Jump to content

கழுத்தை அறுத்து விடுவேன் – லண்டனில் சைகையில் மிரட்டிய சிறிலங்கா இராணுவ அதிகாரி


Recommended Posts

கழுத்தை அறுத்து விடுவேன் – லண்டனில் சைகையில் மிரட்டிய சிறிலங்கா இராணுவ அதிகாரி

 

sri lanka army-threat-uk (1)பிரித்தானியத் தலைநகர் லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் பணியாற்றும், சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவர், தூதரகத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்த புலம்பெயர் தமிழர்களுக்கு சைகை மூலம் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

சிறிலங்காவின் 70 ஆவது சுதந்திர நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தின் முன்பாக கூடிய புலம்பெயர் தமிழர்கள், ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.

அப்போது, தூதரக அதிகாரிகளுடன் வெளியே வந்த சீருடை அணிந்த சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவர், புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து, கோபத்துடன் கழுத்தை அறுத்து விடுவேன் எனற சைகை மூலம் எச்சரித்துள்ளார்.

sri lanka army-threat-uk (1)

sri lanka army-threat-uk (2)

sri lanka army-threat-uk (3)

sri lanka army-threat-uk (4)

அடுத்தடுத்து மூன்று முறை அவர் கழுத்தில் கை வைத்து இவ்வாறு பகிரங்கமாக அச்சுறுத்தல் விடுத்து விட்டு கோபத்துடன் உள்ளே சென்றார்.

இந்தக் காணொளி தற்போது, சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

http://www.puthinappalakai.net/2018/02/05/news/28845

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒர் ஜனநாயக நாட்டில் சாதரணா உயர்ஸ்தாரனிகரின் அலுவலகத்திற்கு முன்பாக புலிக்கொடி பிடித்து ஆர்ப்பாட்டம் செய்தவர்களையே பெல்ல கபனவா (கழுத்தை வெட்டுவேன்) என சைகை காட்டும் இவன், புலிக்கொடி ரீசெட் போட்டு இலங்கைக்கு சென்றால் என்ன நடக்கும் என சொல்லத்தேவையில்லை. ஒருவேளை கொலர் இல்லாத ரீசேட் போட்டு வரச்சொல்கின்றானோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சனநாயக உரிமை உள்ள ஒரு நாட்டுக்கு வந்து நின்று கொண்டு.. காட்டுமிராண்டித்தன சிங்கள பாசிசத்தை படுகொலை வெறியை வெளிப்படுத்தும் இந்த மிருகத்தனமான செயலை.. பிரித்தானிய சட்ட வரையறைக்குள் கொண்டு வந்து.. இந்தச் சிங்கள இராணுவ வெறியனை.. சட்டத்தின் வாயிலாக தண்டிக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

லண்டன் பிரதான நீதிமன்றிற்கு இந்தக் காணொளி சமர்ப்பிக்கப்படுவதன் வாயிலாக.. இந்தப் போர்க்குற்றவாளி.. பிரித்தானியவை விட்டு வெளியேறுவது தடுத்து நிறுத்தப்பட்டு.. இவர் மீது கடும் நடவடிக்கைக்கு சட்ட ரீதியான நடவடிக்கைகளை பிரித்தானியா வாழ் புலம்பெயர் சமூகம் முன்னொடுக்க வேண்டும்.

இந்தக் காணொளி மூலம் சொறீலங்காவின் மனித இன விரோத செயற்பாடுகளையும்.. அந்த நாடு பயங்கரவாத அரசின் மற்றும் அரச படைகளைக் கொண்ட பயங்கரவாத நாடாக உலகின் முன் இனங்காட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதும்.. இந்த சிங்கள அரச பயங்கரவாதத்திற்கு எதிராக தமிழ் மக்கள் நடத்தியது தார்மீக போராட்டம் என்பதை உலகம் உணரவும் இந்தச் சந்தர்ப்பத்தை உச்ச அளவில் பாவிக்க வேண்டும். 

Link to comment
Share on other sites

யார் இந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ?

