Jump to content

ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு தி.மு.க சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி..!


Recommended Posts

ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு தி.மு.க சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி..!

 
 

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்குத் தி.மு.க சார்பில் ஒரு கோடி ரூபாய் அளிக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

stalin__N_06155_08416_19333.jpg

 

அமெரிக்காவிலுள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கென்று தனி இருக்கை அமைப்பதற்கு 40 கோடி ரூபாய் நிதி தேவைப்பட்டது. அதற்கு, உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் நிதி திரட்டி வந்தனர். தமிழக அரசு சார்பில், ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு 10 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. மேலும் ஒரு கோடி ரூபாய் தேவைப்பட்ட நிலையில், தி.மு.க சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்று தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், `தமிழ் மொழியின் மேம்பாட்டுக்கும் முதன்மைக்காகவும் போராடும் கருணாநிதி சார்பில் நிதியுதவி அளிக்கப்படுகிறது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு கிடைக்கப்போகும் இருக்கை என்பது ஒவ்வொரு தமிழருக்கும் கிடைக்கும் பெருமிதம். ஹார்வர்டில் விரைவில் தமிழ் இருக்கை அமைந்து தேன் அமுதத் தமிழோசை உலகமெல்லாம் பரவுதற்கு உலகத் தமிழர்கள் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். உயர் நீதிமன்றம், மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் அரியணை ஏறியே தீரும். ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு தி.மு.க சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படும்' என்று குறிப்பிட்டுள்ளார். 

https://www.vikatan.com/news/tamilnadu/115663-mkstalin-announces-dmk-will-give-one-crore-rupees-for-harvard-university-tamil-bench.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொள்ளையடித்த(?) பணமேயானாலும் 'அம்மா' மாதிரி பதுக்காமல், சிறு தொகையையேனும் தமிழுக்கு உதவி தேவைப்படும்போது கைகொடுப்பது சிறப்பே!

வாழ்த்துக்கள்..!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், `தமிழ் மொழியின் மேம்பாட்டுக்கும் முதன்மைக்காகவும் போராடும் கருணாநிதி சார்பில் நிதியுதவி அளிக்கப்படுகிறது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு கிடைக்கப்போகும் இருக்கை என்பது ஒவ்வொரு தமிழருக்கும் கிடைக்கும் பெருமிதம்.

பக்கத்து நாட்டிலை இதே தமிழ் சனம் லட்சகணக்கில் சிங்களவனால் இனவழிப்பு செய்யப்படும்போது தன் குடும்பத்து வாரிசுகளுக்கு பதவி வேண்டி சோனியாவின் காலடியில் கிடந்தது விட்டு இப்ப என்ன நாடே அழிந்துவிட்டுது இனி மொழி எப்படி வாழும் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, பெருமாள் said:

பக்கத்து நாட்டிலை இதே தமிழ் சனம் லட்சகணக்கில் சிங்களவனால் இனவழிப்பு செய்யப்படும்போது தன் குடும்பத்து வாரிசுகளுக்கு பதவி வேண்டி சோனியாவின் காலடியில் கிடந்தது விட்டு இப்ப என்ன இனமே  அழிந்துவிட்டுது இனி மொழி எப்படி வாழும் ?

 

Link to comment
Share on other sites

ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு தி.மு.க-வின் ரூ.1 கோடி - அமைச்சரின் பேச்சும் முரசொலியின் வீச்சும்! 

 
 

மெரிக்க ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக தி.மு.க. அறிவித்த ஒரு கோடி ரூபாய் வந்துசேரவில்லை என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியிருந்தார்.  அதற்கு தி.மு.க. தரப்பில் காட்டமாக விமர்சனம் செய்துள்ளனர். 

 

அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் இந்தியவியல் தொடர்பான துறைகள் இருந்தாலும், செம்மொழியான தமிழுக்கு உரிய இடம் இல்லாத நிலை நீடித்துவருகிறது. இதை மாற்றியமைக்கும் வகையில் அமெரிக்காவில் வசிக்கும் மருத்துவர்கள் திருஞானசம்பந்தம், ஜானகிராமன் ஆகியோரின் முன்முயற்சியில், ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைப்பதற்கான தனி குழு அமைக்கப்பட்டது. வெளிநாட்டில் மட்டுமின்றி தமிழகத்திலும் பலரும் தன்னார்வமாக நன்கொடை அளித்துவருகின்றனர். தமிழக அரசின் சார்பில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான நன்கொடையை வழங்கவேண்டும் என்றும் அரசியல் கட்சிகள் பலவும் வலியுறுத்தின. தமிழ் இருக்கையானது எப்படி அமையவேண்டும் என்பது குறித்தும் தமிழ் ஆய்வாளர்கள் கருத்துகளை முன்வைத்தனர். 

 

அமெரிக்கத் தமிழர்கள் தரப்பிலும் அமைச்சர் பாண்டியராஜன் மூலம் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடப்பட்டது. அதையடுத்துக் கடந்த அக்டோபர் 27-ம் தேதியன்று, தமிழக அரசின் சார்பில் ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு 10 கோடி ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.  மதுரை, திருப்பரங்குன்றம் பகுதி, ஆர்.வி.பட்டியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் இராமசாமி, தன் பணியிறுதிக் கால பணப்பயன்கள் மூலமாகக் கிடைத்த ரூ.5 இலட்சத்தை, ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக வழங்கியது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரத் தமிழ்ச் சங்கத் தலைவர் வேள்நம்பி, தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பல கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து நன்கொடை வேண்டுகோளை முன்வைத்தார். அதன்படி தி.க தலைவர் கி.வீரமணி, ரூ.5 இலட்சம் வழங்கினார்.  அதையடுத்து, தி.மு.க-வின் சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என தி.மு.க-வின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 6-ம் தேதி அறிவித்தார். மறுநாளன்று, தமிழ் இருக்கைக்கான இந்தியக் குழுவின் பொறுப்பாளரான முனைவர் ஆறுமுகத்திடம் முறைப்படி தி.மு.க-வின் நன்கொடையை ஸ்டாலின் வழங்கினார். 

