Jump to content

தேர்தல் அமளியில் நாடு – மூன்று பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி மரணம் :


Recommended Posts

தேர்தல் அமளியில் நாடு – மூன்று பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி மரணம் :

ltte-death.jpg?resize=600%2C800
குளோபல் தமிழ் செய்தியாளர்

நாடு தேர்தல் அமளியில் காணப்படுகின்ற நிலையில் வன்னியில் விசுவமடுவில் முன்னாள் போராளி ஒருவர் மரணமடைந்துள்ளார். மூன்று பிள்ளைகளின் தந்தையான வீரப்பன் என்று அழைக்கப்படும் சந்திரச்செல்வனின் மரணம் அப் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்த இவர், போராட்டத்தின்போது தனது இரண்டு கால்களை இழந்ததுடன் தனது இரண்டு கைகளிலும் கடும் காயத்திற்கு உள்ளாகியிருந்தார். விசுவமடுவில் வசித்து வந்த இவர் இன்று 8ஆம் திகதி மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டுக்காக போராட்டத்தில் இணைந்த சந்திரச்செல்வன் தனது உடல் அங்கங்களை இழந்து மிகுந்த வறிய நிலையில் வாழ்ந்து வந்தார். விசுவமடுவின் குமாரசாமிபுரம், புன்னை நீராவியில் வசித்து வந்த இவர் இன்று மரணமடைந்திருப்பது அப் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

http://globaltamilnews.net/2018/65909/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்

..........சரி,இந்த பிள்ளைகளுக்கு எப்படி உதவ முடியும் என்று பார்க்க தொடங்குவம். எம்மில் மூவரோ அல்லது எம் புலம் பெயர் சமூகத்தில் இருக்கும் மூவரோ ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் ஒவ்வொரு மாதமும் அடுத்த 10 அல்லது 12 வருடங்க்களுக்காயினும் ஐயாயிரம் ரூபாயாவது அனுப்பி உதவ முடிந்தால் இறந்த இப் போராளிக்கு நாம் செய்யும் மிகப் பெரும் அஞ்சலியாக இருக்கும். அல்லது, குழந்தைகளின் தாயாருக்கு நிரந்தர வருமானம் ஒன்று இல்லை எனில் சுயதொழில் ஒன்றை உருவாக்கி கொடுக்க முடிந்தால் அதுவும் பெரும் உதவியாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்!

4 hours ago, நிழலி said:

ஆழ்ந்த இரங்கல்கள்

..........சரி,இந்த பிள்ளைகளுக்கு எப்படி உதவ முடியும் என்று பார்க்க தொடங்குவம். எம்மில் மூவரோ அல்லது எம் புலம் பெயர் சமூகத்தில் இருக்கும் மூவரோ ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் ஒவ்வொரு மாதமும் அடுத்த 10 அல்லது 12 வருடங்க்களுக்காயினும் ஐயாயிரம் ரூபாயாவது அனுப்பி உதவ முடிந்தால் இறந்த இப் போராளிக்கு நாம் செய்யும் மிகப் பெரும் அஞ்சலியாக இருக்கும். அல்லது, குழந்தைகளின் தாயாருக்கு நிரந்தர வருமானம் ஒன்று இல்லை எனில் சுயதொழில் ஒன்றை உருவாக்கி கொடுக்க முடிந்தால் அதுவும் பெரும் உதவியாக இருக்கும்.

வணக்கம், நிழலி...!

பத்து அல்லது பதினைந்து வருடங்கள் என்பது மனித வாழ்க்கையில்..மிகவும் நீண்ட காலம்!

எதிர்காலங்களில்..எமது வாழ்வு எந்தப் போக்கில் ..நகரமோ என்பது எமக்கே தெரியாது! 

எனவே....எம்மால் சாத்தியப்படக் கூடிய..அளவில்..ஒரு சுய தொழில் ஒன்றை...தாயார் செய்வதற்கு...எம்மாலான பங்களிப்புகளைச் செய்வதே சாத்தியமான ஒன்று போல இப்போதைக்கு உள்ளது!