 

Brigadier Priyanka Fernandoலண்டனில் புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து. கழுத்தை அறுத்து விடுவேன் என சைகை மூலம் எச்சரித்த  பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, ஆயிரக்கணக்கான தமிழ்ப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட இறுதிக்கட்டப் போரில், இராணுவ படைப்பிரிவு ஒன்றுக்குத் தலைமை தாங்கிய அதிகாரி என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சிறிலங்காவில் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பும், அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டமும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

2008- 2009ஆம் ஆண்டு காலப்பகுதில், மணலாறு பகுதியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி முன்னேறிய 59 ஆவது டிவிசனில் இடம்பெற்றிருந்த 11 ஆவது கெமுனுகாவல்படை பற்றாலியனின் கட்டளை அதிகாரியாக பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ பணியாற்றியிருந்தார்.

முல்லைத்தீவு மருத்துவமனை மீதான பீரங்கித் தாக்குதலை 59 ஆவது டிவிசன் படையினரே மேற்கொண்டனர் என்று ஐ.நா விசாரணை அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

http://www.puthinappalakai.net/2018/02/06/news/28869

 

 

பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை வெளியேற்ற கோரும் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்

 

sri lanka army-threat-uk (1)லண்டனில் போராட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து. கழுத்தை அறுத்து விடுவேன் என சைகை மூலம் எச்சரித்த சிறிலங்கா இராணுவ பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை, பிரித்தானியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின்  தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் ரயனும், நாடாளுமன்ற உறுப்பினர் சோபெய்ன் மக் டொனாவும் பிரித்தானிய வெளிவிவகாரச் செயலரிடம் இந்தக் கோரிக்கைகளை விடுத்துள்ளனர்.

லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவின்  இராஜதந்திர ஆவணங்களை விலக்கிக் கொண்டு, அவரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.

sri lanka army-threat-uk (3)

இதுதொடர்பாக அவர்கள், தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவரான பொரிஸ் ஜோன்சனுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

அதில், இந்த நாட்டில் விருந்தினராக, அதிகாரி நிலையில் இருந்து கொண்டு பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, அச்சுறுத்தல் விடுத்துள்ளமை, பொருத்தமற்றதும், ஏற்றுக்கொள்ள முடியாததுமான செயல் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

http://www.puthinappalakai.net/2018/02/06/news/28867

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.thesundayleader.lk/2018/02/06/sri-lankan-official-in-uk-suspended-over-throat-cutting-gesture/

பதவி நிறுத்தம். உடனடியாக மீளழைப்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

http://www.thesundayleader.lk/2018/02/06/sri-lankan-official-in-uk-suspended-over-throat-cutting-gesture/

பதவி நிறுத்தம். உடனடியாக மீளழைப்பு

இது தான் நடக்கும், இதற்குமேல் நடப்பதற்கு ஒன்றுமே இல்லை இந்த விடயத்தில்.

Link to comment
Share on other sites

துப்பு இல்லாமல் எவன் எவன் காலையெல்லாமோ நக்கி உதவி கேட்டு போரிட்ட முதுகெலும்பில்லாத தெருப்பொறுக்கிள் தான் இந்த லங்கள நாய்கள்...

வரலாறு புத்தகத்தில் லங்களவன் போர் முறையை எடுத்துறைக்க கறுப்பு பக்கம் காத்திருக்கிறது...

வருங்கால உலக சந்ததியினர் காறி துப்புவார்கள் உன்னைனை போன்ற ஓனாய்களைப் பார்த்து... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தமிழர்களுக்கு தான் செய்ததை, இங்கிலாந்தில் சைகையில் காட்டியிருக்கிறார் அவ்வளவுதான்.

இங்கிலாந்தில் இருந்து இலங்கைக்கு திருப்பியழைக்கப்பட்டால் அவர் எதையுமே இழக்கப்போவதில்லை, இங்கிலாந்தின் சொகுசு வாழ்க்கையை விட அதிகமாக இலங்கையில் அவர் அனுபவிக்க ஏற்பாடு செய்து கொடுப்பார்கள்.

சிங்கள ஊடங்களில் இப்போதே ஹீரோ ஆகியிருப்பார் , இலங்கை வந்து இறங்கியதும் மாலைகள் மரியாதைகள்தான்.