ஹார்வர்டு தமிழ் இருக்கை

ஆனால், அப்படி ஒரு தகவல்தான் வந்துள்ளது; தி.மு.க-வின் நிதி இன்னும் வந்துசேரவில்லை என நேற்று சென்னையில் நடந்த அரசு நிகழ்ச்சியின்போது அமைச்சர் பாண்டியராஜன் கூறினார். அமைச்சரின் இந்த பதிலால் பல தரப்பினரும் அதிர்ச்சி அடைந்தனர். 

தமிழ் இருக்கை அமைப்பதற்கான குழுவின் பொறுப்பாளரிடம்  திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் அளிக்கப்பட்டதற்கு ஆதாரமாகப் படத்தை வெளியிட்டிருந்தும் அமைச்சர் இப்படிப் பேசியது சரியாகுமா என தி.மு.க-வினரும் தமிழ் உணர்வாளர்களும் அதிருப்தி அடைந்தனர். தமிழ் இருக்கைக்கான நன்கொடையை அரசு மூலமாக மட்டுமே அளிக்கவேண்டும் என்பதாக அமைச்சர் கூறவருகிறார் என்றே கருத இடமுண்டு. 

அமைச்சர் விளக்கம் ஒரு பக்கம் இருக்க, அதற்கு தி.மு.க-வின் நாளேடான முரசொலியில், இன்று, அக்கட்சியின் தலைமைக்கழகம் பெயரில் கடுமையான விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. 

“ஹார்வர்டு பல்கலை தமிழ் இருக்கைக்காக தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் ஓர் அமைப்பின் மூலமும் ரிசர்வ் வங்கி அனுமதியோடு வங்கிக் காசோலை மூலமும் நிதி அனுப்ப வழியுள்ளது. தமிழ் இருக்கைக்காக இந்தியாவில் நிதி திரட்டும் ஆறுமுகத்திடம் தி.மு.க. சார்பில் பிப். 7-ம் தேதி மு.க.ஸ்டாலின் ஒரு கோடி ரூபாய் வழங்கினார். இதற்காக ஆறுமுகம் நன்றி தெரிவித்து பேட்டியும் அளித்துள்ளார். இதைப் பற்றி எதுவுமே தெரியாத தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அரசியல் காழ்ப்பு உணர்ச்சி காரணமாக, ‘ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக தி.மு.க. சார்பில் நிதி எதுவும் தரவில்லை’ என்று தெரிவித்திருக்கிறார். ஊரறிந்த உண்மையை ஒருபோதும் யாராலும் மறைக்கமுடியாது” என்று தி.மு.க. தலைமைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து தமிழ் இருக்கையின் இந்தியப் பொறுப்பாளர் முனைவர் ஆறுமுகத்தைத் தொடர்புகொண்டபோது, சில மணி நேரத்துக்கு முன்னர்தான் அவர் இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்குச் சென்று இறங்கியிருந்தார். 

 

தொடர்புகொண்டதும் அழைப்பை ஏற்றவர், ” தமிழுக்காக யார் நன்கொடை தந்தாலும் நன்றியுடன் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறோம். தமிழ்நாட்டு அரசின் மூலமாகவும் தனியாக ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு நேரடியாகவும் இரு வகைகளில் நன்கொடையை அளிக்கமுடியும். தி.மு.க. சார்பில் நன்கொடையை அளிப்பதாகக் கூறினார்கள். சம்பிரதாயப்படி நன்கொடைக் காசோலையைப் பெற்றுக்கொண்டேன். நன்கொடை வழங்குவதற்கான இரண்டு முறைகளை எடுத்துச்சொன்னேன். நேரடியாக ஹார்வர்டு பல்கலைக்கழகத்திடம் நன்கொடை வழங்குவதற்கான நடைமுறைகளை தி.மு.க-வின் சார்பில் கேட்டுக்கொண்டார்கள். அதன்படி அந்த நன்கொடை வழங்கப்படுகிறது. இதில் யாரும் யாரையும் குறைசொல்ல ஒன்றுமில்லை. அரசாங்கத்திடம் கொடுக்காததால் அமைச்சருக்குத் தெரியாமல் இருக்கலாம்; அவர் சொன்னதில் தவறு இல்லை. தி.மு.க. சொல்வதிலும் எந்தத் தவறும் இல்லை. சமகாலத்தில் மொழிக்காக - சாதி, மதம் பார்க்காமல், தமிழர்கள் ஒன்றுபட்டுச் செய்யும் நல்ல செயல், இது. யாருக்கும் எந்த வருத்தமும் இல்லாமல் இந்தப் பணியை நிறைவுசெய்யவேண்டும்” என்றார், முனைவர் ஆறுமுகம் தெளிவாக. 

https://www.vikatan.com/news/tamilnadu/116247-dmk-admk-in-fight-regarding-harvard-tamil-chair-issue.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.