிகழும் களம் புலமா புலம்பெயர்ந்த இடமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மனதினுள்ளே  வலி இருக்கும் அது தெரியாது அது போல் இருக்கிறது இந்த சிறு கதை 

சில வரிகளுக்குள் ஒரு பெருங்கதை ஒளிந்திருக்கிறது தனிக்காட்டுராஜா சட்டென்று கண்டு பிடிப்பது கடினம்.

6 hours ago, ஈழப்பிரியன் said:

அம்மாச்சி ரொம்ப ரொம்ப குக்கிராமம் போல.

ஈழப்பிரியன் அண்ணா ஐம்பது வருடங்களுக்கு முந்திய தகவல் கதையாக..... இப்போது இப்படியெல்லாம் கிடையாது.

5 minutes ago, நிழலி said:

ஏனோ தெரியவில்லை, எனக்கு கதை சரியாக புரியவில்லை. அம்மாச்சி மகள் என்றால் என்ன அர்த்தம்?

அம்மாச்சி என்றால் அம்மம்மா அல்லது தாய்வழிப்பாட்டி என்று கொள்க.

அப்பாச்சி என்றால் அப்பம்மா அல்லது தந்தை வழிப்பாட்டி

இது சில ஊர்களில் மட்டுமே பாவிக்கப்படும் சொல் சரியாக புரியவேண்டும் என்றால் அம்மம்மா மகள் என்று வாசித்துப்பாருங்கள் கதை இலகுவாகப் புரியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'"உறவுகள் தள்ளி வைத்ததால் ஏற்பட்ட தனிமை, ஆதரவற்ற போராட்ட வாழ்வு இப்படியான வாழ்வில்  இன்று வரைக்கும் மற்றவர்களிடம் கையேந்தாத வைராக்கியத்தோடு.."

கருத்துக்களை வாசித்த பின் தான் கதை புரிந்தது . நன்றி 

Link to comment
Share on other sites

அம்மாச்சி மகள்- வெளிப்படுத்த முடியாத ஒரு கனதியான உணர்வு. 

இந்த கதை மிக சின்னதாக உள்ளதுபோல் தோன்றுகின்றது. சற்று நீண்டிருக்கலாம் ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை குறுங்கதை என்றாலும் அம்மாச்சி தனது மகளின் திருமணத்திற்கு காட்டிய எதிர்ப்புக்கான காரணத்தை கோடிட்டு காட்டியிருக்கலாம். அதே போல் அம்மாச்சி மகளின் மகளின் திருமணத்திற்கான எதிர்ப்புக்கான காரணத்தையும் காணவில்லை. காதல் திருமணங்களுக்கு தலைமுறை தலைமுறையாக எதிரானவர்கள் பெற்றோர் என்ற அடிநாதம் கதையில் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நிழலி said:

 

....அப்படி என்னில் அம்மா மகளின் காதலை நிராகரித்து விட்டு மகளுக்கு சம்மதம் இல்லாத ஒருவரை மணமுடித்து விட்டாரா? அத்துடன் கதை நிகழும் களம் புலமா புலம்பெயர்ந்த இடமா?

வெட்டுக்கிளி இது ஒரு காலாவதியான கதை. புலம் பெயர்ந்த வாழ்வில் இக்கதை சாத்தியமற்றது. அம்மாச்சியின் முரட்டுப்பிடிவாதத்தால் பெருஞ்சாபத்தை தனதாக்கியவள் அதை ஜெயிக்க நினைத்தாளேயன்றி அதையும் அம்மாச்சி வழியில் ஜெயித்ததுதான் அம்மாச்சி மகளின் சிறப்பு. அம்மாச்சியின் பேத்திதான் பாவம் மனதில் தோன்றிய பட்டாம்பூச்சியை அம்மாச்சி மகள் மீதான அதீத பாசத்தால்  திருமண அக்கினியில் இரையாக்கி விட்டாள் என்று எழுதியுள்ளேன்tw_cry:

10 hours ago, நிலாமதி said:

'"உறவுகள் தள்ளி வைத்ததால் ஏற்பட்ட தனிமை, ஆதரவற்ற போராட்ட வாழ்வு இப்படியான வாழ்வில்  இன்று வரைக்கும் மற்றவர்களிடம் கையேந்தாத வைராக்கியத்தோடு.."