இதன்மூலம் மனித உரிமைகளை சர்வதேச தரத்தில் இலங்கை பேணுகிறது என்று அர்த்தமல்ல, 

அது எப்போது நம்பப்படுமென்றால், இந்த பிரிகேடியரின் பதவியிழப்புக்கும். திருப்பியழைப்புக்கும் காரணமான ஆர்ப்பாட்டத்தில் முன்னணியில் நின்றோர்  பகிரங்கமாக இலங்கைவந்து திரும்பி செல்லும்போது ,  சிங்கள அரசு அவர்கள் ஜனநாயக வழில் போராடியவர்கள் என்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே,

அல்லது ஜனநாயக வழியில்தானே போராடினோம்,தாராளமாக இலங்கை சென்று வரலாம், இலங்கை அரசு எங்களை புரிந்துகொள்ளும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நம்பும்வரையில் மட்டுமே!

Link to comment
Share on other sites

தமிழர்களை மிரட்டிய இராணுவ அதிகாரி இடை நிறுத்தம்

 

 

பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம் நடத்திய புலம்பெயர் தமிழர்களை மிரட்டியதாகக் கூறப்படும் இலங்கை பிரிகேடியரை, அரசாங்கம் அவரது பணிகளில் இருந்து உடனடியாக தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.

2_Army_1.JPG

சுதந்திர தினத்தன்று இலங்கை அரசுக்கு எதிராக பிரித்தானியாவில் புலம் பெயர் தமிழர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இவ்வார்ப்பாட்டம் லண்டன் இலங்கைத் தூதரகத்துக்கு முன்பாக நடத்தப்பட்டது.

இதன்போது, ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களின் கழுத்தை வெட்டுவதாக இலங்கை தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோ சைகை செய்தமை சமூக வலைதளங்களில் தீயாகப் பரவியது.

இதையடுத்து, அவரை சேவையில் இருந்து உடனடியாக இடைநிறுத்தி வைக்குமாறு இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிகேடியர் பிரியங்கர, 2008 - 2009 காலப் பகுதியில் வெலிஓய, ஜானகபுர பகுதியில் போரிட்ட 11 கெமுனு படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கியிருந்தார்.

போர்க்குற்றச்சாட்டுக்களில், குறித்த படைப்பிரிவு மீது கடுமையான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/30332

Link to comment
Share on other sites

பிரித்தானியத் தலைநகர் லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் பணியாற்றும், சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவர், தூதரகத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்த புலம்பெயர் தமிழர்களுக்கு சைகை மூலம் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

சிறிலங்காவின் 70 ஆவது சுதந்திர நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தின் முன்பாக கூடிய புலம்பெயர் தமிழர்கள், ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.

அப்போது, தூதரக அதிகாரிகளுடன் வெளியே வந்த சீருடை அணிந்த சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவர், புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து, கோபத்துடன் கழுத்தை அறுத்து விடுவேன் எனற சைகை மூலம் எச்சரித்துள்ளார்.

sri lanka army-threat-uk (1)

sri lanka army-threat-uk (2)

sri lanka army-threat-uk (3)

sri lanka army-threat-uk (4)

அடுத்தடுத்து மூன்று முறை அவர் கழுத்தில் கை வைத்து இவ்வாறு பகிரங்கமாக அச்சுறுத்தல் விடுத்து விட்டு கோபத்துடன் உள்ளே சென்றார்.

இந்தக் காணொளி தற்போது, சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

http://www.puthinappalakai.net/page/2

 

Link to comment
Share on other sites

பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை வெளியேற்ற கோரும் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்

sri lanka army-threat-uk (1)

லண்டனில் போராட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து. கழுத்தை அறுத்து விடுவேன் என சைகை மூலம் எச்சரித்த சிறிலங்கா இராணுவ பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை, பிரித்தானியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின்  தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் ரயனும், நாடாளுமன்ற உறுப்பினர் சோபெய்ன் மக் டொனாவும் பிரித்தானிய வெளிவிவகாரச் செயலரிடம் இந்தக் கோரிக்கைகளை விடுத்துள்ளனர்.

லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவின்  இராஜதந்திர ஆவணங்களை விலக்கிக் கொண்டு, அவரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.

sri lanka army-threat-uk (3)

இதுதொடர்பாக அவர்கள், பிரித்தானியாவின் வெளியுறவுச் செயலர் பொரிஸ் ஜோன்சனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

அதில், இந்த நாட்டில் விருந்தினராக, அதிகாரி நிலையில் இருந்து கொண்டு பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, அச்சுறுத்தல் விடுத்துள்ளமை, பொருத்தமற்றதும், ஏற்றுக்கொள்ள முடியாததுமான செயல் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

http://www.puthinappalakai.net/2018/02/06/news/28867

Link to comment
Share on other sites

பிரிகேடியர் பிரியங்கவை சிறிலங்காவுக்கு திருப்பி அழைக்க பிரித்தானியா 2 வாரகாலக்கெடு?

 

Brigadier priyanga fernandoலண்டனில் புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்திய சிறிலங்கா இராணுவ அதிகாரியான பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை, இரண்டுவார காலத்துக்குள் திருப்பி அழைக்குமாறு பிரித்தானிய அரசாங்கம் சிறிலங்காவிடம் வலியுறுத்தியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிரித்தானிய அரச அதிகாரிகளை மேற்கோள்காட்டி இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பாக, விசாரணைகளை ஆரம்பிக்குமாறு லண்டன் பெருநகர காவல்துறையிடமும், பிரித்தானிய அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும், பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவிடம் லண்டன் பெருநகர காவல்துறை விசாரணைகளை மேற்கொள்வதற்கு, அவருக்குள்ள இராஜதந்திர விலக்குரிமை தடையாக இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Brigadier priyanga fernando

பிரிகேடியர் பிரியங்கவிடம் விசாரணைகளை மேற்கொள்வதற்கு முன்னதாக, அவருக்கு பிரித்தானிய அளித்துள்ள இராஜதந்திர விலக்குரிமையை நீக்க வேண்டியிருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை பாதுகாப்பு ஆலோசகர் பணியில் இருந்து இடைநிறுத்தம் செய்வதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு நேற்று அறிவித்திருந்தது.

http://www.puthinappalakai.net/2018/02/07/news/28890

Link to comment
Share on other sites

பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ பணியில் இருந்து இடைநிறுத்தம் – விசாரணைகள் ஆரம்பம்

லண்டனில் போராட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த, சிறிலங்கா இராணுவ அதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ உடனடியாக, பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகர் பதவியை வகித்து வந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, புலம்பெயர் தமிழர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் சைகை செய்த காணொளி பரவியதை அடுத்து, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

உடனடியாக அவரை மினிஸ்டர் கொன்சீலர் (பாதுகாப்பு) பணியில் இருந்து இடைநிறுத்துமாறு லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்துக்கு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Brigadier Priyanka Fernando

அத்துடன் சிறிலங்கா இராணுவத்தை உள்ளடக்கிய, சிறிலங்காவில் உள்ள அதிகாரிகள் இந்தச் சம்பவம் தொடர்பாக உடனடியாக ஆரம்பகட்ட விசாரணைகளை தொடங்கவுள்ளனர்” என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

http://www.puthinappalakai.net/2018/02/06/news/28876

Link to comment
Share on other sites

தமிழர்களின் கழுத்தை அறுப்பதாக மிரட்டிய பிரிகேடியரை மீண்டும் பணிக்கமர்த்தினார் மைத்திரி…

Brigadier-Priyanka-Fernando.jpg?resize=6
லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை மீண்டும் பணியில் இணைத்துக் கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க கூறியுள்ளார்.

கடந்த சுதந்திர தினத்தன்று லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது, பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தும் வகையில் கழுத்தை அறுப்பதாக சைகை காட்டினார் என கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.

இதனையடுத்து தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் ராணுவ பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை, உடனடியாக அமுலுக்கும் வரும் வகையில் பணி இடைநிறுத்தம் செய்யுமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்திருந்தது.