யாழ் களம் ..முன்பும் இவ்வாறான ..பங்களிப்புக்களைச் செய்துள்ளது!

Link to comment
Share on other sites

36 minutes ago, புங்கையூரன் said:

ஆழ்ந்த இரங்கல்கள்!

வணக்கம், நிழலி...!

பத்து அல்லது பதினைந்து வருடங்கள் என்பது மனித வாழ்க்கையில்..மிகவும் நீண்ட காலம்!

எதிர்காலங்களில்..எமது வாழ்வு எந்தப் போக்கில் ..நகரமோ என்பது எமக்கே தெரியாது! 

எனவே....எம்மால் சாத்தியப்படக் கூடிய..அளவில்..ஒரு சுய தொழில் ஒன்றை...தாயார் செய்வதற்கு...எம்மாலான பங்களிப்புகளைச் செய்வதே சாத்தியமான ஒன்று போல இப்போதைக்கு உள்ளது!

யாழ் களம் ..முன்பும் இவ்வாறான ..பங்களிப்புக்களைச் செய்துள்ளது!

ஓம் புங்கை, நீங்கள் சொல்வது சரி.

இக் குடும்பத்துக்குரிய தேவை என்ன, எப்படியான உதவி வழங்கலாம் என்பதை எல்லாம் அறிய ஒரு மார்க்கமும் எம்மிடம் இப்ப இல்லை என்பதுதான் கவலையான விடயம். முன்னர் சாந்தி இப்படியான விடயங்களை முன்னெடுத்து எமக்கு விபரம் தருவதற்கு இருந்தார். இன்று எவரும் இல்லை. எவரையும் நம்பவும் முடியாமலும் இருக்குது. மக்கள் பிரச்சனைகளை  உணருகின்ற உருப்படியான ஒரு எம் பி அல்லது மாகாண சபை உறுப்பினர் இருந்தால் கூட  இந்த விடயத்தில் எவ்வளவோ செய்ய முடியும். ஆனால் எம்மிடம் அப்படி ஒருவரும் இல்லை.

Link to comment
Share on other sites

இந்த குடும்பத்தினருடனான தொடர்பு நான் எடுத்து தருகிறேன் .நீங்கள் எப்படியான  உதவி என்பதை பேசி முடிவெடுங்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்

உங்கள் பங்களிப்பில் என்னையும் சேர்ந்து கொள்ளுங்கள் நிழலி

Link to comment
Share on other sites

வீரவணக்கம்!

 

17 hours ago, நிழலி said:

இக் குடும்பத்துக்குரிய தேவை என்ன, எப்படியான உதவி வழங்கலாம் என்பதை எல்லாம் அறிய ஒரு மார்க்கமும் எம்மிடம் இப்ப இல்லை என்பதுதான் கவலையான விடயம். முன்னர் சாந்தி இப்படியான விடயங்களை முன்னெடுத்து எமக்கு விபரம் தருவதற்கு இருந்தார். இன்று எவரும் இல்லை. எவரையும் நம்பவும் முடியாமலும் இருக்குது. மக்கள் பிரச்சனைகளை  உணருகின்ற உருப்படியான ஒரு எம் பி அல்லது மாகாண சபை உறுப்பினர் இருந்தால் கூட  இந்த விடயத்தில் எவ்வளவோ செய்ய முடியும். ஆனால் எம்மிடம் அப்படி ஒருவரும் இல்லை.

இடையில் எவரையும் புகுத்தாமல் நீங்கள் நேரடியாக உதவி செய்யலாம்!

இவ்வாறு பலர் செய்து வருகின்றனர். ஒருவர் இருவர் அல்ல நூற்றுக் கணக்கானவர்கள் இவ்வாறு செய்து வருகின்றனர்! ஒரு சில வருடங்களாக இல்லை. 10-15 வருடங்களாக செய்து வருபவர்களையும் நானறிவேன்!