கருத்துக்களை வாசித்த பின் தான் கதை புரிந்தது . நன்றி 

உண்மைதான் நிலாமதியக்கா இந்தக் கதையை சட்டெனப் புரிதல் கடினம். ஒற்றை வரிகளுக்குள் பெரும் பெரும் விடயங்கள் அடங்கிப் போனதால் ஓர் வாசிப்பில் கதையின் கருவை கண்டுகொள்ளமுடியாது. ஒரு வாசிப்பில் ஏற்படும் கதை பற்றிய கருத்து மறு வாசிப்பில் நிச்சயம் மாறுபடும். நன்றி நிலாமதியக்கா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/12/2018 at 11:56 PM, சண்டமாருதன் said:

அம்மாச்சி மகள்- வெளிப்படுத்த முடியாத ஒரு கனதியான உணர்வு. 

இந்த கதை மிக சின்னதாக உள்ளதுபோல் தோன்றுகின்றது. சற்று நீண்டிருக்கலாம் ...

உண்மைதான் சண்டமாருதன் கதையை நீட்டி எழுதி இருக்கலாம்  என்ன செய்ய இப்போதெல்லாம் எழுதுவதென்றால் பஞ்சி பிடித்து விட்டது.

On 2/13/2018 at 2:39 AM, கிருபன் said:

கதை குறுங்கதை என்றாலும் அம்மாச்சி தனது மகளின் திருமணத்திற்கு காட்டிய எதிர்ப்புக்கான காரணத்தை கோடிட்டு காட்டியிருக்கலாம். அதே போல் அம்மாச்சி மகளின் மகளின் திருமணத்திற்கான எதிர்ப்புக்கான காரணத்தையும் காணவில்லை. காதல் திருமணங்களுக்கு தலைமுறை தலைமுறையாக எதிரானவர்கள் பெற்றோர் என்ற அடிநாதம் கதையில் உள்ளது.

அந்தக்காலத்தில் காதல் என்றாலே ஏதோ கெட்ட வார்த்தை போல நினைத்த சனமும் உண்டு. சாதி மதம் என்பது ஒருபக்கம் இருக்க பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் காதலுக்கு முட்டுக்கட்டைகள் ஆகிவிடுவதுண்டு. இன்றைய காலத்தில் நம் பிள்ளைகள் காதலித்து தம் துணைகளைத் தேடிக்கொள்ளமாட்டார்களா என்று பெற்றோர் அங்கலாய்க்கிற நிலைக்கு மிக வேகமாக நகர்ந்து விட்டோம்  இருப்பினும் சில சாபக்கேடுகள் பெற்றோரோடு இணைந்து வருவதையும் தவிர்க்க முடிவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதாயினியின் கதையை....அது பதியப் பட்டே அன்றே...வாசித்துவிட்டேன் எனினும்...கருத்தை உடனேயே பகிர இயலவில்லை!

அருமையான எழுத்து நடையில்....இடைக்கிடை...கவிதை...தன்னையறியாமலே தன்னைப் புகுத்திக் கொள்வது...கதையின் ஓட்டத்தைத் தொய்ந்து விடாதவாறு கொண்டு செல்கின்றது! குறிப்பாகப் பின்வரும் வரிகளை வாசித்த போது...மனது நீண்ட நேரம் சஞ்சலப் படுவதைத் தவிர்க்க முடியவில்லை!

அம்மா காதலுக்காக கதவைத் தாண்டியபோது. பாடையை விரித்துப் போட்டது பெற்ற வயிறு.

இப்போதெல்லாம்.....வாழ்க்கை அனுபவங்கள் அதிகம் உள்ளதால்.....அம்மாச்சி மகளின் துணிவையும்...மனத் திடத்தையும் ...ஒரு சாதனையாக மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது!