எவ்வாறாயினும் அந்த பணி நிறுத்தத்தை இரத்து செய்து அவரை மீண்டும் பணியில் இணைத்துக் கொள்ளுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க கூறியுள்ளார்.

http://globaltamilnews.net/2018/65605/

Link to comment
Share on other sites

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ தொடர்பில் லண்டன் காவல்துறையினர் விசாரணை…

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

Report.jpg?resize=566%2C800

முறைப்பாட்டுப் பிரதி…

பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் கடயைமாற்றி வரும் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ தொடர்பில் லண்டன் காவல் துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த 4ம் திகதி லண்டனில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வுகளின் போது, இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு எதிரில் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தவர்களின் கழுத்தை அறுத்து கொலை செய்வதாக பிரிகேடியர் பிரியங்க, சைக மூலம் காண்பித்திருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பிலான காணொளி இணைய மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும், பிரிகேடியர் பிரியந்தவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். இந்த சம்பவம் தொடர்பில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டவுரிஸ், இலங்கை வெளிவிவகார அமைச்சிடம் முறைப்பாடு செய்திருந்தார்.

பிரிகேடியர் பிரியங்கவிற்கு எதிரான முறைப்பாடுகள் நிரூபிக்கப்பட்டால் அவர் ராஜதந்திர பதவிகளை வகிக்கவோ அல்லது பிரித்தானியாவில் தங்கியிருக்கவோ அனுமதிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகிறது. தமிழர்களுக்கான அனைத்து பாராளுமன்ற உறுப்பினர் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் போல் சாலி, பிரிகேடியர் பிரியங்கவின் செயற்பாடு குறித்து பிரித்தானிய வெளிவிவகார செயலாளரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

 

 

http://globaltamilnews.net/2018/65723/

Link to comment
Share on other sites

‘ ஒரு காணொளியை வைத்து அதிகாரிகளை நீக்க முடியாது’ – சிறிலங்கா இராணுவத் தளபதி

 

Lieutenant General Mahesh Senanayakeவெறுமனே ஒரு காணொளியை வைத்துக் கொண்டு, பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை பதவியில் இருந்து நீக்க முடியாது என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

லண்டனில் புலம்பெயர் தமிழர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை, பாதுகாப்பு ஆலோசகர் பணியில் இருந்து இடைநிறுத்துமாறு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு, லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று ரத்துச் செய்துள்ளதுடன், பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை மீண்டும் பணியில் இணைந்து கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க,

“வெறுமனே சமூக வலைத்தள காணொளி ஒன்றின் அடிப்படையில் அவர்கள், அதிகாரிகளை நீக்க முடியாது. விசாரணைகள் மட்டுமே முடிவு செய்யும்.

வெளிவிவகார அமைச்சும், சிறிலங்கா தூதரகமும் விசாரணைகளை நடத்தும்.

பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, கேணலாக இருந்த போது, மனிதாபிமானப் போர் நடவடிக்கையில் 11 ஆவது கெமுனு காவல்படையின் கட்டளை அதிகாரியாக, முல்லைத்தீவின் பல கிராமங்களை மீட்டு, மகத்தான சேவை ஆற்றியுள்ளார்.” என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளை, சிறிலங்கா இராணுவம் மீண்டும் ஒரு நம்பகமான காணொளி ஆதாரத்தை நிராகரிக்கிறது என்று சிறிலங்காவில் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பின் கீச்சகப் பதிவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

http://www.puthinappalakai.net/2018/02/07/news/28904

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, MEERA said:

இது தான் நடக்கும், இதற்குமேல் நடப்பதற்கு ஒன்றுமே இல்லை இந்த விடயத்தில்.