க.பொ.த. உயர் தரம்வரை ரூபா 5,000/- தேவைப்படாது. மாதம் ரூபா 3,000/- கொடுத்தாலே பேருதவியாக இருக்கும். அதிகப்படியான உதவியால் தாயாரின் உழைப்பு முயற்சியையும் முடக்கிவிடக் கூடாது. ஆரோக்கியமான குடும்பத்துக்கு அவர்களின் சொந்த உழைப்பும் அவசியம். விசுவமடு பகுதியில் விவசாயம் அல்லது விவசாய உதவியாள் வேலை தாராளமாக உள்ளது. தாயார் அங்கு உழைக்கலாம்.

Link to comment
Share on other sites

7 minutes ago, போல் said:

வீரவணக்கம்!

 

இடையில் எவரையும் புகுத்தாமல் நீங்கள் நேரடியாக உதவி செய்யலாம்!

இவ்வாறு பலர் செய்து வருகின்றனர். ஒருவர் இருவர் அல்ல நூற்றுக் கணக்கானவர்கள் இவ்வாறு செய்து வருகின்றனர்! ஒரு சில வருடங்களாக இல்லை. 10-15 வருடங்களாக செய்து வருபவர்களையும் நானறிவேன்!

க.பொ.த. உயர் தரம்வரை ரூபா 5,000/- தேவைப்படாது. மாதம் ரூபா 3,000/- கொடுத்தாலே பேருதவியாக இருக்கும். அதிகப்படியான உதவியால் தாயாரின் உழைப்பு முயற்சியையும் முடக்கிவிடக் கூடாது. ஆரோக்கியமான குடும்பத்துக்கு அவர்களின் சொந்த உழைப்பும் அவசியம். விசுவமடு பகுதியில் விவசாயம் அல்லது விவசாய உதவியாள் வேலை தாராளமாக உள்ளது. தாயார் அங்கு உழைக்கலாம்.

போல், நேரடியாகவோ அல்லது இன்னொரு தொடர்பின் மூலமாகவோ உதவி செய்வதற்கு முதல் இக் குடும்பத்தின் தொடர்பும் கிடைக்கப்பெறும் தகவல்கள் சரியா என அறியும் முறையும் அவசியம். இதற்கு அங்கு இருக்கும் நம்பிக்கையான  ஒருவரின் அல்லது ஒரு அமைப்பின் உதவி தேவை.

உங்களால் இந்த விடயத்தில் ஏதேனும் ஒரு வகையில் எமக்கு உதவ முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/8/2018 at 9:35 AM, நவீனன் said:

 

ltte-death.jpg?resize=600%2C800

அந்த போராளி முகத்தில், தான் இழந்துபோனவற்றை பற்றியும், பெற்றவர்களை பற்றியும் நினைச்சு மனசுக்குள் அழுகிறார் என்பது தெரிகிறது, அந்த கவலையே, அவரது உடல் வலியைவிட,மன வலியை அதிகமாக்கி அவர் வாழ்வை அஸ்தமனம் ஆக்கியிருக்கும்.

இதுபோன்ற துயரங்களில் பலரது உதவும் பங்களிப்பை ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்க வைத்ததற்கு பல காரணங்கள் உண்டு: 

அதில் ஒன்று , உதவி பெறுபவர்கள் மீண்டும் மீண்டும் உதவி பெறுவதற்காய் தமக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை துஷ்பிரயோகம் செய்து, உதவும் குணம் கொண்டவர்களுக்கு சந்தேகமும், விரக்தியும் கொண்ட மனப்பான்மையை உருவாக்கியது,

இரண்டு : இதுபோன்ற சந்தர்ப்பங்களில் கால நேரம், களைப்பு பாராது முன்னின்று  கஷ்டப்பட்டவர்களுக்கு உதவுவதை ஒருங்கிணத்தவர்களை கேலி செய்து, அவர்களை இதுபோன்ற சமுகத்திற்கு உதவபோய் அவபெயர் சுமக்கும் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்க செய்வது....