காதல் என்பது தெய்வீகமானது என்று ஒரு காலத்தில் திடமாக நம்பியவன் நான்! எனினும்..இப்போதெல்லாம்...காதல் என்பதில் ஒரு தெய்வீகம் இருப்பதாக நினைக்க முடியவில்லை! வெறும் மனித உணர்வுகள்...தங்களுடன்...இசைந்து போகக் கூடிய..உணர்வுள்ள இன்னுமொரு மனிதத்துடன்...ஒத்துப் போவது தான் காதல் என நினைக்கிறேன்! கவர்ச்சி...கல்வி...பணம்...இரக்கம்...போன்ற பல காரணங்களினால்..இது ஏற்படலாம்!

எனது காதல்....எனது தாயைப் பலி வாங்கும் ..எனில்....நிச்சயமாக எனது காதலை...நான்  துறந்திருப்பேன் என்றே நினைக்கிறேன்!

ஏனோ...நடந்து போகும் வழியை விடவும்....அடையப் போகும் இலக்குத் தான் ...இபோதெல்லாம்...பெரிதாகத் தெரிகின்றது!

இதைத் தான்....கவுடில்யா..என்பவர் சொல்லியிருக்கிறார்! அதையே தான்....சிங்களமும்..இந்தியாவும்..முள்ளி வாய்க்காலில் செய்து முடித்தன!

இடையில்...நடந்த அர்ப்பணிப்புகள்...தியாகங்கள்...உயிர் இழப்புகள்....தர்ம சிந்தனை..அனைத்துமே மறக்கப்பட்டு விட்டன!

இறுதி முடிவு மட்டும்....தமிழர் போராட்டை...வேரோடு அழிப்பது...மட்டுமே...இலக்காக இருந்தது!

இது போலத் தான்....அம்மாச்சியின் மகளின் ... பிடிவாதமும்..எனக்குத் தெரிகின்றது!

எனது கருத்து...தவறானதாகவும் இருக்கக் கூடும்! எனினும்...காலம்...என்னைக் கரைத்து விட்டது போல உள்ளது!

கதைக்குப் பாராட்டுக்கள்...வல்வை!

Link to comment
Share on other sites

On 13/02/2018 at 6:22 AM, நிழலி said:

ஏனோ தெரியவில்லை, எனக்கு கதை சரியாக புரியவில்லை. அம்மாச்சி மகள் என்றால் என்ன அர்த்தம்?

....அப்படி என்னில் அம்மா மகளின் காதலை நிராகரித்து விட்டு மகளுக்கு சம்மதம் இல்லாத ஒருவரை மணமுடித்து விட்டாரா? அத்துடன் கதை நிகழும் களம் புலமா புலம்பெயர்ந்த இடமா?

ஐயோ ரொம்ப வெகிளி பிள்ளையாக இருக்கிறார் நிழலி...

ஒன்றும் புரியாமல் தான் நான் சைலன்டா எஸ் ஆயிட்டேன்...

தெரியவில்லை புரியவில்லை என்றால் நம்ம கெத்து என்னாவது... 

Link to comment
Share on other sites

15 hours ago, வல்வை சகாறா said:

. இன்றைய காலத்தில் நம் பிள்ளைகள் காதலித்து தம் துணைகளைத் தேடிக்கொள்ளமாட்டார்களா என்று பெற்றோர் அங்கலாய்க்கிற நிலைக்கு மிக வேகமாக நகர்ந்து விட்டோம்  இருப்பினும் சில சாபக்கேடுகள் பெற்றோரோடு இணைந்து வருவதையும் தவிர்க்க முடிவதில்லை.

என் நெருங்கிய உறவு அவர். கனடாவில் இருக்கினம்.  அவரது ஒரு மகன் முதலில் ஓரு சீன பெண்ணை காதலித்தார். அம்மாக்காரி "..ச்சீய் போயும் போயும் சப்பையை கட்ட போறியா என்றார். மகன் அதை கைவிட்டார்

பிறகு ஒரு இந்திய பெண்ணை காதலித்தார் ".. உனக்கு ஆள் கிடைக்காமல் வடக்கத்திய ஒன்றை கொண்டு வந்திருக்கிறாய்" என்று கடிந்து கொண்டார்...அவரையும் மகன் கைவிட்டார்

பிறகு யாழ்ப்பாண பெண்ணை காதலித்தார் ".. அவள் என்ன சாதி என்று உனக்கு தெரியுமா  எங்களை பார்த்தா தலை நிமிர பயப்படும் சாதியை சேர்ந்த  பெண்ணை  கட்டினா நான் நாளைக்கு எப்படி சபை சந்திக்கு போவது?  தூக்கு மாட்டி தான் சாவன்" என்றா.