இனி ஆள் அடுத்த சொறிலங்கா ஜனாதிபதி தேர்தலில் நின்றாலும் நிப்பார் டமிலரசு கட்சி அவருக்கு ஆதராவாக நின்றாலும் ஆச்சரியபடுவதுக்கு இல்லை எல்லாம் ராஜதந்திரம் என்று சொல்லுவினம் அப்போது (சரத் ,ராஜூவுக்கு முதுகில் அடித்தவையலை விட இவர் லண்டனில் தமிழருக்கு எதிராகா இனத்துவேசத்தை கக்கியவர் இது ஒன்றே காணும் சிங்களவர்கள் கண்ணை மூடிக்கொண்டு குத்தி ஜனாதிபதியாக ஆக்கி விடுவார்கள் )

Link to comment
Share on other sites

லண்டனில் தமிழர்களை மிரட்டிய பிரிகேடியரின் வைரலாகும் மற்றுமொரு காணொளி

 

லண்டனில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த இலங்கை உயர்ஸ்தானிராலயத்தைச் சேர்ந்த இராணுவ அதிகாரியின் மீது சகலரினதும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் சுதந்திர தினத்தன்று, லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்துக்கு முன்னால் புலம்பெயர்ந்த தமிழர்களினால் குறித்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதன்போது உயர்ஸ்தானிகராலயத்தைச் சேர்ந்த ப்ரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ என்ற இராணுவ அதிகாரி இந்த அச்சறுத்தலை விடுத்துள்ளார்.

 

 

அவர் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் சைகை செய்யும், காணொளி காட்சிகள் பல சமூக இணையதளங்களில் வெளியாகி வருகின்றன.

இது குறித்து பிரித்தானிய நாடாளுமன்றத்தைச் சேர்ந்த தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக்குழு உறுப்பினர்களான ஜோன் ரயன் மற்றும் சிஹோப்ஹெய்ன் மெக்டொனாஹ் ஆகியோர் பிரித்தானிய வெளிவிவகார செயலாளரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இராஜதந்திரி ஒருவர் பிரிதொரு நாட்டில் இந்த வகையில் செயற்படுவது ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய விடயம் அல்ல எனவும் அவர்கள் கண்டித்துள்ளனர்.

இந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடையவர் என குற்றம் சுமத்தப்படும் பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ உடனடியாக நாடுகடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் முன்வைத்துள்ளனர்.

அத்துடன், அவருக்கு வழங்கப்பட்டுள்ள இராஜதந்திர சலுகைகள் அனைத்தையும் மீளப்பெற உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.

இதேவேளை குறித்த அதிகாரியின் சேவையை உடனடியாக இரத்து செய்யுமாறு லண்டனுக்கான இலங்கை உயர்ஸ்தானிகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இராணுவ அதிகாரி செயல் தொடர்பில் இலங்கை இராணுவம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை வெளிவிகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் பின்னர் ஊடகவியலாளர்கள் சிலர் அவரிடம் வினவிய பல சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பதிலளிக்கும் காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

 

http://www.tamilwin.com/srilanka/01/173491?ref=home-imp-flag

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரிகேடியர் பிரியங்க மீது எழுந்த புதிய சிக்கல்!! 2009இன் ஆதாரங்கள் வெளியாகின...

Report us Dias 1 hour ago

வன்னிப் பகுதியில் நடைபெற்ற போரில் போர்க்குற்றங்கள் மீறப்பட்ட பகுதிகளில் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ பணியாற்றியமை கண்டறியப்பட்டுள்ளது.

லண்டனில் கொலை அச்சுறுத்தல் விடுத்த பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவும் இறுதிப் போரின் போர்க் குற்றவாளி என்ற தகவல் வெளியாகியுள்ளது.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

இவர் 2009 இல் பொது கட்டளை அதிகாரியாகவும், 2010– 2013 வரையான காலப்பகுதியில் கெமுனு வாட்ச் முகாம் கட்டளை அதிகாரியாகவும், 2014- இல் கிளிநொச்சி மாவட்ட கட்டளை அதிகாரியாகவும், 2016 இல் இந்தியாவுடன் கூட்டு இராணுவ பயிற்சி பயிற்சிகளை இயக்கும் அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.