அதுபோன்ற காரணிகளே , நிழலி இங்கே சொன்னதுபோல  யாரை பிடித்து இவர்களுக்கு உதவி செய்யலாம் எங்கிற மிக பெரிய சோக நிலமை உருவாகிபோனதற்கான காரணம்!

இவர்கள் வேறெந்த வழியிலும் உதவி பெறவில்லையென்று உறுதிப்பட்டிருந்தால்,

அந்த மாவீரனின்  துணைவியார் எதாச்சும் சுய தொழில் ஆரம்பிக்கும் நிலை இருந்தால்,

என் சார்பில் இந்த உதவியை ஒருங்கிணைக்கும் கள உறவின் வங்கி கணக்கிற்கு,உங்களோடு சேர்ந்து

இலங்கை பணத்தில் என் பங்களிப்பாக ஐம்பதினாயிரம் ரூபாய் , என் சக்திக்குட்பட்ட பங்களிப்பாக அனுப்பி வைப்பேன்

என்பதை உறுதி படுத்துகிறேன்!

Link to comment
Share on other sites

5 minutes ago, நிழலி said:

போல், நேரடியாகவோ அல்லது இன்னொரு தொடர்பின் மூலமாகவோ உதவி செய்வதற்கு முதல் இக் குடும்பத்தின் தொடர்பும் கிடைக்கப்பெறும் தகவல்கள் சரியா என அறியும் முறையும் அவசியம். இதற்கு அங்கு இருக்கும் நம்பிக்கையான  ஒருவரின் அல்லது ஒரு அமைப்பின் உதவி தேவை.

உங்களால் இந்த விடயத்தில் ஏதேனும் ஒரு வகையில் எமக்கு உதவ முடியுமா?

நிச்சயம் முயற்சிக்கிறேன்! சில தினங்கள் தேவைப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8.2.2018 at 5:59 PM, நிழலி said:

ஆழ்ந்த இரங்கல்கள்

..........சரி,இந்த பிள்ளைகளுக்கு எப்படி உதவ முடியும் என்று பார்க்க தொடங்குவம். எம்மில் மூவரோ அல்லது எம் புலம் பெயர் சமூகத்தில் இருக்கும் மூவரோ ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் ஒவ்வொரு மாதமும் அடுத்த 10 அல்லது 12 வருடங்க்களுக்காயினும் ஐயாயிரம் ரூபாயாவது அனுப்பி உதவ முடிந்தால் இறந்த இப் போராளிக்கு நாம் செய்யும் மிகப் பெரும் அஞ்சலியாக இருக்கும். அல்லது, குழந்தைகளின் தாயாருக்கு நிரந்தர வருமானம் ஒன்று இல்லை எனில் சுயதொழில் ஒன்றை உருவாக்கி கொடுக்க முடிந்தால் அதுவும் பெரும் உதவியாக இருக்கும்.

மனதை வலிக்கும்.... வேதனையான செய்தி. 
அந்தப் போராளியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
நான் அவர்களின், குடும்பத்தினருக்கு...  இப்போது 100 ஐரோ கொடுக்க  ஆவலாக உள்ளேன்.
பின்வரும் காலங்களில்... அவர்களுக்கு  மேலதிக உதவி தேவைப் பட்டால்... 
யாழ். களத்தின்  மூலமாக, நிச்சயம்..  எனது உதவியும் இருக்கும்.

Link to comment
Share on other sites

கால்களை இழந்தவர்களுக்கு இலவச செயற்கைக்கால்!

 
போரினால் கால்களை இழந்தவர்களுக்கு இலவசமாக செயற்கைக் கால் பொருத்தும் நடவடிக்கைகளை பார்வையிடுவதற்காக இலங்கையிலுள்ள இந்திய தூதுவர் அசோக் காந்த் நேற்று வவூனியா நிவார ணக் கிராமங்களுக்கு விஜயம் செய்தார்.வவூனியா ஆனந்த குமாரசுவாமி நிவாரணக் கிராமத்திலுள்ள இந்திய மருத்துவ மனையில் ஜெய்ப்பூர் செயற்கைக்கால் பொருத்தும் நிபுணர்கள் குழுவினர் தங்கியூள்ளனர்.

சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவூம் இங்கு விஜயம் செய்திருந்தார்.

19 பேரைக் கொண்ட நிபுணர்கள் குழுவினர் செயற்கைக்கால் பொருத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.சுமார் 1000 பேருக்கு இலவசமாக கால்களை பொருத்துவதற்கு திட்ட மிட்டுள்ளன.நேற்று வரை 32பேருக்கு இலவசமாக கால்கள் பொருத்தப்பட்டுள்ளன என குழுவின் தலைவர் ஆனந்த சர்மா தெரிவித்தார்.அத்துடன் இதுவரை தங்களால் ஒரு மில்லியனுக்கும் அதிகமாநோருக்கு கால்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவூம் அவர்தெரிவித்தார்.

இலங்கை-இந்திய நட்புறவூ திட்டத்தின் கீழ் இந்த செயற்பாடு நடைபெறுகிறது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தர்.
 
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 
மேலுள்ள செய்தி உண்மையாயின் போரில் கால்களை இழந்த இந்தப் போராளிக்கு செயற்கைக் கால் ஏன் பொருத்தப்படவில்லை? யாருக்காவது தெரியுமா? 
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
On 2/9/2018 at 9:38 PM, நிழலி said:

போல், நேரடியாகவோ அல்லது இன்னொரு தொடர்பின் மூலமாகவோ உதவி செய்வதற்கு முதல் இக் குடும்பத்தின் தொடர்பும் கிடைக்கப்பெறும் தகவல்கள் சரியா என அறியும் முறையும் அவசியம். இதற்கு அங்கு இருக்கும் நம்பிக்கையான  ஒருவரின் அல்லது ஒரு அமைப்பின் உதவி தேவை.

உங்களால் இந்த விடயத்தில் ஏதேனும் ஒரு வகையில் எமக்கு உதவ முடியுமா?

On 2/9/2018 at 9:45 PM, போல் said:

நிச்சயம் முயற்சிக்கிறேன்! சில தினங்கள் தேவைப்படும்.

வீரப்பன் சந்திரச்செல்வன் குடும்பம் பற்றிய தேவையான அடிப்படைத் தகவல்கள் நேரடியாக பெறப்பட்டு நிழலிக்கு தனிமடலில் இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர் நேரம் கிடைக்கும்போது மேற்கொண்டு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பார் என நம்புகிறேன்! 

Link to comment
Share on other sites

சாதாரண காய்ச்சல் வந்தே இறந்தார்! முன்னாள் போராளி சந்திரச்செல்வனின் மனைவி!

 
சாதாரண காய்ச்சல் வந்த நிலையிலேயே முன்னாள் போராளி சந்திரச்செல்வன் இறந்ததாக அவரது மனைவி திரேஸ்ராணி சந்திரச்செல்வன் தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக முன்னாள் போராளிகள் திடீர் மரணங்களை தழுவும் நிலையில், சந்திரச்செல்வனும் திடீர் மரணத்தை தழுவியதாக அவரது மனைவி திரேஸ்ராணி குறிப்பிடுகின்றார்.
 
இம் மாதம் எட்டாம் திகதி வன்னியின் விசுவமடுவின் குமாரசாமிபுரம், புன்னை நீராவியில் வசித்து வந்த முன்னாள் போராளி சந்திரச்செல்வன் மரணமடைந்தார். வீரப்பன் என்று அழைக்கப்படும்  இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.  
 
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்த இவர், போராட்டத்தின்போது தனது இரண்டு கால்களை இழந்ததுடன் தனது இரண்டு கைகளிலும் கடும் காயத்திற்கு உள்ளாகியிருந்தார். நாட்டுக்காக போராட்டத்தில் இணைந்த சந்திரச்செல்வன் தனது உடல் அங்கங்களை இழந்து மிகுந்த வறிய நிலையில் வாழ்ந்து வந்தார்.
 
