Jump to content

பருத்தித்துறை வடை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Essen

பருத்தித்துறை வடை.

உழுந்து – 1/2 சுண்டு,
அவிக்காத வெள்ளை மா – 1 சுண்டு
செ.மிள. பொடி – 2 தே. க
பெருஞ்சீரகம் – 1 மே.க
உப்பு – தே.அளவு
கறிவேப்பிலை – சிறிது ( பொடியாக வெட்டி)
எண்ணெய் – தே.அளவு
செய்முறை :-
* உழுந்தை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
* உழுந்து ஊறியதும் அத்துடன் மற்றைய பொருட்களை சேர்த்து 3 மே.கரண்டி எண்ணெய் விட்டு நன்றாகக் குழைக்கவும்.
* சிறிய பாக்களவு உருண்டைகளாக உருட்டி, பூரிக் கட்டையால் அழுத்தி வட்டமாக்கி ( மெல்லியதாக) கொள்ளவும்.
* அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் விட்டு ,கொதித்ததும் தட்டி வைத்துள்ள வடைகளை போட்டு பொன்னிறமானதும் எடுக்கவும்.
** (அடுப்பை மிதமான சூட்டில் இருக்குமாறு பார்க்கவும்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பருத்தித்துறை வடை தின்ன தின்ன நாள் முழுக்க தின்று கொண்டே இருக்கலாம்.செய்வதும் ஒன்றும் கஸ்டம் அல்ல.

எப்படி ஒட்டாமல் தட்டையாக்குவது இது கொஞ்சம் வில்லங்கமான விடயம்.

செய்முறைக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேநீருடன் மொறு மொறு வென்று கடித்து சாப்பிட அந்தமாதிரி இருக்கும். பலநாட்கள் கெடாமலும் இருக்கும். பல்லு கட்டியவர்கள் பக்குவமாக வாயில் ஊறவைத்து சாப்பிடுவது அவசியம்......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

பருத்தித்துறை வடை தின்ன தின்ன நாள் முழுக்க தின்று கொண்டே இருக்கலாம்.செய்வதும் ஒன்றும் கஸ்டம் அல்ல.

எப்படி ஒட்டாமல் தட்டையாக்குவது இது கொஞ்சம் வில்லங்கமான விடயம்.

செய்முறைக்கு நன்றி.

Bildergebnis für பூவரசம் இலை

ஈழப்பிரியன்!  பூவரசம் இலையிலை வைச்சு தப்பி எடுக்கிறது ....:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

Bildergebnis für பூவரசம் இலை

ஈழப்பிரியன்!  பூவரசம் இலையிலை வைச்சு தப்பி எடுக்கிறது ....:grin:

ஐயா இப்ப இலை உதிர்காலம்.
இந்த பெரிய பெரிய இலைகள் வெளிநாட்டில் காணவே கிடைக்குதில்லையே?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

ஐயா இப்ப இலை உதிர்காலம்.
இந்த பெரிய பெரிய இலைகள் வெளிநாட்டில் காணவே கிடைக்குதில்லையே?

 

 இலை இல்லாட்டி இப்பிடி கொஞ்சம் தடிப்பான பொலித்தீனிலை வைச்சு தட்டலாம்..:)

Ähnliches Foto

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ஈழப்பிரியன் said:

ஐயா இப்ப இலை உதிர்காலம்.
இந்த பெரிய பெரிய இலைகள் வெளிநாட்டில் காணவே கிடைக்குதில்லையே?

வாழை இலையை சிறிது கிழித்தெடுத்து,  அதன்மேல் சிறிது எண்ணை தடவிவிட்டு,  வடை மாவை அப்பி தட்டையாக்கி கொதிக்கும் எண்ணை மீது கவிழ்த்தால் தட்டை மாவு மட்டும் உள்ளே விழுந்து வடையாகி பொரிந்துவிடுமப்பு..!

இதெல்லாம் "வீட்டுப் பெண்கள் ஏரியா.." ஏன் மூக்கை நுழைப்பானேன்..? patisser.gifcookies.gif

எல்லாம் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

 இலை இல்லாட்டி இப்பிடி கொஞ்சம் தடிப்பான பொலித்தீனிலை வைச்சு தட்டலாம்..:)

Ähnliches Foto

 

6 minutes ago, ராசவன்னியன் said:

வாழை இலையை சிறிது கிழித்தெடுத்து,  அதன்மேல் சிறிது எண்ணை தடவிவிட்டு,  வடை மாவை அப்பி தட்டையாக்கி கொதிக்கும் எண்ணை மீது கவிழ்த்தால் தட்டை மாவு மட்டும் உள்ளே விழுந்து வடையாகி பொரிந்துவிடுமப்பு..!

இதெல்லாம் "வீட்டுப் பெண்கள் ஏரியா.." ஏன் மூக்கை நுழைப்பானேன்..? patisser.gifcookies.gif

எல்லாம் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்..! :)

தகவலுக்கு நன்றி குமாரசாமி வன்னியர்.

எமது வீட்டிலும் அடிக்கடி செய்வோம்.எனது வேலை தட்டி தட்டி போடுவது.மனைவி போட்டு எடுப்பா.தட்டும் போது எண்ணெயில் தடவியே தட்டி எடுத்து போடுவேன்.

மாவைத் தூவி செய்து பார்த்தேன் எண்ணெய் விரைவில் கறுக்கிறது.இரண்டுக்குமான சுவையும் வித்தியாசபடுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

எமது வீட்டிலும் அடிக்கடி செய்வோம்.எனது வேலை தட்டி தட்டி போடுவது.மனைவி போட்டு எடுப்பா.தட்டும் போது எண்ணெயில் தடவியே தட்டி எடுத்து போடுவேன்.

கவலைப்படாதீர்கள்..

வேலையிலிருந்து நீங்கள் ஓய்வு பெற்றுவிட்டால், சமையலே தங்களின் நிரந்தர வேலையாகிவிடும்.. mange4.gif

பேரப்பிள்ளைகளை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

Bildergebnis für பூவரசம் இலை

ஈழப்பிரியன்!  பூவரசம் இலையிலை வைச்சு தப்பி எடுக்கிறது ....:grin:

இப்ப மசுக்குட்டி புடிச்சி போய் கிடக்கு :cool:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.