சரி என்று எல்லாவற்றையும் கைவிட்டு தாயின் உறவுக்கார பெண்ணை கட்ட விரும்பினால் ......அந்த பெண்ணுக்கு செவ்வாய் தோஷமாம்.....

"இனி எனக்கு கலியாணமும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம்" என்று விட்டு இப்ப சும்மா இருக்கின்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“என் தந்தை எனக்கு பிற்போக்குவாதி. என் பிள்ளைக்கு நான் பிற்போக்குவாதி”

வல்வை  சகாறா அம்மாச்சி மகள்  அழகாக இருக்கிறாள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் உங்கள் படைப்புக்கு நன்றி  அக்கா,  அப்புறம் ‘’அம்மாச்சி மகள்’’ என்றால் என்ன அர்த்தம் இந்த கதையில்?

உண்மையாவே சொல்லுறேன்  பலமுறை படித்து பார்த்தும் தலை சுத்துது ...

ஒருவேளை இலக்கியவாதிகளின் எழுத்துக்களை  புரிந்துகொள்ள  பாமரர்களுக்கு சிரமமாய் இருக்கும் என்ற நிலையில் நானும் இருக்கலாம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/16/2018 at 4:36 AM, Kavi arunasalam said:

“என் தந்தை எனக்கு பிற்போக்குவாதி. என் பிள்ளைக்கு நான் பிற்போக்குவாதி”

வல்வை  சகாறா அம்மாச்சி மகள்  அழகாக இருக்கிறாள்.

நன்றி கவி அருணாசலம் கதையை பரிந்து கொண்டதை உங்களுடைய ஒற்றைவரி விளம்பி நிற்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, valavan said:

முதலில் உங்கள் படைப்புக்கு நன்றி  அக்கா,  அப்புறம் ‘’அம்மாச்சி மகள்’’ என்றால் என்ன அர்த்தம் இந்த கதையில்?

உண்மையாவே சொல்லுறேன்  பலமுறை படித்து பார்த்தும் தலை சுத்துது ...

ஒருவேளை இலக்கியவாதிகளின் எழுத்துக்களை  புரிந்துகொள்ள  பாமரர்களுக்கு சிரமமாய் இருக்கும் என்ற நிலையில் நானும் இருக்கலாம்!

இப்பகுதியில் வந்ததற்கும் வாசித்ததற்கும் நன்றி வளவன்

அம்மாச்சி மகள் ஒரு பிரதேச வழமைச் சொல் அதாவது அம்மாவின் தாயை அம்மாச்சி என்று அழைப்பதுண்டு. அந்த வகையில் அம்மாச்சி என்று கதை சொல்லியாக வெளிப்படும் கதாப்பாத்திரத்திற்கு அம்மாச்சி என்பது அம்மாவின் தாயார் அம்மம்மா. மிகுதி கதையில் வெளிப்படையான விளக்கம் இல்லை. கதை சொல்லியாக வரும் கதாப்பாத்திரம் என்ன சொல்ல வருகிறது என்பதை உன்னிப்பாக வாசித்தாலன்றி  புரிதல் கடினம். ஏனெனில் கதை சொல்லி பாசத்தோடு அம்மாவைப்பார்க்கும்போது அம்மா என்று விளித்தும் அதே அம்மாவை மனதிற்கு உவப்பில்லாத நிலையில் அம்மாச்சி மகள் என்றும் சொல்கிறது. அங்குதான் கதையின் பொருளே அடங்கி நிற்கிறது எங்கு அம்மாச்சி மகள் வெளிப்படுகிறாளோ அங்கேயே கருப்பொருள் உணரப்படவேண்டும். என்னுடைய எழுத்து அதனை உணர்த்தவில்லைப்போலும்.