இறுதிப் போரில் சரண் அடைந்தவர்களைப் பொறுப்பேற்று வெலிஒயாவுக்குக் கொண்டு சென்றமை உள்ளிட்ட பல இன அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட அவர், தந்திரோபாய அடிப்படையில் லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

அத்துடன் யுத்த காலப் பகுதியில் பிரிகேடியர் பிரியங்க நேரடியாக பங்கு பற்றிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத் தக்கது.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

http://www.tamilwin.com/srilanka/01/173499?ref=imp-news

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கழுத்தை அறுப்பன் எண்டு சைகை காட்டின ஆமி நல்லவரெண்டு எங்கடை பேஸ்புக்கு ஆக்கள் கதைக்கினம்..:27_sunglasses:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

கழுத்தை அறுப்பன் எண்டு சைகை காட்டின ஆமி நல்லவரெண்டு எங்கடை பேஸ்புக்கு ஆக்கள் கதைக்கினம்..:27_sunglasses:

அப்ப ஆள் ஜனாதிபதி தேர்தலில் நின்றால் கட்டாயம் வெல்லுவார் என்கிறீர்கள் :14_relaxed:

Link to comment
Share on other sites

  • பிரி­கே­டி­ய­ரின் அச்­சு­றுத்­தல் பிரிட்­டன் சட்­டத்­தில் குற்­றம்!
callum-macrae-400-seithy.jpg

பிரி­கே­டி­ய­ரின் அச்­சு­றுத்­தல் பிரிட்­டன் சட்­டத்­தில் குற்­றம்!

கெலும் மக்ரே

பிரிட்­ட­னி­லுள்ள புலம்­பெ­யர் தமி­ழர்­களை அச்­சு­றுத்­தும் வகை­யில் பிரி­கே­டி­யர் பிரி­யங்க பெர்­னாண்டோ செயற்­பட்­டமை, பிரிட்­டன் சட்­டத்­தின் கீழ் குரோ­தத்­த­ன­மான குற்­ற­மென சனல் 4 தொலைக்­காட்­சி­யின் மூத்த ஊட­க­வி­ய­லா­ள­ரும் பிர­பல ஆவ­ணப்­பட தயா­ரிப்­பா­ள­ரு­மான கெலும் மக்ரே தெரி­வித்­துள்­ளார்.

இது தொடர்­பில் அவர் தனது கீச்­ச­கத்­தில் பதி­விட்­டுள்­ளார். பிரிட்­டன் சட்­டத்­தின் கீழ் இது குரோ­தத்­த­ன­மான குற்­றம். பிரிட்­டன் அதி­கா­ரி­க­ளால் அவர் கைது­செய்­யப்­பட வேண்­டும்.

மேலும், நிலை­மா­று­கால நீதிப்­பொறி முறையை நிறை­வேற்­று­வ­தற்கு இலங்கை அரசு செயற்­பட்டு வரும் நிலை­யில், பிரி­கே­டி­ய­ரின் இந்­தச்­செ­யல் அதனை பாதிக்­கும் வகை­யில் அமைந்­துள்­ள­தென கெலும் மக்ரே சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார்.

இலங்கை இரா­ணுவ நீதி­மன்­றில் பிரி­கே­டி­யர் பிரி­யங்க பெர்­ணான்டோ நிறுத்­தப்­பட வேண்­டு­மெ­ன­வும் அவர் மேலும் குறிப்­பிட்­டுள்­ளார்.

http://newuthayan.com/story/67418.html

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

கழுத்தை அறுப்பன் எண்டு சைகை காட்டின ஆமி நல்லவரெண்டு எங்கடை பேஸ்புக்கு ஆக்கள் கதைக்கினம்..:27_sunglasses:

இப்படி ஒரு ----- கூட்டம் சமூக வலைத்தளங்களில் சீவிக்குது. தமிழ் மக்கள் மீது வன்முறையை அதிகாரத்தை பிரயோகிக்கும் அத்தனை பேரையும் நல்லவர்களாக காட்டி தமிழ் மக்களின் கோபத்தையும் காத்திரமான எதிர்வினைகளையும் நீர்த்து போக செய்வது தான் இவர்களின் நோக்கம். அதே நேரத்தில் தமிழர்களில் எவராவது ஒருவர் நல்லது செய்தாலும் முட்டையில் மயிர் புடுங்குவது மாதிரி அதில் ஒரு பிழையை கண்டு பிடிச்சு அதை குறி வைத்து தாக்கி அவரை செயலிழக்க செய்வினம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.