Jump to content

ஒரு நிமிடக் கதைகள்


Recommended Posts

ஒரு நிமிடக் கதைகள்

 

white_spacer.jpg

   
title_horline.jpg
 
white_spacer.jpg
 
p89a.jpg இந்த வயசுக்கு மேல...

“ஏகப்பட்ட செலவு செய்து கம்பெனியை கம்ப்யூட்டரைஸ் பண்ணியிருக்கு தெரியுமில்லே! இப்பப் போய் ‘கம்ப்யூட்டரை ஆபரேட் பண்ணத் தெரியாது, இந்த வேலையை நான் பண்ண மாட்டேன்’னா என்ன அர்த்தம்? தெரியலேன்னா கத்துக்குங்க!’’-ஜி.எம்மின் குரல், காதுக்குள் சுற்றிச் சுழன்றது.

‘சே! இந்த ஆள் ஒரு படுத்தல்! நாப்பது வயசுக்கு மேல கம்ப்யூட்டரைக் கத்துக்கோன்னு உயிரை வாங்கிக்கிட்டு..!’

“அப்பா! இங்கே பார்த்தீங்களா, சுடிதார்ல பூ டிஸைன் நல்லாருக்கா?”-மகளின் குரல் என் சிந்தனையைக் கலைத்தது.

“சூப்பரா இருக்கே! எந்தக் கடையிலம்மா இந்த எம்ப்ராய்டரி போட்டுக் கொடுத்தாங்க?” என்றேன்.

“பாட்டிதாம்ப்பா போட்டாங்க. தெரியாதா உங்களுக்கு, வீட்ல சும்மா இருக்கப் போரடிக்குதுன்னு பத்து நாளா எம்ப்ராய்டரி கிளாஸ் போயிட்டிருக்காங்களே?” என்றாள் மகள்.

என் 70 வயது அம்மாவைப் பார்த்தேன். அவரின் புன்னகை என் தவற்றை நாசூக்காகத் திருத்தியது!

யசோதா சுப்ரமணியன்

 

 

 

p89.jpg கருணை யாரிடம்?

அந்தப் பள்ளியில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கடைசி பீரியட் நீதிபோதனைதான்! அன்றைக்குச் சிறப்பு விருந்தினராக ஓர் உபன்யாசகர் வந்திருந்தார். அவர் பிள்ளைகளுக்கு மகாபாரதக் கதையை ஆரம்பம் முதல் துரியோதனன் வதம் வரை சுவாரஸ்யமாக விவரித்துவிட்டுப் பிறகு கேட்டார்... “இப்போது சொல்லுங்கள், ஆண்டவனின் கருணை யாருக்கு?”

முன் வரிசையில் அமர்ந்திருந்த மாணவர்கள் சட்டென்று சொன்னார்கள்... “கெட்டவர்களுக்குதான் ஐயா!”

உபன்யாசகர் திடுக்கிட்டார். “ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?”

“நீங்கள் இப்போது ஒரு மணி நேரம் சொன்ன கதையில், முதல் 55 நிமிடங்கள் துரியோதனன்தானே ஆட்சி பீடத்தில் அமர்ந்து சொகுசாக வாழ்ந்தான்? பாண்டவர்கள் பல துன்பங்களை அனுபவித்து, கடைசி ஐந்து நிமிடம்தானே சுகத்தை அனுபவித்தார்கள்?’’ என்று பதில் வந்தது.

 

எஸ்.ஆர்.ஜி.வைத்தியநாதன்

 

 

ஒருவன் ஒருத்தி

‘‘ஹலோ, டைரக்டர் சாரா? நான் அசிஸ்டென்ட் பாபு பேசறேன் சார்! ஒரு குட் நியூஸ்! நீங்க இயக்கின ‘ஒருவனுக்கு ஒருத்தி’ படத்துக்கு தேசிய விருது கிடைச்சிருக்கு!’’

‘‘வெரிகுட், நிஜமாவா!’’