 

அடப்பாவிகளா கவிதையை எழுதினேன் அதற்கு பொழிப்புரையும் எழுதினால்தான் விளங்கிக் கொள்வோம் என்பதையும் இந்தக்களத்தில் கடந்திருக்கிறேன். இப்போது சிறு கதை எழுதினேன் அதற்கும் விளக்கம் எல்லாம் எழுதும் நிலையா? இவங்க ரொம்ப கலாய்க்கிறாங்களோ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் இருக்கும் இடமே சில விசயங்களைத் தீர்மானிக்கின்றன.
மற்றவர்கள் இருக்குமிடத்தில் நாமிருந்தால் எல்லாம் எதிர்மறையாகவும்
நிறைவாகவும் நிகழும்.

அது சரி... இந்தச் சிறுகதையில் எத்தனை வில்லிகள் ..... tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாச்சி மகள் பூரிப்புடன் அம்மாச்சி பேத்திக்கு அறுகரிசி போடுகிறாள், அம்மாவுக்கு வாய்த்ததென்னவோ வாய்க்கரிசிதான்...., நிறைய யோசிக்க வைத்த கதை....சில விக்கிரமாதித்தன் கதைகள் மாதிரி....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/17/2018 at 6:37 PM, வல்வை சகாறா said:

அடப்பாவிகளா கவிதையை எழுதினேன் அதற்கு பொழிப்புரையும் எழுதினால்தான் விளங்கிக் கொள்வோம் என்பதையும் இந்தக்களத்தில் கடந்திருக்கிறேன். இப்போது சிறு கதை எழுதினேன் அதற்கும் விளக்கம் எல்லாம் எழுதும் நிலையா? இவங்க ரொம்ப கலாய்க்கிறாங்களோ?

 

அப்படியெல்லாம் இல்லை, பெற்றோர்கள் விருப்பு வெறுப்பை கடந்து பண்ணப்படும்  காதல் திருமணங்கள்  பற்றிதான் கருப்பொருளா எடுத்துகிட்டு இருக்கிறீர்கள் என்பது விளங்குது,

ஆனால்  இந்த கதையின் முடிவுதான் மண்டையைபோட்டு உடைக்குது 

என் மனதில் பறந்த பட்டாம்பூச்சி திருமணமேடையில் ஓதும் மந்திரத்துடன் அக்கினிக்குள் சங்கமித்துக் கொண்டிருந்தது. அம்மா அப்பாவின் காதல் மணம் என்னையும் ஆதரிக்கும் என்ற பெருநம்பிக்கை வெற்றிடமாகியது.  அம்மாச்சி மகளை அதிகம் நேசித்துவிட்டேன். அக்கினி சாட்சியாக என் கழுத்தில் மாலை விழுந்தது. கலங்கிய விழிகளுடன் அம்மாவைப்பார்த்தேன். அம்மாச்சி மகள் பெற்றவள் சாபம் வென்ற பூரிப்பில் என் தலையில் அட்சதை தூவினாள்....

கலாய்ப்பதற்கு ஒன்றுமில்லை, சீரியஸா பேசும்போது நீங்கள், சண்டமாருதன், கிருபன் போன்றவர்களின் எழுத்துக்களை புரிவது கடினமாயிருக்கும் என்பதை சொன்னேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/02/2018 at 2:17 PM, valavan said:

 சீரியஸா பேசும்போது நீங்கள், சண்டமாருதன், கிருபன் போன்றவர்களின் எழுத்துக்களை புரிவது கடினமாயிருக்கும் என்பதை சொன்னேன்.

எனக்குப் பிரசங்கித்தனமாக எழுத வராது. சிறுகதைகள் வாசிப்பதில் ஆர்வம் இருப்பதால் அதில் உள்ளமாதிரி  கருத்துக்கள் எழுதும்போது படிப்பவரின் ஊகத்திற்கு பாதியை விட்டுவிடுவேன். ?

இது சில தீவிரமான உரையாடல்களில் உதவியுள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.