சந்திரச்செல்வன் அங்கவீனமுற்றபோதும் அவருக்கு எந்த விதமான தொற்று நோய்களோ, தொற்றா நோய்களோ காணப்படவில்லை என்று அவரது மனைவி திரேஸ்ராணி சந்திரச்செல்வன் குளோபல் தமிழ் செய்திகளுக்கு கூறுகிறார். திடீரென ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக அவரை வைத்தியசாலையில் தான் அனுமதித்தாகவும் அவர் கூறினார்.
 
சாதாரண காய்ச்சல் மாறிவிடும், விரைவில் வீடு திரும்பி விடுவார் என்று தான் நம்பியதாகவும் மரணிக்கும் தறுவாய் வரை நன்றாக சந்திரச்செல்வன் பேசிக்கொண்டிருந்ததாகவும் கூறிய திரேஸ்ராணி அவரது திடீர் மரணத்தை தான் எதிர்பார்க்கவில்லை என்றும் தன்னையும் பிள்ளைகளையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
 
கணவன் இழந்து வெகு சில நாட்கள் ஆகின்றபோதும் தன்னுடைய மூன்று பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகவும் சந்திரச்செல்வன் முன்னெடுத்த வந்த தோட்ட வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டு, தன் குழந்தைகளுக்கான வாழ்வை நம்பிக்கையுடன் திரேஸ்ராணி சந்திரச்செல்வன் தொடர்வதாக குறிப்பிடுகிறார் வன்னிப் பிராந்தியத்திற்கான எமது செய்தியாளர்.
 
 

குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்

http://globaltamilnews.net/2018/65909/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரான் இஸ்ரேலை நேரடியாகத் தாக்கியபோதும் , இஸ்ரேல் திரும்ப ஈரானைத் தாக்காமல்  இருப்பது  தங்களுக்கு அவமானமாக இருக்கிறது என்பது மட்டும் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.  😁  
    • அதேதான். இரண்டு கருத்திலும் சொற்கள் மாறியிருந்தாலும் ஒரே விடயம்தான்.  🙂 
    • ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார். https://thinakkural.lk/article/299459
    • இது ஒட்டு மொத்த‌ இந்திய‌ அள‌வில் தேர்த‌ல் ஆணைய‌த்தை கைக்குள் வைத்து பிஜேப்பி செய்யும் தேர்த‌ல் மோச‌டி இப்ப‌டி குள‌று ப‌டி செய்து தேர்த‌லில் வெல்வ‌தெல்லாம் ஒரு வெற்றியா......................இது ஜ‌ன‌நாய‌க‌ முறைப்ப‌டி ந‌ட‌க்கும் தேர்த‌ல் கிடையாது................இந்திய‌ அள‌வில் தாங்க‌ள் 400 இட‌ங்க‌ளின் வென்று ஆட்சி அமைப்போம் என்று சொன்னார்க‌ளே / ஆனால் இப்ப‌டி குள‌று ப‌டி செய்து அமைப்போம் என்று ஆர‌ம்ப‌த்தில் சொல்ல‌ வில்லை இப்ப‌ பிடிப‌ட்டான் மோடி என்ற க‌ள்ள‌ன்......................தேர்த‌ல் ஆணைய‌த்தையும் ஈவிம் மிசினையும் ந‌ம்பி தான் த‌மிழ் நாட்டு பிஜேப்பி அண்ணாம‌லை அதிக‌மாய் பொங்கி எழுகிறார்....................இதெல்லாம் ஒரு தேர்த‌ல்.............................த‌மிழ் நாட்டில் வ‌ள‌ந்து வ‌ரும் க‌ட்சிக‌ளை நினைக்க‌ ப‌ரிதாவ‌மாய் இருக்கு....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.