‘‘ஆமா சார், இப்பத்தான் போன் வந்தது. ஈவினிங் டி.வி. நியூஸ்ல சொல்வாங்கன்னு நினைக்கிறேன்’’ என்ற பாபு, ‘‘சார், எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு! இந்த படத்தைப் பார்க்கிற எவனுமே கட்டின பொண்டாட்டிக்குத் துரோகம் பண்ண மாட்டான் சார்! அவ்ளோ அற்புதமான படத்துக்குத் தேசிய விருது கிடைச்சதுலே ஆச்சர்யமேஇல்லே! சார், பக்கத்துல மேடம் குரல் கேக்குதே! அவங்க இருந்தா கொடுங்க, சார்! இந்த சந்தோஷச் செய்தியை அவங்ககிட்ட நானே சொல்றேன்!’’ என்று பரவசக் குரலில் பரபரத்தான்.

‘‘அவங்க வேலையா இருக்காங்க. நானே அப்புறம் சொல்லிக்கறேன்!’’ என்ற சஞ்சய் அவசரமாக செல்லை அணைத்தான்.

காரணம்... அங்கே இருந்தது ஒருவன்-வேறொருத்தி!

- கே.காமராஜ்

 

 

 

 

 

காரணம்!

கலையரசி என்கிற 23 வயதுப் பெண், வயல்வெளிக் கிணற்றில் பிணமாக மிதந்தாள். ஊரே திரண்டிருந்தது வேடிக்கை பார்க்க.

p138c.jpg

“புருஷன் துபாய்ல இருக்கான். இவ இங்க அப்பிடி இப்பிடி இருந்திருப்பா போல. விஷயம் அவன் காதுக்குப் போயி டுச்சு. அதான், அவன் கிளம்பி வர்றதுக் குள்ள கிணத்துல குதிச்சுத் தற்கொலை பண்ணிக்கிட்டா” என்றான் ஒருவன்.

“சேச்சே! இவ அப்படிப்பட்டவ கிடையாது. என்ன... சொகுசா வாழணும்னு விரும் புறவ. டி.வி., ஃப்ரிஜ்னு ஏகப்பட்டது வாங்கி, தவணை கட்ட முடியாம தலைக்கு மேல போயிடுச்சு. நேத்துகூட ஒரு கடன்காரன் வந்து வண்டை வண்டையா கேட்டுட்டுப் போனானே, அந்த அவமானம்தான்... தற் கொலை பண்ணிக்கிட்டா!” என்றாள் ஒரு பெண்மணி.

இப்படியாக, அங்கே கூடியிருந்த அத்தனை பேரும் கலையரசியின் சாவுக்கு ஆளுக்கொரு காரணமாகச் சொல்லிக்கொண்டு போவதைக் கேட்டபடி ஒண்ணும் தெரியாத மாதிரி ஓர் ஓரமாக வாலைச் சுருட்டிக்கொண்டு படுத்திருந்தது, கலையரசியைத் துரத்திச் சென்று, அவளைத் தடுமாறிக் கிணற்றில் விழச் செய்த சொறி நாய்!

- நர்மதா

 

 

 

 

 

p142.jpg யாருக்கு யார் காவல்!

“ஹலோ! சுஜியா? நாளன்னிக்கு நம்ம சித்ராவோட வளைகாப்பு இருக்கே, வரியா?”

“ஸாரிம்மா! மணி தனியா இருப்பானேம்மா. அவனை விட்டுட்டு நான் எங்கே வர்றது, சொல்லு?”

“போன தடவையும் நீ இப்படித்தான் சாக்கு சொல்லி, நம்ம உமா சீமந்தத்துக்குக்கூட வரலே!”

“சாக்கு இல்லேம்மா! வேளாவேளைக்கு இவனுக்கு பெடிகிரி கொடுத்தாகணும். அதுமட்டுமில்லே, இவனைத் தனியா விட்டுட்டுப் போனா, சங்கிலியை அவுத்துக்கிட்டுக் காணாம போயிடுவான். இந்தப் பக்கம் நாய்த் திருடர்கள் வேற ஜாஸ்தி...”

“நல்லாருக்குடி கதை! ரிமோட் ஏரியாவுல வீடு வாங்கிட்டு, கூடவே காவலுக்குன்னு ஒரு ஜாதி நாயையும் விலை கொடுத்து வாங்கிட்டு... ஹூம், இப்ப யாருக்கு யார் காவல்னு எனக்குப் புரியலே!” - பெருமூச்சுடன் போனை வைத்தாள் சுஜி அம்மா.

- புள்ளமங்கலம் வில்சன்

 

https://www.vikatan.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதைகள் ஒவ்வொன்றும் கற்கண்டு.....!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.